சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

The counterrevolutionary role of the Egyptian pseudo-left

எகிப்திய போலி-இடதுகளின் எதிர்ப்புரட்சிகரப் பாத்திரம்

By Alex Lantier and Johannes Stern
21 November 2011

use this version to print | Send feedback

எகிப்தில் இராணுவப் படைகளின் உயர்மட்டக் குழு (SCAF) என்னும் இராணுவ ஆட்சிக்குழுவிற்கு எதிராக இந்த இலையுதிர்காலத்தில் தொழிலாளர்கள் தொடங்கியிருக்கும் புதிய வேலைநிறுத்தங்கள் எகிப்தியப் புரட்சி பற்றிய ஒரு புதிய அரசியல் கணக்கெடுப்பு ஒன்றினை வரைவதற்கான அவசரத்தை அடிக்கோடிடுகின்றன. ஹோஸ்னி முபாரக் வீழ்ச்சி கண்டு ஒன்பது மாதங்களுக்கு பின்னரும் எகிப்து இன்னும், தொழிலாளர்கள் வறிய ஊதியங்களுக்கும் அரசியல் ஒடுக்குமுறைக்கும் முகங்கொடுத்து வருகின்ற சர்வாதிகாரத்தையே எதிர்கொள்கின்றனர். 


Crowd
தஹ்ரிர்
சதுக்கத்தின் மக்கள் கூட்டம்

இதற்குக் காரணம் தொழிலாள வர்க்கம் போராடத் தவறியதால் இல்லை. செப்டம்பர் ஆரம்பத்தில் ரமலான் விடுமுறைக்குப் பின்னர் வெடித்த வேலைநிறுத்தங்களின் அலை என்பது பிப்ரவரியில் முபாரக்கை வீழ்த்திய புரட்சிகரமான பாரிய வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த தொடர்ச்சியான தொழிலாளர் வேலைநிறுத்தங்களாகும். இடது என்று கூறிக் கொள்ளும் கட்சிகள், இரத்தக் கறைபடிந்த கரங்களுடனான இராணுவக் குழுவைப் பாதுகாப்பதற்கும் அதனைத் தூக்கியெறிவதற்கு தொழிலாள வர்க்கம் நடத்துகின்ற போராட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கும் திட்டமிட்டு இயங்கிவந்திருப்பதன் காரணத்தினாலேயே எகிப்திய இராணுவத்தால் அதிகாரத்தில் தொடர்ந்திருக்க முடிந்திருக்கிறது.

எகிப்தின் முன்னாள் இராணுவ ஆட்சியாளரான ஜெனரல் கமால் அப்துல் நாசரின் அரசியலுக்கே திரும்பவும் வந்து நிற்கக் கூடிய தகாமு (Tagammu) மற்றும் கராமா (Karama) போன்ற  கட்சிகள், தகாமு உடன் பெருமளவில் ஒருங்கிணைப்பு கொண்ட எகிப்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (ECP) உள்ளிட்ட பல்வேறு ஸ்ராலினிசக் குழுக்கள், ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம் போன்ற இளைஞர் குழுக்களின் தலைமைகள் மற்றும் புரட்சிகர சோசலிஸ்டுகள் (RS) மற்றும் டேக்டிட் (சோசலிச மறுமலர்ச்சி) போன்றஅதீத-இடது என்று அழைத்துக் கொள்வதான குழுக்கள் அனைத்தும் இந்த சக்திகளில் இடம்பெற்றுள்ளன.

புரட்சிகர சோசலிஸ்டுகள் குழு சர்வதேசரீதியாக சர்வதேச சோசலிசப் போக்கின் (International Socialist Tendency) கட்சிகளுடன் - பிரிட்டனில் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), மற்றும் உத்தியோகபூர்வமற்ற முறையில் அமெரிக்காவின் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO) ஆகியவற்றுடன் - இணைப்பு கொண்டுள்ளதாகும்.

இந்தக் கட்சிகள் எல்லாம் இராணுவக் குழுவுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அணிதிரள்வதை எதிர்க்கின்றன. தொழிலாள வர்க்கம் முபாரக்குக்கு எதிராகவும், அதனையடுத்து இராணுவப் படைகளின் உயர்மட்டக் குழுவுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்த பின்னும் கூட அரசியல்ரீதியாக எகிப்தில் இராணுவ ஆட்சிப் பாரம்பரியத்தையும் ஸ்ராலினிஸ்டுகள் அதற்கு வழங்கும் தேசியவாத ஆதரவையும் பாதுகாத்து நிற்கின்றன. சமூகவியல்ரீதியாக இந்தக் கட்சிகள் எல்லாமே தமது உறுப்பினர்களை எங்கிருந்து பெறுகின்றன என்றால், தொழிலாளர்களை அரசு மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க முனையும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்துடன் நிதியியல்ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பிணைக்கப்பட்டிருக்கும் ஒரு சமூக அடுக்காக அமைந்திருக்கின்ற நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளில் இருந்து தான் பெறுகின்றன.

அவை வலது சாரி முஸ்லீம் சகோதரத்துவம் (Muslim Brotherhood) மற்றும் சர்வதேச அணுசக்திக் கழகத்தின் முன்னாள் இயக்குநரான முகமது எல்பரடேயின் மாற்றத்திற்கான தேசியக் கூட்டணி (National Alliance for Change) போன்ற முதலாளித்துவ சக்திகளுடன் கூட்டுவைத்துக் கொண்டு அதே சமயத்தில் அமெரிக்காவுடன் பின்கதவுவழியாக வேலை செய்து வருகின்றன.

இந்தக் கட்சிகள் எவையும் இடதுசாரி அரசியலின் வரலாற்று அடிப்படையான சமத்துவத்திற்காகக் போராடும் சக்திகள் அல்ல. அதேபோல், வழக்கமான முதலாளித்துவஇடது கட்சிகள் சொல்வது போல, ‘இடதுசாரி கருத்துகள் ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்தின் கருத்துகளுடன் இணக்கமானவையே என்பதான கூற்றையும் அவை முன்னெடுப்பதில்லை. அக்கட்சிகளின் பெயர்கள் அவர்களை கம்யூனிஸ்டுகளாக, சோசலிஸ்டுகளாக, அல்லது புரட்சிகரவாதிகளாகக் காட்டுகின்றன, ஆனால் அவர்கள் தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கு வருவதை அல்லது அது சோசலிசத்திற்காகப் போராடுவதைத் தடுப்பதற்கே உறுதிபூண்டிருக்கின்றனர். வார்த்தை ஜாலங்கள் மற்றும் அரசியல் அவநம்பிக்கை இரண்டும் கலந்த கலவையின் அடிப்படையிலான இத்தகைய அரசியல் அவர்களை இடது சக்திகளாக அல்லாமல், மாறாக போலி இடது சக்திகளாக உருவாக்கியுள்ளன.

தொழிலாள வர்க்கம் மத்திய கிழக்கு முழுவதிலும் மற்றும் சர்வதேசரீதியாகவும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக எகிப்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டும் தான் எகிப்தின் நிதிய உயரடுக்கை மற்றும் அதன் மேற்கத்திய ஏகாதிபத்திய ஆதரவாளர்களைத் தோற்கடிக்கவும், மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரங்களை உயர்த்திக்கொள்ளவும் முடியும். நாட்டின், பிராந்தியத்தின் மற்றும் உலகத்தின் வளங்களை உழைக்கும் மக்களின் நலன்களுக்கு ஜனநாயகரீதியாகப் பயன்படுத்துவதற்கு இது மட்டுமே ஒரே அடிப்படையாகும்.

அத்தகையதொரு போராட்டத்தில் முதல் படியாக இருப்பது போலி இடதுகளின் எதிர்ப்புரட்சிகரப் பாத்திரத்தை அம்பலப்படுத்துவதும் அவற்றிற்கு பதிலாக தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டுவதுமாகும். இந்தக் கட்சிகளின் மீதான ட்ரொட்ஸ்கிச விமர்சனத்தைக் கொண்டு தொழிலாளர்களையும், புத்திஜீவிகளையும் மற்றும் இளைஞர்களையும் ஆயுதபாணியாக்குவது தொழிலாள வர்க்கத்தில் அத்தகையதொரு புதிய அரசியல் தலைமைக்கான அடிப்படையை அமைக்க உதவும்.

எகிப்திய புரட்சியில் போலி இடதுகள்

சென்ற ஜனவரி மாதத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களின் விளைவாக துனிசிய ஜனாதிபதி ஜைனுல் அபிதீன் பென் அலி தூக்கிவீசப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் எல்பரடேய் விடுத்த ஒரு அறிக்கை, எகிப்தியப் புரட்சிக்கு ஒட்டுமொத்தமான எகிப்திய எதிர்க்கட்சிகளும் காட்டும் மனோநிலையை சுருங்கக் கூறுவதாய் இருந்தது. “மாற்றம் ஒழுங்குமுறையான வகையில் வருமே அன்றி துனிசிய மாதிரியின் வகையில் அல்ல என்றே தான் நம்புவதாகக் கூறிய அவர், “விடயங்கள் முறையாக ஒழுங்கமைக்கப்படவும் திட்டமிடப்படவும் வேண்டும். மாற்றத்தைக் கொண்டுவர நடப்பு அமைப்புமுறைக்குள் இருக்கும் வழிவகைகளைப் பயன்படுத்தவே நான் விரும்புவேன்.” 

அதற்கடுத்த ஒரு வார கால இடைவெளியிலேயே, தொழிலாளர்களுக்கும் இவர் கூறிய நடப்புஅமைப்புமுறை, அதாவது முபாரக்கின் போலிஸ் குண்டர்கள் மற்றும் இராணுவத்திற்கும், இடையேஒரு புரட்சிகர மோதல் நடந்தது.


Shoe
முதலில் துனிசியா இப்போது எகிப்து

ஜனவரி 25 அன்று அழைப்பு விடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டங்களுக்கு கிடைத்த வெகுஜன ஆதரவு அரசியல் ஸ்தாபனத்தையும் போலிஸையும் திகைக்க வைத்தது. இது வீதிச் சண்டைக்கு இட்டுச்சென்று ஜனவரி 28 அன்று கெய்ரோவில் போலிஸ் தோற்கடிக்கப்படவும் நேர்ந்தது. அடுத்தநாள் கெய்ரோவின் நகர உட்பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுற்றி வளைக்குமாறு முபாரக் இராணுவத்திற்கு உத்தரவிட்டார். பிப்ரவரி 1 அன்று பதவி விலக மறுத்து விட்ட அவர் குதிரைகளிலும் ஒட்டகங்களிலும் குண்டர்களை அனுப்பினார். இராணுவப் படையினருடன் சேர்ந்து கொண்டு அவர்கள் தஹ்ரிர் சதுக்கத்தில் தாக்குதல் நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த குண்டர்களைத் திருப்பியடித்து பதிலடி கொடுத்தனர்.

ஆர்ப்பாட்டங்களை நசுக்குவதற்கு அது கலந்தாலோசனை செய்த அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ் மற்றும் முன்னாள் தூதரும் பெருநிறுவன லாபியிஸ்டுமான ஃபிராங்க் விஸ்னர் ஆகிய அமெரிக்க அதிகாரிகளும் முபாரக் ஆட்சியும்  ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவத்தை அனுப்ப தயங்கியது. ஏனென்றால் படைவீரர்கள் சுட மறுத்து கலகத்தில் சேர்ந்து விடும் ஆபத்து மிக அதிகமாய் இருந்தது. அதற்குப் பதிலாக, முஸ்லீம் சகோதரத்துவம் (MB) மற்றும் எல்பரேடேயின் ஆதரவாளர்கள் மற்றும் தகாமு உடன் பிப்ரவரி 6 அன்று ஒரு கூட்டத்துக்கு அது தயாரிப்பு செய்தது. ஏதேனும் அரசியல் ஏற்பாட்டைச் செய்து சூழ்நிலையை ஸ்திரப்படுத்தலாம் அதன்மூலம் ஆர்ப்பாட்டங்களின் தாக்கத்தை வரம்புக்குட்படுத்தலாம் என்பது அதன் நம்பிக்கை.

அதன்அதி-இடது கூறுகள் உட்பட ஒட்டுமொத்த போலி இடதும் இந்தக் கூட்டத்திற்கு ஆதரவாகப் பரப்புரை செய்தது. இக்கூட்டத்திற்கு முந்தைய தினத்தில், புரட்சிகர சோசலிஸ்டுகள் குழுவினர் முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பினர் மூலமாக விடுத்த ஒரு அறிக்கையில், ஆட்சியுடன்பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பும், அத்துடன்இந்தப் பேச்சுவார்த்தையில் அனைத்து அரசியல் மற்றும் தேசிய சக்திகளும் கலந்து கொள்ள வலியுறுத்தலும் இடம்பெற்றிருந்தது. “பல்வேறு தேசிய சக்திகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஒரு தலைமையை உருவாக்குவதற்கும் புரட்சிகர சோசலிஸ்டுகள் விடுத்த இன்னொரு அறிக்கை அழைப்பு விடுத்தது.  

முஸ்லீம் சகோதரத்துவம் போன்றதேசிய சக்திகளை அது ஊக்குவித்த அதே சமயத்தில், முபாரக்கின் குண்டர்கள் நடத்திய தாக்குதல்களுக்கு எதிராக தங்கள் சுற்றுப்பகுதிகளைப் பாதுகாப்பதற்காக தொழிலாளர்கள் தன்னியல்பாக உருவாக்கியிருந்த மக்கள் குழுக்களை அரசியல்ரீதியாகப் பலம்குன்றச் செய்வதற்கு ஒரு முன்முயற்சியையும் ஆரம்பித்தது. “ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்நிலைக் குழுக்களின் வடிவத்தில் இந்தக் குழுக்களுக்குஒரு மாற்று இருப்பதாய் அவர்கள் பறைசாற்றினர்.

 
Anger
ஜனவரி
28 - கோப வெள்ளி

முஸ்லீம் சகோதரத்துவம் மற்றும் போலி-இடதுகள் ஆகிய இந்ததேசிய சக்திகள் மக்கள் குழுக்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரச் செய்த முயற்சிக்கு முகமூடியிட இந்த வார்த்தை விளையாட்டைப் பயன்படுத்தினர். புரட்சிகர சோசலிஸ்டுகள் விளக்கியது: “உயர்நிலைக் குழுவில் இடம்பெறுவோர் அவர்கள் அரசியலில் எந்த நிறத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தமது குழுவின் நலன்களைப் பாதுகாக்கும் திறன் படைத்த நம்பிக்கை பெற்றவர்களாக இருப்பார்கள்.” ”ஒரு காரியாளரைக் கொண்டு, அதாவது முஸ்லீம் சகோதரத்துவம் மற்றும் போலி இடது கட்சிகளின் அனுபவம் வாய்ந்த ஆட்களைக் கொண்டு, “ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேசுவதே சிறந்தது என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.

மீண்டுமொருமுறை, தொழிலாள வர்க்கம்எதிர்க்கட்சிகளின் திட்டங்களை வேரறுத்தது. முபாரக்கின் இராஜினாமாவுக்கு சில நாட்களுக்கு முன்பாக ஒரு மாபெரும் வேலைநிறுத்த அலை அபிவிருத்தியடைந்து எகிப்தை ஸ்தம்பிக்கச் செய்தது. மஹாலா மற்றும் காஃப்ர் அல்-தவார் நூற்பாலைத் தொழிலாளர்கள், சூயஸ் கால்வாய் தொழிலாளர்கள் மற்றும் சூயஸ் மற்றும் போர்ட் செய்ட்டில் உள்ள இரும்பாலைத் தொழிலாளர்கள், மற்றும் குவெஸ்னாவில் மருந்து உற்பத்தித் துறை தொழிலாளர்கள் ஆகிய தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தங்கள் குறித்த செய்திகள் சர்வதேச ஊடகங்களுக்கு எட்டின. முபாரக் வெளியேற்றப்படுவதற்கு முந்தைய இறுதி நாட்களில் இந்த வேலைநிறுத்தங்கள் நிதியியல் மற்றும் அரசாங்கத் துறைகளுக்கும் பரவின.

பிப்ரவரி 11 அன்று எகிப்தின் துணை ஜனாதிபதியும், உளவுத்துறை தலைவரும் மற்றும் சிஐஏவுடனான உறவின் தலைமை அதிகாரியுமான ஓமர் சுலைமான் முபாரக் தனது பதவியை விட்டுவிலகுவதாகவும் இராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார்.

எகிப்தின் இராணுவப் படைகளின் தலைவரான சமி அனான் மற்றும் அமெரிக்காவின் கூட்டுப்படைகளின் தலைவர் அட்மிரல் மைக் முல்லன் இடையிலான பேச்சுவார்த்தைகள், மற்றும் படைத்தளபதி முகமது உசைன் தந்தாவி மற்றும் பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ் இடையிலான பேச்சுவார்த்தைகளின் மூலம் எகிப்திய இராணுவம் இந்த முடிவுக்கு வந்திருந்தது.

தந்தாவி தலைமையிலான இராணுவப் படைகளின் உயர்மட்டக் குழுவின் இராணுவக் குழுவைக் கொண்டு முபாரக் இடம்பெயர்க்கப்பட்டார். தந்தாவி பிப்ரவரி 13 அன்று நாடாளுமன்றத்தைக் கலைத்தார், அரசியலமைப்பை இடைநீக்கம் செய்தார், இராணுவக் குழுவுக்கு சர்வாதிகாரங்களை அளித்தார். அடுத்த நாளே, சூழ்நிலையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வேலைநிறுத்தங்களை முடிவுக்குக் கொண்டு வரும் தனது முயற்சியில், இராணுவக்குழு வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இல்லையேல் இராணுவச் சட்டத்தை ஏவ வேண்டியிருக்கும் என்றும் அச்சுறுத்தியது.

அமெரிக்காவிடம் இருந்தும் எகிப்தின் உத்தியோகபூர்வஎதிர்க்கட்சிகளிடம் இருந்துமான அழுத்தத்தின் கீழ் இந்த இராணுவக் குழு, ஜனநாயகரீதியான பொதுஆட்சிக்கு உருமாறுவதையே மேற்பார்வை செய்யத் தள்ளப்பட்டாக வேண்டும் என்ற கூற்று தான் இராணுவக் குழு தனது ஆட்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கும் பிரதானமான அரசியல் பொய் ஆகும். தான் வரைவு செய்யவிருக்கும் புதிய அரசியலமைப்புச் சட்டம் குறித்த கருத்துக்கணிப்பினை  மார்ச் 19 அன்று நடத்தவிருப்பதாக அது கூறியிருந்தது.

இராணுவக்குழுவுக்கு அது ஜனநாயக ஆட்சியை ஸ்தாபிக்கவிருப்பதாக பிரமைகளை ஊக்குவிப்பதில் கூட்டாளியாக இருந்தவை தான் இந்த போலி இடதுகள். இவை வலது-சாரிக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வந்த அதேசமயத்தில், எகிப்தியப் புரட்சி என்பது எகிப்தின் தேசிய அரசு மற்றும் இராணுவத்தின் கட்டமைப்புக்குள்ளாக வரம்புபட்ட ஜனநாயக சீர்திருத்தங்களைச் சாதிப்பதற்கான ஒரு பிரச்சாரமே என்கின்ற தேசியவாதக் கண்ணோட்டத்திற்கு ஊக்குவித்தன. இந்தக் குட்டி முதலாளித்துவ தேசியவாதக் கண்ணோட்டம், மத்திய கிழக்கெங்கிலும் வெடித்த, சாராம்சத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களாக இருந்த புரட்சிகரப் போராட்டங்களின் புறநிலைத் தன்மையை அடிப்படையாகக் கொண்ட எந்த மூலோபாயத்திற்கும் விரோதமானதாக இருந்தது

Military
ஏப்ரல்
12 தஹ்ரீர் சதுக்கத்தின் மீது இராணுவம் தாக்குகிறது

முபாரக்கின் கீழ் ஆட்சி செலுத்தி வந்த இராணுவ உயரதிகாரத் தட்டுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் வெளிப்படையான கலகத்திலேயே ஈடுபட்டு வந்திருந்தது என்கிற நிலையிலும், புரட்சிகர சோசலிஸ்டுகள் கடந்த காலத்தில் எகிப்திய இராணுவம்மக்கள் இராணுவமாகத் திகழ்ந்து வந்திருந்ததாக புகழ்பாடியது.

பிப்ரவரி 1 அன்று வெளியான ஒரு அறிக்கையில் அது எழுதியது: ”இராணுவம் மக்களுடன் இருக்கிறதா இல்லை மக்களுக்கு எதிராக இருக்கிறதா? என்று ஒவ்வொருவரும் கேட்கிறார்கள். இராணுவம் என்பது ஒற்றை தொகுதி அல்ல. சாதாரண இராணுவத்தினர்கள் மற்றும் இளநிலை அதிகாரிகளின் நலன்கள் வெகுஜனங்களின் நலன்களே. ஆனால் மூத்த அதிகாரிகள் தான் முபாரக்கின் ஆட்கள், அவரது ஊழல், செல்வம் மற்றும் கொடுங்கோன்மையின் ஆட்சியைப் பாதுகாக்கும் பொருட்டு கவனமாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர்கள். இது அமைப்புமுறையின் ஒரு ஒருங்கிணைந்த பாகம். இராணுவம் இனியும் மக்கள் இராணுவம் அல்ல. இந்த இராணுவம் 1973 அக்டோபரில் யூத எதிரியைத் தோற்கடித்த இராணுவம் அல்ல.”

எகிப்திய இராணுவம் இவர்கள் சொல்லும்மக்கள் இராணுவமாக இருந்ததில் இருந்து எப்படி முபாரக் பின்னாலமைந்த தலைமைப் படையாக மாறியிருந்தது, அதற்கு எதிராக தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகரப் போராட்டத்தை முன்வைக்க வேண்டி வந்தது என்பதை இந்த அறிக்கை விளக்கவில்லை. இது ஏறக்குறைய எகிப்திய தேசியவாதத்திற்கு கோரிக்கைவிடுவதும், இராணுவத்தை ஜெனரல் கமால் அப்துல் நாசர் மற்றும் அவருக்குப் பின் வந்த 1973 சமயத்தில் இஸ்ரேலுக்கு எதிரான யோம் கிபூர் போரில் அரசின் தலைமையில் இருந்த அன்வர் சதாத் ஆகியோரின் காலகட்டத்திற்கு திரும்பச் செய்வதற்கு அழைப்பு விடுவதுமே ஆகும். இதனை இராணுவத்தின் தலைமையில் இருக்கும்முபாரக்கின் ஆட்கள் சிலரை, அதாவது புரட்சிகர சோசலிஸ்டுகள் பொதுவில் பாதுகாக்கத் துணியாத அந்த அதிகாரிகளை, நீக்குவதன் மூலம் சாதிக்க முடியும் என்பது தான் அவர்கள் வழங்கும் ஆலோசனை.  

Stock Exchange
இராணுவம்
எகிப்திய பங்குச் சந்தையைப் பாதுகாத்து நிற்கிறது

இராணுவத்தினர்கள் மற்றும் இளம் அதிகாரிகளின் நலன்கள் வெகுஜனங்களின் நலன்களே என்று புரட்சிகர சோசலிஸ்டுகளின் அறிக்கையில் வழங்கப்பட்டிருக்கும் கண்ணோட்டம் முற்றுமுதலானதொரு பொய்யாகும். இராணுவத்தினர்களும் இளநிலை அதிகாரிகளும் நடுத்தர வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்கள் ஆகிய மக்கள் பிரிவுகளில் இருந்து தான் கொண்டுவரப்படுகிறார்கள், அவர்களுக்கு தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர கோரிக்கையை விடுக்க முடியும். ஆயினும் இராணுவத்தினர்கள் எகிப்திய முதலாளித்துவத்திற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான எகிப்தின் உறவுகளுக்கும் அச்சாணியாகத் திகழும் உயர் அதிகாரிகளின் இராணுவ ஒழுங்கின் கீழ் தான் இருக்கிறார்கள் என்கின்ற அவர்கள் முகங்கொடுக்கும் மிக வெளிப்பட்ட நிலைமையை புரட்சிகர சோசலிஸ்டுகள் உதாசீனம் செய்கிறது.

இராணுவத்தின் ஒழுங்கையும் அதன்மூலம் உயர் அதிகாரிகள்  இராணுவத்தினர்கள் மீது கொண்டுள்ள பிடியையும் உடைப்பது தான் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் முகங்கொடுக்கும் அடிப்படையான பணி. புரட்சிகர சோசலிஸ்டுகளின் அறிக்கையோ இதற்கு நேர்மாறானதொரு நிலைப்பாட்டை எடுக்கிறது. இராணுவம் அது நாசர் அல்லது சதாத்துக்கு கீழ் ஆற்றிய பாத்திரத்துக்குத் திரும்புவது தான் அடிப்படையான பணி என்றால், அதன் ஒழுங்கை உடைப்பது குறித்தும் எகிப்திய இராணுவத்தினர்களை தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிக்கு வென்றெடுப்பது குறித்தும் பேசுவதென்பதே முடியாது.

புரட்சிகர சோசலிஸ்டுகளும் மற்ற இஸ்லாமியர்களற்ற எதிர்க்கட்சி சக்திகளும் இராணுவம் முன்மொழிந்த அரசியல்சட்ட அமைப்பு மீது வாக்களிக்க வேண்டாம் என்று பூர்வாங்கமாக அழைப்பு விடுத்ததோடு அதில் திருத்தங்களை அல்லது எதிர்க்கட்சிகளால் வரையப்பட்ட ஒரு புதிய அரசியல் சட்ட அமைப்பையும் முன்மொழிந்திருந்தன. ஆனால் இராணுவத்தின் அரசியல் சட்டத்திற்கு புரட்சிகர சோசலிஸ்டுகளின் எதிர்ப்பு போலியானதாக இருந்தது, ஏனெனில் அதேசமயத்தில் அது இராணுவ ஆட்சிக்குழுவின் அரசியலமைப்பை ஆதரித்த இஸ்லாமியக் குழுக்களுடன் உறவுகளை ஆழப்படுத்தியது.

பிப்ரவரி 25 அன்று அதுஜனவரி 25 புரட்சியின் தொழிலாளர் கூட்டணிக்கான அடித்தளத்தை நோக்கி என்கிற ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த ஆவணத்தில் புரட்சிகர சோசலிஸ்டுகள், எகிப்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, டாக்டிட் மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவத்தின் உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தனர். பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற குழுக்களைக் கொண்ட நான்காம் அகிலத்தின் பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் சர்வதேச அங்கமான இண்டர்னேஷனல் வியூபாயிண்ட் ஆன்லைன் இதழ் இதனை வெளியிட்டிருந்தது.  

வரலாற்றுரீதியாக வேலைநிறுத்த உடைப்பு நடவடிக்கைகளிலும் இஸ்லாமியப் பயங்கரவாத நடவடிக்கைகளிலும் தீவிரமாகச் செயலாற்றி இருக்கக் கூடிய முஸ்லீம் சகோதரத்துவம் என்கின்ற ஒரு வலதுசாரிக் குழுவை தொழிலாள வர்க்கத்துடன் இணைப்பு கொண்டதாகக் கூறப்படும் ஒரு கூட்டணிக்குள் அழைப்பதற்கு முன்மொழிவது என்பது ஆழமாக பிற்போக்குத்தன்மையுடையதாகும்.

இராணுவ ஆட்சிக்குழு மற்றும் பழைய ஆட்சி குறித்து பிரமைகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளில் ஒன்றையும் கூட இந்த போலி-இடதுகள் விட்டுவைக்கவில்லை. ஆர்ப்பாட்டங்கள் பிரதமர் அகமது சஃபிக்கை இராஜினாமாவுக்குத் தள்ளி அவருக்குப் பதிலாக முபாரக்கின் கீழ் முன்னாள் போக்குவரத்து அமைச்சராக இருந்தவரும் தஹ்ரீர் சதுக்கத்தில் கொஞ்சகாலம் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டிருந்தவருமான எசாம் சராஃபால் மார்ச் 3 அன்று அமர்த்தப்பட்ட போது, புரட்சிகர சோசலிஸ்டுகள் சராஃபுக்கு ஊக்கத்துடன் புகழ்பாடியது. அவர்விடுதலை ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றவர் என்பதைக் குறிப்பிட்ட புரட்சிகர சோசலிஸ்டுகள் மேலும் கூறியது, “ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதிப்படுத்த புதிய பிரதமர் மக்களிடம் அவப்பெயர் சம்பாதித்திருந்த பழைய அரசாங்கத்தின் அநேக அமைச்சர்களை உடனடியாக மாற்றினார்.”

இதற்கிடையில் மார்ச் 19 அன்று அரசியலமைப்புச் சட்டம் மீதான கருத்துக்கணிப்பு 77 சதவீத வாக்குகளுடன், அதாவது குறைந்த வாக்குப் பதிவுடன் நிறைவேறியது. போலி இடதுகளின் உதவியுடன் எகிப்திய இராணுவ ஆட்சிக்குழுவின் ஸ்திரப்படுத்தலானது எதிர்ப்புரட்சி மத்தியகிழக்கு முழுவதிலும் மறுதிரளல் கொள்வதற்கும் தாக்குதல் தொடுப்பதற்கும் கால அவகாசத்தை வழங்க உதவியது.

அதே நாளில், அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுப் படைகள் லிபியாவில் குண்டுவீச்சைத் தொடங்கின.

சில நாட்களுக்கு முன்னதாக, பஹ்ரைனில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அவர்களை இரத்தம்தோய்ந்த முறையில் நசுக்கும் நடவடிக்கை சவுதியின் உதவியுடனும் அமெரிக்காவின் இரகசிய ஆதரவுடனும் தொடக்கப்பட்டிருந்தது. மார்ச் 23 அன்று, இராணுவப் படைகளின் உயர்மட்டக் குழு இராணுவ ஆட்சிக்குழு வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மீது தடையை விநியோகித்திருந்தது. இது ஆர்ப்பாட்டங்களை நின்றுவிடச் செய்யவில்லை என்றாலும், அன்று முதல் ஆயிரக்கணக்கான எகிப்திய தொழிலாளர்களும் இளைஞர்களும் இராணுவ ஆட்சிக் குழுவை எதிர்த்தமைக்காகக் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு மற்றும் கூட்டு இராணுவ விசாரணைகளின் கீழ் குற்றவாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.

Army
எகிப்திய
இராணுவம் கெய்ரோவில் நுழைகிறது

கருத்துக்கணிப்பெடுப்பு இராணுவப் படைகளின் உயர்மட்டக் குழுவின் இராணுவ ஆட்சிக்குழுவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நின்று விடச் செய்யவில்லை. ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 8 அன்றும் அவை தொடர்ந்தன. ஆயினும், இராணுவ ஆட்சிக் குழு மிக்க வன்முறையான வகையில் பதில் கொடுத்தது. 20 இளம் இராணுவ அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்து கொண்டு இராணுவப் படைகளின் உயர்மட்டக் குழுவை தூக்கியெறியக் கோரியதாக செய்தி வெளியான பின்னர் தஹ்ரீர் சதுக்கத்தில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்தை அது நசுக்கியது.

அதையொட்டிய மாதங்களில், புரட்சியின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்றதற்குப் பொறுப்பான அதிகாரிகளை ஒழுங்கான விசாரணைக்கு உட்படுத்தாமை, இராணுவ விசாரணைகள் தொடர்ந்தமை, மற்றும் ஏழ்மையான வாழ்க்கை நிலைமைகள் ஆகியவை தொடர்பாக எகிப்திய மக்களிடம் அதிருப்தி எழுந்தது. இந்தக் கோரிக்கைகள் எல்லாம் ஒருஇரண்டாம் புரட்சிக்கும் மற்றும் மே 27 அன்றான ஒருஇரண்டாம் புரட்சி ஆர்ப்பாட்டத்திற்குமான அழைப்புகளைச் சுற்றி ஒன்றுதிரண்டன.

இக்கோரிக்கை இராணுவ ஆட்சிக்குழுவைஜனநாயக-ஆதரவு சக்தியாகக் காட்டும் தனது சித்தரிப்பில் குறுக்கிட்டதால் புரட்சிகர சோசலிஸ்டுகள்  இந்தக் கோரிக்கையை எதிர்த்தது. அமெரிக்க சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் வெளியீடான Socialist Worker இதழில்எகிப்தில் போராட்டத்தின் புதிய வடிவம் என்கின்ற தலைப்பில் புரட்சிகர சோசலிஸ்டுகள் உறுப்பினரான முஸ்தஃபா ஓமர் மே 31 அன்று ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அவர் எழுதினார்: “இராணுவப் படைகளின் உயர்மட்டக் குழுவின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் எல்லாம் இருந்தாலும் கூட ஜனவரி 25 எழுச்சியானது எகிப்தை ஒரேயடியாக சில குறிப்பிட்ட வழிகளில் மாற்றியிருக்கிறது என்பதை அது புரிந்து கொண்டிருக்கிறது. அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பு முறையை சீர்திருத்தும் அதன் நோக்கம் அதனை கூடுதலான ஜனநாயகப்பட்டதாகவும் குறைந்த ஒடுக்குமுறையானதாகவும் மாற அனுமதிக்கும்.

சமீபத்திய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இரத்தக்களரியில் இருந்து தான் எதையும் கற்றுக் கொண்டிருக்கவில்லை என்பதை முனைந்து நிரூபணம் செய்வதைப் போல, அல் ஹமாலாவி இராணுவ ஆட்சிக்குழு குறித்து தான் பிப்ரவரியில் கூறிய கருத்துக்களை ஜூன் 22 ராய்டர்ஸ் நேர்காணலிலும் எதிரொலித்தார். அவர் சொன்னார்: “ஒரு பொது அரசாங்கத்திடம் அதிகாரத்தை ஒப்படைப்பது குறித்து அவர்கள் (இராணுவப் படைகளின் உயர்மட்டக் குழு தளபதிகள்) நேர்மையாக நடந்து கொள்வதாகவே நான் கருதுகிறேன். அதற்காக அவர்கள் எகிப்தின் அரசியல் அரங்கில் தமது பாத்திரத்தை விட்டுக் கொடுத்து விடுவார்கள் என்பதாக அர்த்தம் கிடையாது.”

இந்தக் கருத்து சிடுசிடுப்பானதாகவும் அபத்தமானதாகவும் இருக்கிறது. இராணுவ உயர்தலைமை தான் முபாரக் ஆட்சியின் அரசியல் மற்றும் பெருநிறுவன முதுகெலும்பாய் இருந்தது. ஒரு சட்டபூர்வ நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், அது இப்போது இராணுவப் படைகளின் உயர்மட்டக் குழுவின் ஆட்சியின் கீழ் முற்றுமுதலான சர்வாதிகார அதிகாரத்தை கோலோச்சிக் கொண்டிருக்கிறது. ஒரு பொது அரசாங்கம் நிறுவப்பட்டு ஆனால் இராணுவமோஎகிப்திய அரசியல் அரங்கில் அதன் பாத்திரத்தை விட்டுக் கொடுக்கவில்லை என்றால் அது ஒரு பொது அரசாங்கமாக இருக்காது மாறாக தொடர்ந்து நடக்கும் இராணுவ சர்வாதிகாரத்திற்கு ஒரு போலிமறைப்பாகத் தான் இருக்கும்.

இச்சமயத்தில் வர்க்கப் போராட்டமானது, “ஒழுங்குமுறையான மாற்றத்திற்கு எல்பரடே கொண்டிருந்த பெருந்தன்மையான நம்பிக்கைகளுக்கு எப்படி இனியும் செவிமடுத்துக் கொண்டிருக்கவில்லையோ அதைப் போலவே இராணுவ ஆட்சிக்குழுவின் ஜனநாயக விருப்பங்கள் குறித்த அல்-ஹமாலாவியின் கற்பனைகளுக்கும் செவிமடுக்கவில்லை. ஜூன் 27 அன்று நடந்த ஒரு வெகுஜனப் போராட்டம் இராணுவ ஆட்சிக்குழுவின் தாக்குதலுக்கு உள்ளாகி பெருமளவிலான மோதலுக்கு இட்டுச் சென்றது. சில பத்து உயிரிழப்புகள் நேர்ந்தன, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் பெருகின. மில்லியன்கணக்கான தொழிலாளர்கள் எகிப்து முழுவதிலும் ஜூலை 8 அன்று போராட்டத்தில் இறங்கினர். பல பொதுச் சதுக்கங்களில் ஆர்ப்பாட்ட மறியல்கள் நடந்தன. இதில் புரட்சியில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் மேற்கொண்ட மறியல் குறிப்பிடத்தக்கது.

இந்த வர்க்கப் போராட்ட வெடிப்பு போலி இடது குழுக்களை இன்னும் வெளிப்படையாக எதிர்ப்புரட்சியின் கரங்களுக்குள் தள்ளியது. எகிப்திய அரசியல் வட்டத்தில்இடது, தாராளவாத மற்றும் இஸ்லாமிய என ஏறக்குறைய ஒவ்வொரு சக்தியையும் அடக்கிய ஒருஐக்கிய மக்கள் முன்னணியில் அது இணைந்தது. புரட்சிகர சோசலிஸ்டுகள், புரட்சிகர இளைஞர் கூட்டணி மற்றும் எகிப்திய சோசலிஸ்ட் கட்சி, இவற்றுடன் இஸ்லாமிய சலாஃபிஸ்ட் இளைஞர் மற்றும் (அரசுக்கு சொந்தமான அல் அஹ்ரம் தினசரியின் வார்த்தைகளில் சொல்வதானால்நம்பமுடியாத வண்ணம்) பாசிச இஸ்லாமியக் கட்சியான காமா இஸ்லாமிய ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. ”ஐக்கிய மக்கள் முன்னணியில் அங்கம் வகித்த கட்சிகள்சர்ச்சைக்குரிய விஷயங்களை விவாதிக்க வேண்டாம் என்பதில் உடன்பாடு செய்து கொண்டன.

ஜூலை 29 அன்று, ஐக்கிய மக்கள் முன்னணி தஹ்ரீர் சதுக்கத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. எகிப்து முழுவதிலும் இருந்து தனது ஆதரவாளர்களை வாகனங்களில் கொண்டுவந்து இறக்கியிருந்த கமா இஸ்லாமியா -Gamaa Islamiya - இந்தப் பேரணியில் ஆதிக்கம் செலுத்தியது. அவர்கள் இராணுவ ஆட்சிக்குழுவை வெளிப்படையாக ஊக்குவித்து முழக்கங்களை எழுப்பினர்: “தந்தாவி எங்களின் குரல் கேட்கிறதா, தஹ்ரீரில் உங்கள் பிள்ளைகளின் குரல்கள் நாங்கள்!”

பாசிஸ்டுகள் இராணுவ ஆட்சிக்குழுவை ஆதரித்தது தங்களுக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் அளித்தது போல் நாடகமாடிய போலி இடது கட்சிகள் மறியலில் தங்களது பங்கேற்பை நிறுத்தி வைப்பதாக ஜூலை 31 அன்று அறிவித்தன. காமா இஸ்லாமியா ஏன் தன் வாக்குறுதிப்படி நடக்க்கவேண்டும் என எதிர்பார்த்தனர் என்பதையோ அல்லது காமல்சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுப்பாமலிருக்கவில்லை என்பதையோ, அல்லது அது செய்ததல்லாமல் வேறு எதனை அது செய்யும் என்று இவர்கள் எதிர்பார்த்தார்கள் என்பதையோ இவர்கள் கூறவில்லை. அதேபோல் ஒரு பாசிசக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தது பற்றியும் அவர்கள் எதுவும் சொல்லவில்லை.

ஆகஸ்ட் 1 அன்று இராணுவம் தஹ்ரீர் சதுக்கத்தில் எஞ்சியிருந்த கடைசி சக்திகளான தியாகிகளின் குடும்பங்களைத் தாக்கி அடித்து மறியலை முடிவுக்குக் கொண்டுவந்தது. இந்தத் தோல்வியும், அத்துடன் சேர்ந்து ரமலான் விடுமுறைகள் தொடங்கியதும் சேர்ந்து, நடப்புப் போராட்டங்கள் பள்ளி ஆண்டின் தொடக்கத்தில் வெடிக்கும் வரை அரசியல் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தன.

போலி-இடதின் துரோகமும் அதன் நடுத்தர வர்க்க முன்னோக்கும்

அப்பட்டமான துரோகத்தில் ஒன்றாய்த் தான் எகிப்தில் போலி இடதின் வரலாறு அமைந்திருக்கிறது. இடதாகவும் சோசலிஸ்டாகவும் காட்டிக்கொண்டு அது வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து கொள்வதோடு அமெரிக்க ஆதரவு சர்வாதிகார இராணுவக் குழுவுக்கு ஜனநாயகச் சான்றிதழ்களை வழங்க முனைந்து வந்திருக்கிறது இராணுவப் படைகளின் உயர்மட்டக் குழுவை மதிப்பிழக்கச் செய்து தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகர சர்வதேசிய வேலைத்திட்டத்தைக் கொண்டு ஆயுதபாணியாக்குவதற்கான ஒரு அரசியல் போராட்டத்தை அது எதிர்த்து வந்துள்ளது, மாறாக இராணுவ ஆட்சிக்குழுவை தொழிலாள வர்க்கம் தூக்கியெறியும் அச்சுறுத்தலுக்கு எதிராக வெளிப்படையாக இராணுவ-ஆதரவு சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த வலதுசாரிக் கொள்கைகள் தொழிலாளர்களின் எழுச்சியை கண்களில் அச்சம் பொங்க நோக்குகின்ற வசதி படைத்த நடுத்தர வர்க்க அடுக்குகளின் கண்ணோட்டத்த பிரதிபலிக்கின்றன. ஆன் அலெக்சாண்டரின் (பிரிட்டனின் சோசலிச தொழிலாளர் கட்சியுடன்-SWP- இணைப்பு கொண்ட புரட்சிகர சோசலிஸ்டுகளுக்காக மத்திய கிழக்கில் இருந்து எழுதும் ஒரு கட்டுரையாளர்) கட்டுரைகளில் இது மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. "எகிப்தின் ஜனநாயகப் புரட்சியின் வளர்ச்சியடையும் சமூக ஆத்மா" ("The Growing Social Soul of Egypt's Democratic Revolution") என்னும் அவரது கட்டுரையில் "எழுச்சியின் போது பெறப்பட்ட அரசியல் ஜனநாயகத்திலான வெற்றிகளை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் விரிவுபடுத்துவது" என்று வினவுகிறார். போலி இடது எகிப்தில் உண்மையாக அமல்படுத்தியிருக்கும் சாட்சாத்தமான அதே வழிமுறைகளைத் தான் (வலது சாரிக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடனான கூட்டணிகள்) அவர் பரிந்துரைக்கிறார்.

ஒரு ஜனநாயக அலங்கார முகப்பை வைத்திருக்க இராணுவ ஆட்சிக் குழு மீது அரசியல் அழுத்தத்தை தொடர்ந்து பராமரிப்பது தான் தொழிலாள வர்க்கத்தின் கடமையாக அலெக்சாண்டர் காண்கிறார். "இராணுவத் தலைமையும் அதன் பொதுத்துறை கூட்டாளிகளும் எந்த அளவுக்கு முதலாளித்துவ ஜனநாயகத்தின் அலங்கார முகப்பை வலுப்படுத்த வேலை செய்வார்கள் என்பதையும், எந்த மட்டத்துக்கு அது புரட்சிக்கு முந்தைய சூழலுடன் ஒப்பிட்டால் விரிவடைந்த ஜனநாயகத்திற்கான இடமாக இருக்கும் என்கிற பிரச்சினையை ஆராய்ச்சி செய்ய இங்கு இடம் போதாது. இந்தப் புதிய அரசியல் ஒழுங்கின் பிரதான வடிவமைப்பு நிபுணர்களாக இராணுவத்தளபதிகள் தான் இருப்பார்கள் என்றால், அப்போது இந்த ஸ்திரப்படுத்தப்பட்டஜனநாயக அமைப்புமுறையின் எல்லைகள் மிகத் துல்லியமாக, பரந்துபட்ட மக்கள் அதனை விரிந்த நிலையிலேயே பராமரிப்பதற்குப் போராடுவதில் எந்த அளவுக்கு தயாரிப்புடனும் ஒழுங்கமைப்புடனும் இருக்கிறார்கள் என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படுவதாய் இருக்கும் என்பது நிச்சயம்.”   

இது பதில்களை விடவும் கேள்விகளைத் தான் அதிகம் எழுப்புகிறது. “முதலாளித்துவ ஜனநாயகத்திற்கான ஒரு அலங்கார முகப்பைக் கொண்டு தொழிலாளர்கள் ஏன் திருப்தி காண வேண்டும்? தொழிலாளர்கள் போராடுவதற்கு உண்மையிலேயேதயாரிப்புடனும் ஒழுங்கமைப்புடனும் இருக்கும் சமயத்தில் (அவ்வாறு இருப்பதாக அலெக்சாண்டரின் முன்னோக்கு கருதவில்லை) அவர்கள் இராணுவ ஆட்சிக் குழுவை தூக்கியெறிந்து சோசலிசக் கொள்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு தொழிலாளர் அரசை ஸ்தாபிக்க வேண்டும் என்று ஏன் சோசலிச தொழிலாளர் கட்சி-SWP- விரும்புவதில்லை?

இந்த யோசனைகள் எல்லாம் அலெக்சாண்டருக்கோ அல்லது அவரது சக சிந்தனையாளர்களுக்கோ தோன்றாது. அவர்கள் இராணுவ ஆட்சிக் குழுவுக்கு புகழுரைக்கும் விதமாகவிரிவடைந்த ஜனநாயக அளவின் சாத்தியத்தின் மீது கவனத்தைக் குவிக்கிறார்கள். இந்த வரையறுக்கப்படாத சூத்திரத்தின் அர்த்தம் என்னவாக இருந்தாலும் சரி, தொழிலாளர்கள் புரட்சிக்குள் காலடி எடுத்து வைக்கக் காரணமான கோரிக்கைகளை பூர்த்தி செய்வது என்பது அதில் இல்லை. தொழிலாளர்கள் போராட்டத்திற்கு வீரம்மிக்க ஒரு உதாரணத்தை வழங்கியிருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் இன்னும் மொத்தமாய் குறைகூலி பெற்றுக் கொண்டும் சுரண்டப்பட்டுக் கொண்டும் தான் இருக்கிறார்கள்; இராணுவ ஆட்சிக் குழுவின் பிற்போக்குவாதக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அடி உதைகளையும் இராணுவ விசாரணைகளையும் சந்திக்கும் அபாயத்தை இன்னும் எதிர்கொண்டு தான் வருகிறார்கள்.

எகிப்தில் இராணுவப் படைகளின் உயர்மட்டக் குழுவின்  சர்வாதிகாரத்தின் கீழோ அல்லது வேறு ஏதேனும் ஒடுக்குமுறை முதலாளித்துவ ஆட்சியின் கீழோவிரிவடைந்த ஜனநாயக அளவு என்பதில் எகிப்தில் உள்ள அல்லது சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கத்துக்கு எந்தப் பயனும் இல்லை. ஆயினும் இந்த போலி இடது கட்சிகள் பரிந்து பேசுகின்ற வசதி படைத்த தட்டுகளுக்கு நிச்சயமான அனுகூலங்கள் இருக்கிறது. புரட்சிகர சோசலிஸ்டுகளின் தலைமை வலதுசாரிக் கட்சிகளுடனான கூட்டங்களுக்கு அழைக்கப்படுகிறது, எகிப்திய மற்றும் சர்வதேசிய ஊடகங்களுக்கு அறிக்கைகள் அளிக்கிறது, அத்துடன் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு விளம்பரத்துக்கும் வருவாய்க்கும் வழி கொண்டிருக்கிறது.

Demonstration
பெருந்திரள்
ஆர்ப்பாட்டம் தஹ்ரீர் சதுக்கம் நோக்கிச் செல்கிறது

திரு. அல்-ஹமாலவேவின் கட்டுரைகள் தொடர்ச்சியாக கார்டியனில் இடம்பெறுகின்றன, பிபிசியில் தொடர்ந்து காட்சியளிக்கிறார். அமெரிக்காவின் காமெடி சென்ட்ரல் என்கிற தொலைக்காட்சியில் (பொருத்தமான பெயர் தான்) புரட்சிகர சோசலிஸ்டுகளின்  முக்கியத்துவமில்லாத ஜிஜி இப்ராஹிமைபுரட்சியின் முகமாக மாற்றி விட்டது, இப்போதெல்லாம் எகிப்து குறித்து விவாதிக்கும் செய்தி விவாதங்களில் ஹமாலவே உடன் அம்மணியும் (ஆன் அலெக்சாண்டர்) கலந்து கொள்கிறார். அவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இருக்கும் பிபிசியின் தலைமைக்கோ அல்லது அமெரிக்காவில் இருக்கும் காமெடி சென்ட்ரலின் பெருநிறுவன உரிமையாளரான Viacom இற்கோ கோபமூட்டும் வகையில் எதையும் செய்து விடாத வரைக்கும் அவர்கள் செய்யும் வேலைகளுக்கு நிச்சயமாகப் பரிசுகள் உண்டு.

உண்மையில் இந்தவிரிவடைந்த ஜனநாயக அளவு என்பது ஆளும் வர்க்கத்துக்கு அரசியல் நெருக்கடியின் காலத்தில் பாட்டாளி வர்க்கப் போராட்டங்களின் கழுத்தை நெரிக்க நடுத்தர வர்க்க போலி இடது கூறுகளின் சேவை அவசியப்படும் காலத்தில் அவர்களுக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. இதைத் தான் அலெக்சாண்டர் பாதுகாக்க விரும்புகிறார்.

அரச அதிகாரத்துவத்துடனும் வலதுசாரி சக்திகளுடனுமான கூட்டணிகள் மூலம் தொழிலாளர்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அத்தகைய கூட்டணிகள் குறித்த ஒரு மார்க்சிச விமர்சனத்திற்கு எதிரான மனோநிலை அவர்களுக்குள் விதைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

முபாரக்கின் ஆட்சிக்கு சேவை செய்த எகிப்தின் தொழிற்சங்கங்களை  இவற்றின் அதிகாரத்துவவாதிகள் அந்த ஆட்சிக்குள்ளாக தலைமைப் பொறுப்புகளை வகித்தமைக்காக அவர் பாராட்டினார். அவர் எழுதுகிறார்: “தொழிற்சங்கங்களின் போராடும் திறனென்பது அவர்களின் தலைமையை சார்ந்தோ, அல்லது அவர்களது உள்முக ஒழுங்கமைப்பு ஏற்பாடுகளைச் சார்ந்தோ இல்லை, மாறாக தொழிலாளர் போராட்டங்களுடனும் மற்றும் புரட்சியில் ஒட்டுமொத்த சக்திகளுக்கு இடையிலான சமநிலையுடனும் அவர்கள் கொண்டுள்ள இணைப்பில் தான் இருக்கிறது. ஜனநாயகமில்லாத, அதிகாரத்துவ தொழிற்சங்கங்களும் கூட குறுங்குழுவாதத்தின் எல்லைகளைத் துரிதமாகத் தகர்க்கத்தக்க மிகக் குறுகிய கோரிக்கைகளுக்கான போராட்டங்களுக்கேனும் ஆரம்பபுள்ளியாக முடியும்.”

இந்த அறிக்கை எகிப்தியப் புரட்சியின் நிகழ்வுகளைப் பொய்மைப்படுத்துகிறது. ஜனவரி மாதத்தில் எகிப்தின் தொழிற்துறைத் தொழிற்சங்கங்களின் மிகப் பெரும் பெரும்பான்மை மஞ்சள் எகிப்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பினால் (ETUF) கட்டுப்படுத்தப்பட்டன. பாட்டாளி வர்க்கம் ETUF வழியாகப் போராடவில்லை, மாறாக அதனை எதிர்த்துத் தான் போராடியது. உண்மையில், முதலாவது போராட்டங்களின் போது, ETUF தலைவரான ஹூசைன் மொகவேர் தொழிற்சங்க நிர்வாகிகளிடம், அவர்கள்இந்த சமயத்தில் தொழிலாளர்கள் எல்லா ஆர்ப்பாட்டங்களிலும் பங்குபெறுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அத்துடன் போராட்டங்களில் கலந்துகொள்ள தொழிலாளர்கள் செய்யும் முயற்சிகளை அவர்கள் தன்னிடம் எந்நேரமும் உடனடியாகத் தெரிவித்து வர வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

ஜனநாயகமில்லாத அதிகாரத்துவ அமைப்புகளும் கூட தொழிலாள வர்க்கத்துக்கு போதுமானதே என்பது தான் அலெக்சாண்டரின் பிற்போக்குத்தனமான வாதத்தின் மையக் கருத்தாக இருக்கிறது. அதன் அர்த்தம், அவர் விளக்குவது போல, புரட்சிகர சோசலிஸ்டுகளும் ஒத்த மற்ற கட்சிகளும்  “கொஞ்ச மட்டத்திற்கேனும் இடதின் முன்முயற்சிகளாக இருக்கின்ற அமைப்புகளுடன் மட்டும் தங்களை மட்டுப்படுத்திக் கொள்ள அவசியமில்லை. அவர் தொடர்ந்து சொல்கிறார், “மாறாக, அனைத்திற்கும் மேல் பரந்த மக்கள் எங்கிருக்கிறார்களோ அந்த அமைப்புகளுடன் என்பதே இதன் அர்த்தமாகும்.

முஸ்லீம் சகோதரத்துவம் அல்லது காமா இஸ்லாமியா போன்ற வலதுசாரிக் குழுக்களுடன் (அல்லது அவற்றுக்கு உள்ளும் கூட) புரட்சிகர சோசலிஸ்டுகளும் இணைந்து வேலை செய்ய முடியும், வேலை செய்ய வேண்டும் என்பது தான் சந்தேகமின்றி அவர் சொல்ல விழையும் முடிவாக இருக்கிறது. இத்தகைய கூட்டணிகள் அவற்றின் வலதுசாரிக் குணத்தின் மீதான மார்க்சிச விமர்சனம் எதிலும் சிக்கிக் கொள்வதில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அலெக்சாண்டர் வலியுறுத்துகிறார். “குறுங்குழுவாதம் என்கிற தொற்றுக்கிருமி தொழிலாளர்களது இயக்கத்தை தொற்றி உதாரணத்திற்கு அவர்களது தலைவர்களை தோற்கடிப்பதற்கு அவசியமான ஒற்றுமையை பலவீனப்படுத்துவதை புரட்சிகர சோசலிஸ்டுகள்  தடுத்துநிறுத்த வேண்டும் என்று அவர் கோருகிறார்

தணிக்கைக்கும் தடைக்கும் அதிக மறைப்பில்லாத அழைப்பு தான் இது. அரசியல் விமர்சனத்திற்கும் தொழிற்துறைப் போராட்டங்கள் அல்லது வீதி ஆர்ப்பாட்டங்களில் தொழிலாளர்களின் ஒற்றுமையை உடைப்பதற்கும் சம்பந்தமில்லை. அது தந்தாவியைத் தோற்கடிப்பதற்கும், இராணுவ ஆட்சிக் குழுவைத் தூக்கியெறிவதற்கும், எகிப்திலும் சர்வதேசரீதியாகவும் சோசலிசத்திற்காகப் போராடுவதற்கும் ஒரு முன்னோக்கினை வழங்குகிறது. இதற்கு போலி இடதுகட்சிகள் வலதுசாரிகளுடன் கொள்ளும் கூட்டணிகளை மதிப்பிழக்கச் செய்யும் ஒரு அரசியல் போராட்டம் அவசியமாகிறது. அதைத் தடுக்கத்தான்குறுங்குழுவாதம் என்கிற ஒன்றுக்கு எதிராக அலெக்சாண்டர் ஒரு முன்கூட்டிய தாக்குதலாக உள்ளது.  

தொழிலாள வர்க்கத்தில் சோசலிசம் மற்றும் மார்க்சிசத்திற்காகப் போராடும் ஒரு கட்சியைக் கட்டுவதான முன்னோக்கை எகிப்திய போலி-இடது ஒருமனதாக நிராகரிக்கிறது. புரட்சிகர சோசலிஸ்டுகள் தொழிலாளர்கள் ஜனநாயகக் கட்சி (WDP) என்கின்ற ஒன்றை நிறுவியிருக்கிறது, அதன்மூலம் அது முதலாளித்துவ ஆதரவு அடிப்படையில் உறுப்பினர்களைச் சேர்க்க நம்பிக்கை கொண்டுள்ளது. தொழிலாளர்கள் ஜனநாயகக் கட்சி ஒரு சோசலிசக் கட்சி அல்ல ஏனென்றால் தொழிலாளர்கள்சோசலிசத்தை ஆதரிக்கத் தயாராக இல்லை என்று புரட்சிகர சோசலிஸ்டுகளின் தலைவரான கமால் கலீல் வலியுறுத்தினார்.

ராக்டிட்டைப் -Tagdid- பொறுத்தவரை, அதுவும் அதேபோன்றே வலியுறுத்துகிறது: “தீவிரமயப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் இடது சார்பு கொண்ட ஆர்வலர்களின் பெரும்பான்மையானவர்கள் ஒரு சிறிய லெனினிச புரட்சிகர சோசலிசக் குழுவுக்குச் சொந்தமாக இருக்க விரும்ப மாட்டார்கள்.”

ராக்டிட் தலைவர்கள் போன்ற போலி இடது ஆர்வலர்கள் ஒரு மார்க்சிசக் கட்சியில் பங்கேற்க தங்களுக்கு ஆர்வமில்லை என்று கூறும்போது, அவர்கள் உண்மையையே உரைக்கின்றனர். ஒரு சோசலிச இயக்கம் வெகுஜனக் கட்சியாக இல்லாமல் ஒரு சிறிய அமைப்பாக இருப்பதால் அதில் சேர தொழிலாளர்கள் விரும்ப மாட்டார்கள் என்று கூறும் அவர்களது அறிக்கைகள் மறுபக்கத்தில் ஏமாற்றுவதற்கும் அரசியல் விரக்தியை விதைப்பதற்குமான முயற்சியாகவே இருக்கின்றன.

முபாரக்கை தூக்கிவீசியதில் தொழிலாள வர்க்கம் புரட்சிகர நடவடிக்கைகளுக்கான தனது தயார்நிலையைக் காட்டியிருப்பதோடு எந்த மட்டத்திற்குதீவிர இடதின் நெடுநாள் அவநம்பிக்கைவாதிகள் அரசியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் விருப்பத்தைக் குறைமதிப்பீடு செய்கின்றனர் என்பதையும் விளங்கப்படுத்தியுள்ளது. எப்படியாயினும், நிகழ்வுகளின் புறநிலைத் தர்க்கமானது தொழிலாள வர்க்கத்தை சோசலிசத்தை நோக்கித் தள்ளுகிறது. தொழிலாள வர்க்கம் வறுமை மற்றும் சர்வாதிகாரத்திற்குத் தனது எதிர்ப்பினை  சமூக வெட்டுக்கள் மற்றும் போருக்கான முதலாளித்துவத்தின் செலுத்தத்தை தோற்கடிப்பதற்கான ஒரு நனவான போராட்டமாக மாற்றுவதற்கான ஒரே அடிப்படை இது மட்டுமே.

ஒரு புரட்சிகரக் கட்சி ஆரம்பத்தில் சிறிதாகத் தான் இருக்க முடியும் என்பதால் அது பயனளிக்காது என்பதான கூற்றுக்களை பொறுத்தவரை, அது வெறுமனே செயல்படாமலிருப்பதற்கு அல்லது கட்டற்ற சந்தர்ப்பவாதத்திற்கான ஒரு வாதம் மட்டுமே. போலி-இடது கட்சிகள் உட்பட எந்த எகிப்தியக் கட்சிக்குமே பெரிதான காரியாளர் படை கிடையாது, குறிப்பாகத் தொழிலாள வர்க்கத்தில். ஒரு பெரும் கட்சி கட்டப்பட வேண்டிய தேவை தொடர்ந்து இருந்து வருகிறது, ராக்டிட் மற்றும்  புரட்சிகர சோசலிஸ்டுகளின் அறிக்கைகள் ஒரு சோசலிச அடிப்படையில் அத்தகையதொரு பாரிய தொழிலாளர் கட்சி கட்டப்படுவதற்கான அவர்களது குரோதத்தைத் தான் சுட்டிக் காட்டுகின்றன.

போலி இடதுகள் ஜனநாயகத்துக்காகப் போராடுவதாகக் கூறுவதை அலெக்சாண்டரின் கருத்துகள் உடைத்தெறிகின்றன. புரட்சிகர சோசலிஸ்டுகள் மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சியைப் பொறுத்தவரைஜனநாயகமில்லாத, அதிகாரத்துவ அமைப்புகளே தொழிலாளர்களுக்கு போதுமானதே. ஒரு இராணுவ சர்வாதிகாரம் எகிப்துக்குப் போதுமானதே என்றும் அவர்கள் வெளிப்பட நம்புகிறார்கள். இராணுவ ஆட்சிக்குழு நடுத்தர உயரடுக்கினருக்கு வழங்குகின்ற இலாபகரமான  “விரிவடைந்த ஜனநாயகத்திற்கான இடம்தான் அவர்கள் பாதுகாக்கும் ஒரே இலக்கு.

மேற்கத்திய ஏகாதிபத்தியமும் எகிப்தின் நடுத்தர வர்க்க எதிர்ப்பும்

இந்தவிரிவடைந்த ஜனநாயக அளவு எகிப்தின் வசதிபடைத்த நடுத்தர வர்க்கத்திற்கு அளிக்கக் கூடிய வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டால் புரட்சிகர சோசலிஸ்டுகள் செய்தியாளர்களுக்கு புதிதாகக் கிட்டியிருக்கும் பிரபலம் என்பது பனிச்சிகரத்தின் நுனி மட்டுமே. போலி இடதுகள் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக கழுத்தை நெரிப்பதில் ஒரு மிகப் பெரும் பாத்திரத்தைக் கையில் கொண்டிருப்பதால், மத்திய கிழக்கில் புரட்சியைத் தடுத்து நிறுத்தும் கவலையில் இருக்கும் மேற்கத்திய சக்திகள் இந்த சமூக அடுக்கிற்குள் நிதிகளைப் பாய்ச்சுகின்றன. இந்த சக்திகளும் இந்த மேற்கத்திய, குறிப்பாக அமெரிக்க, பணமழையில் நனைவதற்கு ஓடோடிச் சென்று முந்துகின்றன.

மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கும் எகிப்திய நடுத்தர வர்க்கஎதிர்ப்புக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்படும் வர்க்க நலன்களின் மீது இந்தக் கூட்டணி கட்டப்படுகிறது. இரண்டுமே இராணுவ ஆட்சிக்குழு ஜனநாயகத்தை உருவாக்கும் என்பதான பிரமைகளைத் தள்ளிவிடுவதன் மூலமாக தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கவும் அரசியல்ரீதியாகச் சிதறடிக்கவும் முனைகின்றன. ஏகாதிபத்தியம் இந்த நடுத்தர வர்க்க அடுக்குகளுக்குக் கொட்டிக் கொடுக்கிறது, அல்லது இன்னும் பச்சையாகச் சொன்னால், அவர்களுக்குக் கையூட்டு வழங்கியிருக்கிறது

இவ்வாறாக, ஏப்ரல் மாதத்தில், எகிப்துக்காய் புதிதாய் நியமிக்கப்பட்ட அமெரிக்கத் தூதரான ஆன் பேட்டர்சன்பல்வேறு அரசு சாரா அமைப்புகளுக்கும் நாட்டின் அரசியல் வாழ்வில் அவர்கள் பங்கேற்பதற்கு உதவி செய்யும் வகையில் 105 மில்லியன் டாலர் தொகையை அமெரிக்கா ஒதுக்கியிருப்பதாக அறிவித்தார். ஏற்கனவே 1000 நிதி விண்ணப்பங்கள் எகிப்திய அமைப்புகளிடம் இருந்து அமெரிக்க அதிகாரிகளுக்கு வந்து சேர்ந்திருப்பதாக தகவல்களை மேற்கோளிட்டு ஜெருசலேம் போஸ்ட்  தெரிவித்திருந்தது

இத்தகைய நிதியாதாரம் சில காலமாகவே அமெரிக்க ஆதரவு அரசு-சாரா நிறுவனங்களுக்குக் கிடைத்தே வந்திருக்கிறது. புஷ் நிர்வாகத்தின் இரண்டாவது பணிக்காலத்தில் (2005-2009) அமெரிக்கா எகிப்துக்கான அதன் பொதுத்தேவைக்கான நிதியாதாரத்தை உள்கட்டமைப்புத் திட்டங்களில் இருந்து விலக்கிதேர்தல்களைக் கண்காணிப்பது மற்றும் மனித உரிமைச் சூழலை அளவிடுவது ஆகிய துறைகளில் வேலை செய்யும் பொது சமூக அமைப்புகளை வலுப்படுத்துவதை நோக்கித் திருப்பியதாக சூயஸ் கனால் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கமால் ஜஹ்ரானை மேற்கோள் காட்டி அல்-அஹ்ரம் தெரிவித்தது.

ஆண்டுக்கு 1.3 பில்லியன் டாலர் தொகையை அமெரிக்காவிடம் இருந்து நிதியாதாரமாகப் பெறும் அதே எகிப்திய இராணுவம் எகிப்தியப் புரட்சி மொத்தமாய் ஒரு அயல்நாட்டு சதி என்று கூறி தன் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை நியாயப்படுத்த அரசு சாரா நிறுவனங்களுக்கு அமெரிக்கா அளிக்கும் நிதியாதாரத்தையே வெறுப்புடன் மேற்கோள் காட்டுகிறது.

இது அபத்தமானது என்பதில் சந்தேகமில்லை. மில்லியன்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தான் புரட்சியில் பிரதான சக்தியாக இருக்கிறதே அன்றி, போலி-இடது கட்சிகளின் சில ஆயிர உறுப்பினர்கள் அல்ல. ஆயினும், மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கும் எகிப்திய நடுத்தர-வர்க்க குழுக்களுக்கும் இடையிலான உறவுகள் மறுக்க முடியாத அளவுக்கு பட்டவர்த்தனமாகவே இருக்கின்றன. மற்றும் ஆகஸ்ட் 12 அன்று சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகமையின் (USAID) எகிப்துக் கிளையின் தலைவர் இராஜினாமா செய்யத் தள்ளப்பட்டார்

மேற்கத்திய சக்திகளுக்கும் எகிப்திய போலி-இடது கூறுகளுக்கும் இடையில் குறிப்பிடத்தகுந்த உறவுகள் -நிதியியல் உறவுகள் மட்டுமல்ல செயல்பாட்டு உறவுகளும்- இருப்பது தெளிவாய் இருக்கிறது. இவ்வாறாய், ஏப்ரல் 6 இளைஞர் இயக்கத்தின் சில உறுப்பினர்களுக்கு ஓட்போர் (Otpor) என்னும் சேர்பிய அமைப்பின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டிருந்ததாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்தது. 2000 ஆவது ஆண்டில் சேர்பிய ஜனாதிபதியான ஸ்லோபோடான் மிலோசேவிக்குக்கு எதிராக நேட்டோ ஆதரவுடனான இராணுவக் கவிழ்ப்புக்கு வழிகாட்டுவதில் உதவிய ஒரு குழுவான இந்த ஓட்போர், கிழக்கு ஐரோப்பாவில் மேற்கத்திய ஆதரவு ஆட்சிகளை அமர்த்திய (குறிப்பிடத்தக்கவை ஜோர்ஜியா (2003) மற்றும் உக்ரைன் (2004)) அரசியல் பதவிக்கவிழ்ப்புவண்ணப் புரட்சிகளின் ஏற்பாட்டாளர்களுக்கு பயிற்சியளித்தது.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட 2008 டிசம்பர் காலத்தின் அமெரிக்க இராஜதந்திர இரகசிய தகவல் ஒன்று ஏப்ரல் 6 தலைவர்களுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையில் நேரடி உறவுகள் இருந்ததை உறுதிசெய்கிறது. வெளிப்படையாக ஏப்ரல் 6 இயக்கத்துடன் நன்கு தொடர்புபட்ட உறுப்பினர் ஒருவர் கெய்ரோவில் இருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் எகிப்தியஎதிர்ப்பு பற்றிய விரிவான விபரங்களை வழங்கியதாக அந்த கேபிள் தெரிவிக்கிறது. பெயர் மாற்றப்பட்ட இந்த நபர் அமெரிக்காவில் நடந்தஇளைஞர் இயக்கங்களின் கூட்டணி உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு விட்டு அச்சமயத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பல்வேறு முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி விட்டு அங்கிருந்து திரும்பியிருந்தார்

அச்செய்தித்தகவல் கூறியது: "வப்து, நாசரிய, கராமா, மற்றும் தகாமு கட்சிகள், மற்றும் முஸ்லீம் சகோதரத்துவம், கிஃபாயா, மற்றும் புரட்சிகர சோசலிஸ்டுகள் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளும் திட்டமிடப்பட்டிருக்கும் 2011 ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன்பாக ஜனாதிபதிப் பதவியின் அதிகாரத்தை பலவீனப்படுத்தி பிரதமர் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வலிமையைக் கூட்டும் வகையிலான  ஒரு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு உருமாறுவதற்கான ஒரு எழுதப்படாத திட்டத்திற்கு ஆதரவளிக்க ஒப்புக் கொண்டுள்ளன என்று [பெயர் மறைக்கப்பட்டது] கூறினார். [பெயர் மறைக்கப்பட்டது] கூறுவதன் படி, 2011 தேர்தல்களுக்கு முன்பாக ஒரு இடைக்கால அரசாங்கத்திற்கு இராணுவம் மற்றும் போலிசின் ஆதரவைப் பெறுவதில் எதிர்க்கட்சிகள் ஆர்வமாய் இருக்கின்றன. இந்தத் திட்டம் மிகவும் முக்கியமானது  என்பதால் எழுத்துபூர்வமாக வைக்க இயலாது என்று [பெயர் மறைக்கப்பட்டது] திட்டவட்டமாகத் தெரிவித்தார்.”

இச்செய்தி மிகவும்சரியாக இருந்தால்,  அச்சமயத்தில் இதற்கும் பல அமெரிக்க இராஜதந்திர அதிகாரிகளைப் போலவே அரசின் தலைமையில் தனது மகன் கமாலைக் கொண்டு அமர்த்தும்  முபாரக்கின் திட்டம் பிடிக்காதிருந்த எகிப்திய இராணுவத்தின்  பிரிவுகளுடன் போலி-இடதுகள் ஒரு கூட்டணியை வடிவமைத்துக் கொண்டிருந்திருந்ததாய் தோன்றுகிறது. விக்கிலீக்ஸ் தகவல்களில் பெயர் குறிப்பிடப்பட்ட புரட்சிகர சோசலிஸ்டுகள், டகாமு மற்றும் பிற கட்சிகள் இந்த வெளியீடுகள் குறித்து இதுவரை கருத்துத் தெரிவித்திருக்கவில்லை.  

ETUF உடன் இணைப்பில்லாதசுயாதீனமான தொழிற்சங்கங்கள் என்பதானவற்றை அமைக்கும் திட்டங்கள் என்கிற போலி-இடதுகளின் இன்னொரு முன்முயற்சியும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தால் ஆதரவளிக்கப்படுகிறது. பிப்ரவரி 23 செய்தியாளர் கூட்டமொன்றில், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் இதனை வெளிப்படையாக உறுதி செய்தார்: “அநேகரும் அறிந்ததைப் போல, அமெரிக்கா எகிப்தில் பொதுமக்களின் சமூகத்தை ஆதரித்தது. தொழிற்சங்க ஒழுங்கமைப்புக்கு ஆதரவான, ஆட்சிக்கான அரசியல் எதிர்ப்பின் சார்பாய் ஏற்படுத்தப்படும் ஒழுங்கமைப்புக்கு ஆதரவான அரசாங்கத்தின் அதிருப்தியைச் சம்பாதித்த உதவிகளை நாங்கள் அளித்தோம். அதெல்லாம் பல வருடங்களுக்கு முன்பே.” 

மே மாதத்தில், பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) உடன் இணைப்பு கொண்ட பிரான்சின் SUD (ஒற்றுமை, ஐக்கியம், ஜனநாயகம்) தொழிற்சங்க நிர்வாகிகள் எகிப்துக்கு விஜயம் செய்தனர். “சுயாதீனமான தொழிற்சங்கங்களை ஊக்குவித்த அவர்கள் எகிப்தில் அவற்றைக் கட்ட முயலும் குழுக்களைச் சந்தித்துப் பேசினர்.

எகிப்தில்சுயாதீனமான சங்கங்களைக் கட்ட முயலும் முக்கிய அரசு சாரா அமைப்பான CTUWS (தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களது சேவைகளுக்கான மையம்) தனது நிதியாதாரத்தை யூரோ-மெஹ்ரேப் தொழிற்சங்கக் கூட்டணியிடம் (SUD, ஸ்பானிய CGT, மற்றும் அல்ஜீரிய SNAPAP ஆகியவை இதில் உட்படுகின்றன), ஐரோப்பிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பிடம், மற்றும் அமெரிக்காவின் AFL-CIO விடம் இருந்து பெறுவதாக SUD விளக்கியது.

புதிய தொழிற்சங்கத் திட்டங்களில் எகிப்திய தொழிலாளர்கள் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். அவற்றைக் கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிற ஒரு வேலை ஆய்வாளரும் ராக்டிட் உறுப்பினருமான ஃபட்மா ரமலானை SUD அறிக்கை மேற்கோள் காட்டியது: “எங்களுக்கு அடித்தளமாகக் கொள்வதற்கென எங்களுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கவில்லை, இன்னும் மோசமாய், தொழிற்சங்கங்களின் நோக்கத்தின் மீது தொழிலாளர்களுக்கு ஐயமேற்படுத்தும் வகையில் ஒரு மோசமான பாரம்பரியம் தான் இங்கே இருக்கிறது. பழைய தொழிற்சங்கங்களில் இருந்து எவ்வாறு இவை மாறுபட்டு இருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்வது அவர்களுக்கு ரொம்பவும் சிரமமான காரியமாகவே இருக்கிறது.”

அமெரிக்காவின் திட்டங்களை தொழிலாளர்களிடம் விற்கும் போலி-இடது SUD அதிகாரத்துவவாதிகளை விடவும் எகிப்திய தொழிலாளர்கள் சமூக யதார்த்தத்தை மிகச் சரியான வகையிலேயே புரிந்து கொள்கின்றனர்.

தொழிலாள வர்க்கம் இராணுவ ஆட்சிக்குழுவால் ஆட்சி செய்யப்பட்டு, வேலையிடங்களில் இராணுவ ஆட்சிக்குழுவின் மஞ்சள் தொழிற்சங்கங்களாலோ, அல்லது அமெரிக்காவில் இருந்து இராணுவ ஆட்சிக்குழுவை ஆதரிப்போரால் நிதியாதாரம் அளிக்கப்படும்சுயாதீனமான தொழிற்சங்கங்களாலோ கட்டுப்படுத்தப்படுகின்ற வரை தொழிலாளர்களின்புதிய நிலைமைகள் பழைய நிலைமைகளில் இருந்து மாறுபட்டதாய் இருக்கப் போவதில்லை. தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் அதிமுக்கியமான பணி இராணுவ ஆட்சிக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த புதிய தொழிற்சங்கங்களை உருவாக்குவது அல்ல, மாறாக இராணுவ ஆட்சிக்குழுவைத் தூக்கியெறிவதும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் தான். எகிப்திய மற்றும் உலகப் பொருளாதாரத்தின் ஆதாரவளங்களை உழைக்கும் மக்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து வைப்பது மட்டுமே முபாரக் மற்றும் அமெரிக்காவால் மேற்பார்வை செய்யப்படும் சமூக வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆதாரவளங்களை வழங்கும்

போலி-இடதுகள் புரட்சியை எதிர்ப்பதற்கு எவ்வாறு மார்க்சிசத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றனர்

ஒரு இடதுசாரிப் போக்காக போலி-இடது நாடகமாட முடிகிறதென்றால் அதற்கு ஒரு முக்கியக் காரணியாக இருப்பது அது பயன்படுத்தும் சோசலிச வார்த்தைஜாலமாகும். எனினும் அது மார்க்சிசத்தின் வரலாற்றுக் கோட்பாடுகள் மற்றும் புரட்சிகர உள்ளடக்கத்தை மறுதலிக்கவே அதை மேம்பட்ட வகையில் செய்கிறது. பாட்டாளி வர்க்கத்திற்கு புரட்சிகரப் போராட்டத்தில் நடவடிக்கையில் இறங்குவதற்கு வரலாற்றுரீதியாய் அபிவிருத்தி செய்யப்பட்ட வழிகாட்டியாய் மார்க்சிசம் இருக்கின்ற சாட்சாத் அந்தக் காரணத்தால் தான் போலி இடது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதனைத் திரிக்கவும், முரண்படவும், தாக்கவும் தள்ளப்படுகிறது

இராணுவ ஆட்சிக்குழுவுக்கான அதன் ஆதரவை மார்க்சிச அகராதிகளில் இருந்து எடுத்த சொற்றொடர்களைக் கொண்டு மறைக்க முயலும் அதன் முயற்சிகளின் மூலம் போலி-இடது தனது அறியாமையையும் தவறான விசுவாசத்தையும் தான் வெளிப்படுத்துகிறது. இந்த வகையில் தான், ராக்டிட்டின் ஃபட்மா ரமலான், SUD நிர்வாகிகளிடம் பேசுகையில், எகிப்திய சோசலிசக் கட்சியின் ஃபத் அல்லா மஹ்ரஸை மேற்கோள் காட்டினார்: “ஒரு பக்கம் வீதிகளிலும் இன்னொரு பக்கம் இராணுவத்திலுமாய் நாம் இரட்டை அதிகாரத்தின் சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதையே அவர் சொல்ல விரும்புகிறார்.” 

உண்மையில் மார்க்சிசவாதிகள் பேசும் பொருளில் இரட்டை அதிகாரம் என்பது  எகிப்தில் இல்லை. எகிப்தின் சூழ்நிலைக்கான பொறுப்பு பெருமளவில் ராக்டிட், புரட்சிகர சோசலிஸ்டுகள் மற்றும் இதுபோன்ற குழுக்களையே சார்ந்ததாகும். அவை தான் வெகுஜனக் குழுக்களைக் கலைக்கத் தலையிட்டு எகிப்திய இராணுவக் குழுவைத் தூக்கியெறியப் போராடுகின்ற ஒரு புதிய அரசு அதிகாரத்திற்கான அடிப்படையை உருவாக்கியிருக்கத்தக்க தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான அமைப்புகளின் அபிவிருத்தியைத் தடுத்து விட்டன.

இந்த உண்மையை வீதி ஆர்ப்பாட்டங்களைஇரட்டை அதிகாரம் என அழைத்து மங்கச் செய்ய முயலும் ராக்டிட்டின் முயற்சி ஒரு குற்றம்மிக்க தப்பித்தல் நடவடிக்கையாகும். ஒடுக்கப்பட்ட மக்களின் விருப்பங்களுக்கும் முதலாளித்துவ அரசின் கொள்கைக்கும் இடையேயுள்ள தவிர்க்கவியலாத முரண்பாடு இரட்டை அதிகாரத்தை உள்ளடக்கியதில்லை என்று லியோன் ட்ரொட்ஸ்கிரஷ்யப் புரட்சியின் வரலாறு படைப்பில் குறிப்பிடுகிறார். “சமூகத்தில் எல்லா இடங்களிலும் எதிரெதிரான வர்க்கங்கள் இருக்கின்றன, அதிகாரம் பறிக்கப்பட்ட ஒரு வர்க்கம் தவிர்க்கவியலாமல் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு அரசாங்கப் பாதையை தனக்குச் சாதகமாக திருப்புவதற்குப் முனைகிறது. அதற்காக உடனே சமூகத்தில் இரண்டு அல்லது அதற்குக் கூடுதலான சக்திகள் ஆட்சிபுரிகின்றன என்று அர்த்தம் வந்து விடுவதில்லை என்று அவர் விளக்குகிறார்

இரட்டை அதிகாரம் என்பதை ட்ரொட்ஸ்கி பின்வருமாறு விளக்குகிறார்: “ஒரு புரட்சிக்கான வரலாற்றுத் தயாரிப்பு புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் கொண்டுவரக் கூடிய ஒரு சூழ்நிலையில், புதிய சமூக அமைப்புமுறையை உருவாக்க அழைக்கப்பட்டிருக்கும் வர்க்கமானது, இன்னும் நாட்டின் எஜமானனாக ஆகி விடவில்லை என்றாலும் கூட, உண்மையில் தனது கரங்களில் அரசு அதிகாரத்தின் கணிசமான பங்கினை குவியச் செய்திருக்கிறது, அதேவேளையில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ எந்திரம் இன்னும் பழைய பிரபுக்களின் கரங்களில் தான் இருக்கிறது. அது தான் ஒவ்வொரு புரட்சியிலும் ஆரம்ப இரட்டை அதிகாரம் ஆகும்.”

இங்கு தான் ஒருவர் கேட்க வேண்டியுள்ளது: எகிப்தின் தொழிலாளர்கள் தமது கரங்களில்அரசு அதிகாரத்தின் கணிசமான பங்கினை அல்லது குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பங்கினைக் கொண்டிருக்கிறார்களா? புரட்சிகர ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் உருவாக்கிய சோவியத்துகள் (குழுக்கள்) 1917 இல்  முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்திற்குப் போட்டி அதிகார மையத்தினை உருவாக்கி இறுதியில் போல்ஷிவிக் கட்சியின் தலைமையின் கீழ் அந்த அரசாங்கத்தைத் தூக்கியெறிந்தனவே, அதுபோன்ற அமைப்புகளை அவர்கள் உருவாக்கியுள்ளனரா? துரதிர்ஷ்டவசமாக, இல்லை என்பது தான் பதிலாக உள்ளது

முபாரக் மற்றும் அவரது குண்டர்களுக்கு எதிரான போராட்டத்தின் போது தன்னெழுச்சியாக உருவாக்கப்பட்ட மக்கள் குடியிருப்பு வெகுஜனக் குழுக்கள் அத்தகைய அமைப்புகளாக அபிவிருத்தியுறும் சாத்தியத்தைக் கொண்டிருந்தது. ஆயினும், நாம் கண்டது போல, போலி இடது குழுக்கள் இந்த குழுக்களை உடைப்பதற்காக சண்டையிட்டன. முஸ்லீம் சகோதரத்துவத்தின் உறுப்பினர்கள் மற்றும் போலி இடது குழுக்களின் சொந்த முன்னணி ஆட்களைக் கொண்டு நிரப்பப்பட்ட குழுக்களுக்கு வழிவிடுமாறு அந்தக் குழுக்களிடம் வலியுறுத்தப்பட்டது

எகிப்தில் இரட்டை அதிகாரம் இல்லாததின் காரணம் தொழிலாளர்கள் அதற்குத் தயாராக இல்லை என்பதால் அல்ல, மாறாக எகிப்தின் அரசியல் அமைப்புகள் (எல்லாவற்றுக்கும் முதலாய் போலி இடது கட்சிகள்) அதற்கு எதிராகப் போராடிய காரணத்தால் தான். அதற்குப் பதிலாக தொழிலாளர்கள் எகிப்திய இராணுவ சர்வாதிகாரத்தால் வழங்கப்பட்டவிரிவாக்கப்பட்ட ஜனநாயக அளவுடன் தங்களை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இவை தொழிலாளர்களை வற்புறுத்தின.

எகிப்தியப் புரட்சியும், மற்ற பிறவற்றைப் போலவே, இராணுவம் பற்றிய  பிரச்சினையை அசாதாரணமான கூர்மையுடன் முன்நிறுத்தியது. தளபதிகள் தான் அரசை நடத்துகிறார்கள், பொருளாதாரத்தின் பெரும் பகுதிக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள், அமெரிக்காவுடன் கூட்டுச் சதியில் ஈடுபடுகிறார்கள், அத்துடன் கட்டாய இராணுவச் சேர்க்கையின் பெரும் அங்கங்களுக்கு (இறுதி ஆய்வில் ஒரு வெகுஜன எழுச்சியை இரத்தத்தில் மூழ்கடிக்கத் தேவையான அளவு பெரும் சக்தியாக எகிப்தில் இவை மட்டுமே இருக்கின்றன) உத்தரவிடும் அதிகாரம் கொண்டுள்ளனர். இராணுவத்தினர்களை சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்திற்கு வென்றெடுப்பதும் இராணுவப் படையதிகாரிகளின் அதிகாரத்தை நொருக்குவதும் எகிப்தில் ஜனநாயகத்திற்கான எந்த ஒரு தீவிரமான போராட்டத்திற்கும் அவசியப்பணியாக இருக்கிறது.

அத்தகையதொரு முன்னோக்கினை போலி-இடது எதிர்ப்பது ஏன் என்பதற்கான அடிப்படையான காரணம் அல் ஹமாலவே மற்றும் பிற புரட்சிகர சோசலிஸ்டுகளின் உறுப்பினர்களின் கருத்துக்களில் தெளிவாய் இருக்கிறது: அவர்கள் இராணுவ ஆட்சிக்குழுவையும் இராணுவப் படையதிகாரிகளையும் ஜனநாயகத்திற்கான ஒரு உருமாற்றத்தின் அச்சாணியாகக் காண்கிறார்கள். அந்த நிலைப்பாட்டில் இருந்து சிப்பாய்கள் மீதான படையதிகாரிகளின் அதிகாரத்தை அழிப்பதற்கான ஒரு போராட்டம் அவர்களுக்கு அபாயகரமானதாகத் தெரிகிறது. அவர்களைப் பொறுத்தவரை இது ஜனநாயக உருமாற்றம் என்று அழைக்கும் ஒன்றிற்குத் தலைமை நடத்த போலி-இடது மனதில் கொண்டிருக்கும் இராணுவக் கொடுங்கோலர்களை அந்நியப்படுத்தும் ஆபத்தைக் கொண்டுள்ளது.

இராணுவம் மற்றும் அரசைப் பொறுத்தவரை புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் மனோபாவம் என்ன என்பதில் மாபெரும் மார்க்சியவாதிகளின் எழுத்துக்கள் தெள்ளத் தெளிவாய் இருக்கின்றன. லெனின் தனதுஅரசும் புரட்சியும் நூலில்தொழிலாள வர்க்கம்ஏற்கெனவே தயார்நிலையில் உள்ள அரசு எந்திரத்தை உடைத்து நொருக்க வேண்டும், வெறுமனே அதனைப் கைப்பற்றிக் கொண்டிருப்பதோடு தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது என்கின்ற மார்க்சின் கருத்தை ஆமோதிக்கும்விதமாய் மேற்கோளிடுகிறார்

இராணுவ விடயத்தில் ஃபிரெடரிக் ஏங்கல்ஸ் 1851 செப்டம்பர் 26 அன்று காரல் மார்க்ஸ்க்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார்: “உருக்குலைக்கப்பட்ட இராணுவமும் ஒழுங்குவிதிமுறைகளின்  முழுமையான நிலைமுறிவும் ஒவ்வொரு வெற்றிகரமான புரட்சிக்கும் நிபந்தனையாகவும் அத்துடன் அதன் விளைவாகவும் இருந்து வந்திருக்கின்றன.”

இராணுவ ஆட்சிக்குழுவுக்கும் எகிப்தின் இராணுவத் தலைமைக்கும் போலி-இடது அளிக்கும் ஆதரவு எகிப்திய ஆளும் வர்க்கத்துத்துடனும் உலக ஏகாதிபத்தியத்துடனுமான அதன் உறவுகளை மட்டும் பிரதிபலிக்கவில்லை, மாறாக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்திற்கு மார்க்சிசம் அளிக்கும் முக்கியத்துவம் குறித்து அது கொண்டிருக்கும்  ஆழமான குரோதத்தையும் தான் ஆன் அலெக்சாண்டர்சூயஸும் அரபு தேசியவாதத்தின் உயர்ந்த அலையும் என்கின்ற தனது 2006 ஆம் ஆண்டுக் கட்டுரையில் தெளிவாக்குவதைப் போல, புரட்சியில் தொழிலாள வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம் குறித்த மார்க்சிசத்தின் வலியுறுத்தல் தவறானது என்பதே சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் போலி-இடதுகளும் நம்புவதாகும்.

1952ல் ஃபரூக் அரசருக்கு எதிராக இராணுவப் புரட்சியின் மூலம் அதிகாரத்திற்கு வந்து எகிப்தில் பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, 1956 சூயஸ் நெருக்கடிக்குக் கவனத்தைக் கொண்டுவந்த நாசரின் பாத்திரத்தை அவர் மேற்கோள் காட்டுகிறார். அந்த சமயத்தில் நாசர் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார், இந்த கால்வாயை படைவலிமை மூலம் மீண்டும் எடுத்துக் கொள்வதற்கு பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் செய்த முயற்சிக்கு எதிராக எகிப்து போராடியது சூயஸ் துறைமுகம் மற்றும் அதனைத் தாண்டி வெகுஜன எதிர்ப்பை ஒழுங்கமைப்பதற்கு ஸ்ராலினிச எகிப்துக் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி நாசர் திரும்பினார். ஸ்ராலினிஸ்டுகள் தனது ஆட்சிக்கு எதிராய் எந்த புரட்சிகர எதிர்ப்பையும் ஒழுங்கமைத்து விட மாட்டார்கள் என்று அவருக்கு நம்பிக்கை இருந்தது. வெகுஜன எதிர்ப்புடன் சேர்ந்து சோவியத் தலையீட்டின் அச்சுறுத்தல் மற்றும் அமெரிக்கா தனது அதிருப்தியைக் காட்டுவதற்கு பிரிட்டிஷ் பவுண்டுக்கான தனது ஆதரவை திரும்பப் பெறுவதற்கு எடுத்த முடிவு ஆகியவை எல்லாம் பிரான்ஸ்-பிரிட்டன் ஆக்கிரமிப்பைத் தடுத்துநிறுத்தின.

நாசர் அதிகாரத்தைத் தக்கவைத்திருக்க முடிந்ததென்பது தொழிலாள வர்க்கத்தின் தலைமைப் பாத்திரத்தை வலியுறுத்தி லியோன் ட்ரொட்ஸ்கி சூத்திரப்படுத்தியிருந்த காலனித்துவ நாடுகளில் சோசலிசப் புரட்சிக்கான முன்னோக்கினை செல்தகைமை இழக்கச் செய்துவிட்டது என்பது அலெக்சாண்டரின் வாதம்.

அவர் எழுதுகிறார், “ஜனநாயகப் புரட்சியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதற்குத் திறம்படைத்த ஒரே வர்க்கம் தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதில் ட்ரொட்ஸ்கி லெனினுடன் உடன்பட்டார், ஆனால் அதிகாரத்தைப் பெற்ற பின்னர் தொழிலாள வர்க்கம் தன்னை வெறுமனே ஒரு முதலாளித்துவ ஜனநாயக அரசைக் கட்டுவதுடன் மட்டுப்படுத்திக் கொள்வதென்பது முடியாது என்று வாதிட்டார். பதிலாகஜனநாயகப் புரட்சி உடனடியாக சோசலிசப் புரட்சியாக மேலதிக வளர்ச்சி பெறுகிறது, அதன்மூலம் ஒரு நிரந்தரப் புரட்சியாக மாறுகிறது என்றார். ட்ரொட்ஸ்கியின் கணிப்புகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் நடந்த தேசியப் புரட்சிகளின் அலையில் நிரூபணமிழந்தது. ஒரு நாட்டுக்குப் பின் இன்னொரு நாடாக, பழைய காலனித்துவ ஆட்சிகள் தூக்கியெறியப்பட்டன, தொழிலாள வர்க்கத்தாலோ அல்லது விவசாயிகளாலோ அல்ல. மாறாக, புத்திஜீவித் தட்டின் பிரிவுகளோ அல்லது இராணுவத்தின் பிரிவுகளோ அரசின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதால்.”  

சோசலிச தொழிலாளர் கட்சி  மற்றும் அதன் சர்வதேச சக சிந்தனையாளர்களின் நடுத்தரவர்க்க, தேசியவாதக் கண்ணோட்டத்துக்கு சிகரம் வைத்தது போல் இந்தக் கருத்துரை உள்ளது. அவர்கள் அதிகாரிகளையும் புத்திஜீவிகளையும் தான் வரலாற்றின் உந்துசக்திகளாகப் பார்க்கின்றனர்.  1952ல் எகிப்தில் நாசர் அதிகாரத்திற்கு வந்தார் என்கின்ற உண்மையை ஒரு சோசலிச முன்னோக்கு தவறாக வழிநடத்தப்பட்டதற்கான நிரூபணமாக, இவர்கள் இராணுவப் படைகளின் உயர்மட்டக் குழுவின் இராணுவக் குழுவை நோக்கி, எகிப்திய தேசிய அரசை நோக்கி, மற்றும் அவர்களுக்குப் பின்னால் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை நோக்கி தமது சொந்த நோக்குநிலையை அமைத்துக் கொள்வதற்கான நியாயமாக கையிலெடுத்துக் கொள்கின்றனர்.

அலெக்சாண்டர் கூறுவது போல் உண்மையிலேயே நாசரால் ஜனநாயகப் புரட்சி முழுமையாக நடத்தப்பட்டிருக்குமானால், இன்று, நாசரது அரசியல் வாரிசுகளால் தலைமை நடத்தப்படும் ஒரு ஊழலடைந்த சர்வாதிகாரத்துக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தின் முன்னணிப் படையாக தொழிலாள வர்க்கம் நிற்க வேண்டிய அவசியம் நேர்ந்தது ஏன் என்பதை அவர் விளக்கவில்லை. உண்மையில், 1950களின் எகிப்தின் தொழிலாள வர்க்கம் மீதான ஒடுக்குமுறை தான் ஜனநாயகத்திற்கான எந்தப் போராட்டமும் கருக்கலைப்பு செய்யப்படுவதை அடையாளப்படுத்தியது. அலெக்சாண்டர் இந்தப் பிரச்சினைகளை எல்லாம் ஏன் எழுப்புவதில்லை என்றால் அவரது நடுத்தர-வர்க்க கண்ணோட்டம் அவரை ட்ரொட்ஸ்கி மீதான கோட்பாடற்ற விமர்சனத்திற்கும் நாசரிசம் மற்றும் ஸ்ராலினிசத்திற்கான ஒரு அரசியல் தகவமைவிற்கும் அழைத்துச் செல்கிறது.

வெளிநாட்டில், நாசர் ஆரம்பத்தில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எகிப்து மீது கொண்டிருந்த தனது பிடியைப் பராமரிக்க  செய்த முயற்சிகள் மீது அமெரிக்கா காட்டிய குரோதத்தின் மீதும், அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாய், ஏகாதிபத்தியத் தலையீட்டின் அச்சுறுத்தலை மட்டுப்படுத்த சோவியத் அதிகாரத்துவடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியின் மீதும்  தங்கியிருந்தார். உள்நாட்டில், அவர் எகிப்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தின் மீது தங்கியிருந்தார். இக்கட்சி கிரெம்ளினின் கோட்பாட்டு வழியின் படி அரபு உலகத்தில் சோசலிசப் புரட்சியை எதிர்த்தது. இந்த அரசியல் ஆதரவு காலனித்துவ  ஆட்சிக்குப் பிந்தைய காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சமூகச் சலுகைகள் மூலம் தூண்டிவிடப்பட்டது

அதேசமயத்தில் நாசரின் ஆட்சி தொழிலாளர்களின் சுயாதீனமான போராட்டங்களை நசுக்கியது. முஸ்தபா கமிஸ் மற்றும் முகமது அல்-பக்ரி என்னும் இரண்டு தொழிலாளர்களை, 1952 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற மிஸ்ரு நூற்பாலை வேலைநிறுத்தத்தில் அவர்கள் ஆற்றிய பாத்திரத்திற்காக, அது கழுவேற்றியது. அப்படியிருந்தபோதும் எகிப்திய கம்யூனிஸ்ட் கட்சி அவரை ஆதரித்தது. நாசருக்கான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை மட்டுப்படுத்த முயன்ற அது நாசர் சோசலிசத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டிருப்பதாகக் கூறி 1956ல் அதன் சொந்தக் கலைப்பை நியாயப்படுத்தியது

நாசரது ஆட்சியால் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டங்கள் ஒடுக்கப்படுவதும் அந்த ஆட்சி ஏகாதிபத்தியத்திற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் சமப்படுத்திக் கொள்வதுமான வரலாற்றுக் காலகட்டம் குறைந்த காலமே நீடிக்க முடியுமென நிரூபணமானது. யோம் கிபூர் போருக்குப் பின்னர், அதாவது நாசர் அதிகாரத்திற்கு வந்ததற்கு வெறும் 22 ஆண்டுகளுக்குப் பின்னர், அவரது வாரிசான அன்வர் சதாத் அந்நிய மூலதனத்திற்கு கதவைத் திறந்து விடுவது (Infitah) என்கின்ற ஒரு கொள்கையையும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராஜதந்திர வரிசையின் பக்கம் நிற்பதையும் ஆரம்பித்தார். 1978 ஆம் ஆண்டின் கேம்ப் டேவிட் உடன்படிக்கையில் சதாத் கையெழுத்திட்டதும் இதில் அடங்கும். ஏகாதிபத்தியத்திற்கும் சியோனிசத்திற்கும் எதிரான ஒரு பொதுவான போராட்டத்திற்கு இஸ்ரேலின் பாட்டாளி வர்க்கத்திற்கு எகிப்தின் தொழிலாள வர்க்கம் விடுக்கும் எந்த அழைப்பையும் ஒடுக்குவதான அடிப்படையில் இந்த உடன்படிக்கை இஸ்ரேலுடன் சமாதானத்தை நிறுவியது.    

அமெரிக்காவின் ஆதிக்கத்தின் கீழ் உலக முதலாளித்துவப் பொருளாதாரத்திற்குள் எகிப்து ஒருங்கிணைந்தமையானது தொழிலாள வர்க்கத்தின் சமூக சக்தி மற்றும் அதன் மீதான பொருளாதார ஒடுக்குமுறை இரண்டிலுமே ஒரு மேலதிக வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது. எகிப்திய அரசியல் வாழ்வின் மேற்பரப்பின் கீழ் திரண்டு கொண்டிருந்த இந்த வர்க்க மோதல்கள் தான் இப்போது புரட்சிகரப் போராட்டங்களில் வெடித்துள்ளது, அதன் அதிர்வுகள் உலகெங்கும் பரவியிருக்கிறது.

அலெக்சாண்டரும், சோசலிச தொழிலாளர் கட்சியும் மற்றும் இவர்களது சர்வதேச சக சிந்தனையாளர்களும் அவர்களது குட்டி-முதலாளித்துவக் கண்ணோட்டத்தின் காரணத்தால் ஏகாதிபத்தியம் மற்றும் ஸ்ராலினிசம் குறித்த பிரச்சினைகளில் அமைதி காக்கின்றனர். அரசியல்ரீதியாக நாசர் மற்றும் எகிப்திய இராணுவத்தின் மீது மயக்கம் கொண்டுள்ள இவர்கள் நாசரின் நாட்களில் எகிப்தின் கம்யூனிஸ்ட் கட்சி செய்ததைப் போல தொழிலாள வர்க்கத்தை இராணுவத்திற்கு அடிபணியச் செய்யப் போராடுகின்றனர், இத்தனைக்கும் இன்று எகிப்திய ஆட்சியானது ஏகாதிபத்தியத்திற்கு ஒரு நேரடி முகமையாக இருக்கும் நிலையிலும்

இந்த நோக்குநிலைக்கு 2011 ஆம் ஆண்டின் எகிப்தியப் புரட்சி ஒரு மாபெரும் அடி கொடுத்திருக்கிறது. புரட்சிகரப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம் குறித்த ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தலை இப்புரட்சி உறுதிசெய்துள்ளது. எந்த வகை ஜனநாயகச் சீர்திருத்தத்திற்கும் முழு விரோதமாகவும் ஏகாதிபத்தியத்திற்கு முழு கீழ்ப்படிதலுடனும் இருந்த முபாரக்கின் ஆட்சியைத் தொழிலாள வர்க்கம் தான் தூக்கிவீசியது.

முதலாளித்துவ வர்க்கம் பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் மற்றும் பிரான்சில் நடந்த முதலாளித்துவப் புரட்சிகளில் அது செய்ததைப் போல இனியும் ஜனநாயகப் போராட்டங்களுக்கு தலைமை கொடுக்க அதனால் இயலாது என்பதே ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவம் கூறுவதாகும். பாட்டாளி வர்க்கத்தின் மீது கொண்ட அச்சத்தினாலும் - எகிப்து போன்ற முன்னாள் காலனித்துவ நாடுகளில் - அந்நிய ஏகாதிபத்தியத்தைச் சார்ந்திருக்கும் நிலையாலும் முதலாளிகள் தமது சொந்த நாட்டில் ஜனநாயக ஆட்சியை எதிர்க்கின்றனர். தேசிய மற்றும் சர்வதேசப் பொருளாதாரத்தின் அத்தனை வளங்களையும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு நடத்தப்படுகின்ற உலக சோசலிசப் புரட்சிக்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தின் பகுதியாக மட்டுமே ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட முடியும்

நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை அரசியல் போராட்டத்துக்கு எதிரான ஒரு தத்துவம் போல் சித்தரித்து தொழிலாள வர்க்கத்திற்கு அத்தத்துவத்தின் மேல் நம்பிக்கையில்லாமல் செய்ய முயலுவதே போலி-இடதின் துரோகத்தின் தன்மையாக இருக்கிறது இந்தக் கோடையில் ஒரு இரண்டாம் புரட்சிக்கான கோரிக்கைகள் தொழிலாள வர்க்கத்தில் எழுந்த சமயத்தில், “இரண்டாம் புரட்சி அல்ல மாறாக ஆட்சி வீழும் வரையான ஒரு நிரந்தரப் புரட்சி என்கின்ற தலைப்பில் ஒரு அவப்பெயர் சம்பாதித்த அறிக்கையை புரட்சிகர சோசலிஸ்டுகள் வெளியிட்டது.

ஒரு இரண்டாம் புரட்சிக்கான தொழிலாளர்களது கோரிக்கையை ட்ரொட்ஸ்கிசத்திற்கும் நிரந்தரப் புரட்சித் தத்துவத்திற்கும் எதிரானதாகக் காட்டுவது முழுக்க நேர்மையற்ற செயலாகும். நிரந்தரப் புரட்சியை நனவாக்குவதற்கான போராட்டம் என்பது இராணுவ ஆட்சிக்குழுவைத் தூக்கியெறிவதற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதுப்பித்த தாக்குதலின் வடிவத்தை தான் எடுக்க முடியும். அந்தத் தாக்குதல் தான் ஒருஇரண்டாம் புரட்சிக்கான அழைப்புகள் மூலம் தொழிலாளர்கள் கோரி வந்ததாகும். இந்தப் போராட்டத்தில் போலி-இடது வலதுசாரித் தன்மையுடனும் குட்டி முதலாளித்துவ தன்மையுடனும் மற்றும் மார்க்சிச-விரோதமாகவும் ஒரு தீர்மானகரமான எதிரியாக இருப்பதைத் தொழிலாளர்கள் காண்பர்.  

தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு புதிய அரசியல் தலைமை அவசியம்

எகிப்தியப் புரட்சியின் ஆரம்ப மாதங்கள் தொழிலாள வர்க்கத்தின் பிரம்மாண்டமான சமூக சக்தியை - சர்வாதிகாரிகளைத் தூக்கியெறியும் திறன் பெற்றிருந்தமை, ஒட்டுமொத்த நாடுகளையும் ஸ்தம்பிக்கச் செய்தமை, அரசு ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தன்னை ஒழுங்கமைத்துக் கொண்டமை - எடுத்துக் காட்டியிருக்கின்றன.

ஆயினும் தன்னெழுச்சியான நடவடிக்கையின் வரம்பு எல்லைகளையும் இப்புரட்சி எடுத்துக் காட்டியிருக்கிறது. அரசியல் தலைமை இல்லாத நிலையில், வேலைநிறுத்தக் குழுக்களும் வெகுஜன தற்காப்புக் குழுக்களும் சிதறடிக்கப்பட்டன அல்லது தளர்ந்து போக விடப்பட்டன. அரசியல் முன்முயற்சியை இராணுவ ஆட்சிக்குழுவிற்கும் அதன் ஏகாதிபத்திய சக-சதியாளர்களுக்கும் விட்டுவிடுவதென்பது, இராணுவமும், வங்கிகளும், அரசு எந்திரமும் அவர்களின் கட்டுப்பாட்டில் விடப்படுவதானது.

அடிப்படையில் புரட்சிக்கு குரோதம் காட்டுகின்ற நடப்பு அரசியல் கட்சிகளின் கீழ் புரட்சியானது வெற்றி பெற முடியவில்லை, அல்லது முன்னே செல்லவும் கூட முடியவில்லை. அரசு மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கான இக்கட்சிகளின் ஆதரவு எகிப்தின் ஆளும் வர்க்கம் சுதந்திரமாக, லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்காக ஒரு நவ-காலனித்துவப் போரை நடத்திய மற்றும் இப்போது சிரியா, ஈரான் மற்றும் அவற்றைக் கடந்து போருக்கு அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் தூதுவர்களுடன் சேர்ந்து அடக்குமுறை மற்றும் எதிர்ப்புரட்சி குறித்து சதியாலோசனை செய்வதற்கு விட்டிருக்கிறது

இராணுவப் படைகளின் உயர்மட்டக் குழுவின் இராணுவ ஆட்சிக்குழுவைத் தூக்கியெறிவதற்கும், ஒரு தொழிலாளர் அரசை ஸ்தாபிப்பதற்கும், சோசலிசத்துக்கான சர்வதேசப் போராட்டத்தின் ஒரு பாகமாக மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்தை முன்நிறுத்தவும் எகிப்திய தொழிலாளர்களுக்கு ஒரு புதிய புரட்சிகரக் கட்சி அவசியமாய் உள்ளது.

உலக முதலாளித்துவம், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஏகாதிபத்திய மையங்களில், பெருமந்த நிலை காலத்திற்குப் பிந்தைய மிக ஆழமான பொருளாதாரச் சரிவு என்னும் சதுப்புக்குள் அமிழ்ந்துள்ளது. இது ஒரு உலகளாவிய சமூக நெருக்கடியையும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தில் எழுச்சியுறும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது. ட்ரொட்ஸ்கியும் மற்ற முன்னணி மார்க்சிசவாதிகளும் கருதிப் பார்த்திருந்த மற்றும் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தில் விளக்கியிருந்த ஒரு உலக சோசலிசப் புரட்சிப் போராட்டத்திற்கான புறநிலையான முன்நிபந்தனைகள் ஒன்றுகூடி வந்து கொண்டிருக்கின்றன.   

தொழிலாள வர்க்கத்தின் தலைமை குறித்த நெருக்கடி தான் மையமான தீர்க்கப்படாத பிரச்சினையாக இன்னும் இருக்கிறது. எகிப்தில் புரட்சிகரப் போராட்டத்தின் முதல் மாதங்கள் போலி-இடது கட்சிகளின் மீதான தகர்த்தெறியும் அம்பலப்படுத்தலை அடக்கியிருக்கின்றன. அத்தகையதொரு தலைமையைக் கட்டுவதற்கான அடிப்படையை அவை அடக்கியிருக்கவில்லை, மாறாக தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகர முன்னோக்கைக் கொண்டு மறுஆயுதபாணியாக்குவதற்கு இரக்கமற்ற அரசியல் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு முட்டுக்கட்டையைத் தான் அடக்கியிருக்கிறது.

மேற்கத்திய ஏகாதிபத்தியம், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் இராணுவ ஆட்சிக்குழுவும் என பாட்டாளி வர்க்கத்திற்கு ஆழமான குரோதம் படைத்த வர்க்க சக்திகளுடன் பிணைத்துக் கொண்டுள்ள இவை சோசலிசத்திற்கான ஒரு போராட்டத்தை ஆவேசத்துடன் எதிர்க்கும் கொள்கைகளைப் பின்பற்றுகின்றன, அத்தகைய முன்னோக்குகளை ஊக்குவிக்கின்றன. இவை தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் மீது செல்வாக்கைத் தொடர இயலும் மட்டத்திற்கு தோல்விகளையும் விரக்திகளையும் மற்றும் எதிர்ப்புரட்சி வெற்றிபெறக் கூடிய அபாயத்தையும் உற்பத்தி செய்கின்றன.

இந்தக் கட்சிகள் மிகவும் அரசியல் நனவுடைய தொழிலாளர்கள் மீது கொண்டிருக்கும் செல்வாக்கைத் தகர்ப்பதும் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தைத் தலைமை நடத்த ஒரு புரட்சிகரக் கட்சியை அந்தத் தட்டில்  கட்டி எழுப்புவதும் தான் எகிப்திலும் மற்றும் மத்தியக் கிழக்கு முழுவதிலும் சோசலிச சிந்தனையுடைய தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்கள் முகங்கொடுக்கும் முதற்பணி ஆகும்.

நிரந்தரப் புரட்சித் தத்துவமும் மற்றும், ட்ரொட்ஸ்கிசத்தின் புரட்சிகரத் தொடர்ச்சியையும் மார்க்சிசத்தின் வரலாற்று மற்றும் வேலைத்திட்ட அடித்தளங்களையும் பாதுகாக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடத்தி வருகின்ற போராட்டமும், தான் இதற்கான அரசியல் அடிப்படை ஆகும்.

சர்வதேச புரட்சிகரப் போராட்டங்களின் ஒரு புதிய காலகட்டத்தில் மாபெரும் முதல் அனுபவத்தையே எகிப்துப் புரட்சி குறித்து நிற்பதாய் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உறுதிப்பட நம்புகின்றது. உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் விபரங்களை அளிக்கவும், ஐக்கியப்படுத்தவும் மற்றும் அப்போராட்டங்களுக்கு அரசியல் தலைமை வழங்கவுமான ஒரு அரசியல் அங்கமாகவே அது உலக சோசலிச வலைத் தளத்தை உருவாக்கியுள்ளது. நிரந்தரப் புரட்சியின் முன்னோக்கிற்காகப் போராடவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இணையவும் எகிப்தில், மத்திய கிழக்கில், மற்றும் உலகெங்கிலும் உள்ள வாசகர்களை இது அழைக்கிறது.