World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

North American protests mark third anniversary of Iraq war

ஈராக் போரின் மூன்றாண்டு நிறைவைக் குறிக்கும் வட அமெரிக்க கண்டனப் பேரணிகள்

By our correspondents
20 March 2006

Use this version to print | Send this link by email | Email the author| Featured Articles

வடக்கு அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் ஈராக் போரின் மூன்றாம் ஆண்டு நிறைவை குறிக்கும் கண்டனப் பேரணிகள் சனி மற்றும் ஞாயிறன்று நடைபெற்றன. சான் பிரான்சிஸ்கோ சிக்காகோ, லொஸ் ஏஞ்சல்ஸ், நியூயோர்க் மற்றும் இதர அமெரிக்க மற்றும் கனேடிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கண்டனப் பேரணிகளில் கலந்து கொண்டனர்.

கலிஃபோர்னியாவிலுள்ள ஹாலிவுட்டில் ஏறத்தாழ 4,000 பேர் கண்டனப் பேரணிகளில் கலந்து கொண்டனர். கண்டனப் பேரணிகளில் கலந்து கொண்ட மிகப் பெரும்பாலோரும், அமைப்பாளர்களும் மற்றும் பல பேச்சாளர்களும், போருக்கான தங்களது எதிர்ப்பை ஜனநாயகக் கட்சிக்கு, பின்னால் இருந்து எடுத்துக்காட்ட முயன்றனர். உரையாற்றியவர்களில் ஹாலிவுட் நட்சத்திரங்களும், பிரமுகர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும், மற்றும் ஃகலிபோர்னியா, செனட் சபை, ஜனநாயகக் கட்சிக்காரரான குளோரியா ரோமிரோவும் அடங்கியிருந்தனர்.

பங்கெடுத்துக் கொண்டவர்களில் பலர், ஜனநாயகக் கட்சியின்பாலான அமைப்பாளர்களின் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து, பேரணியில், கலந்து கொண்ட ஒரு இளம் ஊடக அபிவிருத்தியாளர், WSWS-இடம் பேசும் போது சொன்னார்: "நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவன் அல்ல," பேச்சாளர்கள் பழைய மாவை, திரும்ப அரைக்கின்றனர். ஜனநாயகக் கட்சிக்காரர்களுக்கு முதுகெலும்பு இல்லை. அவர்களிடம் ஏற்கனவே இருக்கின்ற அளவற்ற ஆதாரங்களைக் கொண்டு, அவர்கள் உண்மையிலேயே, ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியும், ஆனால் வேறு யாராவது ஒருவர் ஒரு விவாதத்தை தொடக்க வேண்டும் என்று அவர்கள் காத்துக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது. அவர்கள், இங்கொன்றும் அங்கொன்றுமாக, சிறிய பிரச்சனைகளை எழுப்புகின்றனர், மற்றும் இறுதியில் அத்துடன் விட்டுவிட்டு வீட்டிற்கு சென்று விடுகின்றனர், அவர்கள் போராடவில்லை."

திரைப்படம் மற்றும் வீடியோவில் உற்பத்திக்கு பிந்திய, பணிகளை செய்கின்ற ஒரு ஊழியர், அரசியலில் ஏற்பட்டுள்ள வலதுசாரி அணிக்கான மாற்றத்தின் சர்வதேச தன்மை குறித்து எடுத்துரைத்தார்: "உலகில் சம்பவங்கள் நடைபெறுகின்ற முறையை எதிர்க்கின்ற காரணத்தினால், இன்றைய தினம் நான் இங்கு வந்திருக்கிறேன் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற, அரசாங்கங்கள், பெரும் நிறுவனங்களுக்காகவும் வர்த்தக, அமைப்புக்களுக்காகவும், அதிக அளவில் உள்ளனவே தவிர அவை மக்களால் நடத்தப்படுவதாக இல்லை. குறிப்பாக, நமது அரசாங்கம், ஒரு பெரும் நிறுவனமே தவிர வேறு ஒன்றுமில்லை. உலக மக்கள் இந்த உலகை நடத்த வேண்டும்.

"அமெரிக்க மக்களது கருத்துக்களை ஜனநாயகக் கட்சி எடுத்துரைப்பதாக நான் கருதவில்லை." "வேறு எந்த அரசியல் கட்சியும் மக்களது, கருத்துக்களை, எடுத்துரைக்கவில்லை. குடியரசுக் கட்சியுடன் ஜனநாயகக் கட்சியும் சேர்ந்து கொண்டு, தங்களது சொந்த வணிக நலன்களின் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன."

தெற்கு-மத்திய லொஸ் ஏஞ்சல்ஸிருந்து, வந்து பேரணியில் கலந்து கொண்ட ஒரு ஆசிரியர், கிறிஸ்டியன், சொன்னார்: "அமெரிக்காவில் என்ன நடைபெற வேண்டும் என்று மக்கள் விரும்புவதை ஜனநாயகக் கட்சி உண்மையிலேயே வெளிப்படுத்திகிறது என்று நான் தனிப்பட்ட முறையில் கருதவில்லை."

நாட்டில் நடைபெற்ற மிகப்பெரும் கண்டனப் பேரணிகளில் சில சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியாவில் நடைபெற்றன, அவற்றில் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்துக் கொண்டனர், மற்றும் சிக்காகோவில் 7,000 பேர் கண்டனப் பேரணிகளில் கலந்து கொண்டனர்.

நியூயோர்க்கில், மான்ஹாட்டனிலுள்ள, டைம்ஸ் சதுக்கத்திற்கு அருகில் சனிக்கிழமையன்று, நடைபெற்ற பேரணியில் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டனர். ஈராக் போருக்குப் பின்னணியாக, அமைந்துள்ள பொய்களையும், அது தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருவதையும் அம்பலப்படுத்துவதில் உறுதிப்பாட்டையும் கோபத்தையும், அத்துடன், ஜனநாயகக் கட்சியின் பங்கின்மீது வெறுப்பையும், வெளிப்படுத்துவதாக, பேரணியில் கலந்து கொண்டவர்களது, உணர்வுகள் மேலோங்கி நின்றன. பேரணியில் கலந்து கொண்டவர்களில் பலர் உலக சோசலிச வளைத் தளத்திற்கு பேட்டியளித்தனர்.

ஒரு கணக்கரான ராகுல் சொன்னார்: "புஷ் பதவிக்கு, வந்த நாள் முதல் ஈராக்கை, கைப்பற்ற விரும்பினார். அதில் 9/11, பேரழிவு ஆயுதங்கள் அல்லது ஜனநாயகம் எந்த வகையிலும் சம்மந்தப்பட்டிருக்கவில்லை. எண்ணெய் வளத்தையும், மத்திய கிழக்கு முழுவதையும், தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, அந்த போர் நடைபெற்றது.

"ஈராக் எளிதாக பிடித்துக் கொள்ளக்கூடிய ஒரு இலக்கு என்று அவர்கள்" நினைத்தனர். ஆனால் அந்த நாட்டை இந்த நிர்வாகம், தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது என்பது என்றைக்கும் கற்பனைகூட செய்திருக்க முடியாத அளவிற்கு மிக கடினமாக ஆகிவிட்டது. இந்த அரசாங்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஈராக் சென்று கொண்டிருக்கிறது என்பது என் கருத்து. புஷ் பதவிக்கு வருவதற்கு முன் இந்த உலகம் பாதுகாப்பானது அல்ல, ஆனால் இப்போது, படுமோசமாகிவிட்டது. ஈராக்கில் ஒரு உள்நாட்டுப் போர் உருவாகக் கூடும் அந்த போர் மிக எளிதாக பரவிவிடக்கூடிய சங்கடங்களை கட்டவிழ்த்து விடக்கூடும். இந்த உலகம், நிச்சயமாக, அதிக ஆபத்து நிறைந்ததாக ஆகிவிட்டது.

"அமெரிக்காவிலும், உலகம் முழுவதிலும், மிகப்பெரும்பாலான மக்கள் இந்த போரை எதிர்க்கின்றனர், ராகுல் மேலும் கூறுகிறார் "இந்த நாடு ஒரு ஜனநாயகமானது என்று கருதப்படுகிறது, ஆனால், புஷ் நம்மைப் பற்றியோ, அல்லது நாம் சிந்திப்பதை பற்றியோ கவலைப்படவில்லை."

நியூயோர்க்கிலிருந்து கலந்து கொண்ட ஒரு நடிகை, லோரன் அந்தப் பேரணியில், கலந்துக்கொண்டதற்கான காரணத்தை விளக்கினார்: "இந்த போர் மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடு பற்றிய எனது உணர்வு முற்றிலும் எந்தவகையிலும் உதவுவதாக அமைந்திருக்கவில்லை." "விரும்பாத மக்கள் மீது ஜனநாயகத்தைக் கொண்டு வருவதற்காக அங்கு சென்றோம் என்று அரசாங்கம் கூறுகிறது. அமெரிக்கா 10 ஆண்டுகள் வரை அங்கிருந்தாலும், அது எந்த மாற்றத்தையும், அங்கு கொண்டு வராது மற்றும் ஜனநாயகத்தையும் கொண்டு வர முடியாது. எண்ணெய் வளத்திற்காக அங்கு நாம் சென்றோம்."

"ஜனநாயகக் கட்சிக்காரர்கள் கடந்த சில தேர்தல்களில் தங்களது போக்கை மாற்றிக் கொண்டு, வேறு வழியில்லாமல், தீங்குகளில் குறைந்த தீங்கிற்கு வாக்களிப்போம் என்று வந்துவிட்டார்கள்" என்று லோரன்ஸ் கூறினார். நான் இப்போது எனது கட்சியான, ஜனநாயகக் கட்சியை, திரும்பிப் பார்க்கிறேன். நிச்சயமாக நான் ஒரு மாற்றை ஆராய்வேன்."

"அலபமாவிலுள்ள மொபைலில் தொடங்கிய ஐந்து நாள் அணிவகுப்பு, லூசியானாவிலுள்ள-நியூ ஒர்லியன்சில் முடிவடைந்தது, அதில் 200-க்கு மேற்பட்டவர்கள் பங்கொடுத்துக் கொண்டனர் - அந்தப் பகுதி சென்ற ஆண்டு நடைபெற்ற காத்தரீனா சூறாவளியால் பேரழிவிற்கு இரையான பகுதியாகும். பேரணியில் கலந்து கொண்டவர்கள், ஈராக் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அதற்காகும் செலவை மக்களது நலன் கருதி நியூ ஒர்லியன்சை சீரமைக்கப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். ஈராக் போரில் தனது மகனை பலி கொடுத்த, சின்டி சீஹன் உட்பட பல ஈராக்கில் பணியாற்றும் போர் வீரர்களின் உறவினர்களும், பல முன்னாள் ஈராக் போர் வீரர்களும் பேரணியில் கலந்துக் கொண்டனர்.

டிட்ரோய்ட் நகரில், சனிக்கிழமையன்று, சுமார் 250 பேர் பேரணியில் பங்கெடுத்துக் கொண்டனர். காத்தரீனா சூறாவளியில் பாதிக்கப்பட்ட பலர் பங்கெடுத்துக் கொண்டனர், சூறாவளியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்று கண்டித்தனர். "தடுப்பு அணைகளை கட்டுங்கள், போர் வேண்டாம்" என்ற வாசகம் அடங்கிய பதாகை ஒன்று கொண்டு வரப்பட்டது.

கனடாவில் நாடு முழுவதும், 35-க்கு மேற்பட்ட நகரங்களில் நடைபெற்ற போர் எதிர்ப்பு கண்டனப் பேரணிகளில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சட்ட விரோதமான, அமெரிக்க-பிரிட்டிஷ் படையெடுப்பு, மற்றும் ஈராக் ஆக்கிரமிப்பை கண்டித்ததுடன், கண்டனப் பேரணிகளில் கலந்து கொண்ட பலர் கனடாவின் புதிய பிற்போக்குவாத அரசாங்கம், புஷ் நிர்வாகத்துடன், நட்புறவை வளர்த்துக் கொண்டிருப்பதை எதிர்த்ததுடன், தெற்கு ஆப்கனிஸ்தானுக்கு கனடா துருப்புக்கள் அனுப்பப்பட்டிருப்பதையும் கண்டித்தனர், அங்கு அமெரிக்கா நியமித்திருக்கும், ஹமீத் கர்சாயின் அரசாங்கத்தை தூக்கிப் பிடிக்க அவர்கள் உதவி வருகின்றனர்.

மிகப்பெரிய கண்டனப் பேரணி டோரன்டோவில் நடைபெற்றது. அங்கு சுமார் 1,500 பேர் அமெரிக்க தூதரகத்திற்கு முன் திரண்டு பின்னர் நகரின், பிற பகுதிகளுக்கு சென்றனர். மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்து கொண்டுள்ள மற்றும் பிற தொழிற்சங்கவாதிகள் தவிர, இந்த பேரணியில் பல அமெரிக்க "போர் எதிர்ப்பாளர்கள்" கலந்து கொண்டனர், அவர்கள் ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போர்களில் கலந்து கொள்ள மறுத்து தப்பி ஓடி கனடா வந்து சேர்ந்தவர்கள் ஆவர்.

டோரன்டோவில் நடைபெற்ற பேரணிக்கு, சின்டி சீஹன் வாழ்த்துக்களை தெரிவித்தார், அடுத்த மாதம் புஷ் நிர்வாகம் நடத்தி வருகின்ற போர்களை எதிர்ப்பதற்கான அவரது இயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்வதற்காக டோரன்டோ வருகிறார். நாடாளுமன்ற புதிய ஜனநாயகக் கட்சி (NDP) உறுப்பினர், பெக்கி நாஸ் அந்த பிராந்தியத்தில் கனடாவின் இராணுவத் தலையீட்டை எதிர்ப்பவர் போன்று இரட்டைவேடமிட்டார். உண்மையிலேயே, NDP அத்தகைய நடவடிக்கைகளை ஐ. நா. தலையீடு என்கின்ற பெயரால் ஆதரித்தது.

மொன்ட்ரியலில், சுமார், 1200 பேர் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் போருக்கும், தொடர்ந்து நீடித்து வரும் அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பிற்கும் எதிராக கண்டனம் தெரிவித்தனர். போர் எதிர்பாளரான பிரன்டன் ஹக்லி பேரணியில் உரையாற்றும்போது, தமது அரசாங்கம் ஈராக் மக்கள் மீது தொடுத்துள்ள போரைக் கண்டித்தார். வான்கோவர் மற்றும் ஹாலிபாக்ஸ் பகுதிகளிலும் கணிசமான அளவிற்கு பேரணிகள் நடைபெற்றன.

ஞாயிறன்று, மிச்சிகன், அன் ஆர்பர் பகுதியில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழக வட்டாரத்தில் சுமார் 500 பேர் பேரணியில் கலந்து கொண்டனர். அன்ஆர்பரில், பல பேரணிகளுக்கு ஏற்பாடு செய்தவர்களின் அரசியல் அணுகுமுறை தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டது. கல்லூரி ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கும் பலரும் அந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த பேரணியில் கலந்துகொண்ட பேச்சாளர்கள் எவரும் ஜனநாயகக் கட்சிக்காரர்களுக்கு சவால் விடவில்லை. அல்லது அமெரிக்காவிலுள்ள இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் அமெரிக்கா போரை ஆதரிப்பதை சுட்டிக்காட்டவில்லை.

கல்லூரி ஜனநாயகக் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவரான, பிரியா கோயல், அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கைக்கு ஆவலான சர்வதேச ஆதரவை பெறுவதற்கு கிடைத்த "ஒரு வாய்ப்பை வீணாக்கிவிட்டது" என்பதை வலியுறுத்துவதில் தனது பிரதான கண்டனத்தை தெரிவித்தார். நிர்வாகம், ஈராக் போரைக் கையாளுகின்ற விதம் குறிப்பாக, ஈரான் போன்ற, அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு போதுமான போர் வீரர்கள் இல்லை என்பதைக் காட்டுவதாக தெரிவித்தார். ஒரு படையெடுப்பை தொடங்குவதற்கு போதுமான ரிசர்வ் துருப்புக்கள் ஈரானை போதுமான அளவிற்கு நெருக்குவதற்கு அமெரிக்க இராணுவத்திடம் இல்லை என்பதை ஈரான் அறிந்திருப்பதாக ஞாயிறன்று, ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜோசப் பைடன் வெளியிட்டிருந்த விமர்சனங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

முந்திய ஆண்டுகளைவிட இந்த ஆண்டு, கண்டனப் பேரணிகள் சிறியவையாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அந்த பேரணிகளுக்கு ஏற்பாடு செய்தவர்களிடையே எந்தவிதமான மாற்று அரசியல் முன்னோக்கும் இல்லாததுதான் காரணமாகும். அமெரிக்காவில், போருக்கான எதிர்ப்பு அதிகரித்திருக்கிறது. குறைந்துவிடவில்லை, ஆனால் மாறாக எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. என்றாலும், இந்த எதிர்ப்பு இரண்டு கட்சி கட்டுக்கோப்பிற்குள் எதிர்ப்பு எதையும் வெளிப்படுத்த இயலவில்லை. அரசியல் நிர்வாகத்திற்குள், யாரை, நோக்கி எதிர்ப்புக்களை, திருப்பிவிடுவது, என்பதில் இலக்கு எதுவுமில்லாததால் பேரணியில் கலந்து கொள்பவர்களது எண்ணிக்கை குறைந்திருக்கிறது, ஏனெனில் அவர்கள், அவற்றால் மாற்றம் எதுவும் வரப்போவதில்லை என்பதை உணர்ந்திருக்கின்றனர்.

கண்டனப் பேரணிகளில் நாடு முழுவதிலும், சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்களும், WSWS வாசகர்களும், ஒரு சர்வ தேசிய முன்னோக்கில் மற்றும் ஒரு சோசலிச வேலைத்திட்ட அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் புதிய அரசியல் இயக்கத்தை கட்டியமைக்கவும் மற்றும் இருகட்சி கட்டமைப்புடன் முறித்துக்கொள்ளவும் அழைப்பு விடுக்கும் ஒரு அறிக்கையை வினியோகித்தனர். போரை எதிர்ப்பவர்கள் SEP-யையும் அதன் 2006 தேர்தல் பிரசாரத்தையும் ஆதரிக்குமாறு அது வலியுறுத்தியது. ("அனைத்து அமெரிக்கத் துருப்புக்களும் உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்" என்ற கட்டுரையை காண்க).

See Also:

புஷ் நிர்வாகம் "முன்னரே தாக்கித் தனதாக்கும் போர்" மூலோபாயத்தை புதுப்பிக்கிறது

கட்டுக்கடங்காத குழப்பத்தினுள்: அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான போரும்

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க போர்: வரலாற்று பிரச்சனைகள்

Top of page