சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Gates reads the riot act to Europe

கேட்ஸ் கோபத்துடன் ஐரோப்பாவிற்கு எச்சரிக்கின்றார்

Patrick Martin
13 June 2011

Use this version to print | Send feedback

வெள்ளியன்று பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் வெளியேறும் அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் நிகழ்த்திய உரை ஐரோப்பாவில் உள்ள அதன் பலவீனமான போட்டியாளர்கள் மற்றும் கூட்டுப்படையெடுப்பாளர்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்திடம் இருந்து ஒரு அரசியில் இறுதி எச்சரிக்கை போல் அமைந்தது. இந்நாடுகள் மிகப் பெரிய அளவில் அமெரிக்கத் தலைமையில் நடக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கு கூடுதலான பணம் மற்றும் மனித சக்தியைச் செலவழிக்க வேண்டும் அல்லது அமெரிக்கா அவற்றைத் தன் வழியே செய்யும் மற்றும் நேட்டோஒரு மங்கிய, இல்லாவிடில் பரிதாபத்திற்குரிய எதிர்காலத்தைஎதிர்கொள்ளும்.

ஜனாதிபதி ஒபாமா, மத்திய கிழக்கு பற்றிய தன்னுடைய புதிய இராணுவக் கோட்பாட்டை தன் உரையில் தெளிவுபடுத்தி, கடந்த கால இராணுவ பலத்தை பயன்படுத்துவதில் இருந்த மட்டுப்படுத்தல்களை ஒதுக்கிவிட்டு, வெள்ளை மாளிகை வரையறுக்கும் வகையில் அமெரிக்க நலன்களுடன் தொடர்புபட்டு எந்த நாடும் அமெரிக்கத் தாக்குதலின் இலக்காகலாம் என்று அறிவித்து ஒரு மாதத்திற்குள்ளாக, இந்த உரையை கேட்ஸ் நிகழ்த்தினார். இத்தகைய முன்னோக்கு மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா, இன்னும் அதற்கும் அப்பாலும், காலவரையற்ற போர்களை மேற்கோண்டு புதிய காலனித்துவ ஆட்சிகளை நிறுவும் வகையில்தான் உள்ளது.

இப்பொழுது பாதுகாப்பு மந்திரி ஐரோப்பிய சக்திகளிடம் அவை தங்கள் அமைப்புகளை மாற்றி அனைத்து பெரும் இராணுவவாத விரிவாக்கத்திற்கு தேவையான வளங்களை வழங்க வேண்டும் என்று கூறுகிறார். இல்லாவிடில் அவர்கள் கொள்ளைப் பொருட்களில் பங்கை இழந்துவிடும் அபாயத்தை எதிர்கொள்ளும்அதாவது லிபியாவில் கொள்கையடிக்கப்பட உள்ள எண்ணெய் மற்றும் இன்னும் பொதுவாக மூலப் பொருட்கள், மூலோபாயம் நிறைந்த பகுதிகளை அடைவதை இழந்துவிடும்.

ஆப்கானிஸ்தானில் எழுச்சிக்கு எதிராகப் படைகளை வழங்கி உதவுவதில் நேட்டோ நாடுகளை பாராட்டினாலும்கூட, கேட்ஸ் ஆப்கானிய போர்நேட்டோவில் உள்ள இராணுவத் தகமை மற்றும் அரசியல் உறுதிப்பாட்டில் உள்ள கணிசமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது.” போதுமான படைகளை வழங்குவதில் மட்டுமல்லாது, முக்கிய ஆதரவளிக்கும் வளங்களான ஹெலிகாப்டர்கள், போக்குவரத்து விமானங்கள், பராமரிப்பு, உளவுத்துறை, கண்காணிப்பு, முன்கூட்டி தகவலறிவது, இன்னும் பலவற்றிலும் நேட்டோவிற்கு இடர்கள் உள்ளன.” என்றார்.

நேட்டோ நாடுகள் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தியுள்ள படைகளைக் குறைப்பதற்கு எதிராக அவர் குறிப்பாக எச்சரிக்கை விடுத்தார்: “துருப்புக்கள் வழங்கும் நாடுகள் தங்கள் விரும்பிய நேரத்திற்கு படைகளை திரும்பப் பெற்றுக் கொள்வதை நாம் ஏற்கவியலாது.”

லிபியாவில் கூட்டு நாடுகளின் செயல்திறன் இன்னும் மோசமாக உள்ளது என்றார் கேட்ஸ். பெரும்பாலான நேட்டோ நாடுகள் போதுமான படைகளை வழங்க முன்வராததற்காக அவற்றை அவர் கடிந்து கொண்டார். மார்ச் நடுப்பகுதியில் ஆரம்பித்த போருக்குச் சில நாடுகள் படைகளையே அனுப்பவில்லை. போர் என்பது குறைந்தபட்சமாக வான்தாக்குதல்கள் என்பதுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், தரைப்படைகள் ஈடுபடுத்தப்படவில்லை மற்றும் ஐரோப்பாவிற்கு அருகே உள்ள பகுதியும், ஐரோப்பிய பாதுகாப்பிற்கு மிக முக்கியமான பகுதியில் போர் நடக்கும்போதும் இவ்வாறு செய்யப்படாதுள்ளது என்றார் அவர்.

பென்டகனின் தலைவர் அமெரிக்காவின் பெயரளவுநட்பு நாடுகளின்இராணுவத் திறன்கள் பற்றி எள்ளி நகையாடும் சொற்றடர்களில் இழிவாகப் பேசினார். “வெளிப்படையாக, இக்கூட்டு நாடுகளில் பல ஒதுங்கி உட்கார்ந்து கொண்டிருக்கின்றன; இதற்குக் காரணம் அவை பங்கு பெற விருப்பம் கொண்டிருக்கவில்லை என்பது அல்ல, மாறாக அவற்றால் முடியாது என்பதுதான். அவற்றிடம் இராணுவத்திறன்கள் சிறிதும் இல்லை.”என்றார்.

குண்டுபோடப்பட வேண்டிய இலக்குகளை அடையாளம் காட்டும் சிறப்பு வல்லுனர்களை அமெரிக்கா வழங்க வேண்டியதாக உள்ளதுடன், குண்டுகளையும் கொடுக்க வேண்டியுள்ளது. “வரலாற்றில் மிகவும் வலிமை வாய்ந்த நேசஅணி அதிக மக்கள் இல்லாத ஒரு நாட்டில், அதிக ஆயுதங்களைக் கொண்டிராத ஆட்சிக்கு எதிராக 11 வாரங்களாகப் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. அப்படியும்கூட பல நட்பு நாடுகளிடம் வெடிமருந்துகள் இல்லை, அமெரிக்காதான் மீண்டும் இடைவெளியை நிரப்ப வேண்டியுள்ளதுஎன்று கடுப்புடன் அவர் கூறினார்.

நிலப்பிரபுத்துவ முறைக்காலத்தில் ஒரு பிரபு தனக்குக்கீழே இருப்பவர்களுக்கு உத்தரவிடும்போது காட்டும் திமிர்த்தனம் போலவே வெளிப்படுத்திய கேட்ஸ்இத்தகைய இரு அடுக்குக் கூட்டின்ஆபத்து பற்றிக் குறிப்பிட்டார்; இதில் சில நாடுகள் போரில் தங்கள் கனத்தைக் காட்டுகின்றன; பெரும்பாலனவை ஏதும் செய்யவில்லை. பிரிட்டன், நோர்வே, டென்மார்க் ஆகிய நாடுகளை அவர் புகழ்ந்தார். அதே நேரத்தில் பெயரிடப்படாத சில நாடுகளை அவர் கண்டித்தார்எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனியை. போலந்து, இத்தாலி, ஸ்பெயின் ஆகியவற்றையும் ஏற்கத்தக்கதில்லைஎன்றார்.

விருப்பமற்ற நிலை, அதுவும் சிக்கன சகாப்தத்தில் வளங்கள் இல்லாத நிலையில் இது வந்துள்ளதுஇதற்குக் காரணம் என்று அவர் குறைகூறினார். ஆனால் வரவுசெலவுத் திட்ட கட்டுப்பாடுகள் இராணுவத்திற்குப் போதுமான நிதியை ஒதுக்கத் தவறுவதற்கு உரிய காரணங்கள் ஆகாது. என்றார். இன்று 28 கூட்டுநாடுகளில் 5 நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கிரேக்கம், அல்பானியாவும் மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதுகாப்பிற்கு 2% க்கும் மேலாகச் செலவிடப்படக்கூடாது என்று ஒப்புக் கொண்டுள்ளதை மீறிச் செலவழிக்கின்றனஎன்றார் அவர்.

ஐரோப்பிய நேட்டோ உறுப்பு நாடுகள்கூட்டான இராணுவ முக்கியத்துவமற்ற தன்மைஎன்ற அபாயத்தை அடைந்துவிடக்கூடும், மேலும்ஐரோப்பிய பாதுகாப்புத் திறன்களில் தற்போதைய சரிவுப் போக்குகள் நிறுத்தப்பட்டு, முந்தைய நிலைமை மீட்கப்படாவிட்டால், வருங்கால அமெரிக்கத் தலைவர்கள்அமெரிக்கா நேட்டோவில் செய்த முதலீட்டிற்கு உரிய ஆதாயம் கிடைக்கவில்லை என்ற முடிவிற்கு வருவர்.” என்று கேட்ஸ் எச்சரிக்கையுடன் முடிவுரையாகக் கூறினார்.

கேட்ஸ் கொடுத்த உரையைப் போலவே ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் நிறைந்த அவருடைய பார்வையாளர்கள் அதை எதிர்கொண்டதும் குறிப்பிடத்தக்கதுதான். ஒருவர்கூட நேட்டோ கூட்டு தொடர்ந்த ஏகாதிபத்தியப் போர்களுக்கு தலைமைதாங்க வேண்டும் என்ற முன்கருத்திற்குச் சவால் விடவில்லை. அமெரிக்காவின் பென்டகனுடைய தலைவரை எவரும்நீங்கள் யார் எங்களுக்கு உபதேசிக்க? உங்கள் நாடு இப்பொழுது ஐந்து நாடுகளில் ஒரே நேரத்தில் போர் செய்கிறது; உலகம் முழுவதும் அதன்மீது வெறுப்பு உள்ளதுஎன்று கேட்கவில்லை.

மாறாக, கூடியிருந்த ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் பிரதிநிதிகள் கேட்ஸ் கூறியதை பயம், பாராட்டு, பொறாமை ஆகியவற்றின் கலவையுடன் கேட்டது. இவற்றிற்கும் அதே போன்ற கொள்ளையடிக்க வேண்டும், மேலாதிக்கம் செலுத்தவேண்டும் என்ற உந்துதல் உள்ளது. அமெரிக்காவை முன்னுதாரணமாகக் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் அடிப்படைத் தேவைகளை புறக்கணித்து இராணுவத்திற்கு நூற்றுக்கணக்கான பில்லியன்களை செலவழிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு.

கேட்ஸ் வழங்கிய உரை ஐரோப்பிய சமூகத்தின் மிகப் பிற்போக்குத்தனக் கூறுபாடுகளின் நோக்கங்களுக்கு உதவுகிறது; அவை இப்பொழுதுஅமெரிக்க அழுத்தத்தைகாரணம் காட்டி, நேட்டோ உடன்பாட்டின் கடமைப்பாடுகள் என்பதைக் காரணம் காட்டி சமூகநலப் பணிகள் மீது தாக்குதல் நடத்தவும் இராணுவத்திற்காக செலவழிக்கவும் முனையும்.

பல ஐரோப்பிய நாடுகளுக்கள் இத்தகைய கொள்கை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகள் பற்றி கேட்ஸ் அதிகம் பேசவில்லை. ஆனால் மறுநாள் முக்கிய அமெரிக்க தாராளவாத மற்றும் வலதுசாரி நாளேடுகளை அவற்றை தெளிவாக்கும் வகையில் கூறின.

நேட்டோவிடம் உண்மையைக் கூறுதல்என்ற தலைப்பில் நியூ யோர்க் டைம்ஸ்  கேட்ஸின் கருத்துக்களை ஐரோப்பிய சக்திகளுக்கு உறுதியான எச்சரிக்கை என்று பாராட்டியது. “அவர் தெளிவாக்கியுள்ளது போல் இந்த நாடு நேட்டோப் போருக்காக பொருத்தமற்ற விகிதத்தில் அதிகமான பங்கினை செய்யமுடியாது, அதற்கான செலவுகளையும் ஏற்க முடியாது. அதுவும் ஐரோப்பா தன் பாதுகாப்பு செலவுகளை குறைத்துக் கொண்டு கூட்டுப் பாதுகாப்பு நலன்களின் இலவசமாகப் பயணிக்கும்போதுஎன்று டைம்ஸ் அறிவித்துள்ளது.

லிபியாவில் நேட்டோ இகழ்வுடன், அதிர்ச்சிதரும் வகையில் நடந்து கொண்டிருப்பது”—அதாவது பல நேட்டோ நாடுகள் மறுப்பது அல்லது ஆக்கிரமிப்புப் போரில் பங்கு பெற இயலாதது என்பது தாராளவாதக் குழுவின் ஆர்வமான ஆதரவைக் கொண்டுள்ளதற்கு டைம்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதன் பின் செய்தித்தாள் வினா எழுப்புகிறது: “கேர்னல் முயம்மர் எல் கடாபியின் உடைந்துபோன சர்வாதிகாரத்தைவிட இன்னும் வலிமையான விரோதியுடன் இவை போரிட வேண்டும் என்றால் என்ன ஆவது?”. நேட்டோ சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான கூட்டாக அமைக்கப்பட்டது என்று இருந்தாலும், அந்நாடு இப்பொழுது இல்லை என்றாலும், டைம்ஸ் மனத்தில் கொண்டுள்ளவிரோதியார் என்பது தெளிவாக இல்லை. இதற்குப் பல நாடுகள் குறியாக உள்ளன. குறிப்பாக ஈரான், சிரியா போன்றவை மட்டும் இல்லாமல், ரஷ்யா, சீனா ஆகியவையும்தான்.

கேட்ஸின் குறைகூறலை விரிவாக்கிக் கூறுவதில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்  இன்னும் ஒருபடி மேலே சென்றுஒரு அணுவாயுதம் கொண்ட ஈரான் மற்றும் எழுச்சி பெறும் சீனா ஆகியவற்றை இன்னும் அதிக இராணுவவலிமை கொண்ட நேட்டோ கூட்டின் விரோதி நாடுகளாகும் சாத்தியப்பாடு கொண்டவை என்று பெயரிட்டுள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் உள்நாட்டு சமூகக் கொள்கையின் உட்குறிப்புக்கள் பற்றியும் செய்தித்தாள் வெளிப்படையாக எழுதியுள்ள வகையில் தலையங்கம் கொடுத்துள்ளது; “அமெரிக்காவைப் பொறுத்தவரை, ஐரோப்பாவின் பாதுகாப்புத்திறன் சரிவு என்பது தொட்டிலில் இருந்து சுடுகாடு வரை நலன்களைக் கொடுக்கும் நிதி முறைகளைக் கொண்டுள்ள நாடுகளுக்கு என்ன நேர்கிறது என்னும் தீய சகுனத்தைக் காட்டுகிறது. அவை பின்னர் தங்களால் இயலவில்லை என்று உணர்கின்றனர், அல்லது தங்களைக் பாதுகாத்துக்கொள்ள விலை கொடுக்க முடியவில்லை, விருப்பமில்லை என்று அறிகின்றனர்.”

இதேபோன்ற கருத்துத்தான் டைம்ஸின்  பக்கங்களிலும் கூறப்பட்டது; இது ஒரு வாஷிங்டன் சிந்தனைக் குழுவான ஒரு புதிய அமெரிக் பாதுகாப்பு நிலையத்தின் (Centre for a New American Security) அன்ட்றூ எக்ஸும் இனை மேற்கோளிட்டு, “ஐரோப்பியர்கள் தாராளமான சமூகநலத் திட்டங்கள் அனுபவிப்பதற்கு ஒரு காரணம் அவற்றின் பாதுகாப்புச் செலவுகளுக்கு அமெரிக்க உதவிநிதி கொடுப்பதுதான்என்று வாதிட்டுள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தபோது, பென்டகனில் கேட்ஸுக்கு முன்பு இருந்த டொனால்ட் ரம்ஸ்பெல்ட் போருக்கு பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி காட்டிய எதிர்ப்பை எள்ளி நகையாடி, சிறிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கொடுக்கும் ஆதரவை பிரிட்டன் கொடுப்பதுடன் சேர்த்துப் பாராட்டினார். வெள்ளியன்று தற்பொழுதைய பென்டகன் தலைவர்பழைய ஐரோப்பாமற்றும்புதிய ஐரோப்பாஎன்று எதிரெதிரே சுட்டிக் காட்டுவதற்குப் பதிலாக அடிப்படையில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை சோம்பேறிகள், ஒட்டுண்ணிகள் என  கண்டித்தார்.

கேட்ஸ் வழங்கய உரை மற்றும் அமெரிக்க உத்தியோகபூர்வ அரசியல் பிரிவினர் முழுவதும் அதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளமை, லிபியாவிற்கு எதிராக, பிரட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை இணைந்த தலைமை நடத்தும் பங்கில் நடத்தப்படும் ஆக்கிரமிப்புப் போர் பற்றிய எடுத்த முடிவினை வெளிப்படுத்துகின்றது. இப்போர் கூடுதலான ஐரோப்பிய ஈடுபாடு மற்றும் அதன் வளங்கள் வழங்கப்படுதல் ஆகியவற்றிற்கு புதிய முன்மாதிரி ஆகிறது. ஐரோப்பிய நாடுகள் மீது அதிக இராணுவச் செலவுகளைச் சுமத்தும் முயற்சி, இராணுவச் செலவுகள் சிலவற்றை முற்றிலும் அவற்றின் மீது தள்ளும் நிலை ஆகியவற்றைக் காட்டுகிறது.

மனித உரிமைகள்மற்றும்ஜனநாயகத்திற்காகநடத்தப்படும் போர் என்ற வார்த்தைஜாலங்கள் அதிகரித்தளவில் அப்பட்டமாக அம்பலப்படுத்தப்பட்ட நிலையில், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி ஒரு நூற்றாண்டிற்கு முன் அடையாளம் காட்டிய உண்மைதான் மீண்டும் நன்கு புலனாகிறது. ஏகாதிபத்தியம் ஒரு உலக அமைப்புமுறை என்பதன் பொருள் மனிதகுலத்தின்மீது ஒரு சில அடக்கியாளும் நாடுகள் ஒவ்வொன்றும் பொருளாதார, இராஜதந்திர, அரசியல் இறுதியில் இராணுவ நடவடிக்கை மூலம் அதன் போட்டியாளர்களுக்கு எதிராக மேலாண்மையை அடைய முனைகின்றன.

ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் தர்க்கம் இன்னும் புதிய, இன்னும் கொடூரமான போர்கள் வெடித்து, உலகப் பேரழிவில் உச்சக்கட்டத்தை அடைதல், அதையொட்டி மனித நாகரிகம் அழிக்கப்படுதல் என்பது ஆகும். இதற்கு ஒரே மாற்றீடு, தேசிய எல்லைகளைக் கடந்து சர்வதேச தொழிலாள வர்க்கம் உலக சோசலிசப் புரட்சி என்னும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றாகத் திரட்டப்படுவதுதான்.

கட்டுரையாளர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்

“Washington’s endless wars”
[11 June 2011]

“NATO’s terror bombing of Libya”
[9 June 2011]