சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

American militarism and the Charleston killings

அமெரிக்க இராணுவவாதமும், சார்லெஸ்டன் படுகொலையும்

Patrick Martin
20 June 2015

Use this version to printSend feedback

புதனன்று இரவு தெற்கு கரோலினா மாநிலத்தில் சார்லெஸ்டன் நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஒன்பது ஆபிரிக்க-அமெரிக்க ஆண்கள் மற்றும் பெண்களின் படுகொலை, பல சிக்கலான கேள்விகளை எழுப்பியுள்ள ஒரு சம்பவமாகும். அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள், ஊடகங்கள் மற்றும் உத்தியோகப்பூர்வ அரசியல் வாட்டாரங்களால் வழங்கப்பட்ட மேலோட்டமான உதிரித்தகவல்களை விட ஓர் ஆழ்ந்த விளக்கத்தை விரும்புகின்றனர்.

மனரீதியில் பாதிக்கப்பட்ட ஒரு தனிநபரால் நடத்தப்பட்ட முட்டாள்தனமான வன்முறை என்ற ஆரம்ப ஊடக குணாம்சப்படுத்தல்கள் எதையும் விளங்கப்படுத்தவில்லை. வியாழனன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஜனாதிபதி ஒபாமாவால் அவரது தேசிய உரையில் முன்னெடுக்கப்பட்ட முயற்சி, இமானுவேல் AME தேவாலயத்தின் படுகொலையை 1963 பேர்மின்ஹாம் தேவாலய குண்டுவெடிப்பில் நான்கு இளம் கருப்பின பெண்களின் கொல்லப்பட்டதைப் போன்ற, குடியுரிமைகள் சகாப்தத்தினது அட்டூழியங்களின் ஒரே நேர்கோட்டில் நிறுத்துவதற்கு சற்றே சிறந்த முயற்சியாக உள்ளது.

நகைச்சுவையாளர் ஜொன் ஸ்ருவார்ட் அவரது வியாழக்கிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெரிதும் விவாதித்த கருத்துரையில் தெரிந்ததைப் போல, இனவாதமே சார்லெஸ்டன் துயரத்தின் அடிப்படையான மற்றும் பிரத்யேகமான காரணமாகவும் கூட இருக்கிறது என்ற நிலைப்பாடு, ஒரு தீவிரமான உருக்குலைந்த முன்னோக்கிற்கு இட்டுச் செல்கிறது. ஸ்ருவார்ட் அந்த படுகொலையை "ஆறமுடியாத பிளவடைந்துசெல்லும் இனவாத காயமாகவும், ஆனால் நாம் அவ்வாறு ஒன்று இல்லாததைப் போல நடிக்கிறோம்" என்று குற்றம்சாட்டினார்.

இனவாத அணுகுமுறைகளும் மற்றும் உறவுகளும் இனப்பாகுபாடுகாட்டப்பட்ட தெற்கில் இருந்ததுபோல் மாற்றமடையாது இருப்பதுடன் மற்றும் கடந்த அரை-நூற்றாண்டாக முற்றிலும் பயனற்றமுறையில் வாழ்ந்திருந்ததைப் போலவும், இங்கே இனவாதம் என்பது அதன் சமூக மற்றும் வரலாற்று வேர்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, அமெரிக்க சமூக உளவியலின் ஒரு சுதந்திரமான மற்றும் நிரந்தரமான அம்சமாக மாற்றப்பட்டுள்ளது.

சார்லெஸ்டன் படுகொலைக்கு பொதுமக்களின் எதிர்வினை, மூர்க்கமான சீற்றங்களில் ஒன்றாக இருந்தது. 1960களில் அங்கே Klan இன் குற்றங்களுக்கு இருந்ததுபோல், அங்கே Roof இன் நடவடிக்கைகளுக்கு எவ்வித குறிப்பிடத்தக்க ஆதரவும் இல்லை. மேலும் அவரது காரை அடையாளம்கண்ட மற்றும் அவரையும் பின்தொடர்ந்த ஒரு வெள்ளையின பெண்மணி அவரின் வெள்ளையின தொழில்வழங்குனரின் அழுத்தம் காரணமான வழங்கிய குறிப்பு தான் அவரை கைது செய்ய இட்டுச் சென்றது.

சார்லெஸ்டன் படுகொலை பற்றிய ஓர் ஆழ்ந்த விளக்கத்தை, மாற்றமடைந்திராத மற்றும் வரலாற்றுக்குப்புறம்பான வடிவத்தில், இனப்பாகுபாடு அணுகுமுறையின் உயிர்தப்பியிருப்பதாக கூறப்படுவதிலிருந்து இல்லாமல், மாறாக 21ஆம் நூற்றாண்டின் சமகாலத்திய அமெரிக்க சமூகம் மற்றும் உலகளாவிய முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் இருந்து காண வேண்டும்.

Dylann Roof இன் உள்நோக்கத்தை வேண்டுமானால் இனவாதமாக சித்தரிக்கலாம். ஆனால் அங்கே கடந்த இரண்டு தசாப்தங்களாக டஜன் கணக்கான அதுபோன்ற பாரிய படுகொலைகள் நடந்துள்ளன. அதில் தனிநபர்களின் உள்நோக்கங்கள் வேறுவேறாக இருந்துள்ளன. ஆனால் கொலம்பைன் உயர்நிலை பள்ளி மற்றும் வெர்ஜீனியா தொழில்நுட்ப பயிலகத்தின் மாணவர்கள் மீது, அரோராவின் கொலோராடோவில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது, நியூ யோர்க்கின் பின்ஹாம்டன் சேவை மையத்தில் புலம்பெயர்ந்தவர்கள் மீது, கொன்னெக்டிகட் நியூடவுனில் பள்ளிக்கூட குழந்தைகள் மற்றும் அவர்களின் ஆசிரியர்கள் மீது, அரிஜோனா துக்சனில் ஒரு காங்கிரஸ் பெண்மணியைச் சந்திக்க வந்திருந்த அரசியலமைப்பு அதிகாரிகள் மீது என அப்பாவி மக்கள் கூட்டத்திற்கு எதிராக முக்கியமாக அந்நியப்படுத்தப்பட்ட தனிநபர்கள், வழமையாக தனித்து செயல்பட்ட, ஆக்ரோஷமான மனிதபடுகொலை நடவடிக்கையின் அதிகரிப்பானது ஒரேமாதிரியான சமூக நிகழ்வுபோக்கை எடுத்துக்காட்டியுள்ளன.

பாரிய படுகொலைகள் என்பது தனிநபர் சம்பந்தபட்டதல்ல, அதுவொரு சமூக நிகழ்வுபோக்கு என்பதுடன், அது அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் முரண்பாடுகள், மற்றும், அனைத்திற்கும் மேலாக, அமெரிக்க அரசாங்கத்தின் பாகத்தில் எல்லா மட்டங்களிலும் அதிகரித்தளவில் வன்முறையில் தங்கியிருப்பது என ஒரு சமூக துன்பியலின் வெளிப்பாடாக புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும்.

வியாழனன்று ஜனாதிபதி ஒபாமா அவரது கருத்துக்களில் குறிப்பிடுகையில், “இதுபோன்ற பாரிய வன்முறை ஏனைய முன்னேறிய நாடுகளில் நடப்பதில்லை,” என்றார். பரந்தளவில் துப்பாக்கி வைத்திருப்பதே பிரச்சினை என்பதுடன் சம்பந்தப்படுத்துவது, தாராளவாத மற்றும் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக வழங்கப்படும் மற்றொரு மேலோட்டமான மற்றும் வெற்று விளக்கமுமாகும்.

அமெரிக்காவை ஏனைய எல்லா நாடுகளில் இருந்தும் மிகவும் வேறுபடுத்துவது என்னவென்றால் அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து உலகெங்கிலும் "பாரிய வன்முறையில்" ஈடுபட்டுள்ளது என்பதே யதார்த்தமாகும்.

முதல் வளைகுடா போர் (1991); சோமாலியா (1992-94); போஸ்னியா மற்றும் கொசோவோ (1995-1999); ஆப்கானிஸ்தான் (2001 இல் இருந்து இப்போது வரையில்); இரண்டாம் வளைகுடா போர் (2003-2011); லிபியா (2011); மற்றும் இப்போது ஈராக்கில் மூன்றாம் போர், அத்துடன் இந்த முறை சிரியாவிலும் (2014 இல் இருந்து இப்போது வரையில்) என கடந்த கால்-நூற்றாண்டாக, அமெரிக்க இராணுவ படைகள் ஏறத்தாழ தொடர்ந்து போர்முறைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதற்கு கூடுதலாக இப்போது அதன் 15ஆம் ஆண்டை நெருங்கி கொண்டிருக்கும், காலம் மற்றும் இட வரையறையற்ற ஒரு மோதலான "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்", வெளிநாட்டிலும் சரி அதிகரித்தளவில் உள்நாட்டிலும் சரி இரண்டிலும் கொடூரமான ஒடுக்குமுறைக்கு போலிக்காரணமாக மாறியுள்ளது.

இத்தகைய போர்களில் மற்றும் உள்நாட்டு போர்களில் மில்லியன் கணக்கானவர்கள் இறந்துள்ளனர். இவை அமெரிக்க ஜனாதிபதிகள் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் பராக் ஒபாமாவை 21ஆம் நூற்றாண்டின் முன்னணி பாரிய படுகொலையாளர்களாக ஆக்குகின்றன. டிரோனிலிருந்து வீசப்படும் கப்பற்படை ஏவுகணைகளைக் கொண்டு படுகொலை செய்ய வேண்டியவர்களின் பட்டியலில் கையெழுத்திட சிஐஏ மற்றும் இராணுவ அதிகாரிகளை ஒபாமா வாரந்தோறும் சந்தித்து வருகிறார்.

ஒரு கால்-நூற்றாண்டு அமெரிக்க போர்களின் விளைவுகள் தான் என்ன? உலகெங்கிலும், 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இப்போது அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள், அவர்களில் பெரும் பெரும்பான்மையினர் மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்கள் மீது ஆக்கிரமிக்கும் நோக்கில் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய அந்தஸ்தை பேணும் நோக்கில் வாஷிங்டனால் தூண்டிவிடப்பட்டு எரியூட்டப்பட்ட உள்நாட்டு போர்களால் அல்லது அமெரிக்க படையெடுப்பால் செயல்படும் சமூகங்களாக இருந்து சீரழிக்கப்பட்ட சிரியா, ஈராக், யேமன், லிபியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யா மற்றும் தெற்கு சீனக் கடல் விவகாரத்தில் சீனா உடன் அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்ட மோதல்கள் அணுஆயுத சக்திகளுக்கு இடையே இராணுவ மோதல்களாக வெடித்தால் அதிலிருந்து விளையும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் பல மடங்காக இருக்கும்.

அமெரிக்காவிற்குள், இதுவரையில் ஒருபோதும் இருந்திராத அளவுக்கு ஒவ்வொன்றையும் விஞ்சிவிடக்கூடிய ஓர் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் வளர்ச்சியுடன் சேர்ந்து, மேலும் அது அதிகரித்தளவில் அமெரிக்க மக்களையே ஓர் எதிரியாக இலக்கில் வைக்க பார்க்கின் நிலையில், ஜனநாயக ஆட்சி வடிவங்கள் ஒரேசீராக அழிக்கப்பட்டுள்ளன. இந்த உள்ளடக்கத்தில் தான் எல்லா இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறையின் பாரியளவிலான அதிகரிப்பைப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த ஆண்டு மிசோரி ஃபேர்குஷன் நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக்காட்டியதைப் போல, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்முறைகள் அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக உள்நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு வருகின்றன.

ஒரு கால்-நூற்றாண்டு போரானது, அமெரிக்க அரசியல், கலாச்சாரம், இராணுவ வன்முறையைப் பெருமைப்படுத்தும் ஊடகங்கள், ஓயாது அச்சமூட்டல்கள், மற்றும் புலம்பெயர்ந்தோர் விரோத மற்றும் முஸ்லீம்-விரோத உணர்வுகளை அதிகரிப்பது ஆகியவற்றால் மாசடைந்துள்ளது.

அந்த படுகொலையை அரசியல்வாதிகளின் பிரச்சார தளத்தில் எடுத்துக்காட்டுவதற்காக அவர்களோடும் மற்றும் மக்களோடும் "பேசுவதே" இப்போது ஊடக பண்டிதர்களின் வழமையான ஒன்றாக ஆகியுள்ளது. இமானுவேல் AME தேவாலயத்தில் இந்த கொடூரமான சம்பவங்கள் நடப்பதற்கு வெறும் மூன்று வாரங்களுக்கு முன்னர், தெற்கு கரோலினா செனட்டர் லிண்ட்செ கிரஹாம் பின்வரும் பெருமைபீற்றல்களுடன் அவரது ஜனாதிபதி பிரச்சாரத்தைத் தொடங்கினார்: “நான் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தால், நீங்கள் அல் கொய்தா அல்லது ISIL இல் சேர்வது குறித்து சிந்தித்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், நான் ஒரு நீதிபதியை அழைக்க மாட்டேன். ஒரு டிரோனுக்கு தான் அழைப்புவிடுபேன், நாங்கள் உங்களை கொன்றே விடுவோம்,” என்றார்

இராணுவவாதத்தின் வளர்ச்சியானது அமெரிக்க முதலாளித்துவ முட்டுச்சந்தின் ஒரு வெளிப்பாடாகும். பொருளாதார வளர்ச்சி, இதுவரையில் முற்றிலும் எந்தளவிற்கு இருந்தாலும், அது உழைக்கும் மக்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கை தரங்களை விலையாக கொடுத்து முன்பினும் பெரியளவில் தனிநபர் செல்வவளத்தைக் குவித்துக் கொண்டுள்ள பெரும் பணக்காரர்களின் ஆதாயத்திற்காகவே உள்ளது. அமெரிக்க பொருளாதாரம் உலகத்தின் வேகத்தை அமைத்த அல்லது அமெரிக்க தொழிலாளர்கள் மிகச்சிறந்த வாழ்க்கை தரங்களை அனுபவித்த அந்த நாட்கள் எல்லாம் நீண்டகாலத்திற்கு முன்னரே போய்விட்டன. அமெரிக்க சமூகம், அதன் பள்ளிக்கூடங்கள், அதன் ஸ்தூலமான உள்கட்டமைப்பு, அதன் அமைப்புகள் முடமாகியிருப்பது தெளிவாக தெரிகிறது.

அமெரிக்காஎதனை அர்த்தப்படுத்துகின்றது”? போர், டிரோன் படுகொலைகள், சித்திரவதை, அன்னியநாடுகளிடம் ஒப்படைப்பு; பொலிஸ் வன்முறை, சமத்துவமின்மை, உள்நாட்டிலேயே அரசு உளவுபார்ப்பது என புறநிலை சமூக யதார்த்தம், சுதந்திரம் மற்றும் வாய்ப்புகளின் தேசம் என்ற உத்தியோகப்பூர்வ அமெரிக்க புராணத்திற்கு முற்றிலும் எதிர்பதமாக உள்ளது.  

சமூக சீரழிவு, வன்முறை மற்றும் பிற்போக்குத்தனத்தால் குணாம்சப்பட்ட ஒரு அமெரிக்கா என்பதைத் தவிர வேறொன்றையும் அறிந்திராத இளம் தலைமுறையின் மீதே இந்த சமூக நெருக்கடியின் படுமோசமான தாக்கம் உள்ளது. மக்களின் எந்தவொரு பிரிவினரையும் விட அதிகமாக இளைஞர்களுக்கே முன்மாதிரிகள், நம்பிக்கை, வாய்ப்பு அவசியப்படுகிறது. வோல் ஸ்ட்ரீட் மற்றும் CIA க்கு ஆதரவாக, அத்தகைய வார்த்தைகளைச் சிடுமூஞ்சித்தனமாக காட்டிக்கொடுப்பதற்கு மட்டுமே ஒபாமா அவற்றை கையாள்கின்றார்.

ஒரு விரல்விட்டு எண்ணக்கூடிய மிகவும் நோக்குநிலை பிறழ்ந்தவர்கள் மட்டுமே இந்த சமூக நெருக்கடிக்கு Dylann Roof பாணியில் விடையிறுப்பார்கள். ஏனையவர்கள், பிற்போக்குத்தனத்தின் கரங்களில் விழுந்தவர்கள், அரசியல் குண்டர்களாக மற்றும் சிஐஏ படுகொலையாளர்களாக மற்றும் எதிர்கால முதலாளித்துவ அரசியல்வாதிகளாக ஆவார்கள். ஆனால் பரந்த பெரும்பான்மை இளைஞர்களும் மற்றும் தொழிலாள வர்க்கமும் ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் அதன் ஆட்சியாளர்களுக்கு எதிரான பாரிய போராட்டங்களுக்குள் இடதை நோக்கி, நகர்ந்து வருகிறது.   

இந்த வரவிருக்கின்ற இயக்கத்தை, மனிதயினத்திற்கு உண்மையான நம்பிக்கையை மட்டுமே வழங்கும் ஒரு புரட்சிகர முன்னோக்கைக் கொண்டு, அதாவது முதலாளித்துவ வன்முறை, ஒடுக்குமுறை மற்றும் சமத்துவமின்மைக்கு முடிவுகட்டி, சமத்துவம் மற்றும் மனித ஐக்கியத்தின் அடிப்படையில் ஓர் உலக சோசலிச சமூகத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தைக் கொண்டு, ஆயுதபாணியாக்குவதே கடமையாகும்.