Use this version to print 

The Pabloite Reunification and the Betrayal in Ceylon

பப்லோவாதிகள் மறுஐக்கியமும் இலங்கையில் காட்டிக்கொடுப்பும்

132. ஜூன் 1963 ல், SWP மற்றும் ஐரோப்பிய பப்லோவாதிகள் ஒரு ஒன்றிணைப்பு மாநாட்டை நடத்தி புதிய "ஐக்கிய செயலகத்தை" உருவாக்கினர். ட்ரொட்ஸ்கிச அரசியல் நிலைப்பாட்டில் இருந்து பார்க்கையில், இந்த மாநாட்டுக்கு அதன் குறிப்பான கோட்பாடற்ற பிற்போக்கு பண்பை அளிப்பது எதுவென்றால், 1953 பிளவுக்கு இட்டுச் சென்ற பிரச்சினைகளை ஆராய தீர்மானமாக இது மறுத்தது தான். வேறுபாடுகள் கடந்த காலத்தில் மறைந்து விட்டன என்றும், அவை இனியும் "புதிய உலக யதார்த்தத்தின்" பின்னணியில் பொருத்தம் உடையதாக இல்லை எனவும் திரும்பத் திரும்ப கூறுவதானது, பப்லோவாத அரசியலின் மிக உண்மையான மற்றும் அபாயமான உட்குறிப்புக்களை மறைக்க மட்டுமே உதவியது. வாழ்வா சாவா குறித்த கேள்விகளை எல்லாம் விவாதத்தில் இருந்து விலக்கி விட்டதான, "மறு ஐக்கிய" மாநாட்டின் பிற்போக்கு திருவிளையாட்டில் பங்கேற்க பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மறுத்தது ஒரு பெரும் துணிவான அரசியல் நடவடிக்கையாகும்.

133. எது பணயம் வைக்கப்பட்டது என்பது ஒரு ஆண்டுக்குள்ளாக தெளிவானது. ஜூன் 1964ல், பப்லோவாதிகள் அகிலத்தின் ஒரு முன்னணிப் பகுதியான லங்கா சமசமாசக் கட்சி (LSSP), இலங்கை பிரதமரான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க, தனது புதிய முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் சேர்வதற்கு விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டது. நான்காம் அகில வரலாற்றில் ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சி இத்தகையதொரு சோசலிச கோட்பாடுகளின் அவலமானதொரு காட்டிக்கொடுப்பில் பங்கேற்றது இது தான் முதல்முறை. இந்த காட்டிக்கொடுப்பு LSSP இன் பலவருட அரசியல் பின்வாங்கலால் தயாரிக்கப்பட்டது, ஆனால் LSSP இன் அரசியல் சீரழிவினை விவாதிப்பது பப்லோவாதிகளால் தடுக்கப்பட்டது. இப்போது, மறுஐக்கியத்திற்கு பின் ஒரு வருடத்திலேயே, இலங்கை சமுதாயத்திற்கு பெரும் அழிவை ஏற்படுத்தியதும், ஏறக்குறைய 100,000 உயிர்களை பலிவாங்கியதுமான உள்நாட்டுப் போருக்கு இட்டுச் சென்ற ஒரு அரசியல் நிகழ்வுப்போக்கினை இயக்கிவிட்ட ஒரு காட்டிக் கொடுப்பில் பப்லோவாதிகள் அகிலம் (SWP இன் முக்கியமான உதவியுடன்) செவிலித்தாயாக சேவையாற்றிக் கொண்டிருந்தது. இலங்கையின் பெருந்துயரநிலையில் பப்லோவாதம் ஆற்றிய பங்கிற்கு அனைத்துலக குழு விடுத்த கண்டனமானது காலத்தின் சோதனையை தாங்கி நிற்கிறது: "லங்கா சமசமாசக் கட்சி] உறுப்பினர்கள் பண்டாரநாயக்க கூட்டணியில் நுழைந்திருப்பது என்பது நான்காம் அகிலத்தின் பரிணாம வளர்ச்சியின் ஒரு மொத்த சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. இது தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு தோல்வியின் தயாரிப்பில் ஏகாதிபத்தியத்திற்கான நேரடி சேவையாக அந்த திருத்தல்வாதம் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் அதனது வெளிப்பாட்டைக் கண்டது". 78

78 Heritage, 402-3