World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Police Complaints Commission lied about police shooting that sparked British riots

பொலிஸ் புகார்கள் ஆணையம் பிரிட்டிஷ் கலகங்களைத் தூண்டிய பொலிஸ் துப்பாக்கிச் சூடு பற்றி பொய் கூறுகிறது

By Robert Stevens
15 August 2011

Back to screen version

IPCC எனப்படும் சுயாதீன பொலிஸ் புகார்கள் ஆணையம் வடக்கு இலண்டன் டோட்டன்ஹாமில் 29 வயதான மார்க் டுக்கன் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சூழ்நிலையைப் பற்றி முன்யோசனையின்றி தவறான தகவலைத் தான் கொடுத்திருக்கக்கூடும் என்று ஒப்புக் கொண்டுள்ளது.

வெள்ளியன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அது ஒப்புக் கொள்ளுவதாவது: செய்தி ஊடகத் தகவல்களின் பகுப்பாய்வுகள் மற்றும் ட்விட்டரில் எழுப்பப்பட்ட சந்தேகங்கள் 4ம் தேதி சில MPS அதிகாரிகளால் மார்க் டுக்கன் ஆகஸ்ட் கொல்லப்பட்டதை அடுத்து கேட்கப்பட்ட மிகஆரம்ப செய்தி ஊடக விசாரணைகளின்போது நாங்கள் முன்யோசனையின்றி செய்தியாளர்களுக்குத் தவறான தகவலைக் கொடுத்திருக்கக்கூடிய சாத்தியம் பற்றி எங்களுக்கு  எச்சரிக்கையை கொடுத்த்தன.

IPCC இவ்வாறு ஒப்புக் கொண்டது சேதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது. இந்த ஏமாற்றுத்தன அறிக்கைகள் சமூக அமைதியின்மை எரியூட்ட உதவிப் பின்னர் தொழிலாள வர்க்க இளைஞர்களை நசுக்குவதற்கான அரச ஒடுக்குமுறையினால் எதிர்கொள்ளப்பட்டன.

டுக்கன் ஒரு C109 சிறப்பு ஆயுதப்படைப் பிரிவினால் சுடப்பட்டதற்கு உத்தியோகபூர்வ விளக்கம் கொடுக்கப்பட்டது சீற்றத்தையும் நம்பிக்கையற்ற நிலையையும் ஏற்படுத்தியது; அதையொட்டி ஆகஸ்ட் 6ம் திகதியன்று டோட்டன்ஹாம் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே நடைபெற்ற அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றில் இளைஞரின் குடும்பத்தினராலும் நண்பர்களாலும் விடைகள் கோரி வினாக்கள் எழுப்பப்பட்டன.

அவற்றிற்கு விடைகள் ஏதும் வரவில்லை. மாறாக, எதிர்ப்புக் கூட்டம் பொலிஸ் தாக்குதலுக்கு உட்பட்டு, பொலிஸ் மிருகத்தனம், மற்றும் சமூகத்தில் உள்ள வறிய நிலையினால் சீற்றம் வெடிப்பதற்கு அது தூண்டியது; அது தலைநகரின் தொழிலாள வர்க்கப் பகுதிகள் முழுவதும் படர்ந்து, பின்னர் இங்கிலாந்தின் மற்ற நகரங்கள் சிறுநகரங்களுக்கும் பரவின.

IPCC யின் அறிக்கை டுக்கன் கொலை பற்றிய உத்தியோகபூர்வத் தகவல் குறித்த சீற்றம் முற்றிலும் நியாயமனதே என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

மேலும் முந்தைய வினாக்களுக்கு தவறான தகவல்கொடுத்தபின் IPCC பல நாட்களுக்கு மௌனம் காத்தது; இது IPCC கொடுத்த தவறான தகவல் செய்தி ஊடகம், அரசியல்வாதிகள் மற்றும் பொலிசாரை டுக்கன்தான் முதலில் சுட்டார் என்பதை கூற வைத்தது.

கலகங்கள் பரவத் தொடங்கியபின், ஒரு பொலிஸ் வானொலியை தாக்கிய தோட்டா, டுக்கனால் சுடப்பட்டது என்று கூறப்பட்டது, உண்மையில் ஒரு பொலிஸ் தோட்டா என்ற உண்மையை அதிகம் பேசாமல் IPCC தொடர்ந்து பொருட்படுத்தாமல் இருந்துவிட்டது. டுக்கனுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்த சிமோனி வில்சனிடம் (அவருடைய நான்கு குழந்தைகளில் மூவருக்கு இவர் தாயாவார்), அது சரியான தகவல்தானா என்பதைத் தாங்கள் உறுதிபடுத்த முடியாது என்று கூறியது.

ஆகஸ்ட் 9ம் திகதி வில்சன், (தோட்டா ஒரு பொலிஸ் சுட்டது என்ற) இந்த உண்மை செய்தித் தாட்களில் வந்தபின், IPCC என்னைக் கூப்பிட்டு அது உறுதி செய்யப்படவில்லை என்றது. ஆனால் அது உண்மையாக இருந்தால் நாங்கள் அவர்கள்மீது வழக்குத் தொடுப்போம், ஏனெனில் அவர்கள் உண்மையில் அவரைக் கொன்றுவிட்டனர்.எனக் கூறினார்.

அதற்கும் மறுநாள்தான், பேர்மிங்ஹாம், மான்செஸ்டர் மற்றும் பிரிஸ்டலுக்கு கலகங்கள் பரவியபோது, IPCC குற்றத்தடயச் சோதனைகள் டுக்கன் முதலில் சுடவில்லை என்பதை நிரூபித்துள்ளன என்பதை ஒப்புக் கொண்டது. நால்வருக்குத் தந்தை பொலிசால் இருமுறை சுடப்பட்டார். பொலிஸ் வானொலியில் பொதிந்த தோட்டா டுக்கன் கைகள் வழியே துளைத்துச் சென்றன எனத் தோன்றுகிறது. மற்றொன்று அவருடைய மார்பில் தாக்கியது.

டுக்கன் ஒரு அச்சுறுத்தலை அளித்ததற்கான சான்றுகள் ஏதும் இல்லை. சாட்சியங்களின் தகவல்கள் அவர் சரணடைந்தபோது கொல்லப்பட்டார் என்றுதான் கூறுகின்றன.

IPCC அறிக்கையை முகங்கொடுக்கையில், சிமோனி வில்சன், வார இறுதியில் டுக்கனுடைய வாழ்வைப் பற்றிய நினைவுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், IPCC யிடம் நாங்கள் நம்பிக்கை கொண்டிருந்தோம்; ஆனால் அது எங்களைக் கைவிட்டுவிட்டது. பொலிசிடம் இருந்து சுதந்திரமாக நாங்கள் செயல்படுகிறோம் என்று அவர்கள் கூறுவதை நாம் இப்பொழுது எப்படி நம்ப முடியும்?

டுக்கனுடைய சகோதரி மிஷேல் கூறினார்: IPCC உறுப்பினர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடந்து பல நாட்களுக்கு பின் மூடிய கதவுகளுக்குப் பின்னே எங்களிடம் பேசினார்; அதைத் தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் பேசியது முற்றிலும் வேறுவிதமாக இருந்தது. IPCC இவ்வகையில் எங்களை அதிர்ச்சிதரும் வகையில் நடத்தியுள்ளது.

அதன் பிரதிநிதிகள் கூறிய பொய் பற்றி IPCC விளக்கம் ஏதும் தரவில்லை. ஆனால் ஒரு விளக்கம்தான் இருக்க முடியும். அவர்களுடைய கொலைகாரச் செயல்கள் பற்றி அவர்கள் மீது பொறுப்பைச் சுமத்துவது ஒரு புறம் இருக்க, பொலிசாரைக் குறைபாடு கூறுபவர்களிடம் இருந்து அவர்களைக் காத்தல் என்னும் அதன் நீண்டகால வழக்கத்தை அது தொடர்கிறது.

கடந்த தசாப்தத்தில் பொலிஸ் காவலில் இருக்கையில் கொலையுண்ட நூற்றுக்கணக்கானவர்களில் டுக்கன் சமீபத்தியவர்தான். இந்தக் கொலைகள் தொடர்பாக ஒரு பொலிஸ் அதிகாரிக்குக் கூட தண்டனை கொடுக்கப்படவில்லை.

1997க்கும் 2007க்கும் இடையே இங்கிலாந்திலும், வேல்ஸிலும் பொலிஸ் காவலில் இருந்தவர்களில் 530 இறப்புக்களுக்கும் மேலாக ஏற்பட்டது என்று Inquest என்னும் நடவடிக்கைக்குழு கண்டறிந்துள்ளது. Inquest கூறுவதாவது: பொலிஸ் துப்பாக்கிச்சூடுகள் அல்லது பொலிசாருடன் தொடர்புடைய சம்பவங்கள் இவை; 320க்கும் மேற்பட்ட இறப்புக்கள் பொலிஸ் வாகனத் தொடர்புடைய சம்பவங்கள். 1990 ல் இருந்து 2011 வரை பொலிசார் 53 பேரைக் கொன்றுள்ளனர்; அதில் 21 கொலைகள் மெட்ரோபொலிட்டன் பொலிசாரால் செய்யப்பட்டன.

இப்பொலிசாரால் நடத்தப்பட்ட கொலைகளில் 27 வயது நிரபராதியான பிரேசில் தொழிலாளி Jean Charles de Menezes என்று ஜூலை 2005 ல் கொலையுண்டவரும் அடங்குவார். ஸ்காட்லாந்து நிலத்தடி இரயில் நிலையத்தில் அப்பொழுதுதான் de Menezes இரயிலில் ஏறியிருந்தார்; அப்பொழுது CO19 ன் உறுப்பினர்களான, ஆயுதம் ஏந்திய சீருடை அணியான அதிகாரிகளால் எதிர்கொள்ளப்பட்டார்; அவர்களில் இருவர் 11 தோட்டாக்களைச் சுட்டனர் இவற்றில் எட்டு de Menezes தாக்கின; அவருடைய தலையில் 7 குண்டுகள் பாய்ந்தன.

அந்த மிருகத்தனமாக கொலை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஒரு பகுதி இதேபோல் தவறான தகவல்களை அலையென வெளியிட வகை செய்தது.

அது நடந்து முடிந்த உடனேயே, மெட்ரோபொலிட்டன் பொலிஸ், இச்சூடு முந்தைய நாள் லண்டனில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் பற்றிய விசாரணையுடன் நேரடித் தொடர்பு கொண்டதுஎன்று கூறியது. பொலிஸ் தொடக்கிய தவறான ஒருங்கிணைக்கப்பட்ட தகவலைக் கொடுப்பது இதையொட்டித் தொடங்கியது; அப்பொழுது de Menezes ஒரு வெப்பமான நாளில் சந்தேகத்திற்குரிய தோற்றம் அளித்த மேல் கோட் ஒன்றை அணிந்திருந்தார், பொலிஸ் அவரை அழைத்ததும் தப்பியோட முற்பட்டார்என்று கூறப்பட்டது. இக்கூற்றுக்களும் இன்னும் பலவும் பின்னர் பொய்கள் என நிரூபணம் ஆயின.

இந்நிகழ்வுகள் நடந்த அனைத்துக் காலத்திலும் பொலிசாரின் தவறான தவகல் பிரச்சாரத்தில் IPCC முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. அப்பொழுது மெட்ரோபொலிட்டன் பொலிஸ் ஆணையாளராக இருந்த சேர் இயன் பிளேயர் அடுத்த நாள் காலை வரை இறந்தவரின் உண்மையான அடையாளத்தைத் தெரிந்திருக்கவில்லை என்று கூறிய உத்தியோகபூர்வ நிலைப்பாட்டையே அதுவும் தக்க வைத்துக் கொண்டிருந்தது. அதைந் தொடர்ந்து இது நடத்திய விசாரணையில் அது de Menezes சுட்டுக்கொல்லப்பட்டு ஐந்து மணி நேரத்திற்குள் முக்கிய மெட்ரோபொலிட்டன் பொலிஸ் அதிகாரிகள் ஒரு நிரபராதி கொல்லப்பட்டுவிட்டார் என்ற வலுவான சந்தேகத்தைக் கொண்டனர்என்ற முடிவிற்கு வந்தபின்னும், இந்நிலைப்பாடு தொடர்ந்தது.

IPCC யின் முதல் விசாரணை ஜோன் சார்ல்ஸின் இறப்பிற்கு எந்தப் பொலிசும் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்று கூறிவிட்டது. அவர் கொலை செய்யப்பட்டபின் இத்தகைய போலிக்கூற்றுக்கள் சுற்றறிக்கையில் வெளிவந்ததைத் தொடர்ந்து கூறப்பட்ட புகார்களால் நிகழ்த்தப்பட்ட IPCC யின் இரண்டாம் விசாரணையின் முடிவுகள், குறைகூறப்பட்ட அதிகாரிகள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக அவருடைய குடும்பம் அச்சுறுத்திய பின்னர் மாற்றி எழுதப்பட்டன.

அதேபோல், செய்தித்தாள் விற்பனை செய்பவரான இயன் டோம்லின்சன் கொலை செய்யப்பட்ட பின்னரும் பொலிசுடன் IPCC நெருக்கமாக ஒத்துழைத்தது; மெட்ரோபொலிட்டன் பொலிஸின் துணை ஆதரவுக் குழு லண்டனில் G20 உச்சிமாநாட்டிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது இரு தூண்டுதலற்ற தாக்குதல்களை ஏப்ரல் 1, 2009ல் நடத்தியபோது டோம்லின்சன் சரிந்துவிழுந்து இறந்து போனார்.

பல நாட்களுக்குப் பின் கார்டியன் ஒரு பொலிஸ் அதிகாரி டோம்லின்சனை கடுமையாகத் தாக்கிய விடியோக் காட்சியை ஒளிபரப்பியபோது, IPCC யும் ஒரு மூத்த பொலிஸ் அதிகாரியும் செய்தித்தாளின் அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த வீடியோக் காட்சி பொதுமக்களின் பார்வையில் இருந்து அகற்றப்பட வேண்டும், விசாரணையை இது பாதிப்பிற்கு உட்படுத்திவிடும்என்று IPCC கூறியதாகச் செய்தித்தாள் தகவல் கொடுத்தது.

IPCC யின் சமீபத்திய அறிக்கை செய்தி ஊடகத்தில் எவ்வித விமர்சனமும் இல்லாமல் வெளியிடப்பட்டது. செய்தி ஊடகத்திற்கு எவர் தவறாகத் தகவல் கொடுத்தார் என அடையாளம் காட்ட வேண்டும், பொறுப்பு ஏற்க வைக்கப்பட வேண்டும் என்ற எந்த கோரிக்கைகளும் இக்குழு முன் வைக்கப்படவில்லை.

IPCC கொடுத்துள்ள ஒப்புதல் பற்றிய மௌனம் வேண்டுமென்றே காக்கப்படுகிறது. டுக்கன் மரணத்தைச் சூழ்ந்துள்ள பொய்கள், தவறான தகவல்கள் ஆகியவை தொழிலாள வர்க்கப் பகுதிகள் நெடுகிலும் நடத்தப்படும் பொலிஸ் அடக்குமுறையை நியாயப்படுத்தும் பிரச்சாரத்தில் மைய இடத்தைக் கொண்டுள்ளன.

கடந்த வியாழன்தான், பிரதம மந்திரி டேவிட் காமெரோன் அவசரமாக அழைக்கப்பட்டிருந்த பாராளுமன்றத்தில், கலகங்கள் டுக்கனைச் சுட்டதுடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்று வலியுறுத்திப் பேசினார். மாறாக, இக்கொலை தீய குழுக்களில் இருக்கும் சந்தர்ப்பவாதக் குண்டர்களால் குற்றங்களை செய்வதற்கு ஒரு காரணமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று காமெரோன் அறிவித்தார்.

காமெரோனுடைய கருத்துக்கள் தொழிற்கட்சித் தலைவர் எட் மிலிபாண்டினாலும் அனைத்து முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகளாலும் வலியுறுத்தப்பட்டன. பெரும் பொலிஸ் அடக்குமுறைக்கு இசைவு தருகையில், அவர்கள்  குற்றம்” “நெறியற்ற தன்மைஆகியவைதான் பிரச்சினை என்று  ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஞாயிறு காலை வரை, 2,300 பேருக்கும் மேலானவர்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்; இவற்றுள் இலண்டனில் மட்டும் 1,400க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேற்கு மிட்லாந்துப் பகுதியில் பொலிசார் 500க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளனர்; கிரேட்டர் மான்செஸ்டரில் 230க்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இடைக்கால மெட்ரோபொலிடன் பொலிஸ் ஆணையாளரான டிம் கோட்வின்  கிட்டத்தட்ட 3,000 பேர் கைது செய்யப்பட்டு இலண்டனில் விசாரணைக்கு அழுத்துவரப்படாம் என்றார். அது Operation Withern என்ற நடவடிக்கையை நிறுவியுள்ளது; அதில் 500 அதிகாரிகள் இப்பொழுது இன்னும் கைதுகளை மேற்கொள்வதற்காக 20,000 மணிநேர CCTV படத் தொகுப்புக்களைப் பரிசீலித்து வருகின்றனர்.

தேசிய அளவில், 11 வயதுச் சிறுவர்கள் உட்பட 1,000 பேருக்கு மேலானவர்கள் போலிவிசாரணை நீதிமன்றங்கள் முன் நிறுத்தப்படுகின்றனர்; இவை ஞாயிறு உட்பட எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படுகின்றன.

முறையான வழிவகை ஏதும் இல்லாமல் மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. மான்செஸ்டர் தொந்திரவுகள் எதிலும் தொடர்பு கொண்டிதாத இரு குழந்தைகளின் தாயார் 6 மாதச் சிறைகாலம் தண்டிக்கப்பட்டுள்ளார்; ஒரு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அளிக்கக் கூடிய அதிகப் பட்சத் தண்டனை ஆகும் இது; அவர் இல்லத்தில் உள்ளவர் ஒரு கடையில் இருந்து திருடிக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் அரைக்கால் சட்டையை அணிந்ததற்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கன்சர்வேடிவ்/லிபரல் டெமக்ராட் அரசாங்கம் இன்னும் அதிக அடக்குமுறைகளைச் செய்ய தயாரிப்புக்களை நடத்துகிறது; இதில் ட்வீட்டர், பேஸ்புக் போன்ற சமூகச்செய்தி இணையங்களும் பிளாக்பெரி தகவல் அமைப்பும் அடங்கும். BBC, Sky News உட்பட ஒளிபரப்பாளர்கள் பொலிசாரிடம் அவர்கள் கலகங்கள் பற்றிய அனைத்து பயன்படுத்தப்படாத பிற வீடியோ பதிவுக்காட்சிகளை கொடுக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.