சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP and ISSE to hold May Day meeting

இலங்கை சோ... மற்றும் ஐ.எஸ்.எஸ்.. நடத்தும் மே தினக் கூட்டம்

23 April 2013

use this version to print | Send feedback

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும், சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டும் தெற்காசியாவிலும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள தவிர்க்க முடியாத அரசியல் பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடவும், மே 1 அன்று கொழும்பு புறநகர் பகுதியான தெஹிவளையில் பொதுக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளன.

1930களின் பின்னர் இப்போது ஏற்பட்டுள்ள மாபெரும் பொருளாதார வீழ்ச்சி, புதிய உலக யுத்தத்துக்கான நிலைமைகளை உக்கிரமடையச் செய்கின்ற நிலையில், உலகம் பூராவும் தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும், முழு மனித நாகரீகத்தையே நாசம் செய்யக்கூடிய அதிகரித்துவரும் போர் ஆபத்தை எதிர்கொள்கின்றனர். உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்கள், பொருளாதார நெருக்கடியின் சுமைகளை சிக்கன நடவடிக்கைகள் என்ற வடிவில் மக்கள் மீது இறக்கி வைக்கின்ற நிலைமையின் கீழ், தொழிலாள வர்க்கத்தின் தொழில், சம்பளம், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் உக்கிரமடைந்து வருகின்றன.

தனது வரலாற்றுப் பின்னடைவில் இருந்து தலைதப்ப முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம், உலகம் பூராவும் தனது இராணுவப் படைகளை நிலை நிறுத்துவதை அதிகரித்துள்ளதோடு, இப்போது தனது பிரதான எதிரியாக அது கருதும் சீனாவுக்கு எதிரான போரைத் தயார் செய்தவாறு ஆசியாவின் பக்கம் மூர்க்கமாக திரும்பியுள்ளது. சீனாவுடனான பிராந்திய முரண்பாடுகளை அதிகரிக்க ஜப்பான், வியட்னாம் மற்றும் பிலிப்பைன்சை ஊக்குவித்துள்ள ஒபாமா நிர்வாகம், இப்போது ஆஸ்திரேலியாவுடன் தனது பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தியுள்ளதுடன் கொரிய தீபகற்பத்தில் இராணுவ மோதலுக்கு எண்ணெய் வார்க்கின்றது.

வாஷிங்டன் இந்தியாவுடன் மூலோபாய கூட்டை அபிவிருத்தி செய்துகொண்டு, அதை சீனாவுக்கு எதிரான ஒரு சக்தியாக சரியீடு செய்யும் இலக்குடன் இந்தியாவை வளைத்துப் போட்டுக்கொள்ளும் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ள நிலையில், தெற்காசியா அமெரிக்காவினால் தூண்டிவிடப்பட்ட ஒரு இராணுவ மோதலின் மோதல் களமாக ஆகக் கூடும். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க யுத்தம், ஆப்-பாக் யுத்தமாக மாறி, இப்போது பாகிஸ்தான் பிராந்தியங்களுக்கு யுத்தம் விரிவாக்கப்பட்டுள்ளதுடன் ளில்லா விமானங்கள் பொது மக்களை படுகொலை செய்வது அதிரித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தை, சீனாவுடனான நெருக்கமான உறவில் இருந்து தூர விலகுமாறு அமெரிக்கா நெருக்குகின்ற நிலையில், இலங்கையும் அதன் ஆபத்தான நீர்ச்சுழிக்குள் இழுபட்டுக்கொண்டிருக்கின்றது.

போர் அச்சுறுத்தல், ஜனநாயக உரிமைகள் மீதான உக்கிரமடைந்து வரும் தாக்குதல்கள் மற்றும் ஆழமடைந்துவரும் சமூக சமத்துவமின்மையை தோற்கடிப்பதற்கான ஒரே வழி, சர்வதேசிய சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்டு சர்வதேசிய ரீதியில் ஐக்கியப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதேயாகும். சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளும் மட்டுமே, அந்த புரட்சிகர முன்நோக்கிற்காக போராடுகின்றன. நாம் எமது கூட்டத்திற்கு வருகை தந்து கலந்துரையாடலிலும் பங்குபற்றுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

திகதியும் நேரமும்: மே 1, புதன், மாலை 3.00 மணி

இடம்: எஸ்.டி.எஸ். ஜயசிங்க மண்டபம், தெஹிவளை

பிரதான உரை: சோசலிச சமத்துவக் கட்சி பொதுச் செயலாளர் விஜே டயஸ்