World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

France gripped by fear of deaths from Mad Cow Disease

விசர் மாட்டு நோய் ஏற்படுத்தியுள்ள மரண பயத்தால் பிரான்ஸ் பீடிக்கப்பட்டுள்ளது

By Chris Marsden
9 November 2000

Back to screen version

BSE அல்லது விசர் மாட்டு நோய் எனப்படும் நோயினது மனிதனுக்கான வடிவமான Creutzfeldt Jacobs Disease (vCJD) எனப்படும் பாரதூரமான முறையில் மூளையை சேதப்படுத்தும் நோயின் பரவலுக்கு பிரான்ஸ் முகம் கொடுக்க நேரிடும் எனும் கவலை பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

பிரான்சில் இருவர் CJD யினால் மரணமடைந்து உள்ளார்கள். இது பிரித்தானியாவில் ஏற்பட்ட 80 மரணங்களை விட குறைவானதே ஆனால் உலகிலே இரண்டாவது இடத்தில் இது இருக்கிறது. கடந்த வருடம் 31 பேர் இந்த BSE (Bovine Spongiform Encephalopathy) நோயினால் பீடிக்கப் பட்டிருந்தார்கள் இது இந்த வருடம் இரண்டு மடங்காக அதாவது 80 ஆக உயர்ந்துள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இன்று அதிகம் கவலைக் கிடமானது என்னவெனில் ஒவ்வொரு வருடமும் 50 ஆயிரம் அளவில் மாடுகள் "மர்மமாக இறக்கின்றன" என அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது தான்.

பிரான்சின் மிக பிரபல்யமான Carrefour எனப்படும் நிறுவனத்தினால் நடாத்தப்படும் பெரும் நவீன சங்கிலித்தொடர் அங்காடி (supermarket chains), இறச்சி வெட்டும் இடங்களில் பாதுகாப்பு பரிசோதனையின் பின்னர் BSE நோய் தொற்றிய ஒரு டன் அளலான மாட்டு இறச்சி வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. மிருகங்களுக்கான உணவை உற்பத்தி செய்யும் கிட்டதட்ட 10 இற்கும் மேலான நிறுவனத்தினர் BSE இனால் பாதிக்கப்பட்ட முதுகெலும்பு கழிவுகளையும், இறச்சிகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள். இந்தக் கிழமை, BSE இனால் பாதிக்கப்பட்ட மாடுகளை மாடு வெட்டுபவர்களிடம் விற்க முயன்றதற்காக ஓர் தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விளைவுகளால் மாட்டு இறச்சி பாவனை வீழ்ச்சியடைந்துள்ளது. தேசிய உணவகமான Buffalo Grill தனது உணவு பட்டியலில் இருந்தும் அதனது இறச்சி வினியோகஸ்த்தர்களிடம் இருந்தும் மாட்டு இறச்சியை நீக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து சில உணவகங்களும் இதைப் பின்பற்றின. பிரான்சின் முக்கிய நகரங்களான Paris,Bordeaux, Toulouse, Caen and Cherbourg போன்ற நகரங்களின் பாடசாலைகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பகங்களிலும் (kindergarden) மாட்டு இறச்சி நீக்கப்பட்டுள்ளது.

நவீன அங்காடிகள் (supermarkets) 25 இருந்து 40 வரை இறச்சி விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக சொன்ன போதும், இறைச்சி வெட்டப்படும் இடங்களில் 30 இருந்து 50 வரை இறைச்சி விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இறைச்சி மற்றும் மிருகப்பண்ணை கூட்டுறவு சங்கத்தின்(livestock cooperatives' federation FNCBV) தலைவரான Michel Prost இறைச்சி கடைகளில் மாட்டு இறைச்சியின் விற்பனை 15 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் மாட்டு இறைச்சியின் விலையானது 10 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது என கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்ட அரசாங்கம் தான் போராடுவதாக மக்களை அமைதிப்படுத்த முயற்சித்த போதும் இது குறைந்த அளவே வெற்றியளித்துள்ளது.

மாட்டின் முதுகெலும்புகள் அதிகமான பாதிப்பை உண்டாக்குகிறது என நம்பப்படுவதால் உணவு வகைகளில் இருந்து அதை முழுதுமாக நீக்கி விடுவதன் சாத்தியம் பற்றி உணவு பாதுகாப்பு அமைப்பான AFSSA வுடன் கலந்துரையாடப் பட்டதாக விவசாய அமைச்சரான Jean Glavany பத்திரிக்கைகளுக்கு பதிலளித்த போது குறிப்பிட்டார். மாட்டு இறச்சி எலும்பினால் ஏற்படும் அபாயம் பற்றி விசாரணை செய்யும்படி AFSSA விடம் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறது.

கோலிச ஜனாதிபதியான (Gaullist President) ஜாக் சிறாக் கோழி, பன்றிகளுக்கு உணவாக செத்த மாடுகளின் எலும்பு மற்றும் இறச்சியில் இருந்து செய்யப்படும் உணவு வகைகளை விற்பதை உடனடியாக நிறுத்தும் படி கேட்டுக் கொண்டதானது ஜொஸ்பனின் சோசலிச கட்சியின் அரசாங்கம் முகம் கொடுக்கும் நெருக்கடியினை ஆழமாக்கியுள்ளது. மாட்டு இறச்சியில் இருந்து செய்யப்படும் உணவை மாடுகளுக்கு அளிப்பது தடை செய்யப்பட்டிருந்த போதிலும் ஏனைய இறச்சிக்காக வளர்க்கப்படும் மிருகங்களுக்கு அது அனுமதிக்கப்பட்டிருந்தது.

அரசால் மீள் உறுதிப்படுத்தப்பட்ட மக்களின் நம்பிக்கை இளம் சுகாதார அமைச்சரான Dominique Gillot, ''விசர் மாட்டு நோய் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பிரான்சில் அதிகரித்துக் கொண்டுள்ளது, இதனால் பல டசின் கணக்கான Creutzfeldt-Jakob நோயாளர்களை நிட்சயமாக நாம் எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கும்....நாம் அதற்கு தயாராக வேண்டும்'' என நவம்பர் 7ல் ஏற்றுக்கொண்டதால் மேலும் கீழ் இறக்கப்பட்டது.

மனிதனை பீடிக்கும் வகையான vCJD எனப்படும் விசர் மாட்டு நோய் மூன்றாவதாக இன்னொரு இளைஞனையும் பீடித்திருப்பது ''ரொம்ப நிட்சயமானதே'' என Gillot கூறியதுடன் இந்த நோயின் அறிகுறிகள் ஏற்கனவே பலருக்கு தெரிய வந்துள்ளதுடன் இது இன்னும் அதிகரித்துக் கொண்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொருளாதார விளைவுகளின் கேள்விக் குறியானது பிரான்சின் இறச்சி தொழிற்துறை மீது அழிவுகரமான முறையில் இப்போது நகர்ந்துள்ளது. ஜரோப்பாவில் பிரான்ஸ் மாட்டு இறச்சி ஏற்றுமதி செய்யும் பிரதான நாடாகும். இது, BSE அபாயம் என்ற பேரில் ஜரோப்பாவில் பிரித்தானிய மாட்டு இறச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை செய்து வந்தது. பிரான்சின் மேற்கு பகுதியைச் சேர்ந்த மாடுகள் அதிகமாக BSE அபாயம் உள்ளதாக நம்பப் படுவதால் ரஷ்யா அங்கிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளதுடன் தற்போது ஹங்கேரியும் போலந்தும் பிரேஞ் மாட்டு இறச்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என நிர்பந்தித்துக் கொண்டுள்ளன.

விவசாயிகள் தம்மை வங்குரோத்தில் இருந்து பாதுகாக்க விவசாயிகள் சங்கமான FNSEA தலைமையுடன் இணைந்து அரசாங்கத்திடம் இருந்து ஒரு உதவித் தொகை பெற்றுக்கொள்ள அழைப்பு விட்டுள்ளனர். மேலும், இந்த சங்கத்தின் தலைவரான Luc Guyau, ''நாம் அபாயத்தின் விழிம்பில் உள்ளோம்... சில விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைமைக்கு சென்றுள்ளனர்'' என எச்சரித்துள்ளார்.

BSE யின் பாதிப்பு Belgium, Denmark, Lichtenstein, Luxembourg, Netherlands, Portugal, Switzerlandand, Ireland இலும் உள்ளதாக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் பிரித்தானாயாவிற்கு பிறகு மூன்று நாடுகளில் அதிமான பாதிப்புகள் நடந்துள்ளன என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ரோம் மருதுவ மனையொன்றில் விசர் மாட்டு நோயினால் இந்த வருடம் ஆகஸ்டில் ஒரு இத்தாலியர் இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved