சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

UK government spending cuts threaten over 700,000 jobs

பிரிட்டன் அரசாங்க செலவு வெட்டுக்கள் 700,000 வேலைகளை அச்சுறுத்துகின்றன

By Jordan Shilton
14 June 2010

Use this version to print | Send feedback

கன்சர்வேடிவ்--லிபரல் கூட்டணி அரசாங்கம் பொதுச் செலவை வெட்டுவதற்கான அதன் திட்டங்களை அறிவித்த சில நாட்களுக்குள்ளேயே, இது பிரிட்டனில் வேலையின்மையை தொழிலாளர் தொகுப்பில் 10 சதவிகித த்திற்கு மேல், அதாவது 3 மில்லியன் என உயர்த்தக் கூடும் என்ற மதிப்பீட்டைக் கொடுத்து ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது.

The Chartered Institute of Personnel and Development (CIPD) வரவிருக்கும் வெட்டுக்களால் 725,000 க்கும மேலான வேலைகள் ஆபத்திற்கு உட்படக்கூடும், பிரிட்டன் முழுவதும் பொதுத் துறையில் 12 சதவிகிதம் அல்லது 6 மில்லியன் தொழிலாளர்கள் இதில் அடங்குவார்கள் என்று கணித்துள்ளது. தற்பொழுது 2.5 மில்லியன் என்று இருக்கும் வேலையின்மை 2012 க்குள் 3 மில்லியனை அடையும், அந்த அளவிலேயே 2015 வரை இருக்கும் என்றும் கூறியுள்ளது.

CPID ஆனது வரிகளை உயர்த்துவது என்பதற்குப் பதிலாக செலவு வெட்டுக்களில் குவிப்புக் காட்டுவது வேலைகள் நெருக்கடியை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. நிதி மந்திரி ஜோர்ஜ் ஓஸ்போர்ன் நிதியப் பற்றாக்குறையைக் குறைக்கும் விதத்தில் "சேமிப்புக்களில்" கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தை செலவு வெட்டுக்கள் மூலம் கொண்டுவர விரும்புகிறார். மிகுதி 20 சதவிகிதம் மட்டுமே வரி உயர்வின் மூலம் அடையப்படும். இந்த இலக்கிற்காக, ஓஸ்போர்ன் ஜூன் 22 அன்று அளிக்கவுள்ள அவசரக்கால வரவு-செலவுத் திட்டத்தில் பெரும் வெட்டுக்களை அறிவிப்பார்.

இது இந்த ஆண்டு 50,000 வேலைகளை அகற்றிவிடும் விளைவைக் கொடுக்கும் என்று அறிக்கை கூறியுள்ளது. மொத்தத்தில் CIPD, மேலாளர் மற்றும் நிர்வாகப் பகுதியில் தேசிய சுகாதாரப் பணி (NHS) ல் 175,000 பணிகளும், ஆட்சித் துறை, கல்வித் துறைகளில் 200,000 பணிகளும் உள்ளூராட்சிப் பதவிகளில் 350,000 உம் இழக்கப்படும் என்று எதிர்பார்க்கிறது. CIPD யின் தலைமைப் பொருளாதார வல்லுனர் ஜோன் பிலிப்போட் சமூகத்தில் மிக வறிய நிலையில் உள்ளவர்கள்தான் மிக அதிக வேதனையை பெறுவர் என்பதையும் தெளிவாக்கினார்: "மிகவும் நலிவுற்றிருக்கும் மக்களுடைய வருங்காலம் குறிப்பிடத்தக்க வகையில் இருண்டதாக உள்ளது." என்றார்.

தேர்தலுக்கு முன்பு, கன்சர்வேடிவ்கள் அதிக செலவு கொடுக்கும் தகவல் தொழில்நுட்பத் திட்டங்களில் குறைப்புக்கள், ஆலோசகர்களின் குறைப்புக்கள் ஆகியவற்றின் மூலமும், முன்னணிப் பணிகளைப் பாதுகாப்பதின் மூலமும் சேமிப்புக்கள் அடையப்படலாம் என்று கூறியிருந்தனர். ஆனால் பதவிக்கு வந்த உடனேயே, பிரதம மந்திரி டேவிட் காமரோன் பொதுச் செலவுகளில் இருந்து 6.25 பில்லியன் பவுண்டுகள் நிதியைக் குறைத்தார். இது "வீணடித்தலை" தவிர்ப்பதின் மூலம் நடக்கும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் இத்தகைய கூற்றுக்கள் முற்றிலும் தவறனாவை. தேர்தலின் போது மக்களிடம் இருந்து நடவடிக்கைகளின் முழு பாதிப்பை மறைப்பது என்று அனைத்து முக்கிய கட்சிகளும் கொண்டிருந்த பரந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதிதான் இது.

வெள்ளியன்று 6.25 பில்லியன் பவுண்டுக் குறைப்பின் உண்மைத் தன்மை தெளிவாகியது. உள்ளூராட்சி அதிகாரிகள் இந்த ஆண்டு 1.16 பில்லியன் பவுண்டுகளை இழப்பர். கட்டுப்பாட்டு அமைப்புக்கள், Equalities and Human Rights Commission போன்றவை 15 சதவிகிதக் குறைப்பைப் பெறும். உணவுத் தர நிர்ணய அமைப்பு, 1980, 1990 களில் பல உணவுப் பாதுகாப்பு ஊழல்களை அடுத்து நிறுவப்பட்டது முற்றிலும் மறைந்துவிடும் போல் தோன்றுகிறது.

வரவு-செலவுத் திட்டக் குறைப்புக்களின் பரப்பு ஜூன் 22ல் தெளிவாகத் தெரியவரும்போது, இங்கிலாந்தின் வடக்குப்பகுதி, தெற்கு வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளின் வருங்காலம், வேலைகளுக்குப் பொதுத்துறையை அதிகம் நம்பியிருப்பவற்றின் வருங்காலம், குறிப்பாகக் கடினமாகிவிடும். இது TUC யின் பொதுச் செயலாளர் பிரெண்டன் பார்பரை அரசாங்கத்தின் கொள்கை "வடக்கு-தெற்கு" பிளவை இன்னும் மோசமாக ஆக்கும் என்று கூறவைத்தது.

Guardian க்கு தெரிவித்த கருத்துக்களில், மிகக் கடுமையாகச் சுமத்தப்பட்டால் வெட்டுக்கள் "மிகப் பரந்த தளமுடைய பிரச்சாரங்களுக்கு வழிவகுக்கும்...அவை பொதுப் பணித்துறைகள் அளிக்கும் வேலைகள், வாழ்க்கைத்தரங்கள் மீதான பாதிப்பு பற்றி மட்டும் இராது " என்றார் பார்பர் –இது ஆளும் உயரடுக்கிற்கு வரவிருக்கும் நடவடிக்கைகள் பெருகிய முறையில் சமூகப் போராட்டங்களை அதிகரிக்கும் என்ற எச்சரிக்கை ஆகும்.

Independent உடைய கருத்துப்படி, ஆட்சிப் பணியாளர்கள், மந்திரிகள் ஆகியோரைக் கொண்ட "Star Chamber", கடந்த செவ்வாயன்று ஓஸ்போர்னால் கொண்டுவரப்பட்டுள்ளது, ஆண்டு ஒன்றிற்கு 60 பில்லியன் பவுண்டுகள் வெட்டுக்கள் செலவுகளில் வருவதைக் கண்காணிக்கும்---இந்த எண்ணிக்கை இப்பொழுது தற்பொழுதைய பொதுநலச் செலவுகளில் 10 சதவிகிதத்தை நெருங்கி விட்டது.

இத்தகைய அளவுகளில் வரவு-செலவுத் திட்டங்களைக் குறைப்பது நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு, பொதுத்துறையில் இருந்து வெளியே இருப்பவர்களுக்கும் பேரழிவு விளைவுகளைக் கொடுக்கும். பல பொதுத்துறைப் பணிகளின் மூலம் ஒப்பந்த வேலையைக் கொண்டவர்கள் 1.7 மில்லியன் தொழிலாளர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது--இவர்கள் குப்பை சேகரித்தல், தூய்மைப்படுத்துதல், ஓய்வு வசதிகளை நிர்வகிப்பவர்கள், பள்ளிகளில் உணவு அளிப்பவர்கள் என்று உள்ளனர். போக்குவரத்துத் துறையில், குறிப்பாக தேசிய இரயில் பணியிலும் பல உள்ளூர் பஸ் சேவைகளும் அரசாங்கத்திடம் இருந்து வரும் அதிக உதவித் தொகைகளைப் பெரிதும் நம்பியுள்ளன.

அரசாங்க ஆதரவு அகற்றப்படுவது என்றால் இத்தொழிலாளர்களில் பலர் ஒப்பந்தங்கள் குறைக்கப்படும்போது அல்லது முற்றிலும் வெட்டப்படும்போது அல்லது உதவி நிதிகள் கொடுக்கப்படுவது இல்லை என்றால், பணிநீக்கத்தைப் பெறுவர் என்ற பொருள் ஆகும். ஏற்கனவே இந்த ஆண்டு 1.7 பில்லியன் பவுண்டுகளைக் குறைப்பதில் அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது. அதற்காக அது அளிப்பாளர்களிடமும் மற்ற அமைப்புக்களுடனும் ஒப்பந்தங்கள் பற்றி மறு பேச்சு வரவு-செலவுத் திட்டக் வார்த்தைகள் நடத்த உள்ளது.

இத்தகைய வெட்டுக்களின் நேரடி விளைவு தனியார் துறையிலும் உணரப்படும். அங்கு பல நிறுவனங்களும் பொது அதிகாரங்களுடன் வணிகத் தொடர்பை நம்பியுள்ளன. இதன் பொருள் இன்னும் உயர்ந்த வேலையின்மை என்ற அச்சுறுத்தல் ஆகும்.

வேலையில் இருந்து நீங்கிவிட்ட தொழிலாளர்கள் ஒரு மிகக் குறைந்த பொதுநல முறையைத்தான் எதிர்கொள்ளுவர். ஆண்டு ஒன்றிற்கு 4 பில்லியன் பவுண்டை அரசாங்கம் பொதுநலத் தரங்களை முடக்குவதின்மூலம் சேமிக்க முயல்கிறது. இதைத்தவிர இன்னும் அதிகமும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் செலவுப் பரிசீலனைக்குள் நலன்கள், வரிகளுக்கு சலுகைகள் ஆகியவற்றையும் உள்ளடக்க அது முடிவெடுத்துள்ளது. இதன் பொருள் ஏற்கனவே மிகக் குறைந்த சமூக ஆதரவுத் தளம் கொண்டுள்ள மிக நலிந்தோர் சமுதாயத்தில் இன்னும் குறைவான நலன்களைத்தான் பெறுவர் என்பதாகும்.

குழந்தைகள் நலன்கள், இயலாதவர்களுக்கான நலன்கள், வேலையின்மையில் இருப்பவர்கள் ஆகியோரைப் பற்றிக் குறிப்பாக கவனம் செலுத்தப்படுகிறது. அரசாங்கம் உதவி நலன்களைப் பெறுவதற்கான தகுதிகளைக் குறைக்க வழிவகைகளை அரசாங்கம் முடிவெடுத்தாலும், அப்படியே நலன்களின் தரங்களைக் குறைத்துவிடவும் அது முடிவெடுக்கலாம்.

திங்களன்று பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் காமெரோன், பணிகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை பற்றி குறைகூறுவதில் குவிப்புக் காட்டினார். இத்துறைதான் நலன்கள் முறையை நிர்வாகம் செய்கிறது. பொதுநலச் செலவுகள் மொத்தத்தில் 20 பில்லியன் பவுண்டுகள் அதிகமாகிவிட்டன என்று அவர் கூறினார். செவ்வாயன்று செலவுகள் பற்றிய பரிசீலனையை அறிவித்த ஓஸ்போர்ன் பொதுநலன்கள் மற்றும் வரிச் சலுகைகளுக்கும் வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் 15ல் இருந்து 20 சதவிகிதம் குறைக்கப்பட்டுவிடும், இது தற்பொழுதைய பாராளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இயற்றப்படும் என்றும் எச்சரித்தார்.

பொதுப் பணிகள், பொதுநலச் செலவுகள் ஆகியவற்றில் குறைப்புக்களைக் கொண்டு வரும் உந்துதலில், அரசாங்கம் பிரிட்டிஷ் தொழில்துறை கூட்டமைப்பு (CBI) உடைய ஆதரவைப் பெற்றுள்ளது. CBI ஆனது நிதி மந்திரி இன்னும் கடுமையான குறைப்புக்களை, இப்பொழுது அறிவித்தவற்றைவிடத் தீவிரமாக அறிவிக்க வேண்டும், அதுதான் வரி உயர்வைத் தவிர்க்கும் என்று கூறியுள்ளது.

CBI வியாழனன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "வணிகக் குழு பற்றாக்கறையைச் சமாளிப்பதற்கு இதுவரை அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கிறது. வரவு-செலவுத் திட்டத்தைப் பயன்படுத்தி இங்கிலாந்தின் நிதிய நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் விதத்தில் செயல்பட்டு, இன்னும் விரைவான விதத்தில் கட்டுமானப் பற்றாக்குறையில் குறைப்பு, இன்னும் கடுமையான பொருளாதார முன்கருத்துக்களை ஏற்றல், செலவுத் திட்டங்களை இன்னும் விரிவாக்குதல் இதற்குத் தேவை" என்று வாதிட்டுள்ளது.

The Adam Smith Institute என்னும் ஒரு வலதுசாரி சிந்தனைக்குழு இக்கருத்திற்கு ஆதரவு கொடுத்து, ஐந்து ஆண்டுகளுக்குள் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை அகற்றப்பட வேண்டும் என்று வாதிட்டுள்ளது. செலவினக் குறைப்புக்களுடன், அது புதிய தனியார்மயமாக்கும் உந்துதலுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. லண்டன் நிலத்தடி இரயில், ஸ்காட்லாந்தின் நீர் நிறுவனங்கள் மற்றும் ரோயல் அஞ்சல் துறை ஆகிவை இலக்காகக் கொள்ளப்படலாம் என்று தெரிவித்துள்ளது.

OBR எனப்படும் வரவு-செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகம், பிரிட்டனின் பொருளாதாரம் பற்றிச் "சுதந்திர" கணிப்புக்களை அளித்தல், செலவு முடிவுகள் பற்றி ஆலோசனை கூறல் ஆகியவற்றிற்காக புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது, கடன் வாங்குதல், வளர்ச்சிக் கணிப்புக்கள் பற்றித் திங்களன்று அறிவிப்பை வெளியிடும். இது பிரிட்டனின் பொருளாதார வாய்ப்புக்கள் 2011, அதற்கு அப்பால் கீழிறக்கும். அதைத்தவிர தற்பொழுதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2 சதவிகித வளர்ச்சி என்பதும் 2 ஐ ஒட்டிக்குறைக்கப்படும் என்ற ஊகம் வந்துள்ளது. இதையொட்டி ஒப்புமையில் பிரிட்டனின் கடன் அளவு பெருகும்.

City of London உடன் நெருக்கமான பிணைப்புக்கள் கொண்டவர்கள் தலைமையில் இருக்கும் OBR உடைய அதிகம் பேசப்படும் சுதந்திரம் என்பது எத்தகைய ஜனநாயக க் கட்டுபாட்டில் இருந்தும் அது முற்றிலும் ஒதுக்கப்படும் என்பதாகும். இவ்விதத்தில் அது பெரிதும் அதிருப்தி அளிக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்தக் கோரும் நிலைமையில் உள்ளது. இது அரசாங்கத்தின் கூற்றான வரவிருக்கும் சிக்கன நடவடிக்கைகள் திட்டம் பற்றி பொதுமக்களுடன் "கலந்துரையாடல்" பரந்து இருக்கும் என்பதின் மோசடித்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஐரோப்பா முழுவதும் இதே போன்ற திட்டங்கள் வந்துள்ளதைத் தொடர்ந்து, அதுவும் இந்த வாரம் 80 பில்லியன் யூரோச் செலவுகள் ஜேர்மனியில் குறைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, காமரோன் அரசாங்கம் தொழிலாளர் வர்க்கம் அதன் பொறுப்பைக் கொண்டிராத பொருளாதார நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளது.