சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French lawyers sue Sarkozy over crimes against humanity in Libya

லிபியாவில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பிரெஞ்சு சார்க்கோசி மீது வழக்குத் தொடுக்கின்றனர்

By Antoine Lerougetel
17 June 2011

Use this version to print | Send feedback

இரண்டு உயர்மட்ட பிரெஞ்சு வக்கீல்கள் Jacques Verges, முன்னாள் சோசலிஸ்ட் கட்சி மந்திரி Roland Dumas இருவரும் தாங்கள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி மீது லிபியாவில் இப்பொழுது நேட்டோ இராணுவத் தலையீட்டினால் நடக்கும் போரில் இழைக்கப்பட்டுள்ள மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றி குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மே 29ம் தேதிலிபியாவில் நடத்தப்பட்ட செய்தியாளர்கூட்டம் ஒன்றில்அவர்கள் மே30, திங்களன்று பிரெஞ்சு நீதிமன்றங்களில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடக்க இருப்பதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பைப்பற்றி அநேகமாக ஒரு முழு இருட்டடிப்பு பிரெஞ்சுச்செய்தி ஊடகத்தில் உள்ளது. சோசலிஸ்ட் கட்சிசார்புடையவார ஏடான Marianne ஒன்றுதான் டுமாவையும் வெர்ஜேயையும் குடியரசு ஜனாதிபதியைப்பற்றிக்கொடூரமான குற்றச்சாட்டைக் கூறியுள்ளதற்கு தாக்கியுள்ளது. 

லிபியாவில் ஞாயிறு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் டுமா நேட்டோ குண்டுத் தாக்குதலைக் குறிப்பிட்டு, குடிமக்களைக் காப்பதற்கு எனக் கூறப்படும் இப்பணி அவர்களைக் கொல்லும் வழிவகையில் உள்ளது என்றார். லிபியாவில் நடக்கும் போர் ஒரு இறைமை உடைய நாட்டிற்கு எதிரான மிருகத்தனமான ஆக்கிரோஷச் செயல் ஆகும் என்றார் அவர்.

நேட்டோ கூட்டு நாடு கொலைகாரர்கள் என்று குறிப்பிட்ட  வெர்கே, பிரான்ஸ் நாடு குண்டர்கள் மற்றும் கொலைகாரர்கள் தலைமையில் வழிநடத்தப்படுகிறது. இந்த மௌனச்சுவரை உடைக்க நாங்கள் விரும்புகிறோம் என்று கண்டித்தார். மருத்துவமனையில் பல பாதிக்கப்பட்ட குடிமக்களைத் தான் பார்த்துள்ளதாகவும், மருத்துவர்களில் ஒருவர் கிட்டத்தட்ட 20,000 பாதிக்கப்பட்டவர்கள்  உள்ளனர் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

ஹேகில் உள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) கடாபிக்கு வக்கீலாக இருக்கும் பொறுப்பைக்கூட தான் ஏற்கத்தயார் என்று டுமா கூறினார். மே 16ம் திகதி, முக்கிய மேற்கத்தையச் சக்திகளின் சார்பாக ICC யின் வக்கீல் கடாபிக்கு எதிராக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக பிடி ஆணை ஒன்றைக் கோரியிருந்தார்.

சார்க்கோசி மற்றும் நேட்டோ .நா. பாதுகாப்பு சபைத் தீர்மானம் 1973ன் கீழ் குண்டுத்தாக்குதல் நடத்தும் அதிகாரத்தை வினாவிற்கு டுமா உட்படுத்தியுள்ளர்: இது செயற்கையானது மிகவும் செயற்கையானது ஐக்கிய நாடுகளை மூடிமறைக்கும் தன்மை உடையது என்று விவரித்தார்.

போர் குறைந்தது செப்டம்பர் வரை, 90 நாட்களாவது நீட்டிக்கப்படும் என்று நேட்டோ கூறியிருக்கையில், பிரிட்டனும் பிரான்ஸும் இராணுவத் தாக்குதல் அதிகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், இந்த வழக்கு வந்துள்ளது. ஏற்கனவே இப்போரில் லிபியத் தலைவர் முயம்மர் கடாபியின் குடும்பத்தின் வீடுகளை இலக்கு வைத்து அரசியல் படுகொலைகளை இலக்காகக் கொண்ட சில முயற்சிகள் நடைபெற்றுள்ளன.

பிரிட்டனின் முன்னாள் SAS சிறப்புத் துருப்புக்கள் மற்றும் நேட்டோ வேலைக்கு அமர்த்தியுள்ள சில கூலிப்படையினரும் லிபியத் துறைமுக நகரமான மிஸ்ரடாவில் இலக்குகளை அடையாளம் காண்பதற்கு உதவி வருகின்றனர். இவர்கள் பிரிட்டன், பிரான்ஸ் இன்னும் பிற நேட்டோ நாடுகளுடைய ஆசியுடன் அங்கு உள்ளனர். அந்நாடுகள் இவர்களுக்குத் தேவையான தொடர்புக் கருவிகளை அளித்துள்ளன. புதிதாகப் பயன்படுத்தப்படும் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுத் தாக்குதல் ஹெலிகாப்டர்களுக்கு இவர்கள் தகவல் அளிக்கக்கூடும்.

.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானம் இலக்கம் 1973 இயற்றப்படுவதற்கு பிரெஞ்சு அரசாங்கம்தான் முன்னின்று முனைந்து செயல்பட்டது. இத்தீர்மானம் ஒரு அப்பட்டமான நவ காலனித்துவ முறை, ஏகாதிபத்தியத் தலையீட்டிற்கு மிக நலிந்த சட்டப்பூர்வமான மறைப்பு ஆகும். லிபியாவின் இராணுவத்திலிருந்து குடிமக்களைக் காப்பதாகக் கூறிக்கொள்ளப் பயன்படுகிறது. உண்மையில் லிபியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள் மீது ஆதிக்கத்திற்கான போட்டியின் ஒரு பகுதிதான் இது. அதே போல் பெங்காசியில் ஒன்றிணைக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் வளைந்து கொடுக்கும் ஏகாதிபத்தியச் சார்புடைய அரசாங்கத்தை மக்கள் மீது சுமத்தும் திட்டத்தின் ஒரு பகுதியும் ஆகும்.

லிபியத் தலைவர் முயம்மர் கடாபியின் மகளான Aicha Gaddafi க்காக வாதாடவுள்ள மற்ற வக்கீல்கள் நேட்டோவிற்கு எதிராக ஒரு பெல்ஜிய நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்துள்ளனர். திரிப்போலியில் ஒரு சிவிலிய வீட்டை இலக்கு வைத்துத் தாக்குதல் என்பது ஒரு போர்க்குற்றம் ஆகும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஏப்ரல் 30ம் தேதி கடாபியின் கடைசி மகன் மற்றும் அவருடைய மூன்று மிகச்சிறிய பேரக்குழந்தைகளைக் கொன்ற நேட்டோ வான்தாக்குதலுடன் இக்குற்றச்சாட்டு தொடர்பு உடையது. இரு வக்கீல்களும் ஐரோப்பிய ஒன்றிய மந்திரிகள் லிபிய ஆட்சியின் நிதிக் கணக்குகளை மூடவேண்டும் என்ற முடிவை எதிர்த்து லுக்செம்பர்க்கிலுள்ள  ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

எண்பது வயதான வெர்ஜே மற்றும் டுமா ஆகியோர், நீண்ட, நெருக்கமான தொடர்பை பிரெஞ்சு அரசாங்கத்துடன் கொண்டவர்கள், பிரெஞ்சு அரசாங்கத்தின் மற்ற பிரிவுகளுடன் நேரடியாக பணி புரிகின்றனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் லிபியாவில் இராணுவத் தலையீட்டைச்  செய்ய வேண்டும் என்னும் சார்க்கோசியின் முடிவிற்கு பிரெஞ்சு ஆளும் வட்டங்களில் தீவிர சந்தேகங்கள் எழுந்துள்ளன என்பது உறுதி.

TTU பாதுகாப்புத் தகவல் மையமும் இதுவரை வெளியிடப்படாத 50 பக்க அறிக்கை ஒன்று பற்றிக் கருத்துக் கூறியுள்ளது. இது மூன்று வார காலம் லிபியாவிற்கு உளவுத்துறை வல்லுனர்கள் சென்று வந்ததற்குப் பின் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வல்லுனர் குழுவிற்குத் தலைவராக பிரெஞ்சுத் தேசிய உளவுத்துறை அமைப்பான DST யின் முன்னாள் தலைவர் Yves Bonnet இருந்தார். TTU வலைத்தளக் கருத்துப்படி, இத்தலையீடு 1973 தீர்மானத்தை மீறுவது ஆகும். மேலும் தற்பொழுதைய மூலோபாயத்தின் இதயத்தானத்திலுள்ள கருத்து எரிசக்தி ஆதாரங்கள் மீது கட்டுப்பாடு கொள்ளுவது என்பதுதான். அமெரிக்கா கடாபியை அகற்ற விரும்புவதின் காரணம் அது நாட்டிலிருந்து சீனாவை அகற்றுவதற்குத்தான். Cyrenaica மற்றும் அதன் எண்ணெய் இருப்புக்கள் திரிப்போலிக்கு அளிக்கப்பட்டதை ஒப்புக் கொள்ளாத எகிப்தும் நாடு துண்டாடப்பட்டால் நலன்களை அடையலாம் என நம்புகிறது.

வலைத்தளம் மேலும்கூறுகிறது: “இந்த அறிக்கைபாரிஸின் “சிந்தனையற்ற இத்தொடர்பைக்குறித்துபீதியைவெளிப்படுத்துகிறது. பாரிஸ் அமெரிக்கநிர்வாகத்தின்பிடிகளில்சிக்குகிறது. அதுவோ தன்கைகளை அதிகம் செயல்படுத்தாமல் பிரான்ஸ் எல்லா இடர்களையும் எதிர்கொள்ளட்டும் என விட்டுவிட்டது.” பெங்காசியின் மாற்றுக்காலக்குழு “தொடர்புடையசக்திகளின்நலன்களைக்காக்கமுடியுமா என்பதுபற்றியும் தீவிரஐயங்களை எழுப்பியுள்ளது. அதிலும் உட்குறிப்பாக பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நலன்கள்காக்கப்படுமாஎன 

இராணுவப் பிரிவு விமர்சகர் Jacques Borde பிரான்ஸ் பயனற்ற முறையில் தன் இராணுவத் திறன்களைச் செலவழிக்கிறது என்று கூறியுள்ளார். அதன் அரபு மற்றும் மேற்கத்தையச் சக்திகள்தான் கொள்ளையில் பங்கு என வரும்போது அதிக ஆதாயங்களைப் பெறும். மேலும் சோமாலி போல் ஆகக்கூடும் என்ற  ஆபத்தும் உள்ளது. அதாவது நாடு முழுவதும் போரிடும் பழங்குடி மக்கள், போர்ப் பிரபுக்களின் மோதல்கள் என்று சிதையக்கூடும்.

இரு வயதான வக்கீல்கள் நீண்டகால அரசியல், சட்ட வரலாறுகளைக் கொண்டுள்ளவர்கள். 1922ல் பிறந்த டுமா பிரான்சுவா மித்தரெண்ட் என்னும் சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரெஞ்சு ஜனாதிபதியின் (1981-1985) நெருக்கமான ஒத்துழைப்பாளர் ஆவார். பல PS அரசாங்கங்களில் மந்திரியாகப் பணி புரிந்திருக்கிறார். ஒரு கொள்கை இயற்றுபவராக அவர் இருந்ததில்லை. ஆனால் நிர்வாகத்திற்கு நம்பகமான எடுபிடியாகச் செயல்பட்டுள்ளார்.

Françafrique என அறியப்பட்ட ஆபிரிக்க அரசாங்கங்களுடன் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஊழல்கள் மலிந்த உறவுகளில் அவர் ஒரு பகுதியாக இருந்தார். 1983ம் ஆண்டு அவர் மித்திரோனின் சிறப்புத்தூதராக கடாபியிடம் அனுப்பப்பட்டிருந்தார். அவருடைய பணி லிபியா சாட் மீது படையெடுக்காமல் செய்வதாகும். அப்பொழுது நாட்டின் வடக்கே ஒரு எழுச்சி பிரெஞ்சுச் சார்புடைய அரசாங்கத்திற்கு எதிராக இருந்தது. அதற்கு ஆதரவு கொடுக்காமல் பார்க்க வேண்டியது இவர் பொறுப்பாக இருந்தது. இறுதியில் கடாபியின் உடந்தையுடன் அரசாங்கம் பிரான்ஸின் தலையீட்டால் நிலைநிறுத்தப்பட்டது.

1995ல் டுமா அரசியலமைப்புக் குழுவின் தலைவராக மித்திரோனால் நியமிக்கப்பட்டார். இது பிரெஞ்சு அரசியலமைப்பு நீதிமன்றம் ஆகும். ஜனவரி 1999ல் அவர் Elf ஊழல் விவகாரத்தை ஒட்டி இராஜிநாமா செய்தார்.

1925ல் ஒரு வியட்நாம் தாயாருக்கும் Réunionese தந்தைக்கும் Vergès பிறந்தார். இவர் மிகச் சிறப்பாக வாதிட்ட வழக்குகளுள் ஒன்று நரி எனப்பட்ட பயங்கரவாதி கார்லோஸ் வழக்கு மற்றும் நாஜிப் போர்க்குற்றவாளி ஆக்கிரமிப்புக் காலத்தில் லியோயனின்  கொலைகாரன்           Klaus Barbie  உடைய வழக்கு ஆகியவை ஆகும். பிரஞ்சு ஏகாதிபத்தியமும் அதேமாதிரியான குற்றத்தை அல்ஜீரியாவில் நாசிகள் மாதிரி செய்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

தானும் Vergèsம் கடாபி ஆட்சியால் வழக்கை எடுத்துக் கொள்ளுமாறு கோரப்பட்டதாக  டுமா ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அவர்களுடைய உந்துதல்கள் எப்படி இருந்தாலும், பிரெஞ்சு மற்றும் மேற்கத்தைய ஏகாதிபத்தியத்தின்  குற்ற நடவடிக்கை லிபிய மக்களுக்கு எதிராக என்பது பற்றி அவர்கள் தொகுக்கும் குற்றச்சாட்டுக்கள் சார்க்கோசி அரசாங்கம் மற்றும் அதன் ஏகாதிபத்திய நட்பு நாடுகளுக்கு சங்கடங்களின் ஆதாரமாக இருக்கும். அதேபோல்தான் PS, PCF மற்றும் போலி இடதுளுக்கும் NPA ஆகியவற்றிற்கும் இருக்கும். இவை அனைத்தும் லிபிய மக்களைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மனிதாபிமானச் செயல் என்றுதான் தலையீட்டைப் பற்றி பொய்யை வலியுறுத்திக் கூறியுள்ளன