சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The “liberation” of Libya

லிபியாவின் "விடுதலை"

Bill Van Auken
22 October 2011

use this version to print | Send feedback

முன்னாள் ஆட்சியாளர் மௌம்மர் கடாபியை நீதிக்கு புறம்பாக படுகொலை செய்த பின்னர், இந்த வாரயிறுதியில் லிபியாவின் நேட்டோ பின்புலத்திலான இடைக்கால தேசிய சபை (NTC) நாடு "விடுதலை" எனப்படுவதானது பூர்த்தி அடைந்துவிட்டதாக அறிவிக்க உள்ளது.

கடாபியின் முன்னாள் நீதித்துறை மந்திரியும் இடைக்கால தேசிய சபையின் தலைவருமான முஸ்தாபா அப்தெல் ஜலீலால் அளிக்கப்பட்ட உரையோடு கொண்டாடப்பட்டு வருவது, லிபிய மக்களின் விடுதலை அல்ல, மாறாக அது காலனித்துவ நாட்களை மீண்டும் கொண்டு வரும் நோக்கத்தோடு தொடுக்கப்பட்ட யுத்தங்களில் பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் வெற்றியாகும்.

அந்நாட்டின் உள்கட்டமைப்பின் பெரும்பகுதிகளை இடித்து ஆயிரகணக்கான ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகளைக் கொல்லும் மற்றும் காயப்படுத்தும் விதத்தில் ஒரு நேட்டோ குண்டுத்தாக்குதல் மூலமாக அது எட்டப்பட்டது. அதன் இறுதி அத்தியாயத்தில், சிர்ட்டின் கடற்கரை நகரத்தைக் காட்டுமிராண்டித்தனமாக கைப்பற்றியதும், கடாபி, அவருடைய மகன் மற்றும் அவருடைய ஆட்சியின் ஏனைய முன்னாள் உறுப்பினர்களைப் படுகொலை செய்ததும் ஒட்டுமொத்த நடவடிக்கையின் குற்றத்தனத்தையே எடுத்துக்காட்டுகின்றன.

"மனிதாபிமான" நோக்கங்களுக்காகவும், கடாபி ஆட்சியிலிருந்து லிபிய மக்களைக் காப்பாற்றுவதற்காகவுமே லிபிய யுத்தம் தொடுக்கப்பட்டது என்ற போலித்தனத்தின் உச்சக்கட்ட வெளிப்பாட்டை இந்த குற்றங்கள் எடுத்துக்காட்டுகின்றன. பொதுமக்கள் மீதான இரத்தந்தோய்ந்த ஒருவிதமான தாக்குதலைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாக எடுத்துரைக்கப்பட்ட அமெரிக்க-நேட்டோ தலையீடு, சிர்ட்டேவில் கிளர்ச்சியாளர்களின் ஒரு இராணுவம் அதையே செய்ய, நேட்டோ அதற்கு விமான பாதுகாப்பை கொடுத்தது.

யுத்தத்தின் தொடக்கத்தில் இருந்தே, புவி-மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களைத் பின்தொடர்வதற்காக அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய சக்திகளால் நடத்தப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கான ஒன்றாகவே அந்த யுத்தம் இருந்து வந்துள்ளது. மத்தியதரைக்கடல் பகுதியின் ஒரு முக்கிய எரிசக்தி-உற்பத்தி நாட்டில் மேற்கின் மேலாதிக்கத்திற்கு சவால்விடுத்து, கடாபி ஆட்சியோடு கணிசமான அளவிற்கு எண்ணெய், உள்கட்டமைப்பு மற்றும் ஆயுத உடன்படிக்கைகளை செய்திருந்த சீனா மற்றும் ரஷ்யாவின்மீது ஒரு கூர்மையான திருப்புமுனையை புகுத்துவதே அவர்களின் யுத்த நோக்கமாகும்.

கடாபியைத் தூக்கியெறிவதில், BP, ConocoPhillips, Total மற்றும் ENI போன்ற பிரதான மேற்கத்திய பெருநிறுவனங்கள் லிபியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களின்மீது மிகவும் இறுக்கமான கட்டுப்பாட்டை ஸ்தாபிக்கும் வாய்ப்பை, நேட்டோ சக்திகள் கண்டன. மேலும் மேற்கில் துனிசியாவிலும், கிழக்கில் எகிப்திலும் இரண்டிலும் எழுந்த மக்களின் எழுச்சிகளால் அதிர்ந்து போயிருந்த அந்த பிராந்தியத்தில் இராணுவ அதிகாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான ஒரு கருவியாக திரிப்போலியில் ஒட்டுமொத்தமாக ஓர் ஒட்டுமொத்த அடிவருடி ஆட்சியை நிறுவவும் அவை பார்த்தன.

அடியாட்களையும், மேற்கத்திய உளவுத்துறை "ஆதரவாளர்களையும்", விலைக்கு வாங்கப்பட்ட முன்னாள் லிபிய அதிகாரிகளையும், அந்நாட்டின் மறுகாலனித்துவத்திற்கு தங்களின் சேவைகளை அர்பணிக்கக்கூடியவர்களையும் கொண்டிருக்கும் ஓர் ஆட்சி தான் திரிப்போலியிலும், பெங்காசியிலும் வடிவெடுக்கும். ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் உள்ள "இடது" என்றழைக்கப்படும் அரசியல்ரீதியாகவும், அறிநெறிரீதியாகவும் மிகவும் சீரழிந்த பிரிவுகளால் மட்டுமே "விடுதலை" மற்றும் "ஜனநாயகம்" என்று இந்த இழிவார்ந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியும்.

நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய இரண்டுமே, லிபியாவில் அமெரிக்காவின் செல்வாக்கை ஸ்திரப்படுத்துவதில் வாஷிங்டன் தீவிர பாத்திரம் வகிக்க வேண்டுமென வலியுறுத்தும் தலையங்கங்களோடு கடாபியின் படுகொலைக்கு வெள்ளியன்று விடையிறுப்பு காட்டின. “அந்த படுகொலை லிபியாவின் மாற்றத்திற்கு முடிவாக அல்லாமல் ஒரு தொடக்கமாக பார்க்கப்பட வேண்டும்,” என்று வாஷிங்டன் போஸ்ட் எழுதியது. “பாதுகாப்பு படைகளுக்கான ஓர் அமெரிக்க பயிற்சி திட்டத்திற்கு லிபியாவின் எண்ணெய் வளத்தை விலையாக கொடுக்கலாம்" என குறிப்பிட்டு, அமெரிக்க "தலைமை எடுக்க வேண்டுமென" அந்த தலையங்கம் வாதிட்டது. "ஒரு ஜனநாயக அரசாங்கத்தின்கீழ் லிபியாவின் ஸ்திரப்பாடானது, சுதந்திரத்தை நாடும் அரேபிய மத்திய கிழக்கில் மாற்றத்திற்கான பரந்த அலையைத் தூண்டிவிட உதவக்கூடும்,” என்று அது குறிப்பிட்டது. அமெரிக்க ஆதிக்கதின்கீழ் இருப்பது என்பதைக் குறிக்க, இங்கே "சுதந்திரம்" என்ற அந்த சொல் அமெரிக்க வெளியுறவு கொள்கையின் பாரம்பரிய வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

"பணத்திற்கு அப்பாற்பட்டு (எண்ணெய் வளத்திற்கு தான் நன்றி கூற வேண்டும், லிபியா அதில் செழிப்பாக உள்ளது) லிபியாவிற்கு நீடித்த தொழில்நுட்ப ஆலோசனையும், முழுநேர ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது,” என்று நியூ யோர்க் டைம்ஸ் ஆலோசனை கூறியது. இதுபோன்ற "அறிவுரை" லிபியாவில் எண்ணெய் உடன்படிக்கை நிபந்தனைகளை திருத்தி எழுதுகையில் உள்ளடக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அமெரிக்க-நேட்டோ இராணுவ தலையீட்டைத் தொடர மறைமுகமாக போலிக்காரணத்தைக் காட்டும் விதத்தில், தரையிலிருந்து வான்வழி ஏவுகணைகள் உட்பட லிபியாவின் ஆயுத கையிருப்புகளை அழிப்பது மற்றும் டஜன் கணக்கான "எதிர்ப்பு" போராளிகள் இருப்பது குறித்து இரண்டு தலையங்கங்களுமே கவலைதோய்ந்த பத்திகளைச் சேர்த்திருந்தன.

மௌம்மர் கடாபியின் காட்டுமிராண்டித்தனமான படுகொலை, வாஷிங்டனால் பகிரங்கமாக கோரப்பட்ட ஓர் அரச படுகொலையாகும். சிர்ட்டேயை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த கடாபியின் பயணத்தை நேட்டோ யுத்தவிமானங்களும், அமெரிக்காவின் ஓர் ஆளில்லா வேட்டை விமானமும் தாக்குவதற்கு வெறுமனே 48 மணிநேரத்திற்கு முன்னதாக, “கிளர்ச்சியாளர்களின் கருணைக்கு அவரை விட்டுவைத்து, திரிப்போலிக்கு பறந்திருந்த வெளிவிவகாரத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட அந்த லிபிய தலைவரை முடிந்தமட்டிற்கும் விரைவாக "பிடிக்க வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டுமென" அழைப்புவிடுத்தார்.

நாசரிசத்தால் (Nasserism) ஈர்க்கப்பட்டிருந்த கடாபி, 1969 செப்டம்பரில் இளம் அதிகாரிகளின் ஓர் ஆட்சி கவிழ்ப்பு திட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார். அவருடைய மரணத்திற்கு நீண்டகாலத்திற்கு முன்னரே, அவர் புரட்சிகர தேசியவாதத்தின் எவ்வித அறிகுறிகளையும் கைவிட்டிருந்தார். அந்த ஆரம்பக்கட்ட நாட்களில், பாரிய காலனித்துவ-எதிர்ப்பு போராட்டங்களோடு பிணைந்த ஒரு தேசிய மற்றும் சமூக திட்டங்களை முன்வைத்துக் கொண்டு, பல நாடுகளில் லிபியாவைப் போன்ற தேசியவாத ஆட்சிகள் அதிகாரத்திற்கு வந்தன.

லிபியாவில், இது அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு முழுவதுமாக அடிபணிந்திருந்த இட்ரிஷ் மன்னரின் ஊழல்மிக்க முடியாட்சியைத் தூக்கியெறிந்தமை மற்றும் ஆபிரிக்க கண்டத்தில் நிறுவப்பட்டிருந்த மிக பிரமாண்டமான அமெரிக்க இராணுவ தளமான வீலஸ் விமானத்தளத்தை மூடியமை, வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களோடு கடுமையான பேரத்தில் ஈடுபட்டமை, மற்றும் தடையாணைகளை நடைமுறைப்படுத்தியமை உட்பட எண்ணெய்யை ஓர் ஆயுதமாக பயன்படுத்த பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பிற்கு (OPEC) அழுத்தம் கொடுத்தமை ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.

அந்த கொள்கை தான் அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஹென்றி கிஸ்சிங்கெர் தலைமையில் கடாபியைக் கொல்லவோ அல்லது தூக்கியெறியவோ இரகசிய நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்க 1969இல் இட்டுச் சென்றது.

அனைத்து தீவிர தேசியவாத ஆட்சியாளர்களைப் போலவே கடாபியாலும், ஏகாதிபத்தியத்திற்கும் சோவியத் ஸ்ராலினிய அதிகாரத்துவத்திற்கும் இடையில் சமாளித்துக் கொண்டு, சர்வதேச சூழலின்கீழ், உபாயங்களுக்கான பெரிய வாய்ப்புகளைப் பெற முடிந்தது. அதேவேளை உள்நாட்டிற்குள் எழுந்த சமூக போராட்டங்களை ஒடுக்க ஒடுக்குமுறை மற்றும் சீர்திருத்தங்களின் ஒரு கூட்டுக்கலவையைப் பயன்படுத்தினார். 1991இல் சோவியத் ஒன்றியத்தின் சிதைவு லிபியாவையும், அதேபோன்ற ஆட்சிகளையும் ஏகாதிபத்திய சக்திகளோடு ஓர் இணக்கத்தை எட்டுவதற்கு செய்தது.

2003இல், ஈராக்கின் அமெரிக்க தலையீட்டையொட்டி, அணு ஆயுதங்களை நோக்கிய எவ்வித விருப்பங்களையும் மறுத்தும், பயங்கரவாதத்தைக் கண்டித்தும், மேற்குடனான உறவுகளை சமாதானமாக்க லிபியா விரும்பியது. அதேவேளை அல்கொய்தாவிற்கு எதிரான உலகளாவிய சிலுவையுத்தத்தில் அமெரிக்க உளவுத்துறையோடு கூடி வேலைசெய்தது. அவர் இந்த போக்கை எடுத்த உடனே, எண்ணெய் உடன்படிக்கைகள், ஆயுத ஒப்பந்தங்கள் மற்றும் ஏனைய ஆதாய உடன்படிக்கைகளுக்காக வாஷிங்டனும் மற்றும் ஒவ்வொரு பிரதான மேற்கு ஐரோப்பிய சக்தியும் கடாபியை அரவணைத்துக் கொண்டன.

இருந்தபோதினும், கடாபியின் ஆரம்பக்கட்ட தீவிரவாதத்தன்மையை ஏகாதிபத்திய சக்திகள் ஒருபோதும் மறந்துவிடவும் இல்லை, அவரை ஒருபோதும் நம்பவும் இல்லை. இவ்விதத்தில், வெகுநீண்டகாலத்திற்கு முன்னர் இல்லாமல் அவரிடம் பணிந்து அன்பைக்காட்டிய அதே அரசியல் நபர்கள், அவரின் குரூர படுகொலையையும் திருப்தியுடன் பார்க்கின்றன.

2009இல் அரசுத்துறையில் இருந்த லிபிய ஆட்சியாளரின் மகன் மௌடெஸ்செம் படுகொலை செய்யப்பட்டதை வரவேற்றிருந்த ஹிலாரி கிளிண்டன் வியாழனன்று கடாபியின் படுகொலை குறித்து கூறுகையில், சிரித்துக்கொண்டே, “நான் வந்தேன், நான் பார்த்தேன், அவர் மரணத்தை என்று அறிவித்தார்.

இது, புதிய மெக்சிகோவில் பிறந்து ஓர் அமெரிக்க குடிவாசியான முஸ்லீம் மதகுரு அன்வர் அல்-அவ்லாகி விஷயத்தில், ஓர் அரச படுகொலைக்கு சொந்தம் கொண்டாட கடந்த ஆறுமாதங்களில் மூன்றுமுறை தொலைக்காட்சி கேமராவின் முன்னால் தோன்றியுள்ள ஒரு ஜனாதிபதியின் தலைமையில், அமெரிக்க அரசாங்கத்தின் அடிதடித்தனத்தைத் தொகுத்தளிக்கிறது.

வியாழனன்று அவர் அளித்த உரையில், “உலகில் அமெரிக்க தலைமையின் வலிமையை நாம் காண்கிறோம்,” என்பதையே கடாபியின் படுகொலை நிரூபித்துள்ளதென ஒபாமா கூறினார்.

இது முட்டாள்தனமானதாகும். வெளியுறவு கொள்கையின் ஓர் தொடர்ச்சியான கருவியாக விளங்கும் படுகொலையென்பது அமெரிக்க பலத்தின் அடையாளமல்ல, மாறாக அது வரலாற்று வீழ்ச்சியாகும். அது பகிரங்கமான வன்முறை நடவடிக்கைகள் மூலமாக ஆழமான நெருக்கடியையும், அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியையும் ஏதாவதொருவிதத்தில் ஈடுசெய்துகொள்ள முடியுமென்ற ஆளும் வர்க்கத்தின் நம்பிக்கையிழந்த மற்றும் அறிவற்ற நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலையீடுகளால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகள், புதிய மற்றும் இன்னும் இரத்தந்தோய்ந்த யுத்தங்களுக்கே மட்டுமே அஸ்திவாரத்தை அமைத்துள்ளன. அமெரிக்கா பின்பற்றும் "மதிப்புகள் மற்றும் நலன்கள்" யுத்தங்கள் வருவதற்கு நீண்டகாலமாகாது என்பது போன்ற பணயத்தில் இருக்குமென உணரப்படும் எந்தவொரு இடத்திலும் அமெரிக்க தாக்குதலை அனுமதிக்கும் ஒரு முன்னெச்சரிக்கை யுத்த கோட்பாட்டை தெளிவாக விளக்க, ஒபாமா லிபிய தாக்குதலைப் பயன்படுத்தியுள்ளார்.

கடாபியின் படுகொலையை விளைவித்துள்ள லிபிய யுத்தம், “மிகஅடிமட்டத்திலான பிற்போக்குத்தனம்" என்று லெனின் விவரித்ததைப் போல, ஏகாதிபத்தியத்தின் நிஜமான குணாம்சத்தை மீண்டுமொருமுறை உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு விளங்கப்படுத்த உதவியுள்ளது. நிதி மூலதனத்தின் நலன்களுக்காக வெளிநாடுகளில் நடத்தப்படும் சூறையாடும் யுத்தங்கள், இறுதியாக தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக திருப்பிவிடப்படும் ஒரு எதிர்புரட்சி கொள்கையின் ஓர் உட்கூறாகும். அவை உள்நாட்டில் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஓர் இரக்கமற்ற தாக்குதலோடு தவிர்க்கமுடியாமல் இணைந்துள்ளது.

வேலைகள், வாழ்க்கை தரங்கள் மற்றும் அடிப்படை உரிமைகளின் அழிப்புக்கு எதிரான போராட்டமும், யுத்தத்திற்கு எதிரான போராட்டமும் ஒன்றைவிட்டு ஒன்றை பிரிக்க முடியாதவையாகும். அவை சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக அணிதிரட்டுதல் மற்றும் சர்வதேச ஐக்கியத்தின் மூலமாக மட்டுமே வென்றெடுக்க முடியும்.