சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Israel defends murderous assault on Gaza aid flotilla

காசா கப்பல்கள் தொடரணி மீதான கொலைகாரத் தாக்குதலை இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது

By Jean Shaoul
4 June 2010

Use this version to print | Send feedback

காசா உதவிக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதில் இறந்து போன எட்டு துருக்கியக் குடிமக்கள் மற்றும் ஒரு துருக்கிய பின்னணி அமெரிக்கக் குடிமகன் ஆகியோரின் சடலங்கள், இஸ்தான்பூலுக்கு வியாழனன்று திருப்பி அனுப்பப்பட்டன. ஒரு சீற்றம் மற்றும் உணர்வுப் பெருக்கு நிறைந்த அணிவகுப்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களுடைய சவப்பெட்டிக்குப் பின் கூடிய நிலையில் ஒரு ஆர்ப்பாட்டத்தை இது தூண்டியது.

அதன் கடற் தாக்குதல் நடவடிக்கை மற்றும் குறைந்தது ஒன்பது நிராயுதபாணிகளான பயணிகளை சர்வதேச கப்பல்கள் தொடரணியில் காசாவிற்கு மிகவும் தேவைப்பட்ட உதவியைக் கொண்டுவந்தவர்களைக் கொன்றது பற்றிய உலகம் முழுவதுமான சீற்றத்தை எதிர்கொள்ளுவதில் இஸ்ரேலிய அரசாங்கம் ஆக்கிரோஷமாகத்தான் உள்ளது.

அமெரிக்காவில் பிறந்த 19 வயது பள்ளி மாணவர் பர்க்கன் டோகன் பலியானவர்களில் ஒருவர் என்று அடையாளம் காணப்பட்டதானது வாஷிங்டன் இஸ்ரேலின் நடவடிக்கைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான சமாளிப்புக்கள் தோற்றுவிட்டது என்பதை காட்டுகிறது. நான்கு முறை தலையிலும், ஒருமுறை நெஞ்சிலும் சுடப்பட்டப் பின்னர் டோகன் இறந்ததாக தகவல்கள் குறிப்புக் காட்டியுள்ளன.

பிரதம மந்திரி பென்யமின் நெத்தன்யாகுவின் அரசாங்கம், அயர்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பல் Rachel Corrie இவ்வார இறுதியில் காசாவிற்கு வரவிருப்பதின் மீது புதிய மோதல் ஏற்படும் என்று அச்சுறுத்தியுள்ளது.

இக்கப்பலில் 11 பேர் உள்ளனர். அதில் நோபல் பரிசை வென்ற Mairead Corrigan Maguire, அயர்லாந்தின் முன்னாள் ஐ.நா.தூதர் டெனிஸ் ஹாலிடே மற்றும் அயர்லாந்து, மலேசியாவில் இருந்து ஏழு சாதாரணக் குடிமக்கள் அடங்குவர். இக்கப்பல் மருத்துவக் கருவிகள், சக்கர நாற்காலிகள், பள்ளிக்குத் தேவையான அளிப்புக்கள் மற்றும் சிமென்ட் ஆகியவை உள்ளன. கடைசிப் பொருளை இஸ்ரேல் காசாவிற்குள் அனுமதிக்க மறுக்கிறது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் தீய முறையில் அச்சுறுத்தியதாவது: "Rachel Corrie க்கும் நாங்கள் தயாராக இருப்போம்."

புதனன்று இரவு ஒரு தொலைக்காட்சி உரையில் நெத்தன்யாகு திங்கள் நடந்த மாவி மர்மரா மீதான கொலைகாரத் தாக்குதலை பாதுகாத்துப் பேசி, சிறிதளவு சான்றும் இல்லாமல் அது ஹமாஸ் மற்றும் ஈரானுக்கு ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு வருகிறது என்றார்.

அவர், கப்பல்கள் தொடரணியின் நோக்கம் காசா முற்றுகையை முறியடிக்க வேண்டும் என்பதே அன்றி உதவிப் பொருட்களைக் கொண்டுவருவது அல்ல, முற்றுகை முடிந்திருந்தால், கப்பல்கள் ஈரானில் இருந்து இஸ்ரேல், அதற்கும் அப்பால் இலக்கு கொள்ளக்கூடிய ஆயிரக்கணக்கான ஏவுகணைகளைக் கொண்டுவரும், மத்தியதரைக்கடல் பகுதியில் ஒரு ஈரானியத் துறைமுகத்தை ஏற்படுத்தும் என்று வலியுறுத்தினார். "இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமையைத் தொடரும். எனவே கப்பல் முற்றுகையைத் தொடர்வோம், வரும் கப்பல்களை சோதிப்பதையும் தொடர்வோம் என்னும் எங்கள் கொள்கையில் உறுதியாக இருப்போம்" என்றார் அவர்.

பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக்கும் கமாண்டோத் தாக்குதலை ஆதரித்து இது ஒரு தற்காப்புச் செயல் என்ற பொய்யை மீண்டும் கூறினார். "நாங்கள் ஒன்றும் வட அமெரிக்காவிலோ, மேலை ஐரோப்பாவிலோ இல்லை, நாங்கள் மத்திய கிழக்கில், வலுவற்றவர்களுக்கு இரக்கம் காட்டாத இடத்தில் இருக்கிறோம் என்பதை எப்பொழுதும் நினைவிற் கொள்ள வேண்டும்."

இஸ்ரேலின் அறிக்கைகள் முடிவில்லாமல் செய்தி ஊடகத்தில் கிளிப்பிள்ளை போல் கூறப்படுகின்றன. ஆயினும் கப்பல்கள் தொடரணி பற்றிய இக்கூற்றுக்களில் ஒன்று கூட சான்றுபடுத்தப்பட முடியாதது ஆகும்.

கப்பல்களில் ஒரு ஆயுதம் கூடக் கண்டுபிடிக்கப்படவில்லை. இவை கிரேக்கத்திலும், துருக்கியிலும் அதிகாரிகளால் சோதனைக்கு உட்பட்டிருந்தன. உண்மையில் இஸ்ரேலிய அதிகாரிகள் உதவிப்பொருட்கள் காசாவிற்குச் செல்வதற்கு உடன்பட்டிருந்தனர்--சிமென்ட் மற்றும் உலோகப் பொருட்கள் மட்டும் கணிசமான விதிவிலக்குகள் ஆயின.

மாவி மர்மராவின் தளத்தில் இருந்த செயற்பாட்டாளர்கள் இஸ்ரேலிய கமாண்டோக்கள் கப்பலில் ஏறும் முன்னரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உறுதிபடக் கூறியுள்ளனர். பிரிட்டிஷ் செயற்பாட்டாளர் சாரா கொல்போர்ன் பிபிசி இடம் கூறினார்: "கடலில் இருந்த கப்பல்களைக் கூட நான் எண்ண முடியவில்லை. அந்த இடம் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், துப்பாக்கி வெடிச்சத்தம் ஆகியவற்றால் நிறைந்திருந்தது. அது கொடூரமானது, முற்றிலும் கொடூரமானது."

ஒரு இஸ்ரேலிய அரபு சட்டமன்ற உறுப்பினரும் மாவி மர்மரா தளத்தில் இருந்த பயணியுமான ஹனீன் ஜௌபி கருத்துப்படி, இஸ்ரேலிய கடற்படைக் கப்பல்கள் அக்கப்பலை சூழ்ந்தும் கமாண்டோக்கள் ஒரு ஹெலிகாப்டரில் இருந்து இறங்குவதற்கு முன் சுட்டுக் கொண்டிருந்தன என்றார். இது தளத்தில் இருந்து பயணிகளை வெளியேற்றியது. ஆயுதமற்ற அனைத்துப் பயணிகளிடம் இருந்தும் தூண்டுதலோ எதிர்ப்போ இல்லை என்று அவர் கூறினார். மேலும் இரு பயணிகள் தலையில் துப்பாக்கிச் சுட்டு காயங்களுக்கு உள்ளானார்கள். இது கொலை செய்யப்படும் நோக்கத்தை தெரிவிக்கிறது என்றும் கூறினார்.

அல்-ஜசீரா தயாரிப்பாளர் ஜமால் இஷயல் இஸ்ரேலியக் கமாண்டோக்கள் முதலில் ரப்பர் பூச்சு உலோகத் தோட்டாக்கள், கண்ணீர்ப்புகை மற்றும் ஒலி வெடிப்புகளை பயணிகள் மீது இயக்கினர், ஆனால் ஐந்து நிமிடங்களுக்குள் உண்மையான வெடிபொருட்களைப் பயன்படுத்தினர் என்றார். "உறுதியாக உண்மையான வெடிகள் வானில் இருந்தும் கடலில் இருந்தும் வந்தன" என்று அவர் கூறினார். துருப்புக்கள் பயணிகளின் வேண்டுகோளான காயமுற்றோரை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதைக் கேட்கவில்லை, அதன் விளைவாக பலரும் தளத்திலேயே குருதி கொட்டி இறந்தனர் என்று இஷயல் சேர்த்துக் கொண்டார்.

காசாவின் மக்களை இழிந்த வறுமைக்குத் தள்ளியுள்ள முற்றுகையை அகற்ற வேண்டும் என்ற முறையீடுகளை டெல் அவிவ் நிராகரித்துள்ளது. மாறாக தன்னுடைய அடக்குமுறையை அது அதிகப்படுத்தும் சான்றுகள்தான் வந்துள்ளன. இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் செவ்வாயன்று ஒரு சிறு பகுதியைத் தாக்கியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர்.

திங்கள் கிழமைக்கு முன்பே இஸ்ரேலுடன் கப்பல்கள் தொடரணி பற்றி வாஷிங்டன் தொடர்பு கொண்டிருந்ததாக வாஷிங்டன் போஸ்ட் வியாழனன்று தெரிவித்துள்ளது. அரச செயலக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.கிரௌலியை மேற்கோளிட்டு நிர்வாகம் "பல வழிகளில் பல முறை தொடரணி பற்றி இஸ்ரேலுடன் பேசியது" என்றார்.

"நாங்கள் எச்சரிக்கை மற்றும் நிதானத்தை, எதிர்பார்க்கும் சாதாரண மக்கள், அமெரிக்க குடிமக்கள் இருப்பதை ஒட்டி முக்கியத்துவத்தை வலியுறுத்தினோம்" என்று கிரௌலி கூறினார். ஆயினும் கூட, இஸ்ரேலிய அரசாங்கம் தடையற்ற வன்முறையில் செயல்பட்டு ஒரு அமெரிக்கக் குடிமகனும் இறந்துவிட்டார். இஸ்ரேலின் செயல்களை அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா கண்டிக்க மறுத்துவிட்டார். இவை கடற் தாக்குதல் போன்றது அல்லது போர்க் குற்றம் என்பதையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

இஸ்ரேல் பற்றிய குறைகூறலை ஐ.நா. பாதுகாப்புக்குழுத் தீர்மானத்தில் இருந்து அகற்றியதில் வெற்றி அடைந்தபின் வாஷங்டனானது இஸ்ரேலிய அரசாங்கம் அதன் "விசாரணை" என்பதை திங்கள் தாக்குதல் குறித்து நடத்தும் என்று வலியுறுத்தி, ஒருவேளை ஒரு அமெரிக்கப் பார்வையாளர் இந்த வெள்ளைப்பூச்சில் உதவுவார் என்றும் கூறினார்.

"இஸ்ரேலிய தூதர் மைக்கேல் ஒரென் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் உஜி அரட்டும் நான்கு மணி நேரம் வெள்ளை மாளிகையில் செவ்வாயன்று பேச்சுக்கள் நடத்தி, தாக்குதலில் இருந்து தோன்றும் ராஜதந்திர விளைவுகளைக் கட்டுப்படுத்துவது என்பதில் குவிப்புக் காட்டினார். இது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் பற்றிய கோரிக்கையும் ஆபத்திற்கு உட்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் சமாதான முயற்சிகளையும் ஆபத்திற்கு உட்படுத்தியுள்ளது."

மாவி மர்மரா மீது தாக்குதல் நடத்தியதை ஈரானுக்கு எதிரான அமெரிக்க மூலோபாயத்துடன் சேர்த்துள்ளது, மற்றும் பிராந்திய அரசியலுடன் இணைத்துள்ளது, பொதுவாக இந்த வன்முறை நிகழ்விற்குப் பின்னணியில் ஆழ்ந்த உந்து சக்திகள் உள்ளன, இஸ்ரேலிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலையும் தெளிவாகக் காட்டாத ஒரு நிகழ்வு பற்றி மிருகத்தன, திமிர்பிடித்த விதத்தில் அரசாங்கம் நிதானம் இழந்து செயல்பட்டது என்பதற்கு மாறான தன்மைதான் காணப்படும்.

டெல் அவிவ் வேண்டுமென்றே திட்டமிட்ட கொலைகளைக் கடந்த திங்களன்று நடத்தி தன்னுடைய கூறப்படாத புவியியல் மூலோபாய நோக்கங்களை முன்னேற்றுவிக்க முற்பட்டது. இவற்றுள் துருக்கிக்கு அது ஒன்றும் மற்ற அனைத்து அண்டை நாடுகள் மீதும் இஸ்ரேல் நடத்தியுள்ள இராணுவத் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு பெற்றது அல்ல என்ற எச்சரிக்கையும் அடங்கியுள்ளது;

சியோனிச அரசாங்கத்தின் மூலோபாயங்கள் பற்றி எவ்விதத் துல்லிய கணிப்புக்கள் இருந்தாலும், இது ஒரு பொறுப்பற்ற கொள்கையாகும். இது பிராந்தியம் முழுவதையும் பேரழிவு தரும் போருக்கு இழக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

இஸ்ரேலுக்குள், கப்பல்கள் தொடரணி மீது இராணுவத் தாக்குதல் பற்றி செய்திகள் கிடைத்தவுடன், பல ஆயிரக்கணக்கான மக்கள் டெல் அவிவ் மற்றும் ஜேருசலத்தில் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களுடைய பதாகைகள், "காசா முற்றுகையைக் கைவிடு", "ஆர்ப்பாட்டக்காரர்கள் உடல்கள் மீது ஒன்றும் பாதுகாப்பு கட்டமைக்கப்படுவதில்லை", "போர்க் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்துக" மற்றும் "இராணுவத்தை நிறுத்து, தொடரணியை அல்ல" என்று இருந்தன.

அரபு மாணவர் சங்கங்கள் உட்பட ஹைபா, ஜெருசேலம், பீர் ஷேவா, டெல் அவிவ் ஆகிய இடத்தில் உள்ள மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில செயற்பாட்டாளர்கள் அஷ்டோட் துறைமுகத்தில், தொடரணிக் கப்பல்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட பயணிகள் எடுத்துச்செல்லப்பட்ட இடத்திற்குள் நுழைய முயன்று தோல்வியுற்றனர். வெள்ளியன்று மாலை ஜெருசேலத்தில் ஒரு எதிர்ப்பு விழிப்பு நிலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பல அரேபிய சிறுநகரங்களிலும் இஸ்ரேலுக்குள் இருக்கும் கிராமங்களிலும் சீற்றமுற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் வெடித்தெழுந்தனர். அரபு உயர்மட்ட கண்காணிப்புக் குழு ஒரு பொது வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை இஸ்ரேலிய அரேபியர் படுகொலைக்கு எதிராக நிகழ்த்த வேண்டும் என்று கோரியதுடன் உதவிக்கு வந்த கப்பல்கள் தொடரணியின் பிரதிநிதிகள் காவலில் வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராகவும் அழைப்பு விடுத்தது.