சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Warnings from the central bankers’ bank

மத்திய வங்கிகளின் வங்கியிடமிருந்து வரும் எச்சரிக்கைகள்

By Nick Beams
28 June 2011

Use this version to print | Send feedback

உலகளாவிய நிதியியல் அமைப்புமுறையின் மையத்தில் இருக்கும் அழுகலும் சீரழிவும் ஆழமடைந்தும், விரிவடைந்தும் வருகிறது. ஞாயிறன்று வெளியிடப்பட்ட சர்வதேச தீர்வைகள் வங்கியின் (Bank for International Settlements - BIS) ஆண்டறிக்கையிலிருந்து இந்த தீர்மானத்திற்குத் தான் வர முடிகிறது.

சிலநேரங்களில் மத்திய வங்கிகளின் வங்கி என்று குறிப்பிடப்படும் BIS, செப்டம்பர் 2008இல் லெஹ்மென் பிரதர்ஸின் பொறிவிற்கு இட்டு சென்ற உலகளாவிய நிதியியல் அமைப்புமுறையில் நிலவும் அபாயகரமான சமநிலையின்மையைக் குறிப்பிட்டுக் காட்டிய வெகுசில அமைப்புகளில் ஒன்றாக இருந்தது. மற்றொரு நிதியியல் நெருக்கடி உருவாகி வருகிறது என்பதை மூன்று ஆண்டுகளாக அதன் ஆண்டறிக்கைகள் தெளிவாக  குறிப்புகளை அளிக்கின்றன.

மிகக்குறைந்த வட்டிவிகிதங்கள் மற்றும் தலையீடுகள் மூலமாக கடன் சந்தைகளுக்குள் இருந்த வங்கிகளுக்கும், நிதியியல் அமைப்புகளுக்கும் மத்திய வங்கிகள் கொடுத்த பாரிய உதவியிலிருந்து மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்று வெளி வருகிறது. தொடர்ந்து மூன்றாம் ஆண்டாகஅதிகபட்சமாக நெருக்கப்பட்டிருக்கும் நிதியியல் நிலைமைகள்", முக்கிய அபிவிருத்தியடைந்த பொருளாதாரங்களில் நிலவும் சுமார் பூஜ்ஜிய அளவிலான வட்டிவிகிதங்களோடு சேர்ந்து கொண்டுள்ளன. இது உண்மையில் அந்நாடுகள் எந்தளவிற்கு போராட முடியுமோ அதைவிட அதிகப்படியாக திரும்பதிரும்ப வரும் தொல்லைகளின் ஓர் அபாயத்தைக் கொண்டிருக்கிறது.

இந்த குறுக்கீடு எந்தளவிற்கு இருக்குமென்பது, முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு" மத்திய வங்கிகளின் ஆண்டறிக்கை பற்றாக்குறைகளில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதியியல் நெருக்கடிக்கு பிரதிபலிப்பாக, அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பும், பேங்க் ஆஃப் இங்கிலாந்தும் இரண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 8 சதவீதமாக இருந்த அவற்றின் சொத்துமதிப்பை சுமார் 20 சதவீதமாக உயர்த்தி உள்ளன. அதேவேளை யூரோ அமைப்பில் ஏற்பட்டிருக்கும் உயர்வானது, யூரோ பிராந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதத்திலிருந்து 20 சதவீதத்திற்கும் அதிகமாக ஆகியுள்ளது.  

இந்த பாரிய பிணையெடுப்பு புதிய பிரச்சினைகளை உருவாக்கி உள்ளது. மத்திய வங்கி வரவு-செலவு கணக்கறிக்கை கொள்கைகள் மிகவும் சிக்கலான நெருக்கடிகளினூடாக உலகளாவிய பொருளாதாரத்திற்கு ஆதரவளித்துள்ளது. ஆனால் இந்த வரவு-செலவு கணக்கறிக்கைகள் இன்னும் அதிகப்படியான அபாயங்களை இப்போது வெளிக்கொணர்ந்துள்ளது. அதாவது, பெயரிட்டு கூறுவதானால், வட்டிவிகித அபாயம், பரிவர்த்தனை விகித அபாயம் மற்றும் கடன் அபாயம் போன்றவை. இவை நிதியியல்துறை இழப்புகளுக்கு இட்டுச் செல்லக்கூடும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரதான வங்கிகளைப் பிணையெடுக்க முயல்வதென்பது, மத்திய வங்கிகளையே நெருக்கடிக்குள் இழுத்து வருவதாகும்.

அதேநேரத்தில், பிணையெடுக்கப்பட்ட வங்கிகள், தனியார் முதலீட்டு நிதியங்கள் மற்றும் ஏனைய நிதியியல் அமைப்புகள், மீண்டும் அதே நடவடிக்கைகளில் இறங்கியதால், அது 2007-2008 நெருக்கடியைத் தூண்டிவிட்டது. நிதியியல் கண்டுபிடிப்பின் மீளெழுச்சி" என்று அது எதை அழைக்கிறதோ, அந்த BIS புள்ளிகள்எதார்த்தத்தில், பெரிதும் போலித்தனமானவையாகும் என்பதோடு, சில சமயங்களில் முற்றிலுமாக குற்றத்தனமான நிதியியல் மோசடிகளும் ஆகும். "சந்தை அழுத்தங்களால் பரிசோதிக்கப்படாத அபாயங்களுடன் கூடிய புதிய திட்டங்களின் வருகை என்று எச்சரிக்கை கொடுப்பதென்பது, பட்டவர்த்தனமாக நிதியியல் நெருக்கடிக்கு இட்டுவந்த நினைவுகளை உயிர்ப்புடன் மீண்டும் கொணர்கிறது.   

மத்திய வங்கிகள் "பொருளாதாரங்களின் சில பிரிவுகளுக்கு மட்டும்" சலுகை காட்டுகின்றன என்றும், ஒருசில நிதியியல் அமைப்புகள் மட்டும் ஏனையவைகளை விட ஓரளவிற்கு ஆதாயம் பெறுகின்றன" என்றும் விமர்சிக்கப்படும் நிலையில், அரசியல் பொருளாதார அழுத்தங்கள்" என்று BIS அறிக்கை எதை அழைக்கிறதோ அதையும் அது குறிப்பிட்டுக் காட்டுகிறது. இது, எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் வங்கிகள் ட்ரில்லியன் கணக்கான டொலர்களைப் பெற்றுள்ள அதேவேளையில் அவர்களின் கொள்கைகளால் யார் பாதிக்கப்பட்டனரோ அந்த வீட்டுக்கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு ஒன்றும் கிடைக்காததுடன் மற்றும் கோல்ட்மேன் சாச்ட்ஸ் மற்றும் அமெரிக்க கருவூலத்திற்கு இடையில் ஓர் உள்ளார்ந்த உறவு உள்ளது என்ற உண்மையால் ஏற்பட்டிருந்த பரவலான கோபத்தைப் பணிவான விதத்தில் குறிப்பிட்டுக் காட்டுவதாக உள்ளது.

பிரதான தொழில்துறை நாடுகளில் அரசு கையிருப்புகளைக் குறைக்க அதிரடி முறைமைகளை எந்த நிதியியல் அமைப்புகள் கோருகின்றனவோ அவற்றிற்கு BISஉம் அதன் குரலை சேர்த்து கொடுக்கிறது. ஒரு பிரதான நாடு பற்றாக்குறை நெருக்கடிக்குள் விழுந்துவிட்டால், அது பேரழிவுமிக்க விளைவுகளைப் பெறும்.

இங்கே நாம் எந்த தவறும் செய்துவிடக்கூடாது: அதாவது கிரீஸ், அயர்லாந்து, போர்ச்சுக்கலில் நிலவும் நிதியியல் நெருக்கடியைச் சுற்றி வளைத்துள்ள சந்தை கொந்தளிப்பானது, நாசத்தை ஏற்படுத்தி, அதைத் தொடர்ந்து ஒரு பெரிய நாட்டின் அரசின் தேசிய கடன் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழக்கச் செய்து, மங்கிப் போகும், என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

ஒரு பிரதான நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் நம்பிக்கை நெருக்கடி (crisis of confidence) என்பது படிப்படியாக மெதுவாக அதிகரிக்காமல், திடீரென வளர்ச்சியடையும். ஏனெனில், ஒன்று நீங்கள் சந்தைகளின் நம்பிக்கையைப் பெற்றிருப்பீர்கள் அல்லது பெறாமல் இருப்பீர்கள். ஆகவே, ஓர் அரசின் கடனை திரும்ப செலுத்த அதன் விருப்பம் மற்றும் திறமையின் மீதிருக்கும் நம்பிக்கை இழப்பென்பது, படிப்படிப்பான பரிணாமமாக இருக்கும் என்பதைவிட பெரும்பாலும் ஒரு திடீர் உணர்வு மாற்றத்தால் பாத்திரப்படுத்தப்பட்டிருக்கும். நம்பிக்கையை வியாபாரமாக்கிய பல சிறிய நாடுகள், திடீரென பெரும் விலைகொடுக்க வேண்டியிருந்த ஏற்றத்தாழ்வுகளால் நிர்பந்திக்கப்பட்டு" மிக விரைவாக இல்லாமல் போனதை கடந்தகால முன்னுதாரணங்கள் எடுத்துக்காட்டுகின்ற நிலையில், அமெரிக்காவால் அதன் பற்றாக்குறைக்கு எளிதாக நிதி ஒதுக்க அதனிடம் இருக்கும் தற்போதைய திறனை, உள்ளபடியே அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது என்று அது எச்சரித்தது.

கடன் அளவுகளைக் குறைக்க "தேவையான மாற்றங்களையும், நம்பத்தகுந்த நடவடிக்கைகளையும்" எடுக்குமாறு அரசாங்கங்களை BIS கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் இது நெருக்கடிக்கு-முந்தைய நிலமைக்கு திரும்புவதைக் குறிக்காது. கட்டமைப்பு பணிகள்" என்றழைக்கப்படுவதில் கவனம்செலுத்தப்பட வேண்டும். மக்களின் ஆயுள்காலம் அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகளில் உத்தரவாதமளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டங்கள் மற்றும் சமூக நலன்களை பாதுகாக்க மிகவும் விலைகொடுக்க வேண்டியுள்ளது என்ற உண்மையை [இது] முகங்கொடுக்க வேண்டியதாக இருக்கும்.  

அதாவது, யுத்தத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட சமூகநல நடவடிக்கைகளின் பெரும்பாலானவற்றை, வங்கிகளின் பிணையெடுப்பின் காரணமாக ஏற்பட்ட அரசாங்க கடன்களைத் திரும்ப செலுத்த, அழித்தாக வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு காரணங்களுக்காகவாவது "நெருக்கடிக்கு முந்தைய நிலைப்பாட்டிற்குத் திரும்ப போதுமானதாக இருக்காது" என்று BIS வலியுறுத்துகிறது. சொத்து விலையுயர்விலிருந்து எழுந்த வரி வருவாய்கள் காரணமாகவும், எதிர்காலத்தில் ஸ்திரப்பாட்டிற்காக பயன்படுத்த கூடிய இடைத்தடைகளாக" செயல்பட உபரிகளை உருவாக்கியதன் காரணமாகவும் நெருக்கடிக்கு முந்தைய நிதியியல் நிலைமைகள் "மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வங்கிகளால் கடந்தகாலத்தில் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிக்கு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் உருவாக்கப்படுபவைகளுக்கும் சேர்த்து தொழிலாள வர்க்கம் விலைகொடுக்க வேண்டும் என்பதாகும்.   

அபிவிருத்தி அடைந்த முதலாளித்துவ பொருளாதாரங்கள் பெரும் சிக்கல்களை முகங்கொடுத்து வரும் நிலையில், வளர்ந்துவரும் சந்தைகள் என்றழைக்கப்படுபனவற்றின் விரைவான வளர்ச்சி ஒட்டுமொத்தமாக சர்வதேச பொருளாதாரத்தின் விரிவாக்கத்திற்கு ஒரு புதிய அடித்தளத்தை அளிக்கும் என்று எப்போதும் கூறப்படும் ஊக கருத்தை BIS அறிக்கை உறுதிப்படுத்துகிறது. பிரதான முதலாளித்துவ பொருளாதாரங்களில் மிக-மலிந்த கடன்களை வினியோகத்தமையானதுஎல்லாவற்றிற்கும் மேலாக உதாரணங்காட்டி விளக்குவதானால், மத்திய அரசின் "பணத்தைப் புழக்கத்தில் விடும்" கொள்கையால்உணவு மற்றும் ஏனைய பண்டங்களின் விலைகளை உயர்த்திவிட்டு, அத்தோடு ஒரு தொடர்ச்சியான புதிய சொத்துவிலை குமிழிகளையும் உருவாக்கி விட்டிருப்பதால் இந்த (வளர்ந்துவரும்) நாடுகள் இப்போது அதிகரித்துவரும் பிரச்சினைகளை முகங்கொடுத்து வருகின்றன.

எழுச்சியடைந்துவரும் சந்தை நாடுகள் நெருக்கடியின் மோசமான நிலையிலிருந்து தப்பிக்க முடிந்தது, ஆனால் அவற்றில் பல தற்போது நெருக்கடியின் முன்னால் நின்றுகொண்டிருக்கும் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் நிலவும் சமநிலையின்மையைப் போன்றே அதேமாதிரியான சமநிலையின்மை ஏற்படும் அபாயத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, பல எழுச்சியடைந்துவரும் சந்தை நாடுகளின் சொத்து விலைகள் வேகமாக தடுமாறும் விகிதங்களில் முன்னேறி வருகின்றன. மேலும் தனியார்துறையில் கடன்களைத் திருப்பிசெலுத்தவியலாத நிலைமை அதிகரித்து வருகிறது, என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது

அந்த அறிக்கை, உலக வளர்ச்சியில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கும் சீனாவின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றபோதினும், இந்த விளக்கத்திற்கு மிக நெருக்கத்திற்கு மிகச் சரியாக பொருந்தும் நாடுகளில் அதுவும் ஒன்றாகும்.

BIS அறிக்கை தீர்க்கமான அரசியல் சவால்களை முன்னிறுத்துவதோடு, சர்வதேச முதலாளித்துவ பொருளாதாரத்தின் ஓர் ஆழ்ந்த முறிவை தொழிலாள வர்க்கம் எதிர்நோக்குகின்றது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

அதை சமாளிக்க சர்வதேச மூலதனத்தின் பிரதிநிதிகளிடம் ஒரு வேலைத்திட்டம் உள்ளது. அதாவது, மீட்பு" கிடையாது, அது சாத்தியமும் கிடையாது, ஆனால் 1930களில் இருந்த அளவிற்கு சமூக நிலைமைகளைத் திருப்ப ஒரு எதிர்புரட்சியைக் கொணர்வது என்பதே அது.  

தொழிலாள வர்க்கம், ஆழமாகவும் தீர்க்கமாகவும், எவ்வித விட்டுக்கொடுப்புகளும் இல்லாமல், அதன் சொந்த முன்னோக்கை அபிவிருத்தி செய்ய வேண்டும். நிதியியல் மூலதனத்தின் வேலைதிட்டத்திற்கு எதிராக மிகப்பரந்த எதிர்ப்பை ஒருங்கிணைப்பதில், அது அரசியல் அதிகாரத்திற்கான, தொழிலாளர்களின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான, சோசலிச பொருளாதாரத்திற்கு மாற்றும் ஏற்பாட்டிற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.