சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

European crisis sets off slide to global slump

ஐரோப்பிய நெருக்கடி உலகளாவிய மந்தநிலைமைக்கு களம் அமைக்கிறது

Nick Beams
4 July 2012

use this version to print | Send feedback

ஐரோப்பிய நிதியியல் நெருக்கடியானது, உலகின் ஏனைய பொருளாதாரங்களையும் ஓர் ஆழ்ந்த மந்தநிலைமைக்குள் இழுத்துச் செல்ல அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு பொருளாதார சுழலை உருவாக்கி வருகிறது

அமெரிக்காவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பெரு மந்த நிலை (Great Recession) என்றழைக்கப்படும் ஒன்று ஏற்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர்—இந்த மூன்றாண்டு காலத்திற்குள் முந்தைய மீட்சிகளின் போது பொருளாதார விரிவாக்கம் நன்கு அபிவிருத்தி அடைந்திருக்கக்கூடும்—சமீபத்திய புள்ளிவிபரங்கள் அமெரிக்க உற்பத்தி சுருங்க தொடங்கியுள்ளதாக எடுத்துக்காட்டுகின்றன.

பல பொருளாதார நிபுணர்களின் அனுமானங்களுக்கு முரணாக, மே மாதம் 53.5இல் இருந்த பொருளாதார நடவடிக்கைகளின் மீதான வினியோக மேலாண்மை மையத்தின் குறியீடு ஜூனில் 49.7ஆக குறைந்துள்ளதாக எடுத்துக்காட்டியது. குறியீடு 50க்கு கீழ் இருப்பதென்பது (இந்த அளவு ஒருமோசமான வெளிப்பாடுஎன்று வரையறுக்கப்படுகிறது) அமெரிக்க பொருளாதாரம் யூரோ மண்டல நிதியியல் நெருக்கடியால் படுமோசமாக பாதிக்கபட்டுள்ளது என்பதைக் குறிப்பதாகும்

ஐரோப்பாவில், உற்பத்தி செயற்பாடுகள் ஆகஸ்ட் 2011இல் இருந்து ஒவ்வொரு மாதமும் வீழ்ச்சி கண்டு வந்துள்ளது. குறிப்பாக, யூரோ மண்டலத்தின் மிகப் பெரிய பொருளாதாரமும், இதுவரையில் நெருக்கடியால் மிகவும் குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளதுமான ஜேர்மனியில் ஜூன் மாத உற்பத்தி செயல்பாடுகளின் புள்ளிவிபரங்கள் 2009ஜூன் மாதத்திற்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் அதன் மிக வேகமான வீழ்ச்சி விகிதத்தை எடுத்துக்காட்டுகின்றன.

யூரோ மண்டல வேலையின்மை விகிதம் மே மாதத்தில் 11.1 சதவீதத்திற்கு உயர்ந்ததாக திங்களன்று அறிவிக்கப்பட்டது. இது ஒரே செலாவணி முறையின் வரலாற்றில் மிக உயர்ந்தபட்ச அளவாகும். ஸ்பெயினிலும் வேலைவாய்ப்பின்மை மீண்டுமொரு முறை அதிகரித்தது. அங்கே வேலையின்மை விகிதம் ஏறத்தாழ 25 சதவீதமாக உள்ளது. கிரீஸ் மற்றும் ஸ்பெயினில் இளைஞர் வேலைவாய்ப்பின்மை சுமார் 52 சதவீதமாகும்.

ஐரோப்பிய பொருளாதாரத்தின் மோசமடைந்துவரும் நிலைமையானது (இது இந்த ஆண்டின் இறுதியில் உத்தியோபூர்வமாக பெருமந்த நிலையில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது), இந்த வாரத்தின் இறுதியில் கூடும் ஐரோப்பிய மத்திய வங்கியின் கூட்டத்தில் முதன்மை வட்டிவிகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாக குறைக்கப்படுமென்ற, பல காலாண்டுகளாக எதிர்பார்க்கப்படும் அனுமானங்களை முன்கொண்டு வந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் உலக பொருளாதாரம் இரண்டின் மீதான ஆய்வறிக்கை வெகு சில மாதங்களுக்கு முன்னரே கணிக்கப்பட்டதையும் விட மோசமாக இருக்கும் நிலையில், பேங்க் ஆஃப் இங்கிலாந்தும் கூட, நிதியியல் அமைப்புமுறைக்குள் கூடுதலாக நிதியைப் பாய்ச்சி, இன்னும் கூடுதலாக "பணத்தைப் பாய்ச்சும்" நடவடிக்கையில் (quantitative easing) இறங்கக்கூடும்.

ஆனால் இதுபோன்ற முறைமைகள் நிலைமையைத் தணிக்க சிறிதே உதவும் அல்லது அதுவும் கூட செய்ய முடியாமல் போகும். கடந்த ஆறு மாதங்களில் ஐரோப்பிய வங்கியியல் அமைப்புமுறைக்குள் 1 ட்ரில்லியன் யூரோவிற்கும் அதிகமாக ஐரோப்பிய மத்திய வங்கி பாய்ச்சி இருந்தபோதினும், தோற்றப்பாட்டளவில் இந்த பணத்தில் எதுவும் புதிய முதலீட்டு திட்டங்களுக்குள் செல்லவில்லை என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இது நிதியியல் சந்தை செயற்பாடுகளுக்காக ஏறத்தாழ பிரத்யேகமாக வங்கிகளால், மிக பெரும்பாலும் அரசு பத்திரங்களை வாங்குவதில், பயன்படுத்தப்பட்டுள்ளன

கடந்த நான்கு ஆண்டுகளில் உலக வளர்ச்சியை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகித்திருந்த நிலையில், சீனாவில் வீழ்ச்சி திரும்புவதென்பது ஐரோப்பாவில் சூழும் மந்தநிலைமை மற்றும் அமெரிக்காவின் மோசமான பொருளாதார ஆய்வறிக்கை ஆகியவற்றையும் விட குறைந்த முக்கியத்துவம் கொண்டிருக்கவில்லை.

மார்ச் 2009இல் இருந்து ஏற்றுமதி கொள்வனவுகள் அவற்றின் குறைந்தபட்ச அளவை எட்டியிருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. மே மாதம் 50.4ஆக இருந்த உத்தியோகபூர்வ நுகர்வு மேலாண்மை குறியீடு (PMI), கடந்த மாதம் 50.2ஆக வீழ்ச்சி அடைந்தது. வெறும் 50க்கு சற்றே கூடுதலாக இருப்பதென்பது தேக்கநிலைமையைக் குறிப்பதாகும். வங்கியியல் துறையின் பெரும் நிறுவனமான HSBCஆல் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சீனாவிற்கான PMI, அதன் ஏற்ற-இறக்க மாற்றங்களுக்குப் பின்னர் 48.2ஆக வீழ்ந்திருந்ததை எடுத்துக்காட்டியது. இது கடந்த ஆண்டு நவம்பருக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் மிக குறைந்த அளவாகும்.       

பொருளாதாரம் சுருங்குவதைக் குறித்த மற்றொரு அறிவிப்பில், கடந்த தசாப்தத்தில் 12 சதவீத சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதமாக இருந்த சீனாவின் மின் உற்பத்தியோடு ஒப்பிடுகையில், ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் அது வெறுமனே 1.7 சதவீதம் மட்டுமே அதிகரித்திருந்ததாக சீனாவின் தேசிய புள்ளிவிபரங்கள் ஆணையம் அறிவித்தது.

உலகளாவிய 2008 நிதியியில் நெருக்கடி தொடங்கிய பின்னர் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த மீட்பு முறைமைகளுக்கு ஒத்த வகையில் சீன அரசாங்கமும் கூடுதல் மீட்பு முறைமைகளை கொண்டு வர வேண்டிய அழுத்தத்தின் கீழ் உள்ளது. ஆனால் இதுபோன்ற முறைமைகளை மீண்டும் மீண்டும் கொண்டு வர முடியாது. ஏனென்றால் மத்திய அரசால் உத்தரவிடப்பட்ட பெரும் கடன் விரிவாக்க நடவடிக்கைகள் ஒரு ரியல் எஸ்டேட் குமிழிக்கும் மற்றும் பெரும் உள்கட்டமைப்பு திட்டங்களைக் கட்டுவதற்கும் இட்டு சென்றது. அவை தற்போது அரசு வங்கிகளின் நிதியறிக்கையில் திரும்பிவாரா கடன்கள் அல்லது சந்தேகத்திற்குரிய கடன்களின் வடிவத்தில் காணப்படுகின்றன

உலக முதலாளித்துவம் ஒரு "மீட்சியைப்" பெறக்கூடிய ஒரு வீழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கவில்லை, மாறாக அது ஒரு உடைவிற்குள் நுழைந்துள்ளது என்ற உலக சோசலிச வலைத்தளத்தால் செய்யப்பட்ட பகுப்பாய்வை உலக பொருளாதாரத்தின் சமீபத்திய போக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த நிலைமைகளில், சரியான கொள்கைகளைக் கையாண்டால் மட்டுமே பெரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் மந்தநிலைக்கு ஏதாவது மாற்றீடு காண முடியுமென்ற மோசடி வித்தைகளைக் காட்டுவதை தவிர ஆளும் வர்க்கத்திற்கு வேறு எதுவும் பெரிய அரசியல் முக்கியத்துவம் இல்லை. இது தான் நியூ யோர்க் டைம்ஸின் கட்டுரையாளரும், முன்னணி கெய்னீசிய பொருளியல்வாதி (Keynesian economist) போல் கிரெக்மேனால் வெளியிடப்பட்டதும், கடந்த வாரம் பைனான்சியல் டைம்சில் பிரசுரிக்கப்பட்டதுமானA Manifesto for Economic Sense” என்பதன் முக்கியத்துவமாக உள்ளது.

கிரெக்மேனின் கருத்துப்படி, “1930களின் அனைத்து எச்சசொச்சங்களால் உலகின் முன்னேறிய பொருளாதாரங்கள் ஆழமாக அழுத்தப்பட்டுள்ளன.” அந்த தசாப்தத்தின் தவறான கொள்கைகள் மீண்டும் அனுசரிக்கப்பட்டதே நாடுகளின் இந்த கொடூரமான நிலைமைகளுக்கு காரணமாகும். அவர் தொடர்ந்து எழுதுகிறார், “அவற்றின் தவறான கருத்துக்களின் விளைவாக, பல மேற்கத்திய கொள்கை முடிவெடுப்பவர்கள் அவர்களின் மக்களின் மீது பெரும் துன்பங்களைத் திணித்துள்ளனர்,” என்கிறார்.   

இது தான் "தீய மனிதன்" எனும் வரலாற்று தத்துவத்தின் ஒரு பொருளாதார வடிவமாகும். ஆளும் மேற்தட்டின் சித்தாந்தவாதிகள் பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்று நெருக்கடிகள் மற்றும் முரண்பாடுகள் எழும் போதெல்லாம், ஒரு பேரழிவு மனிதயினத்தை மூழ்கடிக்கும் அச்சுறுத்தல் எழும் போதெல்லாம் அவர்களால் இது தான் எப்போதும் பயன்படுத்தப்படுகிறது.

அவருடைய முன்மொழிவு கையாளப்பட்டால் என்ன நடக்கும் என்று நாம் நினைத்து பார்த்தால் போதும், அரசாங்கங்களும் மற்றும் நிதியியல் அதிகாரங்களும் திரு. கிரெக்மேனின் புத்திசாலித்தனமான ஆலோசனையைக் கேட்டு நடந்தால் உலக பொருளாதாரம் மீட்கப்படும் என்ற கருத்து உடனடியாக நிராகரிக்கப்பட்டுவிடும்.

அமெரிக்காவிலோ அல்லது ஏனைய எந்த அபிவிருத்தி அடைந்த முதலாளித்துவ பொருளாதாரத்திலோ—வங்கி பிணையெடுப்புகள் அல்லாமல்—ஏதேனும் உண்மையான மீட்பு செலவின முறைமைகளைத் திருப்புவதென்பது உடனடியாக ஒரு செலாவணி மற்றும் நிதியியல் நெருக்கடியைக் காணச் செய்யும். அது இன்னும் கூடுதலான பெரும் வேலைவாய்ப்பின்மைக்கு இட்டு செல்லும் என்பதோடு, தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களையும் ஆழப்படுத்தும். 1930களில், ரூஸ்வெல்டின் "புதிய உடன்படிக்கை" (New Deal) ஒரு "மீட்சியை" கொண்டு வரவில்லை—அது இரண்டாம் உலக யுத்தத்தை மட்டுமே தொடங்கி வைத்தது. ஆனால் இன்று ரூஸ்வெல்டின் மட்டுப்பட்ட பொருளாதார பரிசோதனைகளுக்கும் கூட இடமில்லை, ஏனென்றால் அமெரிக்காவின் உலகளாவிய பொருளாதார நிலைமை வரலாற்றுரீதியிலான வீழ்ச்சிக்கு வந்துள்ளது.   

சர்வதேச தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்த வரையில், ஆழமடைந்துவரும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கான பாதை கிரெக்மேனால் மற்றும் ஏனையவர்களால் முன்னெடுக்கப்படும் கற்பனைகளை திணிக்கும் முயற்சிகளில் இருந்து தொடங்குகிறது. 1930களில் ஏற்பட்ட பேரழிவுகளின் ஒரு தொடர்ச்சியை அல்லது அதைவிட மோசமான ஒரு பேரழிவுகளைத் தடுக்க, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கம் இந்த இலாபகர அமைப்புமுறையைத் தூக்கியெறிந்துவிட்டு, உலக பொருளாதாரத்தை சோசலிச அடித்தளங்களின் மீது மறுகட்டுமானம் செய்யக்கூடிய தொழிலாளர்

அரசுகளை ஸ்தாபிக்க ஒரு அரசியல்ரீதியிலான போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும்.