சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Stalinist union ends occupation at Suzuki plant in India

இந்தியாவில் சுசுகி ஆலையில் ஸ்ராலினிசத் தொழிற்சங்கம் உள்ளிருப்பு போராட்டத்தை முடிவிற்குகொண்டுவந்தது

 

By Arun Kumar
1 July 2011
Use this version to print | Send feedback

மனேசாரில் உள்ள மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (MSIL) ஆலையில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த 2,500 கார்த்தயாரிப்புத் தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டம் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) உடன் இணைந்துள்ள அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸினால்(AITUC)   ஜூன் 16ம் தேதி முடிக்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பெரிய கார்த்தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த போராட்டம் இந்தியாவின் கார்த் தொழிலாளர்களிடையே பெருகிவரும் எதிர்ப்பு அலையின் ஒரு பகுதி ஆகும். இது கடந்த ஆண்டு சீனத் தொழிலாளர்கள் ஹோண்டா மற்றும் பிற நிறுவனங்களிலும் நடத்திய வெடிப்புத்தன்மை வாய்ந்த வேலைநிறுத்தங்களுடன் ஒன்று சேர்ந்து நடப்பதாக உள்ளது.

AITUC தலைவர்கள் வட இந்திய ஹர்யானா மாநிலத்தின் மற்ற தொழில்துறை நகரங்களில் போராட்டத்திற்கு ஆதரவு பரவியதை அடுத்து உள்ளிருப்பு போராட்டத் திற்கு குந்தகம் ஏற்படுத்தினர். இப்போராட்டத்தை பாதுகாக்கும் வகையில் ஒற்றுமையுணர்வைக் காட்டும் வேலைநிறுத்தங்களுக்கு நூறாயிரக்கணக்கான கார்த்தயாரிப்புத் தொழிலாளர்களும் மற்றவர்களும் திட்டமிட்டிருந்தனர். இதனால்  நிர்வாகம், தொழிற்சங்கம் மற்றும் அரசாங்கத்தின் தொழிலாளர் துறை அதிகாரிகள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அவசரமான பேச்சுக்களை நடத்தினர்.

இறுதியில் AITUC நிர்வாகிகள் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையான அவர்கள் புதிதாக அமைத்துள்ள தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்க்காமலேயே போராட்ட நடவடிக்கையை நிறுத்திவிட்டனர்.

MSIL ஜப்பான் சுசுகி மோட்டார் பெருநிறுவனத்தின் ஒரு துணை நிறுவனம் ஆகும்மனேசார் மற்றும் குர்கான் என்று இரு இடத்தில் உள்ள அதன் ஆலைகள் ஹர்யானா மாநிலத்தில் உள்ள மிக விரைவாக வளர்ச்சியடைந்துவரும் கார் உற்பத்தித்தொழில் பகுதிகளில் உள்ளன. இங்கு தொழிலாளர்கள் உலகக் கார்த் தொழிலின் தொழிலாளர்கள் என்ற முறையில் மிகக் குறைவான ஊதியத்தைத்தான் பெறுகின்றனர். இரு ஆலைகளும் சுசுகியின் உலக மொத்த உற்பத்தியில் அரைப்பகுதியை கொண்டுள்ளது.

AITUC உடன் இணைக்கப்பட்டுள்ள மாருதி சுசிகி ஊழியர்கள் தொழிற்சங்கமான MSEU அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோரி ஜூன்  4ம் தேதி மனேசார் ஆலையைத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். நிர்வாகம் இதை எதிர்கொள்ளும் விதத்தில் தொழிற்சங்கத்தை ஆரம்பித்த 11தொழிலாளர்களை ஜூன் 6ம் தேதி பணிநீக்கம் செய்தது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும், மனேசார் வளாகத்திற்குள் கட்டப்படும் இரு புதிய ஆலைகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களை தொடர்ந்து வேலையில் வைத்திருக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரினர்.

தொழிற்சங்கத் தலைவர்கள் வெற்றி எனக் கூறிக்கொண்டாலும், நிர்வாகம் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க மறுத்துவிட்டது. பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பதவியில் அமர்ந்த நிர்வாகம் ஒப்புக் கொண்டாலும், இத்தொழிலாளர்கள் ஒரு ஒழுக்க விசாரணையை எதிர்கொள்ளுவதுடன் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடும் என்ற அச்சத்தையும் கொண்டுள்ளனர்.

வேலைநிறுத்தத்திற்குப் பதிலடியாகச் சுமத்தப்பட்ட அபராதங்களை குறைத்துக் கொள்வதாக நிர்வாகம் உடன்பட்டுள்ளது என்பதும் ஒரு சலுகையாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் நிர்வாகம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு நாளுக்கும் தொழிலாளர்களிடம் இருந்து எட்டு நாள் ஊதியம் பிடிக்கப்பட்டுவிடும், இதைத்தவிர பணிக்கு வராத நாட்களுக்கும் ஊதியம் கிடையாது எனக் கூறியது. இறுதியில் வேலைநிறுத்தம் நடந்த ஒவ்வொரு நாளுக்கும் இரு நாட்கள் ஊதியத்தைப் பிடித்துக் கொள்ளும் உடன்பாடு ஒன்றிற்குத் தொழிற்சங்கம் உடன்பட்டது. 

நிர்வாகம் ஒரு இரண்டுமாத கவனிப்புக் காலம்என்பதையும் நிர்ணயித்துள்ளது; இதில் இந்த விற்கப்பட்டுவிட்ட உடன்பாட்டிற்குத் தொழிலாளர்கள் எதிர்ப்பு ஏதேனும் காட்டினால் இன்னும் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும். நிறுவனத்தின் மனிதவளத்துறைத் தலைவர் எஸ்.ஒய்.சித்திக்கி: “நாங்கள் 4 பில்லியன் ரூபாய்களுக்கும் மேல் இழந்துவிட்டோம் (89 மில்லியன் அமெரிக்க டாலர்), சில ஒழுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” எனக்கூறினார்.

ஹர்யானாவின் காங்கிரஸ் கட்சி மாநில அரசாங்கத்தின் தொழிலாளர்துறை ஆணையாளர் சத்வந்தி அஹ்லாவத் தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கத்தை அமைக்கும் சட்டப்பூர்வ உரிமை கொண்டுள்ளனர் என்பதை ஒப்புக் கொண்டார். ஆனால் ஒரு புதிய தொழிற்சங்கத்தை அமைக்க அழுத்தம் கொடுப்பதற்காக உற்பத்திசெய்யும் தொழிற்சாலையை  முடக்கும் வகையில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வது ஒரு சரியான நடவடிக்கை ஆகாதுஎன்று சேர்த்துக் கூறினார்.

போராட்டத்தை நிறுத்திவிடுமாறு MSEUவை ஸ்ராலினிய AITUC தலைவர்கள் பணிய வைத்தனர். ஏனெனில் ஹர்யானா-குர்கான் தொழில்துறைப் பகுதியில் கார் நிறுவனங்களில் இருந்து 200,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமது ஆரதவை காட்டுவதற்காக ஜூன் 20ம் தேதி இரண்டுமணி நேர  வேலைநிறுத்தம் நடத்தத் தயாராக இருந்தனர். ஜூன் 10 அன்று ஹோண்டா மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் இந்தியா (HMSI), ஹீரோ ஹோண்டாவின் தாருஹேரே ஆலை, என்ட்யூரன்ஸ் ஆட்டோ, சத்யம் ஆட்டோ மற்றும் ரிக்கோ ஆட்டோவில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மாருதி சுசுகி ஆலை முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அன்று மாநில காங்கிரஸ் அரசாங்கம் சுசிகி வேலைநிறுத்தத்தின் மீது ஒரு தடைவிதித்தது.

தொழில்துறை நடவடிக்கையினால் பல கார் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் ஆலைகளை மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசாங்கத்தின் ஹர்யான தொழில்துறை மந்திரி ரணதீப் சிங் சூர்ஜேவாலா, பி.டி..இடம் கூறினார்: “நம் தொழில்துறையின் முதுகெலும்பு போன்றது மாருதி. இன்னும் ஒரு தொழிற்சங்கம் அமைப்பதற்குச் சட்டம் தொழிலாளர்களுக்கு உரிமையை கொடுத்துள்ளபோதிலும்கூடஇந்த வேலைநிறுத்தம் நியாயமற்றது.”

MSIL தலைவர் ஆர்.சி.பார்கவா வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமானதுஎன்று முத்திரையிட்டு, “வெளிச்சக்திகள்ஆலையிலுள்ள மிக இளம்தொழிலாளர்களைத் தூண்டிவிடுகின்றன என்று குற்றம்சாட்டினார். “அன்றாட வேலையை நடத்துவது கடினம் என்று நிறுவனம் உணர்ந்தால் தொழிலாளர்களுக்குத்தான் அது இழப்புஎன்று அவர் எச்சரித்ததுடன், “நிறுவனம் வேறு எந்த இடத்திற்கும் செல்லும் விருப்பத் தேர்வை கொண்டுள்ளதுஎன்றும் சுட்டிக்காட்டினார். வணிகத்திற்கு நட்பான  கட்டுப்பாடுகளுக்குப் பெயர் பெற்ற மேற்கு மாநிலமான குஜராத்தில் ஒருக்கால் விரிவாக்கம் செய்யலாம் என்று மாருதி சுசுகி எதிர்பார்க்கிறது. ஆனால் அப்பகுதியும் தொடர்ந்த போர்க்குணமிக்க  வேலைநிறுத்தங்களினால் தாக்கப்பட்டுள்ளதுடன், வசந்தகாலத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையில் திடீரென்ற ஒரு வேலைநிறுத்தமும் நடைபெற்றது. (See, Wildcat strike continues at GM India plant in Gujarat)

இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் (SEZ) வாடிக்கையாக இருப்பதைப்  போலவே, மாருதி சுசுகித் தொழிலாளர்களும் நிர்வாகத்தால் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதனால் மிகத்தீவிர சுரண்டலுக்கு எதிராக அவர்கள் கூட்டுப்போராட்டம் நடத்துவதை தடைசெய்தது. மனேசார் ஆலையில் உள்ள 3,500 தொழிலாளர்களில் 1,100 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று நியமிக்கப்பட்டிருப்பதுடன் மற்றும் ஒரு 1,100 பேர் பயிற்சிக்காலத் தொழிலாளர்கள் என்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த தொழிலாளர் பிரிவில் கால்வாசியினரான கிட்டத்தட்ட 900 தொழிலாளர்கள் தான் முறையான தொழிலாளர்கள் என்று கருதப்படுகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்கள் மாதம் 6,000-7,000 ரூபாவரை (அமெரிக்க$135-155) ஊதியம் பெறுகின்றனர். இது நிரந்தரத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியத்தில் மூன்றில் ஒரு பகுதிதான். ஒரு தொழிலாளிக்கு 11,000 முதல் 12,000 வரை ஒப்பந்தக்காரர்களுக்கு அவர்களை விநியோகிப்பதற்குக் கொடுப்பதாக நிறுவனம் கூறுகிறது.

மனேசார் ஆலையை மாருதி சுசுகி மூடினால், மாநில அரசாங்க வருவாயில் அது பேரழிவுப் பாதிப்பை ஏற்படுத்தும். நிர்வாகம் கடந்த ஆண்டு ஹர்யானா அரசாங்கத்திற்கு 14 பில்லியன் ரூபாய்கள் (அமெரிக்க$216 மில்லியன்) வரிகள் மூலம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இதே காலத்தில் அது 2.55 பில்லியன் ரூபாய் (அமெரிக்க$39மில்லியன்) வரி ஆதாயங்களையும் பெற்றது. ஹர்யானா அரசாங்கம் நிறுவனம் வேறு இடத்திற்குச் செல்லுவது வெளிநாட்டு, உள்நாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் அதன் பிரச்சாரத்திற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் அஞ்சுகிறது.

தொழிலாளர்களுக்குப் பின்புலத்தில் ஸ்ராலினிச தொழிற்சங்க அதிகாரிகளுடன் சதி செய்கையில், நிர்வாகமும் மாநில அதிகாரிகளும் வேலைநிறுத்தத்தை உடல்ரீதியாக நசுக்கும் நடவடிக்கைகளுக்கும் தயாரித்துக் கொண்டிருந்தனர். மூத்த ஹர்யான அரசாங்க அதிகாரிகள் கருத்துப்படி, மாநில அரசாங்கம் தொழிலாளர்களை அகற்றுவதற்கு நள்ளிரவில் போலிஸ் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால் மற்ற தொழிலாளர்களிடம் இருந்து எதிர்ப்பு தோன்றக்கூடும் என்ற அச்சத்தில், அரசாங்கம் இத்திட்டத்திற்கு எதிராக முடிவெடுத்து, தொழிற்சங்க அதிகாரத்துவம் போராட்டத்தை நசுக்கும் என நம்பியிருந்தது.

ஆழமடையும் உலகப் பொருளாதார மந்தநிலை, தாங்கவியலாத பணவீக்கத் தன்மை, கூடிய தொழிற்சுமை ஆகியவை பல தொழிலாளர்களைப் போராட்டத்தில் ஈடுபட உந்துதல் கொடுக்கிறது. தேசிய மற்றும் மாநில அளவில், இந்திய அரசாங்கங்கள் தொழிற்சங்கங்களின் முழு உதவியுடன் உலக மற்றும் இந்திய முதலீட்டாளர்கள் மிக அதிக இலாபங்களை ஈட்டுவதற்கு உத்தரவாதம் அளிப்பதில் உறுதியாக உள்ளனர். இதனால் அவை ஊதியங்களைக் குறைத்தல், பணிச்சுமையை அதிகரித்தல் ஆகியவற்றைத் தீவிரப்படுத்துகின்றன. $73 பில்லியன் மதிப்புடைய இந்தியக் கார்த்தொழில்துறை, கிட்டத்தட்ட 13 மில்லியன் மக்களை வேலையில் அமர்த்தியுள்ளது. அதன் வருமானத்தை 2016க்குள் இரு மடங்காக அதிகரிக்கும் வகையில் சீனாவையும் விடக் குறைந்த ஊதியத்தை வழங்குவது என்பதைத் தக்க வைக்க முற்படுகிறது.

இந்த நிபந்தனைகளைச் செயல்படுத்த தொழிற்சங்கங்களின் உறுதிப்பாட்டை அறிவிக்கும் வகையில், MSEU  பொதுச் செயலாளர் சிவ் குமார் கூறினார்: “நாளையில் இருந்து நாம் வேலையைத் தொடங்குவோம், எங்களுடைய வாடிக்கையான வாராந்திர விடுமுறை தினமான ஞாயிறன்றும் பணிபுரிவோம்.”

AITUC  மற்றும் வேறு ஒரு ஸ்ராலினிசக் கட்சியான சி.பி.எம் எனப்படும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்டுக்கள்) உடன் இணைந்த இந்தியத் தொழிற்சங்க மையம் CITU யும் சிவப்புக் கொடிகளை அசைத்து மிகக் குறைந்த வேலைநிறுத்த நடவடிக்கைகளை மட்டுமே தொழிலாளர்களை ஏமாற்றவும் அவர்களின் பெருகிய சீற்றத்தைக் கட்டுப்படுத்துவும் ஏற்பாடு செய்கின்றன. கடந்த ஆண்டும் இந்த ஆண்டின் முற்பகுதியிலும் தென் இந்தி மாநிலமான தமிழ் நாட்டில் ஒரகடம் சிறப்புப் பொருளாதாரப் பகுதி மற்றும் அருகிலுள்ள ஸ்ரீபெரும்பூதூர் சிறப்புப் பொருளாதாரப் பகுதியிலும்  Foxconn, BYD, sanmina, Hyundai ஆகியவற்றின் அலைகளின் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களில் அவர்கள் கொண்டிருந்த பங்கு காரணமாக தங்கள் பணியில் இருந்து அகற்றப்பட்டனர். ஸ்ராலினிச CPM, மற்றும் CITU ஆகியவை அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தொழிலாளர்துறை ஆணையர், முதலாளித்துவ நீதிமன்றங்கள் மற்றும் அடுத்து தேர்தல்களில் மாறக்கூடிய அரசாங்கம் ஆகியவற்றின் மீது தங்கள் நம்பிக்கையை வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஸ்ராலினிசத் தொழிற்சங்கங்களின் பங்கு அவற்றின் கட்சிகளின் கொள்கைகளில் இருந்து நேரடியாக எழுகின்றது. அவை அரசியல்ரீதியாக தொழிலாளவர்க்கத்தை முதலாளித்துவத்தின் பிரிவு எதற்கேனும் அடிபணியச்செய்ய செய்கின்றன. மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் சிக்கன மற்றும் பிற வணிகச் சார்புடைய கொள்கைகளைச் செயல்படுத்தியதால் சி.பி.எம். தலைமையிலான அரசாங்கங்கள் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டுவிட்டன. இப்பொழுது ஸ்ராலினிஸ்ட்டுக்கள் வடகிழக்கில் திரிபுரா மாநில அரசை மட்டுமே கட்டுப்படுத்துகிறது. தேசிய அளவில் சி.பி.எம். தலைமையிலான  இடது முன்னணி தற்பொழுதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணிக் கூட்டணி அரசாங்கத்திற்கு அதன் முதல் பதவிக்காலத்தில் 2004ம் ஆண்டில் இருந்து நான்கு ஆண்டுகளுக்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்காக ஆதரவைக் கொடுத்திருந்தது.

தங்கள் நியாயமான கோரிக்கைகளை அடைவதற்காக மாருதி சுசுகியில் உள்ள இன்னும் பிற பிரிவுகளில் உள்ள தொழிலாளர்கள் அவர்களுடைய போராட்டத்தைக் கட்டுப்படுத்த முற்படும் ஸ்ராலினிஸ்ட்டுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து உடைத்துக் கொண்டு வந்து அதனை ஒரு புதிய அச்சாணியில் நிறுத்தவேண்டும். உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளின் கட்டுப்பாட்டிற்குப் புறத்தே  சாதாரண தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டு எதிர்ப்பை அமைப்பதற்கான போராட்டங்களுக்கான புதிய அமைப்புக்கள் கட்டமைக்கப்பட வேண்டும். இந்தியக் கார்த் தொழிலாளர்கள் உலகக் கார்த் தொழிலில் ஏற்படும் அதிர்விற்கு எதிராகவும், அனைத்துத் தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள்மீதான பாதிப்பை எதிர்க்கவும்  ஆசியா, ஐரோப்பா, இலத்தின் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவில் உள்ள தங்கள் சர்வதேச சகோதர, சகோதரிகளுடன் ஒருங்கிணைய வேண்டும்.

இந்தியாவை உலக முதலாளித்துவத்திற்கு ஆதாயமான குறைவூதியத் தொழிலாளர்தொகுப்பு கொண்ட உற்பத்தியிடமாக மாற்றுவதற்கான பெருவணிகத்தின் உந்துதலுக்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கத்தைத் திரட்டிப் போராடுவதற்கு, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அரசியல் போராட்டம் தேவைப்படுகிறது; இதற்கு தொழிலாளர்களின் ஆட்சி மற்றும் சோசலிச முறையில் சமூகத்தை மறு சீரமைப்புச் செய்வதற்காக தொழிலாளர் வர்க்கத்தின் வெகுஜன அரசியல் கட்சியைக் கட்டியமைப்பது முக்கியம் ஆகும்.