World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Castroism and the politics of petty-bourgeois nationalism

காஸ்ட்ரோயிசமும் குட்டி முதலாளி்த்துவ தேசியவாத அரசியலும்

A lecture by Bill Vann

Use this version to print

இந்த விரிவுரை, ஜனவரி 7 1998 ல் மார்க்சிசமும் இருபதாம் நூற்றாண்டின் அடிப்படைப் பிரச்சனைகளும் என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சியால் சிட்னியில் (அவுஸ்திரேலியா) ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச கோடை பாடசாலையில் வளங்கப்பட்டதாகும்.

Bill Vann உலக சோசலிச வலைத்தளத்தின் சர்வதேச ஆசிரியர் ஆவார். அவர் யுத்தத்திற்கு பின்னரான இலத்தின் அமெரிக்க, தென் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்கள் பற்றிய குறிப்பிடும் படியான விமர்சன படைப்புகளை எழுதியுள்ளார்.

இந்த விரிவுரையின் முதல் பகுதி டிசம்பர்18 ல் பிரசுரிக்கப்பட்டது. இரண்டாம் பகுதியும் இறுதிப்பகுதியும் இங்கு பிரசுரமாகின்றது.

பகுதி-2

7. குவாரா இசத்தின் பெரும் தோல்வி

விளைவுகள், கணித்தவாறு துன்பகரமானவையாக இருந்தன. தான் பிறந்த ஆர்ஜென்டினாவில் பத்திரிகையாளரான ஜோர்ஜ் மாசெட்டி (Jorge Masetti) தலைமையின் கீழ் முதல் கொரில்லா குழுவை `சே` அமைத்தார். சேயின் வாழ்க்கை வரலாற்றில் இப்பெரும் தோல்வியின் குறிப்பாக நெஞ்சை உறைய வைக்கும் விஷயங்களை ஆண்டர்சன் தருகிறார். கொரில்லாக்கள் ஒருபோதும் எதிர்த்துப் போராடிப் பார்க்கவில்லை. சிலர் இறந்தனர் மற்றம் சிலர் காட்டில் பட்டினியால் இறந்தனர். மற்றவர்கள் போலீசுகளின் கைகளில் மாட்டினர். பெரும்பகுதி அழிவதற்கு முன் எவ்வாறாயினும் மாசெட்டி தனது மூன்று உறுப்பினர்களுக்கு ஒழுங்கீன குற்றத்தின் பேரில் மரண தண்டனை விதித்து ஆணையிட்டார். தண்டிக்கப்பட்ட மூன்று பேருமே யூதர்கள் என்று இந்த நெருக்கடியில் தப்பிப்பிழைத்த ஒருவர் குறிப்பிட்டதை ஆசிரியர் மேற்கோள் காட்டுகிறார். மாசெட்டி காஸ்ட்ரோயிசத்துடன் கூட்டு வைத்துக்கொள்ளும் முன்னர், ஆர்ஜென்டினாவில் அதிதீவிர வலது சாரி தேசியவாத மற்றும் யூத எதிர்ப்பு இயக்கத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார் என்பது கண்டறியப்பட்டது.

சேயின் சொந்த குழு பொலியாவிலும் இதே முடிவை எய்தியது. அவரது செயல்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவெனில், அந்நாட்டில் இருந்த சமூக மற்றும் அரசியல் நிலைபற்றிய அவரது முழுமையான அக்கறையின்மையாகும். 1951ன் பொலிவியப் புரட்சியில் மிகவும் சக்திமிக்க அணியாகிய டின் (Tin) சுரங்கத் தொழிலாளர்கள், சே அந்நாட்டுக்கு வருகை தந்தபோது முந்திய மாதங்களில் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டிருந்ததுடன் இராணுவத்துடனும் மோதலில் ஈடுபட்டிருந்தனர். அவரது நாட்குறிப்பில் அவர் இந்நிகழ்வுகளை தனது சொந்த நடவடிக்கைக்கு பின் நிகழ்வாக மட்டுமே குறித்துள்ளார். பொலிவியத் தொழிலாளர்களுக்கு முன்வைப்பதற்கு அவருக்கு முன்னோக்கோ அல்லது கொள்கையோ கிடையாது. பொலிவிய விவசாயியைப் பொருத்தவரை ஆயுதப் போராட்டங்களைத் தொடங்குதலுக்கான எதிர்ச்செயல். கொரில்லாக்களை ஆதரிப்பதாக இல்லை, மாறாக அவர்கள் இராணுவம் பக்கமே திரும்பினர்.

பொலிவியாவில் காஸ்ட்ரோ வாதிகள் மாஸ்கோ ஆதரவு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவை கணக்கிட்டனர். இந்த ஆதரவு ஒருபோதும் கைகூடவில்லை மற்றும் பெரும்பாலானோர் ஸ்ராலினிஸ்டுகளையும் மாஸ்கோ அதிகாரத்துவத்தையும் கொரில்லாக்களையும் கண்டித்து முழுமையுமாய் தனிமைப்படுத்தினர் என்றும் சேயின் இருப்பிடம் பற்றிய தகவல்களைக்கூட அவர்கள் அமெரிக்க புலனாய்வுத் துறைக்கு வழங்கியிருக்கலாம் என்றும் குற்றம் சாட்டினர்.

இது நம்பக் கூடியதாக இருக்கிறது. பொலிவிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலதிபர் மோஞ்சி (Monje) ஏறக்குறைய ஒரு கே.ஜி.பி. மனிதர். சேகுவாராவின் இறப்புக்குப் பின்னர் உடனே மாஸ்கோவில் நிரந்தர வசிப்பிடம் பெற்று சென்றுவிட்டார். கேஸ்டாநிடாசின் (Castaneda) வாழ்க்கை வரலாற்றில் இருந்து வெளிப்படுவதாவது, இலத்தீன் அமெரிக்காவின் பிரதான கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்திலும், 1940-ல் ட்ரொட்ஸ்கியின் படுகொலைகளில் நேரடிப்பாத்திரம் வகித்தவரைப் போன்ற ஆட்கள் பலபேர் பிரத்தியேக மேலாதிக்கம் செய்து கொண்டிருந்தனர் என்பது தான். அவர் சோவியத் ஆவணக் காப்பகத்தின் ரகசிய பத்திரங்களினூடாக இதனை, அதாவது எப்படி இந்தக் கட்சி மாஸ்கோவிலிருந்து நேரடி உதவிக்கொடை மூலம் நிதியூட்டப்பட்டது என்று நிறுவினார். சோவியத் அதிகாரத்துவம் நம்பகமான அரசியல் ஏஜண்டுகளுக்கு நிதியுதவி செய்தது. அதன் நோக்கம் வாஷிங்டனுடனான சமாதான சகவாழ்வுக்கான அதன் சொந்த வேட்கையாகும்.

முடிவில் அத்தகைய காட்டிக் கொடுப்பு உண்மையில் தேவையில்லாதது என்ற ஒன்றுடன் விடப்பட்டுள்ளது. அரசியல் முன்னோடிகள் இல்லாமல், ஆதரவை வென்றெடுக்க முன்னோக்கு இல்லாமல், இரண்டு டஜன் ஆயுதம் ஏந்திய ஆட்களை அப்பிராந்தியத்தில் கொண்டுவருவதால் புரட்சியைச் செய்யலாம் என்ற கருத்து எடுத்த எடுப்பிலேயே அழிந்து போனது. அவரது கடைசி நாட்களில் பொலிவிய ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டதும், சேகுவாரா, பேட்ரண்ட் ருஸ்ஸல் (Bertrand Russell) மற்றும் ஜோன் போல் சாத்தர் (Jean Paul Sartre) ஆகியோருக்கு கடிதங்களை விடுப்பதன் மூலம் சர்வதேச ஆதரவை வேண்டுவதற்கு திட்டமிட்டிருந்தார். இந்த சாகசத்தின் துன்பகரமான தன்மையின் அளவீடு இதுதான்.

8 கியூபாவும் நான்காம் அகிலமும்

நான்காம் அகிலத்தின் வரலாற்றில் கியூபப் புரட்சி ஒரு தீர்க்கமான திருப்புமுனை என நிரூபிக்கப்படவிருந்தது. அமெரிக்கப் பகுதியான சோசலிசத் தொழிலாளர் கட்சி, முதலாளித்துவ தேசிய வாதம் மற்றும் ஸ்ராலினிசத்துக்கு தன்னை மாற்றி அமைத்துக் கொண்ட சந்தர்ப்பவாதப் போக்கான பப்லோவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் முன்னணிப் பாத்திரத்தை ஆற்றியது.

1953-ல் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தலைமை வகித்தபின், ஒரு சகாப்தத்துக்குப் பின் சோசலிசத் தொழிலாளர்கட்சி, எர்னஸட் மண்டேலால் தலைமை தாங்கப்பட்ட பிரதான பப்லோவாதக் கட்சியுடன், பிரதானமாக காஸ்ட்ரோவாதம் மற்றும் குட்டி முதலாளித்துவ தேசியவாதத்தின் பாத்திரம் பற்றிய தங்களின் பொதுவான மதிப்பீட்டின் அடிப்படையில் மறு ஐக்கியம் செய்து கொண்டது. கியூபாவில் பெருமளவு உற்பத்திசக்திகள் தேசியமயமாக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அது தொழிலாளர்கள் அரசாக ஆகிவிட்டதாக அவர்கள் தீர்மானித்தார்கள். மேலும் கூட காஸ்ட்ரோ வாதம் சர்வதேசப் போக்காக ஆகமுடியுமென்றும், தொழிலாள வர்க்கத்தின் புதிய உலக புரட்சிகரத் தலைமையை வழங்கமுடியும் என்ற முன்னோக்கை அவர்கள் முன்னெடுத்தனர்.

இந்த முன்னோக்கு கியூபாவுக்கு அப்பாலும் விளைபயன்களைக் கொண்டிருக்கிறது. 1939-40ல் சோவியத் அரசு பற்றிய வரையறை மீதான விவாதம் தொடர்பாக ட்ரொட்ஸ்கி சுட்டிக்காட்டியவாறு, ஒவ்வொரு சமூகவியல் வரையறைக்கும் பின்னால் வரலாற்று முண்கணிப்பு இருக்கிறது. கியூபாவை தொழிலாளர் அரசு என சிறப்பு பெயர் சூட்டி இறுகப்பற்றிக் கொள்ளல், மார்க்சிலிருந்து வளர்த்தெடுத்த சோசலிசப் புரட்சி பற்றிய முழுவரலாற்று மற்றும் தத்துவார்த்த கருத்துருவுடன் துண்டித்துக் கொள்வதாகும்.

கியூபாவில் அதிகாரமானது கொரில்லாப் படையின் கைகளில் விழுந்தது. அது தொழிலாளர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாத, தெளிவான குட்டி முதலாளித்துவ தேசியவாதப் பண்பைக் கொண்டதாகும். தொழிலாளர்கள் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் எந்தவித குறிப்பிடத்தக்க பாத்திரத்தையும் பெற்றிருக்கவில்லை. ஒரு முறை அரசு அமைந்ததும், அதன்மீது எந்தவிதமான வழிகளிலும் ஜனநாயகக் கட்டுப்பாட்டை நிறுவும் முயற்சியில் அது ஈடுபட்டிருந்ததில்லை.

அத்தகைய அரசை ``தொழிலாளர் அரசு`` என தகுதிப்படுத்துவது, ஆழமான கிளைத்தெழுதல்களைக் கொண்டிருந்தது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான சுதந்திரத்திற்காக மார்க்சிச இயக்கத்தால் தொடுக்கப்பட்ட முழுப்போராட்டத்தையும் கைவிடுவதை அது அர்த்தப்படுத்தியது. அதற்குப் பதிலாக அது தேசியவாத தலைமைக்கு தொழிலாள வர்க்கத்தைக் கீழ்ப்படுத்துவதன் மூலம் சோசலிசத்திற்கான பாதை அமைக்கப்படுவதாக சுட்டிக்காட்டியது. அது குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தில் வேரூன்றிய காஸ்ட்ரோ வாதிகளாக, கொரில்லாப் படைகளாக மற்றும் ஏனைய தேசிய வாதிகளாக இருக்கக்கூடும். அவர்கள் சோசலிசப் புரட்சியை தலைமைதாங்கி நடத்துவார்களாம்; நான்காம் அகிலத்தின் கட்சிகளால் அணிதிரட்டப்பட்டு, கல்விபுகட்டப்பட்ட தொழிலாள வர்க்கம் அல்லவாம். அதுதான் பப்லோவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட கியூப தொழிலாளர்கள் அரசு பற்றிய சமூக வரையறையிலிருந்து ஊற்றெடுக்கக்கூடிய மையவரலாற்று முன்கணிப்பாகும்.

கியூபா தொடர்பாக ஹான்சனால் அபிவிருத்தி செய்யப்பட்ட முன்னோக்கு மார்க்சிசத்தினை மொத்தமாய் கொச்சைப்படுத்தல் மேல் தங்கியிருந்தது. கிழக்கு ஐரோப்பிய எல்லைப்புற அரசுகளையும் சீனாவையும் ``உருச்சிதைந்த தொழிலாளர் அரசு`` என்று தற்காலிகமாக மற்றும் மிகவும் நிபந்தனையுடன் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் பயன்படுத்தப்பட்ட, முந்தைய முடிவினை அவர் புறப்பாட்டுப்புள்ளியாக எடுத்தார்.

தோழர் பீட்டர் நேற்று சுட்டிக்காட்டியவாறு, இந்த ஆரம்ப விவாதங்களில் சோசலிசத் தொழிலாளர் கட்சி இந்த அரசுகள் வரலாற்று ரீதியாக தாக்குப்பிடிக்க முடியாதவை என்பதை சுட்டிக்காட்டுவதற்காக ``உருச்சிதைந்த`` எனும் பெயருரிச் சொல்மீது வலியுறுத்தல் செய்தது. பப்லோ இந்த வரையறையை, ஸ்ராலினிசத்துக்குப்பின் புரட்சிகர உள்ளுறை ஆற்றல் என்று அர்த்தப்படுத்துவதற்காகப் பயன்படுத்திய முயற்சியை அவர்கள் எதிர்த்திருந்தனர்.

எவ்வாறாயினும் ஹான்சன், பப்லோவைவிட மிகவும் குரூரமான பாணியில், கியூபா எப்படி வரிசையாய் அருவமான சோதனைகளை சந்தித்தது, எல்லாவற்றுக்கும் மேலாக பொருளாதார தேசிய மயமாக்கலை, அது அதனை தொழிலாளர் அரசு எனும் வகையினத்தில் வைப்பதாகக் கூறப்படும் தேசியமயமாக்கலை எப்படி சந்தித்தது என விளக்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

தொழிலாள வர்க்கம் புரட்சியைக் செய்திருக்கவில்லை அதன்பிறகு அரசு சாதனத்தின்மீது எவ்வித கட்டுப்பாட்டையும் கைக்கொள்ளவில்லை, இவையனைத்தும் கியூபப் புரட்சி எதிர்கொள்ளத்தவறிய வெறுமனே சாதாரண சோதனைகளாக எடுத்துக்கொள்ளப்பட்டன என்றும், இது தொடர்பான முன்னேற்றம் இன்னும் செய்யப்படவேண்டியதாக விளக்கப்பட்டு, விமர்சனமற்ற ஆதரவு எல்லாவற்றையும்விட அவசியமானது எனப்பட்டது.

அந்நேரம் அவர் கூறியதாவது: ``கியூப அரசாங்கம் தொழிலாளர்கள், படைவீரர்கள் மற்றும் விவசாயிகளின் கவுன்சில்களான பாட்டாளி வர்க்க ஜனநாயக ஆட்சி வடிவங்களை இன்னும் நிறுவவில்லை. ஆயினும் அது சோசலிசத்தில் நகருகிறவாறு தன்னைத்தானே ஜனநாயகப் போக்குடையதுபோல் நிரூபித்திருக்கிறது. அது மக்களை ஆயுதபாணிகளாக்கவும் மக்கள் இராணுவத்தை அமைக்கவும் தங்களது புரட்சிக்கு ஆதரவளித்த அனைத்துக் குழுக்களும் சுதந்திரமாய்க் கருத்துக்களை வெளிப்படுத்த ஆது உத்தரவாதம் தந்திருக்கின்றது. இந்த வகையில் ஸ்ராலினிசத்துடன் கறைப்பட்டிருக்கின்ற ஏனைய முதலாளித்துவமில்லாத அரசுகளுக்கு மாறுபாடாக, அது வரவேற்கப்படக்கூடிய நிலையில் இருக்கிறது.

``கியூபப் புரட்சி சுதந்திரமாக அபிவிருத்தியடைய அனுமதிக்கப்பட்டால், அதனுடைய ஜனநாயகப்போக்கு ஐயத்திற்கு இடமின்றி பாட்டாளி வர்க்க ஜனநாயக வடிவங்களின் தொடக்க உருவாக்கத்திற்கு வழிவகுக்கும். ஆகையால் புரட்சிக்கு மும்முரமாய் ஆதரவு தருவதற்கான பலமான காரணங்களுள் ஒன்று, அத்தகைய போக்கு செயல்படுவதற்கான உயர்ந்தபட்ச வாய்ப்பினை வழங்குவதாகும்.

கியூபாவின் யதார்த்தம் ஹான்சனால் தீட்டப்பட்ட சிவப்பு ரோஜாக்களின் காட்சியிலிருந்து மிகவும் வேறுபட்டதாகும். உதாரணமாக கியூப ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஈவிரக்கமற்ற முறையில் நசுக்கப்பட்டார்கள். அவர்களின் தலைவர்கள் சிறையிடப்பட்டார்கள் மற்றும் பத்திரிகைகள் நசுக்கப்பட்டன. உலகில் மற்றெந்த நாட்டையும் விட அதிகமான அரசியல் கைதிகளை நீண்டகாலத்திற்கு சிறையில் அடைத்து வைத்திருந்த நாடாக இந்தத் தீவு நீண்டகாலமாக இருந்து வருகிறது. அவர்களுள் ஜுலை 26 இயக்கத்தின் காஸ்ட்ரோவின் முன்னாளைய தோழர்கள் கொஞ்சம் நஞ்சம் பேரல்லர்.

ஆயினும், தத்துவார்த்த நிலைப்பாட்டிலிருந்து ஹான்சனின் மதிப்பீட்டின் மிகவும் ஏமாற்றக்கூடிய அம்சம், வாய்ப்பு அளிக்கப்பட்டால் காஸ்ட்ரோ ஆட்சி பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயக வடிவங்களை ஏற்படுத்துமாம். அதாவது தொழிலாளர் சபைகளை அல்லது ரஷ்யப் புரட்சியுடன் இணைத்துச் சொன்னால் சோவியத்துக்களை ஏற்படுத்துமாம்.

தொழிலாளர் அதிகாரத்தின் அத்தகைய உறுப்புகள், குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளால் உண்டுபண்ணப்பட்ட ஆட்சியில் மேலிருந்து ஏற்படுத்தப்படாது அல்லது வழங்கப்படாது. அத்தகைய அமைப்புக்கள், அவை காஸ்ட்ரோ, கடாபி அல்லது சதாம் ஹீசைன் ஆகியவர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், அவை போன பார்ட்டிச ஆட்சிக்கான ஒப்பனையைவிட வேறெதுவாகவும் ஒருபோதும் இருக்கவில்லை. தொழிலாளர்கள் தாங்களே மக்களை அணிதிரட்டி, முதலாளித்துவத்தைத் தூக்கி வீசி, புதிய பாட்டாளிவர்க்க அரசு அதிகாரத்தை நிறுவுவதற்கான சாதனங்களால் மட்டுமே உண்மையான தொழிலாளர் சபைகள் அல்லது சோவியத்துக்கள் உருவாக்கப்பட முடியும்.

லெனினும் போல்ஷேவிக்குகளும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின், சோவியத்துக்களை தொழிலாளர்களிடம் ஒப்படைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், அது அதிகாரத்துக்கான போராட்டத்தை வழிநடத்தியது. இந்த உறுப்புக்கள் மூலம் ரஷ்ய பாட்டாளி வர்க்கம் அதன் வர்க்கப்போராட்டத்தின் வளர்ச்சியின் அடிப்படையிலும், ரஷ்ய மார்க்சிஸ்டுகளின் முன்னரே திட்டமிடப்பட்டு தீர்மானிக்கப்பட்ட தலையீட்டினால் உண்டுபண்ணப்பட்ட வர்க்க அரசியல் நனவின் அடிப்படையிலும் தமது ஆட்சியை உருவாக்கினர்.

காஸ்ட்ரோவின் தேசியமயமாக்கலுக்கும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என்ற அவரது சுய தம்பட்டத்துக்கும் பப்லோவாதிகள் அடிபணிந்ததானது, நிரந்தரப் புரட்சியின் நிரூபணத்தைக் கொண்டிருக்கிறது.

யதார்த்தத்தில் இரண்டாவது உலக யுத்தத்தைத் தொடர்ந்து பத்தாண்டுகளின் போது, ஏனைய பல ஒடுக்கப்பட்ட நாடுகளைப் போன்றே கியூபாவும் எதிர்மறை அர்த்தத்தில் நிரந்தரப்புரட்சியின் உறுதிப்படுத்தலை வழங்கியுள்ளது. அதாவது எங்கு தொழிலாள வர்க்கத்துக்கு புரட்சிகர கட்சி இல்லையோ, அதன் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமை வழங்குவதற்கு அது தகுதியற்றுப் போக, தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினதும் குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளினதும் பிரதிநிதிகள் உள்ளே நுழையவும், தங்களது சொந்த தீர்வினைத்திணிக்கவும் முடிகிறது. நாசர், நேரு, பெரன், பென் பெல்லா, சுகர்னோ, பாத்திஸ்டுகள் (Nasser, Nehru, Peron, Ben Bella, Sukharno, the Baathists) மற்றும் பிந்தைய காலகட்டத்தில் ஈரானில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் நிகராகுவாவில் சன்டினிஸ்டாக்கள் ஆகியோர் இந்த நிகழ்வுப் போக்கின் எடுத்துக்காட்டுகள் ஆவர். உண்மையில் இவை எல்லாவற்றிலும் தேசிய மயமாக்கலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

1961ல் சோலிசத் தொழிலாளர் கட்சிக்கு எஸ்.எல்.எல்.ஆல். (Socialist Labour League) அனுப்பப்பட்ட பத்திரத்தில் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஹான்சனின் துதிபாடலை கடுமையாக விமர்சித்தனர்.

"அத்தகைய தேசிய வாதத்தலைவர்களின் பங்கினை ஊதிப்பெருக்குவது ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் வேலையல்ல,`` என அவர்கள் குறிப்பிட்டார்கள். ``சமூக ஜனநாயக மற்றும் குறிப்பாக ஸ்ராலினிசத் தலைமைகளின் காட்டிக்கொடுப்பின் காரணமாக மட்டுமே அவர்கள் வெகுஜனங்களின் ஆதரவின் மேல் செல்வாக்கு செலுத்தமுடியும். இந்த வகையில் அவர்கள் ஏகாதிபத்தியத்துக்கும் தொழிலாளர் விவசாயிகள் ஜனத்திரளுக்கும் இடையில் இடைத்தடையாக இருப்பார்கள். சோவியத் யூனியனிடமிருந்து பொருளாதார உதவிபெறும் சாத்தியக்கூறு, ஏகாதிபத்தியத்துடன் நல்ல பேரத்தை செய்ய வைத்தது. முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தலைவர்கள் மத்தியிலுள்ள மிகவும் தீவிரமான சக்திகள் கூட ஏகாதிபத்திய உடைமைகளைத் தாக்கவும் மக்கள் மத்தியிலிருந்து மேலும் ஆதரவை வென்று எடுக்கவும் செய்யவைத்தது. ஆனால் நம்மைப் பொருத்தவரை, ஒவ்வொரு விஷயத்திலும் இந்த நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்தில் ஒன்று மார்க்சிச கட்சி மூலம் அரசியல் சுதந்திரத்தைப் பெற்று, ஏழை விவசாயிகளுக்கு தலைமை தாங்கி சோவியத்துக்களைக் கட்டவும், சர்வதேச சோசலிசப் புரட்சியுடன் தேவையான தொடர்புகளை உணரவும் செய்வது மிக முக்கியமான விஷயமாகும். தேசியவாதத் தலைமைகள் சோசலிஸ்டுகளாக ஆகவேண்டும் என்ற நம்பிக்கையினை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பதிலீடாக்க வேண்டும் என்பது நமது கருத்தில் எதிலுமே கிடையாது."[5]

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அடுத்தடுத்த சீரழிவினை நன்கு அறிந்தவர்கள், ஹீலி, பண்டா மற்றும் சுலோற்றர் ஒரு சகாப்தத்துக்குப் பின்னர் பி.எல்.ஓ. மற்றும் பல்வேறு அரபு ஆட்சியாளர்கள் சம்பந்தமாக வெளிப்படையாக பின்பற்றவிருந்த நிலைப்பாட்டின் நேரடி குற்றப்பத்திரம் போல இந்த பந்தி உரைக்கின்றது. இந்த ஆய்வின் துல்லியமான தன்மையையும் நான்காம் அகிலத்தின் மீதான திருத்தல்வாதிகளின் தாக்குதல் புறநிலை ரீதியான வர்க்க சக்திகளில் வேரூன்றியுள்ளது என்ற உண்மையையும் இது மட்டுமே எடுத்துக்காட்டுகிறது. பப்லோவாதத்துக்கு எதிரான போராட்டத்தைக் கைவிட்டு, பிரிட்டிஷ் பகுதியின் தலைமை சோசலிசத் தொழிலாளர் கட்சியை அழிவுகரமாக கீழறுத்திருந்த அதே வர்க்க சக்திகளின் அழுத்தத்திற்கு வீழ்ந்தது.

கியூபா ஒரு தொழிலாளர் அரசு மற்றும் அதன் புரட்சி சோசலிசத்துக்கான புதியபாதை என்ற பிரகடனத்தில் சம்பந்தப்பட்டிருந்தது என்னவெனில், நிரந்தரப்புரட்சியின் முழு முன்னோக்கினையும் கைவிடுவதாகும்; தொழிலாள வர்க்கம் பின்தங்கிய நாடுகளில் தலைமைப் பாத்திரத்தை இனியும் ஆற்றப் போவதில்லை; இந்த வர்க்கத்துக்கு சோசலிச நனவை வளர்த்தெடுப்பதற்காக போராடுவதற்கு அது தேவையுமில்லை; அதற்குப்பதிலாக விவசாயிகளைத் தங்களின் தளமாகக் கொண்ட கொரில்லாக்களின் அணி, தொழிலாளர்கள் இல்லாமல் சோசலிசத்தைக் கொண்டு வர முடியும்; தொழிலாளர்கள் இருந்தபோதிலும் கூட சோசலிசத்தைக் கொண்டு வரமுடியும் என்பதாகும்.

இது மார்க்சிசத்தின் மிக அத்தியாவசிய அடித்தளத்தை நிராகரிப்பதைக் குறித்தது. சோசலிசத்துக்கான போராட்டம் பாட்டாளி வர்க்கத்திடமிருந்து பிரிக்கப்பட்டது. தொழிலாள வர்க்கத்தின் விடுதலை, தொழிலாள வர்க்கத்தின் பணியாக அது இனியில்லை. பதிலாக தொழிலாள வர்க்கம், கொரில்லாக்களின் கதாநாயக நடவடிக்கைகளுக்கு ஊமைப்பார்வையாளராக ஆக்கப்பட்டது.

இந்த முன்னோக்கை எண்ணிப் பார்க்கையில், பிடல் காஸ்ட்ரோவுடன் குட்டி முதலாளித்துவ இடது முழுமையாக கொண்டுள்ள மையலுக்கான அடிப்படையை ஒருவர் தெளிவாக கிரகித்துக் கொள்ளமுடியும். காஸ்ட்ரோவிடம் அவர்கள் காண்பது, தொழிலாள வர்க்கத்தை மேலாதிக்கம் செய்வதற்கு, பார்ப்பதற்கு சுதந்திரமான பாத்திரம் போல் தெரியும், குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தின் திறமையாகும். இடது புத்திஜீவிகள், மாணவ தீவிரவாதிகள் அல்லது நடுத்தரவர்க்க எதிர்ப்பாளர்கள் தங்களை தொழிலாள வர்க்கத்துக்கும் தொழிலாளர்கள் மத்தியில் சோசலிச நனவை வளர்த்தெடுப்பதற்கும் ஆன கடினமான நீண்ட போராட்டத்திற்கு கீழ்ப்படுத்திக்கொள்ள மாட்டார்கள் என்பதற்குச் சான்றாக கியூபா அவர்களிற்கு சேவை செய்கிறது. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் தங்களின் சொந்த தன்னியல்பான நடவடிக்கை மூலம் சமுதாயத்தை புரட்சிகரமாய் ஆக்ககூடியதாக இருந்ததாம்.

மார்க்சிசத்தின் மீதான இத்திருத்தல்வாதத் தாக்குதலை எதிர்த்துப் போராடுகையில், SLL அடிப்படை வழிமுறைகள்பால் கியூபா மீது விவாதத்தை ஆய்வு செய்தது.

சோசலிசத் தொழிலாளர்கட்சி ட்ரொட்ஸ்கி விளக்கியிருந்த ``பலவகைப் பண்புகள் கொண்ட நிகழ்வுகளை வழிபடல்``. அதாவது இருக்கின்ற சமூக அமைப்பினால் தொழிலாள வர்க்கத்தினுள் இருக்கின்ற தலைமைகளால் பரந்த ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தொழிலாளர்களின் மத்தியில் இருக்கும் முதலாளித்துவ நனவு வடிவங்கள் இவற்றால் தீர்மானிக்கப்பட்ட யதாரத்தம் என்று கூறப்படுவதற்கு தங்களை அடிபணிந்துபோதலில் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது என்பதை அவர்கள் விளக்கிக்காட்டினர். புரட்சிகர பாட்டாளி வர்க்கக் கட்சியின் நனவான போராட்டத்தில் இருந்து முழுமையாக பிரிக்கப்பட்ட புறநிலையாக, தீர்மானிக்கும் காரணிகளாக இவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சோசலிசத் தொழிலாளர் கட்சியின் வழிமுறையானது, இந்த ``நிகழ்வுகளை`` அமைதியாய் எண்ணிப்பார்த்தல் மற்றும் அரசியல் வெற்றிக்காக மிகவும் உடனடி முன்னேற்றங்களை தரக்கூடியதாக தோற்றமளிக்கும் இருக்கின்ற தலைமைகளுக்கு அடிபணிந்துபோதலாகும். இவ்வாறு அவர்கள் இத்தலைமையின் ஒவ்வொரு நடவடிக்கையையும் விவாதித்து, கொடுக்கப்பட்ட சூழ்நிலைகளில் அவர்கள் என்னதான் செய்யமுடியும்? என அவர்களின் நடவடிக்கையை நியாயப்படுத்தி வக்காலத்து வாங்குவர். இருப்பினும் இந்த ``சூழ்நிலைகள்``, தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தின் பேரில் சுதந்திரமாக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் நனவுபூர்வமான போராட்டத்தை எப்போதும் விளக்கியிருக்கும்.

ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஈட்டிய தத்துவார்த்த வெற்றிகளை எஸ்.எல்.எல். பாதுகாத்தது. தொழிலாள வர்க்கமல்லாத தலைமைகள் காலனித்துவ நாடுகளிலும், முன்னாள் காலனித்துவ நாடுகளிலும் உள்ள ஏகாதிபத்திய ஒடுக்குமுறை மற்றும் பின்தங்கிய நிலைமைகளில் இருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை நிறைவேற்ற முடியாது என்பதை முழு ஏகாதிபத்திய சகாப்தம் மூலமான அனுபவங்கள் எடுத்துக்காட்டியிருக்கின்றன என்று அது வலியுறுத்தியது.

இது தொழிலாள வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமும் உலக சோசலிசப் புரட்சியை விஸ்தரிக்கச் செய்வதன் மூலமும் மட்டுமே நிறைவேற்றப்பட முடியும். இந்த ஆய்விலிருந்து ஊற்றெடுக்கும் பிரதானமான பணி, எல்லாவகையான சந்தர்ப்பவாதப் போக்குகளுக்கும் எதிரான போராட்டத்தை, குறிப்பாக தொழிலாள வர்க்கத்தை தேசியவாதத்துக்கும் தேசியவாதத் தலைமைக்கும் கீழ்ப்படுத்துகின்ற ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான புரட்சிகரக் கட்சிகளைக் கட்டுவதாக இருந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, சோசலிசப் புரட்சியின் சாதனையானது, தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் பகுதிகளுக்குள் உயர்ந்தமட்ட சோசலிச அரசியல் நனவை வளர்த்தெடுப்பதைத் தேவையாகக் கொண்டிருக்கிறது என்பதை பப்லோவாதம் மறுத்தது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவு என்பது பப்லோவாதிகள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் பற்றிய பிரச்சனையாக இருந்தது. தொழிலாள வர்க்கம் சோசலிசப் புரட்சியுடன் சில உறவுகளைக் கொண்டிருக்கிறது என்ற மட்டத்துக்கு அது வெறுமனே புறநிலை ரீதியான சக்தியாக, மற்றவர்களால் கையாளப்படும் மற்றும் தலைமை தாங்கப்படும் சக்தியாக இருந்தது.

பப்லோவாதிகள் சோசலிசத் தொழிலாளர் கட்சியுடன் மறு ஐக்கியம் செய்து கொண்டபின் வரைந்த தீர்மானத்தில், கியூபப் பிரச்சினை மீது வளர்த்தெடுக்கப்பட்ட தத்துவார்த்த திருத்தல்களின் அரசியல் விளைபயன்களை அரும்முயற்சி செய்து உச்சரித்தனர். அது பின்வருமாறு விவரித்தது: ``பின்தங்கிய நாடுகளில் எதிரியின் பலவீனமானது, முனை மழுங்கிய கருவியுடன் கூட அதிகாரத்துக்கு வரும் சாத்தியத்தை திறந்து வைத்துள்ளது.`` வேறு வார்த்தைகளில் கூறினால், தொழிலாளவர்க்க கட்சிகளைக் கட்டாமல்கூட தொழிலாளர் அரசுகளை நிறுவமுடியும் என்பதாகும்.

இந்த நாடுகளில், குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவில் பரந்த மக்களின் வறுமை மற்றும் முதலாளித்துவ அரசுக் கட்டமைப்புகளின் சார்புரீதியான பலவீனம், ``ஒரு புரட்சிகர அலையின்`` தோல்வி தானாகவே சார்புரீதியான அல்லது தற்காலிகமாகக்கூட சமூக அல்லது பொருளாதார உறுதிப்பாட்டுக்கு வழிவகுக்காத சூழ்நிலைகளை உண்டுபண்ணுகிறது என்று அவர்கள் அறிவித்தனர். மரபுரீதியாக தீர்ந்து போகாததாகக் காணப்படும் பரந்த மக்களின் போராட்டம் தொடர்கிறது. எதிரியின் பலவீனமானது, ஏகாதிபத்திய நாடுகள் விஷயத்தில் உள்ளதைக்காட்டிலும், தற்காலிகத் தோல்விகளில் இருந்து முழுமையாகக் குணமடைய புரட்சிக்கு வாய்ப்பளிக்கிறது.

இது ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப்புரட்சியை முழுமையாக திரித்தல் ஆகும். ட்ரொட்ஸ்கி, ஜாரிச ரஷ்யாவில் முதலாளித்துவ வர்க்கத்தின் பலவீனத்தைச் சுட்டிக் காட்டுகையில், அதனை காலவரையற்ற வெற்றிடம் பற்றிய ஏதோ ஒன்றாக குறிப்பிடவில்லை. ஆனால் ஒருபுறம் செறிந்த ரசுஷ்ய தொழிலாளவர்க்கத்தின் புறரீதியான வலிமைக்கும் மறுபுறம் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கும் இடையிலான உறவாகவே குறிப்பிட்டார். முதலாளித்துவ வர்க்கம் குட்டி

முதலாளித்துவ ஜனநாயகத்தைக் கட்டுப்படுத்த அல்லது நசுக்க ஒருபோதும் மிகப்பலவீனமாக இருந்ததில்லை. அது தன் தலைமையில் புரட்சிகரத் தலைமை கொண்ட இளம் பாட்டாளி வர்க்கத்தை எதிர்கொள்கையில் அது பலவீனமாக இருந்தது. இருப்பினும் பப்லோவாதிகள், தொழில் துறைப்பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரத்தை நிராகரித்து, அத்தகைய குட்டி முதலாளித்துவ சக்திகளுக்குப் புரட்சியின் பணியை ஒப்புக் கொடுத்தனர்.

அவர்களது ``முனை மழுங்கிய கருவிகள்`` மற்றும் ``தீராத வெகுஜனப் போராட்டங்கள்`` பற்றிய தத்துவமானது, பிரேசிலில் ஜெனரல் கேஸ் டெலோ பிராங்கோ தலைமையில் நடந்த அமெரிக்க ஆதரவு ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளின் வரிசைக்கிரமத்தில் முதல் நிகழ்வில் விரிவாக இருந்தது. அவை இலத்தீன் அமெரிக்காவை பலபத்தாண்டு கால பயங்கரமான ஒடுக்கு முறைக்குள் மூழ்கடித்தது. அவர்களின் நிழல்கள் கண்டம் முழுவதும் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. பப்லோவாதிகள் இந்த நிகழ்வுகளுக்காக தொழிலாள வர்க்கத்தை தயாரிக்கத்தவறியது மட்டுமல்ல, புரட்சி தொழிலாள வர்க்கத்தை விட ஏனைய சக்திகளால் நிறைவேற்றப்படமுடியும் என்று வலியுறுத்தியதன் மூலம் அவர்களை ஊக்கப்படுத்தினர். தனிப்பட்ட கொரில்லாக் குழுக்களின் ஆயுத நடவடிக்கைகள் பற்றிய காஸ்ட்ரோவின் முன்னோக்கை அங்கீகாரம் செய்தனர்.

9. பப்லோவாதமும் தலைமை நெருக்கடியும்

சேகுவாராவினால் முன்வைக்கப்பட்ட கொரில்லா யுத்தத்துக்கான கண்டரீதியிலான பரந்த சூழ்நிலைகள் தோல்வி என நிரூபிக்கப்படுவது, நாடுகள் பொதுவாகப் பங்கிட்டுக் கொண்ட ஒரேயோரு விஷயமாக அதுயிருந்த அதேவேளை, இலத்தின் அமெரிக்காவில் காஸ்ட்ரோயிசம் துருவ ஈர்ப்பாக மாறியது ஏன்? தொழிலாள வர்க்கத்தில் உள்ள செல்வாக்கு கொண்ட தலைமைகள், குறிப்பாக ஸ்ராலினிச கம்யூனிச கட்சிகள், வளர்ந்து வரும் புரட்சிகர நெருக்கடியின் சூழ்நிலைகளின் கீழ் முன்னெடுத்து வழிகாட்டிச் செல்லவில்லை.

ஆகையால் பப்லோவாதிகள் கொண்டாடுகின்ற புதிய யதார்த்தம், காஸ்ட்ரோயிசம் போன்றவற்றால் தலைமை தாங்கப்படும் தீவிர தேசிய வாதப்போக்கின் உதயமானது, அடிப்படையில் தொழிலாள வர்க்கத்திற்குள்ளே புரட்சிகரத் தலைமை நெருக்கடியைத் தீர்க்காததன் வெளிப்பாடாகும். இருந்தும் அவர்கள் அதனை இந்நெருக்கடிக்குத் தீர்வு என முன்வைத்து நான்காம் அகிலத்தின் மூலோபாய இலக்கினைத் தட்டிக்கழித்தனர். மற்றும் தொழிலாளர்களுக்கு சுதந்திரமான நோக்குநிலை மற்றும் அதிகாரத்துவங்களின் செல்வாக்கை நிர்மூலமாக்கும் கட்சியைக் கட்டியமைப்பதற்கான போராட்டத்தை கைவிட்டு, நான்காம் அகிலத்தின் பாத்திரத்தை, குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளுக்கும் ஸ்ராலினிஸ்டுகளுக்கும் உதவி செய்து, அவர்கள் மேல் செல்வாக்கு செலுத்தி மற்றும் அவர்களை நயமாக இடித்துரைத்து இடது பக்கம் செல்லவைக்கும் பாத்திரமாகக் குறைத்தனர்.

எவ்வாறு இம்முன்னோக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது? சேகுவாராவின் பொலிவியப் பெருந்தோல்வி மற்றும் இலத்தின் அமெரிக்காவின் பெரும் வர்க்கப் போராட்ட நிகழ்வினைத் தொடர்ந்து பின்னர், 1968ல் பப்லோவாதிகள் ஒன்பதாவது காங்கிரசைக் கூட்டினர். அவர்கள் ஐக்கிய செயலாளர்கள் குழுமத்துடன் இணைந்துள்ள இலத்தின் அமெரிக்காவில் உள்ள கட்சிகளுக்கு தொழிலாளவர்கத்தைக் கைவிட்டு, கொரில்லா யுத்தத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினர்.

காங்கிரசின் பத்திரம் பின்வருமாறு கூறியது: ``சில நாடுகளில் நகர்ப்புற வர்க்கங்களால் பெரும் மோதல்கள் முதலில் எழலாம். உள்நாட்டு யுத்தம் வேறுபட்ட வடிவங்களை எடுக்கலாம். அதில் அந்தக்காலகட்டம் முழுவதும் பிரதான அச்சாணியாக கிராமப்புற கொரில்லாக்கள் இருப்பர். இந்த பதத்தின் பிரதான அர்த்தம் இராணுவ-பூகோளரீதியானது. அது சிறப்பாக (அல்லது மேலாதிக்கம் செய்வதிலும் கூட) விவசாய உட்சேர்க்கையை குறிப்பாகச் சுட்டாது``.

தீர்மானம் தொடர்கிறது: ``இலத்தின் அமெரிக்காவுக்கான ஒரேயொரு யதார்த்தபூர்வமான முன்னோக்கு நீண்ட வருடங்கள் நீடிக்கும் ஆயுதப்போராட்டம் தான். தொழில்நுட்ப ரீதியாகத் தயார் செய்வது வெறுமனே வேலைபற்றிய பார்வையல்ல, இன்னும் சொல்லப் போனால் சர்வதேச அளவில் அடிப்படை அம்சமாகும். குறைந்தபட்ச சூழ்நிலைகள் இருக்காத நாடுகளிலும் கூட அது அடிப்படை அம்சங்களுள் ஒன்றாகும்``.

அங்கு அதிக தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்திருக்கமுடியாது. இலத்தின் அமெரிக்கப்பகுதிகளுக்கு உள்ளே தங்களுக்கு விவசாயிகள் மத்தியில் போதுமான ஆதரவு இருக்கின்றதா அல்லது நாட்டுப்புறத்தில் எழுச்சிக்கு தேவையான அரசியல் சூழ்நிலைகள் இருக்கின்றதா என ஒருவேளை அரிதாக ஐயங்கள் எழுந்தாலும், தீர்மானம் அவர்களுக்கு விவசாய ஆதரவு தேவையில்லை என்றும், அரசியல் சூழ்நிலை விஷயத்துக்கு அப்பாற்பட்டதென்றும் உத்தரவாதம் அளித்தது. தேவைப்பட்டது எல்லாம் ஆயுதப் போராட்டத்துக்கான ``தொழில் நுட்பத் தயாரிப்புகளாக`` இருந்தன.

விளைவு, இலத்தின் அமெரிக்காவில் பப்லோவாதிகளால் வழிநடத்தப்பட்ட காரியாளர்கள் சரீரரீதியாக துடைத்தழிக்கப்பட்டார்கள் மற்றும் அரசியல் கலைப்பு நடந்தது.

எடுத்துக்காட்டாக ஆர்ஜண்டினாவில், ஐக்கிய செயலாளர் குழுமத்தின் அதிகாரப்பூர்வ பகுதி பப்லோவாதிகளுடன் சம்பிரதாய பூர்வமாக முறித்துக் கொள்வதற்கு முன்பு, தங்களைத் தாங்களே ERP என அழைத்துக் கொண்டது. பணத்திற்காக வணிக நிர்வாகிகளைக் கடத்தலில் அது ஈடுபட்டது. அவை கோரிக்கைகளுடன் கூலி உயர்வுகளையும் தொழிலாளர்களுக்கான சிறந்த சூழ்நிலைகளையும் கோரிக்கையாக சேர்க்க இருந்தன. அத்தகைய நடவடிக்கைகளின் விளைவு என்னவாக இருந்தது? அடிப்படையில் தொழிலாளர்கள் முதலாளித்துவத்துக்கு முடிவுகட்டும் போராட்டத்தினை முன்னெடுப்பது அவர்களின் வேலையல்ல என்று கற்பிக்கப்பட்டது. அவர்கள் தங்களுக்காக அதனைச் செய்யும் ஆயுதம் ஏந்திய கொரில்லாக்களின் மாபெரும் பார்வையாளர்களாக பணிபுரிந்தனர்.

இது தீர்க்கமான வரலாற்றுச் சந்தியில் இடம்பெற்றது. பப்லோவாதம் காஸ்ட்ரோயிசத்தில் கரைக்கப்பட்ட காலகட்டம் எல்லாவற்றுக்கும் மேலாக இலத்தின் அமெரிக்கா முழுமையும் தொழிலாளவர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களால் பண்பிடப்பட்டிருந்தது. சிலியில் தொழிலாளர்கள் தாக்குதலில் தாக்குப் பிடித்திருந்தனர். இறுதியில் அலண்டேயின் ஐக்கிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. அதனுடைய கொள்கைகள் பினோசெட்டின் சர்வாதிகாரத்துக்கு வழி அமைத்தது. ஆர்ஜண்டினாவில், 1969ன் கோர்டோ போசோ நிகழ்ச்சி - அதில் கோர்டோபோசோ தொழிலாளர்கள் நகரை முற்றுகையிட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். நீண்ட தாக்குதலை தொடங்கினர். அது பெரோனிய வாதிகளால் நசுக்கப்பட்டது. பின்னர் அது விடேலாவின் சர்வாதிகாரத்தால் துடைத்து அழிக்கப்பட்டது. பொலிவியாவில், திரும்பத் திரும்ப சுரங்கத் தொழிலாளர்கள் எழுச்சி கொண்டனர். தங்களது தலைவர்களால் அது ஜெனரல் ஜெ.ஜெ. போரஸ் கீழான இராணுவத்தின் இடது பகுதிகள் மற்றும் தேசியவாதிகள் எனப்படுபவர்களுக்கு கீழ்ப்படியுமாறு செய்யப்படவிருந்தது. முன்கணித்தபடியே, போரஸ் தனது மிகப்பாரம்பரியமான சகாக்களிடம் உடனே அதிகாரத்தைக்கொடுத்தார். அவர்கள் பொலிவியத் தொழிலாளர்களை ஈவு இரக்கமற்ற முறையில் ஒடுக்கினர்.

காஸ்ட்ரோயிசத்துக்கான திரும்புதலுடன், பப்லோவாதிகள், தொழிலாள வர்கத்தையும் பழைய அதிகாரத்துவத்தின் மேலாதிக்கத்திலிருந்து அதனை விடுவிப்பதற்கான போராட்டத்தையும் கைவிட்டிருந்தனர். காஸ்ட்ரோ நிரந்தரப்புரட்சியினை உறுதிப்படுத்தியிருந்தார் என்று கூறுவது போல, இந்த தீர்க்கமான போராட்டத்தை மிகையானதாக ஆக்கினர்.

சோசலிசத் தொழிலாளர் கட்சியின் ஹான்சன், இக்கொள்கையை அவரது வழமையான எரிச்சலுடனும் குரூரத்துடனும் காஸ்ட்ரோ ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை வென்றுவிட்டார் என்று பிரகடனம் செய்தார்.

``ஸ்ராலினிச தடையை உடைத்தெறிய முடியாமல், புரட்சியானது கணிசமான அளவு பின்தங்கிவிட்டதுடன் சுற்றுவழியை எடுத்துவிட்டது. இந்தச் சுற்றுவழி நம்மை கியூபாவின் சியராமாஸ்ட்ரா உட்பட்ட ஏதோவொரு வகை கரடுமுரடான தளத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறது. ஆனால் ஸ்ராலினிச பாதை அடைப்பு இப்போது கடக்கப்பட்டுவிட்டது, என்னவோ தெளிவாகயிருக்கிறது.

``தலைமைக்காக மாஸ்கோ திரும்பத் தேவையில்லை. கியூபாவில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியபாடம் இதுதான். ஸ்ராலினிசத்துடன் அறிதுயில் நிலையை முறித்துக்கொள்ள, சியரா மாஸ்ட்ரா காடுகளில் தவழ்ந்து செல்லவேண்டியது அவசியமாக உள்ளது``.

இந்த முடிவானது, கியூபாவுக்கு அப்பால் சென்றடைந்த திட்டவட்டமான அரசியல் விளைபயன்களைக் கொண்டிருந்தது. குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளால் தலைமையேற்று நடத்தப்படும் கொரில்லாயுத்தத்தின் மூலம் ``ஸ்ராலினிச வழி அடைப்பை கடத்தல்`` ஒருவருக்கு எளிது என்றால், தொழிலாளவர்க்கத்தின் மீது ஸ்ராலினிசம் செய்துகொண்டிருந்த குரல்வளை நெறிப்பை முறியடிக்க நான்காம் அகிலத்தால் முன் எடுக்கப்பட்ட நீண்ட, கடினமான போராட்டம் தேவைப்படாததோடு மட்டுமல்ல எதிரானதுமாகும்.

இந்த முன்னோக்கின் மொத்த பாதிப்பு ஒடுக்கப்பட்ட நாடுகளில் குறிப்பாக இலத்தின் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர் இயக்கத்தின் மீதான ஸ்ராலினிச பிடியை உடைப்பதற்கு மாறாக இறுக்குவதாகவே இருந்தது. இது தொழிலாளவர்க்கத்துக்குள் எந்தப்போராட்டத்திலிருந்தும் இலத்தின் அமெரிக்க இளைஞர்களின் முழு தலைமுறையையும் திசைதிருப்பவே உதவியது. கொரில்லாயிசத்துக்கு திரும்புதலானது ஸ்ராலினிச மற்றும் ஏனைய அதிகாரத்துவத் தலைமைக்கு வரம் கொடுப்பதைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. அது இளைஞர்கள் மத்தியிலும் அதேபோல் தொழிலாளர்கள் மத்தியிலும் உள்ள மிகவும் புரட்சிகரமான சக்திகளை தனிமைப்படுத்தி, அதன்மூலம் தொழிலாளர் இயக்கத்தின் மீதான அதிகாரத்துவத்தின் சொந்தப்பிடியை பலப்படுத்தியது.

முடிவில் குட்டிமுதலாளித்துவ தேசியவாதத்துக்கு பப்லோவாதிகளின் அடிபணிதலானது, 1960-களின் பின்பகுதியிலும் 1970-களின் ஆரம்பத்திலும் பிரதான வர்க்கப்போராட்டத்தில் தொழிலாளவர்க்கம் நுழைகையில், தொழிலாளவர்க்கத்துக்கு புரட்சிகர தலைமை இல்லாதிருந்ததை உறுதிப்படுத்த உதவியது.

அவர்கள் முன்கொண்டுவந்த கொரில்லாப் போராட்டமானது, இராணுவத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் சர்வாதிகாரத்தை திணிக்க ஒரு சாக்காக அமைந்தது. இவ்வாறு இந்த திருத்தல்வாதப்போக்கு இலத்தின் அமெரிக்க தொழிலாளர்களால் என்றும் அனுபவித்திருந்திராத இரத்தம் தோய்ந்த தோல்விகளுக்கான தயாரிப்பில் தீர்க்கமான பாத்திரத்தை ஆற்றியது.

10. கொரில்லாயிசத்தின் நிலுவைக்கணக்கு

குவாராயிச-காஸ்ட்ரோயிச இயக்கங்கள் சோசலிசப் புரட்சியின் புதிய கருவிகளாக பப்லோவாதிகள் பிரகடனம் செய்தவையாக ஆயின. அவர்களின் ஸ்தூலமான பரிணாம வளர்ச்சியைக் கண்டுபிடிக்க இந்த இயக்கங்களின் வர்க்கப் பண்பினை அவற்றின் தோற்றத்திலிருந்து திரைநீக்கிப் பார்க்கவேண்டும்.

வெனிசுலாவின் FALN இயக்கம் 1960களில் கியூப ஆதரவோடு அமைக்கப்பட்ட கொரில்லா இயக்கங்களுள் ஒன்றாகும். அந்த காலகட்டத்தின் இத்தகைய இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரது கருத்தினை மேற்கோள்காட்டுவோம்.

``நாம் வெனிசுலாவின் விடுதலைபற்றிப் பேசுகிறபோது, நாம் அனைத்து இலத்தின் அமெரிக்காவின் விடுதலையையே அர்த்தப்படுத்துகிறோம். நம் அண்டை அயலில் உள்ளவர்கள் தத்துவரீதியாக முன்னணியில் உள்ளவர்கள். நாம் சர்வதேச ஐக்கியத்தை உண்மையான புரட்சிகர வழியில் செயல் உருப்படுத்திக்காட்டுவோம், ஆதலால் நாம் போராடக் கடமைப்பட்டுள்ளோம், ஏகாதிபத்தியத்தை துடைத்து ஒழிக்கும் வரை போராடுவோம். குறிப்பாக வட அமெரிக்க ஏகாதிபத்தியம் செயலிழந்து போகுமளவுக்கு குறைக்கப்படும்வரை எமது ஆயுதங்களைக் கீழே போடாதிருக்க கடமைப்பட்டுள்ளோம்``.

இவ்வரிகளுக்கு உரியவர் தியோதோரோ பெட்காப் (Teodoro Petkoff) என்பவர். அவர் தனது ஆயுதங்களை மட்டும் கீழே போடவில்லை, வெனிசுலாவின் திட்டம் மற்றும் பன்னாட்டு நாணயநிதியத்தின் கெடுபிடி வேலைத்திட்டங்களை அமல்படுத்துவதற்கான பொறுப்பின் முதன்மை அலுவலராகவும் ஆகியிருந்தார். கண்டரீதியான ஐக்கியம் மற்றும் யாங்கி ஏகாதிபத்தியத்தின் முடிவு வரை போராடுவதிலிருந்து, பெட்கோப் இப்போது நாடு கடந்த முதலீட்டிற்காக இந்தப் பிராந்தியத்தின் ஏனைய முதலாளித்துவ பொருளாதாரத்துடன் வெற்றிகரமாய் போட்டியிடுவதை இலக்காகக்கொண்டு, நிறுவனங்களை தனியார்மயமாக்கல் மற்றும் கூலிகளை குறைத்தல் போன்றவற்றில் ஈடுபட்டார். வெனிசுலாவில் இந்த ஆண்டின் ஜனாதிபதி வேட்பாளருக்கான பிரதான வேட்பாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறார்.

அவரது அம்சம் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறது. உருகுவேயில் தலைநகர் மாண்டிவிடியோவில் என்றும் இல்லாத அளவுக்கு சமூக நிலைமைகள் சிதறடித்துள்ளதை நிர்வகிக்கின்ற முதலாளித்துவ தேர்தல் முன்னணியான பிரண்டி அம்பிலியோவின் பகுதியை இப்போது துபாமாரோ கொரில்லாக்கள் அமைத்திருக்கின்றனர். வி-19 கொலம்பிய அரசாங்கத்துடன் செய்துள்ள ஏற்பாடானது, அவர்களது தலைவர்களுக்கு பாராளுமன்றத்தில் பதவிகளை உறுதிப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல், அவர்களின் உறுப்பினர்களை சிறிய வர்த்தகக் கடன்களுக்காக தங்களின் ஆயுதங்களை வியாபாரம் செய்ய அனுமதித்துள்ளது.

1980களில் காஸ்ட்ரோ அரசும் அதனது ஆதரவாளர்களும், நிகராகுவா சாண்டினிஸ்டாக்களால் அதிகாரம் கைப்பற்றப்பட்டதுடனும் எல்சால்வடாரில் உள்நாட்டு யுத்த வெடிப்புடனும், மத்திய அமெரிக்கா தங்களின் முன்நோக்கின் புதிய நிரூபணத்தை வழங்கியதாகப் பிரகடனப்படுத்தினர்.

ஆனால் இவ்வியக்கங்கள் எல்லாம் என்னவாயின. எல்சால்வடோரில் FMLN, குவாதிமாலாவில் URNG, சாண்டினிஸ்டாக்கள் ஆகிய அனைவரும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் படுகொலைக்கு காரணமாயிருந்த சக்திகளிடம் உடன்படிக்கைகளில் இணைந்தனர். காண்டாடோரா மற்றும் எஸ்கிபுலஸ் பேச்சு வார்த்தைகளில் முதலாளித்துவவர்க்கத்தின் அமெரிக்க ஆதரவு அணிகளின் கைகளில் அரசு அதிகாரத்தை நிலைப்படுத்தும், அதேவேளை விடுதலை இயக்கங்கள் என்று அழைக்கப்படுகின்றவற்றின் காரியாளர்களை இந்த அரசாங்கங்களில் பாராளுமன்ற பொறுப்பாளர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்களாக திரும்பவைக்கின்ற இந்த உடன்படிக்கைகளில் காஸ்ட்ரோ ஒரு தரகராக இருந்து உதவிசெய்தார். இவ்வனைத்துக் குழுக்களும் பல்வேறு பிரிவுகளாக பிளவுபட்டு அரசியல் காட்டிக்கொடுப்பு மற்றும் நிதி ஊழல்களுக்காக தங்களை நியாயப்படுத்தி, ஒருவரை ஒருவர் கண்டனம் செய்துகொண்டிருந்தனர்.

இதற்கிடையில், இப்பிராந்திய மக்கள் 20 ஆண்டுகளுக்கு முன் பிராந்தியத்தில் புரட்சிகர எழுச்சிகளுக்கு வித்திட்டவற்றைவிட மோசமான அல்லது அதுபோன்ற ஒடுக்குமுறை மற்றும் ஏழ்மையின் சூழல்களுடன் மோதலுக்கு வந்தனர். மிகவும் போர்க்குணம் கொண்ட தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் மத்தியில் செயலிழப்பை விதைத்து இருந்ததுதான் இந்த காஸ்ட்ரோயிஸ்டுகளின் செல்வாக்குடைய குட்டி முதலாளித்துவ, தேசியவாத இயக்கங்களின் மொத்தபாதிப்பாகும்.

இன்றைய கியூபா

கியூபா என்னவாக இருக்கிறது? முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் காஸ்ட்ரோ ஆட்சியும் பப்லோவாத திருத்தல்வாதிகளும் பிரகடனம் செய்த சோசலிசத்துக்கு புதிய பாதையின் இறுதி விளைவு என்ன?

முப்பதாண்டுகளாக தீர்வானது மாஸ்கோ அதிகாரத்துவத்திடமிருந்து பெரும் மானிய உதவிபெற்று தப்பி இருந்ததற்கு நன்றி உடையதாக இருக்கவேண்டும். அமெரிக்க மதிப்பீட்டின் படியும் காஸ்ட்ரோ ஆதரவாளர்களின்படியும் சோவியத் ஒன்றியத்திடமிருந்து கியூபாவுக்கு கிடைத்த பொருளாதார மானியங்கள் ஏறத்தாழ ஆண்டுக்கு 3 மில்லியன் டாலர்களுக்கும் 5 மில்லியன் டாலர்களுக்கும் இடையிலானதாக இருந்தது. இந்த உதவிக்கான செய்முறை சோவியத் அணிநாடுகள் கியூப விவசாய உற்பத்திப்பொருட்களை குறிப்பாக சர்க்கரை போன்றவற்றை உலக சந்தை விலைக்கும் மேலாக பன்னிரண்டு மடங்கு அதிகமான விலைக்கு வாங்குவதும் பெட்ரோலியத்தை சந்தைவிலைக்கும் கீழ் விற்பனை செய்வதும் ஆகும். கியூபா கைமேல் பணத்திற்காக சர்க்கரையை பக்கத்து நாடான டொமினிக்கண் குடியரசிலிருந்து வாங்குகின்ற நிலையையும், எண்ணையை சந்தைவிலைக்கு மறு விற்பனை செய்கின்ற நிலையையும் அடைந்தது.

சோவியத் மானியங்களைச் சார்ந்திருத்தல் இறுதியில் சர்க்கரையில் கியூபாவின் தனித்த கலாச்சாரத்தை கெட்டிப்படுத்தும் விளைவை ஏற்படுத்தியது. சர்க்கரையில் இத்தனிக் கலாச்சாரம் வரலாற்று ரீதியாக அதன் பின்தங்கிய நிலைக்கும் ஒடுக்குமுறைக்கும் அடித்தளமாக இருந்து வந்திருக்கிறது. 1959 புரட்சிக்கு சற்று முன்னர், கியூபாவின் ஏற்றுமதிகளில் 83% சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றது. அதில் சர்க்கரை, புகையிலை, நிக்கல், மீன் மற்றும் ஒருசில விவசாய பண்டங்களும் அடங்குவன. சோவியத் அணியிடமிருந்து உற்பத்தி செய்யப்பட்ட நுகர்வுப்பொருட்கள் மற்றும் எந்திரங்களை கியூபா இறக்குமதி செய்தது. அதன் பெரும்பாலானபங்கு உணவை இங்கு குறிப்பிடத் தேவையில்லை.

வீழ்த்தமுடியா ``உயர்தலைவர்`` பிடல் காஸ்ட்ரோவால் ஆணையிடப்பட்ட பொருளாதாரக் கொள்கையில், தீடீர் தீடீரென்று கொண்டுவரப்பட்டவையோ அல்லது செய்த ஒட்டு வேலைகளோ இந்த அடிப்படை உறவினைமாற்றவில்லை. முடிவில் கியூப மக்களால் சுகாதாரம், கல்வி மற்றும் சத்துணவு ஆகியவை தொடர்பாக வென்றெடுக்கப்பட்ட கணிசமான சீர்திருத்தங்கள் இந்த மானியங்களால் தக்கவைக்கப்பட்டிருந்தன. இப்போது ஆட்சியானது நேரடி அந்நிய முதலீட்டின் பக்கம் திரும்பிக்கொண்டிருக்கிறது. இந்த சீர்திருத்தங்கள் படிப்படியாக சிறிது சிறிதாக வெட்டிக் குறைக்கப்பட்டுவருகின்றன.

காஸ்ட்ரோ சோவியத் அதிகாரத்துவத்துடன் பாஸ்டின் பேரத்தில் இறங்கினார். அதில் அவர் அமெரிக்க சோவியத் உறவுகளில் சோவியத் மானியங்கள் பெறுவதற்கு பகடைக்காயாக தொழிற்பட்டார். தவிர்க்க முடியாதவாறு சாத்தான் தனது கணக்கைக் காட்டத் துவங்கியது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது கியூபாவுக்கான பொருளாதார பேரழிவை உருவாக்கியது. கியூபா அரசின் பதிலானது, அந்நிய முதலீட்டை அதிகரிக்க ஊக்கப்படுத்துவதாகவும் கியூபாவுக்குள்ளேயே அடுக்கடுக்கான சமூகத்தட்டுக்களின் வளர்ச்சியைத் தோற்றுவிப்பதாகவும் அமைந்தது. அரசு நடத்துகின்ற செய்தித்தாளான கிராண்மாவிடம் பேட்டி அளிக்கையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ரோபர்டோ ரோபெய்னா விவரித்ததாவது: ``கியூபாவில் இடம்பெற்றுக் கொண்டிருப்பது என்னவெனில், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான முழு உத்தரவாதத்துடன் கூடிய பொருளாதாரத் திட்டமிடல், இந்தத் திறந்துவிடல் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஒவ்வொரு நாளும் அகலமாகவும் ஆழமாகவும் ஆகிவருகிறது.

``மிட்சுபிஷி மோட்டார்ஸ், கேஸ்ட்ரால், யுனிலீவர், ஷெரிட்கோர்டன், க்ருபோசோல், டோடல், மீலியா ஹே ாட்டல்கள் டோமோஸ், கெணான், பேயர் (Mitsubishi Motors, Castrol, Unilever, Sherrit Gordon, Grupo Sol, Total, Melia Hotels, Domos, ING Bank, Rolex, DHL, Lloyds, Canon, Bayer) இவை வர்த்தக உலகில் வெற்றிகள் பெற்ற பெயர்கள், இவை கியூபாவில் உள்ளன. இந்நிறுவனங்களில் சில உலகில் பெரும் மூலதனத்தைக் கொண்டிருக்கின்றன. அவை நம்மில் தங்களது நம்பிக்கையை வைத்துள்ளன.

``முதலீடு செய்தலை இலகுவாக்கல், பாதுகாப்பு, மரியாதை இலாபம் திரும்பக்கிடைக்க உத்தரவாதம், உயர்மட்ட தனிச்சிறப்புடன் கூடிய ஆட்களின் இருப்பு, இடவசதி, முன்னேறவிருப்பம், பேச்சுவார்த்தைகளில் அக்கறை மற்றும் அவர்களின் கியூப பங்குதாரர்களின் விசுவாசம் ஆகியன, கியூபாவுடன் இணைவதற்கு முடிவுசெய்த சக்திகளுக்கு மிக விருப்பமான அம்சங்களுள் சிலவாகும்.

அவர்கள் கிராண்மாவில் தங்கவில்லையாயினும், அவர்கள் கியூபாவில் இப்பூகோளத்தின் மலிவான உழைப்பை பெறமுடியும் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளால் பயிற்றுவிக்கப்பட்ட போலீஸ் அரசினால் வேலை நிறுத்தமில்லா சூழ்நிலைக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்று இந்த முதலீட்டாளர்களுக்கு ஐயத்திற்கிடமின்றி தனியாகக் குறிப்பிடப்பட்டது.

மேலும் அரசு நடத்தும் நிறுவனங்களை தனியார் மயமாக்கல், இலத்தின் அமெரிக்காவின் பெரும்பகுதியில் உள்ளதைக்காட்டிலும், கியூபாவில் தனியார்மயமாக்கல் மிகவும் எளிமையானதாகும். பிரேசில், ஆர்ஜண்டினா மற்றும் ஏனைய நாடுகளில் அத்தகைய நடவடிக்கைகளுக்கு பாராளுமன்றங்களால் புதிய சட்டங்களை நிறைவேற்றலும், நீண்ட விவாதங்கள் இடம் பெறலுடன் வேலைநிறுத்தங்கள் மற்றும் வெகுஜன எதிர்ப்புகளும் தேவைப்படும். கியூபாவில் தேவைப்படுவதெல்லாம் பிடல் காஸ்ட்ரோவிடமிருந்து ஒரு வார்த்தையும் அதனை அவரது அமைச்சரவை விரைந்து அங்கீகரிப்பதுமேயாகும்.

காஸ்ட்ரோ அரசாங்கம் வழக்கமான பாணியில் கியூபப் புரட்சியின் ``சமூக வெற்றிகளை`` காப்பாற்றும் நோக்கத்திற்காக வெளிநாட்டு முதலாளிகளின் முதலீடு வரவேற்கப்படுகிறது என்று கூறுகிறது. யதார்த்தம் என்னவெனில், முன்னைய காலனித்துவ உலக முழுவதும் உள்ள முதலாளித்துவ ஆட்சிகளைப் போலவே காஸ்ட்ரோவின் ஆட்சியும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு மலிவான உழைப்பை சந்தைப்படுத்துவதில் ஈடுபட்டிருந்தது.

கியூபாவின் விஷயத்தில் இது தீவிரமாக நேரடியாக மத்தியத்துவப்படுத்தப்பட்ட வடிவிலும் செய்யப்படுகிறது. கியூப அரசாங்கத்திற்கு கைமேல் உடனடி காசு கிடைப்பதற்காக வெளிநாட்டு கார்ப்பொரேஷன்களுக்கு கியூப உழைப்பு ஒப்பந்தத்திற்கு விடப்பட்டது. அரசாங்கம் தேவையான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, இந்தத் தொகையில் சில பகுதியை வட்டார நாணயமான பெசோக்களில் செலுத்துகிறது. வெளிநாட்டுக் கம்பெனிகள் தொழிலாளர்களை இஷ்டம் போல் வேலையை விட்டு நீக்குவதில் முழு உரிமையைத் தக்கவைத்திருக்கின்றன.

சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி முதலாளித்துவ டாலர் பொருளாதாரத்தால் பேணப்பட்டு வருகிறது. இன்று அந்நியச் செலாவணி கையிருப்பில் பெருமளவின் வளம், அமெரிக்காவில் பெருமளவில் தங்கியுள்ள புலம் பெயர்ந்தோர், கியூபாவிலுள்ள தங்களது உறவினர்களுக்கு அனுப்பப்படும் தொகையாக இருக்கிறது.

மற்றொரு கைமேல் உடனடிப்பணம் கிடைக்கும் வடிகால், சுற்றுலாத்துறை ஆகும். இதனை காஸ்ட்ரோ ஆட்சி தனது பொருளாதாரத் திட்டமிடலின் மைய அச்சாக வைத்திருக்கிறது. இதன் விளைவு கியூபா ஒருவகை சுற்றுலா நிற ஒதுக்கல் என்று கூறுமளவுக்கு ஆகிவிட்டது. புது விடுதிகள், சிற்றுண்டி உணவகங்கள், கடைகள் கட்டப்பட்டு வெளிநாட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. சாதாரண கியூபர்கள் அதற்கு தடைசெய்யப்பட்டுள்ளனர். விபச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் வறுமை நிலைக்கும் கீழ் வாழ்கின்றனர்.

காஸ்ட்ரோ ஆட்சியானது தீவின் அனைத்து பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் அமெரிக்க தடையை காரணமாகக் குற்றம்சாட்டுகிறது. கேள்விக்கிடமில்லாமல் அமெரிக்காவின் கொள்கை சிறிய ஒடுக்கப்படும் நாட்டிற்கெதிரான ஏகாதிபத்தியத்தின் மிருகத்தனமான, பகுத்தறிவுக்கொவ்வாத நடவடிக்கைதான். ஆனால் இக்கொள்கை 35 ஆண்டுகளாக பாதித்து வந்துள்ளது. இதற்கிடையில் உண்மையில் கியூபா உலகிலுள்ள ஏனைய பெரிய நாடு ஒவ்வொன்றுடனும் பொருளாதார உறவுகளைக் கொண்டிருந்தது.

கியூபாவின் நெருக்கடி, அடிப்படையில் புரட்சிதன்னின் முதலாளித்துவப் பண்பின் வெளிப்பாடாகும். கியூப சமுதாயத்தின் வரலாற்றுப் பிரச்சினைகள் எதனையும் தீர்ப்பதற்கு அது தவறியது. சோவியத் அதிகாரத்துவத்திலிருந்து பெருமளவில் பெற்ற மானியங்களால் முரண்பாடுகள் மூடி மறைக்கப்பட்டு வந்தன.

ஒரு சில நாடுகள் பெருமளவிலான அகதிகளின் வெளியேற்றத்தைக் கண்டிருக்கின்றன. புரட்சியின் முதலாவது ஆண்டுகளில் வெளியேறிய இவ்வகதிகள் பெரும்பாலோருள் முதலாளிகளும், நடுத்தரவர்க்கத்தின் சலுகைமிக்கதட்டினரும் அடங்குவர். ஆனால் 1980களிலும் 1990களிலும் கட்டுமரங்களிலும் காற்றடைக்கப்பட்ட சக்கர டியூப்களிலும் கியூபாவில் இருந்து வெளியேறியவர்கள், ஹைற்ரி நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கில் வெளியேறக் காரணமாயிருந்த அதே போன்ற சக்திகளினால்தான் வெளியேற நேர்ந்தது. அதாவது பசி மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து தப்பிப்பதாகும்.

இத்தகைய நிலைகளின் மேல் தங்கி உள்ள ஆட்சி பரந்த கியூபத் தொழிலாளர்களின் நாட்டங்களை நெரித்து மூச்சுத்திணற வைக்கின்றது. காஸ்ட்ரோ இராணுவ வழிகளின் ஊடாக அரசியல் சர்வாதிகாரத்தினைச் செய்கிறார். இந்த அரசின் அடிப்படை நிறுவனமான ஆயுதப்படைகள் கியூபாவின் பெரும்பாண்மையான பொருளாதார நிறுவனங்களை நடத்துகின்றன.

காஸ்ட்ரோ கியூப அமைப்பில் வாழ்நாள் தலைவராக போற்றிப்பேணப்படுகிறார். ஆதலால் அவரை எதிர்ப்பதென்பது வெறுமனே ``எதிர்ப்புரட்சி`` மட்டுமல்ல, அரசியல் சட்டத்துக்கு புறம்பானதுமாகும். அவர் அரசின் மற்றும் அரசாங்கத்தின் தலைவரும் அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளரும் இராணுவத்தின் முதல் பெரும் படைத் தலைவருமாவார். சுருக்கமாகச் சொன்னால், அவரது கையில் அனைத்து அதிகாரமும் குவிக்கப்பட்டிருக்கிறது, மற்றும் கியூபாவில் ஒவ்வொரு முக்கியமான முடிவின் மேலும் அவரது தனிப்பட்ட அதிகாரத்தை அவர் திணிக்கிறார். எழுபது வயதிலிருக்கும் காஸ்ட்ரோவுக்குப் பின்னால் வரக்கூடியவர் பற்றி வலிந்து ஏற்கவைக்கும் பிரச்சினை இருக்கிறது. அவரது சகோதரர் ரால் அரசாங்கத்தில், இராணுவத்தில் மற்றும் கட்சியில் அனைத்து துணைப் பதவிகளிலும் அங்கம் வகிக்கிறார்.

ஏகாதிபத்தியவாதிகள் ஒருபுறமும் காஸ்ட்ரோ ஆட்சி மற்றும் குட்டி முதலாளித்துவ இடது ஆதரவாளர்கள் மறுபுறமுமாக உருப்படுத்திக்காட்டும் ஒன்றாக கியூபா சோசலித்துடன் இனங்காட்டப்படும் அந்த மட்டமானது, முதலாளித்துவத்துக்கு சோசலிச மாற்று எனும் கருத்துருவினை கொச்சைப்படுத்தும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும், குறிப்பாக இலத்தின் அமெரிக்காவில்.

12. தொகுப்பு

மார்க்சின் கீழான முதலாம் அகிலம் ``தொழிலாளர்களின் விடுதலை தொழிலாளர்கள் தம்மின் பணியாகவே இருக்கவேண்டும்`` என்ற முழக்கத்தை சேர்த்தது. அதாவது, இறுதி ஆய்வில் சோசலிசம் தொழிலாள வர்க்கத்தின் சுயநிர்ணயம் ஆகும். அது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட முடியாதது அல்லது அவர்கள் சார்பாக செயலாற்றும் வேறு வர்க்க சக்திகளால் அவர்களுக்காக வென்று எடுக்கமுடியாதது. அது தொழிலாள வர்க்கம் தனக்காகவும் அனைத்து மனித குலத்துக்காகவும் சமுதாயத்தை மாற்றுவதற்கு, ஒரு வர்க்கமாக ஜனநாயகரீதியாக அணிதிரட்டப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் நனவு பூர்வமான போராட்டத்தின் விளைபொருளாக மட்டுமே இருக்கமுடியும்.

1960களில் மற்றும் 1970களில் தொழிலாள வர்க்கத்தை நிராகரித்து, சோசலிசத்துக்கு வசதியான குறுக்குவழியை வழங்கும் மற்றைய அதிபுரட்சிகர வாகனங்களை கண்டுபிடித்திருப்பதாகக் கூறிய அனைத்து வகையான நவநாகரிக தத்துவங்களுக்கும் எதிராக, அனைத்துலக குழு இம்முன்னோக்கைப் பாதுகாத்தது. முப்பதுக்கும் நாற்பதுக்கும் இடையிலான ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தத்துவங்களில் ஒன்றுகூட உருப்படியில்லை. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழுவால் எடுத்துக் கொள்ளப்பட்ட போராட்டம் வரலாற்றில் சக்திமிக்கவகையில் நிரூபணமாயிற்று.

அனைத்துலக் குழுவின் விடாப்படியான போராட்டம் பற்றியும் அது காஸ்ட்ரோயிசத்தின் முன் மண்டியிடுவதற்கு மறுத்தமை பற்றியும் ஜோசப் ஹான்சன் கூறியதை நாம் நினைவுகூர்வோம். இந்நிலைப்பாட்டை ``இலத்தின் அமெரிக்காவில் அரசியல் தற்கொலை`` என அவர் எச்சரித்தார். உண்மையில் என்ன நிகழ்ந்தது? பப்லோவாத திருத்தல் வாதமும் அதன் காஸ்ட்ரோ வாதத்துக்கான ஆதரவும் தீவிரமயப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை தற்கொலை சாகசங்களுக்கு இட்டுச்சென்றது. அதற்காக தொழிலாள வர்க்கம் பெரும் விலைகொடுத்தது.

காஸ்ட்ரோ இசத்துக்கும் குட்டி முதலாளித்துவ தேசியவாத அரசியலுக்கு கீழ்ப்படுத்தியிருந்த பப்லோவாத செல்வாக்கின் கீழான சக்திகளுக்கு தங்களைப் பொருத்திக் கொள்வதற்குப் பதிலாக, தங்களை ஈவுஇரக்கமற்ற விமர்சனத்துக்கு ஆளாக்கியிருந்தால் என்ன விளைந்திருக்கும்?

நிச்சயமாக அதன் விளைவு குறைந்தபட்சம் குட்டிமுதலாளித்துவத்தால் மேலாதிக்கம் செய்யப்பட்ட இயக்கங்களிலிருந்து தற்காலிக தனிமைப்படலுடன் ஒன்றாக நிரூபிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்நிகழ்வில் அவர்கள் தொழிலாளர் மற்றும் இளைஞர்களின் மிகவும் முன்னேறிய பகுதிகளைப் பயிற்றுவித்திருக்கமுடியும். இப்போராட்டத்தின் மூலம் தலைமை, புரட்சிகரப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டக்கூடிய தலைமையை தயாரிப்புச் செய்திருக்க முடியும். இது உலக முதலாளித்துவத்தின் தற்காலிக மறுநிலைப்படுத்தலை சாதிக்க உதவிசெய்யும் இராணுவ சர்வாதிகாரங்களுக்குப் பதிலாக, இலத்தின் அமெரிக்காவில் உலக சோசலிசப் புரட்சிக்கு சக்திமிக்க தூண்டு விசையை வழங்கியிருக்கமுடியும்.

இந்த மூலோபாய அனுபவத்திலிருந்து நாம் கட்டாயம் பெறவேண்டிய முக்கிய படிப்பினைகள் மார்க்சிஸ்டுகளின் விமர்சன ரீதியான பொறுப்புக்களை குறிக்கிறது. அவர்களது பணி சோசலிசப் புரட்சியினை தன்னியல்பாக நிறைவேற்றும் சிலவகை சக்திகளுக்கு தங்களை அனுசரிப்பது மற்றும் அவர்களைக் கண்டுபிடிப்பது அல்ல. இன்னும் சொல்லப்போனால், விட்டுக்கொடுக்காத தத்துவார்த்த உறுதிப்பாடு மற்றும் தொழிலாள வர்க்கத்துக்கு உண்மையைக் கூறுவது ஆகிய இவற்றில் தங்களை தளப்படுத்தியிருக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளை, தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான புரட்சிகர கட்சிகளைக் கட்டுவதாகும்.

இலத்தின் அமெரிக்காவிலும் சர்வதேச ரீதியாகவும் உள்ள புறச் சூழ்நிலைகள், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் பொறுப்பெடுக்கப்பட்ட இப்போராட்டம் கோடிக்கணக்கானவர்களின் புரட்சிகர இயக்கத்துடன் ஊடறுத்துச் செல்லக்கூடிய கட்டத்திற்கு பக்குவப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் சோசலிசத்துக்கான போராட்டத்திலிருந்து இந்த இயக்கம் உட்கிரகித்த படிப்பினைகள் இருபத்தோராம் நூற்றாண்டில் அதனை நிறைவேற்றுவதற்கான தீர்க்கமானவைகளாக இருக்கும்.