சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP/YSSE public lecture series: Fifty years since the LSSP’s Great Betrayal

இலங்கை சோசக/ஐவைஎஸ்எஸ்இ நடத்தும் தொடர் விரிவுரைகள்: லசசகயின் மாபெரும் காட்டிக்கொடுப்பில் இருந்து ஐம்பது ஆண்டுகள்

4 October 2014

Use this version to printSend feedback

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், லங்கா சம சமாஜக் கட்சி (லசசக) 1964ல் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் நுழைந்துகொண்டதன் மூலம் செய்த "மாபெரும் காட்டிக்கொடுப்பின்" விளைவுகள் மற்றும் படிப்பினைகளைப் பற்றி  தொடர் பகிரங்க விரிவுரைகளை நடத்தவுள்ளன.

கடந்த ஜூன் மாதம், முதல் முறையாக ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எனக் கூறிக்கொண்ட ஒரு கட்சி முதலாளித்துவ அரசாங்கத்துக்குள் நுழைந்துகொண்டு 50 ஆண்டுகளைக் குறிக்கின்றது. இந்தக் காட்டிக் கொடுப்பு, இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது.

இலங்கையில், தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் வடக்கில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற இனவாத அரசியலை அடிப்படையாகக் கொண்ட குட்டி முதலாளித்துவ தீவிர அமைப்புக்கள் தோன்றுவதற்கு கதவை திறந்துவிட்டதோடு 1983ல் உள்நாட்டு யுத்தம் வெடிப்பதற்கும் களம் அமைத்தது.

லசசகயின் காட்டிக்கொடுப்பு, இந்தியா மற்றும் ஆசியா முழுவதும், குறிப்பாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியாவிலும், ஸ்ராலினிசத்தின் மாவோயிச வகைகள் உட்பட, ஸ்ராலினிசத்திற்கு உதவியதோடு, அந்த அமைப்புக்களின் பிற்போக்கு முதலாளித்துவ-சார்பு அரசியலையும் நியாயப்படுத்தியது.

லசசகயின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) முன்னெடுத்த கொள்கை ரீதியான போராட்டம், 1968ல் அனைத்துலகக் குழுவின் இலங்கை பகுதியாக, சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (புகக) ஸ்தாபிக்கப்படுவதற்கு வழிவகுத்தது.

 லசசகயின் சீரழிவுக்கான உண்மையான வேர்கள், பப்லோவாதத்திலேயே தங்கியிருக்கின்றன என அனைத்துலகக் குழு விளக்கியது. 1950களின் ஆரம்பத்தில் நான்காம் அகிலத்தினுள் எழுந்த திருத்தல்வாத போக்கான பப்லோவாதம் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தை நிராகரித்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது பப்லோவாதிகளில் இருந்து பிரிந்து 1953ல் ஸ்தாபிக்கப்பட்டது.

லசசகயின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக அனைத்துலகக் குழுவும் புகக/சோசக ஆகியவையும் முன்னெடுத்த கொள்கை ரீதியான போராட்டத்தின் அரசியல் மற்றும் தத்துவார்த்த படிப்பினைகள், இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் இன்று தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இன்றியமையாததாகும். நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களுக்கும் விரிவுரைகளுக்கு வருகை தருமாறு அழைக்கிறோம். இந்த தொடர் விரிவுரைகள் கொழும்பில் ஆரம்பிக்கப்பட உள்ளன. ஏனைய பிரதேசங்களில் நடைபெறும் விரிவுரைகளுக்கான இடங்கள், தேதிகள் மற்றும் நேரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும்.

பேச்சாளர்: சோசக பொதுச் செயலாளர் விஜே டயஸ்

இடம்: கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம்

அக்டோபர் 25, சனி, 3 மணி