World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

Greens and Social Democrats back German government military reform

பசுமைவாதிகளும் சமூக ஜனநாயகக் கட்சியினரும் ஜேர்மன் அரசாங்கத்தின் இராணுவச் சீர்திருத்தத்திற்கு ஆதரவு கொடுக்கின்றனர்

By Peter Schwarz
1 June 2011


Back to screen version

கடந்த வெள்ளியன்று ஜேர்மனியின் பாதுகாப்பு மந்திரி தோமஸ் டீ  மஸியர்  (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்-CDU) வெளியிட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையில், தேசிய இராணுவமான Bundeswehr பற்றிய தன் புதிய கருத்துப்படிவத்தை முன்வைத்தார். இவருடைய திட்டத்திற்கு ஆளும் CDU/CSU, மற்றும் FDP ஆகியவற்றின் ஆதரவு கிடைத்ததோடு மட்டுமல்லாமல்சமுக ஜனநாயகக் கட்சியினர் மற்றும் பசுமைவாதிகளுடைய ஆதரவும் கிடைத்தது. பசுமைவாதிகளைப் பொறுத்தவரை, திட்டமிட்டுள்ள சர்வதேச இராணுவக் தலையீடுகளை விரிவாக்கப்படுவது போதுமானதாக தோன்றவில்லை.

டீ மஸியர் உடைய கருத்து வெளிநாடுகளில் நீண்டகாலம் பயன்படுத்தப்படக்கூடிய படையினர்களின் எண்ணிக்கையை 7,000 த்தில் இருந்து 10,000 என உயர்த்தப்பட வேண்டும் எனக் கூறுகிறது. இதை அடையும் வகையில், இராணுவப் படைகள் சிறிய, இன்னும் திறமையான பிரிவுகளாக, முற்றிலும் தொழில்நேர்த்தி உடைய படையினர்களை கொண்டிருக்க வேண்டும். கட்டுப்பாட்டு அமைப்புமுறைகள் எளிதாக்கப்பட்டு, பொது  ஆட்சித்துறையில் இருந்து இராணுவத்திடம் மாற்றப்பட வேண்டும் எனக்கூறப்படுகின்றது.

எதிர்கால இராணுவ பயன்பாடுகளில் ஏகாதிபத்திய நோக்கங்கள் மிகத் தெளிவாக புதிய பாதுகாப்புக் கொள்கை பற்றிய வழிகாட்டு முறைகளில் இயற்றப்பட்டுள்ளன. இவை டீ மஸியரால் அவருடைய சீர்திருத்த திட்டங்களுடன் சேர்ந்து வெளியிடப்பட்டன. இந்த வழிகாட்டு முறைகளின்படி, ஜேர்மனியின் இராணுவப் படைகள் உலகெங்கிலும் பயன்படுத்துவது தேசிய சுய உறுதி மற்றும் இறைமையின்வெளிப்பாடாக இருக்கும்.

வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள  எதிர்கால இராணுவ நடவடிக்கைகளின் குறிப்பான நோக்கங்கள், தடையற்ற வணிகப் பாதைகளைப் பராமரித்தல், மூலப்பொருட்கள் பாதுகாப்பாகப் பெறுவதற்கு வகை செய்தல் ஆகியவற்றை அடக்கியிருக்கும்; இயற்கை வளங்கள் பெறப்படுவதற்கு உதவும். அதேபோல் சர்வாதிகார ஆட்சிகளின் வீழ்ச்சியானால் ஏற்படும் குடியேறுபவர்களின் அலை, எழுச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்தும், சர்வதேச முடிவெடுக்கும் நடவடிக்கைகளில் பங்கு பெறுதல், உள்நாட்டுப் பாதுகாப்பும் கவனிக்கப்படும், அதாவது உள்நாட்டிலும் இராணுவம் பயன்படுத்தப்படலாம். (See ’‘Germanys new military doctrine of national self-assertion <http://www.wsws.org/articles/2011/may2011/germ-m30.shtml>. பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு முன் டீ மஸியரால் இராணுவச் சீர்திருத்தங்கள் பற்றிய தன் கருத்துக்களை முன்னெடுப்பது பற்றி பல பேட்டிகளைக் கொடுத்திருந்தார். Frankfurter Allgemine Zeitung பத்திரிகையுடன் நீண்ட நேரம் பேசியபோது அவர் பாக்கிஸ்தான், யேமன், சோமாலியா மற்றும் சூடான் ஆகியவை இராணுவப் பிரிவுகள் வருங்காலத்தில் நிலைப்பாடு கொள்ளக்கூடிய இடங்களாக இருக்கும் என்றார். இந்நாடுகளிலும் தேவையானால் ஜேர்மனி ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படும் என நினைக்கிறேன்என்றார் அவர்.

19ம் நூற்றாண்டின் ஜேர்மனிய இராணுக் கொள்கை இயற்றிய கோட்பாட்டாளர் கார்ல் வொன் கிளவ்ஸவிட்ஸ் இனை மேற்கோளிட்டு, போர் என்பது அரசியலை தொடர்வதற்கு மற்றொரு வழிவகையாகும்என்றார் டீ மஸியர். மேலும் இச்செயற்பாடுகள் வெளியுறவு, பொருளாதாரக் கொள்கைகளுக்கு நெருக்கமாக இணைந்து நடத்தப்படும். படையினர்களும் வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதிதான்என்று அவர் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்பு மந்திரி பின் உலகெங்கிலும் பொறுப்புக்கள் மேற்கோள்ளப்பட வேண்டும் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். இதை நாமும் மற்றவர்களும் செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளோம், மற்றவர்கள் நம்மிடம் இருந்து இதை எதிர்பார்க்கின்றனர்என்றார். லிபியாவை பெயரைச் சொல்லிச் சுட்டிக்காட்டாவிட்டாலும், அவருடைய அறிக்கை தாராளவாத ஜனநாயக் கட்சியின் (FDP) தலைமையிலான வெளியுறவு அமைச்சரகம் பற்றிய அப்பட்டமான குறைகூறல் என்றுதான் அறியப்பட்டுள்ளது; அதுவோ லிபியப் போரில் ஜேர்மனி பங்கு பெறுவதை நிராகரித்துவிட்டது.

தன்னுடைய உலகளாவிய இராணுவத்தலையீடு பற்றிய கோட்பாட்டை டீ மஸியர் இழிந்த முறையில் நியாயப்படுத்தும் வகையில் ஜேர்மனிய அரசியலமைப்பில் பொதிக்கப்பட்டுள்ள சொத்துடமையுடன் இணைக்கப்பட்டுள்ள சமூகத்தின் கடமையெனக் குறிப்பிட்டார். இது ஜேர்மனி பெரும் செல்வம் கொண்டுள்ளதால், இது உலகெங்கிலும் இராணுவரீதியாகத் தலையிடும் கடமையைக் கொண்டுள்ளது என்றார் அவர். பொருளாதார வளம் என்பது கடமைகளையும் கொண்டுள்ளது; இன்னும் சொல்லப்போனால் இதுவரை ஜேர்மனி அறிந்திராத மற்றும் ஏற்றுக்கொள்ளப்படாத கடமைகளும் உண்டு.

பாராளுமன்றத்தில் பல உறுப்பினர்களும் வியக்கும் வகையில், பசுமைவாதிகளின் பாராளுமன்றப் பிரிவுத் தலைவர் யூர்கன் ரிட்டீன் தன் முழு உடன்பாட்டை வெளிப்படுத்தினார். தன்னுடைய அரசியல் போக்கை ஒரு மாவோவிசக் குழுவில் துவக்கிய டிரிட்டின் கூட்டாட்சியின் சுற்றுச்சூழல் மந்திரியாக 1998ல் இருந்து 2005 வரை இருந்தார். இவர் அடுத்த கூட்டாட்சித் தேர்தலில் பசுமைவாதிகளுடைய வேட்பாளராகச் சான்ஸ்லர் பதவிக்கு நிற்கக் கூடும் என்றும் எதிர்பார்கப்படுகிறது. டீ மஸியரை இவர் பாராட்டிப் பேசியதும் FDP ஐத் தாக்கிப் பேசியதும், CDU உடன் ஒரு கூட்டணி அமைக்க விடுத்த அழைப்புப் போல் இருந்தது.

டீ மஸியரின் பாதுகாப்பு அமைச்சரகத்தின் புதிய முடிவேடுக்கும் தன்மையைப் பாராட்டிப் பேசிய வகையில் தன் உரையை டிரிட்டின் தொடங்கினார். ஜேர்மனியின் மூலோபாயமும் பாதுகாப்புக் கொள்கையும்வெளியுறவு அமைச்சரகத்தில் தீர்மானிக்கப்படவில்லை, பாதுகாப்பு அமைச்சரகத்தில் முடிவெடுக்கப்படுகிறது என்றார்டீ மஸியர்  உடைய முக்கிய அடிப்படை மூலோபாய முடிவுகளுடன்தன் வெளிப்படையான உடன்பாட்டையும் தெரிவித்தார். இதில் சர்வதேச அளவில் பயன்படுத்தப்படுவதற்கு துருப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் இலக்கும் அடங்கும். வெளிநாட்டுச் நடவடிக்கைகளுக்காக 10,000 துருப்புகளையாவது வைத்திருக்கவேண்டும் என்ற கருத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்என்றார் அவர்.

ஆனால் இவ்விதத்தில் பாதுகாப்பு மந்திரியின் திட்டங்கள் டிரிட்டினைப் பொறுத்தவரை போதுமானதாகவில்லை. பாதுகாப்பு மந்திரி தொடர்ந்து மரபார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் அனைவரும் முக்கியம் என அடையாளம் கொண்டுள்ள பணியைவிட மிக முக்கியமானது என்று தொடர்ந்து நினைக்கிறார்என்று டிரிட்டின் குற்றம் சாட்டினார். அதாவது இன்னும் அதிக இராணுவப் பிரிவுகளும், அதிக தருப்புக்களும் வெளிநாடுகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதைக் கவனிக்கவில்லை. நீங்கள் தொடர்ந்து உறுதிப்பாட்டுடன் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம். ஜேர்மனியக் கூட்டாட்சிக் குடியரசின் பணி இன்னும் வலிமையுடன் அதன் சர்வதேசப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.என்று டிரிட்டின் சேர்த்துக் கொண்டார்.

சர்வதேசப் பொறுப்பு என்பது இயற்கை வளங்களைப் பெறுவது என்ற பொருளை மட்டும் தராது, இந்த உலகில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் பாதுகாப்பு அச்சறுத்தல்களை எதிர்கொள்ளுவதும் ஆகும்என டிரிட்டின் வலியுறுத்தினார். இங்கு முறையாக சீரற்ற தன்மையில் இருக்கும் மோதல்கள், பொது-இராணுவப் பணிகள் இணைந்து செயல்பாடுகள் செய்தல், மற்றும் தோல்வியுற்ற நாடுகளில் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கவனித்தல் போன்றவையும் அடங்கும். இப்புவியில் எந்த இடத்திலும் சட்ட ஒழுங்கற்ற தன்மை இருப்பதை நாம் பொறுத்துக் கொள்ளக்கூடாதுஎன்று அவர் வலியுறுத்தினார்.

வேறுவிதமாகக் கூறினால், பசுமைவாதிகள் ஜேர்மனிய இராணுவம் உலகில் வேறு எந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிட வேண்டும் என்று கோருகின்றனர். இப்பின்னணியில் கடந்த காலத்தைவிட அதிகமாகத்தான் ஜேர்மனியில் இருந்து எதிர்பார்க்கப்படும். இது இத்தகைய விவாதங்களில் வெளிப்படையாகக் கூறப்பட வேண்டும்.

தோல்வியுறும் நாடுகளை ஸ்திரப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை  ஏற்பாடு செய்யும் பல நாடுகளின் கூட்டுச் செயற்பாடுகளுடன் இணைந்து நம் இராணுவப் படைகள் தொடர்ச்சியாக வளர்க்கப்பட வேண்டும்; அதுதான் அடிப்படைத் தேவையாகும்.” “தெற்கு சூடான் மற்றும் சூடான் பிரிக்கப்படுதலைப் பற்றிக்குறிப்பிட்ட டிரிட்டின் அதை ஜேர்மனிய இராணுவம் தலையீடு செய்வதைத் தவிர்க்க முடியாததற்கு ஒரு உதாரணமாகக் காட்டினார்.

சமூக ஜனநாயகக் கட்சியும் டீ மஸியரின் திட்டங்களுக்கு ஆதரவைக் கொடுத்தது. அதன் பாதுகாப்புப் பிரிவுச் செய்தித் தொடர்பாளாரான ரைனர் ஆர்னோல்ட்  பாதுகாப்பு மந்திரி நியாயத்துடனும், நடுநிலைகொண்டுள்ளார் எனப் பாராட்டினார். சமூக ஜனநாயக கட்சிப் பாராளுமன்றப் பிரிவு படையினர்களுக்குக் கூட்டுப் பொறுப்பைஏற்கத் தயாராக உள்ளது என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.

தனது பார்வையாளருக்கு ஆர்னால்ட் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகள் அரசாங்கத்தில் இருந்தபோது கிழக்கு திமோருக்குப் படைகளை அனுப்பியது குறித்து நினைவுபடுத்தினார். அப்பொழுது அங்கு ஜேர்மனியப் பாதுகாப்பு நலன்கள் நேரடியான தொடர்பு இல்லை என்றாலும் இது நிகழ்ந்தது. பாதுகாப்பு மந்திரிக்கு சமூக ஜனநாயகக் கட்சியினர் பொதுவாக புரிந்துணர்வுள்ள பொருளாதார நலன்கள்பாதுகாக்கப்படல் மற்றும் பொதுவாக புரிந்துணர்வுள்ள வடஆபிரிக்காவின் உறுதிய பற்றிய நலன்கள் பாதுகாக்கப்படல்பற்றி விவாதிக்கவும் தயார் என்றார்.

ஆனால் டீ மஸியரின் திட்டங்களும் ஆர்னால்டிற்குப் போதுமானதாக இல்லை. சேமிப்பு இலக்கான 8.3 பில்லியன் யூரோக்கள் என்பதைத் தக்க வைக்கும் முயற்சிக்காக அவர் மந்திரியை குறைகூறினார். பாதுகாப்புக் கொள்கையைவிட அரசாங்க சிக்கன நடவடிக்கை உயர்ந்தது என்ற அரசாங்கம் கருதுவதையும் குறைகூறினார். ஆர்னால்ட் கருத்துப்படி, கணிசமான இராணுவ நிதி ஒதுக்கப்படுதல் சீர்திருத்த வழிவகைகளில் நம்பிக்கை ஏற்படுத்தப்பட ஒரு முன்னிபந்தனை என்றார். மேலும் இராணுவத் தொழில் போதுமான ஈர்ப்புத் தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். சமூக ஜனநாயக கட்சி இது எப்படி இன்னும் திறமையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு 82 முன்மொழிவுகளை தயாரித்துள்ளது என்று அவர் கூறினார்.

டீ மஸியரின் திட்டங்களுக்கு ஒரே விமர்சனம் இடதுகட்சிப் பிரிவில் இருந்துதான் வந்தது. அவர்களுடைய பாதுகாப்புப் பிரிவு வல்லுனர் போல் ஷேபர்  இராணுவத்திற்கு தலையீட்டு முறைக்கு உரிமம்வழங்குவதற்காக டீ மஸியரின் மீது கண்டனம் தெரிவித்து, நாங்கள் இதற்கு உடன்பட மாட்டோம்.!என உரக்கக் கூவினார்:

ஆனால், இக்கட்சியில் பலமுறை நடப்பது போலவே இது வலதிற்கு மாறுவதை மூடிமறைப்பதற்கு வாய்ச்சொல் எதிர்ப்பு வார்த்தை ஜாலங்களை  பயன்படுத்துவதைத்தான் குறிக்கிறது. இது இப்பொழுது ஜேர்மனிய இராணுவத்தை ஏற்று, ஆதரவு கொடுக்கிறது. ஆனால் இடது கட்சியின் கருத்துப்படி அது சிறியதாக இருக்க வேண்டும். ஷேபர் பாராளுமன்றத்தில் தன் கட்சி 125,000 துருப்புக்களை கொண்ட இராணுவம் போதும் என்றும் டீ மஸியர் விரும்புவது போல் 185,000 தேவையில்லை என்றும் கூறினார்.

இப்படிக் கிட்டத்தட்ட ஒருமனதாக பாராளுமன்றத்தில் டீ மஸியரின் போர்த்திட்டங்கள் இருப்பது ஒரு எச்சரிக்கையுடன் எடுக்கப்பட வேண்டும். 1950களில் பல சமூக ஜனநாயக கட்சி அரசியல்வாதிகள் ஜேர்மனி மறுபடியும் ஆயுதமயமாக்கப்படவேண்டும் என்பதற்கான எதிர்ப்புக்களில் முன்னணியில் இருந்தனர். ஆனால் சமூக ஜனநாயக கட்சியில் பெரும்பாலானவர்கள் அந்நேரத்தில் இராணுவத்திற்கு ஆதரவு கொடுத்திருந்தனர். 1980ல் நிறுவப்பட்ட நேரத்தில் பசுமைவாதிகள் அமைதிவாத இயக்கத்துடன் நெருக்கமாக இருந்திருந்தனர். அந்த இயக்கம் மில்லியன்கணக்கான மக்களை அமெரிக்க இடைத்தூர அணுசக்தி ஏவுகணைகள் ஜேர்மனிய மண்ணில் தளம் கொள்ளப்படுவதை எதிர்த்துத் திரட்டியது.

இப்பொழுது 30 ஆண்டுகளுக்குப் பின்னர் சமூக ஜனநாயக கட்சியும் பசுமைவாதிகளும் தங்கள் ஜேர்மனிய இராணுவவாதத்தின் பக்கம் முற்றிலும் இணைத்துக் கொண்டுள்ளனர். இடது கட்சியின் எதிர்ப்புக்கூட சந்தர்ப்பம் சூழ்நிலை தேவைப்பட்டால், அரசாங்கத்தில் வருங்காலத்தில் பங்கு பெறுவதற்கு ஈடாக உள்ள பேரம் பேசும் உத்திதான்.

1950களின் அமைதிவாத இயக்கம் ஜேர்மனியை மேலை இராணுவக் கூட்டுடன் இணைத்துக் கொள்வதற்கு எதிராக இயக்கப்பட்டிருந்தது; 1980களில் இது அமெரிக்க அணுசக்தி தளவாடங்களை ஜேர்மனியில் நிலைப்படுத்துவதை எதிர்த்து இருந்தது. இன்று ஜேர்மனியின் தேசிய நலன்கள் நேரடி ஆபத்தில் உள்ளன. நாடு மறு ஐக்கியம் அடைந்த பின்னர், ஜேர்மனிய ஏகாதிபத்தியம் பெருகிய முறையில் தன்னம்பிக்கையைக் கொண்டுள்ளது. அட்லான்டிக் கூட்டிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஆழ்ந்த பிளவுகள் தோன்றியுள்ளன. தன்னுடைய தேசிய நலன்களை உறுதிபடுத்த ஒவ்வொரு பெரிய சக்தியும் இராணுவ வலிமையைத்தான் பெருகிய முறையில் நம்புகின்றன.

சர்வதேச அழுத்தங்கள் பெருகியிருக்கும் நிலையில், சமூக ஜனநாயகக் கட்சியினர் மற்றும் பசுமைவாதிகள் தங்கள் நிபந்தனையற்ற முறையில் ஆளும்வர்க்கத்துடன் இணைந்துள்ளனர். நம்பிக்கையற்ற தன்மை, நேரடி எதிர்ப்பு ஆகியவை பரந்த மக்கள் பிரிவிடையே இருந்தாலும், இவை  இராணுவக் கட்டமைப்பை வலியுறுத்தும் பொறுப்பை இக்கட்சிகள் எடுத்துக் கொண்டுள்ளன. முதலாளித்துவத்தை எதிர்கொள்ள உறுதியாக இருக்கும் சுயாதீன தொழிலாள வர்க்க இயக்கம் ஒன்றுதான் இராணுவவாதத்தின் வளர்ச்சிக்கும் அதையொட்டிய போர் அச்சுறுத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.