ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Defend auto workers victimised by Maruti Suzuki and Indian authorities

மாருதி சுசிகி மற்றும் இந்திய அதிகார அமைப்புகளினால் பழிவாங்கப்பட்ட கார் பொருத்தும் தொழிலாளர்களை பாதுகார்

By the World Socialist Web Site
6 December 2012

மாருதி சுசிகி தொழிலாளர்களை பாதுகாக்க இந்தியாவிலும் சர்வதேசரீதியிலும் உள்ள தொழிலாளர்கள் முன்வரவேண்டும் என்று உலக சோசலிச வலைத் தளம் அழைப்பு விடுக்கிறது. மானேசரில் உள்ள மாருதி சுசிகி இந்தியா கார் பொருத்தும் தொழிற்சாலை வடமாநிலமான ஹரியானாவில் உள்ள ஒரு புதிய தொழிற்சாலை நகரமாகும்.

இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் வழமையாக உள்ள, ஒரு கொடூரமான மலிவு உழைப்பு ஆட்சிமுறைக்கு எதிராக உறுதியான போராட்டத்தை அவர்கள் நடத்தியதினால் தான் மாருதி சுசிகி தொழிலாளர்கள், இந்தியாவின் மிகப் பெரும் கார் உற்பத்தியாளர் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஹரியானா அரசாங்கத்தின் இணைந்த பழிவாங்கும் நடவடிக்கைக்கு இலக்கானார்கள்.

ஜூலை 18 அன்று கம்பனியின் ஆத்திரமூட்டலினால் ஏற்பட்ட ஒரு கைகலப்பு ஒரு முதுநிலை மேலாளரின் மரணத்தில் முடிந்த சம்பவத்தில் இருந்து எழுந்த இட்டுக் கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் நான்கு மாதங்களுக்கு முன்பாக MSWU இன் மொத்த தலைமை உட்பட 149 தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்னும போலிஸ் காவலில் இருந்து வருகின்ற இந்தத் தொழிலாளர்கள் அடியுதை, மின்னதிர்ச்சி, நகரவியலாத நிலையில் முகத்தில் நீர் பாய்ச்சி சித்திரவதை செய்வது, கால்கள் இரண்டையும் அகலமாக பிரிப்பது உள்ளிட்ட பல்வேறுவிதமான சித்தரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

மாநில அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் கம்பெனி வேலை ஆட்களை நீக்குவதையும் அமுல்படுத்தியது. ஐந்நூற்றி நாற்பத்தி ஆறு நிரந்தர தொழிலாளர்களை ஒரேயடியாக நீக்கியுள்ளது மற்றும் ஒரு மாதம் நீடித்த கதவடைப்பிற்கு பிறகு ஆகஸ்டில் கம்பெனி மறுபடியும் திறந்த பொழுது புதிய ஆட்களை நிரந்தர தொழிலாளர்களுக்கு பதிலாக பணியில் அமர்த்தியது. 2000 ஒப்பந்த தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்துள்ளது.

கம்பெனியின் சார்பில் மாநில அரசு அதிகாரிகள், MSWU தலைவர்கள் உட்பட போர்குணமிக்க தொழிலாளர்கள் மீது கொலை மற்றும் இதர கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகளை ஜோடிப்பதற்காக வேலை செய்கின்றனர். கம்பெனியால் வழங்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் ஜூலை கடைசியிலும் ஆகஸ்டு தொடக்கத்திலும் தொழிலாளர்களை வலைபோட்டு பிடித்து கைது செய்ததாக போலீசார் தாமாகவே ஒப்புக்கொண்டனர்.

இந்த பழிவாங்கல் நடவடிக்கை, கடந்த வருடத்தில் மானேசரில் உள்ள கார் பொருத்தும் ஆலை தொழிலாளர்கள் கம்பெனிக்கு உடந்தையாக இருந்து வந்த சங்கத்திற்கு எதிராக ஒரு சுதந்திரமான சங்கம் அமைத்ததை தகர்ப்பதற்காக கம்பெனியும்-அரசாங்கமும் கூட்டாக நடத்தி வந்த திட்டத்தின் முடிவாகும்.

பரந்தளவில் மாருதி சுசிகி தொழிலாளர்களை கைது செய்வதற்கு முந்திய 14 மாதங்களின்போது MSWU சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அதற்கு காரணம் ‘’தொழிலாளர்களுக்கு ஏற்கனவே ஒரு சங்கம் உள்ளது’’ என்றும் ஹரியானா மாநில அரசாங்கம் வலியறுத்தி வந்தது, போர்க்குணமிக்க தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யவும் கட்டுப்படுத்தவும் வசதியாக கம்பெனியின் ‘’நன்னடத்தை பத்திரம்’’ ஒன்றில் கையெழுத்திடும்படி தொழிலாளர்களிடம் கோரியது, தொழிலாளர்களின் நடவடிக்கைகளை உடைப்பதற்காக போலிசாரை பெருமளவில் திரும்பத்திரும்ப அணிதிரட்டியது, மற்றும் மாநில பொருளாதாரத்தை ‘’நாசப்படுத்துவதற்கு’’ உறுதிபூண்டு ‘’பயங்கரவாதிகள்’’ மற்றும் ஏனைய ‘’வெளியாட்களுடனும்’’ சேர்ந்து MSWU இரகசியமாக செயல்படுவதாகவும் கருத்து தெரிவித்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து மாருதி சுசிகி தொழிலாளர்கள் உடனடியாகவும் நிபந்தனையற்றும் விடுவிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு எதிரான அனைத்து கிரிமினல் குற்றங்களும் திரும்ப பெறப்பட வேண்டும், வேலைநீக்கம் செய்யப்பட்ட அனைத்து நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் மறுபடியும் வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும், மற்றும் மானேசர் கார் பொருத்தும் தொழிலாளர்கள் மீதான கம்பெனி-மாநில அரசாங்கத்தின் வேட்டையாடல் நிறுத்தப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள் இந்தியா முழுவதும் கோரிக்கை எழுப்ப வேண்டும்.

ஹரியானா காங்கிரஸ் அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்துவதற்காக மாருதி சுசுகி தொழிலாளர்களை ஒருமுன்மாதிரியாக உருவாக்க தெளிவாக தீர்மானம் எடுத்துள்ளது, அத்துடன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மூலதனத்திற்கும் நிருபித்துக்காட்டுகிறது, அதாவது அவற்றுக்கு ஒரு மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட மலிந்த உழைப்பு தொழிலாளர்படை விநியோகிக்கப்படுவதை உத்தரவாதம் செய்ய தனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் அது செய்யும்.

காங்கிரஸ், இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் ஆதிக்கமுள்ள பங்காளியாகவும் இருக்கிறது, அதற்கு இந்தியா ஒரு சமூக வெடிகுண்டு பெட்டி என்பது நன்கு தெரியும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் டஜன்கணக்கான இந்திய கோடீஸ்வர்களின் தோற்றம் பற்றி இந்திய மேல்தட்டு பெருமை பேசும் அதே வேளையில், இந்திய தொழிலாளர்களின் உண்மையான ஊதியங்கள் உலகத்திலேயே மிகவும் குறைவானவை என்றும் கடந்த இரண்டு தசாப்தங்களில் உயரவில்லை என்றும் ஆய்வுகள் ஏற்கனவே எடுத்துக்காட்டுகின்றன.

தற்பொழுது உலக பொருளாதார நெருக்கடி தாக்கத்தின் கீழ் உலக முழுவதும் உள்ள அதன் சரிநேர் ஆட்சியாளர்கள் போலவே இந்திய ஆளும் வர்க்கமும் மிகபெருமளவில் சமூக செலவீனங்கள் வெட்டுவது, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மேலும் விற்பது, ஆள்குறைப்பு மற்றும் ஆலை மூடல்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளை அகற்றுவது ஆகியற்றை கோருகின்றது. பல வகை சில்லறை வணிகத்தை வால் மார்ட் மற்றும் இதர ராட்சத வெளிநாட்டு சில்லறை வர்த்தகத்திற்கு திறந்து விடுவது மற்றும் தற்பொழுது நிதியாண்டில் அனேகமாக 2000 கோடி டாலர்களுக்கு செலவீனங்கள் வெட்டுவது உட்பட “முதலீட்டாளர் சார்பு” நடவடிக்கைகளை ஐக்கிய முற்போக்கு கூட்டணி சமீபத்திய வாரங்களில் ஒரு தொடராக அறிவித்தது.

இந்த நிலைமையின் கீழ், காங்கிரஸ் கட்சி மற்றும் பெரு வணிகங்கள், மானேசர் மாருதி சுசுகி தொழிலாளர்களினால் வழங்கப்படும் போர்க்குணம் மிக்க உதாரணத்தை முற்றிலுமாக நசுக்க உறுதி பூண்டுள்ளன, கடந்த வருடம் இந்த தொழிலாளர்கள் திரும்பத்திரும்ப வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆலை உள்ளிருப்பு உள்ளிட்ட போராட்டங்களை மாதக்கணக்கில் நடத்தினார்கள்.

மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீதான கம்பெனி மற்றும் அரசாங்கத்தின் வேட்டையாடலை எதிர்ப்பது என்பது, பெரு வணிகம், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஹரியானா மற்றும் UPA அரசாங்கங்களுக்கு எதிராகவும் மற்றும் நெருக்கடியில் மூழ்கியுள்ள முதலாளித்துவ அமைப்பு முழுவதற்கும் எதிராகவும் தொழிலாள வர்க்கத்தை தொழில்துறை மற்றும் சுதந்திரமான அரசியல் போராட்டத்தில் அணிதிரட்டுவதற்கான போராட்டத்தின் அடிப்படையில் அமையவேண்டும்.

அரசாங்கம் மற்றும் நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுத்து தொழிலாளர்கள் சார்பாக பரிந்து பேசவைக்க முடியும் என்று ஸ்ராலினிச கட்சிகளான சிபிஎம் அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மற்றும் தொழிற்சங்கங்கள் குறிப்பிடுவது கொடூரமான ஏமாற்றாகும்.

மாருதி சுசுகி தொழிலாளர்களது போராட்டம் தாராளமாக தானாகவே எடுத்துக்காட்டியது போல், அரசாங்கம், நீதிமன்றம் மற்றும் போலீஸ் அனைத்துமே பெரு வணிகங்களின் கருவிகளாகும்.

மாருதி சுசுகி தொழிலாளர்களை பாதுகாக்கக்கூடிய ஒரே ஒரு சக்தி தொழிலாள வர்க்கம் மட்டும்தான். பழிவாங்கப்பட்ட கார் தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டமானது, குறைந்த சம்பளங்கள், கடுஉழைப்பு நிலைமைகள் மற்றும் ஒப்பந்த உழைப்பு முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கம் ஒரு எதிர்-தாக்குதலை அபிவிருத்தி செய்யும் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இந்த எதிர் தாக்குதலை நடத்துவதற்கான போராட்டத்திற்கு புதிய அமைப்புகள் தேவை மற்றும் ஒரு அரசியல் போராட்டமும் அவசியமானது, ஏனென்றால் அது தொழிலாள ர்களை அரசுடனும் காங்கிரஸ் மற்றும் இந்து மேலாதிக்கவாத பிஜேபி இலிருந்து சிபிஎம் மற்றும் சிபிஐ மற்றும் அவற்றின் இடது முன்னணி வரையிலான ஒட்டு மொத்த அரசியல் ஸ்தாபனத்துடனும் நேரடியான நீடித்த மோதலுக்கு கொண்டு வரும், அதற்கு காரணம் இந்த அனைத்து கட்சிகளும் இந்தியாவின் மலிவு கூலி ராஜ்யத்தை ஆதரிக்கின்றன.

அனைத்துக்கும் மேலாக, தொழிலாள வர்க்கம் ஒரு சுதந்திரமான அரசியல் சக்தியாக உருவாக வேண்டும் அதற்கு பொருளாதார வாழ்க்கைக்கையை சோசலிச மறு ஒழுங்கமைப்பு செய்வதற்கு உறுதிபூண்ட ஒரு புரட்சிகர தொழிலாளர்கள் கட்சியை கட்டவேண்டும், எனவே ஒரு சிலர் செல்வத்தை குவிப்பதற்காக அல்லாமல் சமூக தேவைகளை திருப்திப்படுத்துவதே அதன் உயிரோட்டமான கோட்பாடாக இருக்க முடியும்.

முக்கியத்துவம்வாய்ந்த எந்த ஒரு சமூக போராட்டத்தையும் போலவே, மாருதி சுசுகி தொழிலாளர்கள் வளமான படிப்பினைகளை கொண்டுள்ளனர்- அந்த படிப்பினைகள் அவர்களை பாதுகாக்கும் பிரச்சார இயக்கத்தை வழி நடத்த வேண்டும்.

அவர்களுடைய போராட்டம் ஒரு பரந்த தொழிலாள-வர்க்க அணிதிரட்டலுக்கான ஈட்டிமுனையாக மாறுவதற்கான சாத்தியத்தை திரும்பதிரும்ப வெளிப்படுத்திக்காட்டியது. மிகவும் முக்கியமான எடுத்துக்காட்டை மட்டும் குறிப்பிட வேண்டுமென்றால், மானேசர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக 2011 இலையுதிர் காலத்தில் குர்கான்-மனேசர் தொழிற்துறை பகுதியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

அவர்கள் திரும்பதிரும்ப நடத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் உள்ளிருப்புகள் மானேசர்-குர்கான் தொழிற்துறை பகுதியிலும் அதற்கு அப்பாலும் ஒரு பரந்த தொழிலாள வர்க்க எழுச்சிக்கான வினையூக்கியாக மாறவில்லை என்றால் அதற்கு காரணம் அதனை தனிமைப்படுத்தவும் நசுக்கவும் தொழிற்சங்க சாதனங்கள் உறுதியாக இருந்தன அதன் மூலம் தொழில் முனைவோர் மற்றும் அரசாங்கத்துடன் அவர்களது (முதலாளிகளுடன்) கூட்டுறவு உறவுகளுக்கு ஆபத்து ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டனர்.

திரும்பதிரும்ப சங்கங்கள் தலையிட்டு வேலை (நிறுத்த) நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவரவும் மற்றும் கம்பெனியின் கோரிக்கைகளுக்கு மாருதி சுசுகி தொழிலாளர்கள் சரணடையவும் அழுத்தம் கொடுக்க முயற்சித்தது.

குறிப்பாக தீங்குவிளைவிக்கின்ற பாத்திரத்தை சிபிஎம் மற்றும் சிபிஐ தொழிற்சங்க கூட்டமைப்புகளான AITUC (அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ்) மற்றும் CITU ( இந்திய தொழிற்சங்க மையம்) வகித்து வந்தன. இந்து மஸ்தூர் சபா மற்றும் இதர யூனியன் கூட்டமைப்பை போலவே AITUC மற்றும் CITU வும் ''சமரசம்'' செய்யும்படி தொழிலாளர்களுக்கு திரும்பதிரும்ப ஆலோசனை கூறி வந்தது.

மற்றும் ஹரியானா அரசாங்கங்கம் கம்பெனியின் வழக்கறிஞராகவும் போலிஸ்படையாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது கூட அதற்கும் மற்றும் புது டெல்கியிலுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை அவர்களது உதவிக்கு வரும்படியும் விண்ணப்பிப்பதற்காக அவர்களது சக்திகள் அனைத்தையும் குவிமையப்படுத்தும்படி தொழிலாளர்களை ஊக்குவித்தனர்.

ஸ்ராலினிச சிபிஐ மற்றும் சிபிஎம் தசாப்தகாலமாக இந்திய முதலாளித்துவத்துடன் இடது பக்கமாக செயலாற்றின, சோசலிசத்திற்கு போராடுவது வரலாற்று நிகழ்ச்சிநிரலில் அல்ல என்று வலியுறுத்தின மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் கட்சிகளுக்கு தொழிலாள வர்க்கத்தை திட்டமிட்ட ஒழுங்கு முறையில் கீழ்படித்தின.

கடந்த இரண்டு தசாப்த காலத்தின் போது சிபிஎம் மற்றும் சிபிஐ திரும்பதிரும்ப, மூர்க்கமாக முதலாளித்துவ நவீன-தாராளவாத ''சீர்திருத்தங்களை’' முன்னெடுத்த, புதுதில்லியிலுள்ள காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கங்களுக்கு ஆதரவு தெரிவித்தன, அதே நேரத்தில் ஆட்சியில் இருந்த மாநாலங்களான மேற்கு வங்கம், கேரளா, மற்றும் திரிபுராவில் தாங்களே ''முதலீட்டாளர்-சார்பு'' கொள்கைகள் என்று விவரித்ததை அமுல்படுத்தினர்.

ஆகஸ்ட் 31இல் AITUC மற்றும் CITU இதர சங்க அலுவலர்களுடன் சேர்ந்து வேலைநீக்கம் செய்யப்பட்ட 546 மாருதி சுசுகி தொழிலாளர்களை பாதுகாக்கும் ஒரு பிரச்சாரம் என்ற பேரில் ஒரு கூட்டத்தை ஒழுங்கமைத்தனர். முன்கணித்தவாறு இந்த பிரச்சாரம் ஒரு இறந்த கடிதமாகவே இருந்தது, முறையான ஆர்ப்பாட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை, எந்த ஒரு தொழிற்துறைரீதியான நடவடிக்கையையும் ஒழுங்கமைக்கபடவில்லை என்பது ஒரு புறம். அதற்கு மாறாக ஸ்ராலினிச தொழிற்சங்க தலைவர்கள், இந்திய முதலாளித்துவத்தின் இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தொழிற்சங்க ஏவலாளிகளுடன் ஒரு புதிய கூட்டணியை விருத்தி செய்கின்றனர், மற்றும் அவற்றுக்கூடாக ''மக்கள் சார்பு'' கொள்கையை நிறைவேற்றும்படி UPA அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று கோருகின்றனர்.

ஸ்ராலினிஸ்டுகளின் அரசியல் செல்வாக்கின் கீழ், MSWU வின் தற்பொழுதுள்ள தற்காலிகமான தலைமை, போன மாதம் இரண்டு நாட்கள் உண்ணாவிரத வேலைநிறுத்தத்தையும் இதர ஆர்ப்பாட்டங்களையும் ஒழுங்கமைத்த போது காங்கிரஸ் கட்சி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மற்றும் விண்ணப்பிக்கும் முன்னோக்கை முன்னெடுத்தது.

அதைத் தொடர்ந்து MSWU வெளியிட்ட ஒரு அறிக்கையில் பொய்யான நம்பிக்கையை உயர்த்தி பிடித்தன, அதாவது உள்ளூர் காங்கிரஸ் கட்சி சட்டசபை உறுப்பினர் மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுக்பிர் கட்டாரியா, பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவி செய்யும்படி ஹரியானா முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுப்பார்.

மாருதி சுசிகி தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் அனைத்து ஆதரவாளர்களும் இந்த திவாலான பாதையை எதிர்க்க வேண்டும்.

பழிவாங்கப்பட்ட மாருதி சுசுகி தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான போராட்டம் ஒரு உண்மையான வர்க்க போராட்டமாக இருந்தால்தான், அது முன்னேறிச் செல்லமுடியும், செல்லும்; அதன் நோக்கம் ஒரு புரட்சிகர தொழிலாளர் கட்சியை வளர்ச்சி செய்வதற்கான போராட்டத்தின் ஒருங்கிணைந்த ஒரு பாகமாக தொழில்துறை மற்றும் அரசியல் நடவடிக்கையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதாக இருந்தால் மட்டுமே, அது பெரு வணிகங்களின் பொருளாதார மேலாதிக்கத்தை உடைப்பதற்காக ஒரு சோசலிச வேலைதிட்டத்தில் கிராமப்புற மக்களை அணிதிரட்டும். முதலாளித்துவ நெருக்கடிக்கான தீர்வை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை நிறுவுவதன் மூலம் ஒரு சில சலுகைமிக்க தட்டின் அழிவில்தான் காணமுடியும், மற்றும் இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் ஜனநாயக அபிலாசைகளை நிறைவேற்ற முடியும்.