சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The US media and the debacle in Iraq

அமெரிக்க ஊடகங்களும் ஈராக்கிய தோல்வியும்

Bill Van Auken
17 June 2014

Use this version to printSend feedback

நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஒட்டுமொத்தமாக இதர முக்கிய செய்தி ஊடங்களின் நன்கு சம்பாதிக்கும் பண்டிதர்கள் எழுதிய பொய்யான மற்றும் சுயசேவைக்கு உதவும் கட்டுரைகளை விட, கான்சாஸில் உள்ள போர்ட் லீவன்வொர்த் இராணுவ சிறைச்சாலை கூடத்திலிருந்து செல்சியா (பிராட்லி) மேனிங் எழுதிய ஒரு கட்டுரை ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தோல்விக்கான நிஜமான ஆதாரங்களை எவ்வளவோ அதிகமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.

ஞாயிறன்று நியூ யோர்க் டைம்ஸில் பிரசுரிக்கப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அந்த அமெரிக்க சிப்பாயின் கட்டுரை, பொய்களின் அடிப்படையில் தொடங்கப்பட்ட ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தை அமெரிக்க மக்களிடையே கொண்டு செல்வதில் அரசாங்க இரகசியத்தன்மையின் பாத்திரத்தையும், ஊடகங்களின் கட்டுப்பாட்டையும் அம்பலப்படுத்துவதாக இருந்தது.

அமெரிக்காவினால் பயிற்சி அளிக்கப்பட்ட மற்றும் நிதியுதவி வழங்கப்பட்ட ஈராக்கிய இராணுவத்தின் திடீர் பொறிவும் அந்நாடு முழுமையாக குறுங்குழுவாத உள்நாட்டு யுத்தத்திற்குள் வீழ்வதும் எதை எடுத்துக்காட்டுகிறதென்றால் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் யுத்தங்கள் மீதான சுமார் 700,000 இரகசிய ஆவணங்களையும், அத்தோடு உலகம் முழுவதும் பின்பற்றப்பட்ட அமெரிக்க வெளியுறவு கொள்கையின் அயோக்கியத்தனத்தையும் விக்கிலீக்ஸிற்கு வெளியிட அவரை உந்தியிருந்த கவலைகள் எதுவும் "தீர்க்கப்படவில்லை" என்பதை மட்டுமே எடுத்துக்காட்டுவதாக மேனிங் குறிப்பிடுகிறார்.

அரசாங்கம் மற்றும் ஊடகங்களால் நிர்வகிக்கப்பட்ட இரகசியத்தன்மை மற்றும் முறைகேடான தகவல்களின் சுவர் இடிக்கப்பட்டமை அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்தின் கடுங்கோபத்தைத் தூண்டிவிட்டது. இராணுவ சிப்பாயும், முன்னாள் உளவுத்துறை பகுப்பாய்வாளருமான அவர் இப்போது 35 ஆண்டு கால சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். ஏப்ரலில் ஓர் இராணுவ தளபதி அவரது கருணை மனுவை நிராகரித்தார்.

நான்காண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க ஆக்கிரமிப்பால் நியமிக்கப்பட்ட பிரதம மந்திரி நௌரி அல்-மலிக்கியின் 2010 நியமனத்திற்கு அமெரிக்க விடையிறுப்பை மேனிங் ஆராய்கிறார். அமெரிக்க யுத்தம் "ஒரு நிலையான மற்றும் ஜனநாயக ஈராக்கை உருவாக்குவதில் வெற்றி" பெற்றுள்ளது என்ற பிம்பத்தை உருவாக்கும் நோக்கில், அமெரிக்க பத்திரிகைகள் "அந்த தேர்தல்களை ஒரு வெற்றியாக அறிவித்த செய்திகளால் நிரம்பி இருந்தன,” என்று சிறையிலிருக்கும் அந்த சிப்பாய் நினைவுகூர்கிறார்.

அதே காலப்பகுதியில், பாக்தாத்தில் இருந்த அவரும் (மேனிங்) அவரது ஏனைய இராணுவ பகுப்பாய்வாளர்களும் மலிக்கியின் சார்பாக செயல்படும் "ஈராக்கிய உள்நாட்டு மற்றும் மத்திய பொலிஸ் அமைச்சகம் அரசியல் அதிருப்தியாளர்களை கொடூரமாக ஒடுக்கிய" செய்திகளைத் தொடர்ந்து பெற்று வந்ததாக அவர் எழுதுகிறார். அமெரிக்க ஆதரவிலான பிரதம மந்திரியின் எதிர்ப்பாளர்கள் "பெரும்பாலும் சித்திரவதை செய்யப்பட்டனர், அல்லது கொல்லப்பட்டனர்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.

மலிக்கி அரசாங்கத்தின் மீது ஒரு விமர்சனத்தை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட 15 நபர்களுக்கு "பயங்கரவாதத்தோடு முற்றிலுமாக எந்த தொடர்பும் இல்லை" என்று கிழக்கு பாக்தாத்தின் அமெரிக்க தளபதிக்கு அவர் தெரிவித்ததாக குறிப்பிட்டு, அந்த குற்றங்களில் அமெரிக்க இராணுவம் நேரடியாக உடந்தையாய் இருந்ததை மேனிங் அம்பலப்படுத்துகிறார். “அவருக்கு இந்த தகவல் தேவையில்லை என்றும், அதற்கு பதிலாக, இன்னும் அதிகமாக 'ஈராக்கிய-விரோத' அச்சுக்கூடங்களைக் கண்டறிவதில் நான் பெடரல் பொலிஸிற்கு உதவ வேண்டுமெனவும்" அந்த தளபதி பதிலளித்தார்.

அந்த தேர்தல் மோசடியில் நமது இராணுவம் உடந்தையாய் இருந்ததால் நான் அதிர்ச்சி அடைந்தேன். இருந்த போதினும் அந்த ஆழமான பிரச்சினைக்குரிய தகவல்கள் அமெரிக்க ஊடகங்களின் ராடார்களின் வழியாக பறந்து சென்றிருந்தன,” என்று அவர் எழுதுகிறார்.

இந்த கணக்கு, ஈராக்கிய தோல்வி "மொத்தமாக மலிக்கியின் தவறாகும்" என்று இப்போது அமெரிக்க ஊடகங்கள் ஒரே குரலில் பாடுவதை பொய்யாக்குகிறது.

ஈராக்கில் இருந்த அபிவிருத்திகளுக்கும், “உள்ளிணைந்த" இதழாளர்களின் ஒரு அமைப்பு மூலமாக யுத்த செய்திகள் மீது பெண்டகன் நடத்திய தணிக்கையின் பாகமாக அவற்றை ஊடகங்கள் சித்தரித்ததற்கும் இடையே இருந்த கூர்மையான வேறுபாட்டை மேனிங் குறிப்பிடுகிறார். இராணுவத்துடன் நல்லுறவு கொண்டிருந்த மற்றும் அதற்கு சாதகமான செய்திகளை வழங்கிய இதழாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது, அதேவேளையில் மோசடிகள், குற்றங்கள் மற்றும் பொய்களை அம்பலப்படுத்தியவர்கள் கருப்பு-பட்டியலில் வந்தனர், என்று எழுதுகிறார்.

ஒரு மில்லியனுக்கு மேலான ஈராக்கியர்களின் வாழ்வைப் பறித்த, அதேவேளையில் சுமார் 4,500 அமெரிக்க துருப்புகள் கொல்லப்பட்ட மற்றும் பத்து ஆயிரக் கணக்கானவர்களைக் காயப்படுத்திய ஒரு யுத்தத்தின் பேரச்சமூட்டும் மற்றும் குற்றத்தன்மையான குணாம்சத்தை அமெரிக்க மக்களிடமிருந்து மறைப்பதில் இராணுவ தணிக்கை முறை ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது என்பதில் அங்கே எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், “உள்ளிணைப்பு" நிகழ்முறையானது பாக்தாத் மீது புஷ் "அதிரடி-ஆக்கிரமிப்பைக்" கட்டவிழ்த்துவிட உத்தரவிடுவதற்கு முன்னரே தொடங்கி இருந்ததோடு, அதில் வெறுமனே யுத்த செய்தி வழங்குபவர்கள் மட்டுமல்ல, மாறாக பிரதான செய்தியிதழ்களின் மற்றும் ஏனைய ஊடக வெளியீடுகளின் உயர்மட்ட கட்டுரையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களும் இருந்தனர்.

டைம்ஸ் பிரசுரத்தின் ஜூனியர் ஆர்தர் ஓச்ஸ் சுல்ஜ்பெர்ஜர் மற்றும் அப்போதைய பத்திரிகை ஆசிரியரான பில் கெல்லர் போன்றவர்கள் ஈராக்கிற்கு எதிரான ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஆதரிக்க அமெரிக்க மக்களுக்கு அழுத்தம் அளிப்பதில் சிறிதும் தயக்கமின்றி அவர்களையும் அவர்கள் செய்தியிதழ்களையும் அர்பணித்திருந்தனர். அவர்கள் ஈராக்கிய "பேரழிவு ஆயுதங்கள்" குறித்தும், பாக்தாத் மற்றும் அல் கொய்தாவிற்கு இடையிலான தொடர்புகள் குறித்தும்இரண்டுமே அங்கே இல்லை என்ற போதினும்—அரசாங்கத்தின் பொய்களைக் கிளிபிள்ளை போல திரும்ப திரும்ப கூறியதோடு, புஷ் நிர்வாகத்தினது யுத்த பிரச்சாரத்தின் மீது எந்தவொரு விமர்சனரீதியிலான ஆய்வையும் தவிர்க்க முடிவெடுத்தனர். முரண்பட்ட விதத்தில், டைம்ஸ் மற்றும் அதன் செய்தியாளர் ஜூடித் மில்லிரின் கபட முயற்சிகளினூடாக, அவர்கள் தங்களின் சொந்த பொய்களை அடுக்கி, அந்த பிரச்சாரத்தை அலங்கரித்தார்கள்.

இப்போது, பொறுப்பற்றதன்மையால் உண்டாக்கப்பட்ட ஈராக்கிய சமுதாயத்தின் சீரழிவால் முழு அளவிலான தோல்வி உண்டாகி இருக்கின்ற நிலையில், யுத்தத்திற்கு ஊடக பிரச்சாரகர்களாக யார் சேவை செய்தவர்களோ அவர்களே தங்களின் சொந்த பின்பக்கத்தைப் பாதுகாப்பதற்காக, வேறு பக்கம் கவனத்தைத் திசைத் திருப்பி வருகிறார்கள். தோமஸ் பிரெட்மேன் (இவர் ஒரு தசாப்தத்திற்கும் முன்னர் தமக்கு "எண்ணெய்க்காக ஒரு யுத்தம் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை" என்று எழுதி இருந்தார்) மற்றும் நிகோலஸ் கிறிஸ்டொஃப் போன்ற டைம்ஸ் இதழ் கட்டுரையாளர்கள், ஈராக்கிய உடைவிற்கு முற்றிலும் மலிக்கியைத் தான் குறைகூற வேண்டும், அதில் அமெரிக்கா ஒன்றும் செய்ய முடியாது என்று வலியறுத்தி கட்டுரைகளைப் பிரசுரித்துள்ளனர்.

“ISIS இன் (ஈராக்-சிரியா இஸ்லாமிய அரசு) வெறியர்களைத் திருப்பி ஓட்ட" அமெரிக்கா தலையீடு செய்ய வேண்டுமென அழைப்பு விடுத்து, “மோசூலைத் திரும்ப கைப்பற்று" என்ற தலைப்பில் டைம்ஸ் கட்டுரையாளர் கோஹெனால் குறிப்பாக திங்களன்று எழுதப்பட்ட ஒரு அருவருக்கத்தக்க கட்டுரை அவர்களை பின்தொடர்ந்திருந்தது.

ஒரு மில்லியனுக்கும் மேலான மக்களைக் கொன்றதும் மற்றும் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழித்ததும் ஆன ஒரு யுத்தத்திற்கு பொறுப்பை சுமத்தும் ஒரு அதிர்ச்சிகரமான வெறுப்பை உமிழ்கிற தூற்றலின் எந்தவொரு முயற்சியையும், அதாவது "குற்றஞ்சாட்டும் விளையாட்டை" ஏளனப்படுத்த கோஹென் அந்த கட்டுரையைப் பயன்படுத்துகிறார்.

அவர் எழுதுகிறார், “உண்மைகள் வெளிப்படையாக போதுமானளவிற்கு உள்ளன,” “அதன் பேரழிவு ஆயுதங்களுக்காக அமெரிக்கா 2003இல் ஈராக் மீது படையெடுத்தது. ஆனால் ஈராக்கில் பேரழிவுகளுக்கான எந்தவொரு ஆயுதமும் இல்லை.” உண்மையில் யுத்தம் ஒரு பொய்யின் அடிப்படையில் இருந்தது என்பது போதுமானளவிற்கு வெளிப்படையாக உள்ளதுஇதை பரப்ப கோஹென் உதவி உள்ளார்.

அவர் தொடர்ந்து எழுதுகிறார்: “சதாமின் ஈராக்கில் அல் கொய்தா இருக்கவில்லை. தாக்குதலினூடாக அமெரிக்கா அதை பிறப்பெடுக்க செய்தது.” இவ்விதத்தில் தான் யுத்தத்தை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட மற்றொரு பொய் இருந்தது, இதன் பேரழிவுகரமான விளைவுகளில் ஈராக்கிலும் அப்பிராந்தியம் முழுவதிலும் தீவிரவாத இஸ்லாமிய மற்றும் குறுங்குழுவாத போக்குகளைப் பலமடைந்ததும் உள்ளடங்கும்.

அவரது கட்டுரையில், கோஹென் ISIS “வெறியர்களுக்கு" எதிராக ஒபாமா நிர்வாகம் "குறிப்பிட்ட இராணுவ படையை" கட்டவிழ்த்து விட வேண்டுமென கோருகிறார். ஆனால் முதன்முதலில் லிபியாவிலும் சிரியாவிலும் ஆட்சி மாற்றத்திற்கான யுத்தங்களில் இதே "வெறியர்களை" வாஷிங்டன் பயன்படுத்துவதற்கு அவரே உற்சாகத்தோடு ஆதரவளித்திருந்தார். அதுபோன்ற கொள்கை மீதான தர்க்கம் குறித்த எந்தவொரு கேள்வியையும் அவர் ஒதுக்கித் தள்ளுகிறார்: “மத்திய கிழக்கில் ஒரு தர்க்கரீதியிலான அணுகுமுறை அரிதாகவே ஒரு சாத்தியமான அணுகுமுறையாக இருக்கிறது,” என்கிறார். அமெரிக்க மேலாதிக்கத்தை ஸ்திரப்படுத்த மற்றும் அப்பிராந்தியத்தின் வளங்களைச் சூறையாட கையில் எந்த கருவி இருக்கிறதோ அதை பயன்படுத்துவது மட்டும் தான் "தர்க்கமாக" இருக்கிறது.

குற்றஞ்சாட்டும் விளையாட்டு ஒரு புள்ளியைத் தவறவிடுகிறது,” என்று கோஹென் தொடர்ந்து எழுதுகையில், “அமெரிக்காவின் விருப்பமில்லா தலையீட்டிற்கு" முன்பே ஈராக் மற்றும் சிரியா இரண்டும் "உடைவதற்கு முதிர்ந்திருந்தன," என்கிறார்.

அவர் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்? மூன்று நாட்களுக்குள்ளாக 504 ஏவுகணைகளைப் பயன்படுத்தியது உட்பட சுமார் 1,700 குண்டுகள் வீசப்பட்ட ஒரு நடவடிக்கையில், பெண்டகனின் உத்தரவின் பேரில் குண்டுவீசுவதற்கான முழு சக்தியும் பயன்படுத்தி இருந்த நிலையில் அமெரிக்க தலையீடு ஏதோ "விருப்பமில்லாத" ஒன்றா.

இவ்வாறான ஒருவர், 1939 ஐரோப்பாவை "உடைவிற்கு முதிர்ந்திருந்தது" என்றும் ஹிட்லரின் மின்னல் வேக தாக்குதல்கள் "விருப்பமில்லாமல்" நடந்ததென்றும் கூட வர்ணிக்கக்கூடும் அல்லது நூரெம்பெர்க் தீர்ப்பாயங்களை "குற்றஞ்சாட்டும் விளையாட்டின்" ஒரு பயனற்ற நடைமுறை என்றும் கூட நிராகரிக்கக்கூடும்.

குற்றத்தை நிஜமாக பகிர்ந்தெடுப்பது இன்னும் நடக்கவில்லை என்பது தான் யதார்த்தம். அதற்கு ஈராக்கிற்கு எதிராக ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் திட்டமிடுவதில் மற்றும் செயல்படுத்துவதில் பொறுப்பானவர்கள்புஷ், செனே, ரூம்ஸ்பெல்டு, ரைஸ் மற்றும் பவெல் முதல் உயர்மட்ட இராணுவ தளபதிகள் வரையில்யுத்த குற்றவாளிகளாக வழக்கின் முன்னால் நிறுத்தப்படுவது அவசியமாகும்.

இழிந்த, யூதவிரோத வாரயிதழான Der Stürmerஉம் மற்றும் பின்னர் நாளிதழாக மாற்றப்பட்ட Fränkische Tageszeitung இன் பதிப்பாசிரியரான ஜூலியஸ் ஸ்ரெச்செர், மூன்றாம் குடியரசில் உயிர்பிழைத்திருந்த தலைவர்களோடு நூரெம்பெர்க்கின் நீதிமன்ற கூண்டில்இறுதியாக தூக்குமேடையில்நின்று கொண்டிருந்ததை நினைவுகூர வேண்டியிருக்கிறது. யுத்த கொள்கையை முறைப்படுத்துவதில் ஸ்ரெச்செர் நேரடியாக பங்கு வகிக்கவில்லை என்று அந்த தீர்ப்பாயம் கண்டது என்றபோதினும், அவர் எவ்வாறிருந்தாலும் ஜேர்மன் மக்களின் நனவில் நஞ்சூட்டுவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார். ஸ்ரெச்செர்ரின் பிரச்சார முயற்சிகள் இல்லாது இருந்திருந்தால், ஜேர்மன் தளபதிகள் "யாருமே உத்தரவுகளுக்கு கீழ்படிந்திருக்க மாட்டார்கள்" என்று வழக்கறிஞர் வாதிட்டார்.

ஈராக் யுத்த குற்றங்களில் எந்தவொரு உண்மையான கணக்கெடுப்பிலும் பெண்டகனின் பிரச்சார எந்திரத்திற்கு உத்வேகத்தோடு சேவை செய்த கோஹென், பிரெட்மேன், கெல்லர் மற்றும் அவர்களைப் போன்றவர்கள் ஆக்ரோஷ யுத்தத்தின் குற்ற ஊக்குவிப்புக்காக அதேபோன்று இணைக்கப்பட வேண்டும்.

முதல் தர இராணுவ சிப்பாய் மேனிங்கின் சமீபத்திய பங்களிப்பானது, 2003 மார்ச்சில் தொடங்கப்பட்ட யுத்தத்திற்கு வெகு முன்பிருந்தே ஈராக்கிய யுத்த குற்றங்கள் குறித்தும் மற்றும் அமெரிக்க ஊடகங்களின் பாத்திரம் குறித்தும் உலக சோசலிச வலைத் தளம் எழுதிய ஒவ்வொன்றையும் உறுதிப்படுத்துகிறது. யுத்த ஊக்குவிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட பொய்கள் மற்றும் அதை கொண்டு செயல்படுத்தப்பட்ட குற்றத்தன்மையிலான முறைகளை அம்பலப்படுத்த தொடக்கத்திலிருந்தே WSWS முனைந்திருந்தது.

பூமி எங்கிலும் இன்னும் அதிகமான கொடூர யுத்தங்களுக்கு தயாரிப்பு செய்து வருகின்ற அதேவேளையில், ஈராக்கில் ஒரு புதிய இராணுவ தலையீட்டை அமெரிக்க ஏகாதிபத்தியம் திட்டமிட்டு வருகின்ற நிலைமைகளின் கீழ், இராணுவவாதம் மற்றும் யுத்தத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தை அபிவிருத்தி செய்வதில் ஊடகங்களின் பொய்களுக்கு எதிரான சளைக்காத போராட்டம் அனைத்திற்கும் மேலான அவசரமாக ஆகியுள்ளது. இதற்கு உலக சோசலிச வலைத் தளத்தின் தொடர்ச்சியான அபிவிருத்தியும், மற்றும் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் அதை படிப்பதும் விஸ்தரிப்பதும் அவசியமானதாகும்.