ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

China accuses US of using undersea drone to spy

அமெரிக்கா உளவு பார்ப்பதற்கு கடலுக்கடியில் ட்ரோனை பயன்படுத்துவதாக சீனா குற்றஞ்சாட்டுகிறது.

By Peter Symonds 
19 December 2016

வியாழனன்று தென் சீனக் கடல் பகுதியில் சீனக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஒரு அமெரிக்க கடலுக்கடியில் பயன்படுத்தப்படும் ட்ரோனை திருப்பி அனுப்பவுள்ளதாக உறுதியளித்து சனியன்று சீன பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இரு நாடுகளும் இது தொடர்பாக எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்கின்ற போதும், "அமெரிக்கா இந்த விவகாரத்தை ஒருதலைப்பட்சமாக பிரமாண்டப்படுத்தி வருவதாக" செய்தி தொடர்பாளர் யாங் யுஜுன் அவரது கவலையினை வெளிப்படுத்தினார்.

பென்டகன் வெள்ளியன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், பிலிப்பைன்ஸில் உள்ள சூபிக் வளைகுடா பகுதி கடற்படை தளத்திற்கு வடமேற்கிலிருந்து கிட்டத்தட்ட 50 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் இருந்த ஆளில்லாத கடலுக்கடியில் மிதக்கும் வானூர்தி கலம் ஒன்று ஒரு சீன கப்பலால் எடுத்துச்செல்லப்பட்டதாக தெரிவித்தது. கடல் படுகை வரைபட தயாரிப்பிலும், கடலியல் தரவினை தொகுப்பதிலும் இந்த ட்ரோன் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக பென்டகன் கூறுவதுடன், இதனை "சட்டவிரோதமான" கைப்பற்றப்பட்டதாக கண்டனம் தெரிவித்து ட்ரோனை திருப்பி கையளிக்க கோரியது.

ஒரு சீன அறிக்கை, "சீனா கடற்பகுதிகளில் நெருங்கிய கண்காணிப்பினையும், இராணுவ ஆய்வுகளையும் நடத்துவதற்கு அமெரிக்கா தனது கப்பல்களையும், விமானங்களையும் அடிக்கடி ஈடுபடுத்தி வருகிறது என குறிப்பிட்டது. சீனா இத்தகைய செயல்களை உறுதியாக எதிர்ப்பதுடன் அமெரிக்கா இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்தவேண்டுமென்றும் கோருகிறது. அமெரிக்கா தொடர்புடைய நடவடிக்கைகள் மீது சீனா விழிப்புடன் இருக்கும், மேலும் அவர்களை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கும்" எனவும் குறிப்பிட்டது.

சீனா "திறமையுடனும் பொறுப்பாகவும்" நடந்துவருகின்றது என்று வலியுறுத்துவதுடன், "கடல்போக்குவரத்து மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பிற்கு எந்தவொரு தீங்கும் இதனால் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அதன் சாதனத்தை பரிசோதிக்கவும், சரிபார்க்கவும் தான் சீனக் கப்பலால் ட்ரோன் எடுக்கப்பட்டது" என்று செய்தி தொடர்பாளர் கூறுகிறார். அமெரிக்க கடற்படையை பொறுத்தவரை, ஒரு கடலியல் ஆய்வு கப்பலான USNS Bowditch அருகிலிருந்த அதன் மற்ற மிதவை வானூர்தி கலங்களை மீட்டுகொண்டிருந்ததாக அது தெரிவித்ததுடன், ட்ரோனை திருப்பியனுப்ப கோருவதற்கு சீன கப்பலை தொடர்புகொண்டதாகவும் தெரிவித்தது.

ஒரு ஓய்வு பெற்ற சீன துணை அட்மிரல், யாங் யீ, அமெரிக்க கடற்படைக்கு எதிரான அவரது அவர் மிகக்கூர்மையான குற்றச்சாட்டுக்களுடன், சீனாவினால் உண்மையில் கட்டுப்படுத்தப்படும் ஆனால் பிலிப்பைன்ஸினால் உரிமை கோரப்படும் ஒரு பாறைப்பகுதியான ஸ்கார்பாரோ கடல்படுகைக்கு வெகு அருகாமையிலுள்ள நீர்பரப்பில் இந்த ட்ரோன் செயல்பட்டுவருவதாக அறிவித்தார். சீன மாலுமிகள் ட்ரோனை கைப்பற்றுவதும், ஆய்வுக்கு உட்படுத்துவதும் இயல்பானதே என்றும் கூறுகிறார்.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்பின் கடந்த வார, ஒரே சீனா கொள்கையை கேள்விக்குட்படுத்தியதை குறிப்பிட்டுக்காட்டி, அட்மிரல் யாங் பின்வருமாறு அறிவித்தார்: "சீனாவின் கொள்கை மற்றும் முக்கிய நலன்களின் அடிப்படை தன்மைக்கு சவாலாக ட்ரம்ப் மற்றும் அமெரிக்க அரசாங்கம் தைரியமாக நடவடிக்கைகளை எடுக்குமானால், அவர் மீதான எந்தவொரு எதிர்பார்ப்பினையும் நாங்கள் கைவிட நேரிடும், மற்றும் மூக்குடைப்பும் தருவோம்."

யாங் இன் கருத்துக்கள், இந்த ட்ரோன் கைப்பற்றுதல் என்பது டரம்புக்கு விடப்படும் ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டது. வர்த்தகத்திலும் வட கொரிய மற்றும் தென் சீனக் கடல் பகுதிகள் மீதும், சீனா விட்டுக்கொடுப்புக்களை வழங்கினாலன்றி ஒரே சீனக் கொள்கைக்கு கட்டுபட்டிருப்பதாக தான் கருதவில்லை என டரம்ப் அறிவித்திருந்தார். 1979ம் ஆண்டு முதல் ஒரே சீன கொள்கை முறையாக அமுலில் இருந்துவருவதுடன், அதன்கீழ் தாய்வான் உட்பட சீனா முழுமைக்கும் பெய்ஜிங்கை ஒரு சட்டபூர்வமான அரசாங்கமாக அமெரிக்கா ஒத்துக்கொள்ளும் வகையிலான அமெரிக்க-சீன உறவுகளின் அடித்தளத்தையும் அமைக்கிறது.

தென் சீனக் கடல் பகுதியை ஒரு அபாயகரமான வெடிப்புப்புள்ளியாக மாற்றிய ஒபாமா நிர்வாகத்தின் மோதலைத்தூண்டும் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" கொள்கையினை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துவருவதை யாங் இன் போர்வெறிகொண்ட கருத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றது. சீனாவிற்கு எதிராக வணிகப்போர் நடவடிக்கைகளை செயல்படுத்துவது தொடர்பான ட்ரம்பின் தேர்தல் வாக்குறுதிகளோடு சேர்த்து அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளையும் மதிப்பிழக்க செய்வதற்கான அவரது அச்சுறுத்தல்கள் சிறு சம்பவங்களையும் பெரும் மோதல்களுக்கு இட்டுச்செல்லும் அபாயத்தை மட்டுமே அதிகரிக்கும்.

சனியன்று, ட்ரம்ப் முரண்பட்ட Tweets களுடன் இந்த சர்ச்சைக்குள் தலையீடு செய்தார். அவர் முதலில் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், "சர்வதேச கடல்பரப்பில் இருந்த அமெரிக்க கடற்படை ஆராய்ச்சிக்குரிய ட்ரோனை சீனா திருடுவது என்பது, அதனை கடல்பரப்பிலிருந்து வெளியேற்றுதலுக்கும், சீனா மீதான முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கைக்கும் வழிசெய்யும்." என்று கூறினார். பின்னர், பெய்ஜிங் மிதவை வானூர்தியை திருப்பியனுப்ப வேண்டும் என்ற கோசமிடுவதில் இணைவதைக்காட்டிலும், ட்ரம்ப் இரண்டாவது Tweetல், "அவர்கள் திருடிய அந்த ட்ரோனை நாங்கள் திரும்பப்பெற விரும்பவில்லை, அவர்களே வைத்துக்கொள்ளட்டும் என்று நாங்கள் சீனாவிற்கு தெரிவிக்க வேண்டும்!" என அறிவித்தார்.

சீனாவிற்கு எதிரான இன்னும் ஒரு இராணுவவாத விடையிறுப்பாக அழுத்தம் அளிப்பதற்கு இந்த சம்பவத்தினை குடியரசுக் கட்சி செனட்டர் ஜோன் மக்கெயின் பயன்படுத்தினார். மேலும், இந்த ட்ரோன் கைப்பற்றுதலை "சர்வதேச சட்டத்தினை முற்றிலும் மீறிய," ஒரு செயலாக அவர் முத்திரைகுத்தியதுடன், ஜனவரியில் ஈரான் அதன் பிராந்தியத்திற்குட்பட்ட கடல்பரப்பில் இரண்டு அமெரிக்க கப்பல்களை கைப்பற்றிய நிகழ்வுடன் ஒப்பிட்டார். "பாருங்கள், அமெரிக்காவின் பக்கம் எந்தவொரு வலிமையும் இல்லை. அனைவரும் இதனை சாதகமாக எடுத்துக்கொள்கிறார்கள்," என்று புலம்பியதுடன், கூடுதலாக, ட்ரம்ப் நிர்வாகத்தின் மூலம் "இது விரைவில் மாறும் என்று நம்புகிறேன்" என்றும் கூறினார்.

New York Times அதன் அறிக்கையில், ட்ரோன் உளவு நடவடிக்கையில் இருந்துவந்தது என்ற சீனாவின் கூற்றுக்களை நிராகரிக்கவில்லை. தென் சீனக் கடல் பகுதியில் சீன நீர்மூழ்கி கப்பல்களின் வழித்தடங்களை கண்டறிவதற்காக உளவுத்துறை உளவினைப் போன்றே இந்த சாதனம் உளவு செய்ததாக தென் சீனக் கடல் ஆய்வுகளுக்கான சீன தேசிய நிறுவனத்தின் தலைவர் வூ ஷிகுன் அறிவித்ததையும் இது குறிப்பிட்டது. ஹைனன் தீவில் ஒரு பிரதான சீன நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்கு அருகில் தென் சீனக் கடல் உள்ளது.

அமெரிக்கர்கள் அநேகமாக எதனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றிய திரு.வூ இன் கருத்தினை ஒரு அமெரிக்க கடற்படை நிபுணர் ஒத்துக்கொள்கின்றார் என்று ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது. "ட்ரோன்களின் காலகட்டத்தில் போர் மற்றும் கண்காணிப்பு பற்றிய ஒரு ஒப்புக்கொள்ளப்பட்ட விதிகளின் தொகுப்புக்கள் எதுவும் இன்னும் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை," என்று சீன கடல்சார் கற்கை நிறுவனத்தின் இணை பேராசிரியர் லைல் கோல்ட்ஸ்ரைன் கூறினார். "சீனா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே மேற்கத்திய பசிபிக் பகுதியின் மோதலுக்குட்பட்ட நீர்நிலைகள் மற்றும் வான்வெளிகளுக்குள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விமான மற்றும் கடற்படை ட்ரோன்களை பயன்படுத்திவருவது என்பது அதிகரித்த வகையிலான ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது.

பல சந்தர்ப்பங்களில், கண்ணிவெடிகள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போரை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில், கண்காணிப்பு உட்பட கடலுக்கடியிலான ட்ரோன்களை அபிவிருத்தி செய்வது மற்றும் நிர்மாணிப்பது தொடர்பான பென்டகனின் திட்டத்தினை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஆஷ்டன் கார்ட்டர் சுட்டிக்காட்டினார். அக்டோபர் மாதம் ஒரு உரையில், அவர், சீனாவை எதிர்ப்பதற்கு ஆசியாவில் "மீள்சமநிலைக்கு" "மூன்றாம் கட்டமாக" எதனை குறிப்பிட்டார் என்று சுட்டிக்காட்டியதுடன், "உலகில், மிகவும் அபாயகரமான கடலடிப்பகுதியையும், நீர்மூழ்கி எதிர்ப்பு சக்தியையும்" அமெரிக்கா கொண்டிருக்கும் என்பதை உறுதி செய்யும் விதமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக 40 பில்லியன் டாலரில் ஒரு பகுதியாக கடலுக்கடியிலான ட்ரோன்களுக்கு அதிகரித்தளவிலான நிதி ஒதுக்கீடு இருக்கும் என்பதை கார்ட்டர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் மாத இதற்கு முந்தைய உரையில், "முக்கியமாக, எங்கு மனிதர்களுள்ள நீர்மூழ்கி கப்பல்களை இயக்கமுடியாதோ அங்கெல்லாம் ஆழமற்ற நீர்நிலைகளில் இயங்கக்கூடிய பல அளவுகள் மற்றும் பலதரப்பட்ட தரவுகளிலான புதிய கடலுக்கடியிலான ட்ரோன்களை இயக்க முடியும்" என்று கார்ட்டர் குறிப்பிட்டார். தென் சீனக் கடலின் பெரும்பாலான பகுதிகள் ஆழமற்ற நீர்நிலைகளையே கொண்டுள்ளன.

அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே அழுத்தங்கள் மூளுவதற்கு காரணமான இந்த ஒப்பீட்டளவில் சிறிய சம்பவம் கூட ட்ரம்ப் பதவியேற்றபின் என்ன நிகழவுள்ளது என்பதற்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். ஞாயிறன்று ஒரு Fox News பேட்டியின்போது, ஒரே சீனக் கொள்கை குறித்து ட்ரம்பின் முந்தைய வார கருத்துக்களாக எழுப்பப்பட்ட கேள்விகளை வரவிருக்கும் தலைமை நிர்வாக அதிகாரியான ரியன்ஸ் பிரைபஸ் நியாயப்படுத்தினார். "பாருங்கள், உங்களிடம் உண்மையை சொல்வதானால் இவை அனைத்தும் ஆத்திரமூட்டும் தன்மையுள்ளவை என்று மட்டும் நான் நினைக்கவில்லை" என்று கூறியதுடன், கூடுதலாக: "நாம் இப்பொழுது ஒரே சீனக் கொள்கையை பரிசீலிக்கவேண்டும் என்று நாங்கள் ஆலோசனை தெரிவிக்கவும் இல்லை" என்றும் தெரிவித்தார்.

பிரைபஸ் இன் கருத்துக்கள் அனைத்தும் வேண்டுமென்றே தவறான வழிநடத்துதல்களாகவே இருந்தன. தற்பொழுதோ அல்லது எதிர்காலத்திலோ ஒரே சீனக் கொள்கையை முடிவிற்கு கொண்டுவர ட்ரம்ப் நோக்கம் கொண்டாலும், அல்லது சீனாவிடமிருந்து சலுகைகளை பெறுவதற்கு பேரம் பேசுவதற்கான கருவியாக இந்த சச்சரவுகளை வெறும் அச்சுறுத்தல் போன்று பயன்படுத்தினாலும் இறுதியான விளைவு ஒரேமாதிரித்தான் இருக்கும். உலகளாவிய புவிசார் அரசியலின் அச்சாணிகளில் ஒன்றாக இருக்கும் பிராந்தியத்தில் ஒரு கேள்விக்குறியை இடுவதுடன், ஆசிய பசிபிக் பகுதி முழுமையிலும் உறுதியற்ற நிலைமையினையும் அதிகரிக்கச்செய்வதுடன், மேலும் அவர் பதவியை பொறுப்பெடுப்பதற்கு முன்னரே சீனாவுடனான ஆத்திரமூட்டலையும் அதிகரிக்கிறார்.