ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UK elite Parachute Regiment use Corbyn poster for target practice

இங்கிலாந்து உயரடுக்கு பாராசூட் துணைப்படைப்பிரிவு, பயிற்சிக்கான இலக்காக கோர்பினின் படங்களைப் பயன்படுத்துகிறது

By the Socialist Equality Party (UK)
4 April 2019

தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பினின் படங்களை நோக்கி உயரடுக்கு பாராசூட் துணைப்படைப்பிரிவின் சிப்பாய்கள் தோட்டாக்களைச் சுடும் காணொளி, பிரிட்டனின் ஆளும் உயரடுக்கால் கிளறிவிடப்பட்டு வருகின்ற அரசியல் வன்முறை சூழலுக்கு ஒரு மரணகதியிலான எச்சரிக்கையாகும்.

இந்த காணொளி ட்வீட்டரில் கசியவிடப்படுவதற்கு முன்னதாக ஸ்னாப்சேட்டில் பதிவேற்றப்பட்டிருந்தது. நான்கு பாராசூட் படைப்பிரிவு சிப்பாய்கள் கைத்துப்பாக்கியால் மீண்டும் மீண்டும் கோர்பின் படத்தை நோக்கி சுடுவதை இதில் காணமுடிகிறது. கேமிரா கோர்பின் படத்தை நோக்கி திரும்பி, தோட்டாக்களால் துளைக்கப்பட்ட அவர் முகத்தை நெருக்கமாக காட்டுவதற்கு முன்னதாக, “இது குறித்து மகிழ்ச்சி" என்ற எழுத்துக்கள் அந்த காணொளியில் சேர்க்கப்பட்டுள்ளன. சிப்பாய்களில் சிலர் சிரிப்பதைக் கேட்க முடிகிறது.

 

காபூல் சிப்பாய்கள் பயிற்சிக்கான இலக்காக ஜெர்மி கோர்பினின் படத்தைப் பயன்படுத்துகின்றனர்

 

இந்த காணொளி சமீபத்திய நாட்களில் படமாக்கப்பட்டிருப்பதாகவும், அதன் நிஜத்தன்மை இராணுவத்தால் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 3வது பாராசூட் துணைப்படைப்பிரிவு (3 PARA) உறுப்பினர்களில் சுமார் 80 பேர் 2018 இல் இருந்து, உறுதியான ஒத்துழைப்பு திட்டத்தின் (Resolute Support Mission) பாகமாக ஆப்கானிஸ்தான் காபூலில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த காட்சி, ஸ்கை நியூஸ் எதை "புதிய காபூல் வளாகம்" என்று அறிவித்ததோ அதன் அறையிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தின் தீவிரத்தன்மையைக் குறைத்துக் காட்ட உடனடி முயற்சிகள் எடுக்கப்பட்டன.

முன்னாள் இராணுவச் சிப்பாய் சார்ஜென்ட் Trevor Coult டெய்லி மெயில் க்கு கூறினார், “அது ஒருபோதும் இணையத்தில் வெளியாகி இருக்கக்கூடாது. ஆனால் வேடிக்கையானது தானே தவிர, அதில் ஆழமானது ஒன்றுமில்லை. அதற்கொரு விசாரணை தேவையில்லை.” ஒரு சிரிக்கும் பொம்மைச் சித்திரத்துடன் (emoji) அந்த காணொளியைப் பகிர்ந்திருந்த Coult “ஒரு தொழிற் கட்சி தலைவருக்கு இது நல்லாயில்லை,” என்று அதில் கருத்தும் தெரிவித்திருந்தார். பழமைவாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சிப்பாயுமான ஜானி மெர்சர், “ஆழ்ந்த தவறான மதிப்பீட்டைச் செய்யும் நல்லவர்கள் ஒவ்வொரு அமைப்பிலும் இருக்கிறார்கள்,” என்று ட்வீட் செய்து, இந்த பாதுகாப்பு முயற்சியில் இணைந்தார்.

ஒரு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியது என்றாலும், விமானப்படையின் 16வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் நிக் பெர்ரி அந்த சம்பவத்தை "ஓர் ஆழ்ந்த மதிப்பீட்டுத் தவறு,” என்று குறைத்துக் காட்டினார்.

இந்த சம்பவத்தை ஒரு சில தனிநபர்களின் தவறான நடவடிக்கை என்று சித்தரிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் நிராகரிக்கப்பட வேண்டும். இந்த பாராசூட் துணைப்படைப்பிரிவு உலகில் உயரடுக்கு காலாட்படை பிரிவுகளில் ஒன்றாகும். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் குறித்து எந்த மூத்த அதிகாரிகளுக்கும் எதுவும் தெரியாது என்பதாக பலவந்தமாக நம்ப வைக்கப்படுகிறது.

பயிற்சிக்கான இலக்காக கோர்பினின் படத்தைப் பயன்படுத்துவது, மீண்டும் மீண்டும் அந்த தொழிற் கட்சி தலைவர் அதிவலது சக்திகளின் கொலை மிரட்டல்களுக்கு உள்ளாகி வருவதற்குப் பின்னணியில் நடக்கிறது. பிரெக்ஸிட் மீதான பயங்கர சூழல் அரசியல்ரீதியில் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் தான், அவர் பின்ஸ்பரி பூங்கா மசூதியில் ஒரு வலதுசாரி குண்டரால் வன்முறையான ரீதியில் தாக்கப்பட்டார், இந்நபர் பிரெக்ஸிட்டை எதிர்ப்பவர்களைக் கொல்ல விரும்புவதாக இணையத்தில் அச்சுறுத்தி இருந்தார்.

அனைத்திற்கும் மேலாக, கோர்பின் மீதான இந்த சமீபத்திய தாக்குதல் கிளர்ச்சி-தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்புப்பயிற்சி பெறும் ஒரு படைப்பிரிவினரிடம் இருந்து வருகிறது. சமீபத்திய தசாப்தங்களில் 3 PARA படைப்பிரிவு வடக்கு அயர்லாந்தில் நிலைநிறுத்தப்பட்டது அங்கே அது கத்தோலிக்க மக்களை மிருகத்தனமாக தாக்கியதுடன், ஃபால்க்லாந்து/மால்வினாஸ் போரில் சண்டையிட்டது.

தசாப்தங்களாக நீடித்து வரும் கட்டுப்பாடற்ற இராணுவவாதம் ஒரு தொழில்ரீதியான இராணுவ ஜாதியை உருவாக்கி இருப்பதுடன், அது அதிகரித்தளவில் நிர்வாக கட்டுப்பாடு அல்லது தடைகளின் எந்தவொரு வடிவத்திற்கும் விரோதமாக உள்ளது. இந்த இராணுவ காணொளிக்கான விடையிறுப்பில், முன்னாள் சிப்பாய்களும் அவர்களின் ஆதரவாளர்களும் கோர்பினைப் படுகொலை செய்வதற்கான இணைய அச்சுறுத்தல்களை விடுக்க சமூக ஊடகங்களைக் கையிலெடுத்துள்ளார்கள். “பிரிட்டன் அரச இராணுவ தொலைதொடர்பு பிரிவின் முன்னாள் சிப்பாய்" என்று அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர், “நானொரு முன்னாள் சிப்பாய். நான் நிஜமாகவே கோர்பினை இலவசமாக சுடுவேன்,” என்று ட்வீட் செய்திருந்தார்.

இத்தகைய அச்சுறுத்தல் எல்லாம், தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி கூப்பரைக் கொல்ல திட்டமிட்டதற்காக பாசிசவாதி ஜாக் ரென்ஷா குற்றவாளியாக காணப்பட்டு வெறும் ஒரு நாளைக்குப் பின்னர் வருகின்ற நிலையில், இவை அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.

மிகவும் அடிப்படையாக, காபூலில் உள்ள 3 PARA படைப்பிரிவு சிப்பாய்கள் கோர்பினை பயிற்சியின் இலக்காக வைப்பது, ஆயுதப்படைகளின் தலைமையினது பரந்த கண்ணோட்டங்களுக்கு வெளிப்பாட்டை வழங்குகிறது.

மூத்த இராணுவ பிரமுகர்கள் கடந்த மூன்றாண்டுகளாக, கோர்பின் அரசாங்கத்தை ஏற்க முடியாது என்று மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளனர், ஏனென்றால் போர், நேட்டோ மற்றும் அணுஆயுதங்களின் பயன்பாட்டை முன்னர் கோர்பின் எதிர்த்திருந்தார்.

செப்டம்பர் 2015 இல் தொழிற் கட்சி தலைவராக அவர் தேர்ந்தெடுப்பட்டு ஒரு வாரத்திற்குள், கோர்பின் பிரதம மந்திரியாகும் சம்பவத்தில் "நேரடி நடவடிக்கை" எடுக்கப்படும் என்று பெயர் வெளியிட விரும்பாத “சேவையில் உள்ள மூத்த தளபதியை" மேற்கோளிட்டு சண்டே டைம்ஸ் குறிப்பிட்டது.

“எல்லா மட்டத்திலும் பாரிய இராஜினாமாக்கள் இருக்கும், நடைமுறையளவில் இராணுவக் கலகத்திற்கு ஒத்த ஒரு சம்பவத்திற்கான நிஜமான சாத்தியக்கூறை நீங்கள் முகங்கொடுப்பீர்கள்... ஒரு பிரதம மந்திரி இந்நாட்டின் பாதுகாப்பை ஸ்தம்பிக்க செய்வதை தலைமை தளபதி அனுமதிக்க மாட்டார், அதை தடுக்க என்னவெல்லாம் வழிவகைகள் சாத்தியமோ, நியாயமாகவோ அல்லது முறைகேடாகவோ, அதை மக்கள் பயன்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன்,” என்றார்.

சில மாதங்களுக்குப் பின்னர், ஆயுதப்படைகளின் அரசியல் நடுநிலைமைக்கான அரசியலமைப்பு கோட்பாட்டை மீறி, பாதுகாப்புத்துறை தலைமை தளபதி சர் நிக்கோலஸ் ஹோஹ்டன் பிபிசி இன் ஆண்ட்ரூ மர் இக்குக் கூறுகையில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்ற கோர்பினின் அறிக்கையைக் குறித்து "அந்த சிந்தனை அதிகாரமாக மாற்றப்பட்டால் என்னை கவலைப்படுத்தும்,” என்றார்.

டோரி அரசாங்கம், தொழிற் கட்சியின் பிளேயரிச கன்னை மற்றும் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கும் வலதுசாரி ஊடகங்களும் கோர்பினை "தேசிய பாதுகாப்புக்கான" ஓர் அச்சுறுத்தலாக, பயங்கரவாதிகளின் நண்பராக, ரஷ்யாவின் புட்டின் அரசாங்கத்தினது கைப்பாவையாக, ஓர் யூத-எதிர்ப்புவாதியாக தாக்குவதில் ஒருங்கிணைந்துள்ளன.

2016 இல், “தொழிற் கட்சி இரத்தக்காட்டேரியை ஒழிக்க வேண்டும்" என்ற தலைப்பில், பிளேயரிசவாதியான டன் ஹொட்ஜ்ஸ் இன் கட்டுரை ஒன்று டெய்லி மெயில் இல் பிரசுரிக்கப்பட்டது, கோர்பின் ஒரு சவப்பெட்டியில் இருப்பதைப் போன்றவொரு புகைப்படமும் அத்துடன் பிரசுரிக்கப்பட்டது. அந்த கட்டுரை தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Jo Cox ஒரு பாசிசவாதியால் படுகொலை செய்யப்பட்டு வெறும் 10 நாட்களுக்குப் பின்னர் வெளியானது. கடந்த மூன்றாண்டுகளில் பிரிட்டிஷ் பத்திரிகைகளில் நிறைந்திருந்த எண்ணற்ற தலைப்புகளில், “காட்டேரியின் ஜிஹாதி தோழர்கள்,” “கோர்பின் 'ஒத்துழைப்பாளர்',” “கோர்பினும் கம்யூனிச உளவாளியும்" மற்றும் "அவர் கரங்களில் இரத்தம்" என்ற தலைப்புகளும் உள்ளடங்கி உள்ளன.

இந்த காணொளி வெளியாகி இருப்பது குறித்து நேற்று பரவலாக செய்திகள் வெளியான பின்னர், டோரி நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஜோன்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதம மந்திரி தெரேசா மேயிடம் வினவினார், “எதிர்கட்சி தலைவர் [ஜெர்மி கோர்பின்] பிரிட்டனை அரசாள பொருத்தமற்றவர் என்ற நிலைப்பாடு இன்னமும் இருக்கிறதா,” என்றார். மே பதிலளித்தார், “சாலிஸ்பரி வீதிகளில் ஓர் இரசாயன ஆயுத தாக்குதலுக்கு உள்ளான போது... நமது சொந்த பாதுகாப்பு முகமைகளை விட அவர் விளாடிமீர் புட்டினை நம்புவதற்கே முன்னுரிமை கொடுப்பதாக [கோர்பின்] தெரிவித்தார். இப்படியான ஒருவர் பிரதம மந்திரியாக இருப்பதற்கு இது இடமில்லை,” என்றார்.

பிரெக்ஸிட் மீது கோர்பினுடன் பேச்சுவார்த்தைகளில் நுழைவதற்காக மே ஐ கண்டிக்க இது பிரெக்ஸிட்-ஆதரவு டோரிகளுக்கு வழங்கப்படும் ஒரு குறிப்பாகும். “ஒரு மார்க்சிசவாதி, யூத-எதிர்ப்புவாதி தலைமையிலான அரசாங்கத்திற்கு வழிகாட்டி" மே அபாயத்தை மேற்கொண்டிருப்பதாக கரோலின் ஜோன்சன் தெரிவித்தார். சர்வதேச வளர்ச்சித்துறை முன்னாள் அமைச்சர் ப்ரீட்டி படேல் ட்வீட் செய்கையில், “பயங்கரவாதிகள் மற்றும் சோசலிச சர்வாதிகாரிகளுடன் தரப்பெடுக்கும் ஒருவர், நமது அணுஆயுத தற்காப்பை ஒப்படைத்துவிடக்கூடும், தனது கட்சியில் சர்வசாதாரணமாக யூத-எதிர்ப்புவாதத்தைச் செயல்படுத்தி உள்ள, பிரிட்டனை திவாலாக்கி விடக்கூடிய ஒருவரிடம் இப்போது பிரெக்ஸிட்டின் திறவுகோல்கள் வழங்கப்படுகின்றன,” என்றார்.

இதை பின்தொடர்ந்து, டோரிக்கள் பிரெக்ஸிட் நெருக்கடியைத் தீர்க்க தவறுவது கோர்பின்-தலைமையிலான அரசாங்கத்தை அனுமதிக்கும் ஆபத்திற்குட்படுத்துகிறது, அதாவது சன் பத்திரிகையின் வார்த்தைகளில், “அவர்களின் மார்க்சிச திட்டநிரலை நமது தொண்டைக்குழிக்குக் கீழே நிறுத்த நிர்பந்திக்கும்,” என்ற நாசகரமான பத்திரிகை செய்திகளைப் பின்தொடர்ந்து இது வருகிறது.

நேற்றைய இராணுவ காணொளிக்கு விடையிறுக்கையில், கோர்பின் தெரிவித்தார், “பாதுகாப்பு அமைச்சகம் அதன் மீது ஒரு விசாரணை நடத்தி, என்ன நடந்து கொண்டிருக்கிறது, யார் இதைச் செய்தது என்பதைக் கண்டறியும் என்று நம்புகிறேன்,” என்றார்.

தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி கூப்பர் ஒரு படுகொலை சதியிலிருந்து நூலிழையில் தப்பித்ததைக் குறிப்பிட்டுக் காட்டி, கோர்பின் தொடர்ந்து கூறுகையில், “ஆம் மக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன, ஆம் மக்களிடையே பிளவுகள் இருக்கின்றன,” என்றார். ஆனால், “அத்தகைய பிளவுகள் மற்றும் கருத்துவேறுபாடுகளைக் கண்ணியமான வழியில் வெளிப்படுத்துங்கள். அருவருக்கத்தக்க வன்முறையான ஏதோவிதத்தில் இறங்காதீர்கள்,” என்றவர் இறைஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

கோர்பினின் விடையிறுப்பு அரசியல்ரீதியில் குற்றகரமானது. ஆயுதப்படைகளிடம் இருந்து தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் அச்சுறுத்தலைக் குறித்து அதற்கு எச்சரிக்கையூட்டுவதற்குப் பதிலாக, அவர் அதன் விசாரணை நடைமுறைகளில் நம்பிக்கையை வெளிப்படுத்துவதுடன், வர்க்க எதிரியை நோக்கி சமரசத்தையும் சமாதானத்தையும் வழிமொழிகிறார்.

பிரெக்ஸிட் மீது மே உடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதென்ற அவரின் முடிவு இந்த முன்னோக்கின் ஒரு துணுக்கு ஆகும். அவரின் சொந்த கட்சியினது வலதுசாரிகளுக்கு எதிராக எந்தவொரு நகர்வையும் எதிர்க்கும் அவர், டோரி அரசாங்கத்தைப் பதவியிலிருந்து இறக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு அழைப்புவிடுக்க மறுக்கிறார். பேரம்பேசும் கூட்டுறவு மூலமாக தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கு அவர் உபதேசித்து வருகின்ற அதேவேளையில், அரசாங்கமோ பிரிட்டன் வீதிகளில் ஆயிரக் கணக்கான துருப்புகளை அணித்திரட்டுவதற்குத் திட்டங்களை வகுத்து வருகிறது.

உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட் சம்பவத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான Yellowhammer நடவடிக்கை என்பதைக் குறிப்பிட்டு, சுகாதாரத்துறை செயலர் மட் ஹன்காக் கூறுகையில், அமைச்சர்கள் "திட்டவட்டமான" இராணுவ சட்டத்திற்குத் திட்டமிடவில்லை, “அதேவேளையில் அதை விருப்பத் தெரிவிலிருந்து விட்டுவிடவும் இல்லை,” என்றார். இதுபோன்றவொரு நிலைமையில் கோர்பினின் படத்தைப் பயிற்சிக்கான இலக்காக பயன்படுத்துவது ஆர்ப்பாட்டக்காரர்களையும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களையும் சுட்டுவீழ்த்துவதற்கான தயாரிப்பாக வெளிப்படுகிறது.