ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Free Julian Assange rallies called in Sri Lanka and India

ஜூலியான் அசான்ஜை விடுதலை செய்யக்கோரும் கூட்டங்களுக்கு இலங்கை மற்றும் இந்தியாவில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

7 June 2018

ஜூலியான் அசான்ஜை விடுவிப்பதற்காக தற்போது நடத்தப்பட்டு வரும் சர்வதேச பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக, இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஜூன் 19 அன்று கொழும்பிலும், தமிழ்நாட்டில் சென்னை அருகிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் உலக சோசலிச வலைத் தளம், விக்கிலீக்ஸின் ஆசிரியருக்கு விடுதலை கோரி சர்வதேசரீதியாக  தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டுகின்றன. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் எக்குவடோர் அதன் லண்டன் தூதரகத்தில் அசாஞ்சுக்கு தஞ்சம் வழங்கிய அதேவேளை, ஆஸ்திரேலிய பத்திரிகையாளரை மௌனப்படுத்த அமெரிக்க அரசியல் அழுத்தத்திற்கு அடிபணிகிறது.

அசாஞ்ச் தூதரகத்திலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டால், அவர் அமெரிக்க கைகளில் வீழ்கின்ற அபாயத்தை எதிர்கொள்கிறார் மற்றும் மரண தண்டனைக்கு இட்டு செல்லக்கூடிய தேசத்துரோக குற்றச்சாட்டுகளின் பேரிலான வழக்கு அவர் மீது தொடுக்கப்படும்.  அவருடைய ஒரே "குற்றம்" அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் நட்பு நாடுகளின் சட்டவிரோத போர்கள் மற்றும் இராணுவ சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தியது தான்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள பிரதான கோட்டை இரயில் (புகையிரத) நிலையத்திற்கு வெளியே தனது ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது.

அதே நாளில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்கள், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சர்வதேச வாகன மற்றும் மின்னணு உற்பத்தி மையமாக உள்ள ஸ்ரீபெரும்புதூரிலுள்ள மத்திய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.

இந்த இரு பிரச்சார இயக்கங்களும், சிட்னியில் ஜூன் 17 ம் தேதி  ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட  ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிக்கு ஆதரவளிக்கின்றன.

பெரும் அதிகார சக்திகள் மற்றும் அவற்றிக்கு கீழ்ப்படிந்து இயங்கும் அரசாங்கங்கள்,  சுதந்திரமாகவும் ஜனநாயக ரீதியாகவும் தகவல்கள் இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பரவுவதை தடுக்க முயல்கின்றன. அசாஞ்ச் மீதான அமெரிக்கத் தலைமையிலான தாக்குதலின் வழியில், கூகுள் மற்றும் முகநூல், உலக சோசலிச வலைத் தளத்தையும், ஏனைய இடதுசாரி மற்றும் போர் எதிர்ப்பு வலைத் தளங்களையும் தணிக்கை செய்கின்றன. இணையம் மற்றும் சமூக ஊடக பயன்பாட்டை தடுக்க,  இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களும் தங்கள் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளன.

ஜூலியான் அசான்ஜை பாதுகாப்பது என்பது பேச்சு மற்றும் வெளிப்படுத்தும் சுதந்திரம் மற்றும் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தின் பாகமாகும்.

இந்த பிரச்சாரத்துக்கு ஆதரவு அளிக்கும்படியும்  இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் இணையும்படியும்  தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

 

இலங்கை ஆர்ப்பாட்டம்

மத்திய கொழும்பு கோட்டை புகையிரத நிலையம்

செவ்வாய் ஜூன் 19, 4.00 மணி.

 

இந்திய ஆர்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம்

தமிழ்நாடு

செவ்வாய் ஜூன் 19, 5.00 மணி.