ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

An appeal from a UK rail worker for a joint fight of rail, bus and tram workers across Europe

ஐரோப்பா முழுவதிலும் உள்ள புகையிரத, பேரூந்து மற்றும் டிராம் தொழிலாளர்களின் ஒரு கூட்டுப் போராட்டத்திற்கான ஒரு இங்கிலாந்து புகையிரத தொழிலாளியின் வேண்டுகோள்

By our correspondent 
28 January 2019

இங்கிலாந்தின் ஒரு புகையிரத ஊழியரிடமிருந்து இந்த வேண்டுகோளை அரச நெதர்லாண்ட்ஸ் ஸ்பூர்வேன் (டச்சு இரயில்வே) இல் பணியாற்றும் சக ஊழியர்களுக்கு உலக சோசலிச வலைத் தளம் அனுப்பியுள்ளது. அது டச்சு இரயில்வே இன் தனியார்மயப்படுத்திய பிரிவான Abellio அதனது இங்கிலாந்தின் தனியார் புகையிரத சேவைகளில் தொழில்களிலும், வேலை நிலைமைகள் மீதும் தற்போது நடாத்தும் தாக்குதலுக்கு எதிராக கூட்டுப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றது.

நெதர்லாண்ட்ஸ் ஸ்பூர்வேன் இன் சகோதர சகோதரிகளே

நான் இங்கிலாந்திலுள்ள தனியார் இரயில் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான Abellio இல் வேலை செய்கிறேன். Abellio ஆனது தனது சேவைகளில் அல்லது அது பங்காளியாக உள்ள சேவைகளில் ஓட்டுனர்களை மட்டுமே கொண்டு இயங்கும் இரயில்களை அறிமுகப்படுத்த முற்படுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் நூற்றுக்கணக்கான வேலைகள் அச்சுறுத்தலுக்குள்ளாகும். தெரேசா மே இன் பழமைவாத அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் அவர்கள் இதைச் செய்கிறார்கள். ஏந்தவொரு இரயில்வேயிலும் இரயில் நடத்துனர் (guard/conductor) ஒரு முக்கியமான பாதுகாப்பு பங்கை வகிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும்.

இந்த மூலோபாயம் நூற்றுக்கணக்கான நடத்துனர்களின் வேலைகளை ஆபத்திற்கு உட்படுத்தும். இவ்வாறு புகையிரதநிலைய உத்தியோகத்தர்கள் உட்பட ஓட்டுனர்கள் மீது சுமைகளைத் திணிப்பதால் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டதைப் போலவே பல தடவைகள் பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்று தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.

எவ்வாறாயினும், எங்கள் வேலைகள், தொழில்வாய்ப்புகள் மற்றும் எதிர்கால தலைமுறை தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறும் தொழிற்சங்கங்கள் எங்கள் முதுகுக்குப் பின்னால் Abellio உடன் இணைந்து செயற்படுவது எங்களுக்கு மிகவும் தெளிவாகப் புலப்படுகிறது.

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் பேரூந்துகள், டிராம்கள் மற்றும் இரயில்வேயில் Abellio இல் பணிபுரிபவர்களை நிறுவனத்திற்கு எதிரான பரந்த போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த இரண்டரை வருடகாலமாக ஒரு தொடர் போர்க்குணமிக்க வேலைநிறுத்த அலையின் போது வேலைநிறுத்தத்தை உடைக்கும் நடவடிக்கைகளை தொழிலாளர்கள் எதிர்நோக்குகையில் இரயில், கடல் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் (RMT) மூலம் எட்டப்பட்ட உடன்படிக்கை பற்றிய சில உண்மைகளைக் கூறவேண்டியுள்ளது:

ஸ்காட்லாந்திலுள்ள பெரும்பாலான இரயில் சேவைகளை மேற்கொள்ளும் Abellio ScotRail அதனுடைய 50 சதவீத சேவைகளை ஓட்டுனர்கள் மட்டும் சேவையை (Driver Only Operation-DOO) கொண்டு இயக்குகிறது. தொடர்ச்சியான வேலை நிறுத்தங்களுக்கு பின்னர் RMT ஆனது ஓட்டுனரை கதவுகளைத் திறக்கவும், மூட வேண்டிய பொறுப்பை நடத்துனரிடம் ஒப்படைத்ததன் மூலம் நடத்துனரின் பங்கை முழுவதுமாக நீக்குவதற்கான முன்னோடியாக அமைந்த ஒரு உடன்பாட்டை திணித்தது.

லிவர்பூல் நகரப்பகுதி முழுவதும் சேவைகளை வழங்கும் Mersey இரயில், ஓட்டுனர்கள் மட்டும் என்பதை எதிர்க்கும் நடத்துனர்களின் வேலை நிறுத்தங்களை RMT ஆனது முடக்கியது. தங்கள் தொழிற்சங்கமான ASLEF வேலைநிறுத்தத்தை கைவிடுமாறு கூறிய பின்னரும் ஓட்டுனர்கள் கைவிட மறுத்து விட்டனர். இந்த ஐக்கியத்தை பல சக ஊழியர்களால் முன்னைடுக்கப்பட்டதை அடுத்து பார்க்க முடிந்தது. Abellio தங்களினுடைய புதிய இரயில் சேவையிலும் ஓட்டுனர்கள் மட்டும் என்பதை விரும்பியது. நிர்வாகமும் மற்றும் RMT இன் கூட்டு அறிக்கையில் முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் கொள்கையளவில் அடிப்படையில் ஒப்புக் கொள்ளப்பட்டது என குறிப்பிட்டது. இது இரயில்களில் இரண்டாவது நபர் ஒருவர் இருப்பதற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை.' “ஒவ்வொரு இரயிலிலும் ஒரு இரண்டாவது பணியாளருக்கு சம்பளம் வழங்க கூடுதல் நிதி இப்போது உருவாக்கப்பட வேண்டும்". எனவும் குறிப்பிட்டது. இது ஒரு கொடூரமான காட்டிக்கொடுப்பாகும். எதற்கும் உத்தரவாதம் இல்லை.

கிழக்கு இலண்டனிலிருந்து இலண்டன் வரையிலான கூடுதலான பகுதிகளில் சேவையிலுள்ள Greater Anglia இல் 2019 இலிருந்து பிராந்திய, Intercity மற்றும் பெரும் கிழக்கு பாதைகளில் திருத்தப்பட்ட அல்லது புதிய இரயில்களை சேவையில் ஈடுபடுத்த உள்ளது. இரயில் சாரதிகள் “சாதாரண நிலைமைகள்” எனக்கூறப்படும் நிலைமையில் இரயிலின் கதவுகளை இயக்கி இரயிலை செலுத்துகிறார்கள். நடத்துனர்களும் தற்போது இருக்கின்றார்கள். ஆனால் நடத்துனர் இல்லாமல் இரயிலை இயக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. நடத்துனர்கள் பதவிகளை தக்க வைத்திருப்பதற்கு உடன்பட்டுள்ளமை தற்போதைய ஒப்பந்தத்தின் காலகட்டத்தை மட்டும் உள்ளடக்கியுள்ளது.

West Midlands Trains ஆனது இலண்டன் ஒய்ஸ்டனிலிருந்து பேர்மிங்காம் மற்றும் லிவர்பூல் வரையான பகுதிகளை உள்ளடக்கி சேவைகளை வழங்குகிறது. இந்நிறுவனமும் தொழிற்சங்கமும் 2018 இன் ஆரம்பத்தில் இரகசியமாக இணைந்து கொண்டன. ஜூன் மாதத்தில் ஓட்டுனர்கள் மட்டும் சேவை தொடர்பான ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தனர். ஓட்டுனர்கள் மட்டும் சேவை/ஓட்டுனர் கட்டுப்படுத்தும் சேவை எவ்வாறு இயங்குகிறது என்பதை அவதானிப்பதற்கும் ஓட்டுனர்கள் மட்டும் சேவையையால் செயற்படுத்தப்பட்ட புதிய நடைமுறைகளைப் பார்வையிடுவதற்கும் இரயில் யூனியன் அதிகாரிகள் ஸ்பெயினிற்கு அனுப்பப்பட்டனர் அத்துடன் ஓட்டுனர்கள் மட்டும் சேவை/ஓட்டுனர் கட்டுப்படுத்தும் சேவை எவ்வாறு இயங்கப்படுகின்றது என்பதை பார்வையிட வேறு இரயில்வே சேவைகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

இத் திட்டத்தில் ஒரு பில்லியன் பவுண்டுகள் முதலீடு காரணமாக, கதவு பாதுகாப்பு சேவையிலிருந்து நடத்துனர்களை அகற்றும் தொழிற்சங்க நிர்வாகத்தின் உடன்படிக்கையை எதிர்ப்பவர்களுக்கு எதிராக West Midlands Trains கடுமையான தந்திரோபாயங்களை பயன்படுத்த தொடங்குகிறது. West Midlands Trains இல் இரயில்வே எழுதுவினைஞ்ஞர் தொழிற்சங்கமான TSSA இல் உறுப்பினர்களாக இருக்கும் முகாமையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களால் உருவாக்கப்பட்ட வேலை நிறுத்த முறிப்பு பிரிவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

RMT ஆனது தேசிய வேலைநிறுத்தத்திற்கு மறுத்துவிட்டது. ஒவ்வொரு பகுதியிலும் நாங்கள் ஒவ்வொருவராகத் தேர்ந்தெடுத்தோம். தொழிற்சங்கத்தின் பாதுகாப்பு என்பது தேசிய நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த பழமைவாத அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட தொழிற்சங்க எதிர்ப்புச் சட்டங்களை எதிர்ப்பதாகும். இது ஐக்கிய இராச்சிய இரயில் தொழிற்துறைக்கான ஒரு வியாபார செயற்திட்டத்தில் Lord McNulty பரிந்துரைக்கும் செலவினக் குறைப்பு நடவடிக்கைகள் மூலம் Abellio வை போன்ற நிறுவனங்களுக்கு உதவுவதை தொழிற்சங்கங்கள் மறைக்கப் பயன்படுத்தும் ஒரு பொறியாகும்.

போக்குவரத்துதுறையில் McNulty வகித்த ஏனைய பதவிகளில் கடைசி தொழிற் கட்சி அரசாங்கத்தின் கீழ் போக்குவரத்து துறையினால் நிதியளிக்கப்பட்ட Rail Value for Money Study அமைப்பின் தலைவர் பதவியும் உள்ளடங்கும். 1996-1997 இல் பிரிட்டிஷ் இரயில் தனியார் மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்வமைப்பின் பரிந்துரைகளில் ஒன்று நடத்துனர்களை அகற்றுவது ஆகும். ஒற்றை நபரைக்கொண்ட இரயில்களினால் இரயில்வேயில் 20,000 வேலைகள் வெட்டி இல்லாதொழிக்கப்படும்.

இரயில் ஊழியர்களிடையே உண்மையாகப் போராடும் ஆற்றல் இருக்கிறது. ஆனால் போராட்டங்களுக்கான அனைத்து வழிகளும் தொழிற்சங்கங்களினால் மூடப்பட்டுள்ளன. இதுதான் நாம் இருவரும் வேலை செய்யும் அதே நிறுவனத்திலும் நடைபெறுகிறது. Abellio உங்கள் அரச கட்டுப்பாட்டு இரயில் வலைப்பின்னலில் உள்ள தனியார் மயமாக்கப்பட்ட நிறுவனமாகும். தனியார்மயமாக்குவது, வேலைநிறுத்த உடைப்பை மேற்கொள்வது எவ்வாறு என்ற அனுபவத்தை அது பிரித்தானியாவில் சேகரித்துக்கொள்வதுடன் டச்சு இரயில்வேயில் பணியாற்றும் எங்கள் சக ஊழியர்களுக்கு எதிராகவும் அதை செய்ய அச்சுறுத்துகின்றது.

Abellio அதன் ஊழியர்களுக்கு இவ்வாறு கூறுகிறது. 'ஒவ்வொரு நாளும் 14,400 Abellio ஊழியர்கள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பயணிகளுக்கு எங்கள் பேருந்துகள், இரயில்கள் மற்றும் டிராம்களில் பாதுகாப்பான, எளிதான மற்றும் நம்பகரமான பொதுப் போக்குவரத்தை வழங்குகின்றது. நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் பயணிகள்தான் எமது இதயத்தில் உள்ளனர்.

இருப்பினும் 2016 ஆம் ஆண்டு நடத்துனர்களால் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாம் கண்டிருப்பதைப் போலவே Abellio போன்ற தனியார் இரயில் உரிமையாளர்களும் கதவை இயக்கும் பணியை நடத்துனரிடம் இருந்து எடுத்து ஓட்டுனர்களிடம் ஒப்படைத்ததன் மூலம் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறிவிட்டது.

இவற்றை நிறுத்துவதற்கு நாம் ஒன்று கூடிப் போராட வேண்டும். நாம் முன்னர் வென்ற அனைத்தையும் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராடியே வெற்றி பெற்றனர். தொழிற்சங்கங்கள் எங்களை பிரிக்கின்றனர். எமக்கு தேவை முற்றுமுழுதான ஐக்கியமாகும். ஐரோப்பா பிரித்தானியா முழுவதும் பஸ், இரயில் மற்றும் டிராம் சாமானிய தொழிலாளர்களின் ஒரு ஐக்கியப்பட்ட நிலைப்பாடே எமது அனைவருக்கும் சாதகமான நிலைமையை ஏற்படுத்தும்.

இவை எங்களது அனுபவங்களாகும். உங்கள் கருத்துக்களை நாங்கள் கேட்க விரும்புகிறோம். எல்லா இடங்களிலும் உள்ள இரயில் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை விவாதிப்பது அவசியமாக உள்ளது.

தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களால் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதலில் போக்குவரத்து துறையின் தொழிலாளர்கள் முதுகுக்குப் பின்னால் தயாரிக்கப்பட்ட உண்மையான உண்மை மற்றும் திட்டங்களை வெளிக்கொணர்வதில் உலக சோசலிச வலைத் தளமானது பெரும் பங்காற்றுகிறது என்பதை உணர்ந்துகொள்வது முக்கிமானது. இது நம் அனைவருக்குமே தயாரிப்பு செய்வதற்கான ஒரு அழைப்பாகும். இவை எங்கள் வேலைகள், எங்கள் வாழ்க்கை மற்றும் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் இங்கு பணயத்தில் வைக்கப்பட்டுள்ளது.