தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
UK parliament sanctions Syria bombing as Labour right blocks with government தொழிற் கட்சியின் வலது அரசாங்கத்தின் பக்கம் அணிசேர ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம் சிரிய குண்டுவீச்சுக்கு ஒப்புதலளிக்கிறது By
Julie Hyland Use this version to print| Send feedback சிரிய குண்டுவீச்சுக்கு ஆதரவாக ஐக்கிய இராச்சிய (UK) நாடாளுமன்றம் புதன் இரவு வாக்களித்தது. 67 தொழிற் கட்சி எம்.பி.க்கள், ஜனநாயக ஒன்றியக் கட்சியினர் மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சியினர் அளித்த ஆதரவை அடுத்து அரசாங்க மசோதா 397க்கு 223 என்ற விகிதத்தில் 174 வாக்குகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. தொழிற் கட்சித் தலைவரான ஜெர்ரெமி கோர்பின் தனது கட்சியின் வலது-சாரிகளிடத்தில் சரணடைந்து இராணுவ நடவடிக்கை விடயத்தில் “சுதந்திர வாக்களிப்புக்கு” உடன்பட்டதன் மூலம் போருக்கு பாதையை தெளிவாக்கினார். இரண்டு வருடங்களுக்கு முன்பு கண்ட தோல்வியை தலைகீழாக்குவதற்கு பிரதமர் டேவிட் கேமரூன் எதிர்பார்த்த பெரும்பான்மையை தொழிற் கட்சி அவருக்கு கையளிப்பதை இது உறுதிசெய்தது. குண்டுவீச்சு விடயத்தில் தொழிற் கட்சிக்கு உத்தியோகப்பூர்வ நிலைப்பாடு எதுவும் இல்லை என்று அது அறிவித்து விட்ட பின், இராணுவ நடவடிக்கைக்கு எதிரான ஒரு பல-கட்சி திருத்தத்தை ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி முன்வைக்கின்ற அளவுக்கு, போர்-ஆதரவு செல்வாக்குக்குழுவிடம் கோர்பினின் சரணாகதி மிக முழுமையானதாய் இருந்தது. 390 வாக்குகளுக்கு 211 என்ற விகிதத்தில் அதாவது 179 வாக்குகள் வித்தியாசத்தில் அந்த திருத்தம் தோற்கடிக்கப்பட்டது. கேமரூன் முன்வைத்த போர்-ஆதரவு மசோதா செப்டம்பரில் தொழிற் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருந்த மசோதாவை மாதிரியாக கொண்டிருந்தது. அந்த சமயத்தில் உலக சோசலிச வலைத் தளம் எழுதியதைப் போல, தொழிற் கட்சியின் மசோதாவானது ”சிரியாவிலான இராணுவ நடவடிக்கை வடிவத்திற்கு வேண்டியதொகையை நிரப்பிக் கொள்ளும்படி அளிக்கப்படும் கையெழுத்திட்டு அளித்த காசோலையை” அளித்திருந்தது. சிக்கன-நடவடிக்கை எதிர்ப்பு மற்றும் போர்-எதிர்ப்பு களத்தின் அடிப்படையில் தொழிற் கட்சியின் தலைமையை வென்றிருந்த சில வாரங்களுக்குப் பின்னர், கோர்பின், பிரிட்டனின் டிரைடண்ட் அணுசக்தித் திட்டத்தை அகற்றுவதை தொழிற் சங்கங்கள் எதிர்த்து வந்த நிலையில், அதுகுறித்த எந்த விவாதத்தையும் கைவிட, கட்சி மாநாட்டில் உடன்பட்டார். சிரியாவில் குண்டுவீச்சை ஆதரிப்பதா வேண்டாமா என்பது குறித்த விவாதத்திற்கு வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து ஐ.நா ஆதரவில்லாத வரை UK இன் குண்டுவீச்சு நடவடிக்கைகளை எதிர்ப்பது என்ற கட்டாயப்படுத்தாத ஒரு மசோதா கொண்டுவரப்பட்டது. இப்போது, பாரிஸில் நவம்பர் 13 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல்களை சாக்காக்கிக் கொண்டு, ஏகாதிபத்திய சக்திகள், ஐநாவின் ஆதரவுடன், மத்திய கிழக்கில் தமது நவ-காலனித்துவ போர் பிரச்சாரத்தை ஆழப்படுத்திக் கொண்டிருக்கின்றன. கேமரூன் 2013 ஆகஸ்டில் சிரிய ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத்தை அகற்றும் நோக்கத்துடனான இராணுவ நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தின் ஆதரவை எதிர்பார்த்து தோல்விகண்டார். நேற்று நிறைவேற்றப்பட்ட மசோதாவில் இந்த குறிக்கோள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. பதிலாக பிரிட்டிஷ் விமானத் தாக்குதல்களின் இலக்கு ISIS என்றும், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை உள்ளடக்கிய வியன்னா “அமைதி நடைமுறை” என்பதான ஒன்றுக்கு ஆதரவாகவே இந்த குண்டுவீச்சு என்றும் அது கூறிக் கொண்டது. பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதல்கள் அல்ல, மாறாக சிரியாவிலான ரஷ்யாவின் இராணுவத் தலையீடே கணிசமான கவலைகள் இருந்தாலும் ஒரு நாடாளுமன்ற வாக்கெடுப்பைத் திணிக்க பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் ஒரு கணிசமான பிரிவைத் தூண்டியது. இராணுவ நடவடிக்கையில் இணைவதன் மூலமாக, ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் போர் முனைப்பில் இங்கிலாந்து அரசாங்கம் தன்னை ஐக்கியம் செய்ய நோக்கம் கொண்டுள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம், அணுஆயுத சக்திகள் பங்குபெறக்கூடிய ஒரு மூன்றாம் உலகப் போரின் சாத்தியம் என்ற சுழலுக்குள் அது பிரிட்டனின் உழைக்கும் மக்களை இழுத்துக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற விவாதம் பிற்போக்குத்தனத்தின் ஒரு திருவிழா போல் இருந்தது. விவாதம் தொடங்குவதற்கு முன்பாகவே, சிரியாவில் குண்டுவீச்சை எதிர்ப்பவர்களை “பயங்கரவாதிகளது அனுதாபிகள்” என்று கேமரூன் வருணித்தார். டோரி எம்பிக்களின் 1922 கமிட்டியின் ஒரு கூட்டத்தில் அவர் இந்த சேறுவீசும் கருத்துகளைத் தெரிவித்தார். “ஜெர்ரெமி கோர்பின் மற்றும் ஒரு சில பயங்கரவாத அனுதாபிகளுடன் (வாக்கு) லாபிகளின் வழியே” நடந்து செல்வதை விடுத்து அரசாங்கத்துடன் இணைந்து வாக்களிக்குமாறு அக்கூட்டத்தில் அவர் அவர்களிடம் வலியுறுத்தினார். கோர்பினை, தேசிய பாதுகாப்புக்கான ஒரு அச்சுறுத்தலாகவும் பயங்கரவாதத்திற்கு வக்காலத்து வாங்குபவராகவுமே இந்த டோரி தலைவர் தொடர்ந்து வருணித்து வந்திருக்கிறார். இந்த தூற்றலுக்கு எதிராக கோர்பின் கேமரூனின் “துரதிர்ஷ்டவசமான கருத்து” என்றே முடமான வகையில் குறிப்பிட்டு வந்திருக்கிறார் என்பதோடு “இந்த விவாதத்தின் சூழலை மேம்படுத்த” பிரதமர் வருத்தம் தெரிவிப்பார் என்ற தனது நம்பிக்கையையும் அறிவித்தார். அப்படியான எந்த நோக்கமும் கேமரூனுக்கு இருக்கவில்லை, ஒரு பின்வாங்கலை அவர் திட்டவட்டமாக நிராகரித்தார். இதில், ஒவ்வொரு விடயத்திலும் போலவே, தொழிற் கட்சியின் வலதுசாரிகளது ஆதரவு அவருக்கு இருந்தது. சரியான விடயத்தைச் செய்வதற்கு பிரதமரிடம் கோர்பின் புலம்பிக் கோரிக்கை வைத்ததன் பின்னர், கோர்பினை தாக்கக் கிளம்பிய தொழிற் கட்சி எம்.பி.யான ஜான் மேன், அரசாங்கத்துடன் இணைந்து வாக்களித்த கட்சியினர் மீதான விமர்சனங்களை கோர்பின் திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார். விவாதத்திற்கு முன்பாக, தொழிற் கட்சியின் வலதை எதிர்க்கும் ஒரு நாடகத்தை கோர்பின் செய்திருந்தார். இராணுவ நடவடிக்கையை ஆதரித்தவர்களுக்கு வாக்கெடுப்புக்கு பின்னர் “மறைந்துகொள்ள இடமேதும்” இருக்கப் போவதில்லை என்று அவர் எச்சரித்தார். ஆனால் போர்க் கூச்சலிடுவோருக்கு இடம் இருக்கிறது என்பதே யதார்த்தமாய் உள்ளது. அவர்களுக்கு ஒளிய அவசியப்படவில்லை ஏனென்றால் அவர்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை கோர்பின் திறம்பட அமைத்துத் தந்திருக்கிறார். கட்சி உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில், 75 சதவீதம் பேர் சிரியாவில் குண்டுவீசுவதற்கான தமது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றனர். ஆனால் ஒழுங்கு நடவடிக்கையை அல்லது பொறுப்பு அகற்றப்படும் சாத்தியத்தை எதிர்கொள்ள மாட்டார்கள் என்று வலதுசாரிகளுக்கு தொடர்ந்து உறுதிகூறி வந்திருக்கும் கோர்பினுக்கு அது ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. தனது ஆரம்ப அறிக்கையில், கோர்பின், UKக்கு IS ஒரு உயிர்வாழ்க்கை அச்சுறுத்தலைக் குறித்து நிற்கிறது என்பதான கூற்றை ஒப்பிக்க மட்டுமே முடிந்தது, அதேவேளையில் கேமரூன் வான்வழித் தாக்குதல்களுக்கான வலுவான முகாந்திரத்தை முன்வைக்கத் தவறிவிட்டார் என்றும் நாடாளுமன்றத்தில் ஒரு “கருத்தொற்றுமை”யை சாதிக்கத் தவறினார் என்றும் அவர் புகாரிட்டார். ஒரு ரஷ்ய விமானத்தை துருக்கி சுட்டுவீழ்த்தியது குறித்த எந்தக் குறிப்பையும் தவிர்த்து, வியன்னா “அமைதி”ப் பேச்சுவார்த்தைகளுக்கு புகழ்பாடிய அவர், சிரியாவில் அமைதியைக் கொண்டுவரத்தக்க “பேசி ஏற்பாடாகியிருக்கும் அரசியல் மற்றும் இராஜதந்திர முயற்சி” என்னும் கட்டுக்கதையைத் தாங்கிப் பிடித்தார். "மெல்ல நுழையும் நடவடிக்கை” (“mission creep”) மற்றும் மேற்கத்திய பூட்ஸ் கால்கள் வருங்காலத்தில் தரையிலும் படர்வதன் “உண்மையான சாத்தியக்கூறு” ஆகியவற்றின் அபாயம் குறித்து எச்சரித்த அவர், ஒரேயொரு நாள் முன்பாக, சிரியாவில் சிறப்புப் படைகளை நிறுத்துவதற்கு அமெரிக்கா செய்திருந்த முடிவு குறித்துக் குறிப்பிடவே இல்லை. ஒரு முன்கண்டிராத ஒரு நடவடிக்கையில், தொழிற் கட்சியின் நிழல் வெளியுறவுச் செயலரும் இராணுவத் தலையீட்டுக்கான ஒரு முன்னணி ஆலோசகருமான ஹிலாரி பென் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற விவாதத்தினை நிறைவு செய்வதற்கு கோர்பின் உடன்பட்டிருந்தார். வருங்கால அரண்மனைக் கவிழ்ப்பு ஒன்றில் கோர்பினை பிரதியீடு செய்து அமர்த்தப்படவிருப்பவராக பகிரங்கமாக பெருமையடிக்கப்படுபவர் தான் இந்த பென் ஆவார். அந்த பாத்திரத்திற்கு தனது தகுதியை நிறுவும் பொருட்டு தனது நிறைவுக் கருத்தைப் பயன்படுத்திய அவர், சிரியாவில் குண்டுவீச்சில் பங்குபெறுவதன் மூலம், ஸ்பெயினில் பிராங்கோவினாலும் ஜேர்மனியில் ஹிட்லராலும் முன்நிறுத்தப்பட்டதற்கு ஒப்பான ஒரு “பாசிச” அச்சுறுத்தலுக்கு எதிரான ஒரு போராட்டத்தை UK நடத்திக் கொண்டிருந்ததாக கபடத்துடன் கூறிக் கொண்டார். தனது கருத்துகளில் கட்சியின் “ஒற்றுமை”யையும் இழுத்த பென், விவாதத்தின் போது தொழிற் கட்சித் தலைவருக்கு எதிராய் ட்வீட் செய்து கொண்டிருந்தார். கட்சித் தலைவருக்கான செய்தித் தொடர்பாளர் ஒருவர், வான்வழித் தாக்குதல்கள் பிரிட்டனுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தலை அதிகரிக்கக் கூடும் என்று செய்தி அனுப்பிய போது, அதை நிராகரித்து பென் உடனடி பதிலடி கொடுத்தார். கோர்பினால் தளையறுக்கப்பட்டிருந்த நிலையில், தொழிற் கட்சியின் பல்வேறு வலதுசாரிகளும் அரசாங்கத்திற்கும் போருக்குமான தங்களது விசுவாத்தை வாக்குறுதியளிக்க விவாதத்தில் முதல் ஆளாய் நின்றனர். ஈராக் போரில் ஏற்கனவே கைகளை இரத்தக் கறையாக்கி விட்டிருந்த முன்னணி பிளேயர்வாதிகள், ஒருவர் பின் ஒருவராய், இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாய் பேசினர். தலைமைப் போட்டியில் மூன்றாமிடத்தில் வந்த யவெட் கூப்பர், பிரதமர் “மிகத் திறம்பட்ட ஒரு வாதத்தை” முன்வைத்திருக்கவில்லை என்ற உண்மை இருந்தபோதிலும் தான் அரசாங்கத்தின் பக்கமே வாக்களிக்க இருப்பதாகக் கூறினார். தானும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே வாக்களிக்க இருப்பதாக அறிவித்த ஆலன் ஜான்சன், அது ஒரு “கடினமான” முடிவாக இருந்தது என்று கூறியதோடு போருக்கு எதிரானவர்களின் “சுய-நேர்மை குறித்த மனஉறுதி” மீது தாக்குதல் நடத்துமளவுக்குச் சென்றார். ஜான் உட்காக் போன்ற மற்ற தொழிற் கட்சி எம்.பி.க்கள் இந்த விவாதத்தை, போருக்கு ஆதரவாக வாக்களித்தால் அவர்களைத் தேர்வகற்றம் செய்ய அச்சுறுத்திய தொகுதியினரிடம் இருந்து அவர்கள் எதிர்கொண்ட “வம்பிழுக்கும் தந்திரோபாயம்” குறித்துப் புகார் கூறப் பயன்படுத்திக் கொண்டனர். சிரியா மீது டன்கணக்கிலான குண்டுகளை வீசுவதை அங்கீகரிக்க தயாரிப்பு செய்து கொண்டிருந்த அவர் “ஒரு வகை கோபமான, சகிப்புத்தன்மையற்ற அமைதிப்படுத்தல்வாதத்தை” கண்டனம் செய்தார். அதேநேரத்தில் இங்கிலாந்தின் இராணுவத் தலையீடு தொடர்பாக பிரபுக்கள் சபையில் நடைபெற்ற விவாதத்தில், தொழிற் கட்சியைச் சேர்ந்த ஜெப்ஃரி ரூக்கர் தொழிற் கட்சி கோர்பினை “ஒதுக்கி வைக்க” அழைப்பு விடுத்தார். தனது சொந்தக் கட்சித் தலைவரை விடவும் டோரி கேபினட் உறுப்பினர்கள் மேம்பட்ட பிரதமர்களை உருவாக்குவார்கள் என்று தெரிவித்த ரூக்கர், ”பிரிட்டிஷ் வாழ்க்கைமுறை”க்கு ISIS காட்டும் “பிறவிக்குண சகிப்பின்மை”யுடன் “கட்சியின் கட்டுப்பாட்டை முயன்று அடைவதற்கு நமது சகிப்புத்தன்மையைப் பயன்படுத்தி”யிருந்த “தொழிற் கட்சியிலுள்ள பிரிட்டிஷ் விரோத ட்ரோட்டுகள்” உடன் அடையாளப்படுத்தினார். “வம்பிழுப்பதை” எதிர்த்தும் “தொழிற் கட்சியில் இருக்கும் நாம் அனைவரும்” “தோழமையான ஒரு வகையில்” கட்சியைக் கட்டியெழுப்புவதன் மீது கவனம் குவிக்க அழைப்பு விடுத்தும் ஒரு ஃபேஸ்புக் செய்தியைப் பதிவிட்டு வலதிடம் இருந்தான புகார்களுக்கு கோர்பின் பதிலிறுத்தார். பெருகி வரும் சமூக மற்றும் அரசியல் பதட்டங்கள் குறித்து முதலாளித்துவ வர்க்கம் கூர்மையான விழிப்பினைக் கொண்டுள்ளது. குண்டுவீச்சை ஆதரித்த தி டைம்ஸ் செய்தித்தாளும் கூட, போருக்கு ஆதரவான பிரச்சார மழைக்கு பின்னரும் கூட சிரியாவிலான இராணுவ நடவடிக்கைக்கு மக்கள்தொகையில் பாதிக்கும் மேலானோர் எதிர்ப்பு தெரிவிப்பதைக் காட்டும் கருத்துக்கணிப்புகளை தனது முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. தங்களது விவாதம் பொய் பின்னலை அடிப்படையாகக் கொண்ட ஒரு பித்தலாட்டம் என்பது கூடியிருந்த நாடாளுமன்ற அங்கத்தினர்களுக்கு நன்கு தெரியும். ஒரு நாளைக்கு முன்பாகத் தான், கேமரூன் இராணுவ நடவடிக்கை தொடர்பான “கவலைகளை போதுமான அளவு நிவர்த்தி செய்திருக்கவில்லை” என்பதான மசோதாவுக்கு ஆதரவாய் நான்குக்கு மூன்று என்ற வித்தியாசத்தில் வெளியுறவு விவகார தேர்வுக் கமிட்டி வாக்களித்திருந்தது. கோர்பினின் வேண்டுகோள்கள் மற்றும் பின்வாங்கல்கள் எல்லாம் இருந்தாலும், முதலாளித்துவ வர்க்கமானது போருக்கான எதிர்ப்பை வாய்மூடச்செய்ய தன்னால் இயன்ற அத்தனையையும் செய்ய தீர்மானத்துடன் இருக்கிறது என்பதற்கு இது இன்னும் முக்கியமானதொரு காரணம் ஆகும். |
|
|