ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

From Whom and How to Defend the Revolution

யாரிடம் இருந்து, எவ்வாறு புரட்சியை பாதுகாப்பது

By Leon Trotsky
March 21, 1917

இக்கட்டுரை நியூ யோர்க் ரஷ்ய மொழி செய்தித்தாளான நோவி மிர் (புதிய உலகு) எனும் செய்தித்தாளில் மார்ச் 21, 1917ல் வெளியிடப்பட்டது. இது இது ரஷ்ய மொழியில் ட்ரொட்ஸ்கியின் 1923 Voina i Revoliutsiia (போரும் புரட்சியும்), தொகுதி 2, பக்கம் 440-443ல் வெளியிடப்பட்டிருந்தது. இது ஆங்கிலத்தில் ட்ரொட்ஸ்கி பேசுவதில் இடம்பெறுகிறது. இது இங்கே முதல் முறையாக மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. (மொழிபெயர்ப்பாளர்: ஃபிரெட் வில்லியம்ஸ், பதிப்புரிமை: WSWS).

வேறெங்கும் போலவே நமது நாட்டிலும் ஏகாதிபத்தியம் முதலாளித்துவ உற்பத்தியின் அதே அடித்தளத்தில்தான் தோற்றமூலத்தைக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சி ரஷ்யாவில் மாபெரும் வேகத்தைப் பெற்றது மற்றும் எதிர்ப்புரட்சியின் செல்வாக்கின் கீழ் மிகக் கூர்மை அடைந்தது. இதைப் பற்றி நாம் கடந்த முறை பேசினோம். முதலாளித்துவ வர்க்கமானது புரட்சியால் அஞ்சும்பொழுது, நிலச்சுவான்தார்களின் நிலங்களை விவசாயிக்கு ஒப்படைப்பதன் மூலம், உள்ளூர்ச் சந்தையை விரிவுபடுத்தும் அதன் வேலைத்திட்டத்திலிருந்து விலகிப் பினவாங்கும், அது அதன் கவனத்தை உலக அரசியலை நோக்கி திருப்பும். எமது ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்புரட்சிகர பண்பானது இவ்வாறு மிகத் தெளிவாகவே தன்னையே காட்டிக்கொள்ளும். பெற்ற வெற்றிகளின் அடித்தளத்தில் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கம் ரஷ்ய தொழிலாளர்களுக்கு நல்ல கூலிகள் தருவதாக வாக்குறுதி அளித்தது, மற்றும் போர்த் தொழிற்துறையிலும் அதைச் சுற்றிலும் உள்ள சலுகை மிக்க அந்தஸ்தை அளிப்பதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் மேல்தட்டினரை வாங்க முயற்சித்தது. அது விவசாயிகளுக்கு புதுநிலங்களை வாக்களித்தது. “நமக்குப் புதிதாக நிலம் கிடைக்கிறதோ இல்லையோ” எப்படியோ மக்களின் எண்ணிக்கை சுருங்கிக்கொண்டு வருவதால் நிலம் தொடர்பான விடயம் எளிதாகப்போனதாக muzhik நடுத்தர விவசாயிகள் நியாயப்படுத்திக்கொண்டனர்...

அதன் விளைவாக, போர் என்பது வார்த்தையின் மிக நேரடி அர்த்தத்தில், மிகக் கூர்மையான உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து, விவசாயப் பிரச்சினை எல்லாவற்றிலிருந்தும் வெகுஜனங்களின் கவனத்தை திசைதிருப்பும் ஒரு வழிமுறையாகும். ஏகாதிபத்திய முதலாளித்துவ போர் முயற்சிகளுக்கு ‘மிதவாத’ மற்றும் மிதவாதமற்ற பிரபுத்துவம் அந்த அளவு அழுத்தம் திருத்தமாய் ஏன் ஆதரவு தருகிறது என்பதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்றாகும்.

“தேசத்தைப் பாதுகாத்தல்” என்ற பதாகையின் கீழ் மிதவாத முதலாளித்துவ வர்க்கங்கள், புரட்சிகர மக்கள் மீது கட்டுப்பாட்டை தொடர்ந்து தக்க வைக்க முயல்கின்றன, மற்றும் இந்த நோக்குடன், தேசபக்த ட்ருடோவிக் (Trudovik) கன்னையின் கெரென்ஸ்கியை மட்டும் கட்டி இழுக்காமல், மாறாக, வெளிப்படையாகவே, சமூக ஜனநாயகத்தின் சந்தர்ப்பவாத கூறுகளின் பிரதிநிதியான Chkheidze போன்றோரையும் கட்டி இழுக்கின்றன.

போரை நிறுத்துதல் மற்றும் அமைதிக்கான போராட்டமே கூட அனைத்து உள்நாட்டுப் பிரச்சினைகளையும் பெரும்பாலும் நிலப்பிரச்சினையை முன்னணிக்குக் கொண்டு வருகின்றன, விவசாயப் பிரச்சினையானது, நிலப்பிரபு, முதலாளித்துவ வர்க்கம் மற்றும் சமூகதேசபக்தர்களின் தற்போதைய கூட்டில் ஆழமான ஆப்பை வைக்கிறது. கெரென்ஸ்கி, முழுப்புரட்சியையும் முதலாளித்துவ நோக்கங்களுக்காக திசை திருப்பும் “மிதவாத” ஜூன் மூன்று கூறுகளுக்கும் ஒரு பரந்த அளவிலான விவசாயப் புரட்சிகர வேலைத்திட்டத்தை-சார், நிலச்சுவான்தார்கள், அரச குடும்பங்கள், அரச பரம்பரை மற்றும் தேவாலயங்களுக்கு சொந்தமான நிலங்களைப் பறிமுதல் செய்தல் என மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தற்கும் இடையில் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். கெரென்ஸ்கியின் தனிப்பட்ட தேர்வு எதுவெனிலும் குறைந்த முக்கியத்துவம் உடையதே: Saratov பல்கலைக்கழகத்திலிருந்து வரும் இந்த இளம் வழக்கறிஞர், நடைபெற்ற கூட்டத்தில் படைவீரர்களை அவர்கள் தன்னை நம்பவில்லை எனில் சுட்டுக் கொல்லட்டும் என்று அவர்களிடம் கெஞ்சும் அதேவேளை, தொழிலாளர் சர்வதேசியவாதிகள் மேல் தேள்களை விடுவதாக அச்சுறுத்துவதும் புரட்சியின் அளவில் முக்கியத்துவம் இல்லாததே. கிராமப் புறத்தில் உள்ள மிகக் கீழ்நிலையிலுள்ள தட்டுக்களான விவசாய மக்கள் ஒரு வேறுபட்ட அம்சம் ஆவர். பாட்டாளி வர்க்கத்தின் பக்கத்தில் அவர்களை ஈர்த்தல் என்பது மிகவும் தள்ளிப்போடக்கூடாத மற்றும் அவசரமான பணியாகும்.

எமது கொள்கைகளை நாட்டுப்புறத்தின் தேசிய – தேசபக்த குறுகிய எண்ணம் கொண்ட கொள்கைகளுக்கு தகவமைப்பதன் மூலம் இந்தப் பணியைத் தீர்க்க முயற்சிப்பது ஒரு குற்றமாக இருக்கும்: ரஷ்ய தொழிலாளி ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்துடன் உறவுகளை துண்டித்துக்கொள்வதன் மூலம் விவசாயியுடனான கூட்டுக்கு அவன் விலைகொடுக்க வேண்டி வந்தால் அவன் தற்கொலை செய்து கொள்வான். ஆனால், பின்னர், அவ்வாறு செய்வதற்கான அரசியல் தேவை இராது. எமது கரங்களில் மிகச் சக்திவாய்ந்த ஆயுதம் உள்ளது: தற்போதைய இடைக்கால அரசாங்கமும் Lvov-Guchkov-Miliukov-Kerensky அமைச்சரவைகளும் —தங்களது ஐக்கியத்தை பாதுகாத்தல் என்ற பேரில்— விவசாயப் பிரச்சினையை தட்டிக்கழிக்க நிர்பந்திக்கப்படும் நேரத்தில், நாம் ரஷ்ய விவசாய மக்களின் முன்னே அப்பிரச்சினையை அதன் எல்லா பரிமாணங்களிலும் அதனைக் கட்டாயம் எழுப்ப வேண்டும்.

“விவசாய சீர்திருத்தம் சாத்தியமில்லாததன் காரணமாக, பின்னர் நாம் ஏகாதிபத்திய போருக்கு ஆதரவாக நிற்போம்” என்றே 1905-1907 அனுபவத்திற்குப் பின்னர் ரஷ்ய முதலாளி வர்க்கம் கூறியது.

“ஏகாதிபத்தியப் போருக்கு முதுகைக் காட்டு, பதிலாக விவசாய புரட்சியின் பால் திரும்பு!” இதுவே 1914-1917 அனுபவம் தொடர்பாக விவசாய வெகுஜனங்களுக்கு நாம் கூறப்போவது.

இந்தப் பிரச்சினையில், விவசாயப் பிரச்சினை, இராணுவத்தின் பாட்டாளி வர்க்க காரியாளர்களை அதன் விவசாய தட்டினருடன் ஐக்கியப்படுத்துவதில் பெரும் பங்கை ஆற்றும். “நிலப்பிரபுவின் நிலங்கள், கான்ஸ்டான்டிநோப்பிள் அல்ல” – என பாட்டாளி வர்க்கப் படைவீரர் விவசாயி வர்க்கப் படை வீரரிடம் கூறுவார், ஏகாதிபத்தியப் போரால் பயன்படுத்தப்படுபவருக்கு விளக்குவார் மற்றும் அதன் நோக்கங்கள் என்னவென்றும் விளக்குவார். போருக்கு எதிரான எமது கிளர்ச்சி மற்றும் போராட்டத்தின் வெற்றியானது முதன்மையாய்த் தொழிலாள வர்க்கத்திடம் இருப்பதும், இரண்டாம் நிலையாய் விவசாயி மற்றும் படைவீரர் மக்களில் இருப்பதும் – எவ்வளவு விரைவில் மிதவாத முதலாளித்துவ அரசாங்கம் புரட்சிகரத் தொழிலாளர் அரசாங்கத்தால் பதிலீடு செய்யப்படும் என்பதைத் தீர்மானிக்கும். இது உடனடியாக பாட்டாளி வர்க்கம் மற்றும் பாட்டாளி வர்க்கத்திடம் சேர்ந்துகொண்ட கிராமப்புறத்தின் மிகக் கீழ்நிலை தட்டுக்கள் மீது தங்கி இருக்கும்.

வெகுஜனங்களின் எதிர்ப்பை எதிர்க்காத ஒரே ஆட்சி, ஆனால், அதற்கு மாறாக, அவர்களை தலைமைதாங்கி முன்னோக்கி இட்டுச்செல்லும், தொழிலாள வர்க்கத்தின் மற்றும் புரட்சியின் தலைவிதியை உத்தரவாதம் செய்யக்கூடியதும் அதுவே. அத்தகைய ஆட்சியை உருவாக்குவதே புரட்சியின் தற்போதைய அடிப்படை அரசியல் பணியாகும்.

அதுவரைக்கும், அரசியலமைப்பு சட்டசபை ஒரு புரட்சிகர திரைச்சீலையாகவே இருக்கும். அதன் பின்னே மறைந்து இருப்பது என்ன? இந்த அரசியலமைப்பு சட்டசபையை என்ன உறவுகள் ஏற்படுத்தும்? இது அதன் உட்சேர்க்கையைப் பொறுத்தது. மற்றும் அதன் உட்சேர்க்கை யார் அரசியலமைப்பு சட்டசபையைக் கூட்டுகிறார்கள், என்ன நிலைகளின் கீழ் என்பதைப் பொறுத்தது.

Rodziankos, Guchkovs மற்றும் Miliukovs தங்களின் சொந்த உருவில் அரசியலமைப்பு சட்டசபையை உருவாக்க ஒவ்வொரு முயற்சியிலும் ஈடுபடுவர். அவர்கள் கரங்களில் உள்ள பலம் வாய்ந்த துருப்புச்சீட்டாக அந்நியப் பகைவனுக்கு எதிராக முழு தேசத்தினதும் போர் என்ற முழக்கம் இருக்கும். இப்போது அவர்கள் பேசுவார்கள்தான், ஜேர்மன் முடியாட்சியினரான (ஹோகன்ஷோலர்ன்) Hohenzollern சார்பாக “புரட்சியின் வெற்றிகளை அழிவிலிருந்து” காப்பாற்றுவதற்கான தேவை பற்றி. சமூக–தேசபக்தர்கள் அவர்களுடன் சேர்ந்து இசைக்கத் தொடங்கிவிடுவர்.

நாம் கூறுவோம்: “அங்கு பாதுகாக்கப்பட வேண்டியவை சில மட்டும் இருக்கும் என்றால்!” அனைத்திற்கும் முதலாக, நாம் புரட்சியை உள்நாட்டு எதிரிகளிடமிருந்து கட்டாயம் பாதுகாக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டசபைக்காகக் காத்துக் கொண்டிராமல், முடியாட்சி மற்றும் நிலப்பிரபுத்துவ குப்பை கூளங்களை எல்லாம் எல்லா மூலை முடுக்குகளிலிருந்தும் நாம் கட்டாயம் துடைத்துக்கட்ட வேண்டும். Rodzianko வின் வாக்குறுதிகளையும் Miliukov வின் தேசபக்த பொய்களையும் நம்ப வேண்டாமென்று நாம் ரஷ்ய விவசாயிக்கு கற்பிக்க வேண்டும். விவசாயப் புரட்சி மற்றும் குடியரசு என்ற பதாகையின் கீழ் பத்துலட்சக்கணக்கான விவசாயிகளை மிதவாத ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக ஐக்கியப்படுத்த வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் மீது தங்கி இருக்கும் ஒரு புரட்சிகர அரசாங்கம் மட்டுமே இந்தப் பணியை Guchkovs மற்றும் Miliukovs களை அதிகாரத்திலிருந்து துரத்துவதன் மூலம் முழுமையாய் மேற்கொள்ள முடியும். புரட்சிகர அரசாங்கம் நாட்டுப் புறத்திலும் நகர்ப்புறத்திலும் உள்ள உழைக்கும் மக்களின் மிகவும் பின்தங்கிய மற்றும் புரிந்துகொள்ளமுடியாத தட்டினரை தம் சொந்தக் காலில் நிற்கச்செய்ய, கல்வியூட்ட மற்றும் ஐக்கியப்படுத்துவதை செய்யும்பொருட்டு அரசு அதிகாரத்தின் அனைத்து வளங்களையும் இயங்கச்செய்யும். அத்தகைய அரசாங்கமும் அத்தகைய தயாரிப்பு வேலையும் மட்டும்தான் அரசியலமைப்பு சட்டசபையை நிலம்படைத்த, முதலாளித்துவ நலன்களுக்கான திரையாக அல்லாமல், மாறாக புரட்சிக்கும் மக்களுக்குமான ஒரு உண்மையான அமைப்பாக்கும்.

நல்லது, வெற்றிகரமான ரஷ்யப் புரட்சிக்கு ஒரு அச்சுறுத்தலாகத் தோற்றமளிக்கும் துருப்புக்களை உடைய, ஜேர்மன் முடியாட்சியினரான Hohenzollern ஐ என்ன செய்வது?

நாம் ஏற்கனவே இதுபற்றி எழுதி இருக்கிறோம். ரஷ்ய புரட்சியானது ஜேர்மன் முடியாட்சியினரான Hohenzollern ஐ பொறுத்தவரை, ஏகாதிபத்திய ரஷ்யாவின் திட்டங்கள் மற்றும் வேட்கையைவிட அளவிடமுடியாத வகையில் அதற்கு பேராபத்து. புரட்சியானது அதன் Guchkov-Miliukov பேரினவாத முகமூடியை அகற்றிய உடனேயே, அதன் பாட்டாளி வர்க்க முகத்தைக் காட்டிய உடனேயே, மிக சக்திமிக்க பிரதிபலிப்பை அது ஜேர்மனியில் சந்திக்கும்; ஜேர்மன் முடியாட்சியினரான Hohenzollern ரஷ்ய புரட்சியின் குரல்வளையை நெரிப்பதற்கு குறைந்த ஆவலையும், சாத்தியத்தையும் கொண்டிருப்பார். அவருக்கு உள்நாட்டில் போதுமான அளவு கவலைகள் இருக்கும்.

“ஜேர்மன் பாட்டாளி வர்க்கம் எழுச்சிகொள்ளவில்லை எனில் என்ன? பின்னர் நாம் என்ன செய்வது?”

“அதாவது, புரட்சியானது இங்கே தொழிலாளர் அரசாங்கத்தை அதிகாரத்தில் இருத்தினால் கூட ரஷ்ய புரட்சியானது ஜேர்மனியில் அதன் தடத்தை விட்டுச்செல்லாமல் நிகழும்? என்று நீங்கள் அனுமானம் கொள்கிறீர்கள். ஆனால் அது முற்றிலும் நடைபெறமுடியாதது.”

“ஆனால், இருப்பினும்…?

“அடிப்படையிலேயே, அத்தகைய ஒரு தவறான கருத்து மீதாக எமது மூளையை போட்டுக் கசக்கிக் கொள்ள வேண்டியதில்லை. போரானது ஐரோப்பா அனைத்திலும் சமூகப் புரட்சியின் வெடிமருந்தால் நிரம்பிய கிட்டங்கிகளுக்குள் திரும்பி விட்டது. இப்பொழுது ரஷ்ய பாட்டாளி வர்க்கமானது இந்த வெடிமருந்துக் கிடங்கில் சுடர்விடும் தீப்பந்தத்தால் பற்றவைக்கிறது. ஒருவேளை இந்த தீப்பந்தம் வெடிப்பை நிகழ்த்தவில்லை எனக் கொள்வோம், வரலாற்று தர்க்க விதிகளை மற்றும் உளவியலை மறுத்தலை சிந்திப்பதாய் இருக்கும். ஆனால் சாத்தியமற்றது என்பது நிகழ்வதாக இருந்தால், உடனடியான சகாப்தத்தில் பழமைவாத தேசபக்த இயக்கங்கள் ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தை அவற்றின் ஆளும் முதலாளித்துவ வர்க்கங்களுக்கு எதிராகக் கிளந்து எழவிடாமல் தடுப்பதாக இருந்தால் – அப்போது ஒருவேளை ரஷ்ய தொழிலாள வர்க்கம் ஆயுதங்களைக் கையிலேந்தி புரட்சியைக் காக்கும். புரட்சிகரத் தொழிலாளர் அரசாங்கம் சகோதர ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்தை பொது எதிரிக்கெதிராகக் கிளர்ந்து எழுமாறு அழைப்புவிடுத்து, ஜேர்மன் முடியாட்சியினரான Hohenzollern மீது போர் தொடுக்கும். துல்லியமாக, அதேவழியில், உடனடியான சகாப்தத்தில் அது அதிகாரத்தை கையிலெடுத்தால், ஜேர்மன் பாட்டாளி வர்க்கமானது, ரஷ்ய தொழிலாளர்கள் தங்களின் ஏகாதிபத்திய எதிரியை எதிர்கொள்வதில் அவர்களுக்கு உதவும் பொருட்டு உரிமை கொண்டது என்று மட்டுமல்லாமல், Guchkov-Miliukov களுக்கு எதிராக போரைத் தொடுப்பதற்கு கடமைப்பாட்டைக் கொண்டதாக இருக்கும். இந்த இரண்டு வகைகளிலும், பாட்டாளி வர்க்க அரசாங்கத்தால் நடத்தப்படும் போரானது ஆயுதம் ஏந்திய புரட்சியாக மட்டுமே இருக்கும். இதன் பொருள் ’தாய்நாட்டைக் காப்பாற்று’ என்பதாக இருக்காது, மாறாக ‘புரட்சியைக் காப்பாற்று’ என்பதாகவும் மற்றும் பிற தேசங்களுக்கு அதனைக் கொண்டுசெல்வதாகவும் இருக்கும்.

நோவி மிர், 21 மாரச்,1917.