சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Australian think-tank recommends military build-up in Indian Ocean

ஆஸ்திரேலிய சிந்தனைக் குழு இந்து சமுத்திரத்தில் இராணுவக் கட்டமைப்பிற்கு பரிந்துரைக்கிறது

By Nick Sutton
27 May 2010

Use this version to print | Send feedback

கான்பெர்ராவை தளமாகக் கொண்டதும் ஒரு அரசாங்க நிதியளிக்கும் சிந்தனைக்குழுவான Australian Stragegic Policy Institute (APSI) ஆனது பிரதம மந்திரி கெவின் ருட்டின் தொழிற் கட்சி அரசாங்கத்தை இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலிய இராணுவ நிலைப்பாடு மற்றும் மூலோபாயத்தை வலுப்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது. “நம் மேற்கு முன்னணி: ஆஸ்திரேலியாவும் இந்து சமுத்திரமும்’ என்ற தலைப்பில் உள்ள இந்த ஆய்வு, ASPI யைச் சேர்ந்த ஆன்டனி பெர்கின், மற்றும் Australian National Centre for Ocean Resources and Security ன் சாம் பேட்மன் ஆகியோரால் எழுதப்பட்டது, அப்பிராந்தியத்தில் பெரும் சக்திகளிடையே உள்ள போட்டியால் உந்துதல் பெற்றது.

இந்து சமுத்திரம் பெருகிய மூலபோய, அரசியல் கவனத்தின் குவிப்பாகிவிட்டது” என்று அறிக்கை விளக்குகிறது. “ஆஸ்திரேலியா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் (IOR) முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருக்க வேண்டும், ஆனால் பசிபிற்கிற்காக இதைப் புறக்கணித்துவிட்டோம்.” இப்பிராந்தியத்தில் வெளியார் ஈடுபாட்டின் புது சகாப்தம், எரிசக்தி அரசியல் மற்றும் சீனா ஒரு புதிய சக்திவாய்ந்த பிராந்திய நாடு என்ற முறையில் வெளிப்பட்டுள்ளதின் மூலம் உந்துதல் பெற்றுள்ளது.” மேலும் ஆப்பிரிக்கக் கொம்புப் பகுதியில் நடைபெறும் கடற்கொள்ளையும் உந்துதல் கொடுத்துள்ளது. “கடற்கொள்கைக்கு எதிராக என அமெரிக்கா, பிரான்ஸ், சீனா இன்னும் மற்றய நாடுகள் நிலைநிறுத்தியுள்ள போர்க்கப்பல்களின் கூறப்படும் பங்கானது உண்மையில் அவை ஒரு பரந்த மூலோபாய நோக்கத்திற்கும் உதவுகின்றன……..கடற்கொள்ளை குறைந்துவிடும்போது அனைத்துக் கப்பல்களும் தங்கள் தாயகத் தளங்களுக்குத் திரும்பாது.” என்று அறிக்கை வெளிப்படையாக கூறியுள்ளது.

அறிக்கை தொடர்கிறது: “ஒரு புதிய கடற்பகுதி “பெரும் விளையாட்டு” இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் (IOR) ல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மூலோபாயப் போட்டி வெளிப்படையாக வந்துள்ள அளவில், எழுச்சி பெற்றுள்ளது. ஒவ்வொரு நாடும் மற்றதால் கட்டுப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தைக் கொண்டுள்ளது—சீனாவைப் பொறுத்தவரை இந்தியாவானது ஜப்பான் மற்றும் அமெரிக்க ஆதரவைக் கொண்டுள்ளது. இதற்கு இடையில், அமெரிக்காவானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மூலோபாய, இராணுவ வகையில் தொடர்ந்து மேலாதிக்கம் கொண்டுள்ளது. இந்தியா தன்னை பிராந்திய மேலாதிக்க சக்தி என்று வளர்த்துக் கொள்ளுகிறது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீன வருகை இந்தியாவை எப்பொழுதும் அதைப் பற்றி சிந்திக்க வைத்துள்ளது. எனவே தன்னுடைய கடற்படையை அதிகாரம், செல்வாக்கு ஆகியவற்றை வளர்க்கப் பெரிதும் பயன்படுத்துகிறது.

இப்பகுதியில் ஆஸ்திரேலிய நலன்கள் பற்றி ASPI வலியுறுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு வடமேற்கில் உள்ள நீர்நிலைகள் பெரும் எண்ணெய், எரிவாயு இருப்புக்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக கோர்கான் எரிவாயுத் திட்டம் உலகத்தின் இயற்கை எரிவாயு நீர்த்த தன்மைத் திறனில் 8 சதவிகிதத்தை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது விற்பனை ஒப்பந்தங்களில் $200 பில்லியன் மதிப்புடையது ஆகும். மற்ற முக்கிய எரிவாயுத் திட்டத் தொடர்ச்சிகள் ஆஸ்திரேலியாவை உலகின் முக்கிய LNG ஏற்றுமதி நாடாக தசாப்தத்தின் இறுதிக்குள் கொண்டுவரக்கூடும்.

“நம்முடைய கடலுக்கு அப்பால் உள்ள இறைமை, இறைமை உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்குப் பெரும் சவால்கள் இந்து சமுத்திரத்தில் உள்ளன. நம்முடைய ஏற்றுமதிகளில் மூன்றில் ஒரு பகுதி மேற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவருகின்றன. முக்கிய கடலுக்கு அப்பால் உள்ள வளர்ச்சி இப்பொழுது மேற்கு, வடமேற்கு என்று கண்டத்தில் உள்ளது. அதுதான் நம்முடைய வருங்கால வளரச்சிக்கு திறவுகோலாக அமையும். நாம் இன்னும் கடுமையாக உழைத்து முக்கியமான உள்கட்டுமானப் பாதுகாப்பிற்குத் திட்டமிட வேண்டும். ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை இப்பகுதியில் அதன் நிலைப்பாட்டை அதிகரிக்க வேண்டும்” என்றும் ASPI குறிப்பிட்டுள்ளது.

இச்சிந்தனைக்குழு வடமேற்கில் ஒரு புதிய பெரிய கடற்படைத் தளத்தை நிறுவ வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அது பெர்த்திற்கும் டார்வினுக்கும் இடையே உள்ள “இடைவெளியை” மூடும் என்றும், தற்பொழுதுள்ள கர்ட்டின், லேர்ன்மன்த் விமானப்படைத் தளங்கள், இப்பகுதியில் உள்ளவை, கூடுதலாகப் பயன்படுத்தப்படவேண்டும் என்றும், இராணுவப்பயிற்சிகள் அதிகம் நடத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

இன்னும் கூடுதலான ராஜதந்திர முயற்சிகள் பெருகும் அழுத்தங்களைக் குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ASPI அழைப்பு விடுத்துள்ளது. ஆய்வின் பரிந்துரைகளில், “இந்து சமுத்திர மாநாடு” என்று மேற்கு ஆஸ்திரேலியத் தலைநகரமான பெர்த்தில் கூட்டப்பட வேண்டும் அதில் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை தொடர்பு படுத்தப்பட வேண்டும் என்றும் உள்ளது. இம்மாநாடு “எரிசக்திப் பிரச்சினைகள், சமுத்திரத்தின் நிர்வாகம், மீன்பிடித்தல் நிர்வாகம், இயற்கைச் சீற்றங்கள் குறைப்பு, கடற்பகுதி விஞ்ஞான ஆராய்ச்சி” போன்ற பல பிரச்சினைகளில் ஒத்துழைப்பு பற்றி ஆராயும். ஆனால் “மரபார்ந்த பாதுகாப்புப் பிரச்சினைகள்” நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படக்கூடாது, “அவை கூருணர்ச்சிகளைத் (Sensitivities) தூண்டிவிடும் தன்மை உடையவை” என்றும் ASPI பரிந்துரைத்துள்ளது.

“கூருணர்ச்சிகள்” பற்றி குறிப்பு ஏற்கனவே விரைவாக வெளிவந்துள்ள அழுத்தங்கள் பற்றியதாகும். ஒரு பிராந்தியப் போர் வருங்காலத்தில் நிகழலாம் என்பதை ASPI ஒப்புக் கொண்டுள்ளது—“நம் மேலை எல்லை” என்ற அபாயகரமான தன்மையை அறிக்கை இதன் தலைப்பாகக் கொடுத்துள்ளது.

இந்து சமுத்திர சுற்றுவெளியில் மூன்று மிக மூலோபாயமான உணர்வுடைய எரிசக்தி அளிப்புப்பாதைகள் உள்ளன—Djiboouti, ஏமனுக்கு இடையே செங் கடல் மற்றும் சூயஸ் கால்வாய்க்குச் செல்லும் Babe el Mandeb Strait, பேர்சிய வளைகுடாவிற்குச் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தி ஈரானுக்கும், ஓமனுக்கும் இடையே இருப்பது மற்றும் இந்தோனிசியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையே உள்ள மலாக்கா ஜலசந்தி, சிங்கப்பூர் ஜலசந்தி மற்றும் தெற்கு சீனக்கடலுக்குச் செல்வது ஆகியவையே அவை.” அது முடிவுரையாகக் கூறுவது: “எண்ணெய், எரிசக்தி அரசியல் இந்து சமுத்திர மூலோபாய இயக்கத்தில் ஒரு சக்தி வாய்ந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது ஒத்துழைப்பிற்கு உகந்த தன்மையைக் கொடுக்காமற் போகலாம். பகுதியில் பெருகும் இராணுவத் திறன்களும் ஒத்துழைப்பைத் தடுக்கும் விதத்தில் நீண்ட காலமாக இருக்கும் இராணுவ அச்சுறுத்தல்கள் பற்றிய உணர்வை வலுப்படுத்தி, பிராந்திய நாடுகளிடையே பாதுகாப்புச் சங்கடங்களை ஏற்படுத்தலாம்.”

ASPI அறிக்கை ஆஸ்திரேலிய ஆளும் உயரடுக்கை எதிர்கொள்ளும் மூலோபாயச் சங்கடம் பற்றி இன்னும் அதிகமாக கூறுகிறது. இந்த முரண்பாடு வரலாற்றளவில் அது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கொண்டிருக்கும் இராணுவ மூலோபாய உடன்பாட்டு நம்பிக்கைக்கும் சீனா, கிழக்கு ஆசியாவில் அது கொண்டுள்ள பொருளாதார நம்பகத் தன்மைக்கும் இடையேயானது. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா இரண்டிற்கும் இந்தியா, சீனாவுடன் மாறுபட்ட உறவுகள் இருப்பதை சிந்தனைக்குழு வலியுறுத்தியுள்ளது.

“இந்தியாவுடன் ஆஸ்திரேலியாவின் உறவு சம பங்காளிகளுக்கு இடையே உள்ளது போல் இருக்க வேண்டும்” என்று அறிக்கை கூறியுள்ளது. “இது கடினமாக இருக்கலாம். இந்தியா ஆஸ்திரேலியாவை சம அந்தஸ்தில் நடத்துவதற்குத் தயக்கம் காட்டுகிறது. இது இந்தியா அதன் செல்வாக்கை பொது மூலோபாய நலன்கள் உள்ள பகுதிகளில் செலுத்த விரும்பும்போது பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். …இந்தியா இந்து சமுத்திர பிராந்தியத்தில் மேலாதிக்க சக்தியாகத்தான் இருக்கத் திட்மிட்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவிற்கு சவால்களையும் வாய்ப்புக்களையும் அளிக்கிறது. ஒரு மேலாதிக்கப் பங்கைச் செலுத்துவதில் இந்தியா எந்த அளவிற்குப் பொறுப்புடன் இருக்கும் என்பதை நாம் இனிமேல்தான் காணமுடியும். இந்தியாவின் இந்து சமுத்திர பிராந்தியத்தில் விரிவாக்கம், மேலாதிக்கம் கூட ஆஸ்திரேலியாவின் நலன்களுக்கு உகந்ததாக இருக்க முடியாது, ஆனால் நாம் போட்டியிடும் நிலையில் இல்லை.”

ஆனால் இப்பகுதியில் வாஷிங்டன் நிலைக்கு எதிராக, பெய்ஜிங் தன் நிலைப்பாட்டை அதிகரித்துக் கொள்ளுவது பற்றி ASPI க்கு மன உறுத்துல் ஏதும் இல்லை. அறிக்கை கூறுவது: “அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியாவின் முக்கிய உடன்பாடு இந்து சமுத்திர பிராந்தியத்தில் விரிவாக்கம் கொண்டுள்ளது. ஆனால் நம் நலன்களும் கொள்கைகளும் எப்பொழுதும் அமெரிக்காவுடன் இணைந்திராது என்ற வாய்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா சில தொழில்நுட்பக் கூறுபாடுகளை இந்தியாவிற்கு மாற்றி, இராணுவக் கோட்பாடு, உளவுத் தகவல்களை பறிமாற்றம் செய்துகொள்ளும்போது. சீனா பற்றிய மாறுபட்ட முன்னோக்குகள் இந்து சமுத்திர பிராந்தியத்தில் இருப்பது இந்தக் கொள்கைத் தொடர்புச் சிதைவின் இதயத்தானமாக இருக்கலாம், ஒரு சக்தி வாய்ந்த இந்தியா, சக்தி வாய்ந்த சீனாவை விட இப்பகுதியில் நல்ல நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் என்பதில், ஆஸ்திரேலியா அமெரிக்காவை விட குறைந்த நம்பிக்கையுடன்தான் உள்ளது.”

இப்பகுதியில் முக்கிய உறுதிகுலைக்கும் காரணி பற்றி —அதாவது அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்புத் தன்மை பற்றி அறிக்கை ஏதும் கூறவில்லை. தன் “பயங்கரவாதத்தின் மீதான போரின்” ஒரு பகுதியாக ஒபாமா நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் அதன் நவ காலனித்துவ ஆக்கிரமிப்பை அடைய தீவிரப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. அண்டை நாடான பாக்கிஸ்தானில் தன் சார்பில் ஒரு போரை நடத்துகிறது, ஈரானை அச்சுறுத்துகிறது. இந்தியாவுடன் அது வளர்க்கும் மூலோபாயப் பிணைப்புக்கள் சீனாவை சுற்றி வளைத்தல், தெற்கு ஆசியாவில் அதன் செல்வாக்கை எதிர்கொள்ளுதல் என்ற மூலோபாயத்தின் ஒரு பகுதி ஆகும். இந்திய மற்றும் பசிபிக் சமுத்திரங்களில் நீண்ட காலமாக இருக்கும் தன் கடற்படை மேலாதிக்கத்திற்கு எவ்வித சீன சவாலுக்கும் அமெரிக்கா விரோதத் தன்மையைக் காட்டும். அதேபோல் மத்திய கிழக்கிற்கும் வடகிழக்கு ஆசியாவிற்கும் இடையே மலாக்கா ஜலசந்தி போன்ற முக்கியமான கடல் பாதைகளை கடற்படை “நெரிக்கும் பகுதிகள்” கொண்டிருப்பதற்கு சீனச் சவால்கள் வந்தால் அவற்றையும் எதிர்க்கும். அறிக்கை தெரிவிப்பது போல் “ஒரு நிதானமான பங்கு” என்பதற்கு மிகவும் அப்பாற்பட்ட பங்கு என்பதில் இருந்து, அமெரிக்கா இப்பகுதியில் புதிய போர்களுக்கான ஆபத்தைத்தான் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நீக்கம் தற்செயல் நிகழ்வு அல்ல. அமெரிக்க நடவடிக்கைகள் கான்பெர்ரா எதிர்கொள்ளும் சங்கடங்களை அதிகரிக்கையில், தொடர்ச்சியான ஆஸ்திரேலிய அரசாங்கங்களான தொழிற் கட்சி மற்றும் லிபரல் நேஷனல் கூட்டணிகள் நிபந்தனையற்ற முறையில் அமெரிக்க உடன்பாட்டையும் ஆப்கானிஸ்தானில் அது நடத்தும் போருக்கும் ஆதரவு கொடுத்துள்ளன. இதில் ஆஸ்திரேலிய துருப்புக்களும் பங்கு பெறுகின்றன. இந்து சமுத்திரத்தில் எவ்வித ஆஸ்திரேலிய இராணுவக் கட்டமைப்பும் ஐயத்திற்கு இடமின்றி வெள்ளை மாளிகை, பென்டகன் உடன் மிக மிக நெருக்கமான ஒத்துழைப்பு, உடந்தையுடன்தான் நடக்கும்.