World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan magistrate directs police to investigate disappearance of SEP member

இலங்கை நீதவான் சோ.ச.க. உறுப்பினர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொலிசாருக்கு கட்டளையிட்டுள்ளார்

By our correspondent
14 May 2007

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனன் காணாமல் போயுள்ளமை தொடர்பாக தக்க விசாரணையை முன்னெடுக்குமாறு வட இலங்கையின் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் வியாழக்கிழமை பொலிசாருக்கு கட்டளையிட்டுள்ளார். இவர்கள் இருவரும் மார்ச் 22 முதல் காணாமல் போயுள்ளனர்.

இந்த விசாரணையை துரிதப்படுத்த பொலிசாருக்கு கட்டளையிடுமாறு வேண்டுகோள் விடுத்து இந்த இருவரதும் மனைவிமார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த கடிதத்திற்கு ஊர்காவற்துறை நீதவான் ஜெயராமன் ட்ரொட்ஸ்கி பிரிதிபலித்தார். இதுபற்றி மார்ச் 25 அன்று உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும், "எமது கணவர்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பாகவும் அவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகள் பற்றி எமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை" என அந்தக் கடிதத்தில் விளக்கப்பட்டிருந்தது.

அன்று விமலேஸ்வரனும் மதிவதனனும் கடைசியாக சுமார் 6.30 மணியளவில் வீதியில் காணப்பட்டுள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் மடத்துவெளி கிராமத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் இருந்து சில ஆடைகளை எடுத்துக்கொண்டு புங்குடுதீவையும் ஊர்காவற்துறை தீவையும் இணைக்கும் பாலத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். பாலத்தின் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள கடற்படை சோதனைச் சாவடியை அவர்கள் கடந்துசெல்ல வேண்டியிருந்திருக்கும். ஆனால் அந்த சோதனை நிலையத்திற்குப் பொறுப்பான வேலனை முகாமின் கட்டளை அதிகாரி, இந்த இருவர் தொடர்பாகவோ அல்லது அவர்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பாகவோ தனக்கு எதுவுமே தெரியாது என சோ.ச.க. யிற்கு தெரிவித்துள்ளார்.

இந்த இரு பெண்களும் நீதிமன்றத்திற்கு வழங்கிய கடிதத்தில் தெரிவித்திருந்ததாவது: "எமது கணவர்கள் காணாமல் போயுள்ள சம்பவத்தில் பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்டுள்ளனர் âù நாம் பலமாக சந்தேகிக்கும் அதே வேளை, பொலிசார் இந்தப் பிரச்சினையைப் பற்றி சரியாக விசாரித்து எங்களுக்கு அறிவிக்கத் தவறியுள்ளமை பற்றி நாம் கடும் கவலையடைந்துள்ளோம். இந்த ஆபத்தான சம்பவம் தொடர்பாக சகல பக்கத்திலும் முழுமையான அவசர விசாரணையொன்றை முன்னெடுத்து எமது கணவன்மார்கள் இருவரும் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதிப்படுத்த பொலிசாருக்கு பணிக்குமாறு நாங்கள் தங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்."

அந்தக் கடிதத்தை வாசித்த பின்னர், இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக வளர்ச்சி கண்டுவரும் சர்வதேச அவதானத்தை சுட்டிக்காட்டிய ஊர்காவற்துறை நீதவான், விசாரணையை சரியான முறையில் முன்னெடுக்குமாறு பொலிசாருக்கு வேண்டுகோள் விடுத்தார். இதற்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி அடுத்த வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்க வேண்டும் என கட்டளையிட்ட நீதவான், புங்குடு தீவு மற்றும் வேலனை கடற்படை முகாம்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் அன்றைய தினம் சமூகமளிக்க அறிவிக்குமாறு அறிவுறுத்தினார். அடுத்த வழக்கு விசாரணை மே 18 ம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கம் நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளியுள்ள நிலையில், கடந்தாண்டு பூராகவும் நூற்றுக்காண பொது மக்கள், பிரதானமாக தமிழர்கள் காணாமல் போயுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர். அரசாங்கப் படைகள் இதில் சம்பந்தப்படவில்லை என தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற போதிலும், வடக்கிலும் கிழக்கிலும் யுத்தப் பிராந்தியம் முழுவதும் கடுமையான பாதுகாப்பை பேணிவரும் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் மறைமுக ஆதரவின்றி இத்தகைய கொலைப்படைகளால் சாதாரணமாக இயங்க முடியாது.

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் மற்றும் அதை சூழ்ந்துள்ள ஊர்காவற்துறை போன்ற தீவுகளிலும் 80 பேர் காணாமல் போயுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணக் கிளை அறிவித்துள்ளது. தாங்கள் கடத்தப்படுவோம் அல்லது கொல்லப்படுவோம் என்ற பீதியில் சுமார் 70 இளைஞர்கள் ஆணைக்குழுவில் சரணடைந்துள்ளதோடு அவர்கள் யாழ்ப்பாண சிறையில் "பாதுகாப்பு கட்டுப்பாட்டின்" கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது ஏறத்தாள அதிகாரங்கள் அற்ற ஒரு உத்தியோகபூர்வ அரசாங்க சபையாகும். அதன் பேச்சாளர் விளக்கியது போல், இந்த ஆணைக்குழுவுக்கு காணாமல் போணவர்கள் தொடர்பான பதிவுகளை வைத்திருக்கவும் மற்றும் அவர்களது விடுதலைக்கு வேண்டுகோள் விடுக்கவும் மட்டுமே முடியும். கடந்த வாரக் கடைசியிலும் யாழ்ப்பாணத்திற்கு அருகில் சரசாலையில் இரு பொதுமக்கள் கடத்தப்பட்டனர்.

கடந்த வியாழக்கிழமையில் இருந்து யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள் பெற்றோர்களின் ஆதரவுடன் அன்மையில் வெள்ளை வான்களில் வந்த ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட நான்கு மாணவர்ளை விடுதலை செய்யுமாறு கோரி வருகின்றனர். ஆத்திரம் கொண்ட ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கும் என்ற பீதியில், இந்த வாரம் யாழ்ப்பாணப் பாடசாலைகளுக்கு அருகில் இராணுவம் தமது சிப்பாய்களை இருத்தியுள்ளது. இலங்கையில் தசாப்தங்களாக காணாமல் போண சம்பவங்கள் மற்றும் கொலைக் குழுக்களுடன் "வெள்ளை வான்கள்" ஒத்துழைத்து வருகின்றன.

விமலேஸ்வரன் மற்றும் மதிவதனன் காணாமல் போயுள்ளமை தொடர்பாக உடனடியான பூரண விசாரணையை முன்னெடுக்குமாறு இலங்கை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து ஆட்சேபனைக் கடிதங்களை அனுப்புவதன் மூலம் எமது பிரச்சாரத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு சோ.ச.க. அதன் ஆதரவாளர்கள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றது.

கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Gotabhaya Rajapakse, Secretary of Ministry of Defence,
15/5 Baladaksha Mawatha,
Colombo 3, Sri Lanka
Fax: 009411 2541529
Email: secretary@defence.lk

N. G. Punchihewa Director of Complaints and Inquiries,
Sri Lanka Human Rights Commission,
No. 36, Kinsey Road, Colombo 8, Sri Lanka
Fax: 009411 2694924

பிரதிகளை சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (இலங்கை) உலக சோசலிச வலைத் தளத்திற்கும் அனுப்பி வைக்கவும்.

Socialist Equality Party,
P.O. Box 1270,
Colombo, Sri Lanka.
Email: wswscmb@sltnet.lk

உ.சோ.வ.த. ஆசிரியர் பீடத்திற்கு கடிதங்கள் அனுப்ப தயவு செய்து இந்த online படிவத்தை பயன்படுத்தவும்.

* * *

ஏப்பிரல் 15 ரவீந்திரநாதன் செந்தில் ரவிக்காக பாரிசில் நடந்த ஞாபகார்த்தக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தவர்களில் 40 பேர் கைச்சாத்திட்டு அனுப்பிவைத்துள்ள மனுவை இங்கு பிரசுரிக்கின்றோம். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உறுப்பினரான செந்தில் ரவி, வாகன விபத்தொன்றில் துன்பகரமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனையும் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனையும் விடுதலை செய்யக் கோரும் மனு.

அன்பின் ஐயா,

சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் காணாமல் போய் கிட்டத்தட்ட ஒரு மாதமாகிவிட்டது. இவர்கள் இருவரும் தாம் வசிக்கும் ஊர்காவற்துறையையும் புங்குடு தீவையும் இணைக்கும் 3.8 கிலோமீட்டர் பாலத்தில் உள்ள கடற்படை வீதித்தடைகளூடாக பயணித்துக்கொண்டிருக்கும் போதே காணாமல் போயுள்ளனர்.

தனது விசாரணைகளின் மூலமாக சோ.ச.க. ஸ்தாபித்திருப்பதாவது:

1. மார்ச் 22 பிற்பகல், பாலத்தின் ஊர்காவற்துறை முனையை அவர்கள் இருவரும் கடக்கும் போது, இரு பொலிஸ் அதிகாரிகளாலும் கடற்படை சிப்பாய்களாலும் சரீர பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

2. அதைத் தொடர்ந்து புங்குடு தீவு சோதனைச் சாவடியை கடந்து சென்ற அவர்கள், சுமார் 6.30 மணியளவில் ஊர்காவற்துறை நோக்கி மீண்டும் புங்குடு தீவு சோதனை நிலையத்தின் வழியாக பயணித்துள்ளனர். அவர்கள் புங்குடு தீவு சோதனை நிலையத்தின் ஊடாக பயணித்துள்ளதை அங்குள்ள கட்டளை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

தாங்கள் அறிந்த வகையில், ஊர்காவற்துறை பிரதேசம் கடற்படையின் நெருக்கமான கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இருவரும் காணாமல் போயுள்ள சம்பவத்தில் இராணுவச் சிப்பாய்கள் அல்லது பொலிசார் நேரடி பொறுப்பாளியாக இருப்பதற்கான அல்லது சம்பந்தப்பட்டிருப்பதற்கான சகல அறிகுறிகளும் உள்ளன.

சோ.ச.க. அதே போல் உள்நாட்டிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் உள்ள மக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் தொடர்ந்தும் மெளனம் சாதிக்கின்றமை, அரச படைகள் குற்றமுள்ளவர்கள் என்ற எமது சிறந்த அடித்தளத்தைக் கொண்ட சந்தேகங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒப்புயர்வற்ற முக்கியத்துவம் கொண்டவையாக நோக்கும் நாங்கள், நடராஜா விமலேஸ்வரன் மற்றும் சிவநாதன் மதிவதனின் காலதாமதமற்ற விடுதலையை உறுதிப்படுத்தவும் மற்றும் இந்த காணாமல் போன சம்பவத்திற்கு பொறுப்பானவர்களை கைது செய்யவும் பாதுகாப்பு அமைச்சு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோருகின்றோம்.

2006 ஆகஸ்ட் 7, கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் முல்லிப்பொத்தானையில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் கொல்லப்பட்ட சோ.ச.க. ஆதரவாளர் சிவப்பிரகாசம் மரியதாஸின் கொலைச் சம்பவம் பற்றி தக்க விசாரணையை அரசாங்கம் முன்னெடுத்து கொலையாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் எனவும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.