சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France to spend billions on military rearmament program

பிரான்ஸ் இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு பில்லியன்கள் செலவு செய்ய இருக்கிறது

By Kumaran Ira
4 May 2015

Use this version to printSend feedback

புதன்கிழமை அன்று ஜனதிபதி எலிசே அரண்மனையில் நடைபெற்ற பாதுகாப்பு கூட்டத்திற்குப் பின்னர், பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட் பாதுகாப்பு செலவினங்களில் ஒரு பாரிய அதிகரிப்பை அறிவித்தார். வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பிரான்ஸ் முழுவதும் துருப்புக்ளை நிலைநிறுத்துவதை உள்ளடக்கிய பணியைக் கவனிக்க, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பாதுகாப்பு செலவினங்களில் கூடுதலாக 3.8 பில்லியன் யூரோக்களை அவர் அறிவித்தார்.

ஆயுதப்படைகளின் தலைவர் என்ற வகையில் தான் பேசுவதாக அழுத்தமாகக் குறிப்பிட்டு, “பல முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றார். 31.4 பில்லியன் யூரோ நடப்பு பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டம், அடுத்த ஆண்டு கூடுதல் 600 மில்லியன் யூரோக்கள் சேர்த்து அதிகரிக்கப்படும், இது 2019ல் 1.5 பில்லியன் யூரோக்கள் அளவுக்கு சென்றடையும். ஹோலண்டின் படி, “நான்கு ஆண்டுகளுக்கு கூடுதலாக உரிமையாக்கிக் கொள்வதற்கு 3.8 யூரோக்களை ஒதுக்குவதற்கு” 2014-2019 இராணுவ செலவின சட்டத்தை மீள்பார்வை செய்ய பாரிஸ் தயாரிப்பு செய்துவருகிறது.

இந்த கூடுதல் இராணுவ செலவானது, ஹோலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) யால் முன்னெடுக்கப்படும் சிக்கனக் கொள்கைகள் மற்றும் சமூகச் செலவினங்களில் வெட்டுக்கள் மூலம் தொழிலாள வர்க்கத்தை மேலும் சூறையாடுவதிலிருந்து பெறப்படும். ஹோலண்ட் இராணுவ செலவின அதிகரிப்பை ஒரு பெரும் முயற்சி, பிரதான முயற்சியும் கூடஎன்று குறிப்பிட்டார்.

வியாழனன்று நிதி அமைச்சர் மிஷேல் சபான் (Michel Sapin) சுகாதாரப் பராமரிப்பு மற்றும் வீட்டுத்திட்டங்களில் வெட்டுக்களை அறிவித்தார். அவர் Europe1 வானொலியில், “பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பது நியாயபூர்மாதாகும்என்றார்.

குடும்பங்கள் மற்றும் மாணவர்களுக்கான உதவிக்கொடைகள் அதேபோல வீடு கட்டுபவர்களுக்கான ஊக்கத்தொகைகள் உள்ளடங்கலான, வீட்டுவசதி வரவு-செலவு திட்டம் குறைக்கப்பட இருக்கிறது, அதற்குப் பொறுப்பாய் இருக்கும் அமைச்சகம் அதன் வளங்களை சிறந்த முறையில் ஒதுக்கீடு செய்யுமாறு கேட்கப்பட்டிருக்கிறது என்று, நிதி அமைச்சகத்தை மேற்கோள்காட்டி புளூம்பேர்க் குறிப்பிட்டது. இந்த ஆண்டு பெரும் செலவின வெட்டுக்களை ஏற்கனவே எதிர்கொண்டு வரும் சுகாதாரப் பராமரிப்பு, 2016ல் செலவினங்களில் வெட்டுவதற்கான முயற்சிகளில் மையமாக இருக்கும்.

இந்த மசோதா பிரெஞ்சு மக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் என்று ஹோலண்ட் கூறுவதன் மூலம், இரண்டாவது உலகப் போருக்குப் பிந்தைய, பிறரால் மிகவும் விரும்பப்படாத பிரெஞ்சு ஜனாதிபதியாக அவரை ஆக்கிய, யுத்தம் மற்றும் சிக்கனக்கொள்கை பற்றிய அவரது பிற்போக்கு வேலைத்திட்டத்தை நியாப்படுத்த முயன்றார். இந்த ஜனவரியில் சார்லி ஹெப்டோ துப்பாக்கிச்சூட்டிற்குப் பின்னர் பிரான்சுக்குள்ளேயே 10,000 துருப்புக்களை நிறுத்தியதை மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.

ஹோலண்ட் இராணுவ ஆட்திறன் வளங்களையும் கூட விரிவுபடுத்துகிறார். ஹோலண்டின் படி, சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின்னர் பிரான்ஸ் நெடுகிலும் நிறுத்திய 10,000 துருப்புக்களில் 7000 சிப்பாய்கள் நிரந்தரமாக நிறுத்தப்பட இருக்கிறார்கள். முன்னர் இராணுவத்தில் அகற்றப்பட இருந்த 18,500 வேலைகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் துருப்புக்களை இறக்குவதை ஊக்கப்படுத்தும்பொருட்டு நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

மில்லியன் கணக்கான வேலையற்ற இளைஞர்களுக்கு, ஆளும் வர்க்கம் ஒன்றும் வழங்காத நிலையின் கீழ், பாரிஸ் அதன் ஏகாதிபத்திய போர்களில் பீரங்கித் தீனியாக அவர்களை பயன்படுத்த தயாரிப்பு செய்து வருகிறது. எந்த தகுதிகளும் இல்லாமல் 18 முதல் 25 வயதிற்கு இடையிலான இளம் வயதினருக்கான தன்விருப்பத்தோடு இராணுவச்சேவைஎன்பதை ஹோலண்ட் முன்னிலைப்படுத்துகிறார். அரசாங்கம், தன்னார்வ இராணுவ சேவை”  மையங்கள் 7 நிறுவுவதன் மூலமாக அடுத்த ஆண்டு சுமார் 2000 இளைஞர்களை திரட்டக்கூடியதாக இருக்கும் என அண்மையில் அறிவித்தது.

அவை பிரெஞ்சு மக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் மற்றும் வெளிநாடுகளில் இராணுவத் தலையீடுகளை முன்னெடுப்பதற்கு அனுமதிக்கும் என்று கூறி ஹோலண்ட் இக்கொள்கைகளை நியாயப்படுத்தினார்.

நான் இந்த தேர்வை செய்தேன், ஏனெனில் அது பிரான்ஸ் பற்றியது, அதனை பாதுகாத்தல், அதன் பாதுகாப்பு பற்றியது, நான் அறிவேன் பிரெஞ்சு மக்கள், அவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க விரும்பினால், அவர்கள் கட்டாயம்  பாதுகாப்பாக இருப்பதாக மற்றும் எங்கும் பாதுகாக்கப்பட்டிருப்பதாக கட்டாயம் உணர வேண்டும். இந்த முடிவினை நியாயப்படுத்தும் ஒரு காரணம், அது பிரெஞ்சு மக்களுக்கு நம்பிக்கையை வழங்குகிறது.... அவர்கள் இராணுவத்தில், முடிவுகளை எடுக்கும் அரசியல் அதிகாரிகளில் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர், ஆனால் இந்த நோக்கங்களுக்கு சேவைசெய்ய தேவையான செலவு செய்யப்படுகிறது என்று அவர்கள் கட்டாயம் அறிய வேண்டும்என்று ஹோலண்ட் கூறினார்.

எமது துருப்புக்களை வெளியில் நிறுத்துதலானது, உயர்த்தப்பட்ட மட்டத்தில் கட்டாயம் வைக்கப்பட வேண்டும் என்று நான் விவாதித்தேன்என்று மேலும் அவர் கூறினார்.

தனது அரசாங்கத்தின் மீது பிரெஞ்சு மக்களின் நம்பிக்கையை ஊக்குவிப்பதற்குத்தான் இராணுவத்தை கட்டுவதாக கூறும் ஹோலண்ட்டின் கூற்று ஒரு அரசியல் மோசடி ஆகும். ஹோலண்ட் நிர்வாகத்துடன் தொழிலாள வர்க்கத்திற்கு உள்ள கோபம் மற்றும் வளர்ந்துவரும் சமூக அதிருப்தி தொடர்பாக பிரெஞ்சு ஆளும் வர்க்கம் கிலி அடைந்திருக்கிறது. தனது முன்னாள் காலனித்துவ பேரரசில், தன் ஏகாதிபத்திய யுத்தங்களை வெடிப்புறச்செய்யும் அதேவேளை, சமூக அதிருப்தியை அச்சுறுத்தவும் ஒடுக்கவும் வடிவமைக்கப்பட்ட போலீஸ் அரசு நடவடிக்கைகளை, தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது.

சிரியா, லிபியா மற்றும் ஈராக் உட்பட, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தலைமையிலான யுத்தங்களில் பங்கெடுத்துக்கொண்டு, பிரான்ஸ் முன்னாள் பிரெஞ்சு காலனிகளான மாலி மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு போன்றவற்றிலும் யுத்தத்தைத் தொடுத்து வருகிறது. பிரான்சின் கடல்கடந்த நடவடிக்கைகளில் சுமார் 10,300 துருப்புக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சோசலிஸ்ட் கட்சியின் மீளஆயுதமயப்படுத்தும் திட்டமானது, சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கத்திற்கு சாத்தியமுள்ள கடும்அபாயங்களை முன்வைப்பதுடன், இது உலகம் முழுவதும் ஏகாதிபத்திய சக்திகளால் முன்னெடுக்கப்படும் இராணுவவாதத்திற்கும் யுத்தத்திற்கும் பரந்த அளவில் திரும்புதலின் ஒரு பகுதியும் ஆகும். அது ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், யுத்தத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒன்றிணைந்த சர்வதேச போராட்டத்தின் மூலம் மட்டுமே தீர்க்கப்பட முடியும்.

பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையிலான பதட்டங்கள், ஐரோப்பிய மற்றும் உலக மக்களை ஒரு அழிவுகரமான யுத்தத்தில் மூழ்கடிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டிருக்கிறது. கடந்த பெப்ரவரியில், கியேவில் நடைபெற்ற நேட்டோ ஆதரவு பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப்பின்னால், உக்ரேனில் வெடித்த உள்நாட்டுயுத்தத்தின் மீதாக ஐரோப்பாவானது ரஷ்யாவுடன் ஒரு மோதலுக்குள் இறங்கி வருகிறது, இந்த மோதல் முழு யுத்தத்திற்குஇட்டுச்செல்ல முடியும் என்று ஹோலண்ட் கூறுகிறார். “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்புஎன்பதன் கீழ், சீனாவை நோக்கிய ஒரு யுத்த உந்தலை வாஷிங்டனானது தூண்டி விடுகிறது, மற்றும் பிரெஞ்சு ஊடகங்கள் இந்தியப் பெருங்கடலில் உள்ள மத்திய கிழக்கிலிருந்து சீன எண்ணெய் இறக்குமதிகளை தடுப்பதற்கு அழைப்பு விடுக்கின்றன.

இருபதாம் நூற்றாண்டின் இரண்டு உலகயுத்தங்களில் வரலாற்று ரீதியாக வேரூன்றி உள்ள, பிரதான ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான பதட்டங்கள், கவனிக்கத்தக்க வகையில் ஜேர்மன் மற்றும் பிரான்சுக்கு இடையில் வெடித்து வருகின்றன. பிரான்சில் ஐரோப்பிய ஒன்றிய-எதிர்ப்பு தேசிய முன்னணியின் நவ-பாசிஸ்டுகள் எழுந்துவருகையில், பேர்லின் பரந்த மறு ஆயுதமயமாக்கல் வேலைத்திட்டத்தை தொடங்கி இருப்பதானது, பிரெஞ்சு ஆளும் தட்டால் பதட்டத்துடன் கவனிக்கப்படுகிறது.

ஜேர்மனி அதன் பாதுகாப்பு வரவு-செலவு திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6.2 சதவீதமாக ஊக்குவிப்பதற்கு, 2019 அளவில் பாதுகாப்பு செலவினங்களை 35 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக அதிகரிப்பதற்கு மற்றும் விரிவானமுறையில் அதன் தரைப்படையை நவீனப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. 2010லிருந்து 2014 வரை, பேர்லின் பாதுகாப்பு செலவினத்தை 7 சதவீதமாக 32.4 பில்லியன் யூரோக்களாக உயர்த்தி இருக்கிறது. அதேவேளை பிரெஞ்சு பாதுகாப்பு செலவினம் அதே காலகட்டத்தில் 2.5 சதவீதம் குறைவாக, 31.4 பில்லியன் யூரோக்களாக ஆகியுள்ளது.

ஜேர்மன் மீள் ஆயுதமயமாக்கல் தொடர்பாக பிரெஞ்சு ஊடகத்தின் கவலைகள் பற்றிய ஆரம்ப விமர்சனங்கள் இடம்பெறத்தொடங்கியுள்ள. அதுவும் குறிப்பாக, பேர்லின் மேலாதிக்க பாத்திரம் வகிக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவுக்கு சாதமாக பேர்லின் பதிலிறுத்த பின்னர், இவை இடம்பெறத் தொடங்கின. Le Monde இந்த கொள்கையை ஐரோப்பாவில் ஜேர்மன் மேலாதிக்கத்திற்கான திட்டங்களை மறைப்பதற்கான ஒரு முயற்சி என தாக்கியது. அது பேர்லின் கணக்கீடுகளை பின்வருமாறு விவரிக்கிறது: “நாம் மீள் ஆயுதமயமாக்குகையில் அயலவர்களைப் பார்த்து பீதியுறக் கூடாது. எமது மீள் ஆயுதமயமாக்கலுக்கும் ஐரோப்பிய பூச்சு கொடுப்பது சிறந்தது.” ஆயினும், பிரெஞ்சு கொள்கை வகுப்பாளர்கள் ஜேர்மனியரை சீருடையில் காண்பதற்கு அவசரப்படவில்லைஎன மேலும் கூறியது.

ஹோலண்ட் இன் கொள்கை தெளிவாக காட்டுகிறவாறு, ஐரோப்பாவில் ஆயுதப்போட்டியை தொடங்குவதில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிரதிபலிப்பானது பேரழிவுடன் மனிதகுலத்தை அச்சுறுத்துகிறது.

மேலதிக வாசிப்புக்கு

ஜேர்மன் அரசாங்கம் 8 பில்லியன் யூரோ அளவிற்கு பாதுகாப்பு வரவு-செலவு கணக்கை அதிகரிக்கிறது