World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

மிsக்ஷீணீமீறீவீ ஜீக்ஷீமீss க்ஷீமீஜீஷீக்ஷீts ஹிஷி ஜீறீமீபீரீமீ ஷீயீ ஷ்ணீக்ஷீ ஷீஸீ மிக்ஷீணீஸீவீs ஙிusலீ ஜீக்ஷீமீஜீணீக்ஷீவீஸீரீ ணீஸீ ளிநீtஷீதீமீக்ஷீ ஷிuக்ஷீஜீக்ஷீவீsமீ?

ஈரான் மீதான போருக்கு அமெரிக்கா சபதமேற்றுள்ளதாக இஸ்ரேலிய பத்திரிகைகள் தகவல் - புஷ் அக்டோபர் ஆச்சரியத்திற்கு தயார் செய்கிறாரா?

By Bill Van Auken
21 May 2008

Use this version to print | Send this link by email | Email the author

அடுத்த ஆண்டு துவக்கத்தில் தான் பதவியிலிருந்து செல்வதற்கு முன்னதாக ஈரான் மீது இராணுவத் தாக்குதலை நடத்தி விட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் விரும்புகிறார் என்று இஸ்ரேலிய பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியை வெள்ளை மாளிகை செவ்வாயன்று கோபமாக மறுத்துள்ளது.

புஷ் மற்றும் அவரது அதிகாரிகள் குழுவை சென்ற வாரம் சந்தித்துப் பேசிய இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய இராணுவ வானொலியில் வந்த செய்திகளின் அடிப்படையில் செவ்வாயன்று ஜெருசலேம் போஸ்டில் வந்த கட்டுரை ஒன்று இவ்வாறு தெரிவித்துள்ளது.

"ரகசியமாய் நடந்த கூட்டத்தின் போது புஷ் மற்றும் துணை ஜனாதிபதி டிக் செனி ஆகியோர் இராணுவ நடவடிக்கை அவசியப்படுகிறது என்று கருத்து கொண்டிருந்ததாக ஜனாதிபதியின் பயணக்குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்" என்று இஸ்ரேல் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அந்த கட்டுரை தெரிவித்தது.

"பாதுகாப்பு செயலாளர் ரொபர்ட் கேட்ஸ் மற்றும் அமைச்சர் கொன்டலிஸா ரைஸ் ஆகியோரின் தயக்கத்தால் தான்" ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையின் மீதான முடிவு தாமதத்திற்குள்ளானதாக அமெரிக்க அதிகாரி கூறினார் என்று அந்த கட்டுரை தெரிவிக்கிறது.

சமீபத்திய லெபனான் நெருக்கடியும், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா பெய்ரூட்டின் கட்டுப்பாட்டினை வெளிப்படையாக சுலபமாக கைப்பற்ற முடிந்ததும், இஸ்லாமியக் குடியரசின் மீது அமெரிக்க தாக்குதல் எண்ணத்தை மீண்டும் முன்னணிக்கு கொணர்ந்திருப்பதாக அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.

"நோய் தான் குணப்படுத்தப்படவேண்டுமே தவிர, அதன் அறிகுறிகள் அல்ல" என்று புஷ் கருத்து வெளியிட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெருசலேம் போஸ்ட் வலைத்தளத்தில் கட்டுரை வெளிவந்த சில மணி நேரங்களிலேயே வெளியான வெள்ளை மாளிகை மறுப்பு குறிப்பிடத்தக்க வகையிலான கடுமையான தொனியைக் கொண்டிருந்தது. "இன்றைய ஜெருசலேம் போஸ்டில் வெளியான கட்டுரை ஒன்று ஈரான் மீதான ஜனாதிபதியின் நிலைப்பாடு குறித்து பெயர் கூறாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது - பெயர் கூறாத ஆதாரங்களை மேற்கோள் காட்டுவது அது எழுதப்பட்டிருக்கும் பத்திரிகைக்கு தகுதியாகத் தெரியவில்லை", என்று அந்த அறிக்கை நீள்கிறது.

இருப்பினும் செவ்வாயன்று பிற்பகுதியில், புஷ்ஷின் செய்தித் தொடர்பாளர் டனா பெரினோ இந்த மறுப்பு குறித்து சந்தேகங்களைக் கொண்டிருந்த பல செய்தியாளர்களால் நெருக்கப்பட்டார். "ஜனாதிபதியும் துணை ஜனாதிபதியும் தாக்குதல் அவசியப்படுகிறது என்கிறார்களா- இஸ்ரேலில் இவ்வாறு யாரேனும் கூறினார்களா, இல்லையா?" என்று ஒருவர் கேட்டார்.

அமெரிக்கா ஈரானுடனான தனது மோதலை "இராஜதந்திர நிலையில்" தீர்த்துக் கொள்ளவே விரும்புகிறது. ஆனாலும், எந்த வாய்ப்பையும் "மேசையில் இருந்து அகற்றும் எண்ணமில்லை" என்ற அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை மறுவலியுறுத்தம் செய்த டனா பெரினோ அந்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.

உண்மையில், ஜெருசலேம் போஸ்ட் கட்டுரையானது, புஷ் நிர்வாகம் ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைக்கு தயாராகிறது என்பதற்கான ஒரே ஒரு அடையாளம் காட்டியாக இருக்கவில்லை என்பது தான் உண்மை.

இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ நிலைகள் அதிகப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இருக்கின்றன. கடற்படையானது ஈரானிலிருந்து தாக்குதல் தூரத்தில் மீண்டும் இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை - USS Lincoln மற்றும் USS Harry S. Truman - கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

இதனிடையே, கடற்படை விவரிப்பின் படி "திட்ட அட்டவணையில்" இல்லாத நடவடிக்கைக்காக ஆறாவது கடற்படைக் குழுவின் தலைமைக் கப்பலான USS Mount Whitney லெபனான் கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் பரந்த பிராந்தியத்தில் பெரும் தாக்குதலை ஒருங்கிணைக்கும் திறன் படைத்த கடற்படையின் மிகவும் மேம்பட்ட தலைமை, கட்டுப்பாடு மற்றும் புத்திசாலித்தனம் கொண்டதாகும். இது ஏற்கனவே அங்கிருக்கும் ஏவுகணை அழிப்பு கப்பலான USS Cole உடன் சேர்ந்து கொண்டுள்ளது.

வாஷிங்டனில் செவ்வாயன்று செனட் கமிட்டியின் முன்னால் தோன்றிய அமெரிக்க பணியாளர்களின் இணைத் தலைவர்களின் தலைவர் அட்மிரல் மைக்கேல் முல்லன், ஈராக்கில் வன்முறைக்கு ஈரான் தான் காரணம் என்கிற பென்டகனின் தணிவற்ற குற்றச்சாட்டினை மீண்டும் வலியுறுத்தினார். இதுவரை அமெரிக்கா இராணுவ பதிலடி கொடுக்கவில்லை என்றால் "அச்சுறுத்தல்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள நமது உறுதி அல்லது திறனில் குறைபாடு இருப்பதன் அறிகுறி என்று பொருளல்ல" என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

புஷ் சென்ற வாரம் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், இஸ்ரேலுக்கான நிபந்தனையற்ற தனது ஆதரவில் ஈரானை மையப்படுத்தி வைத்தார். "ஈரானின் அணு ஆயுத குறிக்கோள்களை உறுதியாக எதிர்ப்பதில் அமெரிக்கா உங்கள் பக்கம் நிற்கிறது, உலகில் தீவிரவாதத்தின் தலைமை ஆதரவாளரை உலகின் மிகவும் மரண அபாயம் கொண்ட ஆயுதங்களைக் கொண்டிருக்க அனுமதிப்பதென்பது வருங்கால சந்ததியினருக்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகமாகும். அமைதியை விரும்பும் உலகம் ஈரானை ஒரு அணு ஆயுதம் கொண்டிருக்க அனுமதிக்கக் கூடாது".

புஷ்ஷின் பயணத்திற்கு பிறகு இஸ்ரேலிய பிரதமர் எகுத் ஓல்மர்ட்டுக்காக செய்தியாளர்களிடம் பேசிய ஒரு செய்தித் தொடர்பாளர், ஒரு அணு ஆயுதம் தயாரிப்பதற்கான ஈரானின் முயற்சியை முறியடிக்க "உணரத்தக்க நடவடிக்கை" அவசியப்படுகிறது என்பதை புஷ்ஷும் ஓல்மர்ட்டும் ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார்.

"நாங்கள் ஒரே பக்கத்தில் இருக்கிறோம். இருவருக்குமே அச்சுறுத்தல் தெரிகிறது...அத்துடன் ஈரான் அணு ஆயுத விடயத்தில் முன்செல்வதை தடுப்பதற்கு உணரத்தக்க நடவடிக்கை அவசியம் என்பதை நாங்கள் இருவருமே உணர்ந்திருக்கிறோம்", ஓல்மர்டின் செய்தித் தொடர்பாளர் மார்க் ரெஜெவ் இஸ்ரேலிய தினசரி Ha'aretz வசம் தெரிவித்தார்.

ஈரான் மீது தூதரக ரீதியான நெருக்குதல் கொடுப்பது குறித்து கூறிய ரெஜெவ், "இது போதவில்லை என்பது தெளிவு, கூடுதலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதுள்ளது என்பதும் தெளிவு" என்றார்.

ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல் குறித்து அமெரிக்காவும் இஸ்ரேலும் முரசு கொட்டுவதை தொடர்ந்து கொண்டிருந்தாலும், சர்வதேச அணுசக்திக் கழகத்தின் டைரக்டர் ஜெனரலான (IAEA) முகமது எல் பரேதி திங்களன்று எகிப்தில் நடந்த உலக பொருளாதார மன்ற அமர்வு முன்பு பேசிய போது, ஐ.நா.வின் இந்த அணுசக்தி கண்காணிப்பு அமைப்பானது ஈரான் அணுகுண்டு தயாரிப்பதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் கொண்டிருக்கவில்லை என்று அறிவித்தார்.

இந்த கட்டுரை ஜெருசலேம் போஸ்டில் வெளியாவதற்கு முன்னரே, புஷ்ஷுக்கும் ஓல்மர்டுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் ஈரானின் அணு ஆயுதத் திட்டம், மைய இடத்தினைப் பிடித்திருந்ததாக Ha'aretz செய்தி வெளியிட்டது. ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தினை 2003 ஆம் ஆண்டிலேயே நிறுத்தி விட்டதாக சென்ற ஆண்டு அமெரிக்க உளவு அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட தேசிய உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கைக்கு முரண்பட்டதாக இருக்கத்தக்க உளவுத்துறை தகவல்களை இஸ்ரேலிய அதிகாரிகள் புஷ்ஷிடம் வழங்கியதாக இந்த தினசரி தெரிவித்தது.

"ஈரானின் அணு நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது குறித்த சாத்தியத்தில் நிர்வாகத்தின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு இது போதுமானதாக இருக்குமா என்பது தெரியவில்லை", என்று இந்த பத்திரிகை தெரிவித்தது. இருப்பினும், ஈரான் ஒரு "திரும்ப முடியாத புள்ளியை" நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் உடனடி நடவடிக்கை அவசியப்படுவதாகவும் இஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக அது தெரிவித்தது.

புஷ்ஷைப் பொறுத்தவரை, "அவரது பதவிக்கால முடிவு நெருங்க நெருங்க, ஈராக்கின் சர்ச்சைக்குரிய போருக்கும் அப்பால், தனது ஜனாதிபதி பதவியின் கண்ணியமரபு குறித்து நிச்சயமாக அவர் சிந்திக்கிறார்" என்று அந்தப் பத்திரிகை மேலும் கருத்து தெரிவித்தது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் தொடரும் போர்களில் பொதிந்துள்ள பேரழிவின் மரபில் இருந்து கவனத்தை திருப்புவதற்கான ஒரு வழி மற்றுமொரு இராணுவ நடவடிக்கையை துவக்குவது தான் என்பதாக ஆலோசனையளிக்கப்பட்டு வருகிறது. இது சந்தேகத்திற்கிடமின்றி ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் பெரும் குழப்பத்திற்குள் தள்ளி விடும்.

புஷ் நிர்வாகத்தின் மேல் தட்டு வட்டாரங்களுக்குள்ளாக அரசியல் எண்ண ஓட்டம் எவ்வாறாக இருக்கிறது என்பதற்கான ஒரு சான்று ஒரு ஒலிநாடா வடிவில் வெளியானது. தொலைக்காட்சி செய்திகளில் தொடர்ந்து தோன்றி ஈராக் விவகாரத்தில் நிர்வாகத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக கருத்துக் கூறி வரும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் குழு ஒன்றுடன் பாதுகாப்புத் துறையின் உறவுகளை அம்பலமாக்கும் தனது கட்டுரை ஒன்றுக்காக தகவல் சுதந்திர சட்டத்தின் கீழ் நியூயோர்க் டைம்ஸ் கோரியிருந்ததன் பேரில் பென்டகன் சமர்ப்பித்த ஒரு ஒலிநாடாவின் ஒரு பகுதி தான் இது.

இந்த ஒலிநாடா டிசம்பர் 2006ல் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்டுக்கும் பென்டகனே கூட "செய்தி வலிமை பெருக்குவோர்" எனக் குறிப்பிடும் இந்த "இராணுவ ஆய்வாளர்கள்" குழு ஒன்றுக்கும் இடையே நடந்த மதிய உணவுக் கூட்டத்தினைக் கொண்டிருக்கின்றது.

இக்கூட்டத்தின் பொதுவான மனோநிலையானது 2006 இடைக்கால தேர்தலின் முடிவுகள் குறித்த அதிருப்தியால் - கோபம் என்று கூட சொல்லலாம் - நிரம்பியிருந்தது. அந்த தேர்தலில் பொதுமக்களின் போருக்கு எதிரான உணர்வானது நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கட்டுப்பாட்டையும் ஜனநாயகக்கட்சியினரிடம் அளித்திருந்தது.

ஓய்வுபெற்ற கடற்படை லெப்டினென்ட் ஜெனரல் மைக்கேல் டெலாங் ரம்ஸ்பீல்டிடம் கூறுவது கேட்கிறது, "கேபிடல் ஹில்லில் புதிய அரசியல் அமைப்பு இருக்கையில், அது (ஒரு பயங்கரவாதத் தாக்குதல்) நிகழும்வரை உங்கள் பக்கம் அனுதாபம் கொண்டுள்ளவர்களை நீங்கள் அதிகம் காண முடியாது".

ரம்ஸ்பீல்ட் அதற்கு ஒப்புக்கொண்டு பதிலளிக்கையில்: "ஐந்து வருடங்களில் எந்த தாக்குதலும் இல்லை. சமூகம் நடந்து கொள்ளும் விதம் அச்சுறுத்தல் மிகவும் குறைவாக உணரப்படுவதை பிரதிபலிக்கிறது என்னும் தகவல் ஆச்சரியமளிக்காத விதத்தில் இந்த சமுதாயத்தில் அச்சுறுத்தல் குறித்த உணரல் மிகவும் குறைவாக இருக்கிறது...இதனை, ஒரு தாக்குதல் என்று கூடத் திருத்திக் கூறலாம் என்று நினைக்கிறேன். அப்படி ஒன்று நிகழ்கையில், ஒவ்வொருவரும் மற்றுமொரு [சரியாக கேட்கவில்லை] உத்வேகம் பெறுகிறார்கள். அச்சுறுத்தல்களின் தீவிரத்தை உணரத்தக்க முதிர்ச்சி நம்மிடம் இல்லை என்பது ஒரு அவமானம் தான். எங்களால் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது என்று நீங்கள் கருதக் கூடிய வகையில், நமது சமூகத்தின் மீது திணிக்கப்படக்கூடிய வன்முறை, படுகொலை ஆகியவை மிகவும் உண்மை, மிகவும் யதார்த்தம், மிகவும் தீவிரமானதாக இருக்கிறது..."

"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்கிற போர்வையில் அமெரிக்க இராணுவவாதத்தின் உலகளாவிய வெடிப்பை அமெரிக்க மக்கள் ஆதரிக்க முற்படாததற்கு "பரிகாரம்" என்பது ரம்ஸ்பீல்டைப் பொறுத்தவரை, 2001, செப்டம்பர் 11 நடந்ததைப் போல மற்றுமொரு "தாக்குதல்" ஆகும். தெளிவாக, அவரது கருத்தாக்கம் என்னவென்றால், "வன்முறை" மற்றும் "படுகொலை"யின் மற்றுமொரு சுற்று நிச்சயமாக பொதுமக்களை ஸ்தம்பிக்க செய்து, நிர்வாகம் தனது அரசியல் ஆசையைத் திணிக்க அதீத வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கான சூழலை உருவாக்கும் என்பது தான்.

நிச்சயமாக, இத்தகையதொரு தாக்குதலை தூண்ட ஒரு வழி ஈரானுக்கு எதிராக இராணுவத் தாக்குதல் ஒன்றை நடத்துவது தான்.

இஸ்ரேலில் இருந்த வந்த தகவல்களும் இப்பிராந்தியத்தின் இராணுவ நடவடிக்கை அதிகரிப்புகளும் ஒரு வெளிப்படையான கேள்வியை எழுப்புகின்றன: 2008 தேர்தல்கள் நெருங்கி வரும் சூழலில், புஷ் நிர்வாகத்திற்குள்ளிருக்கும் உறுப்புகள், தூண்டப்படாத நிலையிலும் ஈரான் மீது தாக்குவதற்கான வடிவத்தில் ஒரு "அக்டோபர் ஆச்சரியத்திற்கு" தயார் செய்கின்றனவா?