சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP candidate speaks to WSWS

இலங்கை சோ... வேட்பாளர் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசுகிறார்

By Panini Wijesiriwardene
31 July 2012
Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி (சோ...) செப்டம்பர் 8 அன்று நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் இலங்கையின் சபரகமுவ மாகாணத்தில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றது.

ஆனந்த தவுலகல, 64, சோ...யின் 21 வேட்பாளர்களுக்கும் தலைமை வகிக்கின்றார். அவர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பதாகையின் கீழ் அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்துக்கான போராட்டத்தில் மூன்று தசாப்தகால வரலாறு கொண்டவராவார். அவர் சோ...யின் அரசியல் குழு உறுப்பினராக இருப்பதோடு உலக சோசலிச வலைத் தள மொழிபெயர்ப்பு குழுவுக்கும் தலைமை வகிக்கின்றார்
.

ஐக்கிய தேசிய கட்சி (யூ.என்.பீ.) அரசாங்கத்துக்கு எதிரான 1980 பொது வேலைநிறுத்தத்தின் கசப்பான அனுபவங்களை அடுத்து, தவுலகல சோ...யின் முன்னோடியான புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தில் (பு...) சேர்ந்தார். யூ.என்.பீ. அரசாங்கம் அதன் அவசரகால சட்டத்தை பயன்படுத்தி 100,000 அரசாங்க தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியது. பு... அந்த வேலைநிறுத்த இயக்கத்தை அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டமாக மாற்ற முயன்ற போது, தொழிற்சங்கங்கள், எதிர் கட்சிகள் மற்றும் மத்தியதர வர்க்க தீவிரவாத அமைப்புக்களும், வேலைநிறுத்தம் "அரசியல் சாராதது" என்று வலியுறுத்தியதோடு ஜனாதிபதி ஜயவர்தனாவின் அரசாணைகளை சவால்செய்ய மறுத்துவிட்டன. அவர்களின் துரோகத்தின் விளைவாக, யூ.என்.பி. ஏறத்தாழ எதிர்ப்பின்றியே வேலை நீக்கங்களை மேற்கொண்டது.

Ananda Daulagala
Ananda Daulagala

தவுலகலவின் கொள்கைப்பிடிப்பான அரசியல் நிலைப்பாடு காரணமாக பல சந்தர்ப்பங்களில் அவர் பாதிப்புக்குள்ளாகி உள்ளார். கல்வியைத் தனியார்மயமாக்கும் யூ.என்.பீ.யின் வெள்ளை அறிக்கைக்கு" எதிராக  1984ல் பு... பிரச்சாரம் செய்தபோது அவர் கைது செய்யப்பட்டு 21 நாட்கள் தடுத்து வைக்கப்படடார். போலிக் குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர் கூட்டுறவுத் திணைக்களத்தில் செய்த வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இறுதியில் அந்த வேட்டையாடலுக்கு எதிராக பு... மேற்கொண்ட பிரச்சாரத்தின் விளைவாக, அவரை அரசாங்கம் மறுபடியும் வேலைக்கு அமர்த்தத் தள்ளப்பட்டது.

1988-1989  காலத்தில், யூ.என்.பீ. அரசாங்கத்தின் அரச வன்முறைகளையும் தொழிலாள வர்க்கப் போராளிகள் மற்றும் சோசலிசவாதிகளை மக்கள் விடுலை முன்னணி (ஜே.வி.பீ.) பாசிச பாணியில் படுகொலை செய்ததையும் எதிர்த்து, பு... ஒரு தீவிரமான சர்வதேச பிரச்சாரத்தை முன்னெடுத்தது. அச்சமயம், கண்டிக்கு அருகில் பேராதனை பல்கலைக்கழகத்தில் தொழில் செய்த எல்.எச். குணபால உட்பட தீவின் வெவ்வேறு பகுதிகளில் மூன்று பு... உறுப்பினர்கள் ஜே.வி.பீ.யினரால் கொலை செய்யப்பட்டனர். பு...வின் கண்டி கிளை தலைவராக செயற்பட்ட தவுலகல, துணிச்சலுடன் அந்த வன்முறை தாக்குதல்களை எதிர்த்து, உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் பாதுகாக்க, தொழிலாள வர்க்க கட்சிகளின் ஐக்கிய முன்னணி ஒன்றை அமைக்கும் பு...வின் பிரச்சாரத்தில் முக்கிய பங்காற்றினார்.

பாணினி விஜேசிறிவர்தன (பா.வி.): சோ...யின் தேர்தல் அறிவிப்புக்கு தொழிலாளர்கள் மற்றும் ஏனைய ஏழைகள் தட்டினர் மத்தியில் நீங்கள் பெற்ற பிரதிபலிப்பு எத்தகையது?

ஆனந்த தவுலகல (.): முன்னேற்றமான பிரதிபலிப்பு கிடைக்கின்றது. முதலாவதாக, சோ... உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் ஆர்வமான வரவேற்பு இருந்தது. இப்பொழுது நாம் அவர்களது பங்களிப்புடன் ஒரு சக்திவாய்ந்த பிரச்சாரத்தில் ஈடுபடுகிறோம். இதுவரை நாம் கேகாலையில் தேர்தல் அறிவிப்பின் பல ஆயிரக்கணக்கான பிரதிகளை விநியோகித்துள்ளோம். முதல் வாரத்தில் நாம் மருத்துவமனை ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் சிறு விவசாயிகளை சந்தித்தோம்
.

பெரும்பாலானவர்கள் தமது மோசமான வாழ்க்கை நிலைமைகளை விவரித்ததோடு இராஜபக்ஷ அரசாங்கம் பற்றியும் அதன் கடும் சிக்கன நடவடிக்கைகளை பற்றியும் வெறுப்பை வெளிப்படுத்தினர். அவர்கள் இந்த தேர்தல் மூலம் அவர்களது வாழ்வில் எந்தவொரு மாற்றத்தையும் எதிர்பார்க்கவில்லை. உள்நாட்டு போர் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும் எதுவும் முன்னேற்றமடையவில்லை என பலர் கூறினர். அவர்களைப் பொறுத்தவரையில், சமாதானத்தையும் சுபீட்சத்தையும் கொண்டுவருவதாக [ஜனாதிபதி மஹிந்த] இராஜபக்ஷ கொடுத்த வாக்குறுதி ஒரு பெரும் பொய் என்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாம் அவர்கள் எதிர்கொள்ளும் தாக்குதல்களின் உண்மையான வேர்களை விளக்கிய போது, இந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி முதலாளித்துவத்தின் உலகளாவிய வீழ்ச்சியில் இருந்தே தோன்றுகிறது என்பதை விளக்கும் ஒரே கட்சி சோ... மட்டுமே என்பதை அவர்கள் அடையாளம் கண்டுகொள்கின்றனர்
.

சில தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், அமெரிக்கா மற்றும் சீனா இடையே வளர்ந்து வரும் பகைமையை பற்றிய எமது பகுப்பாய்வில் மிகவும் ஆர்வமாக இருந்தனர். வீழ்ச்சியடைந்து வரும் அதன் உலக மேலாதிக்க நிலையை இராணுவப் பலத்தின் மூலம் பாதுகாக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் முயற்சியும், சீனாவின் எழுச்சியை எதிர்க்க ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் மீது திரும்பும் அதன் மூலோபாயமும் நேரடியாக இந்த பிராந்தியத்தை ஆட்டங்காணச் செய்ய அச்சுறுத்துகின்றது. இது 1950 மற்றும் 1960களில் வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாத்திரம் பற்றிய மக்களின் பயங்கரமான நினைவுகளை ஞாபகப்படுத்துகின்றது.

ஏகாதிபத்தியம் மற்றும் அதன் உள்ளூர் முகவர்களுக்கு எதிராக, ஒரு சர்வதேச புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே, உழைக்கும் மக்களால் தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும், போர் அச்சுறுத்தலை தோற்கடிக்கவும் முடியும் என்று நாம் விளக்கினோம். ஏனைய கட்சிகளின் தேசியவாதம் மற்றும் குறுகிய நோக்கங்களுக்கு எதிராக, அத்தகைய ஒரு கலந்துரையாடலை தொடங்குவதே எங்கள் பிரச்சாரத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாக உள்ளது.

பா.வி: உங்கள் பிரச்சாரம் மற்ற கட்சிகள் மற்றும் வேட்பாளர்களில் இருந்து எப்படி வேறுபடுகின்றது?

.: இந்தத் தேர்தலில் போட்டியிடும் ஒரே தொழிலாள வர்க்கக் கட்சி நாங்கள் மட்டுமே. நாம் தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்க ஒரு சர்வதேச வேலைத்திட்டத்தை வழங்குகின்றோம். நாம் கேகாலை பகுதி மக்களின் பிரச்சினைகளையும், அதே போல் அந்த பிரச்சினைகளுக்குரிய சோசலிச தீர்வுகளையும் தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் மக்களின் கவனத்திற்கு கொண்டு வர உத்தேசித்துள்ளோம். ஏனெனில் இத்தகைய சவால்களை தீர்க்க சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் விழிப்புணர்வும் தலையீடும் அவசியமாகும்
.

சமூகப் பிரச்சினைகளுக்கு ஊழல் அல்லது கொள்கைப் பிழைகளே காரணம் என மற்ற கட்சிகள் கூறும் காரணங்களுக்கு நேர் மாறாக, இந்த நெருக்கடி முதலாளித்துவத்தின் கீழ் தீர்க்கப்பட முடியாது என்று சோ... கூறுகின்றது. சோ... வேட்பாளர்களின் தலைவர் என்ற வகையில், பரந்தளவில் மக்களின் கவனத்தை வெற்றிகொள்ளும் எமது இயலுமையை உறுதியாக நம்புகிறேன்.

பா.வி: மற்ற கட்சிகள் சம்பந்தமாக மக்கள் என்ன அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்?

.: குற்றவியல் தமிழர்-விரோத யுத்தத்தையும் சந்தை சார்பு பொருளாதார மறுசீரமைப்பையும் தொடங்கி வைத்த கட்சி யூ.என்.பீ. தான் என்பது மக்களுக்குத் தெரியும். இராஜபக்ஷ அரசாங்கத்தில் சேவையாற்றிய சிங்களப் பேரினவாத ஜே.வி.பீ., அவரை ஜனாதிபதி ஆக்க வேலை செய்ததுடன் அவரது புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை முழுமையாக ஆதரித்தது. உழைக்கும் மக்கள் மீதும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் இந்த அரசாங்கம் தொடுக்கும் தாக்குதல்களுக்கு ஜே.வி.பி.யும் பொறுப்பாளியாகும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (.தொ.கா.), மலையக மக்கள் முன்னணி (..மு.) ஆகியவை அரசாங்க பட்டியலில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்காக, அவை தமிழ் பேசும் தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் தமிழ் இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கின்றன.

அரசாங்கத்தை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் போலி இடதுகளான நவசமசமாஜ கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும் வலதுசாரி யூ.என்.பீ. உடன் ஒரே மேடையில் இருக்கின்றன. தொழிலாள வர்க்கமும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களும் இந்த கட்சிகளை தமது வர்க்க எதிரிகளாக கருத்தில் கொள்ள வேண்டும்.

பா.வி: கேகாலை மாவட்டத்தில் சமூக பொருளாதார நிலைமைகளை உங்களால் விளக்க முடியுமா?

.: கேகாலை மாவட்டத்தில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் கலந்து வாழ்கின்றனர். அவர்களது தொழில்கள் கூட பல்வேறுபட்டவை. தோட்டத் தொழிலாளர்கள், அரசாங்க மற்றும் தனியார் துறை தொழிலாளர்கள், சிறு விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களும் அவர்களில் அடங்குவர்.

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின் படி கூட, மாவட்டத்தின் மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். ஏழை குழந்தைகள் படித்த பல பாடசாலைகள் மூடப்பட்டுவிட்டன.

நிதி வெட்டுக்கள் காரணமாக, கேகாலை பொது மருத்துவமனையில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால், நோயாளிகள் அயலில் உள்ள குருநாகல் மாவட்டத்தின் பொது மருத்துவமனைக்கு போக வேண்டியிருக்கிறது.

விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட உர மானியத்தை அரசாங்கம் கடுமையாக குறைத்துள்ளது. காணி, நீர், உரம் மற்றும் அவர்களின் உற்பத்திப் பொருள்களுக்கான உத்தரவாத விலையைப் பெறுவது போன்ற பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வு, தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் சோசலிச வேலைத்திட்டத்துக்காகப் போராட்டத்துடன் பிணைந்துள்ளது, என்பதை விளக்குவதற்கான ஒரு வாய்ப்பு என்ற வகையில் இந்த பிரச்சாரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் .

கேகாலை பல  தசாப்தங்களாக பப்லோவாத லங்கா சமசமாஜ கட்சியின் (....) ஒரு கோட்டையாக இருந்தது. 1977 வரை, .... தலைவர் என்.எம். பெரேரா, 42 ஆண்டுகள் தொடர்ந்து கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல மற்றும் யட்டியன்தொட தேர்தல் தொகுதிகளை பிரதிநிதித்துவம் செய்தார். அந்த கட்சி அதனது புரட்சிகர நாட்களில் வென்றிருந்த மரியாதையை அது பிரதிபலித்தது. அது 1964ல் சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர்ந்து ட்ரொட்ஸ்கிசத்தை ஒட்டுமொத்தமாக காட்டிக்கொடுத்ததன் விளைவாக அதற்கிருந்த மரியாதையை முற்றிலும் இழந்தது.

அந்தக் காட்டிக்கொடுப்புக்கு எதிராக சோசலிச அனைத்துலகவாதிகளின் போராட்டத்தை நாம் பிரதிநிதித்துவம் செய்கின்றோம். முன்னெப்போதையும் விட, உலக அளவில் அபிவிருத்தியடைந்து கொண்டிருக்கும் வெடிப்புமிக்க சமூக போராட்டங்களுக்கு மிகவும் பொருத்தமான, லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி கோட்பாடுக்கான போராட்டத்தின் பெரும் படிப்பினைகளில் தற்போதைய தலைமுறையை கற்பிப்பதன் பேரில் எமது பிரச்சாரத்தில் இந்த வரலாற்று அனுபவங்களை பற்றி நாம் கலந்துரையாடுகிறோம்.

எனவே, சோசலிச சமத்துவ கட்சிக்கு வாக்களியுங்கள், எமது கட்சியில் சேருங்கள் என்று நான் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். எமது கட்சி, அனைத்துலகிலும் மற்றும் தெற்காசியாவிலும் சோசலிச குடியரசு ஒன்றியங்களை அமைப்பதன் பாகமாக தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை அமைக்கப் போராடுகின்றது
.