தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
David North to speak at public meetings in UK and US: Why and How the GPU Murdered Leon Trotsky ஜிபியு ஏன், எப்படி லியோன் ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்தது? : இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் டேவிட் நோர்த் பொதுக்கூட்டங்களில் பேச இருக்கிறார் 21 October 2015 பிரிட்டனில் சோசலிச சமத்துவக் கட்சியானது நவம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை அன்று, லண்டனில், “ஜிபியு ஏன், எப்படி லியோன் ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்தது?” என பொதுக் கூட்டம் ஒன்றை நடத்த இருக்கிறது. இந்த கூட்டமானது அமெரிக்காவில் நடைபெறும் 5 கூட்டங்கள் உள்பட வரிசைத்தொடராய் நடைபெற இருக்கும் கூட்டங்களின் ஒரு பகுதி ஆகும். அனைத்துக் கூட்டங்களின் விவரங்களையும் கீழே காணலாம். மற்றும் wsws.org/Trotsky பக்கத்திலும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த கூட்டங்களில் பேசவிருக்கும் பிரதான பேச்சாளர் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் ஆவார். இங்கிலாந்தில் நடைபெறும் கூட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலாளர் பீட்டர் சுவார்ட்ஸ் மற்றும் சோசலிச சமத்துவ கட்சி (இங்கிலாந்து) இன் தேசிய செயலாளர் கிறிஸ் மார்ஸ்டன் ஆகியோரும் பேசுவார்கள். எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஆகஸ்ட் 20, 1940ல், ட்ரொட்ஸ்கி புலம்பெயர் வாழ்வில் மெக்சிகோ நகரத்தின் புறநகர் பகுதியான கோயோகானில் வசித்தபோது, சோவியத் இரகசிய பொலீசான ஜிபியு முகவரால் படுகொலை செய்யப்பட்டார். லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலையானது சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் உலக சோசலிச இயக்கத்திற்கும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திய, இருபதாம் நூற்றாண்டின் அரசியல் ரீதியாக மிகவும் விளைவுகளை ஏற்படுத்திய குற்றங்களின் வரிசையில் மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கிறது. இருந்தும் பல பத்தாண்டுகளாக ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதை சுற்றிய சூழல்கள் தொடர்ந்து இரகசியத்தால் மூடப்பட்டு இருந்துவருகிறது. ட்ரொட்ஸ்கிக்கு எதிரான பாரிய அளவிலான ஸ்ராலினிச சதித்திட்டம் கவனமாக சேர்ந்து ஏற்பாடுசெய்யபப்பட்ட மூடிமறைப்பின் விடயமாக இருந்தது. 1975ல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, படுகொலை சம்பந்தமாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் செய்யப்பட்ட முதலாவது முறையான விசாரணையை தொடங்கியது. நான்காம் அகிலமும் பாதுகாப்பும் என்று அறியப்பட்ட இந்த விசாரணையானது, ட்ரொட்ஸ்கியின் உயிருக்கு எதிரான ஸ்ராலினிச சதித்திட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்திய, நான்காம் அகிலத்திற்குள்ளேயான ஜிபியு முகவர்களின் வலைப்பின்னலை அம்பலப்படுத்த இட்டுச்சென்றது. இந்த விசாரணையானது பப்லோவாதிகளாலும் போலி இடது அமைப்புகளாலும் கடுமையாக எதிர்க்கப்பட்டது. அவர்கள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் இடம்பெற்ற உளவாளிகளை அம்பலப்படுத்தலை “ஏஜண்ட்-வேட்கை” என்று கண்டனம் செய்தனர். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை அடுத்து, வெளியிடப்பட்ட அரசு உளவுத்துறை ஆவணங்கள் அனைத்துலகக் குழுவின் கண்டறிதல்களை உறுதிப்படுத்தியபோதும் மற்றும் நான்காம் அகிலமும் பாதுகாப்பும் என்பதை மெய்ப்பித்த பின்பும் இது அவர்களின் நிலைப்பாடாக தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. நோர்த் நாற்பது ஆண்டுகளாக சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் முக்கிய தலைவராக இருந்து வருகிறார் மற்றும் அவர் நான்காம் அகிலமும் பாதுகாப்பும் என்ற விசாரணையில் ஒரு மைய பாத்திரம் வகித்தவர் ஆவார். இந்த உரை தொடர்களில், ட்ரொட்ஸ்கியின் படுகொலை மீதான முக்கியத்துவம் பற்றியும், அனைத்துலகக் குழு விசாரணையின் மூலங்கள் மற்றும் அபிவிருத்தி பற்றியும் மற்றும் அதன் முக்கிய கண்டுபிடிப்புகள் பற்றியும் நோர்த் பேச இருக்கிறார். கூட்டவிவரங்கள்:
London, UK US Meetings:
Berkeley, California
Davis, California
San Diego, California
Ann Arbor, Michigan
Detroit, Michigan |
|
|