World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ICFI பற்றியவை

Oppose Imperialist War & Colonialism!

ஏகாதிபத்திய யுத்தத்தையும், காலனி ஆதிக்கத்தையும் எதிர்ப்போம்!

Use this version to print | Send this link by email | Email the author

பகுதி 1 |பகுதி 2 |பகுதி 3 |பகுதி 4

முதலாம் உலக யுத்தத்தின் தாக்கங்கள்

11. யுத்தத்தினைத் தொடுத்த எந்த ஒரு ஏகாதிபத்திய அரசாங்கங்களும் யுத்தத்தின் விளைபயன்களை முன் அறிந்து கொண்டிருக்கவில்லை. ஐரோப்பா இலட்சோப இலட்சம் பேரின் சவக்காடாக மாற்றப்பட்டது. இவர்கள் யுத்தத்தினால் அல்லது நோய்களால் அழிந்தனர். இறுதியில் பிரிட்டனும், பிரான்சும் ஜேர்மன் எதிரியின் வெற்றியாளர்களாக வெளிப்பட்டனர். ஆனால் அவர்களின் போலி வெற்றியின் பயங்கரச் செலவானது, அவர்கள் யுத்தத்தில் காக்கச் சென்ற எல்லா சாம்ராஜ்யங்களின் இறுதித் தோல்வியையும் உத்தரவாதம் செய்தது. யுத்தத்தில் பலப்படுத்தப்பட்ட ஏகாதிபத்திய சக்திகளாக அமெரிக்காவும் குறைந்த அளவுக்கு ஜப்பானும் தோன்றின. 1914க்கு முந்தைய ஐரோப்பாவில் பழைய அரசியல் மற்றும் சமுக சமநிலை சீர் செய்யமுடியாதவாறு சிதறுண்டு போயிற்று. போல்ஷிவிக்குகள் ரஷ்யாவில் ஆட்சியைக் கைப்பற்றியதானது, முதலாம் உலக யுத்தத்தின் தீக்கனவுக்குப் பொறுப்பான பொருளாதார அமைப்புடன் தொடர்புபடுத்துவதற்குக் கூட பயன்படுத்த முடியாத வார்த்தையான "முதலாளித்துவ நாகரிகத்தின்" உயிர் வாழ்க்கையையே கேள்விக்குரியதாக்கியது. தனது சொந்தக் குற்றங்களாலேயே ஒரு சமுதாயம் குற்றவாளி என்று கண்டனத்திற்கு ஆளாகியிருப்பின் அது உண்மையில் முதலாளித்துவத்தால் உண்டு பண்ணப்பட்டதே ஆகும். ஆனால் ரஷ்ய முதலாளி வர்க்கத்தைத் தூக்கி வீசிய கட்சியுடன் ஒப்பிடக்கூடிய ஒரு புரட்சிக் கட்சி மேற்கு ஐரோப்பாவில் எங்குமே இருக்கவில்லை. இதனால் ஆளும் வர்க்கங்கள் சமூக ஜனநாயக வாதிகளின் தீர்க்கமான உதவியுடன் சோசலிசப் புரட்சியின் அச்சுறுத்தலை விரட்டியடிக்க முடிந்தது, ஆனால் அவை ஐரோப்பிய முதலாளித்துவம் மீட்சியும் விஸ்தரிப்பும் பெறும் வகையிலான ஒரு புதிய சமநிலை அடிப்படையை உண்டு பண்ணும் நிலையில் இருக்கவில்லை. கெயின்சின் (Keynes) வார்த்தையில் சொன்னால் யுத்தத்தில் இருந்து தலையெடுத்த ஐரோப்பா, ஒரு பைத்தியக்கார வீட்டினை ஒத்திருந்தது.

12. 1980களின் இறுதியில் யுத்தத்தின் பின்னைய நொருங்கக்கூடிய ஒழுங்கு முறையானது, நியூயோர்க் பங்குச் சந்தையின் சரிவுடன் அம்பலமாகியது. இது உலகளாவிய மந்தத்தின் தொடக்கத்தினைக் குறித்தது. சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தில் ஒரு திறமை வாய்ந்த புரட்சிகரத் தலைமை இருந்திருக்குமானால் சோசலிசப் புரட்சியின் வெற்றி ஐரோப்பா முழுவதிலும், இறுதியாக உலகிலும் உத்தரவாதம் செய்யப்பட்டிருக்கும். ஆனால் 1919ல் லெனினின் தலைமையில் நிறுவப்பட்ட கம்யூனிஸ்ட் அகிலம்,1930களின் தொடக்கத்தில் ஒரு பயங்கர சீரழிவுக்குள்ளாகியது. 'தனி நாட்டில் சோசலிசம்' என்ற பிற்போக்குக் கோட்பாட்டின் அடிப்படையில் ஸ்ராலின் தலைமையிலான சோவியத் அதிகாரத்துவம், கம்யூனிஸ்ட் அகிலத்தை உலக ஏகாதிபத்தியத்துடனான கிரெம்ளினின் இராஜதந்திர சூழ்ச்சிகளின் கருவி ஆக்கியது, ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் மேல் கிரெம்ளின் கொண்டிருந்த பிடியானது வரிசைக்கிரமமான பேரழிவுகளுக்கு இட்டுச் சென்றது. எல்லாவற்றுக்கும் மேலாக 1933 ஜனவரியில் நாஜிக்கள் ஆட்சிக்கு வந்தனர். இந்த வரலாற்றுக் காட்டிக் கொடுப்பே ட்ரொட்ஸ்கியை நான்காம் அகிலத்தினை நிறுவுவதற்கான அழைப்பினை விடுக்கச் செய்தது. ஆனால் தனிமைப்படுத்தல்கள், ஸ்ராலினின் ரகசியப் போலீசாரல் மட்டுமன்றி, பாசிஸ்டுகளதும் இடைவிடாத கொலைகளின் நிலைமைகளின் கீழ் நான்காம் அகிலத்தினால் அப்பிற்போக்கின் அலைவீச்சை பின்வாங்கச் செய்ய முடியவில்லை. ஹிட்லரின் வெற்றியைத் தொடர்ந்து வந்த வருடங்களில் ஆஸ்திரேலிய, பிரெஞ்சு பாட்டாளி வர்க்கங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டமையும் இறுதியாக ஸ்பானிய பாட்டாளி வர்க்கம் காட்டிக் கொடுக்கப்பட்டமையும் இரண்டாம் ஏகாதிபத்திய உலக யுத்தத்தின் வெடிப்பிற்கான பாதையைத் திறந்தன.

இரண்டாம் உலக மகாயுத்தம்

13. ஜேர்மனி 21 ஆண்டுகளுக்கு முன்னாளைய தனது தோல்வியின் விளைவுகளை பின் வாங்கச் செய்து, ஐரோப்பாவில் தனது ஆளுமையை நிலைநாட்டும் ஒரு முயற்சியாக 1939 செப்டம்பரில் யுத்தத்தை ஆரம்பித்தது. எவ்வாறெனினும் இரண்டு ஆண்டுகள் சற்று அதிகரிப்பதற்குள் யுத்தம் ஒரு உலகளாவிய மோதலாக மாற்றம் செய்யப்பட்டது. பிரிட்டிஷ் சாம்ராஜியத்துடன் ஒரு நீண்ட போராட்டத்துக்கும், அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்காவுடனும் போரிட தேவையான வளங்களைப் பெறும் பொருட்டு, ஹிட்லர் ஸ்ராலினுடனான "ஆக்கிரமிப்பு இல்லா உடன்படிக்கைகளை", இரத்துச் செய்துவிட்டு, தனது ராணுவத்தினை 1941 ஜுனில் சோவியத் யூனியனுக்கு எதிராகத் திருப்பினார். இதற்கிடையே ஜப்பானிய ஏகாதிபத்தியம் தனக்கு ஆசியாவில் கிடைத்த வெற்றிகளுக்கு இடையேயும் பசிபிக்கில் அமெரிக்க ஆதிக்கத்தை சவால் செய்யாமல் முக்கிய மூலப்பொருட்கள் கிடைப்பதை உத்தரவாதம் செய்ய வழி கிடையாது என்பதை உணர்ந்தது, அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் அது தமக்கிடையேயான வேறுபாடுகளை ஜப்பானுடன் சமாதான வழியில் தீர்த்துக் கொள்ளுவதற்கான சாத்தியங்களை அடைத்து மூடுவதற்கு தனது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்தது, பேர்ள் துறைமுகம் மீதான தாக்குதல், ரூஸ்வெல்ட் நிர்வாகத்திற்கு ஜப்பானுடன் கணக்கு வழக்குகளை தீர்த்துக் கொள்ளவும், ஐரோப்பாவில் இடம் பெறும் யுத்தத்தில் நுழையவும் இறுதி வாய்ப்பினைத் தந்தது.

14. ரூஸ்வெல்ட்டினதும் சேர்ச்சிலினதும் ஜனநாயக "பாசிச எதிர்ப்பு" வாய்ச் சவடால்களுக்கு மத்தியிலும் அமெரிக்க, பிரிட்டிஷ் யுத்த இலக்குகளுக்கு அடிப்படையாக விளங்கிய புறநிலை நலன்கள், ஜேர்மனி, ஜப்பானிய ஏகாதிபத்திய நலன்களுக்கு ஒன்றும் குறைந்தவை அல்ல. பிரிட்டன் தனது ஏகாதிபத்திய சொத்துக்களை தன்னால் முடிந்த மட்டும் காப்பாற்றிக்கொள்ள போராடிக் கொண்டிருந்தது. அமெரிக்கா முன்னணி ஏகாதிபத்திய சக்தியாக தனது அந்தஸ்தினை நிலைநாட்டும் நோக்கத்தைக் கொண்டிருந்தது, சோவியத் யூனியனைப் பொருத்த மட்டில் ஹிட்லருக்கு எதிரான போராட்டம், கிரெம்ளின் அதிகாரத்துவத்தின் நம்பிக்கை மோசடிகளுக்கு இடையேயும் ஒரு நிஜ முற்போக்கு, ஏகாதிபத்திய எதிர்ப்பை உள்ளடக்கியிருந்தது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் சோவியத் யூனியனைக் கைப்பற்றி, அக்டோபர் புரட்சியின் அடிப்படையில் 1917-ல் நிலை நிறுத்தப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட சொத்து உறவுகளை நிர்மூலமாக்கியிருக்குமாயின், அது சோவியத் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கு கடுமையான தோல்வியை பிரதிநிதித்துவம் செய்திருக்கும். தமது புரட்சியைப் பேணுவதில் சோவியத் மக்கள் கொண்டிருந்த திடசங்கற்பம் நாஜி படைகளைத் தோற்கடிக்க அவர்கள் செய்த மாபெரும் தியாகங்களை பறை சாற்றுகின்றன.

15. எவ்வாறெனினும் சோவியத் மக்களின் வீரதீரத்திற்கு இடையிலும் யுத்தத்தினை வழிநடத்த கிரெம்ளின் கடைப்பிடித்த கொள்கைகள், அடிப்படையில் பிற்போக்குப் பண்பு கொண்டவை. பிரிட்டன், அமெரிக்கா ஆகிய "ஜனநாயக" ஏகாதிபத்திய வாதிகளுடன் அணி திரண்ட சோவியத் அதிகாரத்துவம், யுத்தத்தின் முடிவில் ஒரு பொது புரட்சிகர கிளர்ச்சி வெடிக்கும் சாத்தியத்தை எண்ணி அஞ்சியது. ஜேர்மன், இத்தாலி, பிரான்சில் சோசலிசப் புரட்சி அல்லது அதே விஷயத்திற்காக யுத்தத்தினால் சிதற அடிக்கப்பட்ட எந்த ஒரு முதலாளித்துவ அரசும் சோவியத் தொழிலாள வர்க்கத்திற்கு சக்தியூட்டும் எனவும், அதுவே கிரெம்ளின் மாஃபியாவுடன் கணக்கு வழக்கைத் தீர்த்துக் கொள்ளத் தூண்டும் எனவும், ஸ்ராலின் கணித்தார். எனவே ஸ்ராலின், சேர்ச்சில், ரூஸ்வெல்ட் (1945-ஏப்ரலில் ரூஸ்வெல்டின் மரணத்திற்குப்பின்) ட்ரூமனுக்கிடையே டெஹ்ரான், யால்டா, போர்ட்ஸ்டாம் ஆகிய இடங்களில் நடைபெற்ற வரிசைக்கிரமமான மாநாடுகளின் பின்னர், சோவியத் பிராந்தியங்களில் தலையிடாதிருக்கச் செய்யும் திட்டவட்டமான உத்தரவாதங்களுக்கு பதிலாக, மேற்கு ஐரோப்பாவிலும் மூலோபாய முக்கியத்துவம் காரணமாக கிரீசிலும் முதலாளித்துவ ஆட்சியைக் காப்பதில் ஏகாதிபத்தியத்துடன் தான் ஒத்துழைக்கும் என்பதை கிரெம்ளின் தெளிவு படுத்தியது. பின்னர் சேர்ச்சில் தமது நினைவு குறிப்புக்களில் 1944-ல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தின்போது, தாம் எங்ஙனம் ஒரு துண்டுச் சீட்டில் யுத்தத்தின் பின்னைய ஐரோப்பிய அரசியல் பிராந்திய பிரிவினையைக் கோடிட்டுக் காட்டினார் என்பதை நினைவு கூர்ந்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான அணியினர் நாஜி ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்ததோடு கிரீசில் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் இருந்தனர், இது சேர்ச்சிலின் கோட்டில் பிரிட்டனின் செல்வாக்குப் பிராந்தியத்தில் தொடர்ந்து இருக்குமாறு குறிப்பிடப்பட்டது. சேர்ச்சில் எழுதியதாவது: "நான் இதை ஸ்ராலின் பக்கம் தள்ளினேன். அச்சமயம் அவர் மொழிபெயர்ப்பைக் கேட்டுக் கொண்டிருந்தார். அங்கு சற்றுத் தயக்கம் காணப்பட்டது. பின்னர் அவர் தமது நீலப்பென்சிலை எடுத்து அதன் மேல் குறிபோட்டு அனுப்பினார். தீர்ப்பதற்கு என்று எடுக்கும் நேரத்தைவிட குறைந்த நேரத்துள் அவை எல்லாமே தீர்க்கப்பட்டுவிட்டன". (Churchill, Memoirs of the Second World War [Boston,1987],P.886)

போருக்குப் பிந்தைய ஒழுங்குமுறை

16. முதலாம் உலக யுத்தத்தினைத் தொடர்ந்து அடைய முடியாது போய்விட்டதை -அதாவது முதலாளித்துவ ஒழுங்கு முறையைப் புதுப்பிக்கவும், விரிவுபடுத்தவும் அடிப்படையான மாறுபட்ட சூழ்நிலையிலும், தாக்குப்பிடிக்கும் சர்வதேச சமநிலையை- அடைவதில் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் முதலாளி வர்க்கம் வெற்றி கண்டது. முதலாம் உலக யுத்தத்தின் வெடிப்பு முதலாளித்துவம் ஒரு உலக அமைப்பு என்ற முறையில் அதன் விவகாரங்களில் நீண்ட நிலையற்ற காலப்பகுதியின் தொடக்கத்தைக் குறித்தது. உலகப் பொருளாதாரத்தின் இடைநிலை செயல்பாட்டு பகுதிகளுக்கிடையிலான, முதலாளித்துவ அரசுகளுக்கிடையிலும், முதலாளித்துவ நாடுகளின் உள்ளே சமூக வர்க்கங்களுக்கிடையிலும் உறவுகளை ஒழுங்குபடுத்தும் நுண்மையான சிக்கலான பொறி முறையில், முன் நடந்திராத விதத்திலும் கட்டுப்படுத்த முடியாத வகையிலும் உடைவு ஒன்று ஏற்பட்டது, இரண்டாம் உலக யுத்தத்தினைத் தொடர்ந்து அது இறுதியாகக் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்படும் வரை, உலக முதலாளித்துவ அமைப்பு முப்பதாண்டுகளாக உருகி வந்தது.

17. சமநிலையை மீண்டும் கொண்டு வருவதற்கான அவசியமான அரசியல் முன் நிபந்தனைகள், கிரெம்ளின் அதிகாரத்துவம் மற்றும் அதன் துணைக்கோள் கட்சிகளின் துரோகத்தினால் வழங்கப்பட்டன. அவர்கள் ஐரோப்பாவிலும் சர்வதேச ரீதியாகவும் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களை மும்முரமாக எதிர்த்து நாசமாக்கினர். பிரான்சிலும் இத்தாலியிலும் ஸ்ராலினிஸ்டுகள் தமது சக்தியை செல்வாக்கிழந்த முதலாளி வர்க்கத்தை புனருத்தாரணம் செய்வதிலும் முதலாளித்துவ அரசினை மறு நிர்மாணம் செய்வதிலும் செலவிட்டனர், கிழக்கு ஐரோப்பாவில் அவர்களின் பாத்திரம் முக்கியத்துவம் குறைந்ததாக இருக்கவில்லை. அங்கே மேற்கு ஐரோப்பாவைப் போலவே சோவியத் யூனியனின் அரசியல் தலையீடு, எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாள வர்க்கத்துக்கு எதிராகவும் ஒரு நிஜ சோசலிசப் புரட்சியின் சாத்தியத்திற்கு எதிராகவும் திருப்பப்பட்டது. தொழிலாளர் இயக்கத்தினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை சோவியத் அதிகாரத்துவத்திற்கும் உலக ஏகாதிபத்தியத்திற்கும் இடையேயான பேரங்களுக்கு கீழ்ப்படுத்துவதிலேயே கிரெம்ளின் முக்கிய அக்கறை காட்டியது. இறுதியில் கிரெம்ளின், தான் முதலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக தூரம் செல்லுமாறு தள்ளப்பட்டது -அதாவது ஸ்ராலினிசக் கட்சிகள் ஆட்சியைத் தங்கள் கைகளுக்குள் எடுக்குமாறு கட்டளையிடப்பட்டன. உள்ளூர் முதலாளி வர்க்கத்தின் உடைமைகளை பறிமுதல் செய்தது பற்றி ஏகாதிபத்திய வாதிகளின் முறைப்பாடுகள் கிளம்பிய போதிலும் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச மேலாதிக்கம், ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சி கண்டதன் பின்னர் இப்பிராந்தியத்தில் நிலவியிராத ஒரு குறிப்பிட்ட அரசியல் ஒழுங்கினைத் திணிக்க காரணமாகியது. இந்தப் பிராந்தியத்தில் ஆழமாக வேரூன்றிய அதன் சமூக முரண்பாடுகள், 1990-- 1945க்கு இடையே ஐரோப்பாவின் பொருளாதார ஸ்திரமின்மைக்கு பெருமளவில் பங்களிப்பு செய்தன. அத்தோடு ஐரோப்பா பிரிவினை செய்யப்பட்டது சிறப்பாக ஜேர்மனி பிரிவினை செய்யப்பட்டது ஏகாதிபத்தியவாதிகளின் உடனடி நலன்களுக்கு சேவகம் செய்தது. முப்பது ஆண்டுகளுக்கும் குறைவான கால இடைவெளிக்குள் இரண்டு உலக யுத்தங்களுக்கு இட்டுச்சென்ற முரண்பாடுகளைத் தணிக்க எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் வரவேற்பதில் ஏகாதிபத்தியவாதிகள் ஆர்வம் காட்டினர். ஜேர்மனி துண்டாடப்பட்டமை, இந்த சக்தி வாய்ந்த அரசினை யுத்தத்தின் பிந்தைய ஐரோப்பியக் கூட்டமைப்புக்குள் எப்படி இணைப்பது என்று குழப்பமான பிரச்சனைக்கு ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஒரு பதிலை வழங்கியது. மேலும் யுத்தத்தின் பிந்தைய அரசியல் தீர்வுகள் ஐரோப்பிய அரசுகளை கிழக்கு மேற்காகப் பிரித்ததோடு தொழிலாள வர்க்கத்தினை முள்ளுக்கம்பிகள், சீமேந்து சுவர்கள், கண்ணி வெடிகளைக் கொண்டு காட்டுமிராண்டித்தனமாக பிளவுப்படுத்தியது, இதுவே சோசலிசத்திற்கான போராட்டத்தினை மிகவும் கடினமாக்கிய அரசியல் காரணி என்பதை நிரூபித்தது.

18. உலக யுத்தத்தின் பின்னர் உடனடியாய் உருவான புரட்சிகர அச்சுறுத்தலை ஒடுக்கியதானது, ஐரோப்பாவில் முதலாளித்துவ ஆட்சிக்கான மறு நிர்மாணத்திற்கு புதியதோர் அடித்தளத்தைத் தயாரிப்பதற்கான வாய்ப்பினை ஏகாதிபத்தியத்திற்கு வழங்கியது. அது இல்லாமல் ஏகாதிபத்தியம் ஒரு உலக அமைப்பு என்ற முறையில் உயிர் பிழைப்பது சாத்தியமாகியிராது. இங்கு அமெரிக்கா தீர்க்கமான பாத்திரத்தை வகித்தது. 1945-ன் பின்னர் அதன் மிகப்பெரும் தொழிற்துறை சக்தியையும் பரந்த அளவிலான பொருளாதார கையிருப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டு மேலாதிக்கப் பாத்திரத்தினை வகிக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு இருந்த வல்லமையானது, முதலாளித்துவ அரசுகளுக்கு இடையிலான சமநிலையைப் பேணும் தீர்க்கமான அரசியல் பொருளாதார நெம்புகோலை வழங்கியது. இது முதலாம் உலக யுத்தத்தின் முடிவில் உலக முதலாளி வர்க்கம் இட்டு நிரப்ப முடியாது நழுவிப்போனதாக இருந்தது. இரண்டு உலக யுத்தங்களுக்கு இட்டுச் சென்ற ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான கசப்பான போட்டியானது, இறுதியில் உலக ஏகாதிபத்தியத்தின் விவகாரங்களை நிர்வகிக்கும் சர்ச்சைக்கிடமற்ற நடுவராக அமெரிக்காவை தோன்றச் செய்தது. இது மார்ஷல் திட்டம், நேட்டோ மற்றும் அதனுடன் தொடர்புடைய ராணுவ உடன்படிக்கைகள், ஐக்கிய நாடுகள் சபை, பன்னாட்டு நிதியம், உலக வங்கி, சுங்கவரி வர்த்தகம் பற்றிய பொது உடன்படிக்கை போன்ற அரசியல் பொருளாதார நிறுவனங்களை ஏற்படுத்தியது. இவை போருக்குப் பிந்தைய உலக முதலாளித்துவம் உயிர் பிழைக்கவும், விரிவடைவதற்குமான அடித்தளத்தை வழங்கின.

போருக்குப் பிந்தைய ஒழுங்குமுறையின் நெருக்கடி

19. அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்தினை சவால் செய்யக்கூடிய வேறு ஒரு முதலாளித்துவ அரசோ அல்லது முதலாளித்துவ அரசுகளின் கூட்டோ இல்லாதிருந்தாலும், சோவியத் யூனியனுடன் மோதிக்கொள்ளும் நிலையில் சர்வதேச முதலாளித்துவம் அமெரிக்க இராணுவ பலத்தில் தங்கியிருந்ததாலும், போருக்குப் பிந்திய தீர்வுகளின் அடிப்படையில் உலக முதலாளித்துவம் அதன் சமநிலையைப் பராமரித்துக்கொள்ள முடிந்தது. எவ்வாறெனினும் உலக வர்த்தகத்திற்கு புத்துயிரளிப்பதிலும் ஐரோப்பிய, ஜப்பானிய முதலாளித்துவத்தை திரும்பக்கட்டி எழுப்புவதிலும் அது கண்ட வெற்றிகளே, உலக அமைப்பின் உறுதிப்பாடு தங்கியிருந்த சமநிலையைக் கீழறுத்தது. அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்தில் ஏற்பட்ட படிப்படியான வீழ்ச்சி 1950களின் கடைப்பகுதியில் செலாவணி, வர்த்தகப் பற்றாக்குறைகளின் அதிகரிப்பாக பதிவாகியது. 1971-ல் அமெரிக்கா, போருக்குப் பிந்தைய பொருளாதார முறையின் இணைப்பு ஆணியாக விளங்கிய டாலர் - தங்க மாற்றீடு முறையை கைவிடும்படி நெருக்கப்பட்டது, ஒன்றன்பின் ஒன்றாக தொழில் துறையில் அமெரிக்க மேலாதிக்கம் தாக்குதலுக்கு ஆளாகியது. 1979களிலும் 1980களிலும் அமெரிக்காவின் வருடாந்தர வர்த்தகப் பற்றாக்குறை - குறிப்பாக ஜப்பான் தொடர்பான அதன் வர்த்தகப் பற்றாக்குறை கோணல்மானலாக வடிவமெடுக்கத் தொடங்கியது.

முதலாம் உலக யுத்தத்துக்குப்பின் 1985-ல் முதன் முறையாக அமெரிக்கா ஒரு கடனாளி நாடாக ஆகியது. அமெரிக்காவின் உலக அந்தஸ்தில் ஏற்பட்ட வீழ்ச்சியானது, பிந்தைய சமநிலையின் தாக்குப்பிடிக்கும் தன்மையை தவிர்க்க முடியாத வகையில் பிரச்சனைக்குள்ளாக்கியது. மோசமடைந்து வந்த வர்த்தகத் தகராறுகளும் பகைமையுள்ள பிராந்தியக் கூட்டுக்களுக்கிடையே (வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா) உலகச்சந்தை பங்கீடு செய்யப்பட்டமையும், இரண்டாம் உலக யுத்தத்துக்கு முந்தைய வருடங்களின் வர்த்தக யுத்தத்தின் பண்பினை ஒத்திருக்கின்றன.

20. மேலும் விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பத்திலும் ஏற்பட்ட அபிவிருத்திகள் உலக முதலாளித்துவத்தின் ஸ்திரமின்மைக்கு தீர்க்கமான மூலகமாயின. பொருளாதார சமபல நிலையின் மாற்றங்கள் முதலாளித்துவ அரசுகளுக்கிடையேயான மோதலை உக்கிரமாக்குவதோடு மேலும் அவற்றை தள்ளிவிடுகின்றன. உற்பத்திச் சாதனங்களிலும் அவற்றின் செயல்முறைகளிலும், வரைவு, திட்டமிடல், போக்குவரத்து, செய்தித் தொடர்பு ஆகியவற்றில் 'நுண் சில்லுகள்' (மைக்ரோசிப்) புரட்சியானது, உலகப் பொருளாதாரத்தினை முன்னொரு போதும் இல்லாத முறையில் ஒன்றிணைத்துள்ளது. பொருளாதார நிலைப்பாட்டில் இருந்து பார்ப்போமாயின் நவீன டிரான்ஸ் நாஷனல் கூட்டுத்தாபனமானது, தேசிய அரசின் பழையதும் அற்பமானதுமான திட்ட அளவுகோலைத் தாண்டி வளர்ந்துவிட்டன. இதனுடைய இயக்குநர்கள் உலக உற்பத்தி, உலகச்சந்தை, உலகநிதி, உலக வளங்கள் என்ற அடிப்படையில் சிந்தித்துச் செயற்படுமாறு நெருக்கப்பட்டிருக்கிறார்கள். உள்நாட்டுச் சந்தைக்கும் உலகச் சந்தைக்கும் இடையேயான பழைய வேறுபாடுகள் இத்தொடரில் இருந்து, மறைந்து வருகின்றன. நவீன 'டிரான்ஸ் நாஷனல்' கூட்டுத்தாபனங்கள் அதன் சொந்த உள்நாட்டு தளத்தின் புவியியல் இருப்பிடத்தைப் பாராமல், உலகச் சந்தையில் மேலாதிக்கம் செய்வதற்கான வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் தேசிய அரசு என்ற வகையில் அதன் புறநிலைப் பொருளாதார முக்கியத்துவத்தினை அது இழந்து கொண்டு வருகையிலும், போட்டி தேசிய முதலாளித்துவக் கும்பல்களின் அரசியல் - இராணுவ கருவி என்ற வகையில், உலக மேலாளுமைக்கான போராட்டம் பேரளவில் வளர்ச்சி காண்கின்றது. இந்த உண்மையானது, ஒரு புதிய உலகக் கிளர்ச்சிக்காக முடுக்கி விடப்பட்டுள்ள தயாரிப்புகளில் நன்கு பலம் வாய்ந்த முறையில் வெளிப்பாடாகின்றது.

தொடரும்.......