சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Another 400 refugees feared dead in latest Mediterranean Sea disaster

சமீபத்திய மத்தியத்தரைக்கடல் விபத்தில் மற்றுமொரு 400 அகதிகள் இறந்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது

By Stefan Steinberg
16 April 2015

Use this version to printSend feedback

லிபியாவிலிருந்து வெளியேறிய நானூறு அகதிகள், கடந்த வாரயிறுதியில் அவர்களது படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி இறந்து போனதாக செய்திகளில் அறிவிக்கப்பட்டன. அந்த கப்பல் மூழ்கிய போது 550 பேர் வரையில் அதில் இருந்ததாக உயிர்பிழைத்தவர்கள் தெரிவித்ததை இத்தாலியின் சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பின் ஒரு செய்தி தொடர்பாளர் Agence France-Presse க்கு தெரிவித்தார். இதுவரையில் சுமார் டஜன் கணக்கான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த துயரகரமான சம்பவத்தின் அளவைக் குறித்த ஆரம்ப மதிப்பீடுகள் சரியானவை என நிரூபணமானால், இது, குறைந்தபட்சம் லாம்பெடுசா தீவிற்கு அருகில் படகு கவிழ்ந்து, சுமார் 360 புலம்பெர்ந்தவர்கள் நீரில் மூழ்கி இறந்துபோன அக்டோபர் 2013 சம்பவத்திற்குப் பிந்தைய மிகப் பெரிய உயிரிழப்புகளாக இருக்கும்.

மத்தியத்தரைக்கடலில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்குமென நம்புவதற்கு அங்கே சிறந்த காரணம் உள்ளது. உத்தியோகபூர்வ கணக்குகளின்படி, ஏப்ரல் 10 மற்றும் 13க்கு இடையில் மட்டும் குறைந்தபட்சம் 450 குழந்தைகள் உட்பட, மத்தியத்தரைக்கடலைக் கடக்க முயன்ற 8,500க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். இந்த அகதிகளில் பெரும்பான்மையினர் லிபியா, சிரியா மற்றும் ஆபிரிக்காவின் போர் பகுதிகளில் இருந்து தப்பி வந்தவர்களாவர்.

ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிற்கான Human Rights Watch இன் தற்காலிக துணை இயக்குனர் ஜூடித் சண்டர்லாண்ட் கூறுகையில், “அந்த செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டால், உலகின் மிக அபாயகரமான அந்த கடல்பரப்பில் புலம்பெயர்வோர் மற்றும் தஞ்சம் கோருவோர்களுக்கான சில மரணகதியிலான நாட்களில், கடந்த வாரயிறுதியும் ஒன்றாக ஆகிவிடும்,” என்றார்.

அகதிகளுக்கான ஐநா (UNHCR) உயர் கமிஷனரின் கருத்துப்படி, அந்த விபத்திற்கு முன்னரே இந்த ஆண்டு 500 வரையிலான புலம்பெயர்வோர் மற்றும் தஞ்சம் கோருவோர்கள் மத்தியத்தரைக்கடலில் உயிரிழந்துள்ளனர். இந்த புள்ளிவிபரம் 2014 இல் அதே காலக்கட்டத்தின் போது பதிவான இறப்புகளை விட 30 மடங்கு அதிகமாகும். 2014 முழுவதிலும் 3,200 பேர் இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டது. கடுமையான நிலைமைகள் நிறைய புலம்பெயர்வோர்களை வரவிருக்கும் மாதங்களில் கடல்களை நோக்கி வர ஊக்குவிக்கும் என்ற நிலையில், இறப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்ற மதிப்பீடுகளுடன் சேர்ந்து, இந்த எண்ணிக்கை இந்த ஆண்டில் இதுவரையில் 1,000க்கு நெருக்கத்தில் இருக்கும்.

வாரயிறுதி சம்பவத்தில் மீட்கப்பட்டவர்களில் பலர் இத்தாலிய ஊர்திகளிலேயே தங்க வைக்கப்பட்டனர், அதேவேளையில் ஏனையவர்கள் இத்தாலிய கடற்கரை ஓரத்தில் உள்ள ஏற்கனவே நெரிசல் மிகுந்த அகதிகள் முகாம்களுக்கும் மற்றும் அருகிலுள்ள தீவுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர், அங்கே அவர்கள் சகிக்கவியலாத வாழ்க்கை நிலைமைகளை எதிர்கொண்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் இருந்து அகதிகள் சமீபத்தில் வெள்ளமென வருவது, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளால் நடத்தப்பட்ட குற்றகரமான போர்களின் நேரடி விளைவாகும். ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்க-தலைமையிலான இராணுவ நடவடிக்கைகளை முன்னனி ஐரோப்பிய அரசுகள் முழுமையாக ஆதரித்துள்ளதுடன், அவற்றில் பங்குபற்றியும் உள்ளன. மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளால் இடைவிடாது நடத்தப்பட்டுவரும் இராணுவ தாக்குதல் கடந்த இரண்டு தசாப்தங்களில் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் பெரும் பகுதிகளைக் குழப்பங்கள் மற்றும் மோதல்களுக்குள் மூழ்கடித்துள்ளது. 2011 இல் அமெரிக்க-பிரெஞ்சு-பிரிட்டிஷ் குண்டுவீச்சு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஒரு மதிப்பீட்டின்படி, 2014 வரையில், லிபியாவின் ஆறு மில்லியன் மக்களில் இரண்டு மில்லியன் பேர் அந்நாட்டிலிருந்து வெளியேறி இருந்தனர்.

அதற்கடுத்து சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் அசாத்தை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு நடந்த மேற்கத்திய-தலைமையிலான பிரச்சாரம், அந்நாட்டை உள்நாட்டு போருக்குள் மூழ்கடித்ததுடன், ஒரு மதிப்பீட்டின்படி அந்நாட்டிலிருந்து வெளியேற நான்கு மில்லியன் மக்கள் நிர்பந்திக்கப்பட்டனர். அவர்களில் பலர் அண்டை நாடான துருக்கிக்கு சென்றனர் ஆனால் ஏனையவர்கள், கடந்த வாரயிறுதி துயரத்தில் பலியான சிலர் உட்பட, ஐரோப்பாவிற்கு நம்பிக்கையற்ற பயணத்தை மேற்கொண்டனர்.

ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் இப்போது அமெரிக்காவும் சவூதி அரேபியாவும், ஏமன் வரையில் போர்களத்தை விரிவாக்கி வருகின்றன. இந்த ஏகாதிபத்திய போர்வெறி, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் பெரும் அளவிலான அகதிகளை அவர்களது சொந்த நாட்டை விட்டு வெளியேற இட்டுச் சென்றுள்ளது.

நம்பிக்கையிழந்த புலம்பெயர்வோர் அதிகளவில் ஐரோப்பாவில் தஞ்சம் கோருகின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றியமோ, கடலில் உயிரிழப்பவர்களின் அதிகரித்துவரும் எண்ணிக்கை ஒருபுறம் இருக்க, நடைமுறையில் ஏனையவர்களை வராமல் தடுப்பதற்கு உதவும் வகையில், மத்தியத்தரைக்கடலை புலம்பெயர்வோர் நுழைய-கூடாத பகுதியாக (no-go zone) மாற்றி வருகிறது.

2013 லாம்பெடுசா துயரத்திற்குப் பிந்தைய கூச்சல்களைத் தொடர்ந்து, இத்தாலி "எமது கடல்" (Mare Nostrum) என்றழைக்கப்பட்ட ஒரு தேடல் மற்றும் மீட்பு கடற்படை நடவடிக்கையைத் தொடங்கியது. நடைமுறையில் அந்த நடவடிக்கைக்கு கடல் மீட்சி எப்போதும் இரண்டாந்தர முக்கியத்துவமாகவே இருந்தது. லிபியா மற்றும் துனிசியாவின் கடற்கரையோரங்களில் இருந்து வரும் அகதி படகுகளைக் கண்டறிவதன் மூலமாக புலம்பெயர்வோர் இத்தாலிக்கு வருவதை தடுப்பதும் மற்றும் வடக்கு ஆபிரிக்காவிற்கு அவர்களைத் திருப்பி விடுவதுமே அந்த கடற்படை நிலைநிறுத்தலின் பிரதான நோக்கமாக இருந்தது.

இருப்பினும் ஒரு மதிப்பீட்டின்படி அந்த திட்டத்தின் கீழ் 150,000 அகதிகள் மீட்கப்பட்டனர். Mare Nostrum நடவடிக்கை கடந்த நவம்பரில் கலைக்கப்பட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லை கண்காணிப்பு நிறுவனமான Frontexஆல் நடத்தப்படும் மிகச் சிறியதும் மற்றும் சிறந்த வசதிகளைக் குறைவாக கொண்டதுமான Triton கண்காணிப்பு திட்டத்தைக் கொண்டு அது பிரதியீடு செய்யப்பட்டது. Frontexக்கு வழங்கப்பட்டிருக்கும் பிரதான கட்டளையே தேடல் மற்றும் மீட்பு பணியல்ல, எல்லை கட்டுப்பாடாகும். இது, எந்தவொரு பயனுள்ள மீட்பு நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டு வரவும் மற்றும் கடலில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை அனுமதிக்கவும் ஐரோப்பிய அதிகாரிகளால் எடுக்கப்பட்ட ஒரு நனவுபூர்வமான முடிவாகும்.

அதேநேரத்தில் எல்லா வர்ணங்களிலான ஐரோப்பிய அரசியல் கட்சிகளும், ஏற்கனவே அங்கே இருப்பவர்களை வெளியேற்றும் அதேவேளையில், அந்த கண்டத்திற்குள் நுழைவதிலிருந்து புலம்பெயர்வோரைத் தடுப்பதை நோக்கமாக கொண்ட அவர்களது புலம்பெயர்வு-விரோத கொள்கைகளை அதிகரித்து வருகின்றன. தஞ்சம் கோருவோர்களை அனுமதிக்கும் "எந்த வழிமுறை" முறையீடுகளையும் எதிர்க்குமாறு எல்லா உள்ளாட்சி அதிகாரிகளுக்கும் இத்தாலிய அதிதீவிர தேசியவாத வடக்கு லீக்கின் தலைவர் ஏப்ரல் 14 அன்று அழைப்புவிடுத்தார். உள்வரவுகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க அவரது கட்சி தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார்.

ஜேர்மனி அகதி முகாம்கள் சமீபத்திய வாரங்களில் குண்டுவீச்சு அலைக்கு இலக்காகி உள்ளன, அதேவேளையில் தீவிர வலது அமைப்புகள் புலம்பெயர்வோரை அடுத்தவர் உழைப்பை உறிஞ்சும் சமூக ஒட்டுண்ணிகளாக கண்டித்தும் மற்றும் முஸ்லிம்களை பயங்கரவாதிகளுடன் சமாந்தரப்படுத்தியும் வக்கிரமான வெளிநாட்டவர் விரோத பிரச்சாரங்களை நடத்தி உள்ளன. இத்தாலி மற்றும் ஜேர்மனி இரண்டிலும், வடக்கு லீக் மற்றும் பெஹிடா போன்ற அமைப்புகள் அரசாங்க கட்சிகளின் மறைமுகமான ஆதரவைப் பெறுகின்றன. இனவாதிகளால் எழுப்பப்பட்ட வாதங்களை "தீவிரமாக" பரிசீலிப்பது அவசியமென அவை வாதிடுகின்றன. ஜேர்மன் மக்களின் பரந்த அடுக்குகள் புலம்பெயர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்க வீதிகளில் இறங்கி உள்ள அதேவேளையில், ஆட்சியிலிருக்கும் கிறிஸ்துவ ஜனநாயக சங்கம் (CDU) மற்றும் சமூக ஜனநாயக கட்சி (SPD) ஆகியவை பெஹிடா ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தைக்குள் இறங்கியுள்ளன.

உள்ளாட்சி ஜேர்மன் அதிகாரிகளும் அகதிகளை சித்திரவதை முகாம்களில் அடைத்து வைக்கும் கருத்தை உயர்த்தி உள்ளனர். ஜேர்மனியில் உள்ள அகதி முகாம்களின் அதிர்ச்சிகரமான நிலைமைகளைக் குறித்து Der Spiegel இல் வெளியான சமீபத்திய செய்தி ஒன்று அங்கே தங்கியிருக்கும் ஒருவரின் கருத்துடன் தொடங்கியது, அவர் கூறுகையில், “சிரியாவில் நீங்கள் ஒரேயடியாக சாவீர், இங்கே நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சாவீர்,” என்று தெரிவித்திருந்தார்.

செவ்வாயன்று ஐரோப்பிய கமிஷன், ஒரு "பரந்த புலம்பெயர்வு நிகழ்ச்சிநிரல்" என்றழைக்கப்படும் திட்டங்களைக் கொண்டு அந்த வாரயிறுதி படகு துயரத்திற்கு விடையிறுப்பு காட்டியது. புலம்பெயர்பவர்கள் மற்றும் தஞ்சம் கோருபவர்கள் அவர்களது நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாகவே அவர்களை சிறையில் அடைக்கவும் மற்றும் மிரட்டவும், வடக்கு ஆபிரிக்க நாடுகளில் கடற்கரையோர முகாம்கள் அமைப்பதே அத்திட்டத்தின் மையத்தில் உள்ளது. "எல்லை கட்டுபாடு மற்றும் கட்டுப்படுத்தி வைக்கும் இயங்குமுறைகளை ஒப்பந்த சேவையில் வழங்குவது, வெளியேறுவதைத் தடுப்பதை" நோக்கிய ஒரு படியாகுமென அந்த முறைமைகளை ஓர் செய்தி மழுப்பலாக விவரிக்கிறது.

Human Watch இன் ஜூடித் சண்டர்லாண்ட் அத்திட்டம் குறித்து குறிப்பிடுகையில், “இத்தகைய முன்மொழிவுகளை, ஐரோப்பிய ஒன்றிய கடல்பகுதிகளுக்கு புலம்பெயர்வோர் மற்றும் தஞ்சம் கோருவோர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கான எரிச்சலூட்டும் முயற்சிகளாக பார்க்க வேண்டியதில்லை,” என்றார்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

The European Union uses death to deter immigrants
[5 November 2014]