சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

In defense of Shakespeare—a conversation with veteran Australian actor and director John Bell

ஷேக்ஸ்பியரை பாதுகாப்பதில்முன்னாள் ஆஸ்திரேலிய நடிகரும், இயக்குனருமான ஜோன் பெல்லுடன் ஒரு கலந்துரையாடல்

By David Walsh
13 December 2011

use this version to print | Send feedback


William Shakespeare

வில்லிம் ஷேக்ஸ்பியருக்கு (1564-1616) சாட்டப்பட்ட மூன்று டஜன் நாடகங்களின் நிஜமான ஆசிரியர், ஆக்ஸ்போர்டு கோமானான (Earl of Oxford) எட்வர்டு டி வெர் (Edward de Vere) என்று வாதிடும், ரோலண்ட் எமெரீச்சால் இயக்கப்பட்ட மற்றும் ஜோன் ஓர்லோஃபால் எழுதப்பட்ட சமீபத்திய Anonymous திரைப்படம், பல கேள்விகளை எழுப்புகின்றது. (பார்க்கவும்Anonymous: An ignorant assault on Shakespeare மற்றும்An exchange: More on the contemporary assault on Shakespeare”) ஷேக்ஸ்பியரும், அவருடைய படைப்பிலிருக்கும் கதாபாத்திரங்களும் அந்த விவாதத்தின் மையத்தில் உள்ளன

ஆக்ஸ்போர்டு பிரபுவிற்கு ஆதரவான வாதங்கள் ஆழமானவை அல்ல என்பதோடு அவரை பாதுகாப்போர் இந்த விசாரணையில் ஆதாயமடைய, தற்போதிருக்கும் பொதுவான குறைந்த மட்டத்திலான வரலாற்று அறிவின் பலனை எடுத்துக்கொள்ள பெரிதும் முயல்கின்றனர். எவ்வாறிருந்தபோதினும், எமது பார்வையில், அந்த நாடகங்களின் மற்றும் ஒட்டுமொத்தமாக ஷேக்ஸ்பியரின் அசாதாரணமான பங்களிப்பிற்கு எதிராக நோக்கம் கொண்ட முயற்சியின் முனைவு, மிகவும் தீவிரமாக உள்ளது.  

ஷேக்ஸ்பியர் மீதான தாக்குதலில், நிஜமான கலைத்துவ மேதைமையை உணராமல் இருப்பதென்பது, 'எலிசபெத்திய காலத்திய அந்த நாடகாசிரியரால் எதார்த்தத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கையும் உணர முடியுமென்ற மற்றும் அவற்றை கவிதைநடையில் வாழ்க்கைக்குள் கொண்டு வர முடியுமென்ற அவருக்கிருந்த நம்பிக்கை உட்பட, அந்த நாடகங்கள் மற்றும் அந்த நாடகாசிரியரின் பரந்தநோக்கம் (universality) நோக்கிய விரோதத்தோடு இணைந்துள்ளது. ஷேக்ஸ்பியர் எனும் கலைஞரின் ஆழத்தையும், விரிவையும் குறித்து, பெரும்பாலும் பாலினம் அல்லது இன அடையாள கொள்கைபிடிப்போடு, தன்னைத்தானே சம்பந்தப்படுத்துவதும், மற்றும் தன்னைத்தானே மையப்படுத்துவதும் ஒரு குறிப்பிட்ட சமகாலத்திய சமூக சூழலுக்கு ஏதோவொருவிதத்தில் அச்சுறுத்தலாகவும், குழப்புவதாகவும் உள்ளது.     

இத்தகைய பொதுவான சில கேள்விகளுடனான ஒரு கவலைக்கு அப்பாற்பட்டு, சமீபத்தில் நான் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய நடிகரும், இயக்குனரும் மற்றும் 1990இல் பெல் ஷேக்ஸ்பியர் நாடக கம்பெனியை ஸ்தாபித்தவருமான ஜோன் பெல்லுடன் உரையாடினேன்.

அவருடைய உயிரோட்டமுள்ள நினைவுக்குறிப்புகளான The Time of My Time என்பதில், கத்தோலிக்க உயர்நிலை பள்ளியில் அவருடைய ஆசிரியர்களில் ஒருவர் நடத்திய ஆங்கில வகுப்பில் A Midsummer Night’s Dream அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஷேக்ஸ்பியரை முதன்முதலில் ஆர்வத்துடன் தெரிந்து கொண்டதாக பெல் (புதிய தெற்கு வேல்ஸின் மெயிட்லாந்தில் 1940இல் பிறந்தார்) விவரிக்கிறார். அதற்கு மேலாக, ஒரு உள்ளூர் சினிமாவில் லாரன்ஸ் ஓலிவரின் Henry V பார்த்ததும், அது அவரை "மலைப்பூட்டியதோடு, ஒளிரூட்டியதாகவும்" இருந்ததாக குறிப்பிடும் அவர், பின்வருமாறு தொடர்கிறார், “நான் என்ன அனுபவபட்டேனென்று என்னால் நம்பவே முடியவில்லை. அதனால் அதை மீண்டும் மீண்டும் சென்று பார்த்தேன். … அதற்கடுத்து வந்த ஆண்டுகளில், ஓலிவரின் Hamlet மற்றும் Richard III வெளியாயின. பின்னர் எனது விதி அடைக்கப்பட்டுவிட்டது.”         

பெல் பல்கலைக்கழகம் சென்று கொண்டிருந்த காலக்கட்டத்தில், சிட்னியில் தொழில்ரீதியில் எந்தவொரு முழு-நேர நாடக கம்பெனியும் இருக்கவில்லை. அவர் ஒரு பேட்டியாளரிடம் கூறியது: “நாடக கம்பெனியில் உங்களுக்கு தொழில்வாய்ப்பு வேண்டுமானால், அங்கே (ஆஸ்திரேலியாவில்) ஒன்றேயொன்று கூட கிடையாது.” 1964இல் இங்கிலாந்திற்கு பயணப்பட்ட பெல், ஆறு மாதங்களுக்குப் பின்னர், பெருமைமிக்க ரோயல் ஷேக்ஸ்பியர் கம்பெனியில் சேர்ந்துகொள்ள அழைக்கப்பட்டார்

1970இல் ஆஸ்திரேலியாவிற்கு திரும்பிய அவர், தேசிய நாடக கலை பயிலகத்தில் ஆசிரியரானார்; பின்னர், சிட்னியில் நிம்ரோடு (Nimrod) நாடக கம்பெனியை இணைந்து ஸ்தாபித்தார்.

இருபத்தியொரு ஆண்டுகளுக்கு முன்னால் அவர் ஸ்தாபித்த ஷேக்ஸ்பியர் கம்பெனிக்காக அவர், Shylock, Richard III, Macbeth, Malvolio, Coriolanus, Leontes, Prospero, King Lear மற்றும் Ulysses ஆகியவற்றோடு ஏனைய கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், அவர் ஷேக்ஸ்பியரின் Romeo and Juliet, The Comedy of Errors, Macbeth, As You Like It மற்றும் Pericles ஆகிய தயாரிப்புகளை இயக்கி உள்ளதோடு, அவற்றோடு சேர்ந்து மெல்வெல்லின் (Melville) Moby Dick, ஹெய்னெர் முல்லரின் மறுபடைப்பான (Heiner Müller) Titus Andronicus, கோகோலின் (Gogol) The Government Inspector, பென் ஜோன்சனின் (Ben Jonson) The Alchemist மற்றும் ஜோன் வெப்ஸ்டெரின் (John Webster) The Duchess of Malfi ஆகியவற்றின் தழுவலையும் இயக்கியுள்ளார்   

பெல் ஷேக்ஸ்பியர் நாடக கம்பெனி ஒன்றுமட்டுமே ஆஸ்திரேலியாவின் நாடுமுழுவதும் சுற்றுபயணம் செய்யும் ஒரே நாடக கம்பெனியாக உள்ளது. தற்போது அது பல்வேறு கல்விசார் வேலைதிட்டங்களுக்கு கூடுதலாக, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஆஸ்திரேலிய மாநிலத்தில் மூன்று நாடகங்களை அரங்கேற்ற, சுற்றுபயணமும் செய்து வருகிறது.

ஷேக்ஸ்பியர் நாடகங்களை நடத்திய இந்த ஓர் அரை நூற்றாண்டின் அவரின் சிந்தனைகளையும், நினைவுகளையும் பெல், On Shakespeare என்ற தலைப்பில், 2011இல் பதிப்பித்தார்.  

நாம் தொலைபேசியில் அவருடன் பேசினோம்.

டேவிட் வால்ஷ்: Anonymous திரைப்படம், இந்த உரையாடலுக்கு அவசியமான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஷேக்ஸ்பியர் மீதான முறையீடு, அவருடைய பரந்தநோக்கு (universality) தான் நம்முடைய மிகவும் பொதுவான கவலையாக உள்ளது: எது இன்றும் பார்வையாளர்களை, நடிகர்களை, இயக்குனர்களை அந்த நாடகங்களை நோக்கி இழுத்து வருகிறது.

உங்கள் நினைவுக்குறிப்பில் நீங்கள் ஷேக்ஸ்பியரை முதன்முதலில் எதிர்கொண்டதைக் குறித்து எழுதியுள்ளீர்கள். அந்த அனுபவத்தையும், அந்த காலகட்டத்தில் உங்களைக் கவர்ந்த அல்லது சக்தியோடு இருந்த சில உட்கூறுகளை நீங்கள் நினைவுகூர முடியுமா?  

ஜோன் பெல்: ஆம், என்னால் கூற முடியும். நீங்கள் விரும்புவதால் கூறுகிறேன், எனக்கு 12 அல்லது 13 வயதிருக்கும் போது, ரேடியோவில் ஜூலியஸ் சீசர் கேட்டது தான், எனது முதல் தரிசனமென்று நான் நினைக்கிறேன். அந்த மொழியால் நான் தடுத்தாளப்பட்டேன். அந்த கவிதை தான் பெரும்பாலும் என்னை நகர்த்தியது. நான் அதுபோன்ற மொழியை ஒருபோதும் கேட்டதே இல்லை.   

நான் ஏறத்தாழ 14 அல்லது 15 வயதிருக்கும் போது, உயர்நிலை பள்ளியில் எனக்கு இரண்டு நல்ல ஆங்கில ஆசிரியர்கள் கிடைத்ததற்கு, நான் அதிருஷ்டம் செய்திருக்க வேண்டும். அவர்கள் வெறுமனே, 'இதை மனப்பாடம் செய்யுங்கள்' என்று கூறி, வகுப்பறையில் பாடத்தைக் கடத்த மாட்டார்கள். ஒருவர், எங்களுக்காக வகுப்பறையில் அந்த நாடகத்தையே நடத்தி காட்டினார். அதன் எல்லா பகுதிகளையும் நடத்தினார். அரங்கங்களையும், ஆடை வடிவமைப்பையும், ஒளியமைப்பையும், ஒட்டுமொத்தத்தையும் குறித்து விவரித்தார்.

அடுத்தது, அதேகாலக்கட்டத்தில் என்று நினைக்கிறேன், எனக்கு 14 அல்லது 15 வயதிருக்கும் போது, நான் லாரன்ஸ் ஓலிவரின் Henry V திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த படம் அந்த அத்தனை உட்கூறுகளையும் ஒட்டுமொத்தமாக கொண்டிருந்தது: அதன் மொழி மிகவும் மலைப்பூட்டுவதாக இருந்தது; இயல்பிலேயே முரட்டுத்தனமான அந்த காட்சியமைப்போ படுநேர்த்தியாக இருந்தது. அது குளோப் தியேட்டரின் ஒரு மறுகட்டமைப்பில் தொடங்குகிறது. அந்த தியேட்டர் முழுவதும் களியாட்டம் நிறைந்திருக்கும்; நடிகர்களும், இரசிகர்களும் ஒருவரோடு ஒருவர் நேரம் கிடைக்கும் போது அதுகுறித்து சிறந்த உணர்வுடன் அலாவுவார்கள். இது, சைகைமொழி-நடிப்பும் வட்டரங்கும் (circus) கொண்டிருந்த அந்த நாடக கம்பெனியோடு நான் முதன்முதலில் எதிர்கொண்டவைகளை எனக்கு நினைவூட்டின.

எனது 15 வயதில் அல்லது ஏறக்குறைய அந்த வயதில், நான் முற்றிலும் மாறியிருந்தேன். நான் ஒரு நடிகராக ஆகி, ஷேக்ஸ்பியர் வேடம் செய்ய விரும்பினேன்.

டேவிட் வால்ஷ்: நீங்கள் வட்டரங்கு (circus) குறித்து குறிப்பீட்டீர்கள் என்று நினைக்கிறேன். இது இன்றும் மக்களைக் கவர்ந்த ஒன்றாக உள்ளது: ஷேக்ஸ்பியரில் உள்ள பாமரநடை மற்றும் கவிநடையின், உயர்-ரக கருத்துக்களின் மற்றும் கீழ்-ரக கருத்துக்களின் குறிப்பிடத்தக்க சேர்க்கையும், நடிகர்கள் மற்றும் கருத்துருக்களின், தனிமனிதவியல்புகளின் மற்றும் சமூக வகைகளின், செல்வந்தர்களின் மற்றும் வாழ்க்கையின் பலவேறுபட்ட வெளிப்பாடுகளின் கலவையும் என, இவை இப்போதும் மக்களை மிகவும் கவர்ந்த ஒன்றாக உள்ளது.

ஜோன் பெல்: முற்றிலும் சரியே. அதுவொரு முழுமையான நாடக கம்பெனி. ஏறத்தாழ ஏனைய ஒவ்வொரு நாடகாசிரியரும், அது டென்னெஸ் வில்லியம்ஸ் அல்லது நியோல் கோவர்டாக இருந்தாலும் சரி, ஹரோல்டு பின்டர் அல்லது சாமுவேல் பெக்கெட்டாக இருந்தாலும் சரி, ஒப்பீட்டளவில் அவர்கள் குறுகிய எல்லைகளுக்குள் வேலை செய்வதை நீங்கள் பார்க்கலாம். ஏனைய அனைத்து கலைஞர்களையும் கடந்து செல்லும் ஷேக்ஸ்பியரால், நீங்கள் குறிப்பிட்டதைப் போல, ஒரேயொரு காட்சிக்குள்ளேயே கூட, சான்றாக The Winter’s Taleஇல், மிகவும் பாமரத்தனத்திலிருந்து மிகவும் விழுமிய நடைக்குச் செல்ல முடியும்.    

அதேநேரத்தில், குளோப் தியேட்டரின் கதாபாத்திரத்தினால் தூண்டப்பட்டதாலேயே, அந்த தியேட்டரில் தாம் இருக்கிறோம் என்பதையும் ஒருவர் எப்போதும் புரிந்து வைத்திருப்பார். அது எவ்வாறு இருந்ததென்ற ஒருவித உணர்வை இலண்டனின் புதிய ஒரு கம்பெனி உங்களுக்கு அளிக்கிறது: அதாவது, நடிகரைச் சுற்றியிருக்கும் பார்வையாளர்கள், பரந்த சூரியவெளிச்சத்தில் இந்த நேரடியான தொடர்பு, உத்திகள் எதுவுமில்லாமல், காட்சித்திரைகள் எதுவுமில்லாமல், அழகழகான ஒளியமைப்புகள் எதுவுமில்லாமல், எவ்வித பிரமைகளும் இல்லாமல் இருக்கிறது.   

டேவிட் வால்ஷ்: ஷேக்ஸ்பியர் தெளிவாக நாளொன்றுக்கு 1,500 முதல் 2,000 மக்களைக் குளோப்பிற்கு வரச்செய்ய கூடியவராக இருந்திருக்கிறார்

ஜோன் பெல்: ஒருவேளை நாம் ஷேக்ஸ்பியரின் பார்வையாளர்களைக் குறைமதிப்பீடு செய்கிறோம். அரங்கத்தின்மீது காய்கறிகளைத் தூக்கிவீசியெறிய விரும்பிய ஒரு பார்வையாளர்கள் கூட்டம், அடுத்த கதவு வழியாக கரடி-வேட்டைக்கு சென்றிருந்திருக்கக்கூடும்.

மேலும், ஷேக்ஸ்பியர் பார்வையாளர் தடுப்புகம்பியை தொடர்ந்து உயர்த்தி வந்தார். அது அவருடைய பார்வையாளர்களுக்கே மிகவும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. நீங்கள் The Comedy of Errors மற்றும் Henry Viஇன் கரடுமுரடான மற்றும் ஆயத்தநிலையிலிருந்து Troilus மற்றும் Cressida வரையில் பார்ப்பீர்களென்றால், அது பார்வையாளர்களின் வசதி, கேட்கும் திறன், பொறுமை மற்றும் அறிவுக்கூர்மையின்மீது செய்யப்பட்ட அசாதாரணமான தீவிர முறையீடுகளாக உள்ளது.      

டேவிட் வால்ஷ்: மொழி முற்றிலும் பகுத்தறிவை கொண்டு செல்வதாகவும், அனைத்து உணர்வுகளையும் தொடும் வகையில் இருந்ததாகவும், உங்களின் நினைவுக்குறிப்பில் கூறியுள்ளீர்கள். நான் ஆச்சரியப்படும் விதத்தில், அதுகுறித்து வேறு ஏதேனும் சிந்தனைகள் உண்டா?

ஜோன் பெல்: அந்த மொழி மொத்த உடலையும், ஆன்மாவையும் பிடித்துக்கொள்கிறது. சந்தங்கள், பண், கவிதைக்குப் பின்னர் அளிக்கப்படும் வெளிப்பாடு என அவற்றையெல்லாம் வார்த்தையில் கூற முடியாது. பொதுவாக நம்மால் எதுகைமோனையாக்க முடியாத சொற்களையும் எதுகைமோனையாக்குதல், வரிகளைக் கேட்ட பின்னரும் உங்களுடனேயே தங்கிவிடும் அந்த சந்தம், என இவற்றையெல்லாம் எல்லா அருமையான கவிதைகளும் செய்கின்றன என்றே நான் கருதுகிறேன். அக்காலக்கட்டத்தின் ஏனைய உரைநடை நாடகங்களிலிருந்த பல நல்ல விஷயங்கள் என்னவென்றால், அவை எழுத்துவடிவில் இருந்தன; அவை எளிமையாக இருந்தன; அவை ஒரு கதையையும் கூட புனைந்துரைத்தன. ஆனால் ஷேக்ஸ்பியரில் இருந்த பண், ஒலியின் தரம், செய்யுளின் ஒவ்வொரு நல்ல வரிகளும், உங்களுடனேயே இருந்துவிடும்.

டேவிட் வால்ஷ்: பிரிட்டனில் 1960களில் ரோயல் ஷேக்ஸ்பியர் நிறுவனத்துடனான உங்களின் அனுபவம் குறித்து கூற முடியுமா?

ஜோன் பெல்: நான் அங்கே சுமார் ஐந்து ஆண்டுகள் இருந்தேன். அதுவரையில் நான் வெகு-குறைவான நடிப்பு பயிற்சியே பெற்றிருந்தேன். சுமார் ஆறு மாதங்கள் நான் Bristol Old Vic schoolஇல் இருந்தேன். பின்னர் ஸ்ட்ராட்போர்டு நாடக கம்பெனியில் சேர அழைக்கப்பட்டேன். அங்கே நான் இருந்த ஐந்து ஆண்டுகளில், தங்களின் உச்சத்தில் இருந்த பீட்டர் ஹால், ஜோன் பார்டன், பீட்டர் புரூக் போன்ற மிகச்சிறந்த இயக்குனர்களோடு பணியாற்றியும், உண்மையிலேயே நடிப்புக்கலை என்றால் என்னவென்பதையும் கற்றேன். பால் ஸ்கோபீல்டு (எனக்கு மிகவும் விருப்பமானவர்), ஐயன் ரிச்சர்டுசன், அயன் ஹோல்ம், ஜிலென்டா ஜேக்சன் போன்ற சில மிக அருமையான நடிகர்களோடும் பணியாற்றினேன்…  

அது மிக அருமையான நடிகர்களின் கலைக்கூட்டமாக இருந்தது. ஒத்திகை அறையில் இருப்பது, அவர்கள் வேலை செய்வதைப் பார்ப்பது, அவர்களோடு அப்போது அரங்கில் இருப்பது என இவ்விதத்தில் உண்மையிலேயே நான் நடிப்புகலையை பயின்றேன். அத்தோடு இயக்குவது குறித்த விஷயங்களிலும் பெரும் வாய்ப்பைப் பெற்றேன். ஆகவே, அனுபவமென்பது முற்றிலும் மதிப்பிட முடியாததென்பதை, நான் கண்டேன். மேலும் ஸ்ட்ராட்போர்டில் ஒருவர் அதிக ஆண்டுகள் இருக்கிறார் என்றால், ஒப்பீட்டளவில் அங்கே அவருக்கு வெகு குறைவான கவனசிதறல்களே இருக்கும். உங்களை நீங்களே முற்றிலுமாக வேலையில் அர்பணித்துவிடுவீர்கள் என்பதே உண்மை உங்களுக்கு ஓய்வும் கிடைக்கும்; வெறுமனே ஒத்திகைகளைப் பார்க்கும் நேரமும் கிடைக்கும்; வேலையைக் குறித்தும் மற்றும் நடந்து கொண்டிருக்கும் விஷயங்களைக் குறித்தும் அசைபோட நேரம் கிடைக்கும்

டேவிட் வால்ஷ்: பீட்டர் புரூக்கின் ஏதேனும் தயாரிப்புகளில் இடம்பெற உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா?

ஜோன் பெல்: துரதிருஷ்டவசமாக எனக்கு மட்டுமே இடம் கிடைத்தது: ஆஸ்ச்விட்ஜ் வழக்குகளின் ஒலிபெயர்ப்பு The Investigation என்று பீட்டர் வெய்ஸினால் நாடகமாக்கப்பட்டது. அது [1965இல்] நடந்த ஒரு பொதுவாசிப்பு மட்டுந்தான். அந்த காலக்கட்டத்தில் மட்டும் தான், நான் அவரை ஒரு இயக்குனராக எதிர்கொண்டேன். ஆனால் உண்மையில் கம்பெனியைச் சுற்றி அவர் நிறைய செய்துவந்தார். உண்மையில், நான் அவருடைய அனைத்து தயாரிப்புகளையும் பார்த்தேன்.  

டேவிட் வால்ஷ்: பால் ஸ்கோபீல்டின் King Lear குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [இது 1971இல் பீட்டர் புரூக்கால் திரைப்படமாக இயக்கப்பட்டது.]

ஜோன் பெல்: நான் அவருடைய Lear நாடகத்தை அரங்கில் சென்று பார்த்ததில்லை. திரைப்படத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. அதைக்கொண்டு அவரை மதிப்பிட முடியாதென நினைக்கிறேன். அதுவும் குறிப்பாக, அதுவொரு நல்ல படமென்றும் நான் கருதவில்லை. அது மிகவும் கருத்தற்றும், சிதைந்தும் இருப்பதாக நினைக்கிறேன். அரங்க தயாரிப்பு குறித்து நான் கேள்விபட்டதிலிருந்து கூறுவதானால், அந்த இயக்குனர் சரியான பாதையில் நகரவில்லை; வெறுமனே அவர் அந்தயிடத்தில் ஸ்கோபீல்டை கொண்டிருந்தார். அந்த திரைப்படத்தின் கேமிரா வேலை குறித்து நான் மிகவும் நனவுபூர்வமாக இருந்தேன். அது ஸ்கோபீல்டின் சக்தியை குழிபறித்தது

டேவிட் வால்ஷ்: [பீட்டர் வெய்ஸின்] Marat/Sadeஇன் போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?

ஜோன் பெல்: ஆமாம். நான் Marat/Sade பலமுறை பார்த்துள்ளேன். மீண்டும், அது திரைப்படத்தைவிட மிகமிக சிறப்பானது. அந்த திரைப்படம் நிறைய நேர்த்தியை மற்றும் மூலத்தில் இருக்கும் பலவற்றை இழந்துவிட்டிருப்பதாக நினைக்கிறேன். இலண்டனில் உள்ள Aldwych திரையரங்கில் அதை நான் பலமுறை பார்த்தேன். அப்போது நான் நாடக கம்பெனியில் இருந்தேன். அதை நாடகமேடையில் பார்த்ததன் உள்பாதிப்பு மலைப்பூட்டுவதாக இருந்தது. அவையெல்லாம் திரைப்படத்தில் கணிசமான அளவிற்கு நீர்த்து போக செய்யப்பட்டிருந்தன.     

டேவிட் வால்ஷ்: நீங்கள் ஒரு நடிகராக வேண்டுமென ஆர்வப்பட தொடங்கிய போது, சிட்னியில் நிரந்தரமான தொழில்ரீதியிலான தியேட்டர் எதுவும் இல்லையென்று உங்களுடைய புத்தகத்தின் ஏதோவொரு புள்ளியில் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்களே.

ஜோன் பெல்: அது, 1960இல், முதன்முதலில் நான் தொழிலுக்கு வந்த போது அவ்வாறு இருந்தது. உண்மையில், நான் அதிருஷ்டசாலியாக இருந்தேன். ஏனென்றால், அப்போது ஒரு நாடக கம்பெனி ஸ்தாபிக்கப்பட்டு இருந்தது. நான் அதில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன். முன்னதாக அங்கே வேறு கம்பெனிகளும் இருந்தன. ஆனால் அவை அமைக்கப்பட்டு பின்னர் தோற்றுப் போயின.

நான் இங்கிலாந்திலிருந்து திரும்பி போது, 1970இல், அங்கே ஒரு தியேட்டர் தொழில்துறை இருந்தது. ஆனால் அது இன்று இருப்பது போல், அருகில் இருக்கவில்லை. ஆஸ்திரேலியா, அசாதாரணமான விதத்தில், கடந்த 40 ஆண்டுகளின் விளைபொருளாக ஒரு சிறந்த ஆரோக்கியமான நாடக கலாச்சாரத்தைக் கொண்டிருக்கிறதென நான் நினைக்கிறேன்.

டேவிட் வால்ஷ்: மிக வெளிப்படையாகவே, அந்நகரமும், நாடும் அசாதாரணமான மாற்றங்களைக் கண்டுள்ளன. அத்தகைய மாற்றங்களுக்கு பல வழிகளில் பொறுப்பான ஒரு தலைமுறையை நீங்களும் கூட சேர்ந்தவராகிறீர்கள். உங்கள் தலைமுறையை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள். அதற்கு முன்னிருக்கும் சவால்கள் என்ன? அது எதை நிறைவேற்ற வேண்டியுள்ளது?  

ஜோன் பெல்: இங்கிலாந்திலிருந்து நான் திரும்பிய போது நான் முக்கியமாக உணர்ந்தது என்னவெனில், ஆஸ்திரேலியா மிகவும் இறுகிப் போயிருந்ததை, அது அதன் சொந்த நாடகங்களை உருவாக்கவில்லை என்பதை, நாம் தொடர்ந்து ஆங்கிலேய முறையை தழுவி கொண்டிருந்ததை உணர்ந்தேன் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு பிரதான நாடக கம்பெனிகளும் ஒரு ஷேக்ஸ்பியரை, ஒரு பேர்னாட்ஷாவை, ஒரு நெயில் சிமோனை, ஒரு பெய்டியூ பார்சை (Feydeau farce) கொண்டிருந்தது அல்லது, என்னவாக இருந்தாலும், இவ்விதத்தில் ஆஸ்திரேலிய உள்ளடக்கத்தைப் பொறுத்த வரையில் மிகவும் குறைவாக இருந்தது. ஆகவே என்னுடைய தலைமுறை அதை திருப்பிப்போட, ஒரு ஆஸ்திரேலிய நாடகக்குழுவை உருவாக்க தீர்க்கமாக உள்ளது

மெல்போர்னில் ஆஸ்திரேலிய நடிப்பு குழு என்ற ஒரு குழு, அந்த வேலையைத் தொடங்கும் விதத்தில், அப்போது 1970இல், நானும் என்னுடைய ஒரு கூட்டாளியும் கிங்ஸ் கிராஸில் நிம்ரோட் நாடக கம்பெனி என்ற ஒரு சிறிய நாடக கம்பெனியை அமைத்து, ஆஸ்திரேலிய படைப்புகளைத் தயாரிக்க தொடங்கினோம். பின்னர் நான் அதை அதற்கடுத்த 14 ஆண்டுகளுக்கு முன்னெடுத்து சென்றேன். அது ஒருவித தொடக்கமாக இருந்தது. இங்கே கொடிகட்டி பறக்கும் ஒரு திரைப்பட தொழில்துறையும் தொடங்கியிருந்தது. நாடக அரங்கம் திரைப்பட தொழில்துறைக்கு புதிய திரைக்கதைகளையும், புதிய திறமையாளர்களையும், மற்றும் நம்முடைய சொந்த பேச்சுவழக்கைக் கேட்க செய்யும் ஒரு விழிப்புணர்வையும் கூட அளித்ததாக நான் நினைக்கிறேன். அதுவொரு முக்கியத்துவம்மிக்க அபிவிருத்தியாக இருந்தது. அந்தளவிற்கு அதற்குமுன்னர் நடந்ததேயில்லை. இங்கே ஒரு நாடக கம்பெனியை நடத்திவரும் கேட் பிளான்செட் போன்ற சர்வதேச திறமைசாலிகளையும் மற்றும் துரதிருஷ்டவசமாக ஹாலிவுட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்ட இதரபல நடிகர்களையும் நாங்கள் உருவாக்கினோம். ஆனால் முன்னொருபோதும் நம்மிடம் இல்லாத ஆஸ்திரேலிய திறமையாளர்களை அங்கீகரிப்பதன் ஆரம்பமாக அது இருந்தது.  

டேவிட் வால்ஷ்: ஆஸ்திரேலிய நடிகர்களின் பிரச்சன்னம் உலகளாவிய திரைப்பட தொழில்துறையில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

ஜோன் பெல்: அது மலைப்பூட்டுவதாக உள்ளது. அவர்கள் அனைவரும் அமெரிக்க பேச்சுவழக்கை திணிப்பதோடு, அமெரிக்களைப் போல காட்டிக்கொள்கிறார்கள் என்பதே என்னுடைய ஒரே கவலை. உலகின் பெரும்பான்மையினருக்கு அவர்கள் ஆஸ்திரேலிய கலைஞர்கள் என்பதே தெரியாது. நம்முடைய சொந்த மொழியை எப்போது அவர்கள் அதிகமாக பயன்படுத்த தொடங்குவார்கள், அமெரிக்கர்களைப் போல காட்டிக்கொள்வதை எப்போது நிறுத்துவார்கள் என்று நான் எதிர்பார்த்திருக்கிறேன்.

டேவிட் வால்ஷ்: அது ஒரு பிரச்சினை தான், ஆனால் அது ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல. சரி, மீண்டும் ஷேக்ஸ்பியருக்கு திரும்புவோம். அவருடைய படைப்புகள் உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அவருடைய படைப்புகளுக்காக அர்பணிக்கப்பட்ட ஒரு நாடக கம்பெனியை நீங்கள் ஸ்தாபித்ததாகவும் குறிப்பிட்டீர்கள். ஆகவே மிகவும் தனிச்சலுகை படைத்த பின்புலங்களைக் கொண்ட மக்களிடம் மட்டுமின்றி, ஏனைய மக்களிடமும் அதேயளவிற்கு தாக்கத்தைக் கொண்டிருக்கும் சக்தியை அந்த நாடகங்கள் பெற்றிருந்ததாக நீங்கள் நம்புகிறீர்களா. பல தசாப்தங்களுக்கு முன்னர் ஷேக்ஸ்பியருக்கு இரசிகர்களிடமிருந்து எந்தளவிற்கு விடையிறுப்பு கிடைத்ததோ ஏறக்குறைய அதேயளவிற்கு சமகாலத்திய இரசிகர்களிடமிருந்து விடையிறுப்பு கிடைப்பது சிரமமென்று நீங்கள் கருதுகிறீர்களா அல்லது இரசிகர்களிடையே மாற்றங்கள் ஏதேனும் இருந்தால், அவை என்ன மாதிரியான மாற்றங்களாக இருக்கின்றன என்பதை அறிய நான் ஆர்வமாக உள்ளேன்.  

ஜோன் பெல்: ஷேக்ஸ்பியரை நடித்து காட்டுகிறோம் என்று கூறிக்கொண்டு, 40 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு பாரம்பரிய வழியில் நாம் மிகவும் மாட்டிக் கொண்டோம் என்று நான் நினைக்கிறேன். அதாவது, Old Vic அல்லது ரோயல் ஷேக்ஸ்பியர் நாடக கம்பெனியை போன்று செய்வதே ஷேக்ஸ்பியரை நடித்து காட்டுவதென்று மக்கள் கருதினர் என்பதைக் குறித்தது. இது அந்தகாலத்திய உடையலங்காரங்கள் மற்றும் அப்போதைய ஆங்கில பேச்சுவழக்கை கையாள்வது என்பதைக் குறித்தது. ஆகவே தயாரிப்புகள் மிகவும் பழமையாக இருந்தன. இசைநாடகத்திற்கும், கூட்டுநடனத்திற்கும் சென்ற மக்கள் அத்தகைய தயாரிப்பு விதங்களையே விரும்பினர். அவர்கள் அவர்களின் கலாச்சார எதிர்பார்ப்புகளோடு ஒத்திருந்தனர். அதற்குமாறாக மிதமிஞ்சி காட்டுவதும், ஆடம்பரமாக காட்டுவதும், நழுவுவதும் வெளிப்படையாகவே 'உயர்-ரக கலை' என்றிருந்தது. கலாச்சாரம் (Culture) என்பது 'C' என்ற தலைப்பெழுத்தோடு இருந்தது.    

கடந்த 40 ஆண்டுகளில் நாங்கள் அதை உடைக்க முயற்சித்து கொண்டிருக்கிறோம். தற்போது 21 ஆண்டு பழைய என்னுடைய நாடக கம்பெனி, எப்போதும் நவீன உடைகளோடு, முழுவதும் ஆஸ்திரேலிய பேச்சுவழக்குடன், அல்லது உங்களுடைய பேச்சுவழக்கு எதுவோ அது போலாந்து, ரஷ்ய, சீன என்னவாக இருக்கிறதோ அதற்கேற்ப பயன்படுத்தி, ஷேக்ஸ்பியர் நாடகத்தை நடத்தி வருகிறது. உங்களின் பேச்சுவழக்கை அல்லது நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்களோ அந்த பேச்சுவழக்கை மறைக்க வேண்டியதில்லை. மேலும் சமகாலத்தில் அதிகமாக காணப்படும் பிரச்சினைகளான இனவாதம், யூத-எதிர்ப்பு, பாலின முரண்பாடு, யுத்த-எதிர்ப்புணர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம். நாடகங்களில் என்ன இருக்கிறதோ அதை தற்போதைய இரசிகர்களுக்கு ஒத்தவிதத்தில் நாடகங்களில் கொண்டுவர கவனம் செலுத்துகிறோம். நாங்கள் அவற்றில் தான் கவனம் செலுத்தி வருகிறோம். அதுவொரு உலகளாவிய பிரச்சினை என்பதால், அதில் நாங்கள் தனித்தில்லை. போலாந்து விமர்சகர் ஜேன் கோட் அவரை அழைத்த விதத்தில், ஷேக்ஸ்பியர் நம்முடைய சமகாலத்தவராக உள்ளார்.

ஷேக்ஸ்பியரை பாடசாலைகளில் எப்போதும் போல பொதுவாக மிக மோசமாக கற்றுத் தருகிறார்கள் என்று நான் கருதுகிறேன். எங்களுடைய கம்பெனியில் ஒரு கல்விக்குழுவைக் கொண்டிருப்பதன் மூலமாக, அதற்கு நாங்கள் எதிர்நடவடிக்கை எடுக்க முயல்கிறோம். அந்த எட்டு இளம் நடிகர்கள், ஆஸ்திரேலியா முழுவதிலும் உள்ள 60,000 மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் பள்ளிகளில் நடிப்புகலைக்காக செலவிடுகின்றனர். அவர்கள் அதன் மூலமாக ஷேக்ஸ்பியரை வகுப்பறைக்குள்ளேயே ஒரு நடிகராக கொண்டு செல்கின்றனர். குறிப்பாக ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கொண்ட குழந்தைகள் நிறைந்த வகுப்பறைகளில், சான்றாக மத்திய கிழக்கு மாணவர்கள் நிரம்பிய வகுப்பறைகளில், ஆசிரியர்கள் ஷேக்ஸ்பியரை கொண்டு செல்ல உதவும் வகையில் நாங்கள் பயிற்சிபட்டறைகளையும், கருத்தரங்கங்களையும் கூட நடத்துகின்றோம்

பழங்குடியின சமூகங்கள், கிராமப்புற சமூகங்களிடையே நாங்கள் செல்லும் போதும், அங்கே அவர்களுக்காக ஷேக்ஸ்பியர் நாடகங்களை நடத்தும் போதும், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருப்பதை நாங்கள் காண்கிறோம். அவர்களுக்கு அதில் எவ்வித பிரச்சினையும் இருப்பதில்லை. அவர்கள் மூன்று அல்லது நான்கு மொழிகளை அவர்களுக்கென சொந்தமாக கொண்டுள்ளனர். அதில் இதுவும் ஒரு மொழியாகி விடுகிறது. அவர்கள் இதை மிகவும் எளிதாக ஏற்றுக்கொள்கின்றனர் என்பதோடு, பெரிய பிரச்சினைகள், அடையாளவாதம், புராணவியல் ஆகியவற்றிற்கும் விடையிறுப்பு காட்டுகின்றனர். அத்தகை சமூகங்களுக்குள் நாங்கள் வேலை செய்கையில், நாங்கள் அந்த நாடகங்களை பல்வேறு பழங்குடியின மொழிகளுக்கு மொழிபெயர்க்கிறோம். அதற்கு கைமாறாக அவர்கள் அவர்களின் மொழியை எங்களுக்கு கற்று தருகின்றனர். ஆகவே கற்பிப்பதில், நாடக பயிற்சியில், மற்றும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அருங்காட்சியக சூழலில் வைக்க விரும்பும் பாரம்பரியவாதிகள் மற்றும் பழமைவாதிகளிடமிருந்து ஷேக்ஸ்பியரை மீட்டெடுப்பதில் என ஒட்டுமொத்தமாக நிறைய செல்பாடுகள் நடந்து வருகின்றன.  

டேவிட் வால்ஷ்: இப்போது கேட்பதொரு சக்திவாய்ந்த கேள்வியாக இருக்கும். உங்களைப் பொறுத்தமட்டில், ஒரு ஷேக்ஸ்பியரோ அல்லது வேறொரு பிரதான கலைஞரோ ஒரு பார்வையாளர் மீது எந்தமாதிரியான அதிகபட்ச தாக்கத்தைக் கொண்டிருக்கிறார்?

ஜோன் பெல்: சுயதிருப்தியை அல்லது சொந்த-பெருமையை பேச நான் விரும்பவில்லை. ஆனால் நாங்கள் மக்களிடையே ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம். இந்த கம்பெனி மூலமாக, நாங்கள் சுமார் இரண்டு மில்லியனுக்கும் மேலான மக்களுக்கு முன்னால் நாடகங்கள் நடத்தியுள்ளோம். இளைஞர்கள் மற்றும் முதியவர்களிடம் இருந்து கிடைக்கும் விடையிறுப்பு ஊக்கமூட்டுவதாக உள்ளது. ஷேக்ஸ்பியர் இந்தளவிற்கு பொழுதுபோக்கிற்கு ஏற்ற, இந்தளவிற்கு மகிழ்விக்க கூடிய ஒருவர் என்பதைக் கூட அவர்கள் அறிந்திருக்கவே இல்லை. இதை நாங்கள் அறிந்துகொள்வோமென்று நாங்களே நினைத்து பார்த்ததில்லை. யார் இந்த மொழிபெயர்ப்பை செய்ததென? மக்கள் கேட்பார்கள். யாரும் செய்யவில்லை, அதுதான் ஷேக்ஸ்பியர். ஆகவே பார்வையாளர்களுக்கு சென்றுசேரும் விதத்தில் மற்றும் தெளிவான ஒரு வழியில் அவற்றை நடித்துகாட்டுவதன் மூலமாக, நாங்கள் ஏதோவொன்றை சாதித்துள்ளோம் என்று நான் கருதுகிறேன். அதுதான் என்னுடைய இலட்சியம். அதை செய்வதற்காகவே நான் இருக்கிறேன். ஆகவே அவ்விதத்தில் நாங்கள் ஒரு வெற்றிச் சாதனையைக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.    

டேவிட் வால்ஷ்: ஒரு நடிகராக, இயக்குனராக அல்லது பார்வையாளராக உங்களுக்கென பிடித்த நாடகங்கள் அல்லது பகுதிகள் உண்டா?

ஜோன் பெல்: பெரும்பாலும் இந்த கேள்வி என்னிடம் கேட்கப்படுவதுண்டு. எந்த குழந்தை உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று கேட்பது போன்ற இதுவொரு பழைய கேள்வி. ஒருவர் இயக்கும் அல்லது நடிக்கும் ஒரு நாடகத்தை அவர் நேசிக்க வேண்டும். ஏனென்றால் அது குறித்து சிந்திப்பது, நடிப்பது, ஒத்திகை பார்ப்பது, அதை வளர்த்தெடுப்பது என்று ஒவ்வொன்றிலும் சுமார் பன்னிரெண்டு மாதங்களாவது நீங்கள் அதில் செலவிட வேண்டியதிருக்கும். ஒவ்வொரு நாடகத்திற்கும் தம்முடைய வாழ்க்கையில் ஓர் ஆண்டாவது ஒதுக்கும் ஒருவர், பின்னர் அதனோடு காதலில் விழுந்துவிடுகிறார்.

நான் மிகவும் வியந்த மற்றும் என்னை மிகவும் மலைப்பூட்டியதென்று King Lear கருதுகிறேன். அதை நான் நிறையமுறை செய்துள்ளேன். இருந்தும், உண்மையில் நான் ஒருபோதும் அந்த மலையில் வெகுதூரம் ஏறிவிடவில்லை. நேர்த்தியிலும், நாடக வகையிலும், அது கொண்டிருக்கும் வெளிப்பாட்டிலும், அனைத்து நாடகங்களில் இருந்து எனக்கு மிகவும் பிடித்தது Henry IV, முதலாம் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் என்று நான் நினைக்கிறேன்.     

டேவிட் வால்ஷ்: நீங்கள் Henry IV என்று குறிப்பிடுகிறீர்கள். முன்னொருநாள் நான் Anonymous மற்றும் ஆக்ஸ்போர்டு கோமானைத் தொடர்புபடுத்தி சிந்தித்து கொண்டிருந்தேன். அட்டை பூச்சிகள் மற்றும் புல்லரிசியின் விலை ஆகியவற்றைக் குறித்து பேசி கொண்டே, விடுதியில் தங்களின் குதிரைகளின்மீது சுமையேற்ற தயாரிப்பு செய்து கொண்டிருக்கும் சுமைதூக்கிகளின் காட்சி [Part I, Act II, Scene I]… அந்த சில காட்சிகள் ஆக்ஸ்போர்டு கோமானால் எழுதப்பட்டிருக்கும் என்ற கருத்து மிகவும் பகுத்தறிவிற்கு ஒவ்வாததாக உள்ளதே.     

ஜோன் பெல்: நிச்சயமாக அர்த்தமற்றதே. நீங்கள் குறிப்பிடும் அந்த காட்சி, வெர்படெம் தியேட்டரின் (verbatim theatre) ஒரு பகுதியென்று நான் நினைக்கிறேன். அந்த இரண்டு நபர்களும் ஜன்னலுக்கு வெளியே புல்லரிசியின் விலை குறித்து பேசிக் கொண்டிருப்பார்கள்; குதிரைகள் குலுங்கி கொண்டிருக்கும் அல்லது வேறு ஏதோ நடந்து கொண்டிருக்கும், அதை ஷேக்ஸ்பியர் மெத்தையில் படுத்துக்கொண்டே கேட்டு கொண்டிருப்பார் என்று நான் நினைக்கிறேன். அது மிகவும் அழகுணர்ச்சியோடு இருக்கும். அடுத்து, ஆக்ஸ்போர்டு கோமான் Bottom மற்றும் Quince மற்றும் Bardolph மற்றும் Pistol மற்றும் Mistress Quickly போன்றவர்களை அறிந்திருப்பார் என்று எனக்கு படவில்லை. இது அவருடைய வரம்பிற்கு வெளியில் இருக்கிறது. அது மிகவும் அர்த்தமற்றிருக்கிறது என்பதில் நான் உடன்படுகிறேன்.   

டேவிட் வால்ஷ்: எங்களுடைய பார்வையில், இது வெறுமனே நாடகங்களை யார் எழுதினார் என்பதன் மீதான ஒரு தாக்குதல் அல்ல. நாடகங்கள் மீதே நடத்தப்பட்ட ஒரு தாக்குதல். அந்த நாடகங்களில் இருக்கும் பிரமாண்டம் மற்றும் பரந்தநோக்கம் குறித்து சிலருக்கு ஏதோ சிரமமாக உள்ளதென்று நான் கருதுகிறேன். அவை மிகவும் பிரமிப்பூட்டுபவை. மேலும் பெண்கள் பெண்களைக் குறித்து மட்டும் தான் எழுத வேண்டும், யூதர்கள் யூதர்களைக் குறித்தும், ஆஸ்திரேலியர்கள் ஆஸ்திரேலியர்களைக் குறித்தும் மட்டும் தான் எழுத வேண்டும் என்பதை நிச்சயமாக நாங்கள் மறுக்கிறோம் இந்த கலைஞரின் உலகளாவிய பிரபலத்திற்கு ஏதோவொன்று காரணமாக உள்ளது. அது மிகவும் சக்திவாய்ந்ததாக நான் கருதுகிறேன்

ஜோன் பெல்: நான் இதில் முற்றிலும் உடன்படுகிறேன்.

டேவிட் வால்ஷ்: “எழுத்தாசிரியர் குறித்த சர்ச்சை" குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்து உள்ளதா அல்லது அதை வெறுமனே நீங்கள் புறக்கணிக்கிறீர்களா?

ஜோன் பெல்: அதை நான் அலட்சியப்படுத்தவே விரும்புகிறேன். அது நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. பல்கலைக்கழகத்தில் நான் அது குறித்து கேள்விபட்டேன். அது கிறிஸ்டோபர் மார்லொவ், அல்லது ஆக்போர்டு, அல்லது பெம்புரோக், அல்லது எலிசபெத் மகாராணியாக கூட இருக்கட்டும். அது கிறுக்குத்தனமான கருத்து. கிறுக்குத்தனமான கருத்துக்களாக உள்ளன. பாருங்கள், மக்களுக்கு பார்லர் (parlor) விளையாட்டுகள் பிடிக்கும்; அவர்கள் இரகசிய சதி தத்துவங்களை விரும்புவார்கள். ஆனால் ஜோனாதன் பேட், ஜேம்ஸ் ஷாபிரோ, ஸ்டீபன் க்ரீன்பாட், பில் பிரெசன் போன்ற சிறந்த மேதைகளிடமிருந்து தற்போது நல்ல எழுத்துக்களின் தொகுப்பு வெளிவருகின்றன என்று நான் நினைக்கிறேன். அவர்கள் அனைவரும் இந்த இரகசிய சதி கோட்பாடுகளுக்கு நல்ல பதில்களை வைத்துள்ளனர். அது அந்தளவிற்கு முட்டாள்தனமாக உள்ளது. மக்களைப் பொறுத்த வரையில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இரகசியம் தேவைப்படுவதாக உள்ளது என்று நான் கருதுகிறேன். மேலும் ஷேக்ஸ்பியர் விஷயம் மிகவும் குழப்பமானது என்பதால் அங்கே ஒரு குழப்பம் நிலவுகிறது.  

உண்மையில், அந்த காலக்கட்டத்தின் பெரும்பாலான நாடகாசிரியர்களைவிட அவருடைய வாழ்க்கை குறித்து நிறைய நல்ல விஷயங்களை நான் அறிவேன். சான்றாக, ஜோன் வெப்ஸ்டெர் குறித்து நமக்கு ஒன்றுமே தெரியாது. பிரபலத்தன்மையில் அவரும் ஷேக்ஸ்பியர் அளவிற்கு இருந்தார். நமக்கு ஷேக்ஸ்பியர் குறித்து இந்தளவிற்கு தெரிந்திருப்பதே குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் தனிமனிதவியல்புரீதியில் அவர் குழப்பமாக இருப்பதாலும், அவருடைய குணாம்சத்தை சுட்டிக்காட்டுவது மிகவும் கடினமாக இருப்பதாலும், மக்கள் அவர்களின் சொந்த ஷேக்ஸ்பியரை உருவாக்க விரும்புகிறார்கள். சிலர் அந்த நாடகங்களின் ஆசிரியராக அவரை பார்க்க விரும்புகின்றனர். ஓரினசேர்க்கையாளர்கள், அவர் ஒரு ஓரினசேர்க்கையாளராக இருந்திருக்கக்கூடும் என்று கூறுவார்கள்; கத்தோலிக்கர்கள், அவர் ஒரு கத்தோலிக்கர் என்று கூறுகின்றனர்; நாத்திகர்கள் வெளிப்படையாகவே அவர் ஒரு நாத்திகர் என்று வலியுறுத்துகின்றனர். நமக்கு என்ன பொருத்தமாக இருக்கிறதோ அந்தவொரு ஷேக்ஸ்பியரை உருவாக்க நாம் அனைவரும் விரும்புகிறோம். அதனால் தான் அவரோடு இணைப்பதே மிகவும் கற்பனையாக இருக்கும் ஒருவரை அவரோடு இணைப்பதைவிட, சில ஆங்கில மேதாவிகளின் காதல்நயமான கருத்தைக் கொண்டுள்ளனர்.

டேவிட் வால்ஷ்: இறுதியாக, நீங்கள் ஏன் ஷேக்ஸ்பியரில் நடிப்பதையும், இயக்குவதையும் தொடர்கிறீர்கள்? இது எந்தமாதிரியான தொடர்ச்சியான முயற்சி என்று ஏதேனும் கூற விரும்புகிறீர்களா

ஜோன் பெல்: சில நேரங்களில், அது என்னை மிகவும் இளமையாக வைத்திருப்பதாக உணர்கிறேன். ஏனென்றால் நடிப்பு, இயக்கம், ஆராய்ச்சி ஆகியவற்றோடு அதுவொரு தொடர்ச்சியான தேடலாக உள்ளது. ஒருவிதமான விடாப்பிடியான விஞ்ஞானிகளைப் போல, வாழ்வின் ஒரு விஷயத்தால் ஆட்கொள்ளப்பட்ட ஒருவரைப் போல, கண்டுபிடித்துக் கொண்டே, ஆராய்ந்து கொண்டே, அதனால் சந்தோஷப்பட்டு கொண்டே செல்வதாக நான் நினைக்கிறேன். தங்களின் தொழில்வாழ்க்கையில் சலித்துப்போய், 'இதை நான் வெறுமனே பணத்திற்காக செய்கிறேன்,' 'நான் வாழ்வதற்கு சம்பாதிப்பதற்காக இந்த டிவி சோப் படத்தில் அல்லது இந்த இரண்டாந்தர படத்தில் இருக்கிறேன்' என்று கூறும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். நான் ஒருபோதும் அவ்வாறு உணர்ந்ததில்லை. நான் ஒருபோதும் சோர்ந்து போய், தளர்ச்சி அடைந்ததில்லை. இது எப்போதும் புத்துயிர் அளிப்பதாக உள்ளது. என்னுடைய 15 வயதில் முதன்முதலாக ஷேக்ஸ்பியரைக் கண்டறிந்த போது எவ்வாறு உணர்ந்தேனோ, இப்போதும் நான் அதைபோன்றே உணர்கிறேன்.