Marxism and the Trade unions
 


WSWS : Tamil

Print Version

A lecture by David North

பின்வரும் விரிவுரையானது அவுஸ்திரேலிய சோசலிச சமத்துவ கட்சியால் சிட்னியில் 1998 ஜனவரி 3-10 வரை மார்க்சிசமும் 20ம் நூற்றாண்டின் அடிப்படைப்பிரச்சனைகளும் என்ற தலையங்கத்தின் கீழ்நடாத்தப்பட்ட சர்வதேச கோடைகால வகுப்பில் 10ம் திகதி நடாத்தப்பட்ட விரிவுரையாகும்.

அமெரிக்க சோசலிச சமத்துவ கட்சியின் தேசிய செயலாளரான டேவிட் நோர்த் ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியனில் மார்க்சிசத்தின் வரலாறு, கொள்கைகள் தொடர்பாகவும் நான்காம் அகிலத்தின் முன்னோக்கு, வேலைத்திட்டம் தொடர்பான விரிவுரைகளை நிகழ்த்தியுள்ளார்.

இவர் நாம் பாதுகாக்கும் பாரம்பரியம், பெரஸ்துரோய்கா எதிர் சோசலிசம், ட்ரொஸ்க்கிசம் எதிர் ஸ்ராலினிசம், ரஷ்ய புரட்சியை பாதுகார் போன்ற நான்காம் அகிலத்தினதும் ரஷ்ய புரட்சியினதும் பல முக்கிய புத்தகங்களின் ஆக்கதாரருமாவர். மேலும் இவர் யூத எதிர்ப்பு, பாசிசம் பாரிய அழிப்பு; சமத்துவம் மனித உரிமையும் சோசலிசத்தின் பிறப்பு; சோசலிசம், வரலாற்று உண்மையும் அமெரிக்காவின் அரசியல் சிந்தனையின் நெருக்கடி போன்ற விரிவுரைகளையும் நிகழ்த்தியுள்ளார்.

மார்க்சிச இயக்க வரலாற்றில் இரண்டு அரசியல் விஷயங்கள் அல்லது ''பிரச்சினைகள்'' அவை ஒரு நூற்றாண்டுக்கு மேலாகநீடித்த விதிவிலக்கான இடைவிடாத சர்ச்சையின் மூலமாக இருந்து வந்துள்ளன. ஒன்று ''தேசிய பிரச்சனை'' யாகும்; மற்றொன்று ''தொழிற் சங்க பிரச்சனையாகும்''.

இந்தப் பிரச்சினைகள் இடைவிடாது இருந்துவந்ததற்கான காரணம் என்ன மற்றும் அவை இரண்டுக்குமிடையில் ஏதாவது உறவு இருக்குமாயின் அது என்ன? இதற்கான பதிலை நவீன தொழிலாளர் இயக்கம் தோன்றிய வரலாற்று நிலைமைகளினுள் ஆய்வு செய்வதில்தான் கண்டு கொள்ளமுடியும் என்று நான் கருதுகின்றேன். முதாலாளித்துவ தேசிய அரசானது 18ம் மற்றும் 19ம் நூற்றாண்டுகளின் புரட்சிகர ஜனநாயக போராட்டங்களிலிருந்து தோன்றிய பொழுது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சிக்கான பொருளாதார தூண்டுதலையும் அரசியல் கட்டமைப்பையும் வழங்கியது. தேசிய உறுதிப்படுத்தல் நிகழ்வுப் போக்கானது, பல வேறுபட்ட வடிவங்களிலும் வேறுபட்ட மட்டங்களிலும் இருந்த பொழுதிலும் தொழிலாள வர்க்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொதுவான ஜனநாயக விஷயங்களுடன் தொடர்புடையதாகும்.

தேசியம் பற்றிய தொழிலாள வர்க்கத்தின் அணுகுமுறை அதிகபட்ச சிக்கலான முரண்பாடான மற்றும் இருவேறு போக்குடையதாக இருக்க முடிந்ததே தவிரவேறுவிதமாக அல்ல. ஒரு புறம் தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சியானது எண்ணிக்கைகளிலும் பலத்திலும் மற்றும் அதன் வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் பொதுவாகதேசிய அரசு உறுதிப்படுத்தப்பட்டதுடனும் அதன் பொருளாதார, தொழிற்துறைசக்தி விரிவாக்கம் செய்யப்படுவதுடனும் தொடர்புடையதாக இருந்தது. அதேசமயம் தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார மற்றும் சமூகப் போராட்டங்களின் வளர்ச்சியானது அதனை புறநிலையாக தேசிய அரசுக்கு விரோதமான ஒரு நிலைப்பாட்டை நிறுத்தியது. இறுதி ஆய்வில் தேசிய அரசானது முதலாளித்துவத்தின் வர்க்க நலன்களுக்குசேவை செய்தது.

மார்க்சிச இயக்கத்தினால் தேசிய இனப்பிரச்சனை தீர்க்கப்படாமல் இருந்துவரும் தன்மை திட்டவட்டமாக தொழிலாளர்களுக்கு முதலாளித்துவ தேசிய அரசுடன் உள்ள பெரும் சிக்கலான உறவில் இருந்து எழுந்தது. உலகில் எங்குமே நாம் தேசியத்திலிருந்து சர்வதேச சோசலிசநனவுக்கு மக்கள் வேதனையின்றி மற்றும் இயல்பாக மாற்றமடைந்ததை காணவில்லை. ஒரு மனித ஜீவனின் வாழ்க்கையில் அவனது அல்லது அவளது இளமை அனுபவங்களின் அவர்களின் மீதி வருடங்கள் முழுவதும் சக்தி வாய்ந்த செல்வாக்குகளைக் கொண்டதாக இருக்கும். ஒரு ஒப்புமையான காட்சியை வர்க்கங்களின் சமூக நனவின் வரலாற்றுப் பரிணாமத்தில் கண்டு கொள்ள முடியும். சமூக நனவு பின்னடைவாக இருக்கின்றது. மேலும் துல்லியமாக கூறினால் ஒரு உயர்ந்த சிக்கலான மற்றும் முரண்பாடான சமூக இருப்பை விஞ்ஞானபூர்வமான வடிவத்தில் நேரடியாக அல்லது உடனடியாக பிரதிபலிக்கவில்லை. அதேபோல் தொழிலாளர் இயக்கத்தின் மேலாக தேசியவாதத்தின் செல்வாக்கு தேசிய அரசின் மீது உலகப் பொருளாதாரத்தின் புறநிலையான தாக்கத்தின் வளர்ச்சி மற்றும் வர்க்கப் போராட்டத்தின் அதிகரித்துவரும் சர்வதேசியத் தன்மை போன்றவற்றிற்கு நேரிடை விகிதாசாரத்திலும் ஈடான வேகத்திலும் வீழ்ச்சியடையவும் இல்லை.

மேலும் 20ம் நூற்றாண்டில் தேசிய ஒடுக்குமுறை இடைவிடாது இருந்தது. அதன் பிரதானமான காரணம் மற்றும் உள்ளடக்கம் சமூக பொருளாதார தன்மை உடையதாக இருந்தாலும் கூட தேசிய நனவின் வடிவங்களை பலப்படுத்தியது. ஆனால் தேசிய செல்வாக்குகளின் சக்தி இருந்த பொழுதிலும் மார்க்சிஸ்டுகள் அவர்களது வேலைத்திட்டத்தை பழைய பாரபட்சங்கள் மற்றும் காலவதியான கருத்துக்களை நோக்கி குற்றம் கூறுவது அல்லாது, சமூக யதார்த்தத்தின் விஞ்ஞான பூர்வமான ஆய்வின் மீது தங்கியிருக்கவேண்டியது அவர்களது பொறுப்பாகும். நிலவும் பாரபட்சங்களுக்கு அதன் அரசியல் வேலைத்திட்டத்தை குறுகியகால தந்திரோபாய நன்மைகளுக்காக பொருந்தச் செய்வது சந்தர்ப்பவாதத்தின் மிகவும் பொதுவான தோற்றங்களின் ஒன்றாகும். அது ஒரு கொள்கை, வரலாற்று மற்றும் விஞ்ஞானபூர்வமான தன்மை பற்றிய அக்கறைகளிலிருந்து தொடங்குவதற்கு பதிலாக நடைமுறை மற்றும் இடைக்கால கணிப்பீடுகளிலிருந்து தொடங்குகின்றது.

தேசிய அரசின் மீதான பூகோளமயமான உற்பத்தியின் அரசியல் மற்றும் பொருளாதார பிரதிவிளைவுகளை மறுக்கும் சந்தர்ப்பவாதத்தின் பொதுவான இந்த வரலாற்று ரீதியாக காலாவதியான அரசியல் வடிவத்திற்கு முற்றுமுழுமையாக இல்லாதிருக்கும் ஒரு முற்போக்கு சாத்தியக்கூறை, இருப்பதாக கூறுகின்றனர். இவ்வாறாக தேசிய சுயநிர்ணயத்துக்கான கோரிக்கை உலகில் ஒவ்வொரு பிற்போக்கு இனவாத இயக்கத்தின் முக்கிய வார்த்தையாக மாறிய பொழுதிலும் அவர்கள் அந்த கோரிக்கையை புகழ்வதைத் தொடர்கின்றனர்.

மார்க்சிஸ்டுகள் தேசிய அரசை அர்த்தமற்றது என்று கருதவில்லை. தேசியஅரசு வடிவம் உற்பத்தி சக்திகளின் பூகோள வளர்ச்சிமற்றும் ஒருங்கிணைவு என்ற கண்ணோட்டத்தில் மனித முன்னேற்றத்திற்கு ஒரு தடையாகஇருந்த பொழுதிலும் அது உலக அரசியலில் ஒரு சக்தி வாய்ந்த காரணியாக இருக்கின்றது. சோசலிச இயக்கம் அதன் தந்திரோபாயங்களை விரிவுபடுத்தும் பொழுது இந்த அரசியல் யதார்த்தத்தை புறக்கணிக்கவில்லை. தேசிய அரசானது முதலாளித்துவ சமுதாயத்தின் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பின் ஒரு அடிப்படை அலகாக நீடிக்கும் வரையில் தேசியப் பிரச்சனையானது நீடிக்கும். அது வரலாற்றின் இந்த கட்டத்தில் மிகவும் பொருத்தமாக தேசிய சிக்கல் என்று அழைக்கப்படும். ஆனால் மார்க்சிய தந்திரோபாயம் தேசிய அரசின் வரலாற்று ரீதியான வழக்கற்றுப்போன தன்மை பற்றிய ஒரு விஞ்ஞான பூர்வமான விளக்கத்திலிருந்து ஊற்றெடுக்கின்றது. அதன் தந்திரோபாயங்கள் மூலமாக ட்ரொட்ஸ்கிச இயக்கமானது, நான்காம் அகிலத்தின் வழி நடத்தும் மூலோபாயத்தை சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக அமுல்படுத்த முயற்சிக்கின்றது. இந்த சர்வதேசிய மூலோபாயத்தின் மிக உயர்ந்த நிலையின் மீது தங்கியிருப்பதுதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை ஒவ்வொரு தேசிய சீர்த்திருத்தவாத மற்றும் சந்தர்ப்பவாத குழுவிலிருந்து வேறுபடுத்துகிறது.

தொழிற்சங்கங்களும் தீவிரவாதிகளும்

இப்படியான கோட்பாட்டு ரீதியான அக்கறைகள் தொழிற்சங்கப் பிரச்சினை தொடர்பான கேள்வியிலும் முக்கியத்துவம் குறைந்ததல்ல. தொழிற்சங்கப் பிரச்சினை சோசலிசத்துக்கான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரமான போராட்டங்களின் வளர்ச்சியில் இந்த மிகவும் பழைய பாட்டாளி வர்க்க அமைப்பு வடிவத்தில் பாத்திரம் பற்றி அக்கறை கொள்கின்றது. நவீன பாட்டாளி வர்க்கத்தின் தோற்றம் தேசிய அரசின் வரலாற்று வளர்ச்சியின் உள்ளடக்கத்தினுள் ஏற்பட்டுள்ளது. அதன் அமைப்புகள் மற்றும் அதன் நடவடிக்கைகள் தேசிய அரசின் கட்டமைப்பினால் வடிவம் பெற்றன. இதுதான் சிறப்பாக தொழிற்சங்கங்கள் தொடர்பான விஷயமாக இருந்தது, அவற்றின் முன்னேற்றங்களும் வெற்றியுற்ற தன்மைகளும் பெருமளவு "அவற்றின்" தேசிய அரசின் தொழிற்துறை மற்றும் வர்த்தக வெற்றிகளில் தங்கியிருந்தது. எனவேதான் தேசிய அரசை நோக்கிய தொழிலாள வர்க்கத்தின் இருபொருள் உடைய அணுகுமுறைக்கான ஆழமான புறநிலையான காரணங்கள் இருப்பதைப் போலவே, அங்கே சோசலிசத்தை நோக்கிய தொழிற்சங்கங்களின் இருபொருள் உடைய விரோதம்கூட இருப்பதற்கான ஆழமான வேருடைய புறநிலைக்காரணங்கள் உண்டு. இந்த ஒரு பிரச்சினை மீது சோசலிச இயக்கமானது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பெரும் கண்ணீர் வடித்துள்ளது.

நிச்சயமாக புரட்சிகர மார்க்சிசக் கட்சிகளுக்கும் மற்றும் தொழிற்சங்களுக்கும் இடையிலான உறவுகளை பீடித்த பிரச்சனைகளின் முக்கியத்துவத்தை அவற்றின் இருப்பின் தொடக்க வருடங்களில் முழுமையாக எதிர்பார்த்திருக்க முடியாது. தொழிற்சங்கங்கள் தொடர்பாக மார்க்சிஸ்டுகள் எடுத்துக் கொண்ட அணுமுறையானது தவிர்க்க முடியாதபடி அந்த சமயத்தின் நிலைமைகளையும் சூழ்நிலைகளையும் பிரதிபலித்தது. தொழிற்சங்கப் பிரச்சனையானது அது 1847ல் முன்வைக்கப்பட்டது போல 1998ல் முன்வைக்கப்படவில்லை. கடந்த 151 வருடங்களில் அங்கே ஒரு கணிசமான வரலாறு இருக்கிறது. மற்றும் சோசலிச இயக்கத்திற்கு தொழிற்சங்க வாதத்துடன் அதனையே பழக்கப்படுத்திக் கொள்வதற்கு போதுமான வாய்ப்பும் இருந்தது. அது தொழிற்சங்கங்களின் தன்மை பற்றி பெரிய அளவில் கற்றுக் கொண்டது. ஆயினும் இந்த திரண்ட அறிவின் சுவடுகள் எதையும்கூட ''இடதுசாரி'' தீவிரவாத பத்திரிக்கையின் பக்கங்களில் காணமுடியாது.

சோசலிச இயக்கமானது அதன் வரலாற்றின் பெரும்பகுதியில் தொழிற்சங்கங்களை ஆர்வத்துடன் பின்பற்றியது. இருப்பினும் நிறைய ஊடல்கள் மற்றும் கெஞ்சி அன்பை வேண்டுதல் இருந்தபோதிலும் இந்த காதல் கதை பெருமளவில்வெற்றி இல்லாமல் இருந்தது. கவர்ச்சி மற்றும் அக்கறை பற்றிய எண்ணற்ற உச்சரிப்புகள் இருந்த போதிலும் சோசலிச நடவடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் பல்லுடைபட்டதுடன், அவர்களுடைய விருப்பத்தின் குறிக்கோள்களால் முதுகில் கூட குத்தப்பட்டனர். சோசலிஸ்டுகள் அவர்களது சொந்த தொழிற்சங்கங்களை உருவாக்க முயற்சித்து அவற்றிற்கு மாசற்ற மார்க்சிச கல்வியை வழங்க முயற்சித்தபோதிலும் கூட, அவர்களினால் உருவாக்கப்பட்டவை அவர்களுக்கு நன்றி கெட்டதனமாக திருப்பிக் கொடுத்தன. அந்த வாய்ப்பு அதுவாகவே உருவாக்கப்பட்ட உடனேயே அவை அவர்களது சோசலிச மூத்தவர்களது கருத்துக்களை தூக்கிவீச முயற்சித்தன, முதலாளித்துவத்தின் விபச்சார சாக்கடையில் மகிழ்ச்சிகண்டன.

தோல்வியில் முடிவடைந்த பல்வேறு அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதற்கு ஏதாவது கொஞ்சம் இருக்கும் என்று ஒருவர் எண்ணலாம். ஆனால் பொக்காசியோவின் கட்டுக்கதைகளில் காணப்பட்ட வயதான முட்டாள்களைப்போல வயதாகிவரும் மற்றும் பல்லில்லாத தீவிரவாதிகள் இன்று மீண்டும் மீண்டும் நடத்தை கெட்ட பெண்ணின் கணவனாக இருக்கும் நாடகத்தை ஆடமட்டுமே மிக ஆவலாக இருக்கின்றனர். இவ்வாறாக இன்றைய ''இடது சாரி'' அமைப்புகள் இன்னும் வலியுறுத்துவது என்னவென்றால், சோசலிச இயக்கமானது தொழிற்சங்கங்களின் தேவைகளுக்கும் சபலங்களுக்கும் விசுவாசமாக இருக்ககடமைப்பட்டுள்ளன. தொழிற்சங்கங்கள் தனித்துவமான தொழிலாளர் அமைப்புகள் என்று சோசலிஸ்டுகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். அதாவது தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களின் மிகவும் பிரதிநித்துவமான வடிவமாகத் தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் அதிகார பூர்வமான மற்றும் சவால்விடமுடியாத தலைமையாக இருக்கிறது----அதாவது அதனை வரலாற்று விதியின் பிரதானமான மற்றும் இறுதி நடுவர்கள்--- என்று அவர்கள் வாதிடுகின்றனர். தொழிலாள வர்க்கத்தின் மீதான தொழிற்சங்கங்களுக்கு உள்ள ''இயற்கையான'' உரிமை என்று கருதப்படுவதை ஏதாவது ஒரு வகையில் கேள்விக்குட்படுத்துவது, அரசியல் ரீதியாக புனிதத்துவத்தை அவமதிக்கும் செயலுக்கு ஒப்பானதாகும் என்கின்றனர். எந்த நிஜமான ஒரு தொழிலாளர் இயக்கமும் பூர்வாங்கமாக தொழிற்சங்கங்களினால் தலைமை தாங்கப்படவில்லை என்றால் அதனால் ஆதிக்கம் செலுத்தப்படாததாக இருக்கும் என்று கருதுவது சாத்தியம் அற்றது என்று தீவிரவாதிகள் கூறுகின்றனர். தொழிற்சங்கங்களின் அடிப்படையில்தான் பலமுள்ள வர்க்கப் போராட்டத்தை நடத்த முடியும் என்கின்றனர். மற்றும் இறுதியாக ஒரு வெகுஜன சோசலிச இயக்கத்தின் வளர்ச்சி பற்றிய எண்ணம் அங்கே எதுவாக இருப்பினும், அது தொழிற்சங்கங்களை வென்றெடுப்பதிலும் அல்லது குறைந்தபட்சம் அவற்றின் முக்கியமான ஒரு பகுதியை சோசலிச முன்னோக்கிற்கு வென்றெடுப்பதில்தான் தங்கி இருக்கின்றது என்கின்றனர்.

விஷயத்தை வெளிப்படையாக கூறினால் தத்துவார்த்த ஆய்வு மற்றும் வரலாற்று அனுபவம் இரண்டினாலும் நிராகரிக்கப்பட்ட இப்படியான ஊற்றுகள் ஒவ்வொன்றையும் அனைத்துலகக் குழு நிராகரிக்கின்றது. நமது அரசியல் எதிராளிகள் கண்களில் தொழிற்சங்கங்களின் செல்வாக்கிற்கு முன்னே நாம் தலைவணங்க மறுப்பது அரசினை அவமதிப்பதற்கு ஒப்பானதாகும். இது நம்மை பெரிய அளவில் கவலைக்குள்ளாக்கவில்லை. ஏனென்றால் பலபத்தாண்டுகளாகவே ''இடது சாரி'' களுக்கு எதிர்ப்பாக இருப்பதில் அல்லது மிகவும் சரியாகச் சொன்னால் குட்டி முதலாளித்துவ பொது அபிப்பிராயத்திற்கு எதிராக இருப்பதில் நாம் பழக்கப்பட்டுவிட்டோம். அரசியல் ரீதியாக கூறினால் அதன் கடுமையான எதிர்ப்பை அனைத்துலக குழுவானது சரியான வழியில் செய்கின்றது என்பதற்கான நிச்சயமான அறிகுறியாக நாம் கருதுகின்றோம்.

தீவிரவாதிகளின் நிலைப்பாடு ஒரு முக்கியமான அடித்தளத்தில் தங்கி இருக்கிறது. தொழிற்சங்கங்கள் அவற்றின் வெகுஜன உறுப்பினர்களின் காரணமாகவே "தொழிலாளர் அமைப்புகளாக" இருக்கின்றன. இவ்வாறாக தொழிற்சங்கங்களின் செல்வாக்கை சவால்விடும் ஒருவர் வரைவிலக்கணப்படி தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அவராகவே நிற்கின்றார். இந்த அடித்தளத்துடன் உள்ள பிரச்சினை என்னவென்றால், அது தொழிற்சங்கங்களை வெறுமையான வரலாறற்ற அருவங்களாக குறைக்கின்றது. அதாவது தொழிற்சங்கங்களுக்கு பெருமளவிலான தொழிலாள வர்க்க உறுப்பினர் தொகை இருப்பது என்பது ஐயத்திற்கிடமின்றி உண்மையானதாகும். ஆனால் அதேபோல, அமெரிக்காவில் எல்க்ஸ், மேஷன், வெளிநாட்டு யுத்தங்களில் பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கத்தோலிக்க ஆலயம் போன்ற இதர அமைப்புகளுக்கும் அங்கத்தவர்கள் இருக்கின்றனர்.

மேலும் தொழிற்சங்கங்களின் பெருமளவிலான தொழிலாளர் எண்ணிக்கை பற்றிய ஒரு குறிப்பு இப்படியான அமைப்புகளின், சிறப்பாக அவற்றின் தலைமை வகிக்கும் தட்டான அதாவது அவற்றின் ஆளும் அதிகாரத்துவங்கள் பற்றியவற்றின் சமூக உட்கூறு பற்றிய ஒரு மிகவும் கவனமான ஆய்வுக்கு போதுமான ஒரு பிரதியீடு அல்ல. தொழிற்சங்கங்கள் பெருமளவில் தொழிலாள வர்க்க எண்ணிக்கையை கொண்டுள்ளன என்பதினால் இப்படியான அமைப்புக்கள் அதன் நலன்களுக்காக செயல்படுகின்றன என்று தானாகவே சொல்லிவிட முடியாது. உண்மையாக ஒருவர் தொழிற் சங்கங்களினால் பரந்த உறுப்பினர்களின் நலன்களுக்கும் மற்றும் அவற்றின் ஆளும் அதிகாரத்துவத்துக்கும் இடையில் ஒரு புறநிலையான மோதல் இருக்கிறதா எனபது பற்றியும் மற்றும் அந்த அளவிற்கு சங்கங்களின் கொள்கை முன்னையதன் [பரந்த உறுப்பினர்களின்] நலன்களை அல்ல ஆனால் பின்னையதன் [ஆளும் அதிகாரத்துவத்தின்] நலன்களை பிரதிபலிக்கின்றது என்பதையும் ஆய்வு செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.

தொழிற்சங்கங்கள் "தொழிலாளர் அமைப்புகள்" தான் என்று ஒருவர் ஏற்றுக்கொள்வாராயின், இந்த வரைவிலக்கணத்தைப் பயன்படுத்துவதற்கு மிக குறைவாகத்தான் அரசியல் அறிவினை சேர்த்திருக்கவேண்டும். இறுதியில் பார்த்தால் நாம் அப்போது தொடர்ந்து அந்த வரைவிலக்கண விளையாட்டை சுலபமான பின்வரும் கேள்வியை கேட்பதன் மூலமாக ஆடலாம், ''திட்டவட்டமாக தொழிலாளர் அமைப்பு என்பது அர்த்தப்படுவது என்ன?'' அது ''தொழிலாளர்களின் ஒருஅமைப்பு!'' என்று பதிலளிப்பது அதிக பயனுள்ளதாக இருக்காது. தொழிற்சங்கங்ககளின் பிரதானமான தன்மையை புரிந்துகொள்ள முயற்சிக்கையில் அங்கு உள்ள உண்மையான கேள்வி என்னவென்றால், ''இப்படியான அமைப்புகளுக்கு பொதுவாக வர்க்கப் போராட்டத்துடனும் குறிப்பாக முதலாளித்துவ சுரண்டலில் இருந்து தொழிலாளர்களை விடுவிப்பதுடனும் உள்ள தொடர்பு என்ன?

இந்த புள்ளியில், நாம் வெற்று சொற்பதங்களுக்கு அப்பால் கடந்து சென்று, தொழிலாள வர்க்கத்தின் மற்றும் சோசலிச இயக்கத்தின் போராட்டங்களில் தொழிற்சங்கங்கள் வகித்த பாத்திரம் பற்றிய ஒரு கவனமான வரலாற்று ஆய்வின் அடிப்படையில் ஒரு மிகவும் ஆழமான வரைவிலக்கணத்தை அமைப்பதை நோக்கிசெல்ல வேண்டும். அப்படியான ஓர் ஆய்வின் குறிக்கோள் ஒருவர் தேடுவதை அடிப்படையாகக் கொண்டு குற்றங்கள் அல்லது வெற்றிகள் பற்றிய உதாரணங்களை சாதாரணமாக உருவாக்குவதற்காக அல்ல. பதிலாக அது இந்த சமூக போக்கின் பிரதானமான தன்மையை வெளிப்படுத்துவதற்காகும். அதாவது தொழிற்சங்கங்களின் செயல்கள் கொள்கைகளுக்கானதும், நடைமுறை மற்றும் இயக்க வெளிப்பாட்டிற்குமான இயங்கும் விதிகளை வெளிப்படுத்துவதாகும்.

நமது தீவிரவாத எதிராளிகள் ஒருபொழுதுமே அவ்வாறான ஆய்விற்கு முயற்சிகூடசெய்தது கிடையாது. அதனால் மிகவும் அடிப்படையான மற்றும் தெளிவான கேள்விக்கு ஒரு பொறுப்பான பதிலைக் கூட வழங்க தொடங்க முடியவில்லை. ''ஏன் தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை பாதுகாப்பதில் மிக பரிதாபகரமான தோல்வி கண்டன, அவற்றினை உயர்த்துவது ஒரு புறமிருக்கட்டும்?'' அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கால்நூற்றாண்டானது தொழிலாள வர்க்கத்தின் சமூக இருப்பில் ஓரு தொடர்ச்சியான வீழ்ச்சியை எடுத்துக் காட்டியது. மூலதனத்தின் தாக்குதலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை பாதுகாக்கும் திறனற்றனவாக தொழிற்சங்கங்கள் இருந்தன. இந்த தோல்வியானது சர்வதேச அளவில் பலபத்தாண்டுகளாக எடுத்துக் காட்டப்பட்டவரையில், ஒருவர் தப்பிக்க முடியாதபடி அதற்கான புறநிலைக் காரணங்களைத் தேட வழிநடத்தப்பட்டுள்ளார். இன்று தொழிற்சங்கங்கள் இருக்கும் சமூகப் பொருளாதார சுற்றுச்சூழலை மட்டுமல்ல அதன் உண்மையான தன்மையையும் ஆராயவேண்டும். வேறுவார்த்தைகளின் கூறினால் 1973 இன் பின்னர் நிலைமை எதிராக திரும்பிவிட்டதென்றால் இந்த மாற்றத்தினால் மிகவும் இலகுவாக பாதிக்கப்படக்கூடியதாக தொழிற்சங்கங்களில் என்ன இருக்கிறது?, புதிய நிலைமைகளுக்கு பொருந்துவதற்கு மிகவும் திறனற்றதாக இருப்பதும் என்ன?

இந்தப் பிரச்சினைக்கு ஸ்பார்ட்டாசிஸ்ட் லீக்கின் பதிலை நாம் பரிசீலிப்போம். சோசலிச சமத்துவ கட்சியை மூர்க்கமாக கண்டனம் செய்யும்போது அதை அவர்களது நான்கு பத்திரிகையில் தொடர்ந்து வெளியிட்டனர். அவர்கள் பயன்படுத்திய ஆயிரக்கணக்கணக்கான சொற்களில் அசாதாரணமாக பெரும்விகிதாச்சாரத்தில் பெயரடை [பெயரெச்சம்] மற்றும் வினையடையின் [வினையெச்சம்] மிக்க அவதூறுகள் இருந்தன. அதில் ஸ்பார்ட்டாசிஸ்டுகள் தொழிற்சங்கங்களின் தோல்விக்கான ஒரு புறநிலையான தன்மைக்கு காரணங்கள் எதுவும் கிடையாது என்று கடுமையாக மறுக்கின்றனர். பதிலாக ஒவ்வொன்றும் "AFL-CIO ன் தவறான தலைவர்களின் தோல்விவாத மற்றும் துரோகத்தனமான கொள்கைகளினால்" விளக்கப்பட வேண்டும் என்கின்றனர். மேலும் இதனை ஒரு பகுத்தறிவுபூர்வமான விளக்கமாக அரிதாகத்தான் எண்ண முடியும். டைனோசார்கள் மறைந்துவிட்டதற்கு காரணம் அவை இனிமேலும் வாழ விரும்பாததுதான் என்று ஒரு தொல்லுயிர் வல்லுநர் அதேபோல பிரகடனம் செய்யமுடியும்! ஸ்பார்ட்டாசிஸ்டுகள், AFL-CIO தலைமையில் இருக்கும் டைனோசார்கள் ஏன் "தோல்விவாத மற்றும் துரோகத்தனமான கொள்கைகளை" பின்பற்ற தீர்மானித்தனர் என்பதை விளக்கத் தவறிவிட்டனர். அது அவர்கள் கெட்ட மனிதர்கள் என்ற சாதாரண காரணத்தினாலா? மற்றும் அவர்கள் கெட்ட மனிதர்களாக இருப்பார்களாயின் ஏன் அவர்களில் பலர் அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே உள்ள தொழிற்சங்கங்களின் தலைமையில் காணக்கூடியதாக உள்ளனர். நிறைய கெட்ட மனிதர்களைக் கவரக்கூடியவாறு தொழிற்சங்கங்களின் தன்மையில் ஏதாவது இருக்கின்றதா, பிறகு ஏன் அவர்கள் "தோல்விவாத மற்றும் துரோகத்தனமான கொள்கைகளை" பின்பற்றுகின்றார்கள்? நாம் இன்னும் ஒரு கேள்வியைக் கேட்கலாம்." ஸ்பார்ட்டாசிஸ்ட் லீக்கில் உள்ளது என்ன? அதாவது தாம் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் தொழிலாளர்களைக் காட்டிக் கொடுக்கவும், தோல்வி அடையச் செய்யவும் அர்ப்பணித்துள்ள பலகெட்ட மனிதர்களை பெரும் எண்ணிக்கையில் கவருகின்ற அமைப்புகளுக்கு ஏன் ஸ்பாட்டசிஸ்ட் ஆதரவளிக்கச் செய்கின்றது.

ஒரு அகநிலையான அணுகுமுறையானது அது அனைத்து உண்மையான கடினமான பிரச்சினைகளையும் கையாள்வதை தவிர்ப்பதோடு மட்டுப்படுத்தவில்லை. இது "தவறான தலைவர்கள்" மீது அவர்களது சொல்தாக்குதல் இருந்தபோதும் ஸ்பார்ட்டாசிஸ்ட் லீக் மற்றும் இதர தீவிரவாத குழுக்களை, அவர்களுக்கு இறுதியான பாவ விமோசனம் வழங்குவதற்கான சாத்தியத்தையும் திறந்துவைக்க அனுமதிக்கின்றது. மற்றும் அந்த அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை தொழிற்சங்கங்களுக்கு மற்றும் இறுதியாக அதே தவறான தலைவர்களுக்கு தொடர்ந்து கீழ்ப்படியச் செய்வதை சம்மதிக்கிறது.

இந்த முன்னோக்கானது முன்பு மிலிடண்ட் போக்காக அறியப்பட்ட பிரிட்டிஷ் சோசலிசக் கட்சியின் பிரதான தலைவரான பீற்றர் ரபேயினால் [Peter Taaffe] எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் எடுத்துரைக்கப்பட்டது. தொழிற்சங்க அதிகாரத்துவத்திடமான தனது கீழ்ப்படிவை தீவிரவாத சொற்றொடர்களினால் மூடிமறைக்கும் திருவாளர் ரபேயின் முயற்சிகள் உண்டுபண்ணும் ஒரு தாக்கம், ஏற்க வைப்பதைவிட மிகவும் கோமாளித்தனமாக இருக்கிறது. அவர் குறிப்பாக தொழிற்சங்க அலுவலர்கள் அதிர்ச்சி உண்டாக்கக்கூடிய வகையில் தொழிலாள வர்க்கத்தை காட்டிக்கொடுப்பதில் ஈடுபட்டுள்ள நாடுகளின் சிறிய பட்டியலை வழங்குவதுடன் தொடங்குகின்றார். காசாப்பிளாங்காவில் [Casablanca] உள்ள போலீஸ் தலைவர் லூயிசைப்போல ரபேயும் அவரைப்பற்றி அவர் அறிகின்ற ஊழலைக் கொண்டு ஆழமாக அதிர்ச்சி அடைந்தார். அதிகாரத்துவத்திடமிருந்து அவர் பைக்குள் அரசியல் பிரதிபலன்கள் மறைவாய் விழுந்த போதிலும்கூட அவர் அவ்வாறிருந்தார். ஸ்வீடிஸ் தொழிற்சங்க அலுவலர்களின் பாத்திரம் "மானக்கேடானதாக" இருந்துள்ளது என்று ரபே நமக்கு சொல்கின்றார். பெல்ஜிய அதிகாரத்துவத்தின் நடத்தை "வெட்கமானதும் வெளிப்படையானதும்" ஆகும். ஐரிஸ் தலைவர்களும்கூட காட்டிக்கொடுப்பில் "மானக்கேடான பரிதாபகரமான" செயலில் ஈடுபட்டுள்ளனர். பிரிட்டனில் தொழிலாளர்கள் "வலதுசாரித் தலைவர்களின் இயலாமைக்காக பெரும் விலை கொடுத்தனர்" என்று ரபே கூறுகின்றார். அவர் பிரேசில், கிரீஸ் மற்றும் அமெரிக்காவில் சங்கத் தலைவர்களின் சரணாகதியையும்கூட கவலையுடன் குறிப்பிடுகின்றார்.

ஆனால் ரபேயைப் பொறுத்தவரையில் தொழிற்சங்கங்களின் பிரச்சினையானது, பிரதானமாக ஒரு தவறான சித்தாந்தத்தினால்: முதலாளித்துவ சந்தையை ஏற்றுக்கொள்வதினால் அல்லல்படும் பற்றாக்குறையான தலைவர்கள் பற்றிய ஒன்றாகும். அமைப்புகள் அவைகளாகவே அடிப்படையில் ஆரோக்கியமாக இருக்கின்றன என்கிறார். இந்த அகநிலையான மதிப்பீட்டின் அடிப்படையில் ரபே ''சிறிய இடதுசாரி குழுக்களை'' விமர்சிக்கின்றார் அவ்வாறாக அவர் அர்த்தப்படுத்துவது அனைத்துலகக் குழுவின் பகுதிகளையாகும். அவை ட்ரொட்ஸ்கியை அடிப்படையாகக் கொண்டு, சங்கங்களின் காட்டிக்கொடுப்புகள் வளர்ச்சியின் ஒரு அடிப்படையான புறநிலைப்போக்கின் அபிவிருத்தியின் வெளிப்பாடு என்று வலியுறுத்துகின்றன. ரபேயைப் பொருத்தவரையில் இந்த "ஒருதலைப்பட்சமான" அணுகுமுறை, வலதுசாரி தொழிற்சங்கத் தலைவர்கள் "அடிமட்ட, ஒரு விழிப்பூட்டப்பட்ட மற்றும் போராடும் தொழிலாள வர்க்கத்தின் அழுத்தத்தின் கீழ்", "அரசிலிருந்து அவர்களாகவே பிரிந்துசெல்ல நிர்பந்திக்கப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் ஒரு எதிர்ப்பு இயக்கத்திற்கு தலைமைதாங்க" நிர்பந்திக்கப்படுவதற்கான வாய்ப்பை அங்கீகரிக்கத் தவறுகின்றது. எனவே ரபே "பிரிட்டன் மற்றும் ஏனைய பகுதிகளிலும் அடுத்த காலப்பகுதியில் இருக்கும் பிரதானமான போக்கானது, தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை அவர்களது சார்பில் போராடும்படி நிர்ப்பந்திப்பதாக இருக்கும் என எழுதுகின்றார். தொழிலாள வர்க்கத்தின் விதியானது "தொழிற்சங்கங்களின் மறுபிறப்பில்" தங்கியுள்ளது. இதேமாதிரியான ஒரு வாதம் தற்போது செயலிழந்த தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஒரு பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது எவ்வகை இழப்பு வந்தாலும் தொழிற்சங்கங்களின் ஆதிக்கத்தை எதிர்க்கும் புதிய வடிவங்களைக் கொண்ட தொழிலாள வர்க்க அமைப்பின் வளர்ச்சிக்காக எந்த ஒரு போராட்டத்தையும் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ''சங்கத் தலைவர்கள் அரசுடன் படுக்கையில் இருக்கின்றனர் எனவே மாற்றீட்டு அமைப்புகள் கட்டப்பட்டு இணைக்கப்பட வேண்டும் என்று அடிமட்டத்து தொழிலாளரிடமிருந்து எழுந்தமானமான முன்மொழிதலில் தொடங்கும் வாதம் புதிய நிலைமையை கிரகித்துக்கொள்ள முழுமையாக போதாமையாக இருக்கின்றது? பிரிட்டனில் அல்லது வேறுஎங்காவது இருக்கும் சங்க அலுவலர்களின் இரவு சந்திப்புகள் தொடர்பான சிறப்பான தகவல் எதுவும் என்னிடம் இல்லை. ஆனால் அவர்களது சந்தர்ப்பவாதம் ஒரு எளிமையான "மேலெழுந்தவாரியான பிரச்சனையை தவிர" வேறெதுவுமல்ல. சரியாகச் சொன்னால் சங்க அலுவலர்களின் துரோகத்தனமான சேவைகள் ஒரு நாளாந்திர அடிப்படையில் தொழில் முனைவோர் மற்றும் அரசினால் பிரச்சனைக்குள்ளாக்கப்படுகின்றன. மற்றும் இந்த பிரச்சனைக்குள்ளாவோர் அதிருப்தி அடைவது மிகஅரிதாகத்தான் உள்ளது.

தொழிற்சங்கங்களின் இறுதியான பாவ விமோசனத்திற்கான அறிகுறிகள், ஆளும் அதிகாரத்துவங்களின் நடத்தைகள், பண்புகள், புறநிலையான சமூகப்பண்புகள் மற்றும் நிகழ்வுப் போக்குகளின் அகநிலையான வெளிப்பாடுகள் என்று ஒருவர் கிரகித்தால் அப்போது அது மிகவும் சாத்தியமற்றதாகவே தோன்றும். தொழிற்சங்கத் தலைவர்கள் பற்றிய கண்டனங்கள் அனுமதிக்கக்கூடியவை, மற்றும் அவசியமானதும்கூட. ஆனால் அவை தொழிற்சங்க வாதத்தின் தன்மை பற்றிய ஓர் ஆய்விற்கு பிரதியீடாக சேவைசெய்யாது இருக்கும்வரையில் மட்டும்தான்.

ஒரு சிறப்பான சமூக வடிவம்

எனவே இன்று நமது குறிக்கோள் தொழிலாளர் இயக்கத்தின் இந்த சிறப்பான வடிவத்தின் வளர்ச்சியில், குறிப்பிட்ட முக்கியமான கட்டங்கள் பற்றிய ஒரு வரலாற்று மீளாய்வின் அடிப்படையில், தொழிற்சங்க வாதம் பற்றிய ஒரு ஆய்வினைத் தொடங்குவதாகும். நான் ஏற்கனவே கூறியதுபோல சோசலிச இயக்கமானது 150 வருடங்களுக்கு குறைவில்லாத காலப்பகுதியில் ஒரு மிகப் பெருமளவிலான வரலாற்று அனுபவத்தை ஒட்டுமொத்தமாகத் திரட்டியுள்ளது. இந்த அனுபவமானது தொழிற்சங்கவாதம் என்ற பொருள் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் துயரமான நிபுணன் என்று அது கோருவதை நியாயப்படுத்துகின்றது.

தொழிற்சங்கவாதம் என்றுமே ஏற்பட்டிருக்கக்கூடாத ஏதோ ஒருவகையான வரலாற்றுத் தவறினைப்பிரதிநிதித்துவம் செய்கின்றது என்ற முடிவிற்குவர நாம் எண்ணவில்லை. தொழிற்சங்கவாதம் போன்ற ஒரு சர்வவியாபகமான போக்கானது, முதலாளித்துவ சமுதாயத்தின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் ஆழமான வேர்களைக் கொண்டிருக்கவில்லை என்று மறுப்பது ஒருவகையில் முட்டாள்தனமானதாகும். அங்கே நிச்சயமாக தொழிற்சங்கவாதத்திற்கும் வர்க்கப் போராட்டத்திற்கும் இடையில் ஒரு திட்டவட்டமான இணைப்பு உள்ளது. ஆனால் அது தொழிற் சங்கங்களினுள் உள்ள தொழிலாளர்களின் அமைப்பானது அதன் புறநிலையான தூண்டுதலை, தொழில்வழங்குனரின் சடரீதியான நலன்களுக்கும் தொழிலாளர்களின் சடரீதியான நலன்களுக்கும் இடையிலான ஒரு திட்டவட்டமான மோதல் இருப்பதிலிருந்து பெற்றுக்கொள்கிறது என்ற அர்த்தத்தில் மட்டும்தான். இந்த புறநிலையான உண்மையிலிருந்து தொழிற்சங்கங்கள் ஒரு சிறப்பான சமூகரீதியாக நிர்ணயிக்கப்பட்ட ஸ்தாபன வடிவமாக அவற்றினை வர்க்கப் போராட்டத்துடன் அடையாளம் காண அல்லது வர்க்கப் போராட்டத்தை நடத்த முயற்சிக்கின்றன என்று சொல்லிவிடமுடியாது (ஒரு வரலாற்று அர்த்தத்தில் அவை வர்க்கப் போராட்டத்தில் இருப்பதற்காக கடமைப்பட்டுள்ளன) பதிலாக வரலாறானது மிக அதிகமான ஆதாரங்களை வழங்குகின்றது. அதாவது அவை தொழிலாளர்களின் நசுக்குதலுக்கு மிக அதிகமாக அர்ப்பணம் செய்துள்ளன.

வர்க்கப் போராட்டத்தை நசுக்கும் தொழிற்சங்கங்களின் போக்கானது சோசலிச இயக்கத்தை நோக்கிய அவற்றின் அணுகுமுறையில் அதன் மிகவும் ஆழமான வளர்ச்சிகண்ட வெளிப்பாட்டில் காணலாம். முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் கூட்டாளிகள் என தொழிற் சங்கங்களை தவிர்க்க முடியாதவர்களெனவும், அவர்களில் தங்கியிருக்கலாம் என கற்பனை செய்வதைவிட மிகவும் துயரமானது சிறப்பாக சோசலிஸ்டுகளுக்கு இருந்தது கிடையாது. தொழிற்சங்க வாதத்தின் உள்ளார்ந்த வளர்ச்சி தொடருவது சோசலிசத்தின் திசையில் அல்ல, ஆனால் அதற்கு எதிராகவே ஆகும்.

அவற்றின் தோற்றங்களுக்கான நிலைமைகள் இருந்தபோதிலும், அதாவது ஒரு நாட்டிலோ அல்லது இன்னொரு நாட்டிலோ தொழிற்சங்கங்களின் இருப்பிற்கு புரட்சிகரமான சோசலிஸ்டுகளால் வழங்கப்பட்ட தூண்டுதலும் தலைமையும் காரணமாக இருந்த போதிலும்கூட, தொழிற்சங்கங்களின் வளர்ச்சி மற்றும் பலப்படுத்தல் தவிர்க்கமுடியாதபடி சோசலிச பாதுகாப்பு பற்றி மனக்கசப்படைந்து அதிலிருந்து முறித்துக்கொண்டு சுதந்திரமாக செல்வதற்கான உறுதியான முயற்சிகளுக்கும் வழிவகுத்தது. இந்தப்போக்கு பற்றிய ஒரு விளக்கத்தின் மூலமாக மட்டும்தான் தொழிற்சங்கவாதத்தின் சாராம்சமான தன்மை பற்றிய ஒருவிளக்கத்திற்கு வந்தடைவது சாத்தியமானதாகும்.

நாம் தொழிற்சங்க வாதத்தை ஆய்வு செய்யத் தொடங்கும்பொழுது நாம் ஒரு திட்டவட்டமான சமூக வடிவத்தினை கையாளுகின்றோம் என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும். இதிலிருந்து நாம் கருதிக்கொள்வது தொழிற்சங்கம் ஏதோவகையான திட்டமிடப்படாத, தற்செயலான இனம் தெரியாத தனிநபர்களின் கூட்டு அல்ல. மாறாக சரியாகக் கூறினால் ஒரு குறிப்பிட்ட சிறப்பான உற்பத்தி உறவுகளில் வேரூன்றி இருக்கும் வர்க்கங்களில் அணிதிரட்டப்பட்டிருக்கும் மக்களுக்கிடையிலான ஒரு வரலாற்று ரீதியாக பரிணமித்த தொடர்பாகும். வடிவத்தின் தன்மை பிரதிபலிப்பதும் கூட முக்கியமானதாகும். வடிவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் இடையே ஒரு உறவு இருக்கின்றதென நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த உறவுமுறையானது வடிவம்தான் உள்ளடக்கம் என பொதுவாக கருதப்படுகின்றது. இந்தக் கண்ணோட்டத்திலிருந்து சமூக வடிவத்தினை அது தங்கியிருக்கும் உறவுகளின் வெளிப்படையான பிளாஸ்டிக் மற்றும் முடிவற்ற நெகிழ்வான வெளிப்பாடாக சாதாரணமாக கருத்தாக்கம் செய்யமுடியும். ஆனால் சமூகவடிவங்கள் வரலாற்று நிகழ்வுப்போக்கில் திடமான சக்திகளாக மிகவும் ஆழமாக புரிந்துகொள்ளப்படுகின்றன. "உள்ளடக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று கூறுவது அர்த்தப்படுத்தப்படுவது என்னவெனில் வடிவமானது திட்டவட்டமான பண்புகள் மற்றும் நடத்தைகளின் வெளிப்பாடான உள்ளடக்கத்தை தெரிவிக்கின்றது. அதாவது வடிவத்தின் உள்ளடக்கமானது தங்கியிருக்கின்றதுடன் வளர்ச்சியடைகின்றது.

இந்த சுற்றுவழியின் தேவையை தத்துவார்த்த வகையறாக்களுள்ளும் சிந்தனாரீதியில் தெளிவுபடுத்துவது மூலதனத்தின் முதல் பகுதியின் புகழ்பெற்ற பிரிவை குறிப்பிடுவதன் மூலமாக சாத்தியமானதாக இருக்கலாம். அதில் மார்க்ஸ் கேட்கிறார்: "அம் மூலத்திலிருந்து, உழைப்பின் உற்பத்தியின் மறைபொருளுடைய தன்மை அது பண்டங்கள் என்ற வடிவத்தை அதி சீக்கிரமாக பெற்றுக்கொள்கின்ற பொழுதுதான் எழுகின்றது, இது தெளிவாக வடிவத்திலிருந்தேதான்" எழுகின்றது. அதாவது உழைப்பின் ஒரு விளைபொருள் பண்டத்தின் வடிவைப் பெறுகின்றபொழுது --அந்த ஒரு மாற்றம் சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மட்டும்தான் நிகழ்கின்றது-- அது அதற்கும் முன்னதாக கொண்டிராத ஒரு தனித்துவமான பொருள் பற்றுவாத பண்பினைப் பெறுகின்றது. சந்தையில் உற்பத்திப் பொருட்கள் ஒரு தடவை பரிவர்த்தனை செய்யப்படுகின்றபொழுது மக்களுக்கிடையிலான உண்மையான சமூக உறவுகள் பொருட்களுக்கிடையிலான உறவின் தோற்றத்தை எடுக்கின்றன. உழைப்பின் ஒரு உற்பத்திப் பொருள் உழைப்பின் உற்பத்திப் பொருளே. இருப்பினும் அது புதிய உற்பத்தி உறவுகளின் கட்டமைப்பினுள் ஒரு பண்ட வடிவத்தை எடுக்கின்றபொழுது, அது புதிய மற்றும் அசாதாரணமான சமூக உடைமைகளை பெற்றுக் கொள்கிறது.

அதேபோல் தொழிலாளர்களின் ஒரு குழு, தொழிலாளர்களின் குழுதான். இருப்பினும் அந்தக் குழு தொழிற்சங்க வடிவத்தைப் பெறுகின்றபொழுது, அது அந்த வடிவத்தின் மூலமாக புதிய மற்றும் மிகவும் வேறுபட்ட சமூக உடைமைகளைப் பெற்றுக்கொள்கிறது. அதற்கு தொழிலாளர்கள் தவிர்க்க முடியாதபடி கீழ்ப்படுத்தப்படுகின்றனர். இது திட்டவட்டமாக அர்த்தப்படுத்துவது என்ன? தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை மிகவும் வேறுபட்ட சமூகப் பொருளாதார பாத்திரத்தில் பிரதிநிதித்துவம் செய்கின்றன: உழைப்புச்சக்தி என்கிற பண்ட விற்பனையாளராக. உற்பத்தி உறவுகளின் மற்றும் முதலாளித்துவத்தின் சொத்துவடிவங்களின் அடிப்படையில் எழுகின்ற தொழிற்சங்கத்தின் முக்கியமானதேவை என்னவென்றால், இந்தப் பண்டத்திற்கு நிலவுகின்ற சந்தை நிலைமைகளின்கீழ் பெறக்கூடியமிகச் சிறந்த விலையை பெற்றுக் கொடுப்பதாகும்.

உண்மையிலேயே தொழிற்சங்கங்களின் "முக்கியமான தேவை" என்று தத்துவார்த்தப் பதங்களில் நான் விமர்சித்ததற்கும் அவற்றின் உண்மையான --உயிரான நடவடிக்கைகளுக்கும் இடையில் ஒரு உலக வேறுபாடு இருக்கின்றது. நடைமுறை யதார்த்தமானது --தொழிலாளவர்க்கத்தின் மிகவும் உடனடியான நலன்களை ஒவ்வொரு நாளும் விற்பது-- தத்துவார்த்த ரீதியாகக் கருதப்படும் "கருத்து" டன் மிகசிறிய அளவில்தான் தொடர்புடையதாக இருக்கிறது. இந்த வேறுபாடானது தத்துவார்த்த கருத்துருவுடன் முரண்படவில்லை. ஆனால் அதுவே தொழிற்சங்கத்தின் புறநிலையான சமூக-பொருளாதார செயற்பாட்டின்விளைவாக இருக்கிறது. முதலாளித்துவ உற்பத்திஉறவுகளின் அடிப்படையில் நிற்கும் தொழிற்சங்கங்கள், அவற்றின் அந்தத் தன்மையாலேயே வர்க்கப் போராட்டம் தொடர்பாக சாராம்சத்தில் விரோதமான அணுகுமுறையை சேர்த்துக் கொள்ளும்படி நிர்பந்திக்கப்பட்டுள்ளன.

உழைப்புச் சக்தியின் விலையை நிர்ணயம் செய்யும் மற்றும் தொழிலாளர்களிடமிருந்து உபரிமதிப்பை வெளியில் எடுக்கும் பொதுவான நிலைமைகளை தீர்மானம் செய்யும் தொழில் வழங்குனருடன் உடன்பாடுகளை செய்வதை நோக்கி அவற்றின் முயற்சிகளைக் குறிவைக்கும் தொழிற்சங்கங்கள், பேச்சுவார்த்தை செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் நிபந்தனைகளின்படி அவற்றின் உறுப்பினர்களை உழைப்புச்சக்தியை விநியோகம் செய்யவேண்டும் என்பதை உத்தரவாதம் செய்யக் கடமைப்பட்டுள்ளன. கிராம்சி குறிப்பிட்டதுபோல, "சங்கம் சட்டத்தைப் பிரதிநித்துவம் செய்கின்றது மற்றும் அது அதன் உறுப்பினர்கள் அந்தச் சட்டத்தை மதிக்கும்படி ஆக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும்." சட்டத்தைப் பாதுகாப்பது என்பது வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதை அர்த்தப்படுத்துகிறது. அது அவற்றின் இயல்பான தன்மையின் காரணமாக அர்த்தப்படுத்துவது என்னவெனில் தொழிற்சங்கங்கள் இறுதியாக அவை உத்தியோக பூர்வமாக அர்ப்பணம் செய்துள்ள வரம்புக்குட்பட்ட குறிக்கோள்களைக்கூட நிறைவேற்றும் அவற்றின் திறனை பலவீனப்படுத்துகின்றது என்பதாகும். இங்கேதான் முரண்பாடு இருக்கிறது. இதன் மீது தான் தொழிற்சங்கவாதம் புரளுகின்றது.

இன்னொரு விஷயம் வலியுறுத்தப்படவேண்டும்: தொழிற்சங்கங்கள் மற்றும் புரட்சிகர இயக்கத்திற்கு இடையில் மோதல் எழுவது, ஒரு அடிப்படையான அர்த்தத்தில், தொழிற்சங்கத் தலைவர்களின் பிழைகள் மற்றும் தவறுதல்களில் இருந்து அல்ல- ஆயினும் இரண்டுமே அங்கே நிறைவாகக் காணப்படுகின்றது- ஆனால் இம்மோதல் தொழிற்சங்கங்களின் தன்மையிலிருந்தே எழுகின்றது. இந்த மோதலின் மையத்தில் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கும் விஸ்தரிப்பிற்கும் தொழிற்சங்கங்களின் உள்ளார்ந்த எதிர்ப்பு இருக்கின்றது. அந்த எதிர்ப்பானது மிகவும் உறுதியானதாகவும், கசப்பானதாகவும் மற்றும் மரணத்தை உண்டாக்கக்கூடியதாகவும் மாறுவது எப்போதெனில் வர்க்கப் போராட்டமானது முதலாளித்துவத்தின் உற்பத்தி உறவுகளை அதாவது தொழிற்சங்கவாதத்தின் சமூகப்பொருளாதார அடித்தளங்களையே அச்சுறுத்துவதாகத் தோன்றும் கட்டத்திலாகும்.

அந்த எதிர்ப்பானது அது உழைப்புச் சக்தியை விற்பவர் என்ற தொழிலாள வர்க்கத்தின் வரம்புககுட்பட்ட பாத்திரத்தில் அல்ல மாறாக முதலாளித்துவத்தின் உற்பத்தி உறவுகளின் புரட்சிகரமான எதிரிடை என்ற வரலாற்று தகமையினால் தொழிலாள வர்க்கத்தை பிரநிதித்துவம் செய்யும் சோசலிச இயக்கத்தின் மீது செலுத்தப்படுகின்றது.

தொழிற்சங்க வாதத்தின் இந்த இரண்டு முக்கியமான மற்றும் சாராம்சமான அம்சங்களான வர்க்கப் போராட்டத்தை நசுக்க முயற்சிக்கும் அதன் போக்கு மற்றும் சோசலிச இயக்கத்திற்கு அதன் விரோதமும் வரலாற்று பதிவுகளால் தீர்க்கரமாக ஆதாரமளிக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய இரு நாடுகளின் தொழிற்சங்க இயக்க வரலாறானது முக்கியமான படிப்பினைகளையும் உள்ளார்ந்த பார்வைகளையும் தருகின்றது.

இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள்

பொதுவாக இங்கிலாந்து நவீன தொழிற்சங்கவாதத்தின் பெரிய தாயகம் என்று கருதப்பட்டது. அங்கே இந்த அமைப்பு வடிவத்தின் மூலமாக தொழிலாள வர்க்கம் குறிப்பிடத்தக்க வெற்றிகளை அடைந்திருக்கின்றது. உண்மையில் இதுதான் எட்வர்ட் பெர்ன்ஷ்டைன் 1880களின் பிற்பகுதியிலும் 1890களிலும் இங்கிலாந்தில் சிறிது காலம் தங்கியிருந்தபோது தொழிற்சங்கங்கள் அவரின் மீது ஏற்படுத்திய அபிப்பிராயமாகும். பிரிட்டிஷ் தொழிற்சங்கவாத வெற்றிகள் எனக் கருதப்பட்ட இந்த அமைப்புகளின் பொருளாதாரப் போராட்டங்களே தொழிலாள வர்க்கத்தின் முன்னேற்றத்திலும் மற்றும் சோசலிச வழிகளில் சமுதாயத்தை படிப்படியாக மாற்றுவதிலும் தீர்க்கமான காரணியாக இருக்குமே தவிர புரட்சிகரமான இயக்கத்தின் அரசியல் முயற்சிகள் அல்ல என்ற கருத்துக்கள் பெர்ன்ஷ்டைனை வெற்றி கொண்டன.

இன்று குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளினால் சொல்லப்படும் ஒவ்வொன்றுமே ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாக நவீன திருத்தல்வாதத்தின் ஸ்தாபகரினால் (பெர்ன்ஷ்டைன்) எதிர்பார்க்கப்பட்டது. அவர்களின் வாதங்கள் நூறுவருடங்கள் பழையது என்றபோதும் அது அவற்றினை செல்லுபடியாக்காது. இறுதியில் பார்க்கும்போது நான் பயன்படுத்தும் சில வாதங்கள் கூட நூறுவருடங்கள் பழையதாகும் என்பதை நான் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். அதாவது. இவை பெர்ன்ஷ்டைனுக்கு எதிராக ரோசாலுக்சம்பேர்க் பயன்படுத்திய வாதங்களாகும். ஆனால் இவை கடந்த நூற்றாண்டின் போது உறுதிப்படுத்தி காண்பிக்கப்பட்டு சாதகமாக இருக்கின்றன. அதேசமயம் புதிய பெர்ன்ஷ்டைன்வாதிகளின் வாதம் முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. உண்மை என்னவென்றால் பெர்ன்ஷ்டைனின் சமகாலத்திய விமர்சகர்கள், அவர் பிரிட்டிஷ் தொழிற்சங்கவாதத்தின் பொருளாதார சாதனைகளை பெருமளவில் மிகைப்படுத்திய கணிப்பீட்டை கொண்டிருந்தார் என்பதை கவனித்தனர். நிச்சயமாக தொழிற்சங்கவாதத்தின் வளர்ச்சி பிரிட்டிஷ் தொழிற் சங்கவாதத்தின் மகத்தான புரட்சிகர அரசியல் இயக்கமான சார்ட்டிசத்தின் தோல்வியை அடுத்து தொடர்ந்த அரசியல் சீரழிவு மற்றும் அறிவுஜீவி தேக்கத்தின் வெளிப்பாடாகும். தொழிலாளர் இயக்கத்தின் தொழிற்சங்க வாதத்தின் ஆதிக்க பாத்திரத்தின் தோற்றம் 1850களில் தொடங்கியது. சார்ட்டிஷ் (Chartist) இயக்கமானது பிரெஞ்சுப் புரட்சியை அடுத்த பத்தாண்டுகளில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவினர்களை பாதித்த அசாதாரணமான அரசியல் கலாச்சார மற்றும் அறிவுஜீவி, கிளர்ச்சி நிலையின் உச்சத்தை பிரதிநிதித்துவம் செய்தது. 1848-49ல் சார்ட்டிஷத்தின் இறுதி தோல்விக்குப் பின் வருடங்கள் கழித்து அதன் மிகவும் மதிப்புப் பெற்ற தலைவர்களில் ஒருவரான தோமஸ் கூப்பர் இந்தப் பழைய இயக்கத்தின் புரட்சிகரமான உணர்வினை தொழிற் சங்கங்களின் விருத்திசெய்யப்பட்ட மந்தமான, குட்டி முதலாளித்துவ பார்வையுடன் ஒப்பிட்டார்.

அவரது சுயசரிதையில் அவர் எழுதியதாவது: "நமது பழைய சார்ட்டிஷ் காலத்தில் லங்காஷேர் (Lancashire) தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் கந்தல் துணிகளில் இருந்தார்கள். அவர்களில் பலர் அடிக்கடி உணவின்றிக் கூட இருந்தனர். ஆனால் அவர்களது அறிவுஜீவித்தனம் நீங்கள் எங்கு சென்றபோதும் எடுத்துக் காட்டப்பட்டது. நீங்கள் அவர்களை குழுக்களாக காணமுடியும். அரசியல் நீதி எனப்படும் பெரும் கோட்பாட்டினை விவாதித்துக் கொண்டிருப்பார்கள்-ஒவ்வொரு வளர்ந்த பகுத்தறிவு உள்ள மனிதனுக்கும் தேர்தலில் ஒரு வாக்கு இருக்க வேண்டும் அதில் தேர்ந்தெடுக்கப்படும் மனிதர்கள் இயற்றுகின்ற சட்டங்களினால் அவர் ஆளுமை செய்யப்படுவார்: அல்லது அவர்கள் சோசலிச கல்விகளை மதிக்கும் ஆர்வம்மிக்க சச்சரவில் ஈடுபட்டிருப்பார்கள். இப்பொழுது நீங்கள் உடையணிந்த மனிதர்கள் அவர்களது பாக்கெட்டுகளில் கைகளை விட்ட வண்ணம் கூட்டுறவுகளை கட்டுதல், அவற்றிலுள்ள அவர்களது பங்குகள் பற்றி பேசுவதை நீங்கள் பார்க்க முடியும்.ее3

தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து ஒரு புதிய மாதிரியிலான தொழிற் தலைவர் தோன்றினார். பழைய புரட்சிகரமான சார்ட்டிஷ்டுகளின் இடத்தை நடுத்தர வர்க்க மரியாதையை விரும்பும் பயந்தாங்கொள்ளி கனவான்களும் வர்க்க சமரசம் என்ற கொள்கைளை போதித்வர்களும் எடுத்துக்கொண்டனர். சார்டிஷம் பற்றி ஒரு சோசலிச வரலாற்று ஆசிரியர் தியோடர் ரொத்ஸ்ரைன் (Theodore Rothstein) எழுதியவாறு: ''ஒரு சில வருடங்களுக்கு முன்னதாக முதலாளித்துவ சமுதாயத்தின் அத்திவாரங்களையே ஆட்டம் காணவைத்த பெரும் திறமைமிக்க, பெரும் உணர்வுகளைக் கொண்ட, மற்றும் ஆழமான புலமை நிரம்பிய மனிதர்களை லட்சக்கணக்கான ஆலைத் தொழிலாளர்கள் பின்பற்றினார்கள். ஆனால் அவர்கள் இப்பொழுது தனிமையானவர்களாக இருக்கின்றனர்; மறைவில் நகர்ந்து செல்கின்றனர்; பெரும்பான்மையினரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டனர். தெரிவு செய்யப்பட்ட சில சிறிய குழுக்களினால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட்னர். அவர்களது அறிவுஜீவித்தனம், திறமை மற்றும் பண்பு இவற்றில் ஒரு சிறிதளவினைக் கூட கொண்டிருக்காத புதிய மனிதர்கள், அவர்களது இடத்தை எடுத்துக் கொண்டனர். அதேவேளை அவர்கள் லட்சக்கணக்கான தொழிலாளர்களை பைசாக்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று மேலோட்டமான நற்செய்தி மூலம் கவர்ந்தார்கள். வர்க்க சுதந்திரத்திற்கு விலை கொடுத்தாவது அந்த விஷயத்தில் தொழில் வழங்குனர்களுடன் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டிய அவசியம் பற்றி கூறினார்கள்.4

தொழிற்சங்கவாதத்தைப் பொறுத்தவரை ரொத்ஸ்ரைன் பின்வரும் மதிப்பீட்டினை வழங்கினார். "இந்த மனப்பார்வையின் வேறுபடுத்திக் காட்டக் கூடிய தன்மை என்னவென்றால், முதலாளித்துவ சமுதாயத்தை ஏற்றுக் கொள்வதாகும். அதனை ஏற்றுக் கொள்வது அரசியல் நடவடிக்கையை நிராகரிப்பதனூடாக அதன் வெளிப்பட்டதுடன், தொழில் வழங்குனருக்கும் தொழிலாள வர்க்கத்துக்கும் இருக்கின்றவாறான சுமுகமான நலன்களை போதிக்கும் வறட்டு அரசியல் பொருளாதாரத்தை அங்கீகரிப்பதில் கண்டது.5

தொழிற்சங்கவாதத்துக்கு வக்காலத்து வாங்கியோர் பொருளாதார போராட்டத்தினால் வழங்கப்பட்ட மிகவும் நம்பிக்கை அளிக்கும் வாய்ப்புகளின் மீது அதன் சக்தியை ஒருமுனைப்படுத்த தேவையானதால் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து பின் வாங்கியது அவசியமானது என வாதிட்டார்கள். இத் தத்துவமானது தொழிற்சங்கவாத்தின் தோற்றம் பொருளாதார போராட்டங்களின் அதிகரித்தலுடன் சேர்ந்து வரவில்லை மாறாக தொழிலாளவர்க்கத்தின் புதிய தலைவர்களினால் அவை பொதுவாக நிராகரிக்கப்பட்டதால் என்ற உண்மையால் பொய்ப்பிக்கப்பட்டது. ஆனால் பதிலாக இங்கிலாந்தில் தொழிற்சங்கவாதத்தின் உச்சநாட்களாக இருந்த 1870 தொடக்கத்திற்கும் 1890களின் நடுப்பகுதிக்கும் இடையில் தொழிலாளர்களின் சம்பளங்கள் தேக்க நிலையை அடைந்தன. இந்தக் காலத்தின்போது மாவு, உருளைக்கிழங்கு, ரொட்டி, இறைச்சி, தேயிலை, சர்க்கரை மற்றும் வெண்ணெய் போன்ற முக்கியமான அடிப்படை சரக்குகளின் விலைகளில் ஒரு மிகப்பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதால்தான் தொழிற்சங்கவாதம் இக்காலத்தில் மதிப்பிழக்காது போனதை விளக்க முடியும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க பத்தாண்டுகளில், அப்போது தொழிலாளர்கள் மத்தியில் புரட்சிகரமான உணர்வுகள் பரந்த அளவில் இருந்தபோது, ஆங்கிலேய முதலாளித்துவ வர்க்கம் ஒன்றிணைவை நோக்கிய அனைத்து போக்குகளையும் கடுமையாக எதிர்த்தது. ஆனால் அந்த நூற்றாண்டின் இறுதியில் முதலாளித்துவ ஸ்திரத்திற்கு தொழிற்சங்கம் வழங்கிய பெரும் சேவையை, சிறப்பாக தொழிலாள வர்க்கத்தினுள் சோசலிச போக்குகள் மீண்டும் தோன்றுவதற்கு ஒரு தடையாக இருந்ததை முதலாளித்துவ வர்க்கம் மனதார ஏற்றுக் கொள்ளத் தொடங்கியது. ஜேர்மன் முதலாளித்துவ பொருளியல் நிபுணர் பிரின்டானோ (Brentano) எழுதியவாறு: ееஇங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் தோல்வி அடையுமாயின் அது எவ்வகையிலும் தொழில் வழங்குனரின் வெற்றியைக்கருதாது. அது உலகம் முழுவதும் புரட்சிகரமான போக்கு பலப்படுத்தப்படுவதை அர்த்தப்படுத்தும். எந்த அதிமுக்கியத்துவம் இல்லாத ஒரு புரட்சிகரமான தொழிற்கட்சி இல்லாதது பற்றி இது வரையில் செருக்கு கொண்ட இங்கிலாந்து இது முதற் கொண்டு இந்த விடயத்தில் ஐரோப்பியக் கண்டத்திலேயே போட்டியாக நிற்கும்ее.6

மார்க்சும் ஏங்கெல்சும் தொழிற்சங்கவாதம் தோன்றிய காலகட்டத்தில் இங்கிலாந்தில் புரட்சிகரமான நாடுகடத்தப்பட்டவர்களாக வாழ்ந்தனர். அவர்கள் இங்கிலாந்துக்கு வருவதற்கு முன்னதாகவே தொழிற்சங்க வாதத்தின் புறநிலையான முக்கியத்துவத்தை, தொழில் வழங்குனர்கள் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் பதில் என்பதாக அறிந்து கொண்டனர். தொழிற்சங்கங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் இவை இரண்டின் பிரயோகத்தையும்-அதாவது அவர்களின் முயற்சிகளின் மூலமாக அடையப்பெற்ற சம்பள உயர்வுகள் விலை உயர்வுகளுக்கு மட்டும் தான் வழி வகுத்தது என்ற அடிப்படையில் -நிராகரித்த குட்டி முதலாளித்துவ தத்துவார்த்த வாதிகளான பியர்-ஜோசப் புருதோனுக்கு (Pierre-Joseph Proudhon, எதிராக மார்க்ஸ் தொழிலாளவர்க்கம் அதன் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் அவையிரண்டுமே அவசியமான உள்கூறுகளாக அமைந்தன என வலியுறுத்தினார்.

புருதோனின் கருத்துக்கள் பற்றிய அவரது விமர்சனத்தில் மார்க்ஸ் சரியாக இருந்தார். இங்கு மனதில் வைத்திருக்கவேண்டியது அவசியமானது என்னவென்றால் இந்த ஆரம்பகால எழுத்துக்கள் தொழிற்சங்கங்கள் இன்னும் அவற்றின் கெட்டியான மேலுடை போற்றிய ஆடைகள் அணிந்து இருந்த சமயத்தில் படைக்கப்பட்டவையாகும். இந்தப் புதிய அமைப்பு வடிவங்களுடன் தொழிலாள வர்க்க அனுபவம் மிகத் தீவிரமாக வரம்புக் குட்பட்டதாகும். அந்த சமயத்தில் தொழிற்சங்கங்கள் புரட்சிகரமான போராட்டத்தின் ஆற்றல் வாய்ந்த கருவிகளாக இன்னும் பரிணமிக்க முடியும் அல்லது குறைந்தபட்சம் அப்படியான கருவிகளின் நேரடி முன்னோடிகளாக இருப்பது சாத்தியம் என்பதை முன்கூட்டியே மறுத்துவிட முடியாது இந்த நம்பிக்கையானது 1866ல் மார்க்சின் கவனத்தில் வெளிப்படுத்தப்பட்டது. அதாவது ееநடுத்தர வர்க்கத்துக்கு மத்திய காலத்தில் நகராட்சிகள் கம்யூன்கள்ее7 ஆற்றிய அதே பாத்திரத்தினை தொழிலாள வர்க்கத்துக்கு தொழிற்சங்கங்கள் "அமைப்பின் மையங்களாக பாத்திரம் அமைத்தன.ее

அப்போது கூட, எவ்வாறாயினும் மார்க்ஸ் அக்கறை கொண்டிருந்தார். அதாவது தொழிற்சங்கங்கள் கூலி அடிமைத்தனம் என்ற அமைப்பிற்கு எதிராக செயலாற்றும் அவற்றின் சக்தியை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இந்தத் திசையில் தான் அவை பரிணமிக்க வேண்டி இருந்தது.

அவற்றினுடைய ஆரம்ப தேவைகள் ஒரு புறமிருக்க, அவை இப்போது தொழிலாள வர்க்கத்தின் அமைப்பு மையங்களாக அதன் முழுமையான விடுதலையின் பரந்த நலனில் அக்கறை கொண்டு செயற்பட கற்றுக் கொள்ள வேண்டும். அவை அந்த திசையில் செல்லும் ஒவ்வொரு சமூக மற்றும் அரசியல் இயக்கத்திற்கு உதவி செய்யவேண்டும். அவற்றிலேயே கரிசனை கொண்டு, முழு தொழிலாள வர்க்கத்தின் தலைவர்களாகவும் பிரதிநிதிகளாகவும் அணிகளில் சமுதாயத்தைச் சாராத மனிதர்களையும் சேர்த்துக் கொள்ளத் தவறக்கூடாது. அவை மிகவும் ஜாக்கிரதையாக மிக மோசமான கூலி பெறும் துறைகளைச் சேர்ந்த அதாவது விவசாயத் தொழிலாளர்கள் போன்றவர்களை விதிவிலக்கான நிலைமைகளினால் சக்தியிழந்து போயிருப்பவர்களின் நலன்களை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவை பெருமளவில் அவற்றின் முயற்சிகளின் மூலமாக தாம் குறுகிய மற்றும் சுயநலமாக இருப்பதற்குப் பதிலாக மிகவும் ஒடுக்கப்படும் கோடிக்கணக்கானவர்களின் விடுதலையையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது என்பதை உலகிற்கு நம்பவைக்க வேண்டும்''.

மார்க்ஸ், தொழிற்சங்கங்களுக்கு ஒரு சோசலிச நோக்கு நிலையை கூற முயற்சித்தார். அவர் தொழிற்சங்கங்களினால் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் போராட்டங்களின் முக்கியத்துவங்களை ееஅவர்களாகவே மிகைப்படுத்த வேண்டாம் என்று எச்சரித்தார். அதிகப்பட்சமாக தொழிற்சங்கங்கள் விளைவுகளுக்கு எதிராக போராடுகின்றன. ஆனால் அந்த விளைவுகளுக்கான காரணிகளுடன் அல்ல. அதாவது அவை கீழ் நோக்கி செல்லுகின்ற இயக்கத்தை தாமதப்படுத்துகின்றன. அதாவது அவை அப்போதைக்கு நோயை தணிக்கின்றவற்றை பிரயோகிக்கின்றன, நோயைக் குணப்படுத்தவில்லை. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் துயரங்களுக்கு காரணமாக இருக்கும் அமைப்பிற்கு எதிரான ஒரு போராட்டத்தை மேற்கொள்வது அவசியமானதாகும் மற்றும் அதன் காரணமாக மார்க்ஸ் தொழிற்சங்கங்கள் அவற்றின் பழமைவாத சுலோகமான ஒரு நியாயமான நாள் வேலைக்கு ஒரு நியாயமான நாட்கூலி என்பதை கைவிட்டு அதனை புரட்சிகரமான கோரிக்கையாக கூலி அமைப்பை ஒழித்தல் என்பதாக பிரதியீடு செய்ய வேண்டும். என்று முன்மொழிந்தார்.

ஆனால் மார்க்சின் அறிவுரை குறைந்த தாக்கத்தைத்தான் ஏற்படுத்தியது, மற்றும் 1870களின் பிற்பகுதியில் தொழிற்சங்கவாதம் என்ற விஷயத்தின் மீது மார்க்ஸ், ஏங்கல்சின் நுட்பமான கவனங்கள் மேலும் அதிகமான விமர்சனதன்மையைப் பெற்றன. இப்போது முதலாளித்துவ பொருளியல் நிபுணர்கள் தொழிற்சங்கங்களை நோக்கி பெரும் அனுதாபம் தெரிவிக்கின்றனர். மார்க்சும் ஏங்கல்சும் அவர்களின் முன்னைய ஆதரவுகருத்துக்களை தகுதிப்படுத்த மிகவும் கஷ்டப்பட்டனர். அவர்கள் லூஜியோ பிரன்டேனோ போன்ற முதலாளித்துவ சிந்தனையாளர்களிடமிருந்து அவர்களின் பார்வைகளை வேறுபடுத்தினர். மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் கூறியபடி, தொழிற்சங்கங்கள் மீதான அவரது ஆர்வம் கூலி அடிமைகளை மனநிறைவுடைய கூலி அடிமைகளாக மாற்றமுயலும் அவரது விருப்பத்தினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

1879ல் ஏங்கல்சின் படைப்புக்களில் தொழிற்சங்கவாதம் பற்றிய தலைப்புப் பொருளில் வெறுப்பு தொனியொன்று தவறின்றி இருப்பதை கண்டுபிடிப்பது சாத்தியமானதாகும். தொழிற்சங்கங்கள் ''தொழிலாள வர்க்கம் ஒரு வர்க்கமாக எந்த பொதுவான செயலிலும் பங்குகொள்வது தடைசெய்யவதை'' அமுல்படுத்தும் அமைப்பு ரீதியான விதிமுறைகளை அறிமுகப்படுத்தி அரசியல் நடவடிக்கையை தடை செய்ததை அவர் கண்டு கொண்டார். இதன் மூலமாக, 17ஜூன்,1879 தேதியிடப்பட்ட பெர்ன்ஷ்டைனுக்கு எழுதிய கடிதத்தில் ஏங்கல்ஸ் தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை ஒரு முட்டுச் சந்துக்குள் வழிநடத்தி சென்று விட்டன. ееஇந்த உண்மையை மறைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கக் கூடாது. அதாவது இந்தக் கணத்தில் ஒரு நிஜமான தொழிலாளர் இயக்கம் கண்ட ரீதியான அர்த்தத்தில் இங்கே இல்லாமல் இருக்கின்றது. மற்றும் அதிலிருந்து இங்கே தொழிற்சங்கங்களின் செயற்பாடுகள் குறித்த எந்த ஒரு அறிக்கைகளையும் இப்போதைக்கு நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் பெரும்பாலானவற்றை தவறவிடுவீர்கள் என்று நான் நம்பவில்லை. என முறையீடு செய்தார்.11

ஆறு வருடங்கள் கழித்து எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் அவர் 1885 இங்கிலாந்தை 1845டன் ஒப்பிட்டார். ஏங்கல்ஸ் தொழிற்சங்கங்கள் வகித்த பழமைவாத பாத்திரம் தொடர்பான அவரது இகழ்ச்சியை மூடி மறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஒரு மேல்தட்டினை உருவாக்கி தமது சௌகரியமான நிலையை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக தொழில் வழங்குவோர்களுடன் நட்பு ரீதியான உறவுகளை விருத்திசெய்தன. அதாவது தொழிற்சங்கவாதிகள் ееகுறிப்பாக எந்த ஒரு உணர்வுபூர்வமான முதலாளியுடன் மற்றும் பொதுவாக முழு முதலாளித்துவ வர்க்கத்துடனும் நடந்து கொள்வதற்கு உண்மையிலேயே இன்றைய நாட்களில் மிகவும் இனிய மனிதர்கள்ее என எங்கெல்ஸ் புண்படுத்துகின்ற வசைச் சொல்லுடன் எழுதினார்.12

ஆனால் தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்க பெரும் திரளினரை முழுமையாக புறக்கணித்து விட்டனர். இத்திரளினருக்கு அவர்கள் இன்று வாழும் துயரமான மற்றும் பாதுகாப்பற்ற நிலையானது, தாழ்ந்தபடியில் இல்லையென்றால் என்றுமில்லாத அளவு மிகவும் தாழ்நிலையில் இருக்கின்றது. லண்டனில் ஈஸ்ட்என்ட் என்றும் பரவிவருகின்ற தேங்கி இருக்கும் துயரம், மற்றும் தனிமையில் விடப்பட்ட நிலையின் போது மகிழ்வற்றதாகவும், வேலையின்றி இருக்கும் பொழுது பட்டினியாகவும், வேலையில் இருக்கும் பொழுது சரீர ரீதியான மற்றும் மனோவியல் சார்பான அவமதிப்பாகவும் இருக்கிறது.13

ஏங்கல்சின் நம்பிக்கைகள் 1880களின் இறுதியில் மிகவும் சுரண்டப்படுகின்ற தொழிலாள வர்க்கத்தின் பிரிவுகளின் மத்தியில் ஒரு புதிய மற்றும் போர்க்குணம் கொண்ட இயக்கத்தின் வளர்ச்சியினால் தூண்டப்பட்டன. இந்தப் புதிய இயக்கத்தில் எலினர் மார்க்ஸ் உட்பட சோசலிஸ்ட்டுகள் செயலூக்கத்துடன் இருந்தனர். ஏங்கல்ஸ் இப்படியான வளர்ச்சிகளுக்கு ஆர்வத்துடன் பதிலளித்தார் மற்றும் பெரும் திருப்தியுடன் கவனித்துக் கொண்டார். அதாவது ееதேர்ச்சியற்ற ஆண்களையும், பெண்களையும் கொண்ட இப்படியான தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் அதிகாரத்துவத் தட்டைக் கொண்ட முன்னைய அமைப்புகளிலிருந்து முழுமையாக வேறுபட்டதாக இருக்கிறது. மற்றும் அதே பழையவாத வழிகளில் விழ முடியாது. அவை முற்றிலும் வேறுபட்ட நிலைமைகளின் ஒழுங்கமைக்கப்பட்ட சோசலிஸ்டுகள் மற்றும் சோசலிச கிளர்ச்சியாளர்களுமான ஆண்களாலும், பெண்களாலும் தலைமைதாங்கப்படுகின்றது. அவர்களில் நான் இங்கே ஒரு உண்மையான இயக்கத்தின் ஆரம்பத்தினைப் பார்க்கின்றேன்ее என குறிப்பிட்டார்.14

ஆனால் ஏங்கல்சின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை. இந்த ееபுதியее சங்கங்கள் பழையனவற்றைப் போலவே அதே பழமைவாத போக்குக்களை வெளிப்படுத்தத் தொடங்குவதற்கு அதிக காலம் எடுக்கவில்லை. இது தொழிற்சங்கங்கள் பற்றிய விமர்சனரீதியான ஆய்வில் நாம் முக்கியமானதென்று கருதும் தத்துவார்த்த கருத்தின் நிரூபணமாகும். அதாவது இந்த அமைப்புகளின் அடிப்படையான தன்மை அவற்றினுள் அணிதிரட்டப்பட்டுள்ள குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் சமூக நிலையாலோ அல்லது அந்தஸ்தினாலோ நிர்ணயிக்கப்படவில்லை. இப்படியான காரணிகள் அதிகபட்சமாக தொழிற்சங்க கொள்கையின் குறிப்பிட்ட இரண்டாந்தர அம்சங்களை மட்டும் தான் செல்வாக்கு செலுத்த முடியும். இது ஒருவேளை சில சங்கங்களை சராசரியானவற்றை விட ஏறக்குறைய போர்குணம் உடையதாக்க முடியும். இன்னும் இறுதி ஆய்வில் பார்த்தால், தொழிற்சங்க வடிவமானது முதலாளித்துவத்தின் சமூக மற்றும் உற்பத்தி உறவுகளில் இருந்து எடுக்கப்பட்ட கட்டமைப்பாகவும் அதில் வேர் ஊன்றியும் இருக்கிறது. மற்றும் நாம் கூடுதலாக சொன்னால் தேசிய-அரசு கட்டமைப்பானது அதன் ееதொழிலாளவர்க்க உறுப்பினரின் உள்ளடக்கத்தின் திசையை தீர்மானம் செய்வதில் தீர்க்கமான செல்வாக்கை செலுத்துகின்றது''.

சமூக ஜனநாயக கட்சியும் ஜேர்மன் தொழிற்சங்கங்களும்

இக்கண்டத்திலே, சிறப்பாக ஜேர்மனியில் தொழிற்சங்கவாதத்துடன் இப்படியான தொடக்க அனுபவங்களிலிருந்து தத்துவார்த்த படிப்பினைகள் எடுக்கப்பட்டன. ஜேர்மன் சோசலிஸ்டுகள் ஆங்கிலேய தொழிற்சங்கங்களை சோசலிசத்தின் முன்னோடிகள் என்று அல்லாமல் தொழிலாள வர்க்கத்தின் மீது முதாலாளித்துவத்தின் அரசியல் மற்றும் சித்தாந்த ஆதிக்கத்தின் இயக்க ரீதியான வெளிப்பாடு என்றவாறாக பார்த்தனர். இந்த விமர்சனமான அணுகுமுறை தத்துவார்த்த உள்பார்வைகளின் அடிப்படையில் இருந்து மட்டும் எழவில்லை. மாறாக தொழிலாளர் இயக்கத்தினுள், மார்க்சிச அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையினுள் ஒரு மிகவும் மாறுபட்ட சக்திகளுக்கிடையலான உறவையும் கூட பிரதிபலித்தது. ஜேர்மனியில் ஒரு வெகுவான தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சிக்கான தூண்டுதல் தொழிற்சங்கங்களினால் அல்ல மாறாக சமூக ஜனநாயகக் கட்சியினால் வழங்கப்ட்டது. அது 1878 மற்றும் 1890க்கும் இடையில் பிஸ்மார்க்கின் சோசலிச எதிர்ப்பு சட்டங்களின் காலத்தின் தொழிலாள வர்க்கத்தின் தலைமையாக அதன் அரசியல் செல்வாக்கை நிலைநாட்டுவதில் வெற்றி கண்டது. சமூக ஜனநாயகக் கட்சி [SPD] யின் முன்முயற்சியினால் தான் சுதந்திர தொழிற்சங்கங்கள் என்று அழைக்கப்பட்டவை உருவாக்கப்பட்டன. அவை பிரதானமாக சோசலிச இயக்கத்துக்கு ஆள்சேர்க்கும் முகவர்களாக சேவை செய்தன.

தொழிற்சங்கங்களின் செல்வாக்கு அவற்றின் தலைமைக்காரியாளரையும் மற்றும் அரசியல் உள்ப்பார்வையையும் பெற்றுக் கொண்ட SPD யின் உதவியுடன் 1890களில் விரிவடையத் தொடங்கியது. ஆனால் நீடித்த தொழிற்துறையின் மந்த நிலையின் தாமதப்படுத்தும் தாக்கங்கள் அவற்றின் உறுப்பினர் தொகையை கீழேயே வைத்திருந்தது. மற்றும் 1893 பிந்திய காலத்தில் சமூக ஜனநாயக வாக்காளர்களுக்கும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் இடையிலான விகிதாசாரமானது 8க்கு 1ஆக இருந்தது. இன்னும் SPD யினுள் தொழிலாள வர்க்கத்தினுள் செல்வாக்கு செலுத்த கட்சியுடன் போட்டி போட்டு முயற்சிக்கலாம் என்ற கவலை வெளிப்படுத்தப்பட்டது. ஆனால் இதனை தொழிற்சங்கங்கள் கடுமையாக மறுத்தன. அதன் தலைவரான கார்ல் லெக்யன் அவற்றினை ''கட்சியின் ஆள் சேர்க்கும் பள்ளிகள் என்று'' 1893ல் கொலோன் [Cologne] கட்சி மாநாட்டில் விவரித்தார்.

எவ்வாறாயினும் 1895ல் தொழிற்துறை மந்தநிலை முடிவுக்கு வந்ததும் ஜேர்மன் தொழிற்சங்கங்கள் வேகமாக வளர்ச்சியடைய தொடங்கின. சக்திகளுக்கிடையிலான உறவுமாற்றங்கள் தொழிற்சங்கங்களுக்கும் கட்சிக்கும் இடையிலான பதட்டங்களை அதிகப்படுத்தியது. 1900களில் தொழிற்சங்கங்களின் உறுப்பினர் எண்ணிக்கை 6,00,000 மாக வளர்ச்சியடைந்தது. 4 வருடங்களுக்குப் பிறகு அந்த எண்ணிக்கை 10,00,000 ஆக உயர்ந்தது. SPD வாக்காளர்களுக்கும், தொழிற்சங்க உறுப்பினர்களுக்குமிடையிலான விகிதாசாரம் வீழ்ச்சியடைந்த பொழுது SPD ஆனது தொழிற்சங்கவாதிகளின் வாக்கில் சார்ந்திருப்பது கணிசமான அளவு அதிகரித்தது.

பெர்ன்ஸ்டைன் முதல் முறையாக சீர்திருத்தல்வாத பதாகையை விரித்த பொழுது அதற்கு எந்த அரசியல் ஆதரவும் வழங்க தொழிற்சங்கத் தலைவர்கள் அவர்களாகவே தயக்கம் காட்டிய போதிலும், கட்சி வட்டங்களினுள் அவரது தத்துவங்கள் ஜேர்மன் சோசலிச இயக்கத்தை ஆங்கிலேய வழிகளில் மறுசீரமைக்கும் நோக்கிலும், சீர்த்திருத்தவாத தொழிற்சங்கங்கள் தொழிலாளர் இயக்கத்தின் அச்சாணியாக இருந்து வந்த புரட்சிகரமான அரசியல் கட்சிகளை பிரதியீடு செய்யும் என்பதை நோக்கமாக கொண்டிருந்தமை பரந்தளவில் புரிந்துகொள்ளப்பட்டிருந்தது.

பெர்ன்ஸ்டைனை எதிர்த்து நிற்கையில், சமூக ஜனநாயகத்தின் பிரதான தத்துவவாதிகள் பெர்ன்ஸ்டைன் தொழிற்சங்கங்களை சோசலிச இயக்கத்தின் இன்றியமையாத அரணாகக் காண்பிக்கும் முயற்சி தொடர்பாக குறிப்பாக கவனம் செலுத்தினார்கள். அதில் உண்மையிலேயே ரோசாலுக்சம்பேர்க்தான் இந்தப் போராட்டத்தில் தலைமை வகித்தார். இந்த விசயத்தில் அவரது மிகப் பிரதானமான படைப்பு சீர்த்திருத்தமா அல்லது புரட்சியா [Reform or Revolution] என்பதாகும். அங்கே அவர் முதலாளித்துவத்தின் சுரண்டும் நுட்பங்களை தொழிற்சங்சங்களின் முயற்சிகள் சக்திமிக்கதாக எதிர் கொண்டதாகவும், அவை எவ்வாறாயினும் படிப்படியாக சமூகத்தை சோசலிச மயப்படுத்த வழிவகுக்கும் என்றும் கூறும் பெர்ன்ஷ்டைனின் கோரிக்கைகளை தூள் தூளாக்கினார். அது முழுமையாக உண்மை அற்றது என்று லுக்சம்பேர்க் வலியுறுத்தினார். அதாவது தொழிற்சங்கவாதம் வர்க்க சுரண்டலை ஒழிக்க வழிவகுக்கவில்லை. இன்னும் சரியாக சொல்லுமிடத்து, அதில் முதலாளித்துவத்தின் சுரண்டும் அமைப்பைக் கொண்ட கட்டமைப்பினுள் பாட்டாளி வர்க்கம் கூலிகள் என்ற வடிவத்தில் சந்தையை அனுமதிக்கக் கூடிய சிறந்த விலையைப் பெற்றுக் கொள்ள உறுதி செய்ய முயற்சித்தது.

எவ்வாறாயினும் தொழிலாளர்களின் கூலிகளை உயர்த்துதல் என்ற வகையில் தொழிற்சங்கங்களின் முயற்சியினால் சாதிக்கக் கூடியவை சந்தையினது ஏற்றத்தாழ்வுகளினாலும் மற்றும் முதலாளித்துவ விரிவாக்கத்தின் பொதுவான செயல்பாட்டாலும் மட்டுப்படுத்தப்பட்டது. முதலாளித்துவ சமுதாயமானது தொழிற்சங்களின் வெற்றிகரமான வளர்ச்சியைக் குறிக்கும் ஒரு சகாப்தத்தை நோக்கி அல்ல, ஆனால் இன்னும் சரியாக சொல்லுமிடத்து தொழிற்சங்கங்களின் கஷ்டங்கள் அதிகரிக்கும் ஒரு காலத்தை நோக்கித்தான் இயங்கிச் செல்கின்றன என்று அவர் எச்சரித்தார். இவ்வாறாக சங்கங்கள் அடைந்த தற்காலிகப் பலாபலன்கள் எதுவாக இருந்தாலும், அவற்றின் வேலை முதலாளித்துவ அமைப்பு நிர்ணயித்த எல்லைகளினுள் வேரூன்றி இருக்கின்ற வரையில் அவை "ஓய்வற்ற வீணான உழைப்பில்ее ஈடுபட்டுள்ளன என்றார். இந்த சொல்லம்பு உருவகத்தைப் பயன்படுத்தியதற்காக ரோசாலுக்சம்பேர்க்கை தொழிற்சங்கத் தலைவர்கள் ஒருபோதும் மன்னிக்கவில்லை. அது தொழிற்சங்கங்களின் நடவடிக்கை பற்றி ஒரு தாக்கம் மிகுந்த துல்லியமான கூர்மையான மதிப்பீட்டை வழங்கியது.

இந்தச் சுருக்கம் முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாள வர்க்கத்தின் சுரண்டலை குறைப்பதை விட மேலானது எதையும் கூட, தற்காலிகமாகத் தானும்கூட செய்வதற்கு தொழிற்சங்கங்களின் இயலாமைக்கான புறநிலையான காரணங்கள் பற்றிய லுக்சம்பேர்க்கின் ஆய்விற்கு அரிதாகத்தான் நீதி வழங்குகிறது. நான் பெர்ன்ஷ்டைன் மீதான அவரது விமர்சனத்தின் மற்றொரு அம்சம் பற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன். அது இன்றைய நிலைமைக்கு சிறப்பாக தொடர்புடையதாகும். அதாவது தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளில் உள்ளார்ந்த ரீதியாக அல்லது அர்த்தப்படுத்தப்படக்கூடியதாக: சோசலிசம் என்பது எதுவுமே கிடையாது அல்லது அவற்றின் வேலை சோசலிச இலட்சியத்தின் வெற்றிக்கு முக்கியமானது என்பதையும் அவர் மறுத்தார். தொழிற்சங்கங்கள் சோசலிஸ்ட்டுகளினால் முன்னெடுக்கப்படும் வரை அவை புரட்சிகரமான இயக்கத்திற்கு முக்கியமான சேவை செய்யமுடியும் என்பதை லுக்சம்பர்க் மறுக்கவில்லை. உண்மையிலேயே அவரது விமர்சனத்தின் மூலமாக அப்படியான வளர்ச்சிக்கு பணியாற்ற முடியும் என்று அவர் நம்பினார். (இது வேறொரு விசயம். அதாவது அந்த இலக்கினை நிறைவேற்ற முடியுமா என்பது பற்றி நாம் பிறகு பார்ப்போம்) ஆனால் அவர் தொழிற்சங்கவாதம் என்பதனுள் இயல்பாகவே சோசலிச போக்குகள் இருக்கின்றது என்ற எந்த ஒரு பிரமைக்கும் எதிராக எச்சரிக்கை செய்தார்.

லுக்சம்சம்பேர்க் எழுதியதாவது: "திட்டவட்டமாக ஆங்கிலேய தொழிற்சங்கங்கள்தான் அலட்சியம், சரியான குறுகிய மனப்பான்மையின் எடுத்துக்காட்டாக இருப்பதுடன், தொழிற்சங்க இயக்கமானது அவையாவும் முழுமையாக சோசலிசம் அற்று இருக்கின்றது என்ற உண்மைக்கு சாட்சியமாக உள்ளது. உண்மையிலேயே அது குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் சோசலிச நனவின் விரிவாக்கத்திற்கு ஒரு நேரிடையான தடையாக இருக்கமுடியும், அதே போல எதிரிடையான விஷயத்தில் சோசலிச நனவானது தூய்மையான தொழிற்சங்க வெற்றிகளின் சாதனைக்கு ஒரு தடையாக இருக்க முடியும்.ее

இந்தப் பந்தியானது தொழிலாளர் இயக்கத்தை ஒரு தொழிற்சங்கவாத வடிவத்தில் அல்லாது வேறு எந்த விதமாகவும் பார்க்க முடியாத, தொழிற்சங்கங்களுக்கும் அவற்றின் அதிகாரத்துவங்களுக்கும் தாராளமாக அவர்களாகவே அடிபணியும் அனைவருக்கும் ஒரு ஆச்சரியமான கண்டனமாக இருக்கின்றது. அது மிகவும் தெளிவுப்படுத்தியது போல அங்கே தொழிற்சங்கவாதத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையே இயல்பான மற்றும் முறிக்க முடியாத இணைப்புகள் எதுவும் கிடையாது. அவை அவசியமாக ஒரே பொதுவான இறுதி இடத்தை நோக்கி இணையான விசை வீச்சு வளைவுகளில் இயங்கிச் செல்லவில்லை. சரியாகச் சொல்லுமிடத்து, தொழிற்சங்கவாதமானது அதன் இயற்கையான தன்மை காரணமாக லுக்சம்பேர்க் கூறியது போல் முழுமையான சோசலிசம் அற்றது. அது சோசலிச நனவின் வளர்ச்சியினை பலவீனப்படுத்துகின்றது. மற்றும் மேலும் அதிகமாக சோசலிஸ்ட்டுகளின் அரசியல் கோட்பாடுகள் தொழிற்சங்கங்களின் நடைமுறை குறிக்கோள்களுக்கு எதிராக செல்கின்றது. சோசலிஸ்ட்டுகளின் தேவையாக இருப்பது என்னவென்றால் அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களின் மீது அவர்களின் நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.

இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் சார்டிசத்தின் அழிவுகளின் மீதும், சோசலிச இயக்கத்திலிருந்து சுதந்திரமாகவும் வளர்ச்சி அடைந்தன. மறுபுறம் ஜேர்மனியில் தொழிற்சங்கங்கள் நேரிடையாக சோசலிச இயக்கத்தின் பாதுகாப்பு பொறுப்பின் கீழ் தோன்றின. அதன் தலைவர்கள் மார்க்ஸ் ,எங்கெல்சின் போதனைகளில் ஊக்கம் தளராது கல்வியூட்டப்பட்டனர். அவ்வாறிருந்த போதும் சாராம்சத்தில் ஜேர்மன் தொழிற்சங்கங்கள் இங்கிலாந்தில் இருப்பனவற்றைவிட சோசலிசத்திற்கு அதிகமாக அர்ப்பணம் செய்தவை அல்ல. அந்த நூற்றாண்டின் முடிவில் லட்சக்கணக்கான புதிய உறுப்பினர்களின் சேருகையினால் மேலும் தன்னம்பிக்கை அடைந்த தொழிற்சங்கங்கள் கட்சியின் அரசியல் செல்வாக்கிற்கும், அதன் அரசியல் குறிக்கோள்களுக்கு அவர்கள் கீழ்ப்படிவதுடனான அவர்களின் மன உளைச்சலை வெளிப்படுத்தினர். இந்த மன உளைச்சல் அரசியல் நடுநிலைமை வகிக்கும் ஒரு புதிய மேடையில் அதன் வெளிப்பாட்டினைக் கண்டது. தொழிற்சங்கத் தலைவர்களின் வளர்ந்து வரும் ஒரு பிரிவினர் SPDயின் பிரச்சாரங்களுக்கு அவர்களின் அமைப்புகள் சிறப்பான விசுவாசம் எதையுமே ஏன் வழங்க வேண்டும் என்பதற்கான காரணம் எதுவும் அங்கில்லை என வாதிடத் தொடங்கினார்கள். அதாவது உண்மையிலேயே SPDயின் ஆதிக்கம் சோசலிச அரசியலில் ஆர்வம் இல்லாதவர்கள் அல்லது எதிர்ப்பவர்களாக இருக்கின்ற தொழிலாளர்கள் மத்தியில் உறுப்பினர்களை வென்றெடுக்கும் சாத்தியத்தை தொழிற்சங்கங்களுக்கு குறைக்கின்றது என்று அவர்கள் வாதிட்டனர். இந்தப் போக்கின் மிக முன்னணி பிரதிநிதிகளில் ஒருவர் ஒட்டோ ஹ்யூஏ (Otto Huщ) ஆவார். அவர் தொழிற்சங்கங்கள் நடுநிலைத் தன்மை என்ற நிலைப்பாட்டினை எடுத்துக் கொண்டாலே தொழிற்சங்கங்கள் உறுப்பினர்களின் "தொழில் ரீதியான நலன்களுக்கு (வர்க்க நலன்களுக்கு அல்ல) மட்டுமே சேவைசெய்ய முடியும் என்று வலியுறுத்தினார். தொழிற்சங்கத்தின் நடுநிலைமையான நிலைமைகளின் கீழ் தொழிலாளர்கள் எங்கே அரசியல் ரீதியாக அணிதிரண்டாலும் அது தொழிற்சங்கத் தலைவர்களுக்கு அக்கறையற்ற ஒரு விஷயமாக இருக்கிறது மற்றும் இருக்க வேண்டும் என்று ஹ்யூஏ எழுதினார்.

1900க்கும் 1905க்கும் இடையில் கட்சிக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் பதட்டம் அதிகரித்தது. SPDயின் மாநாடுகளுக்கு பேராளர்கள் என்ற அவர்களின் தகுதியில் தொடர்ந்தும் தொ.சங்கத் தலைவர்கள் சோசலிச அடிப்படைவாதிகளுக்கு வாக்கு அளித்தனர். ஏனெனில் சீர்திருத்தவாதத்திற்கு எதிரான தத்துவார்த்தப் போராட்டம் ஒரு நடைமுறை வடிவத்தை எடுக்கத் தொடங்குகின்ற அந்தக் கட்டத்தை இன்னும் புறநிலை வளர்ச்சிகள் வந்தடையாததாலாகும். இது 1905இல் ஜேர்மனியினுள்ளும் மற்றும் அதன் எல்லைகளுக்கு அப்பாலும் நிகழ்ச்சிகளினால் மாற்றப்பட்டது.

முதலாவதாக, ரஷ்யா முழுவதும் வெடித்த புரட்சி ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு மிகப் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது. தொழிலாளர்கள் சோசலிச பத்திரிகையில் புரட்சிகர போராட்டங்கள் பற்றிய விவரமான செய்திகளை அதிக ஆர்வத்துடன் படித்து வந்தனர். ரஷ்ய நிகழ்ச்சிகளில் மேலும் அதிகமாக ஜேர்மனி முழுவதும் கடுமையான வேலை நிறுத்த அலையின் எழுச்சியினால் சிறப்பாக றூஹர் (Ruhr) சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் தோன்றியவற்றுடன் ஒன்று சேர்ந்து வந்தது, மற்றும் அவற்றினை ஊக்குவித்தது போலும் இருந்தது. தொழிலாளர்களின் போர்க்குணம் இருந்தபோதிலும் வேலைநிறுத்தங்கள் சுரங்க உடமையாளர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர் கொண்டது. உடைமையாளர்களின் விட்டுக் கொடுக்காத போக்கினால் தொழிற்சங்கங்கள் பின்வாங்கின, அதற்கு தாக்கமான பதில் எதுவும் அவற்றிடம் இல்லை. வேலை நிறுத்தங்கள் வாபஸ்வாங்கப்பட்டன. இதன் மூலமாக பாரம்பரிய தொ.சங்க தந்தி ரோபாயங்களின் விரும்பிய பலனை விளைவிக்கும் திறனில் தொழிலாளர்களுக்கு இருந்த நம்பிக்கை ஆட்டம் கண்டன.

இந்தப் புதிய நிலைமையில் காவுட்ஸ்கியின் ஆதரவுடன் லுக்சம்பேர்க் ரஷ்யாவில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்து ஐரோப்பிய முக்கியத்துவம் வாய்ந்தவை மற்றும் அவை ஜேர்மன் தொழிலாளர்களுக்கு புதிய வடிவிலான வெகுஜனப் போராட்டமான அரசியல் வேலை நிறுத்தத்தின் உள்நிலை ஆற்றலை வெளிப்படுத்தியன என வாதிட்டார். அரசியல் வெகுஜன வேலைநிறுத்த [Political mass strike] கருத்தானது தொழிலாள வர்க்கத்தினுள் பரந்தளவிலான ஆதரவினைக் கண்டது. ஆனால் தொழிற்சங்கத் தலைவர்கள் லுக்சம்பேர்க்கின் வாதங்களின் பிரதி விளைவுகள் பற்றி பீதி கொண்டனர். தொழிலாளர்கள் லுக்சம்பேர்க்கின் தத்துவங்களின்படி செயற்படுவார்களாயின் தொழிற்சங்கங்கள் அவைகளாகவே தம்மை "புரட்சிகரமான சாகசங்களில்" பீடிக்கப்பட்டதாக கண்டுகொள்ளும் என கண்டனர். அவை அவர்களின் அக்கறைக்கு உரியவை அல்லாதவை என்று கருதியவையாகும். வெகுஜன வேலை நிறுத்தங்கள் சங்கங்களுக்கு மிகப் பெருமளவிலான பணத்தை செலவிடச் செய்யும் அந்தத் தலைவர்கள் மிகப் பெருமையாகக் கருதும் அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பண சேமிப்புகளை காலியாக்கி விடும்.

இப்படியான ஒரு அழிவைத் தடுப்பதற்கு சங்கத் தலைவர்கள் லுக்சம்பர்க் மற்றும் இதர SPD தீவிரவாதிகளுக்கு எதிராக திடீரென்று முன்னதாகவே தாக்குதல் தொடுக்க தீர்மானித்தனர். 1905 மே இல் கொலோனில் நடந்த தொழிற்சங்க மாநாட்டில் வெகுஜன வேலைநிறுத்தம் பற்றிய தொழிற்சங்கங்களின் அணுகு முறையை நிர்ணயம் செய்ய ஒரு தீர்மானத்திற்கு தயார் படுத்துவதற்காக ஒரு சிறப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் பேச்சாளரான தியோடோர் பூமல்பெர்க் பிரகடனம் செய்ததாவது: "நமது அமைப்புகளை மேலும் வளர்ச்சியடையச் செய்ய நமக்கு தொழிலாளர் இயக்கத்தில் அமைதி வேண்டும். வெகுஜன வேலைநிறுத்தம் பற்றிய விவாதம் மறைந்து போவதையும், எதிர்கால தீர்வுகள் (பிரச்சனைகள்) பொருத்தமான தருணம் வரும் வரையில் திறந்து விடப்பட வேண்டும் என்பதை நாம் கட்டாயமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்."15

SPD இடதுசாரி மீது ஒரு யுத்தப் பிரகடனத்திற்கு ஒப்பான வகையில் தொழிற்சங்க மாநாடு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதாவது தொழிற்சங்கங்களினுள் அரசியல் வெகுஜன வேலைநிறுத்தம் தொடர்பான விவாதம் அனுமதிக்க முடியாதது என்று பிரகடனம்செய்யப்பட்டது. அது தொழிலாளர்களை ''அப்படியான கருத்துக்களின் வருகையினாலும் பிரச்சாரத்தினாலும் தொழிலாளர்கள் தங்களின் அமைப்புக்களைக் கட்டும் தினசரி பணிகளில் இருந்து திசை திருப்பப்பட்டு விடாமல் அவர்களாகவே தம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டும்''16 என்று எச்சரித்தது.

கட்சிக்கு எதிரான தொழிற்சங்கத் தலைவர்களின் கிளர்ச்சியினால் SPD ஆனது ஆழமாக ஆட்டம் கண்டது. மாநாடானது தொழிற்சங்கங்கள் கட்சியிலிருந்து அன்னியப்பட்டிருப்பதை வெளிப்படுத்தியிருப்பதாக காவுட்ஸ்கி பிரகடனம் செய்தார் மற்றும் அனைத்து மனித வரலாற்றிலும் மிகவும் புரட்சிகரமானதாக இருந்த ஒரு வருடத்தில் அது பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறதுடன், அமைதிக்கான தொழிற்சங்கங்களின் விருப்பம் என்பது அவரை நகைக்க செய்தது என்றும் குறிப்பிட்டார். தொழிற்சங்கத் தலைவர்கள் "வெகுஜனங்களின் ஒழுக்க பண்பினை" விட அமைப்புகளின் வங்கிக் கணக்குகளின் எதிர்காலத்தில்தான் அதிக அக்கறை கொண்டுள்ளனர் என்பது காவுட்ஸ்கிக்குத் தெளிவாகியது.

தொழிற்சங்கத் தலைவர்களைப் பொறுத்தவரையில் SPDயின் இடதுசாரிகளை வெறுப்பது என்பது நோய்க்குண வடிவத்தை எடுத்தது. குறிப்பாக ரோசாலுக்சம்பேர்க் தான் இந்தக் கடுமையான கண்டனங்களுக்கு நிலைத்த குறியானார். சுரங்கத் தொழிலாளர்களின் பத்திரிகையின் ஆசிரியரான ஒட்டோ ஹ்யூஏ, அப்படியான வரம்பற்ற புரட்சிகரமான சக்தி கொண்டவர்களை அவர்களின் கோடை ஓய்வு தளங்களிலிருந்து பொது வேலை நிறுத்தம் பற்றிய விவாதங்களுக்கு பிரச்சாரம் செய்வதற்குப் பதிலாக ரஷ்யாவிற்கு செல்லும்படி ஊக்குவித்தார். லுக்சம்பேர்க் அவரது புரட்சிகரமான நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டு போலந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போதிலும் அவருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகப்படுத்தப்பட்டன. அந்தச் சமயத்தில் இன்னும் நண்பராகவும் சகாவாவும் இருந்த காவுட்ஸ்கி லுக்சம்பேர்க்கு எதிரான விஷமத்தனமான தனிப்பட்ட தாக்குதல்களினால் வருத்தம் அடைந்த பாட்டாளிவர்க்கப் போராட்டத்தில் ஒரு தலைவரை இடைவிடாது துன்புறுத்துவதைக் கண்டனம் செய்தார். கட்சிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான உறவுகளுக்கு இடருண்டாக்கியது லுக்சம்பேர்க் அல்ல இன்னும் சரியாகச் சொன்னால், தொழிற்சங்க நிர்வாகிகள் தான் என்று அவர் எழுதினார். "மிகவும் அதிகமான பேராவல் உடைய ஒரு குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளும் ஒவ்வொரு வடிவமான தொழிலாளர் இயக்கத்தின் மீதான அடிப்படையான வெறுப்பினை காட்டும் அவர்களுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு 5 பென்னிகளை பெற்றுக்கொள்வதே முக்கிய நோக்காக இருக்கின்றது" எனவும் கூறினார்.

குறிப்பிட்ட காலம் சமூகஜனநாயகக்கட்சித் தலைமை தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு எதிராக திருப்பிப் போராடியது. ஆனால் அதனை சாத்தியமான அளவு ஜாக்கிரதையாக செய்தது. ஜேனாவின் செப்டம்பர் 1905 ஜனநாயகக்கட்சி மாநாட்டில் ஒகஸ்ட் பேபல் அரசியல் வெகுஜன வேலைநிறுத்தத்தின் செல்லுபடியாகும் தன்மையை பகுதியாக ஏற்றுக் கொள்ளும் -ஆனால் பாதுகாப்பு ஆயுதமாக மட்டும்தான்- ஒரு திறமையாக எழுதப்பட்ட தீர்மானத்தை அறிமுகம் செய்தார். அதற்குப் பதிலாக தொழிற்சங்கங்கள் பேபலின் ஆத்திரத்திற்கு எதிர்ப்புணர்ச்சியின்றி இணங்கினார்கள். ஆனால் சுருக்கமாக மட்டும்தான். செப்டம்பர் 1906ல் மன்ஹைமில் நடந்த கட்சிமாநாட்டில் தொழிற்சங்க மாநாட்டில் தொழிற்சங்க தலைவர்கள் தொழிற்சங்கங்களுக்கும் கட்சிக்கும் இடையில் ''சமத்துவம்ее என்ற கோட்பாட்டை நிலைநாட்டும் ஓரு தீர்மானத்திற்கான வழியை ஷிறிஞியிடம் கோரி பெற்றுக்கொண்டனர். இதன் அர்த்தம் என்னவென்றால் தொழிற்சங்கங்களுக்கு நேரடி அக்கறை உடைய பிரச்சனைகளைத் தொடும் அனைத்து விஷயங்களிலும் கட்சியானது அவற்றிற்கு ஏற்புடைய ஒரு நிலைப்பாட்டினை வகுத்துக்கொள்ள வேண்டும். விடாப்பிடியான எதிர்ப்புகளின் மத்தியில் கட்சித்தலைவர்கள் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஒத்துழைத்து அதிகாரத்துவ ரீதியாக விவாதத்தை மூடி மற்றும் தீர்மானத்தை வலுக்கட்டாயமாக நிறைவேற்றினார்கள்.

இந்த கட்டத்தில் இருந்து SPD ஆனது தொழிற்சங்களின் பொதுவான ஆணைக்குழுவினால் தாக்கத்துடன் ஆளுமை செய்யப்பட்டது. லுக்சம்பேர்க் குறித்துக் கொண்டதுபோல கட்சியுடன் தொழிற்சங்கங்களின் உறவு ஒரு புத்திக்கூர்மை வாய்ந்த விவசாயியின் மனைவியைப் போல் இருந்தது. அவரது கணவரிடம் அவர் பின்வருமாறு கூறினார்: ееநமக்கு பிரச்சனைகள் எப்பொழுது எல்லாம் தோன்றுகின்றனவோ அப்போது நாம் பின்வரும் நடைமுறையினைப் பயன்படுத்த வேண்டும். நாம் உடன்படும்போது நீங்கள் தீர்மானிப்பிர்கள். நாம் முரண்படும்போது நான் தீர்மானிப்பேன்.

லுக்சம்பேர்குடனும் SPD யின் புரட்சிகரமான சக்திகளுடனான அவர்களின் சச்சரவுகளின் போது சாரசரி தொழிலாளி உண்மையிலேயே என்ன விரும்புகிறார் என்பது பற்றி புரட்சிகரமான தத்துவவாதிகளைவிட தங்களிடம் மிகச் சிறந்த கருத்து இருப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகள் உரிமைகோர விரும்பினார்கள். அதாவது தொழிற்சங்க வாதிகளின்படி லுக்சம்பேர்க் அதே வகைப்பட்ட புரட்சியாளர்கள் அவர்களது கிரகிப்புக்கள் மற்றும் கற்பனாவாத எண்ணங்களினால் ஆளுமை செய்யப்பட்டிருப்பதால் தொழிலாளர்கள் சுரங்கங்களில் மற்றும் ஆலைத்தளங்களில் எதிர் கொண்ட பிரச்சனைகளுக்கு நடைமுறை பதில்கள் உண்மையிலேயே இல்லாது இருக்கிறது. ஒரு புரட்சிகாரமான அரசியல் கொந்தளிப்பு மற்றும் அதிலிருந்து தோன்றும் சோசலிச கற்பனா உலகம் பற்றி கனவுகாண்பது தத்துவவாதிகளுக்கு சிறந்தது மற்றும் நல்லது. ஆனால் இங்கே இப்போது தொழிலாளர்கள் அவர்களது வாரக் கூலியில் ஒரு சில அதிகமான மார்க்குகளைப் பற்றித்தான் மிக அதிகமான அக்கறை கொண்டு உள்ளனர்.

வெகுஜன வேலை நிறுத்தம் பற்றிய விவாதம் முதலில் வெடித்த வருடங்களின்போது தொழிலாளர்களின் கணிசமான பகுதினரின் பார்வையை அநேகமாக சங்க நிர்வாகிகளின் வாதங்கள் பிரதிபலித்தது என்பது உண்மைதான். 1905 இல் அல்லது 1906ல் இந்த விஷயம் வாக்குக்கு விடப்பட்டிருக்குமாயின் அதிகமான தொழிலாளர்கள் லுக்சம்பேர்க்கை விட லேகியனின் நிலைப்பாட்டிற்கு அவர்களது வாக்குகளை அளித்திருப்பார்கள் என்பது கூட சாத்தியமானதாகும். எவ்வாறாயினும் மார்க்சிஸ்டுகள் மற்றும் சீர்த்திருத்தவாத சங்கத் தலைவர்களுக்கிடையிலான சச்சரவு பற்றிய தொழிலாளர்களின் அணுகுமுறையை கருதிப்பார்க்கையில் பின்வருவதை மனதில் வைத்திருப்பது முக்கியமானதாகும். தொழிற்சங்க நிர்வாகிகள் அமைப்புரீதியாகவும், சட்டவிதிமுறை ரீதியாகவும் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் மற்றும் தேசிய அரசுக்கட்டுமானம் இவற்றில் அவர்களின் சங்கங்கள் இயல்பாக சார்ந்து இருப்பதிலிருந்து தொடங்கும் கொள்கைகளுக்கு "அர்ப்பணம்" செய்தவர்களாக இருக்கின்றனர்.

தொழிலாள வர்க்கம் சாராம்சத்தில் புரட்சிகரமான ஒரு சமூகசக்தி என்றவகையில் சீர்த்திருத்தவாதத்திற்கு இணங்கும் படிப்படியான வேலைத் திட்டத்திற்கு அதே போல் அர்ப்பணம் செய்யப்பட்டது அல்ல. முதலாளித்துவ அமைப்பின் அடி ஆதாரமாக இருக்கும் முரண்பாடுகளின் வளர்ச்சியானது ஜேர்மனியில் சமூக சமரசத்தின் கட்டுமானத்தை தேய்ந்து போகும்படி செய்தது. வர்க்க பதட்டங்கள் அதிகரிக்கையில் தொழிலாளர்கள், தொழில்வழங்குனர்களையும் அரசையும் நோக்கி ஒரு மேலும் மூர்க்கமான மற்றும் விரோதமான அணுகு முறையை எடுத்துக் கொண்டனர். 1910-11ல் லுக்சம்பேர்க்கின் வாதங்கள் தொழிலாள வர்க்கத்தின் பரந்துபட்ட பிரிவினர் மத்தியில் அதிர்ந்து முழங்கத் தொடங்கியது என்பதற்கான தெளிவான அறிகுறிகள் இருந்தன. சிறப்பாக தொழில் வழங்குவோரின் கடுமையான எதிர்ப்பின் முன்னிலையில் தோல்வியடைந்த 1912-1913 வேலை நிறுத்தங்களின் பின்னர் அதிகாரப்பூர்வமான சங்கங்களுடனான தொழிலாளர்களின் அதிருப்தி கவனிக்கக் கூடியவாறு அதிகரித்தது.

1914 ஆகஸ்டில் உலக யுத்தத்தின் வெடிப்பு தற்காலிகமாக தீவிரமயமாக்கும் நிகழ்வுப் போக்கை நிறுத்தியது. ஆனால் 1915-16ல் யுத்தத்தின் தூண்டுதலினால் தொழிலாள வர்க்கத்தின் சமூக அதிருப்தியானது அதிகாரபூர்வ சங்கங்களினால் எழுதப்பட்ட தடைகளைக் கடந்து சென்றது. அரசியல் வெகுஜன வேலைநிறுத்தத்திற்கு எதிரான பழைய அதிகாரத்துவங்கள் இறுதியில் அவற்றிற்கான தீர்க்கமான பதிலை அக்டோபர்-நவம்பர் 1918ல் ஜேர்மன் புரட்சியின் வெடிப்பில் கண்டன. வெகுஜன இயக்கத்தின் புரட்சிகரமான தன்மை, லுக்சம்பேர்க்கினால் தத்துவாத்த ரீதியான முன் கூட்டியே எதிர்பார்த்தது போலவும் ரஷ்யப் புரட்சியில் நடைமுறை ரீதியாக நிழலாக காட்டப்பட்டது போலவும் புதிய இயக்க வடிவங்களில் அதாவது சாதாரண உறுப்பினர் குழுக்கள் மற்றும் சிறப்பாக தொழிலாளர் சபைகளின் தோற்றத்தால் வெளிப்படுத்தப்பட்டது. அது அதிகாரப்பூர்வ சங்கங்களுக்கு எதிராக தோன்றியது.

ஜேர்மன் மற்றும் ஆங்கிலேய தொழிலாள வர்க்கத்தின் அனுபவங்கள் தொழிற்சங்க வாதத்திற்கான மாபெரும் வரலாற்று சோதனையைப் பிரதிநிதித்துவம் செய்தது. நமக்குப் போதுமான நேரம் இருந்திருக்குமாயின், சோசலிசத்திற்கும் தொழிற்சங்கவாதத்திற்கும் இடையிலான அடிப்படையான மோதல் பற்றிய நமது ஆய்விற்கு மேலும் பல நாடுகளிலிருந்தும் இந்த நூற்றாண்டின் அனைத்து பத்தாண்டு காலங்கள் நமது சொந்த காலம் வரையிலான எண்ணற்ற உதாரணங்களுடன் இணைந்து வளமூட்டுவதாகவும் மற்றும் ஆதாரத்துடனும் நாம் கூறியிருக்க முடியும். அங்கே நிச்சயமான அப்படியான ஒரு விரிவான ஆதாரத்திற்கான ஒரு தேவை இருக்கின்றது. ஆனால் இந்த சொற்பொழிவின் அக்கறை என்னவென்றால் மேற்கொண்டு அனுபவவாத ரீதியிலான ஆய்வுகள் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டிய தத்துவார்த்த மற்றும் வரலாற்று அத்திவாரங்களை வழங்குவதாகும்.

முடிவு: சோசலிச நனவின் வரலாற்றுப்பாத்திரம்

மேலும் இந்த சொற்பொழிவின் பிரதான குறிக்கோள் தொழிற்சங்கங்களின் துரோகம் பற்றிய சாத்தியமான அளவு பல உதாரணங்களை வழங்குவது அல்ல. இன்னும் சரியாகச் சொல்லுமிடத்து அதற்கும்-அதே போல இந்த வாரப் பகுதியில் வழங்கப்பட்ட அனைத்து இதர சொற்பொழிவுகளின் அடிப்படையான ஆய்வுப் பொருளாக இருப்பது சோசலிச நனவின் வரலாற்றுப் பாத்திரமும் தொழிலாள வர்க்கத்தினுள் அதன் வளர்ச்சிக்கான போராட்டமுமாகும். இங்கேதான் புரட்சிகரமான மார்க்சிச கட்சியின் அடிப்படை முக்கியத்துவம் இருக்கின்றது. ஒரு தொழிற்சங்கவாத தன்மையுடைய தன்னியல்பான போர்க்குணத்தின் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டாலும், அப்படியான ஒரு வளர்ச்சிகூட பழைய அதிகாரத்துவ அமைப்புகளுக்கு எதிரான வெடிக்கும் தன்மை கொண்ட சாதாரண உறுப்பினர்களின் கிளர்ச்சிகள் இன்றி சிந்திக்க முடியாததாகும். புரட்சிகரமான வழிகளில் அப்படியான ஒரு உறுதியளிக்கக் கூடிய இயக்கத்தின் வளர்ச்சியானது, தொழிலாள வர்க்கத்தினுள் சோசலிச நனவை கொண்டு வருவதற்காக போராடும் மார்க்சிசக் கட்சியின் சுயாதீனமான வேலையில் சார்ந்திருக்கும்.

எனவேதான் இங்கு முக்கியமாக கவனிக்கக்கூடியதாக இருப்பது என்னவென்றால் தொழிற்சங்கங்களின் எதிர்க்க முடியாத அதிகாரம் பற்றி வலியுறுத்தும் அந்த அனைவரும் தொழிலாள வர்க்கத்தினுள் மார்க்சிசத்திற்கான போராட்டத்தை எதிர்க்கின்றனர். இது கிளிவ் சுலோட்டரின் சமீபத்திய எழுத்துக்களில் மிகவும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தொழிலாள வர்க்கத்தினுள் தன்னியல்பாக எழும் போராட்டங்களினுள் ееநனவை உயர்த்தல்ее, ееஅரசியல் ரீதியாக தலையீடு செய்தல்е, மற்றும் அரசியல் மயப்படுத்தல் செய்யும் பணி அவர்களுக்கு இருப்பதாக விடாப்பிடியாக கருதும் அந்தее [அனைத்துலகக் குழுவை] மார்க்சிஸ்டுகளை அவர் கண்டனம் செய்கின்றார்.

இப்படியான வார்த்தைகளில் ஒரு கிரிமினல் உள்நோக்கம் கொண்ட அம்சம் இருக்கின்றது என்று கூறுவது மிகையானது என்று நான் கருதவில்லை. மிகவும் பயங்கரமான வரலாற்றுத் துயரங்களை வெளிப்படுத்திய ஒரு நூற்றாண்டின் முடிவை நாம் இப்போது அணுகிக் கொண்டிருக்கிறோம். இந்த நூற்றாண்டின் பல புரட்சிகரமான போராட்டங்களின் தோல்விகள் மற்றும் காட்டிக் கொடுப்புகளுக்காக மனித இனம் இரத்தத்தினால் கொடுத்தவிலை கணக்கிட முடியாதது. காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சிகளின் அரசியல் பின் விளைவுகளினால் ஏற்பட்ட பலிகளின் எண்ணிக்கை கோடிக்கணக்காக இருக்கின்றது. கடந்த சில வருடங்களின்போது கூட சோவியத் மக்களின் நோக்கு நிலை தவறுதலால் ஏற்பட்ட அவமானகரமான மற்றும் மிக மோசமான பலன்களை நாம் கண்டோம். இந்த உலகரீதியான அரசியல் குழப்பகரமான நிலையையின் கீழ் இந்நிலையில் இருந்து மீள்வதற்காக சோசலிச விஞ்ஞானத்தை அடித்தளமாக கொள்வதை சுலோட்டர் நிராகரிக்கின்றார்.

தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன போராட்டங்களையும் புகழ்ந்து உரைப்பதால் அதாவது தற்போதுள்ள அதன் உணர்மையின் நிலையையும் அது சார்ந்துள்ள அமைப்பையும் புகழுவதால் அதனுடை நலன்களுக்கு சேவைசெய்ய முடியாது. சுலோட்டருக்கும் அவரைப்போன்ற முன்னாள் மார்க்சிஸ்டுகளுக்கும் சுயாதீன போராட்டங்களை புகழ்வது காட்டிக்கொடுக்கும் தொழிற்கட்சியுடனும், தொழிற்சங்க அதிகாரத்துவத்துடனுமான தமது கூட்டுழைப்பை மூடிமறைப்பதற்காகும். தொழிலாள வர்க்கத்தின் எதிர்காலம் எமது அரசியல் தலையீட்டாலும், எமது முயற்சியின் வெற்றியால் மக்களின் உணர்மையை உயர்த்துவதில்தான் தங்கியுள்ளது என்பதை வலியுறுத்துவதையிட்டு நாம் மன்னிப்பு கோரப்போவதில்லை.

நாம் விஞ்ஞான சோசலிசத்தின் மாபெரும் ஸ்தாபகர்கள் மற்றும் பிரதிநிதிகளினால் போடப்பட்ட அத்திவாரங்களில் நிற்கின்றோம். மார்க்சிச இயக்கத்தின் தொடக்க நாட்களிலிருந்து அதன் வரலாற்று தோற்ற மூலகாரணங்களில் இருக்கும் அடிப்படையான கோட்பாடுகளை ஏற்க மறுக்கும் சுலோட்டரின் அறிக்கையை நாம் நிராகரிக்கின்றோம். பாட்டாளி வர்க்கம்தான் சோசலிச திட்டத்தின் செயலூக்கம் உடைய வரலாற்று அகநிலைப் பொருளாகும். ஆனால் சோசலிசம் தொழிலாள வர்க்கத்திடமிருந்து நேரடியாக எழவில்லை மற்றும் எழவும் முடியாது. அதற்கென்று ஒரு சொந்த அறிவுஜீவி வரலாறு உள்ளது. மார்க்ஸ் தொழிலாளவர்க்கத்தின் வரலாற்று கடைமை தொடர்பான தனது கருத்துக்களை ஒரு குறிப்பிட்ட வரலாற்று காலகட்டத்திலுள்ள மிகவும் பெரும்பான்மையான தொழிலாளர்களின் வளர்ச்சியில் அவர்களின் "பொதுவான அபிப்பிராயம்ее என்னவாக இருந்திருக்கலாம் என்பதிலிருந்து வலியுறுத்தவில்லை. சாராசரி தொழிலாளி அவரது சொந்தமாக சிந்திக்கக்கூடிய கருத்துக்களையே சாதாரணமாக மறுபடியும் உருவாக்குவதற்காக அரிஸ்டாட்டிலுக்குப் பிறகு மாபெரும் மூளையாக இருந்த மார்க்ஸ் அவரது முழுவாழ்வையும் அர்ப்பணித்தார் என்று கூறுவது கூட முட்டாள்தனமாகும்.

1844ல் மார்க்ஸ் எமுதினார்: ееஇத்தருணத்தில் இந்த அல்லது அந்த பாட்டாளி அல்லது ஒரு முழு பாட்டாளி வர்க்கம் கூட அதன் குறிக்கோளாக எதைக்கருதுகின்றது என்பதல்ல பிரச்சனை அது பாட்டாளி வர்க்கம் என்பது என்ன, அதன் இருப்புடன் தொடர்புடையதாக அது வரலாற்று ரீதியாக என்ன செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படும் என்பது பற்றிய பிரச்சனையாகும். அதன் குறிக்கோள் மற்றும் வரலாற்று நடவடிக்கையானது அதன் சொந்த வாழ்க்கை நிலைமையிலும் அதேபோல் அன்றுள்ள முதலாளித்துவ சமுதாயத்தின் முழுஅமைப்பிலும் காணக்கூடியவாறும் மாற்ற முடியாதவாறும் முன் நிழலிட்டுக் காட்டுகின்றது.ее17

சோசலிச நனவானது வர்க்கப் போராட்டத்தின் தன்னியல்பான வளர்ச்சியினால் உருவாக்கப்படுமாயின் இந்தச் சர்வதேச வகுப்பினை ஏற்பாடு செய்வதற்கு எந்தக் காரணமும் இருந்திருக்காது. முதலாளித்துவத்தின் உலக நெருக்கடியின் வளர்ச்சியினால் அதற்கு முன் வைக்கப்பட்டுள்ள பணிகளின் உயரத்திற்கு தொழிலாள வர்க்கம் அதன் தற்போது உள்ள வெகுஜன அமைப்புகள் மற்றும் தற்போது நிலவும் அரசியல் வரலாற்று நனவின் மட்டம் இவற்றுடன் தானாகவே எழ முடியுமாயின் அங்கே வரலாறு, தத்துவம், அரசியல் பொருளாதாரம், புரட்சிகர மூலோபாயம் மற்றும் கலாச்சாரம் பற்றிய சொற்பொழிவுகளுக்கான தேவை என்ன இருக்கிறது?.

நாம் இந்த வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசியல் பின்னணி பற்றி பார்ப்போம். நாம் இங்கு கூறுகின்ற பொழுது கூட தென் கிழக்கு ஆசியாவின் பொருளாதாரங்கள் கொந்தளிப்பில் இருக்கின்றன. அநேகமாக இரவோடு இரவாக பல லட்சக்கணக்கான மக்களின் இருப்பு அபாயத்தில் இருக்கிறது. இந்தோனேஷியாவில் நாணயத்தின் மதிப்பு நேற்று முதல் நாள் 22%. வீழ்ந்தது. ஆறு மாதங்களின் போது இந்தோனேஷியா மதிப்பு அதன்மதிப்பில் 80% இழந்தது. ஒரு குரூரமான சிக்கன நடவடிக்கைகான சிக்கன அரசாங்கத்தை சர்வதேச நாணய நிதியம் கோருகிறது. இப்படியான நிலைமைகளில் கீழ் பிரம்மாண்டமான சமூக போராட்டங்களின் வெடிப்பு தவிர்க்க முடியாதது ஆகும்.

எவ்வாறாயினும் இப்படியான போராட்டங்களின் விளைவானது இந்தோனேஷிய தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வரலாற்றின் துயரமான படிப்பினைகளை கிரகிப்பதில் தங்கியிருக்கவில்லையா, அது இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் இன்னுமொரு பயங்கரமான அத்தியாயமாக இருக்கின்றது. இந்தோனேஷியத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் அறிவுஜீவிகளுடன் 1965-1966 நிகழ்ச்சிகள் பற்றி மீளாய்வு செய்யவேண்டியது அவசியமில்லையா? அதாவது சோவியத்யூனியன் மற்றும் சீனாவிற்கு வெளியே பத்து இலட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட உலகிலேயே பெரிய கம்யூனிஸ்ட் கட்சியானது, சுகார்ட்டோவின் சதிக்கு முன்னால் சத்தியற்றாக நிரூபிக்கப்பட்டது எப்படி? அந்த எதிர்ப் புரட்சியில் ஐந்து இலட்சத்திற்கும் அதிக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். சுமாத்ரா, பாலி நதிகள் கொலைசெய்யப்பட்ட பிணங்களினால் மூடப்பட்டிருந்தன. சுகார்ட்டோவின் சதியின் பின் தறுவாயில் கைது செய்யப்பட்ட கைதிகளுக்கு மரண தண்டனை விதிப்பது 1990களிலும் தொடர்ந்தது. ஆனால் அத்தனை கேள்விகளும் பிரச்சனைகளும் பதிலளிக்கப்படாமலும் தெளிவுப்படுத்தப்படாமலும் இருக்கின்றன. அந்தக் காலப்பகுதி பற்றிய மூலோபாயப்படிப்பினைகள் அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் உதவியுடன் இந்தோனேஷிய முதலாளித்ததுவம் செய்த கொலைக்குற்றங்களுக்கு தொழிலாளர்கள் எடுக்கவேண்டிய வரலாற்றுப் பழிவாங்கலுக்கான அடிப்படையைக் கொண்டிருக்கின்றது.

இங்குள்ள விஷயம் இந்தோனேஷியப் பிரச்சனை அல்ல. ஆனால் ஒரு உலக வரலாற்றுப் பணியாகும். இவ்வாறாக இந்த வகுப்புக்களை நாம் தொடங்கியபோது 21ஆம் நூற்றாண்டின் மனித சமூகத்தின் எதிர்காலமானது 20ம் நூற்றாண்டின் மூலோபாய வரலாற்று அனுபவங்களின் படிப்பினைகளை அது கிரகிப்பத்தில் தான் தங்கியிருக்கின்றது என்பதை வலியுறுத்தியதைக் கூறி நாம் முடிக்கின்றோம். அதாவது நான் ஒரு சில சொற்களில் கூறும்படி நிர்ப்பந்திக்கபடுவேனாயின், இந்த குழப்பமான நூற்றாண்டு பற்றிய நமது ஆய்வின் இறுதிக்கு நாம் வந்தடைந்த பொழுது உள்ள பிரதானமான முடிவு என்னவென்றால், மனித இனத்தின் விலக்க முடியாத முடிவானது சர்வதேச தொழிலாள வர்க்கத்த்தினுள் சோசலிச நனவின் வளர்ச்சிக்கான போராட்டத்துடன் தப்பமுடியாத படி உள்பிணைந்துள்ளது. அந்தப் போராட்டமானது அதன் அடிப்படையான அரசியல் வெளிப்பாட்டை சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியை கட்டுவதில் காண்கின்றது.