சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

US Senate discusses sending troops to Libya

லிபியாவிற்கு துருப்புக்களை அனுப்புவது பற்றி அமெரிக்க செனட் விவாதிக்கிறது

By Chris Marsden
9 April 2011
Use this version to print | Send feedback

புதனன்று செனட் வெளியவுறவுக் குழுவிடம் அமெரிக்கத் துருப்புக்கள் லிபியாவிற்கு அனுப்பப்பட வேண்டியிருக்கும், ஏனெனில் கேணல் முயம்மர் கடாபிக்கு விசுவாசமாக இருக்கும் படைகளைத் தோற்கடிக்க ஏதிர்ப்பு இடைக்கால தேசிய சபையை (TNC) தோற்கடிக்கும் வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதால் என்று ஜெனரல் கார்ட்டர் ஹாம் கூறினார்.

நேட்டோ பொறுப்பை எடுத்துக் கொள்ளும் முன் கூட்டணியின் வான் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஹாம் அத்தகைய விளைவிற்குச் சொந்த முறையில் தான் ஆதரவு கொடுக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். ஒபாமா நிர்வாகம் லிபியாவில் அரைமனத்துடன் போரைத் தொடர்கிறது என்று கடுமையாக விமர்சிக்கும் ஜோன் மக்கெய்ன் போன்ற குடியரசுக் கட்சி செனட்டர்களின் கேள்விகளுக்கு அவர் விடையிறுத்துக் கொண்டிருந்தார்.

திரிப்போலிக்கு போராடிச் சென்றுகடாபியை எதிர்ப்பாளர்கள் அகற்றிவிடும் வாய்ப்பு குறித்து கேட்கப்பட்டதற்கு ஹாம் விடையிறுத்தார்: “ஐயா, அதற்கு மிகக் குறைந்த வாய்ப்புத்தான் என நான் கருதுகிறேன்.”

நிலைமை தேக்கம் அடைந்து விட்டதா அல்லது தேக்கம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறதாஎன்று மக்கெய்னால் வலியுறுத்திக் கேட்கப்பட்டபோது, ஹாம் கூறினார்: “செனட்டர், நிலைமை அவ்வாறு உள்ளது என்பதை நான் ஒப்புக் கொள்ளுவேன்.” இன்றைய நிலையில் தேக்கம்தான்அதிகம் இருப்பது போல் தோன்றுகிறது, அதுவும் மார்ச் 19 ல் வான் தாக்குதல் துவங்கியதை விட அதிகமாக என்று அவர் பதில் கூறினார்.

போரின் நோக்கம் ஆட்சி மாற்றம் என்பது எங்களது நேரடி நோக்கம் அல்ல என்ற தேவையற்ற நிலைப்பாட்டை அமெரிக்கா கைவிடவேண்டும் என்று மக்கெய்ன் விரும்புகிறார். கடாபியை அகற்றுவது பாதுகாப்புச் சபைத் தீர்மானம் 1973ன் கீழ் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்னும் .நா. கட்டளையின் கீழ் வரவில்லை என்றும் ஹாம் கூறினார். அவர் பதவியை விட்டு இறங்குவதற்கு ராஜதந்திர, பிற வகைகளை அமெரிக்கா நம்புவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

ஆனால் ஒரு தேக்கம் வந்துவிடும் நிலையில், அமெரிக்கா எதிர்ப்பிற்கு உதவக்கூடிய சர்வதேசத் தரைப்படையில் ஒரு பகுதியாக லிபாயவிற்குத் துருப்புக்கள் அனுப்புவது குறித்து பரிசீலிக்கலாம் என்றார் அவர். “அக்கருத்து பற்றி பரிசீலனை வரக்கூடும் என நான் சந்தேகிக்கிறேன்என்று அவர் குழுவிடம் கூறினார்.

தரை மூலம் படையெடுப்பில் அமெரிக்கா பங்கு பெறுவது பிரச்சினை அளிக்கக்கூடும், ஏனெனில் இது சர்வதேசக் கூட்டணிக்குள் ஆதரவை அரித்துவிடும், அதையொட்டி இடர்கள் அதிகமாகும், குறிப்பாக போருக்கு ஆதரவை அரபு நாடுகள் தொடர்ந்து கொடுக்கும் நிலையில்என்று அவர் எச்சரித்தார். “என்னுடைய சொந்தக் கருத்து இக்கட்டத்தில் அது ஒரு நேர்த்தியான சூழலாக இராது, மேலும் அமெரிக்கப் பூட்ஸ்கள் தரையில் இறங்குவதை ஒட்டி அப்பிராந்தியத்தின் எதிர்கொள்ளல் உவப்பாக இராதுஎன்றார் அவர்.

நேட்டோ நோக்கமான கடாபியை அகற்றுவது என்ற கருத்தை விரிவாக்குவதற்கு இராணுவ முயற்சியில் மிகக் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் தேவைப்படும்”, மேலும் அதற்கு கூட்டணித் துருப்புக்கள், உளவுப்படைகள் ஒருக்கால் தேவைப்படலாம் என்றார் அவர். “இதற்கு இராணுவப் படைகள் மிக, மிகக் கூறுகிய காலத்தில் செயல்படும் திறனைக் கொண்டிருக்க வேண்டும்.”

விருப்பமுடைய பங்காளிகளைச் சேர்ப்பது நமக்கு இன்னும் கடினமாக இருக்கும், ஏனெனில் அது அரபு லீக்கிடம் எதிர்மறை விளைவை ஏற்படுத்திவிடும்என்றார் அவர்.

எதிர்ப்பாளர்களுக்கு ஆயுதங்கள், பயிற்சி கொடுப்பது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, ஹாம் உண்மையில் அரபு நாடுகள் அதைத்தான் இப்பொழுது செய்யத் துவங்கிவிட்டன என்பதற்கு சில குறிப்புக்கள் உள்ளனஎன்றார். ஆனால் அவ்வாறு செய்வதற்கு முன் அமெரிக்கா எவரிடம் ஆயுதங்கள் போய்ச் சேர்கின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். “ஆட்சி மாற்றத்திற்கு இராணுவ வலிமையைப் பயன்படுத்துதல் குறித்து நமக்குச் சில வரலாற்று அனுபவங்கள் உள்ளனநாம் எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவான வெற்றியைத்தான் கண்டுள்ளோம்.”

அல் கெய்டா போராளிகள் லிபியாவில் தோள்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் கிட்டத்தட்ட 20,000 மேலானவைகளில் சிலவற்றை அபகரிக்கும் ஆபத்து உண்டு என்று அவர் கூறினார். “அது ஒரு பிராந்திய, மற்றும் சர்வதேக் கவலை ஆகிவிடும்.”

ஹாம் கொடுத்துள்ள சாட்சியம் போர் விரிவாக்கம் அடையலாம் என்பதற்கான ஒரு குறிப்பு ஆகும். அதே நேரத்தில் அமெரிக்க இராணுவ, அரசியல் ஸ்தாபனத்தின் சில பிரிவுகளில் இது பற்றிய கூடுதல் கவலைகளையும் அது பிரதிபலிக்கிறது. மற்றவர்கள் கொடுத்த சாட்சியம் லிபியாவில் குண்டுவீச்சை நியாயப்படுத்திய அமெரிக்கப் பிரச்சாரத்திற்கு அதிக சேதத்தைத்தான் ஏற்படுத்தியது. குறைந்த செய்தி ஊடக கவனத்தைத்தான் ஈர்த்தது.

வெளியுறவுக் குழுவின் தலைவரும் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் நிர்வாகத்தின் முதல் 2 ஆண்டுகளில் அரச அலுவலக அதிகாரியுமாயிருந்த ரிச்சர்ட் ஹாஸ், கடாபி ஆட்சி குடிமக்களைப் படுகொலை செய்வதைத் தடுக்க இராணுவ நடவடிக்கை தேவை என்னும் கருத்துக்களை நிராகரித்தார். “முதலில் கிழக்கு லிபிய நகரமான பெங்காசியில் மனிதாபிமானப் பேரழிவு தவிர்க்க முடியாமல் ஏற்படும் என்பதே தெளிவாக இல்லைஎன்று குழுவிற்கு தன் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் அவர் கூறியிருக்கிறார்.

அந்தக் கட்டம் வரை பெரிய அளவுப் படுகொலைகள் பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை. லிபியச் சமூகம் (வெளிப்படையாக செல்வாக்குடைய ஒரு முன்னோடியான ருவண்டாவைப் போல் இல்லாமல்) ஒற்றை அல்லது வரையறுக்கக் கூடிய பிரிவினை முறையைக் கொண்டிருக்கவில்லை. கடாபி அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பாளர்களை எதிரிகளை  கொண்டுள்ளார், அவர்களுடைய இனவழி அல்லது பழங்குடித் தொடர்பையொட்டி அல்லஇதைத்தவிர குடிமக்கள் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக அது நடத்தப்படும் என்பதற்கான சான்றுகள் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை.”

ஆட்சிமாற்றத்திற்கான கோரிக்கையப் பற்றிக் குறிப்பிடுகையில், “அமெரிக்கக் கொள்கை இயற்றுபவர்கள் நெருக்கடியின் துவக்கத்திலேயே கடாபி அகற்றப்பட வேண்டும்  என்ற கருத்தை வெளிப்படையாகக் கூறியது தவறு ஆகும். அவ்வாறு செய்ததில், இராணுவ வலிமையைப் பயன்படுத்தாமல் அமெரிக்க மனிதாபிமான இலக்குகளை அடைதல், ராஜதந்திர முறை மூலம் என்பது மிகவும் கடினமாகிவிடும். அத்தகைய நிலைப்பாடு எதிர்ப்காளர்களைத் தாக்குவதை நிறுத்த வேண்டும் என்ற உந்துதலை கடாபிக்கு கொடுக்காமற் போயிற்று.”

உள்நாட்டுப்போர் விரிவடையாது என்பதை அமெரிக்கா உறுதிபடுத்தியுள்ளது என்று ஹாஸ் கூறினார். “கடாபியை அகற்றுவது என்பது .நா. பாதுகாப்புத் தீர்மானம் 1973 ஐத் திறமையுடன் செயல்படுத்தி, போரை நிறுத்துவதை மிகவும் கடினமாக அது ஆக்கிவிடும்என்றும் சேர்த்துக் கொண்டார்.

ஒரு பொது எதிர்பாராத பின் விளைவு ஏற்படும் என்றும் ஹாஸ் எச்சரித்தார். “சில மனிதாபிமானவகை தலையீடுகள் தேவைதான். ஆனால் சீராக இருப்பது என்பது விலையில்லாமல் வருவது அல்ல. இது அமெரிக்க மக்களைக் குழப்பக்கூடும், மற்ற நாடுகளில் இருக்கும் மக்களுக்கும் ஏமாற்றம் தரும். ஏனெனில் இந்த வழிவகை நாம் பாசாங்குத்தனத்தைக் கொண்டு இரட்டைத் தரங்களைச் செயல்படுத்துகிறோம் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு உடன்படுத்திவிடும்.”

மிக முக்கியம் என்பதை விட குறைவாகக் கருதப்படும் நலன்களுக்காக இராணுவத் தலையீட்டை கொள்கையளவில் ஏற்கலாம், விருப்பப்படி போர்களைத் துவங்கலாம்என்னும் ஜனாதிபதி ஒபாமாவின் கூற்றுக்கள் பற்றி அவர் பெரிதும் குறைகூறினார். அத்தகைய போர்கள் நியாயப்படுத்தப்பட முடியும் என்றாலும், தெளிவாகச் சட்டவிரோதமானவை என்றார் ஹாஸ்.

இப்போர் எப்படி வெல்லப்படலாம் எனக்கூறுகையில், அவர் நம்முடைய நேட்டோ பங்காளிகள் முக்கிய இராணுவப்பங்கைக் கொள்ள வேண்டும் என்று ஒபாமா தெளிவாக விரும்புகிறார், அமெரிக்கத் தரைப்படைகள் அனுப்புவதை விரும்பவில்லை.” ஆனால் இன்றுவரை அமெரிக்கச் சான்றுகளோ அமெரிக்கத் தொடர்பு அதிகரித்துள்ளதைத்தான் காட்டுகின்றன. பறக்கக் கூடாத பகுதி விரைவில் லிபிய அரசாங்கச் சக்திகளை இழிவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன….இப்பொழுது எதிர்ப்புப் படைகளுக்கு ஆயுதம் கொடுப்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதுஎன்று அவர் வலியுறுத்தினார்.

ஹாஸ் முடிவுரையாகக் கூறியது: “தற்பொழுதைய லிபிய ஆட்சியை நிரூபிக்கத் தக்க வகையில் மற்றொரு சிறந்த ஆட்சியால் மாற்றுவதை உறுதிப்படுத்தக்கூடியது தரைப்படைகளை அங்கு அனுப்பி அரசாங்கம் அகற்றப்பட்ட பின் ஒழுங்கை நிலைநிறுத்தவும் திறன்களைக் கட்டமைக்கும் வரை அங்கு நிலைபெறச் செய்யத் தயாராக இருக்கும் வகையில் நடந்து கொள்ளுவதும்தான்.” அத்தகைய போக்கைத் தான் எதிர்ப்பதாகவும் போர் நிறுத்தத்திற்கு ஒரு ராஜதந்திர முனைப்புதேவை என்றும் வாதிட்டுள்ளார்.

A History of Modern Libya என்பதின் ஆசிரியரும் டார்ட்மௌத் கல்லூரியில் பேராசிரியருமான Dirk Vandewalle ஆட்சி மாற்றச் சார்பாளராக உள்ளார். ஆனால் அவருடைய கருத்துக்கள் அழிவு தரும் பாதிப்புத் திறன் உடையவை. ஆயினும் சில கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன. லிபியா பெரும் சேதத்தைத் தாங்கியுள்ளது என்றும் அங்கு உள்நாட்டுப் போர் மூளக்கூடிய ஆபத்து உள்ளது, அது மேலைத்தேச மற்றும் கிழக்கு  திரிபோலிடானியா, சிரெநைக்கா மாநிலங்களை ஒன்றோடு ஒன்று மோதச் செய்யக்கூடும்என்று கூறியுள்ளார்.

எதிர்ப்பு TNC நிபந்தனையற்று ஆதரிப்பதற்குஎதிராக அவர் எச்சரிக்கை விடுத்தார். “இது நாடு முழுவதையும் பிரதிபலிக்கிறது என்னும் கூற்றுக்கள் இருந்தாலும், TNC தன்னுடைய விழைவுகளில்தான் நாடு முழுவதையும் பிரதிபலிக்கிறது என்ற முறையில் உள்ளதுஎன்றார் அவர்.

அவர் தொடர்ந்து கூறுவது: “அதன் உறுப்பினர்களில் 12 பேர்தான் நன்கு அறியப்பட்டவர்கள், மற்றவர்கள், நாட்டின் மற்ற பகுதிகளைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுபவர்கள் கடாபி பதிலடி கொடுக்கக் கூடும் என்பதற்காக இரகசியமாக வைக்கப்பட்டுள்ளனர். கடாபியின் கொள்கைகளை ஒட்டிக் காணும்போது, இதில் வியப்பு ஏதும் இல்லை. ஆனால் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் அனைத்துப் பழங்குடியினரிடையேயும் மரியாதையைப் பெறும் வகையில் எவரும் உண்மையான தேசியவாத நபர் அல்ல.”

குடியரசுக் கட்சியின் புதிய கன்சர்வேடிவ் உறுப்புனர்களுக்கு ஆதாரவாக லிபியாவில் போர் வேண்டும் என்னும் தீவிர ஆர்வம் காட்டுவது லிபரல் குறுக்கீடு செய்பவர்கள் எனப் போகிறது. வாஷிங்டனிலுள்ள Human Rights Watch ன் இயக்குனரான டோம் மாலினோவ்ஸ்கி, லிபியாவினுள் தன் அமைப்பின் செயல்கள் குறித்து பெருமை பேசி, “எதிர்ப்பில் அவை முக்கியத்துவத்திற்கு உயர்ந்துள்ளதுஎன்று கூறினார்.

எதிர்ப்பு பற்றிய திறனாயும் அணுகுமுறை எதையும் அவர் எதிர்த்து, “லிபியாவில் நடப்பது, சிலர் கூறுவது போல் உண்மையான உள்நாட்டுப் போர் அல்லஎன்றுகூட அறிவித்துள்ளார். ஹாஸுக்கு எதிராக வாதிட்டு தலையீடு உண்மையில் ஒரு படுகொலையைத் தடுத்துள்ளது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடாபியின் படைகள் எதிர்தாக்குதலை மார்ச் துவக்கத்தில் கிழக்கேயுள்ள எழுச்சியாளர்களுக்கு எதிராகத் துவக்கியபோது, நாம் பெங்காசி இன்னும் கிழக்கே பல சிறு நகரங்களை அடைந்தால் மிகப் பெரிய கொடுமைகள் வெளிப்படும் என்று நாம் அஞ்சினோம். ஆனால் ஒபாமா நிர்வாகம் மற்றும் அதன் சர்வதேசக் கூட்டு நாடுகள் விரைவில் செயல்பட்டு அவ்வாறு நிகழாமல் பார்த்துக் கொண்டனஎன்றார் அவர்.

லிபிய எழுச்சியாளர்களுக்குக் கொடுக்கப்படும் ஆயுதங்கள் இஸ்லாமியவாதத் தீவிரவாதிகள் கையில் சென்று அடையலாம் என்ற பிரச்சினை பற்றி அவர் இது ஒரு நெறியான கவலைஎன்றும், ஆனால் நம் அனுபவத்தில் லிபியாவில் பெரும்பாலான மக்கள் இப்பகுதியில் தீவிரவாதத்துடன் எத்தொடர்பையும் கொள்ளவில்லைஎன்றார்.

இவ்விதத்தில் பாதுகாப்பு சபைத் தீர்மானம் 1973 அத்தகைய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக உள்ளது என்றாலும், மேலைத்தேச இராணுவத் தலையீட்டை லிபிய நிலப்பகுதியில் விரிவாக்குவது என்பதற்கு ஆதரவு பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் வலுப்பெறுகிறது. வெள்ளியன்று வெளியிட்ட கட்டுரை ஒன்றில் Daily Mail  பிரதம மந்திரி டேவிட் காமரோன் கூலிப்படைகளை அனுப்பி எதிர்ப்புப் படைகளுக்கு பயிற்சி கொடுத்து, வழிகாட்டி இராணுவத் தேக்க நிலையை முடிப்பதற்கு திரிபோலியைக் கைப்பற்ற அனுப்பவேண்டும்என்று முக்கிய இராணுவ நபர்கள் கூறியுள்ளதை மேற்கோளிட்டுள்ளது.

Daily Mail  எழுதியது: “வானில் இருந்து மட்டும் நாம் இப்போரை வெல்ல முடியாது என்பது தெளிவு. நேற்று ஒரு மறுக்க முடியாத இராணுவ ஆதாரம், நாம் ஆகாயத்தில் இருந்து இலக்குகளைத் தாக்குவோம், அவர்கள் [கூலிப்படைகள்] தரையில் செய்யவேண்டியதைச் செய்துவிடுவர் எனக்கூறினார்.”

அரபு நாடுகளும் முன்னாள் சிறப்புப் விமானப் படைத் துருப்புக்கள், மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் பணியாற்றும் முன்னாள் அமெரிக்கச் சிறப்புப் படையினர்களுக்கு நிதியளித்து அவர்களை எதிர்ப்பாளர்களுக்கு பயிற்சியளித்து வழிநடத்த ஏற்பாடு செய்யலாம். இப்பொழுது சேவையிலுள்ள SAS மற்றும் சிறப்புப் படகுத் துறையில் பணியாற்றுபவர்கள் முறையாக எதிர்ப்பாளர்களுடன் இணைந்து செயல்பட முடியாது என்னும் நிலையில், டஜன் கணக்கானவர்கள் கூடுதலான விடுப்பு அளிக்கப்பட்டு அவர்கள் லிபியாவில் தனிப் பணியை, நிறைய ஊதியத்துடன் செய்வதற்கு அனுமதிக்கப்படலாம். அவர்கள் முன்னிலை வான் கட்டுப்பாட்டு அதிகாரிகளாகச் செயல்படலாம், திரிபோலிக்கு முன்னேற எழுச்சிப் படைக்கு பாதை அமைத்துக் கொடுக்க கூட்டுப்பணிகளின் வான்தாக்குதல்களுக்கு வகை செய்யலாம்.”

பாதுகாப்பு சபைத் தீர்மானம் 1973ல் உள்ள வசதியற்ற விதிகள் இவ்வகையில் எளிதில் கடக்கப்பட்டுவிடலாம் என்று டெய்லி மெயில் வாதிட்டுள்ளது. எதிர்பிற்கு அவர்கள் குடிமக்கள் உயிர்களைக் காப்பாற்றுகின்றனர் என்பதை நிரூபித்தால் ஆயுதங்கள்கூட வழங்கப்படலாம். இதே வகையில் பல தனிபர்களுக்கு அவர்கள் ஆக்கிரமிப்புப் படைஎன்று இல்லாத வகையில் உதவி செய்யப்படலாம்.