நியூயோர்க் வாட்ச்மேன் என்பது யார்?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நியூ யோர்க் வாட்ச்மேன் (New York Watchmen) மேற்கு நியூ யோர்க்கை தளமாகக் கொண்ட ஒரு சமீபத்திய வலதுசாரி ஆயுதக்குழுவாகும். அவர்கள் பவ்வலோ (Buffalo) மற்றும் ரோசெஸ்டரில் (Rochester) பிரிவுகளைக் கொண்டுள்ளதுடன், வெஸ்ட்செஸ்டர் (Westchester) கவுண்டிக்கு அப்பாலும் ஆதரவை கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூ யோர்க் பிரிவு வட கரோலினாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பெரிய அமைப்பின் ஒரு பகுதியாகும். தேசிய அமைப்பு எவ்வளவு பெரியது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் நியூ யோர்க் வாட்ச்மேன் 200 உறுப்பினர்களை கொண்டிருப்பதாகவும் தேர்தல் நாள் வரையில் 500 ஐ எட்டும் நோக்கத்தை கொண்டிருப்பதாக அறிவித்துள்ளனர். அவர்கள் ஒரு ஆயுதக் குழு அல்ல என்று பகிரங்கமாகக் கூறிக்கொண்டாலும், அவர்கள் கைத்துப்பாக்கி அனுமதிகளையும் பயிற்சியையும் ஏற்பாடு செய்து வருகின்றனர், மேலும் ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்காக GoFundMe பக்கத்தை அமைத்துள்ளனர்.

வாட்ச்மென் அரசாங்கத்திற்கு ஆதரவான மற்றும் பொலிஸ் சார்பு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. காவல்துறையை ஆதரிப்பது மற்றும் சொத்துக்களையும் "அப்பாவிகளையும்" பாதுகாப்பது அவர்களின் முக்கிய பணிகள் என விவரிக்கின்றன. இக்குழுவின் நிறுவனர் மற்றும் இயக்குனர் சார்லஸ் பெல்லியன் (Charles Pellien), அவர்கள் கிளர்ச்சியாளர்கள் அல்ல என்று கூறியுள்ள நிலையில், அவரும் குழுவின் மற்ற முன்னணி உறுப்பினர்களும் சமூக ஊடகங்களில் ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு பகிரங்கமாக தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

வாட்ச்மேனின் தலைவர்கள், கறுப்பின மக்களின் வாழ்வும் முக்கியம் (Black Lives Matter) மற்றும் பாசிச எதிர்ப்பாளர்களின் (Antifa) ஆர்ப்பாட்டங்களில் தம்மை காட்டிக்கொள்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். குடியரசுக் கட்சியின் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்ட, காவல்துறைக்கு ஆதரவாக அவர்கள் அணிவகுப்புகளையும் ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களின் பேரணிகளில் நியூயோர்க் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் டிபீட்ரோ, மத்திய அமெரிக்காவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பின்தொடர்வதற்காக ஒலிவர் நோர்த் உடன் ரீகன் நிர்வாகத்திற்காக பணியாற்றிய சுகாதார மற்றும் மனித சேவைகள் உதவி இயக்குநர் மைக்கேல் கப்புட்டோவும் (Michael Caputo) கலந்து கொண்டார்.

கப்புட்டோ, சார்லஸ் பெல்லியனின் நெருங்கிய நண்பராவர். முகநூலில் வெளியிடப்பட்ட ஒரு தூற்றுதலில், நியூயோர்க் மக்களை வெடிமருந்துகளை சேமித்து வைக்கவும், தனது “நண்பர் சார்லியை” தொடர்பு கொண்டு வாட்ச்மேனில் சேரவும் கப்புட்டோ அழைப்பு விடுத்தார். பெல்லியனின் கூற்றுப்படி, அவர் "பயிற்சியின் ரோஜர் ஸ்டோன் மரத்திலிருந்து ஞான உபதேச வார்த்தைகளை" வழங்கியுள்ளார்.

Buffalo Bills கால்பந்து அணியின் இரசிகர் குழுவான 12th Man Thunder இனை ஒழுங்கமைக்க 2014 ஆம் ஆண்டில் அவர்கள் இணைந்து பணியாற்றினர். இது Jon Bon Jovi இந்த அணியை வாங்குவதற்கான முயற்சிகளைத் தடுக்க வேலை செய்தது. Buffalo Bills இனை வாங்குவதற்கான தனது சொந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த அமைப்பின் பின்னால் டொனால்ட் ட்ரம்ப் இருப்பது 2017ல் தெரியவந்தது.

கப்புட்டோ மற்றும் ட்ரம்ப் உடனான நியூ யோர்க் வாட்ச்மெனின் தொடர்புகளின் அளவு தெரியவில்லை. கப்புட்டோ ஒரு உறுப்பினர் அல்ல என்று பெல்லியன் கூறியுள்ளார். ஆனால் அவர்களது நெருங்கிய உறவும், ட்ரம்ப் நிர்வாகத்துடனான கப்புட்டோவின் தொடர்புகளும் அத்தகைய அமைப்பில் ஜனாதிபதியோ அல்லது அவரது நெருங்கிய கூட்டாளிகளோ என்ன தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கேள்விகளை எழுப்புகின்றன.

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளத்தக்கது என்னவெனில் நியூ யோர்க் வாட்ச்மேன் மற்றும் அதன் முன்னணி உறுப்பினர்களின் அரசியல் நோக்குநிலையாகும். சார்லஸ் பெல்லியன் (Charles Pellien) ஒரு முன்னாள் பொலிஸ் மற்றும் சிறைச்சாலை அலுவலர் ஆவார். நாடு முழுவதும் பரவியிருக்கும் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்ட அலைகளுக்கு பதிலளிக்கும் முகமாக அவர் 2020 ஆகஸ்டில் நியூ யோர்க் வாட்ச்மேனை உருவாக்கினார்.

செப்டம்பர் 10 ஆம் தேதி, “80 முன்னாள் சட்ட அமுலாக்க அதிகாரிகள், சிறைச்சாலை அலுவலர்கள், சிறப்புத் முன்னாள் படையினர்கள், கடற்படையினர், தற்பாதுகாப்புகலை கறுப்புப்பட்டியினர், உடல்பயிற்சி பயில்வான்கள்கள், 2 சக்கர மோட்டார்வாகனக்காரர்கள், தேசபக்தர்கள் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்க தேவையானால் தயாரான சில கடினமான பெண்கள் அனைவரையும் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் கூறினார்.”

"பொலிஸாருக்கு ஆதரவளி" (“Back the Blue”) என்பதன் மூலம் அவர் பொலிஸ் திணைக்களத்தின் துணைப் பிரிவாக எதிர்ப்பாளர்களை அச்சுறுத்துவதாகும் என அவர் கருதுகின்றார். அக்டோபர் 9 ஆம் தேதி, பவ்வலோவின் (Buffalo) புறநகர்ப் பகுதியான டோனாவாண்டாவில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் வாட்ச்மேன் கலந்துகொள்வதை ஏற்பாடு செய்த பின்னர், அவர் தனது முகநூல் பக்கத்தில் “இது ஒரு ஆடை ஒத்திகை, பரீட்சாத்த ஓட்டம் மற்றும் அனுபவத்தை கற்றல் மட்டுமே. எங்கள் சமூகங்களில் இந்த [கலவரத்தை] நாங்கள் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என்பதை அனைவரும் நன்கு உணர்கிறார்கள். நாங்கள் இதை உங்களுக்கு உறுதியளிக்கிறோம்." என எழுதினார்.

வாட்ச்மேன் விரும்புவதைப் போல ஆர்ப்பாட்டங்களுக்கு கடுமையாக நடவடிக்கை எடுக்காத டோனவாண்டா காவல்துறையில் ஒரு பதவியை அவர் இயக்கத் தொடங்கினார். அவர்கள் "தங்கள் வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும் அல்லது நாங்கள் உங்களுக்காக அதைச் செய்வோம்!" என்றார்.

வாட்ச்மேன் ஆர்ப்பாட்டக்கார்களுடன் மோதலை விரும்புகின்றது என்பது தெளிவாகிறது. டோனாவாண்டா காவல்துறையினர் "எங்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள், எனவே Antifa எந்த எதிர்ப்பும் இல்லாமல் நகரத்தை அச்சுறுத்த முடியும்" என்று பெல்லியன் கூறினார். இந்த அர்த்தத்தில், ஜனநாயகக் கட்சி நடத்தும் நகரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளின் உத்தரவுகளை மீறுவதற்காக காவல்துறையினுள் பாசிஸ்டுகளை அணிதிரட்டுவதற்கு இந்த குழு உதவுகிறது.

இதன் மிகவும் ஆக்ரோஷமான வெளிப்பாடு, வாட்ச்மேனின் முன்னணி அமைப்பாளரான பீட் ஹார்டிங் (Pete Harding) மற்றும் பல வலதுசாரி மற்றும் முகக்கவசத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுக்களிடமிருந்து வருகிறது.

ஹார்டிங் முகநூல் நேரலைபதிவு, இடுகையிடுவதை வழக்கமான கொண்டிருப்பதுடன், அதில் அவர் "மார்க்சிச தீவிரவாதிகளுக்கு" எதிராக அரசை ஊடுருவி பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்கிறார் என்று நம்புவதாக ஆத்திரப்பட்டார். அவர் அடிக்கடி கறுப்பின மக்களின் வாழ்வும் முக்கியம் அமைப்பு (BLM) மற்றும் Antifa வை "பயங்கரவாத அமைப்புகள்" என்று குறிப்பிடுகிறார். மேலும் "கறுப்பின மக்களின் வாழ்வும் முக்கியம் அமைப்புக்கு நன்கொடை அளிக்கும் எந்தவொரு வணிகமும் கைது செய்யப்பட வேண்டும், மேலும் அவர்கள் இந்த கட்டத்தில் ஒரு பயங்கரவாத அமைப்பை ஆதரிப்பதால் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும்" என்று வாதிட்டார்.

ஒரு குழப்பம்மிக்க ஆத்திரமூட்டலில், டோனாவாண்டா நகரின் மேற்பார்வையாளரும் காவல்துறைத் தலைவரும், கறுப்பின மக்களின் வாழ்வும் முக்கியம் அமைப்பு மற்றும் Antifa அனுதாபிகளாக "சிறையில் அடைக்கப்பட வேண்டும்" என்று ஹார்டிங் குற்றம் சாட்டினார். நகர மேற்பார்வையாளரைக் கொலை செய்ய வேண்டும் என்ற அவரது முந்தைய அழைப்பின் திருத்தமாக இது வந்தது. அவர் அது சரியான வார்த்தை இல்லை என்று கூறி விரைவாக பின்வாங்கினார், ஆனால் “கொலை” என்ற சொல் தற்செயலாக பயன்படுத்தப்பட்ட ஒன்றல்ல.

ஜனநாயக அரசியல்வாதிகள் மீதான ஹார்டிங்கின் விரோத அணுகுமுறை அவரது சமூக ஊடக இடுகைகளில் ஒரு பொதுவாக காணப்படுவதாகும். அக்டோபர் 8 ஆம் தேதி, மிச்சிகன் ஆளுநர் கிரெட்சன் விட்மரைக் கடத்தி தூக்கிலிடும் சதித்திட்டம் வெளிவந்ததைத் தொடர்ந்து, ஹார்டிங் பின்வருவனவற்றை முகநூலில் வெளியிட்டார்:

எனவே இந்த உரிமையை நான் புரிந்துகொள்கிறேனா என்று பார்க்கிறேன். நீங்கள் ஆட்சி செய்யும் உங்கள் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்களை நீங்கள் கொலை செய்தால், துரோக மற்றும் அரசியலமைப்பற்ற முடிவுகளால் உங்கள் மாநிலத்தில் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை அழித்தால், உங்களுடைய [sic] பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத முடிவுகளுடன் உங்கள் மாநிலத்தை முறிவடைய செய்தால், உங்கள் மாநிலத்திற்கும் அந்த நகரங்களை அழிக்கும் நகரங்களுக்கும் நீங்கள் வன்முறை பயங்கரவாதிகளை அழைக்கிறீர்கள், அந்த பயங்கரவாதிகளை கைது செய்யவோ, குற்றம் சாட்டவோ அல்லது முயற்சிக்கவோ நீங்கள் எதுவும் செய்யவில்லை எனில், சட்ட அமுலாக்கம் உங்களுக்கு எதுவும் செய்யாது.

நீங்கள் மிச்சிகனில் ஒரு உண்மையான பயங்கரவாதியாக இருந்தால், சொத்துக்களை அழித்தல், ஆக்கிரமித்தல், தாக்குதல் மற்றும் மக்களை கொலை செய்தலுக்காக வழக்குத் தொடரப்பட மாட்டீர்கள். நீங்கள் வெறுப்பு, பயங்கரவாதம் மற்றும் வன்முறைச் செயல்களைச் செய்து, நகரங்களை பல வாரங்களாக பிணைக் கைதிகளாக வைத்திருந்தால், உங்களுக்கு எதுவும் நடக்காது.

இந்த பயங்கரவாதிகளை வெளியேற்றுவதற்கும், அவர்களின் செயல்களுக்கு அவர்களைப் பொறுப்பேற்கச் செய்வதற்கும் நீங்கள் சதி செய்தால், நீங்கள் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிப்பீர்கள்.

ஒரு அரசாங்க அதிகாரியைக் கடத்தி கொலை செய்ய 14 பாசிச ஆயுததாரிகளின் சதித்திட்டத்திற்கான ஹார்டிங்கின் ஆதரவு, ட்ரம்ப் நிர்வாகத்துடன் சாத்தியமான உறவுகள் உள்ள எத்தனை பேர் அவரது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்ற கவலையை எழுப்புகிறது. டயான் ஃபைன்ஸ்டீன், நான்சி பெலோசி மற்றும் மாக்சின் வாட்டர்ஸ் ஆகியோர் "கலவரத்தைத் தூண்டும் மனநோயாளிகள்" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் "இது ஏன் தேசத்துரோகம் அல்ல என்று எனக்குத் தெரியவில்லை, அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.

ஹார்டிங் தனது எதிர்ப்பை ஆர்ப்பாட்டக்கார்களிடமும் திருப்பியுள்ளார். ஆர்ப்பாட்டக்குழுக்களில் தகவல் தருவோர் இருப்பதாக அவர் கூறியுள்ளார், இது "நிகழ்வுகளுக்கு அவர்கள் வருவதற்கு முன்பே வாட்ச்மேன்களை அங்குவருவதற்கு அனுமதிக்கிறது" என்றார். அக்டோபர் 16 அன்று வெளியிடப்பட்ட ஒரு முகநூல் ஒளிப்பதிவில், ஆர்ப்பாட்டக்கார்களின் பெயர்களை அவர் தனது பார்வையாளர்களுக்குப் படிக்கத் தொடங்கினார். .. ஏனெனில் நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியும் எனவே தலைக்கவசங்களை அணிந்துகொள்ளுங்கள் ..உங்கள் கடைசி பெயர்களை நான் கொடுக்கவில்லை, ஆனால் எங்களுக்கு அவை கிடைத்துள்ளன.

நியூயோர்க் வாட்ச்மேன் ஆர்ப்பாட்டக்கார்களுடன் வன்முறையுடன் மோதுவதற்கான சாத்தியம் பற்றி கேள்விக்குறி எதுவும் இல்லை. ட்ரம்ப் நிர்வாகத்துடனான அவர்களின் தொடர்புகள் மைக்கேல் கப்புட்டோவுடனான நல்லுறவுக்கும் அப்பாற்பட்டது என்பதற்கான சாத்தியமும் இல்லாதில்லை.

தொழிலாள வர்க்கம் நியூயோர்க் வாட்ச்மேன் போன்ற குழுக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவை வளர்ச்சியடையும்போது, அரசியல் நெருக்கடி ஆழமடைகையில், ஆர்ப்பாட்டக்கார்கள் மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுடன் வன்முறை மோதல்களில் சேர அவர்களை காவல்துறையினர் வரவேற்கலாம்.

Loading