ரஷ்ய புரட்சியும்
முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும்

WSWS : Tamil : நூலகம
ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும்
 
1917 அக்டோபரில் போல்ஷிவிக்குகள் அதிகாரத்தை கைப்பற்றுதல்: சதியா அல்லது புரட்சியா?
 
வரலாற்றின் நீண்ட 
நிழல்: மாஸ்கோ 
வழக்குகள்
, 
அமெரிக்க தாராளவாதம்
மற்றும்
 அமெரிக்காவில் 
அரசியல்
 சிந்தனையின் 
நெருக்கடி

 

அங்கே ஸ்ராலினிசத்திற்கு 
ஒரு
 மாற்றீடு இருந்ததா?

 

சோசலிசத்திற்கு தொழிற்சங்கங்கள் ஏன் குரோதமாக இருக்கின்றன
 
ஏகாதிபத்திய சகாப்தத்தில் சீர்திருத்தமும், புரட்சியும்
 

1848 ன் புரட்சிகளும் மார்க்சிச மூலோபாயத்திற்கான வரலாற்று அடித்தளங்களும்

 

லெனினின் சோசலிச நனவுத் தத்துவம்: போல்ஷிவிசம் மற்றும் என்ன செய்ய வேண்டும்? என்பவற்றின் தோற்றுவாய்

 
 
 

Reform and Revolution in the Epoch of Imperialism1

ஏகாதிபத்திய சகாப்தத்தில் சீர்திருத்தமும், புரட்சியும்1

Use this version to printSend feedback

இருபதாம் நூற்றாண்டு ஓர் அதிர்ச்சியூட்டும் முரண்கூற்றை நமக்கு காட்டுகிறது, அதுவாவது: அன்றாட வாழ்வின் அடிப்படை வடிவங்கள் மற்றும் ஒழுங்கமைப்புகளில் இந்தளவுக்கு ஆழமான மாற்றத்தைக் கண்ட சகாப்தம், மனித வரலாற்றிலேயே வேறெதுவும் இருந்திருக்காது. விஞ்ஞான முன்னேற்றத்தின் பரப்பெல்லையும் வேகமும், ஏறத்தாழ தொடர்ச்சியாக, இந்த பிரபஞ்சம் மற்றும் அதில் நமது பூமி வகிக்கும் இடத்தைப் பற்றிய நமது கருத்துருவில், நம்மிடமிருந்து ஒரு புரட்சியைக் கோருகின்றன. இப்போதும் கூட, செவ்வாய் கிரகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் நமது தொழில்நுட்ப உபகரணத்திலிருந்து வரும் ஆச்சரியமூட்டும் தகவல்பரிமாற்றங்களை பார்த்த பின்னர், நமக்கு மூச்சடைத்துபோகின்றது. விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கேற்ப, மனிதயினம் காலம், வெளி, மற்றும் உயிர்வாழ்வு குறித்த அதன் கருத்துருக்களை மாற்றியமைத்துக் கொள்வதற்கும் மற்றும் விரிவுபடுத்திக் கொள்வதற்கும் நிர்பந்திக்கப்படுகிறது. இத்தகைய விஞ்ஞான வளர்ச்சிகள், இந்நூற்றாண்டின் சமூக பேரழிவுகள் மற்றும் பிரளயங்களின் பின்னணியில்தான் சாதிக்கப்பட்டுள்ளன. உலக வரைபடம் மீண்டும் மீண்டும் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது; மேலும் எண்ணிலடங்கா எழுச்சிகளும் மற்றும் அவற்றின் விளைவுகளும் நூறு மில்லியன் கணக்கான மக்களை வேரோடு பெயர்த்தெடுத்து, உலகெங்கிலும் அவர்களைச் சிதறடித்துள்ளன.

ஆனால், வாழ்க்கை நிலைமைகளில் எழுச்சிகளும் மாற்றங்களும் இருந்தபோதினும், அரசியல் கருத்துக்களத்தில் விஞ்ஞானபூர்வ சிந்தனையின் வளர்ச்சிகளோடு ஒப்பிடுவதற்கு அங்கே ஒன்றுமே இருக்கவில்லை. 1900இல் இருந்து, பிரபஞ்சத்தைக் குறித்த மனிதனின் அறிவு அதிவேகமாக விரிவடைந்தது; ஆனால் அவனது சொந்த சமூகபொருளாதார இருப்பை ஆளுகின்ற விதிகள் குறித்த அவனது புரிதல்திறன், நவீன சோசலிசத்தின் ஸ்தாபகர்களான கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் ஏங்கெல்ஸால் எட்டப்பட்ட மட்டத்தையும் விட மிகமிக குறைவாகவே உள்ளது.

இன்றையகால முதலாளித்துவ அரசியலின் நிலையை நாம் கருத்தில் கொள்வோமாயின், அங்கே ஒரு குறிப்பிடத்தக்க சிந்தனையாளர் அல்லது மூலோபாயவாதி என ஒரேயொருவரைக் கூட ஒருவரால் சுட்டிக்காட்ட முடியாது. இருந்தும்கூட, முதலாளித்துவமோ அளவிடவியலாத பொருளாதார வலிமை மற்றும் செல்வவளத்தை உடைமையாக்கும் அனுகூலத்தைப் பெற்றுள்ளது. குறைந்தபட்சம், தென்கிழக்காசிய பொருளாதார கொந்தளிப்பு வரையில், அதிகரித்துவந்த பங்குச்சந்தை மற்றும் சாதனையளவிலான இலாபங்கள் முற்றிலும் அவசியமான ஒரு பரந்த மூலோபாய தொலைநோக்கு பார்வையைக் காணவேண்டியதன் தேவையை ஏற்படுத்தவில்லை. அனைத்திற்கும் மேலாக, முதலாளித்துவ வர்க்க மேலாளுமைக்கு நீண்டகாலமாக எவ்வித வெளிப்படையான அரசியல் சவாலும் இல்லாதிருந்ததால், அது சமூக புரட்சியின் அச்சுறுத்தலுக்கு எதிராக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய பெரிய சிக்கலான பிரச்சினை எதுவுமின்றி, செல்வவள திரட்சியின் மீது அதன் கவனத்தைக் குவித்து வைக்க அதை அனுமதித்தது.

முதலாளித்துவ அரசியலின் நிலையைப் போலவே அதேயளவுக்கு மோசமாக, தொழிலாளர் இயக்கம்" என்று நாசூக்காக அழைக்கப்படுவதும் நிரந்தரமாகவே மோசமடைந்துள்ளது. தொழிலாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொண்டே அந்நலன்களில் ஆர்வமின்றியும், மற்றும் அதற்கு விரோதமாகவும் இருக்கும் அதிகாரத்துவவாதிகளின் தலைமையில், உத்தியோகபூர்வ தொழிலாளர் இயக்கங்களோ மரணிக்கும் தறுவாயில் உள்ளன. தொழிலாளர் இயக்கத்தின் நெருக்கடியானது, வெறுமனே தொழிலாளர் அதிகாரத்துவத்தினது நேர்மையின்மை, ஊழல், அலட்சியம் மற்றும் இயலாமையின் விளைவல்ல. மாறாக, அத்தகைய ஊழல்மிக்க தகமைகள், ஒரு ஒட்டுமொத்த வரலாற்று காலக்கட்டம் முழுவதும், தொழிலாளர் இயக்கத்தின் இணக்கவாத (accommodationist) மற்றும் சோசலிச-விரோத குணாம்சத்தைத் தீர்மானித்த சமூக நிகழ்வுபோக்கில், அவற்றின் தோற்றுவாயைக் கொண்டுள்ளன. யுத்தத்திற்குப்-பிந்தைய ஏகாதிபத்திய ஒழுங்குமுறைக்கு தொழிலாள வர்க்கத்தை திட்டமிட்டு அடிபணிய செய்ததன் அடிப்படையில், சந்தர்ப்பவாத கொள்கைகளின் ஒரு அரை-நூற்றாண்டுக்கு மேலான காலகட்டமே, தொழிலாளர் இயக்கத்தின் சமூக, அரசியல், புத்திஜீவித மற்றும் அறநெறிசார் இலக்கணத்தை வடிவமைத்தது.

பல தசாப்தங்களாக, யுத்தத்திற்குப்-பிந்தைய செழிப்பு மற்றும் அதன் அடிப்படையில் தேசிய நலன்புரி அரசுகள் (welfare states) செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில், தொழிலாளர்களது இயக்கத்தின் தத்துவார்த்த அறிவீனமோ மற்றும் அரசியல் ஊழல்களின் நீண்டகால விளைவுகளோ வெளிப்படையாக தெரியவில்லை. வர்க்கங்களுக்கு இடையிலான சமூக உறவுகள், குறைந்தபட்சம் பிரதான முதலாளித்துவ நாடுகளிலேனும், நலன்புரி அரசின் கட்டமைப்புக்குள் இணக்கமாக செல்ல முடிந்திருந்ததால், அங்கே வர்க்க போரின் தலைச்சிறந்த மூலோபாயவாதிகளுக்கு இடமிருக்கவில்லை. அந்த வரலாற்று காலகட்டம், நடைமுறைவாத அனுபவ அடிப்படையில் பிரச்சினைகளைக் கையாளுகின்ற (philistines) விட மேலதிகமாக எவரையும் கோரவில்லை, மேலும் அதுபோன்றவர்கள் அனைத்து ஏகாதிபத்திய நாடுகளிலும் காளான்களைப் போல ஏராளமாக முளைத்திருந்தார்கள்.

சமரச மற்றும் இணக்க உறவுகள் தகர்ந்து போன பின்னர் தான் அதாவது, சர்வதேச முதலாளித்துவம் பழைய மற்றும் பழக்கமான விதிகளுக்கிணங்க இனியும் செயல்பட விரும்பாமல் போனதும் அல்லது செயல்படவியலாமல் போனதும் தான் யுத்தத்திற்குப்-பிந்தைய தொழிலாளர் இயக்க உள்நாற்றத்தின் பரிமாணம் வெளிப்பட்டுள்ளது.

தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள நெருக்கடி, திட்டவட்டமாக சீர்திருத்தவாதத்தின் தோல்விக்கு எடுத்துக்காட்டாக ஏறத்தாழ தானேவிளங்குவது போலிருக்கும். ஆனால் சமூக-ஜனநாயக சீர்திருத்தவாதத்தின் வீழ்ச்சியானது, சோவியத் ஒன்றியத்திலும் மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஸ்ராலினிச ஆட்சிகளின் ஆச்சரியம்மிக்க பொறிவால் திரைமறைப்பிற்குள்ளாகிய உண்மையால், இந்நிலைமை சிக்கலுக்கு உள்ளாகிறது. மக்கள் இயல்பாகவே, அவர்கள் எதிர்கொண்டிருக்கும் அரசியல் சூழல்களின் தோற்றுவாய்களை ஆராய நாட்டங்கொள்ள மாட்டார்கள். அந்த ஆட்சிகளின் தலைவர்களாலும் சரி மற்றும் அவற்றின் முதலாளித்துவ எதிராளிகளாலும் சரி இருதரப்பினராலும், அவற்றிற்கு பிரயோகிக்கப்பட்ட அடைமொழிப்பெயரினால், பெருந்திரளான தொழிலாளர்கள் அவற்றை "கம்யூனிஸ்ட்" என்றும், சோசலிஸ்ட்" என்றும் கருதினர்.

1989 மற்றும் 1991க்கு இடையே, ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சி முதலாளித்துவ பிரச்சாரவாதிகளால் (மேலும் ஸ்ராலினிஸ்டுகளின் ஒரு கணிசமான பிரிவுகளாலும் கூட) மார்க்சிசத்தின் மற்றும் சோசலிசத்தின் தோல்வியாக காட்டப்பட்டது. இந்த விளக்கத்தை தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்ட அதேயளவுக்கு, அவர்கள் முதலாளித்துவ சந்தை மற்றும் அதன் கட்டளைகளுக்கு வேறெந்த மாற்றீடையும் காணவில்லை.

நிச்சயமாக, முதலாளித்துவ சந்தையின் கட்டளைகளுக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் தேவைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை புறக்கணிப்பது சாத்தியமில்லை தான். அதிகரித்துவரும் சமூக துருவமுனைப்படுத்தலின் அறிகுறிகளால் கவலைக்குள்ளான தொழில்ரீதியிலான மத்தியதர வர்க்கத்தின் பிரிவுகளின் மத்தியில், மக்களின் அமைதியின்மை ஒரு எதிர்பார்க்கப்பட்ட பிரதிபலிப்பைக் காண்கிறது.

முதலாளித்துவ சந்தையின் கட்டுப்பாடில்லாத நடவடிக்கைகளை விமர்சித்து, மிக சமீபத்திய காலங்களில், பல நூல்கள் தொடர்ச்சியாக பிரசுரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தொழிலாள வர்க்க நிலைமைகள் மீதான பூகோளமயமாக்கலின் தாக்கம் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. அதிகரித்துவரும் சமூக துருவமுனைப்படுத்தல் குறித்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

எட்வார்ட் பேர்ன்ஸ்டைனும் மார்க்சிசத்தை திரித்தலும்

பெருகிவந்த கவலைகளின் இந்த சூழலில், ஐரோப்பிய சமூக ஜனநாயகத்தினது ஆரம்பகால வரலாற்றின் மிகமுக்கிய பிரபல்யங்களில் ஒருவரான மார்க்சிச-விரோத திருத்தல்வாதத்தின் "தந்தை", எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் மீது புதுப்பிக்கப்பட்ட ஆர்வம் எழுந்துள்ளது. கடந்த தசாப்தத்தில், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பிரசுரம் பேர்ன்ஸ்டைனின் பிரதான படைப்பான சோசலிசத்திற்கான முன்நிபந்தனைகள் நூலின் புதிய பதிப்பை பிரசுரித்துள்ளது, இது பேர்ன்ஸ்டைனின் கண்ணோட்டங்கள் மீதான தத்துவார்த்த விவாதங்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களின் தொகுப்பாகும், மேலும், மிக சமீபத்தில், 1997இல், சோசலிச பரிணாமத்திற்கான தேடல்: எட்வார்ட் பேர்ன்ஸ்டைனும் சமூக ஜனநாயகமும் என்ற தலைப்பில் வரலாற்றாளர் மான்ஃப்ரெட் ஸ்டெகர் எழுதிய எட்வார்ட் பேர்ன்ஸ்டைனின் புதிய சுயசரிதமும் பிரசுரிக்கப்பட்டது. ஸ்டேகரால் மொழிபெயர்க்கப்பட்டு தொகுக்கப்பட்ட பேர்ன்ஸ்டைன் எழுத்துக்களின் ஒரு துணை தொகுப்பும் சமீபத்தில் Humanities Press ஆல் பிரசுரிக்கப்பட்டது, அது குட்டி-முதலாளித்துவ இடது பிரிவுகளின் அரசியல் முயற்சிகளுடன் தொடர்புபட்டதாகும்.         

ஸ்டேகர் எழுதிய சுயசரிதம் முக்கியமானது, அதன் புலமைத்துவத்தின் தரத்திற்காக அல்ல அதன் உயிரூக்கமற்ற தன்மையைத் தவிர அங்கே மேலதிகமாக அதில் வேறொன்றுமில்லை மாறாக அது கொண்டிருக்கும் அரசியல் பார்வைக்காக முக்கியத்துவம் பெறுகிறது. மார்க்சிசம் மீதான பேர்ன்ஸ்டைனின் தாக்குதல்; தொழிலாள வர்க்க புரட்சியிலிருந்து சோசலிசத்தை பிரிப்பதற்கான அவரது முயற்சி; நல்ல நோக்கம்கொண்ட மற்றும் அறவழியில் உந்தப்பட்ட தாராளவாதம் என்பதற்கு மேலதிகமாக சோசலிசம் வேறொன்றுமில்லை என மறுவரையறை செய்யும் அவரது முன்மொழிவு இவை அனைத்தும் நம்முடைய காலத்திற்கான வழிகாட்டும் கலங்கரை விளக்காக ஸ்டெகரால் பார்க்கப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக, ஸ்டேகரை பொறுத்த வரையில், பேர்ன்ஸ்டைனின் முக்கியத்துவம், முதலாளித்துவத்திற்கு ஒரு புரட்சிகர மாற்றீடு சாத்தியமில்லை என்பதை அவர் அங்கீகரிக்கிறார் என்பதன் அடிப்படையில் உள்ளது.

சீர்திருத்தவாதத்தின் முதலாவது முக்கிய மார்க்சிச தத்துவவாதியாக பேர்ன்ஸ்டைன், நவீன சமூகத்தில் அதிகரித்துவரும் சிக்கல் பண்டைய நாட்களின் பரந்துபட்ட புரட்சிகளை அர்த்தமற்றவையாக ஆக்குவதாக கருதினார். ...

"சோசலிசத்தின் முடிவு" என்று பாவிக்கப்பட்டதற்குப் பின், "தாராளவாத சோசலிசத்தின்" பேர்ன்ஸ்டைன் கருப்பொருள் முன்மாதிரியே, நமது சோவியத்திற்குப் பிந்தைய மற்றும் (அனேகமாக) கீன்சியத்திற்குப்-பிந்தைய சகாப்தத்தில் இருக்கும் ஒரே சாத்தியமான முற்போக்குத் திட்டத்திற்கு, தர்க்கரீதியிலான தொடக்கப்புள்ளியை பிரதிநிதித்துவம் செய்கிறது: இது பொது சமூகம் வகிக்கும் பாத்திரத்தின் மீது ஒரு புதிய கவனத்தை செலுத்துவதோடு, சொத்துரிமைகள் மீதான தனிநபரின் உரிமைகளை நீட்டிப்பதற்கு சாதகமான ஒரு ஜனநாயக கருத்துருவையும் பிரதிநிதித்துவம் செய்கிறது.2

பேர்ன்ஸ்டைனை நம்முடைய காலத்திற்கான ஒரு கதாநாயகனாக அறிவிக்கின்ற அதேவேளையில், ஸ்டேகர் முற்றிலுமாக மெய்யியல்ரீதியான தரங்களை பொருத்திப் பார்த்தே பேர்ன்ஸ்டைனின் அரசியல் சிந்தனையை அவர் மதிப்பிட அணுகியதாக எச்சரிக்கையும், எரிச்சலும் கலந்து எழுதுகிறார்.

பேர்ன்ஸ்டைனினது புத்திஜீவித வேட்கையை கல்வித்துறை விசாரணைக்கு மதிப்புடைய ஒரு பொருளாக மாற்றுவது, அதிலிருக்கும் மெய்யியல் சொற்புரட்டின் அளவோ அல்லது அதன் தரமற்ற ஆராய்ச்சிமுறையோ அல்ல. மாறாக, தனிநபரின் சுய-உணர்மை மற்றும் சமூகத்தின் பங்கீட்டு நீதி ஆகிய இரண்டு மகத்தான அரசியல் பாரம்பரியங்களின், ஓர் ஒத்திசைந்த கூட்டுச்சேர்க்கையை நெறிப்படுத்துவதற்கான பேர்ன்ஸ்டைனின் உண்மையான மிகப்பெரிய முயற்சியே ஆகும்.3

மார்க்சிசத்தின் புரட்சிகர கருத்துருக்களுக்கு பேர்ன்ஸ்டைன் ஒரு அதிர்ச்சிகரமான தத்துவார்த்த அடியைக் கொடுத்ததாக கூறப்படுவதை, நினைவுகூர வேண்டும். பேர்ன்ஸ்டைனின் எழுத்துக்களை மதிப்பீடு செய்கையில், ஸ்டேகர் "மெய்யியல் பண்புகளைத்" தவிர்க்க விரும்பியதாக ஒப்புதல் அளிப்பது, விஞ்ஞானம் மற்றும் தத்துவத்தின் பரப்பெல்லையில் பேர்ன்ஸ்டைன் மற்றும் மார்க்ஸ்க்கு இடையிலான ஒரு நேரடி மோதலை, ஏதோவொரு புத்திஜீவித பொருத்தமின்மையாக இருந்திருக்குமென மௌனமாக அங்கீகரிப்பதற்கு ஒப்பானதாகும்.

ஆனால் பேர்ன்ஸ்டைனின் தத்துவார்த்த குறைபாடுகள், அவரை நோக்கி நாம் திரும்ப வேண்டும் என்பதற்காக அவரையொரு தீர்க்கதரிசியாக தழுவிக் கொள்வதிலிருந்து ஸ்டேகரை தடுத்துவிடவில்லை. 100 ஆண்டுகளுக்கு குறையாத காலக்கட்டம் கடந்து போன பின்னர், இன்று, பேர்ன்ஸ்டைனின் முறையிடல் அவரது வாதங்களின் புத்திஜீவித பலத்திலிருந்து பெறப்படவில்லை, மாறாக அதன் அடியிலிருக்கும் தத்துவார்த்த பலவீனங்களை பொருட்படுத்தாமல், தங்களின் சமூக நலன்கள் மற்றும் தங்களின் அரசியல் மனோபாவத்திற்குரிய விடையிறுப்பு இரண்டுக்கும் அவரது வேலைத்திட்டத்தில் ஒரு வெளிப்பாட்டைக் கண்ட மத்தியதர வர்க்கத்தின் குறிப்பிட்ட பிரிவுகளின் எதிர்பார்ப்புகளில் இருந்து பெறப்பட்டது. ஓர் ஆரம்பகாலத்திய மற்றும் மிகவும் அறிவார்ந்த சுயசரித எழுத்தாளர், பீட்டர் கே, சுமார் நாற்பதைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு எழுதினார், அங்கே பேர்ன்ஸ்டைன் இல்லாது இருந்திருந்தாலும் கூட, அவரை உருவாக்க வேண்டிய அவசியமிருந்திருக்கும். ஜேர்மனியின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் அந்த நூற்றாண்டின் திருப்பத்தின் போது ஒரு சீர்திருத்த கோட்பாட்டைக் கோரின."4

பேர்ன்ஸ்டைன் வாதத்தை உயிர்த்தெழச்செய்தல் என்பது இன்று மிக அரிதாகவே சாத்தியப்படும். உண்மையில், அது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளிப்படையாக இருக்கவில்லை என்றபோதினும், அது அதன் பிறந்த தருணத்திலிருந்து "இருந்து வருகிறது". இருப்பினும், பேர்ன்ஸ்டைனின் வாழ்க்கை மீது புதுப்பிக்கப்பட்ட ஆர்வம், மற்றும் அவரது படைப்புகளைச் சுற்றிய சர்ச்சைகள், ஒரு மிக முக்கியமான புள்ளியை சித்தரிக்கின்றன: அதுவாவது, 100 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிக இறுதியில் போராடப்பட்ட அரசியல் பிரச்சினைகள், நாம் இருபதாம் நூற்றாண்டின் இறுதியை நெருங்கி வருகின்றபோதும் அசாதாரணமான விதத்தில் பொருந்தி இருக்கின்றன என்பதாகும்.

வரலாறு தானே அதுவே மீண்டும் திரும்புவதில்லை என்றாலும், அது ஒத்தவிதத்தில் இருக்கக்கூடும், இதை மார்க் டுவைன், அவர் தான் தெரிவித்தார் என நம்புகிறேன். மேலும், உண்மையில், அனைத்து கருத்து வேறுபாடுகள் இருந்தபோதினும், எந்தவிதமான அரசியல் நிலைமைகள் மற்றும் புத்திஜீவித சூழலில் பேர்ன்ஸ்டைன் எழுச்சிபெற்றாரோ "அதேபோன்ற ஒத்த" நிலைமைகளை இன்று நாம் முகங்கொடுப்பதிலிருந்து தப்பமுடியாதபடிக்கு சிக்கியுள்ளோம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் மத்தியதர-வர்க்க புத்திஜீவிகளுக்கு பேர்ன்ஸ்டைனினது "மார்க்சிசத்தின் மரண" பிரகடனம் எந்தளவுக்கு பொருந்தி இருந்ததோ இப்போதும் அந்தளவுக்குப் பொருந்தியிருக்கிறதென முற்றிலுமாக ஒப்புக்கொள்ள முடியாது. முன்னொருபோதும் இல்லாதளவுக்கு முதலாளித்து செல்வசெழிப்பு மற்றும் அதன் உலகந்தழுவிய ஆதாரவளங்கள் மற்றும் மேலாளுமையில் ஏற்பட்டிருக்கும் பாரியளவிலான விஸ்தீரணத்திற்கு இடையே, ஒரு முதலாளித்துவ அமைப்புமுறை அதன் உள்முரண்பாடுகளின் அபிவிருத்தியினூடாக பேரழிவுக்கு உந்தப்படுகிறது என்ற மார்க்சிச கருத்துரு, அவதானிக்கூடிய யதார்த்தத்துடன், பல சிறந்த அறிவார்ந்த மக்களால் முற்றிலும் கருத்துவேறுபாடின்றி பார்க்கப்படுகிறது.

ஆனால் 1898இன் சூழ்நிலைக்கும் 1998இல் நிலவும் சூழ்நிலைக்கும் இடையே அங்கே ஒரு மலைப்பூட்டும் அளவில் வேறுபாடுகள் உள்ளன: அதுவாவது, பேர்ன்ஸ்டைன் அவரது மார்க்சிச விமர்சனத்தை முன்வைத்த காலக்கட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகள் கண்கூடாக வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. சீர்திருத்தவாதம், தத்துவார்த்தரீதியில் அது தன்னைத்தானே நியாயப்படுத்திக் கொள்ள முயன்றபோது எவ்வளவு தான் பலவீனமாக தெரிந்த போதினும், நடைமுறையில் முற்றிலும் தீவிரத்தன்மையோடு தெரிந்தது. பேர்ன்ஸ்டைனினது சேதிக்கு முறையிடலை உணர்ந்தறிவதற்கு, இந்த உண்மையை கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும்.

முதலாளித்துவத்தை படிப்படியாக மற்றும் முற்போக்காக சீர்திருத்தும் சாத்தியக்கூறில் இருந்த நம்பிக்கை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பேர்ன்ஸ்டைனின் வாதம் உளவியல் ஆக்கக்கூறாக இருந்தது. பேர்ன்ஸ்டைனுக்கு திரும்புவது அவசியமென அதை இன்று பரிந்துரைப்பவர்களின் முன்னோக்கு, அம்மாதிரியான எந்த நன்னம்பிக்கைவாதத்திற்கும் உயிரூட்டவில்லை. அதற்கு மாறாக, மூளைகுழம்பிய அவநம்பிக்கைவாதமே சமகாலத்திய மத்தியதர வர்க்க இடது கூட்டத்தின் மீது மேலாளுமை கொண்டுள்ளது. சமூக மாற்றத்தின் ஒரு முகவராக, தொழிலாள வர்க்கத்தின் பாத்திரம் என்னவாக இருந்தாலும் சரி, இத்தட்டினருக்கு அதன்மீது நம்பிக்கை கிடையாது. சமூகநலன்புரி அரசில் என்ன கொஞ்சநஞ்சம் மிஞ்சி இருக்கிறதோ அதை அழிப்பதைத் தவிர்க்குமாறு நிதியியல் மேற்தட்டுக்கு ஒரு வெற்றுத்தனமான மற்றும் கோழைத்தனமாக முறையீடு செய்வதற்கு, சற்று மேலதிகமாக ஆக்குவதுதான், முதலாளித்துவத்தின் "சீர்திருத்தவாதம்" என்பது. மறுபுறம், பேர்ன்ஸ்டைனோ, அவரது அனைத்து பலவீனங்களோடு, சோசலிஸ்டுகளின் அழுத்தம் மற்றும் செல்வாக்கின் கீழ், முதலாளித்துவம் ஒரு அருமையான மனிதநேய சமூகமாக அமைதியாக பரிணமிக்குமென்ற அவரது பிரமையில் குறைந்தபட்சம் நேர்மையோடு இருந்தார்.

ஆனால் இந்த அடிப்படை வித்தியாசத்திற்கு இடையே, அங்கே இன்றைய அறநெறிபிறழ்ந்த சீர்திருத்தவாதிகளின் முன்னோக்குகளை 1890களின் இறுதியில் பேர்ன்ஸ்டைனால் விவரிக்கப்பட்ட முன்னோக்குகளுடன் இணைக்கும் ஒரு கருத்தியல் அம்சமும் இருக்கிறது: அதுவாவது, மார்க்சிசத்தின் ஆராய்ச்சிமுறைக்கு அடித்தளமான சடவாத இயங்கியல் மீது ஆணவத்துடன் கூடிய அலட்சியம். நிகழ்வுகளை இயங்கியல்ரீதியாக அதாவது, எதிரெதிர் தீர்மானித்தல்களின் ஒரு கூட்டாக சிந்திக்க மற்றும் பகுத்தாராய இயலாத இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால சீர்திருத்தவாதிகளது இயலாமை, 1914இல் முதலாம் உலக யுத்தத்தின் வெடிப்புடன் ஒட்டுமொத்த உலகையும் துண்டுதுண்டாக தகர்க்க இருந்த உள்முரண்பாடுகளையோ மற்றும் அதனோடு சேர்ந்து அவற்றின் சுயதிருப்திகரமான கருத்துருக்களையோ புரிந்துகொள்ள தகைமையின்றி செய்திருந்தது.          

SPD: முதலாவது வெகுஜன தொழிலாள வர்க்க கட்சி

1890இல் சோசலிச-விரோத சட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதில் இருந்து 1914இல் முதலாம் உலக போர் வெடிப்பு வரையில் ஒரு கால் நூற்றாண்டுகால போக்கில் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஜேர்மனியில் மிகப்பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்திருந்தது. ஆனால் வெறுமனே வாக்குகளின் ஒப்பீடு மட்டுமே, தொழிலாள வர்க்கத்திற்குள் சமூக ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கு மற்றும் ஆழத்தின் அளவை எடுத்துக்காட்டிவிடாது.

SPD, அதன் காலத்தில், ஒரு ஈடிணையற்ற வரலாற்று நிகழ்வுபோக்காக இருந்தது: அது உண்மையிலேயே முதலாவது வெகுஜன தொழிலாள வர்க்க கட்சியாகும். SPD இனுள் புறவடிவம் எடுத்த இயக்கம், அதன் இறுதி இலக்கையும் விட மிகவும் முக்கியமானதென அறிவித்து, 1898இல், SPDஇன் தலைவர்களை பேர்ன்ஸ்டைன் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஆனால் SPD தலைமை வகித்த இயக்கத்தின் பரப்பெல்லையை சிறிதேனும் புரிந்துகொள்ளாமல் அவரது வாதத்தில் உள்ளடங்கியிருந்த அரசியல் நிலைதவறலை மட்டுமல்லாது அதன் இயல்பான பலத்தையும் மதிப்பிடமுடியாது

நடைமுறையில் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு அம்சத்துடனும் தொடர்புபட்ட புத்தகங்கள், செய்தியிதழ்கள் மற்றும் சஞ்சிகைகளை பிரசுரித்து வந்த ஒரு பாரிய பிரசுர சாம்ராஜ்ஜியத்தை, SPD தனது ஆதிக்கத்தில் வைத்திருந்தது. ஏங்கெல்ஸ் மரணித்த ஆண்டான, 1895வாக்கில், SPD எழுபத்தி-ஐந்து செய்தியிதழ்களை பிரசுரித்தது, அவற்றில் முப்பத்தி ஒன்பது வாரத்திற்கு ஆறு முறை வெளி வந்தவை. 1906 வாக்கில், அங்கே ஐம்பத்தி-எட்டு சோசலிச நாளிதழ்கள் இருந்தன.

1909இல், சமூக ஜனநாயக செய்தியிதழ்களின் விற்பனை ஒரு மில்லியனை எட்டியதுடன், யுத்தத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் ஒன்றரை மில்லியனாக இருந்தது. உத்தியோகபூர்வ விற்பனை, சோசலிச பத்திரிகையை படித்து வந்தவர்களின் நிஜமான எண்ணிக்கையை விட குறைவாக இருந்தது, இது ஏனென்றால் பல நகல்கள் தொழிற்சாலைகள், உணவுவிடுதிகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் அண்டை அயலவர்களிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டன. மிகவும் பிரபலமான ஒரு இதழான Der Wahre Jakob, 380,000 பிரதிகள் விற்பனையை எட்டியது, ஆனால் அதன் உண்மையான வாசகர்வட்டம் ஒன்றரை மில்லியனை எட்டியிருந்தது. 1914 வாக்கில் சமூக ஜனநாயக வாசகர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் ஆறு மில்லியனாக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

SPD இன் கோட்பாட்டுரீதியிலான அரசியல் பத்திரிகை Vorwärts இன் விற்பனை 165,000 எட்டியது. கார்ல் காவுட்ஸ்கியின் மேற்பார்வையில் இருந்த பிரபல தத்துவார்த்த இதழ் Neue Zeit இன் விற்பனை 10,500ஆக இருந்தது. பெண் தொழிலாளர்களுக்காக கட்சியால் உருவாக்கப்பட்டு, கிளாரா ஜெட்கின் மேற்பார்வையின்கீழ், ஓர் ஆக்ரோஷமான இராணுவவாத-எதிர்ப்பு போக்கை பின்பற்றிய ஒரு பத்திரிகை Die Gleichheit, 1914 வாக்கில் 125,000 என்ற விற்பனையை எட்டியது. அந்த கட்சியால் பிரசுரிக்கப்பட்ட துணை பத்திரிகைகள் எதிலெல்லாம் ஆர்வம் காட்டியதென்பதை அவற்றின் பின்வரும் தலைப்புகளைக் கொண்டே மதிப்பிடலாம்: The Worker-Cyclist (விற்பனை 168,000), The Singing German Workers Newspaper (விற்பனை 112,000), The Workers Exercise Newspaper (விற்பனை 119,000), The Free Innkeeper (விற்பனை 11,000), The Abstinent Worker (விற்பனை 5,100), மற்றும் The Worker Stenographer (விற்பனை 3,000).

இத்தகைய வழக்கமான பிரசுரங்களுக்கும் கூடுதலாக, SPD ஒரு பாரிய அரசியல் இலக்கியத்தையும் உருவாக்கியது, அவை தேர்தல் பிரச்சாரங்களின் போது பிரமாண்டமான பங்களிப்பைச் செய்தன: துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், சிறப்பிதழ்கள் மற்றும் சிறு வெளியீடுகள் மில்லியன் கணக்கில் அச்சிடப்பட்டன. அக்கட்சி வரலாறு, அரசியல் மற்றும் கலாச்சாரம் பற்றிய நூல்களை பிரசுரித்த பல மிகப்பெரிய பத்திரிகை பிரசுரங்களையும் நடத்தி வந்தது, அவை பத்து ஏன் நூறு ஆயிரக் கணக்கில் கூட நூல்களை வெளியிட்டன.   

சமூக நடவடிக்கைகளின் ஒரு பாரிய வலையமைப்பை SPD ஒழுங்கமைத்து, ஒருங்கிணைத்தது, அதில் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு வயதுடைய குழுவும் மற்றும் பிரிவும் ஈடுபட்டன. Arbeiter (தொழிலாளி) என்ற வார்த்தையே ஒரு அரசியல் தாத்பரியத்தை கொண்டிருந்த அளவுக்கு தொழிலாள வர்க்கத்துடன் SPD ஆழமாக அடையாளங்காணப்பட்டது.

அந்த நூற்றாண்டின் திருப்பத்தில், பரந்த சமூக மற்றும் கல்விசார் பிரிவுகளை உள்ளடக்கி இருந்த, குறைந்தபட்சம் இருபது குறிப்பிட்ட விதமான சமூக நடவடிக்கைகளில் SPD ஈடுபட்டிருந்தது. அது எண்ணிலடங்கா உடற்பயிற்சி கூடங்களையும், இசைக்குழு சமூகங்களையும் நடத்தி வந்தது. செம்னிட்ஸ் (Chemnitz) என்ற ஒரு நகரில் மட்டும், 142க்கு குறைவில்லாத தொழிலாளர்களின் இசைக்குழு சமூகங்களை அது ஒழுங்கமைத்திருந்தது, அவை மொத்தம் 123 இசைநிகழ்ச்சிகளை வழங்கி இருந்தன. துரின்ங்யா பகுதியில், 191 வெவ்வேறு உடற்பயிற்சி கூடங்களை அமைக்க உதவியது.  

நூறு ஆயிரக் கணக்கான ஜேர்மன் தொழிலாளர்களை பொறுத்த வரையில், SPD என்பது வெறுமனே ஒரு அரசியல் அமைப்பாக இருக்கவில்லை: அவர்களுக்கு அவர்களது வாழ்வின் பெரும்பகுதியைத் திட்டமிடுவதற்கு அது மையஅச்சாக விளங்கியது. ஒரு தொழிலாளியின் ஆர்வம் நீச்சல், எடை தூக்குதல், குத்துச்சண்டை, நடைபயணம், படகோட்டுதல் மற்றும் கப்பல் பயணம், கால்பந்து, சதுரங்கம், பறவைகளைக் காண்பது, நாடகங்கள், ஆரோக்கியம் மற்றும் இசைத்துறை, மதுவிலக்கு என என்னவாக இருந்தாலும், SPD அதற்கான ஒரு அமைப்பைக் கொண்டிருந்தது, அதில் ஓர் ஆணோ அல்லது பெண்ணோ பதிவு செய்து கொள்ளலாம்.

உத்தியோகபூர்வ அரசியல் கல்விக்குமே கூட, SPD, கணிசமான ஆதாரவளங்களை அர்பணித்தது. 1890களில் இருந்து, அது வரலாறு, சட்டம், அரசியல், பொருளாதாரம், இயற்கை விஞ்ஞானம் மற்றும் பிரசங்க கலை ஆகியவற்றில் பயிற்சி அளித்தது. பெபெல், லீப்னெக்ட், ஜெட்கின் மற்றும் லுக்சம்பேர்க் ஆகியோர் இத்தகைய தலைப்புகளில் உரை நிகழ்த்தியவர்களில் அடங்குவர். மூன்று மாதகால பயிற்சிகள் ஆண்டுக்கு மூன்றுமுறை அளிக்கப்பட்டன. 1898இல் 540ஆக இருந்த பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 1907இல் 1,700ஆக உயர்ந்தது. 1906இல் கட்சியின் ஓர் உத்தியோகபூர்வ பள்ளி ஸ்தாபிக்கப்பட்டது.

தொழிலாள வர்க்கத்தின் கலாச்சார முன்னேற்றத்தை ஊக்குவித்ததில் கட்சி வகித்த பாத்திரம், தொழிலாளர்களின் நூலகங்களின் வளர்ச்சியால் எடுத்துக்காட்டப்படுகிறது. 1900 மற்றும் 1914க்கு இடையே, கட்சியும் மற்றும் SPD கட்டுப்பாட்டில் இருந்த தொழிற்சங்கங்களும், 750 வெவ்வேறு இடங்களில் 1,100 நூலகங்களை ஸ்தாபிக்க உதவின. இந்த நூலகங்கள் 800,000கும் மேற்பட்ட தொகுதிகளைக் கொண்டிருந்ததோடு, 1914 வாக்கில் SPDஇன் ஊதியத்தின்கீழ் அங்கே 365க்கும் மேற்பட்ட நூலகபணியாளர்கள் இருந்தனர்.

ஒரு இறுதிப் புள்ளிவிபரம் முக்கியமாக குறிப்பிட தகுதியுடையதாகிறது. அந்நூற்றாண்டின் முதல் ஆண்டுகளில், கட்சிக்குள் பெண் தொழிலாளர்களை நியமிக்க SPD ஓர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது, அதன் முயற்சிகள் பலமான பிரதிபலிப்பை பெற்றன. 1905 இல் 30,000ஆக இருந்த கட்சியின் பெண் உறுப்பினர்களது எண்ணிக்கை 1914 இல் 175,000 ஆக உயர்ந்தது. மிகவும் பிரபலமாக இருந்த கட்சி பிரசுரங்களில் ஒகுஸ்ட் பெபெலின் சோசலிசத்தில் பெண்கள் -Woman under Socialism- ஒன்றாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

பேர்ன்ஸ்டைனின் நிலைப்பாட்டை ஆராய தொடங்குவதற்கு முன்னதாக, சர்வதேச மற்றும் தேசிய பொருளாதார சூழலில் கவனம் செலுத்தியாக வேண்டும், அதற்குள் இருந்துதான் அவரது கருத்துருக்கள் அபிவிருத்தி அடைந்தன. பேர்ன்ஸ்டைன் வரலாற்று சடவாத இயங்கியலின் மதிப்பை ஏற்க மறுத்தார், ஆனால் அவரது சொந்த புத்திஜீவித மற்றும் அரசியல் பரிணாமமோ அதே விதிகளுக்குப் பொருந்திய விதத்தில் தான் நடந்துவந்தன

1873 மற்றும் 1893க்கு இடையே உலக பொருளாதாரம் ஒரு சிக்கலான மற்றும் பெரிதும் முரண்பாடான சித்திரத்தை எடுத்துக்காட்டியது. விலைகள் மற்றும் இலாபங்கள் இரண்டுமே நீண்டகால மந்தநிலைமையில் அமிழ்ந்து போயிருந்தன. அத்தகைய இருபது ஆண்டுகளின் போது, பிரிட்டனில் விலைகளின் அளவு 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இரும்பின் விலை 50 சதவீதம் வீழ்ந்தது. ஆனால் விலை மற்றும் இலாப பணச்சுருக்கத்தின் இந்த காலகட்டம் தொழில்துறை உற்பத்தியின் செழிப்பு மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் ஒரு காலகட்டமாக இருந்தது. உண்மையில், உலக பொருளாதார நிலைமைகளின் இத்தகைய இரண்டு அம்சங்களுமே இயங்கியல்ரீதியாக ஒன்றையொன்று சார்ந்திருந்தன. இலாப விகிதத்தின் மீதிருந்த அழுத்தம், புதிய உற்பத்தி வளர்ச்சி மற்றும் நிர்வாக நுட்பங்களுக்கு தூண்டுதலை வழங்கியது, அவை தொழில்துறை உற்பத்தியின் ஒரு பரந்த விரிவாக்கத்திற்கு இட்டுச் சென்றது. இவ்விதத்தில், உலகப் பொருளாதாரம் விலை மற்றும் இலாபத்தின் மந்தநிலையிலும், தொழில்துறையின் வளர்ச்சியிலும் அமிழ்ந்திருந்த போதினும் கூட, அதுவும் குறிப்பாக ஜேர்மனி மற்றும் அமெரிக்காவில், ஒரு வெடிப்பார்ந்த வளர்ச்சியினூடாக சென்று கொண்டிருந்தது.

மூலதனம் இலத்தீன் அமெரிக்கா போன்ற முற்றிலும் புதிய பகுதிகளுக்குள் பரவியது, இலாபகர முதலீடுகளுக்கான தேடல் ஏகாதிபத்திய-பாணியிலான காலனித்துவம் எழுச்சி பெறுவதற்கு இட்டுச் சென்றது. இந்த நீடித்த விலை மற்றும் இலாபத்தின் பின்னடைவு 1894 இன் இறுதியில் அதிரடியாக முடிவுக்கு வந்ததுடன், முதலாளித்துவம், பூர்சுவாக்களின் நிலைப்பாட்டிலிருந்து, மிகவும் மகத்தான ஒரு காலகட்டத்திற்குள் நுழைந்தது, அது இன்று வரையில் நினைவுகூரப்படும் La Belle Époque! (அழகிய சகாப்தம்!) என்ற பெயரைப் பெற்றது.    

இந்த பொருளாதார அபிவிருத்தியின் முக்கிய இயக்கவியல் மையங்களில் ஒன்றாக ஜேர்மன் இருந்ததால், அது மார்க்சிச இயக்கத்தில் ஆழமான மற்றும் முரண்பாடான தாக்கங்களை பெற்றது. சமூக ஜனநாயகக் கட்சி (SPD) விரிவடைந்ததற்கு ஓர் இன்றியமையாத நிலைமை, முற்றிலும் வெளிப்படையாக, தொழிலாள வர்க்கத்தின் வேகமான வளர்ச்சியாகும். ஆனால் இதுவே கூட ஜேர்மன் தொழில்துறை அபிவிருத்தியால் நிபந்தனைக்குட்பட்டு இருந்தது. பிஸ்மார்க்கின் கீழ் எட்டப்பட்ட பிற்போக்குத்தனமான அரசியல் வடிவங்கள் இருந்தபோதினும், ஜேர்மனி ஐக்கியமாக்கப்பட்டமை மிகப்பரந்த தொழில்துறையின் வேகமான வளர்ச்சிக்கு அடித்தளத்தை அமைத்தது. 1880 இல் 2.7 மில்லியன் டன்னாக இருந்த இரும்பு உற்பத்தி 1900 இல் 8.5 மில்லியன் டன்னாக உயர்ந்தது. அதே காலக்கட்டத்தில் எஃகு உற்பத்தி 625,000 இல் இருந்து 6.6 மில்லியன் டன்னாக உயர்ந்தது. 1873 மற்றும் 1900க்கு இடையே, ஜேர்மன் துறைமுகங்களுக்கு வந்த கப்பல்களின் எண்ணிக்கை இரட்டிப்பானது. தொழில்துறையின் ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டமைப்புமயமாக்கல் (cartelization) ஆகியவையே ஜேர்மன் பொருளாதார வளர்ச்சியின் மைய அம்சமாக இருந்தது. 1882 மற்றும் 1907க்கு இடையே, சிறுதொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 8 சதவீத அளவுக்கு அதிகரித்தது, அதேவேளையில் மிகப்பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கையோ 231 சதவீத அளவுக்கு அதிகரித்தது. 1907 வாக்கில், 548 தொழிலக நிறுவனங்களில் 13 மில்லியனுக்கு அண்மித்தளவில் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

SPD இன் உத்தியோகபூர்வ கோட்பாடு வர்க்க போராக தான் இருந்தது, ஆனால் பின்புலத்தில் மட்டுமே இருந்திருந்தாலும் கூட, அதன் சொந்த வளர்ச்சியே ஜேர்மன் தேசிய தொழில்துறை விரிவாக்கத்துடன் பிணைந்திருந்தது. தேசிய தொழில்துறை மற்றும் தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்கு இடையிலான தொடர்பு இன்னும் மேலதிகமாக நேரடியாக இருந்தது. 1890களின் மத்தியகாலப்பகுதி வரையில், அவற்றின் வளர்ச்சி கட்சியை பின்தொடர்ந்து போய் கொண்டிருந்தது, அவை அரசியல் வழிகாட்டுதல் மற்றும் நேரடியான சடத்துவரீதியிலான-நிதி ஆதரவு இரண்டிற்கும் கட்சியைச் சார்ந்திருந்தன. ஆனால் 1895 இல் தொடங்கிய மாபெரும் பொருளாதார செழிப்பு, ஏறத்தாழ உலக யுத்தம் வெடித்த போது வரையில் நீடித்திருந்தது, இது தொழிற்சங்கங்களின் ஒரு பாரிய விரிவாக்கத்திற்கு எண்ணெய் வார்த்ததோடு, தொழிற்சங்கங்கள் மற்றும் SPD க்கு இடையிலான உறவுகளை துரிதமாக மாற்றியதுதொழிற்சங்கங்களின் தலைவர்கள், மார்க்சிச தத்துவம் மற்றும் சோசலிச கோட்பாடுகள் குறித்த கேள்விகளில் மிகக் குறைந்த ஆர்வமே கொண்டவர்களாக இருந்தனர். தொழிற்சங்கங்களின் அளவும் மற்றும் பொருளாதார ஆதாரவளங்களும் அதிகமாக விரிவடைய விரிவடைய, அவற்றின் தலைவர்கள் சோசலிச கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் பற்றிய பரந்த பிரச்சினைகளுக்கு அவர்களின் நடைமுறை பிரச்சனைகள் கீழ்படியச்செய்யப்படுவதை ஏற்க விரும்பவில்லை.

சோசலிச இயக்கத்தில் பேர்ன்ஸ்டைனின் ஆரம்ப ஆண்டுகள்

பேர்ன்ஸ்டைன், பதினைந்து குழந்தைகளில் ஏழாவது குழந்தையாக ஒரு கீழ் மத்தியதர வர்க்க யூத குடும்பத்தில் பிறந்தார். அவர் 1872இல் சோசலிச இயக்கத்தில் அரசியல்ரீதியாக செயலூக்கத்துடன் இறங்கினார். பிரான்கோ-பிரஷ்யா யுத்தத்தின் போது, சோசலிச, சர்வதேசியவாத கோட்பாடுகளை பெபெல் தைரியமாக பாதுகாத்ததால் ஈர்க்கப்பட்டார். 1875இல் கோத்தாவில் நடந்த ஐஸ்னாக்கர்கள் [ஜேர்மன் ஐஸ்னாக் நகரவாசிகள்] மற்றும் லஸ்ஸாலியர்களின் [மெய்யியலாளர் லஸ்ஸால்லை பின்பற்றியவர்கள்] ஐக்கிய மாநாட்டில் அவரும் ஒரு பிரதிநிதியாக கலந்து கொண்டார்.

பேர்ன்ஸ்டைன், அவரது ஆரம்பகால அரசியல் வாழ்வில், பல்வேறு குட்டி-முதலாளித்துவ ஜனநாயக அரசியலின் வடிவங்களை நோக்கி சாய்வதில் அக்கறைக் காட்டியிருந்தார். அவர் SPD க்கு நிதியியல் பங்களிப்பு அளித்துவந்த ஒரு இடது ஜனநாயகவாதியான ஒய்கன் டூரிங்கினது மேலாளுமையின் கீழ் வந்த சிலகாலத்திற்கு பின்னர், அதேவேளையில் கார்ல் ஹோக்பேர்கின் செயலாளராக வேலை செய்து கொண்டே, ஓர் ஆவணத்தை வரைவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார், அந்த ஆவணம், கட்சி தொழிலாள வர்க்கத்தை நோக்கிய அதன் பிரத்யேக நிலைநோக்கை கைவிட்டு, முதலாளித்துவத்தை நோக்கி இன்னும் மேலதிகமாக ஒரு இணக்கமான மனோபாவத்தை ஏற்க வேண்டுமென வாதிட்டது. மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் அந்த ஆவணத்தால் சீற்றம் அடைந்தனர், பின்னர் பேர்ன்ஸ்டைன் அரசியல் கோட்பாடுகளை மீறியதற்காக அந்த பழைய புரட்சியாளர்களிடம் தனிப்பட்டரீதியில் மன்னிப்புக்கோர, பெபெலுடனே கூட சேர்ந்து, இலண்டனுக்கு பயணித்ததன் மூலமாக மட்டுமே அவர்களின் நன்மதிப்பை மீட்டெடுத்தார்.

1878இல் சோசலிச-எதிர்ப்பு சட்டங்களால் பேர்ன்ஸ்டைன் ஜேர்மனியை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதுடன், 23 ஆண்டுகள் நாட்டை விட்டு வெளியே வாழ்ந்தார். அவர் சுவிட்சர்லாந்தில் பல ஆண்டுகள் வாழ்ந்த பின்னர், 1880களின் இறுதிப்பகுதியில் இங்கிலாந்துக்கு நகர்ந்தார். இங்கிலாந்தில் அவரது சொற்பவாசகாலம் நீடித்திருந்த போதுதான், அவர் சீர்திருத்தவாத ஃபாபியன் சொசைட்டி என்ற அமைப்புடன் தொடர்புக்குள் வந்தார், அதன் முன்னணி பிரமுகர்களுடன் நெருக்கமான நட்புறவுகளையும் ஸ்தாபித்தார். அவர் பெயாட்ரிஸ், சிட்னி வெப் மற்றும் ஜோர்ஜ் பேர்னாட் ஷா போன்றவர்களுடன் பலமுறை இரவு உணவு விருந்திலும் கலந்து கொண்டார்.

ஸ்டேகர் கருத்துப்படி

இங்கிலாந்து தொழிலாளர்களின் நடைமுறைரீதியிலான மற்றும் பயன்பாட்டுரீதியிலான (utilitarian) கண்ணோட்டத்தால் எட்டப்பட்ட சமூக வெற்றிகளால் பேர்ன்ஸ்டைன் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தார். அவர் பிரிட்டிஷ் தொழிற் கட்சி தலைவர்கள் மற்றும் தாராளவாத முதலாளித்துவ பிரதிநிதிகளுக்கு இடையிலான நல்லுறவுக்கு பிரகாசமான வார்த்தைகளோடு விவாதித்தார், அத்துடன் "அதுபோன்ற சௌகரியமான நல்லுறவே" பிரித்தானியர்களின் அவ்வப்போதைய சீர்திருத்தவாதத்தின் வெற்றிக்கு பங்களிப்பு செய்ததாக வாதிட்டார். பரிணமித்துவந்த பிரிட்டிஷ் உருவடிவம், முதலாளிகளுக்கும் மற்றும் தொழிலாளர்களுக்கும் இடையே பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளத்தக்க உடன்படிக்கைகளின் சாத்தியக்கூறை பேர்ன்ஸ்டைனுக்கு எடுத்துக்காட்டியது, அவரது புரிதல்களை அவரது ஜேர்மன் கட்சி தோழர்களுடன் பகிர்ந்து கொள்ள அவருக்கு தூண்டுதல் அளித்தது.5   

பேர்ன்ஸ்டைன் மீது ஆதிக்கம்செலுத்தி வந்த பரந்த புத்திஜீவித மற்றும் அரசியல் சூழலின் ஒரு அம்சம் மட்டுமே, ஃபாபியன்கள் (Fabians) ஆவர். ஜேர்மனி மற்றும் மேற்கு ஐரோப்பா முழுவதிலும் சோசலிசத்தின் வேகமான வளர்ச்சி, அதன் மேலாளுமையை வெறுமனே அரச ஒடுக்குமுறை பிரயோகத்தினால் மட்டுமே தடுத்துவிட முடியாது என்பதை முதலாளித்துவத்திற்கு தெளிவுபடுத்தியது. மார்க்சிசத்தால் முன்வைக்கப்பட்ட புத்திஜீவித சவாலுக்கு விடையிறுப்புக் காட்டுவது அவசியமாக இருந்தது. இதனால், 1890களில், பல்கலைக்கழகங்கள் மார்க்சிசத்திற்கு எதிரான சித்தாந்த பாதுகாப்பு அரண்களாக ஒரு புதிய மற்றும் இன்றியமையாத பாத்திரத்தை ஏற்றன அவை இன்றைய நாள் வரையில் அதை விட்டுவிடவில்லை. சோசலிச இயக்கத்தின் உரிமைகோரல்களை பொய்மைப்படுத்த மேற்கோளிடும் வகையில், பொருத்தமின்மைகள் மற்றும் பலவீனங்களுடன் மார்க்சின் எழுத்துக்கள் புனையப்பட்டன. புதிய கல்வித்துறைசார் "மார்க்சிச கொலையாளர்கள்" செல்வாக்கான அதிகார பிரமுகர்களாக மாறினர், அவர்களின் எழுத்துக்கள் பரந்தளவில் பாராட்டப்பட்டு, பிரசுரிக்கப்பட்டன. இதில் போஹ்ம்-பாவெர்க், துகான்-பாரானோவ்ஸ்கி, பெனெடெட்டோ கிரோசி, வெர்னர் சோம்பார்ட் மற்றும் மக்ஸ் வேபர் போன்ற பிரபலங்கள் இருந்தனர், குறைந்தளவே அறியப்பட்ட மற்றும் பெரும் செல்வாக்கு பெற்றிராத டஜன்கணக்கான எழுத்தாளர்களைக் குறித்து கூற வேண்டியதே இல்லை, இவர்கள் அனைவரும் தோற்றப்பாட்டளவில் மார்க்சிச தத்துவத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கு எதிராகவும் ஒரு பலமான தடுப்பணையை அமைத்து வைத்திருந்தனர்.

"சடத்துவரீதியிலான வாழ்வின் மீதான உற்பத்திமுறையானது சமூக, அரசியல் மற்றும் புத்திஜீவித வாழ்வின் பொதுவான நிகழ்வுபோக்கிற்கு நிபந்தனை விதிக்கிறது" மற்றும் சமூக முரண்பாடுகள் திட்டவட்டமான சித்தாந்த வடிவங்களால் பிரதிபலிக்கப்படுகிறது, போராடப்படுகிறது என்ற மார்க்சின் கண்டுபிடிப்பை, இத்தகைய சிந்தனையாளர்களின் படைப்புகள், அவர்களின் சொந்த வழியில், உறுதிப்படுத்திக் காட்டின.6 மார்க்சை குறித்த இத்தகைய குட்டி-முதலாளித்துவ கல்வித்துறைசார் விமர்சகர்களின் எழுத்துக்கள் பேர்ன்ஸ்டைனின் எழுத்துக்களிலும் பிரதிபலித்தது. உண்மையில், அப்போதைய நாட்களில் பல்கலைக்கழகங்களில் சுழன்றுவந்த மார்க்சிச-விரோத வாதங்களோடு, பேர்ன்ஸ்டைன் அவரது சொந்த அரசியல் கௌரவம் தவிர்த்து, அவரும் கொஞ்சம் சேர்த்துக் கொண்டார் என்று கூறினாலும் மிகையாகாது.  

பேர்ன்ஸ்டைனின் கண்ணோட்டத்தில் இருந்த மாற்றத்தை ஏங்கெல்ஸ் உணரத் தொடங்கியதோடு, அவர் தன்னைக்குறித்து மிகை மகிழ்ச்சி அடைகின்ற ஒரு அற்பத்தனமான ஆங்கிலேய கடைக்காரரைப் போல மேலும் மேலும் கூச்சலிட்டு வருவதாக கண்டித்தார். ஏங்கெல்ஸ் வாழ்ந்திருந்த வரையில், அவர் பேர்ன்ஸ்டைனை தடுத்து வைத்திருந்தார். ஆனால் ஆகஸ்ட் 1895இல் அவர் மரணத்திற்குப் பின்னர், பேர்ன்ஸ்டைன் மார்க்சிசத்திலிருந்து தூர விலகும் நகர்வு மிகவும் வேகமாக இருந்தது.

சோசலிசத்திற்கான முன்நிபந்தனைகள்

1898இல் பேர்ன்ஸ்டைன் எழுதிய பல கட்டுரைகளில், அவர் SPD இன் தத்துவார்த்த மரபு மற்றும் புரட்சிகர வேலைத்திட்டத்தை மறுதலித்தார். இத்தகைய கண்ணோட்டங்களை அவர், சோசலிசத்திற்கான முன்நிபந்தனைகள் என்ற அவரது நூலில் மிக விரிவாக விரித்திருந்தார். உள்முரண்பாடுகளால் கிழிபடும் ஓர் அமைப்புமுறையாக முதலாளித்துவம் குறித்த மார்க்சின் பகுப்பாய்வு, அவரது ஹெகலிய பயிற்சியின் ஒரு விளைபொருள் என்பதோடு, அனுபவரீதியில் காணக்கூடிய யதார்த்தத்துடன் அதற்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை அங்கீகரிக்கும் காலம் வந்துவிட்டது எனக் குறிப்பிடுகின்றார். முதலாளித்துவ அமைப்பு முறையின் ஒரு மிகப்பெரிய நெருக்கடி குறித்த சாத்தியக்கூறின் மீது தங்களின் தந்திரோபாயங்களை அமைப்பது சோசலிஸ்டுகளுக்கு அபாயகரமான தவறாகும். மாறாக, நிலவும் அனைத்து ஆதாரங்களும், முதலாளித்துவம் நடைமுறையில் முற்போக்கான அபிவிருத்திக்கான அனைத்து சாத்தியக்கூறையும் கொண்டிருப்பதையும்; மற்றும் இது முற்றிலும் இயல்பாகவும், ஜனநாயகரீதியிலும் மற்றும் அமைதியாகவும் சோசலிசத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்பதையும் காட்டுகின்றன. முதலாளித்துவத்தின் உள்முரண்பாடுகளால் உருவாக்கப்படும் ஒரு மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து சோசலிசம் எழுச்சிபெறும் என்று தொடர்ந்து வாதிடும் துரதிருஷ்டவசமான மார்க்சிஸ்டுகளுக்கு, அவர்களை சமகாலத்திய வாழ்வின் உண்மைகளை முகங்கொடுக்க இலாயகற்று செய்யும் ஒரு நோய், பாதித்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்தை வறுமைக்கு இட்டுச் செல்கிறது என்ற மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் தவறான நம்பிக்கை, இல்லாத பொருளாதார முரண்பாடுகளைக் குறித்த அவர்களின் தவறான நிர்ணயத்திலிருந்து ஊற்றெடுப்பதாக அவர் வாதிட்டார். தேசிய வருவாயில் தொழிலாளர்களின் பங்கை சீராக அதிகரிப்பதில் தொழிற்சங்கங்கள் தகைமை பெற்றிருந்ததை அவையே நிரூபித்திருந்ததாக பேர்ன்ஸ்டைன் வாதிட்டார். உழைப்பின் மதிப்பு குறித்த தத்துவமும் மற்றும் அதன்படி தொழிலாள வர்க்கம் மீதான சுரண்டலை அது விஞ்ஞானபூர்வமாக எடுத்துக்காட்டுகிறது என்ற மார்க்ஸின் வலியுறுத்தலையும் பொறுத்த வரையில், அதுவும் குப்பையில் போட வேண்டிய மற்றொரு பழைய தத்துவார்த்த மூட்டையாக இருந்ததென பேர்ன்ஸ்டைன் வாதிட்டார். முதலாளித்துவ உற்பத்திமுறையில் உபரிமதிப்பு உற்பத்தியின் இயற்கூறான சுரண்டும் பண்பை எடுத்துக்காட்டுவதற்கு அங்கே என்ன தேவை இருந்தது? என்று பேர்ன்ஸ்டைன் வினவினார். மதிப்பின் உருவாக்கம் தொடர்பான பிரச்சினையில் இருந்த இந்த கருத்துவெறி, தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் தேசிய சட்டவாக்கங்கள் மூலமாக தேசிய வருமானத்தில் இன்னும் நியாயமான பங்கீட்டை அடைவதற்குரிய கோரிக்கைகளை நெறிப்படுத்துவதற்கு மாறாக, சோசலிச இயக்கம் அதன் கோபத்தை முதலாளித்துவ உற்பத்திமுறைக்கு எதிராக ஒன்றுதிரட்ட இட்டுச் செல்கிறது என்றார்.

தொழிலாள வர்க்கத்தின் நீண்டகால நலன்களை புரட்சியின் மூலம் பெற முடியாது, மாறாக தொழிற்சங்கங்கள் மூலமாக ஆதாயங்களை ஒரேசீராக மற்றும் படிப்படியாக அதிகரிப்பதன் மூலமாகவே பாதுகாக்க முடியுமென்பதை பேர்ன்ஸ்டைன் பேணி வந்தார். புரட்சிகர அரசியலை தவிர வேறெந்த நடவடிக்கையும் உபயோகமற்றதென்பதை நடைமுறையில் எடுத்துக்காட்டுவதற்குரிய ஒரு புறரீதியிலான-பாடம் என்பதை தவிர, தொழிற்சங்கங்கள் வேறொன்றுமில்லை" எனக் கருதிய, "சில சோசலிஸ்டுகளை" அவர் கடிந்துரைத்தார்.7 பேர்ன்ஸ்டைனை பொறுத்த வரையில், முதலாளித்துவத்தின் வேண்டாத கூறுபாடுகளை இல்லாதொழிப்பதற்கு தொழிற்சங்கங்களே கருவிகளாக இருந்தன: சமூகபொருளாதாரத்தில் அவை கொண்டிருக்கும் நற்பேறின் காரணமாக, தொழிற்சங்கங்கள் தொழில்துறையில் ஜனநாயக உட்கூறுகளாக உள்ளன. மூலதனம் முற்றுமுதலான சக்தியைப் பெறவியலாமல் செய்து, தொழில்துறை நிர்வாகத்தில் நேரடியாக தொழிலாளருக்கு செல்வாக்கை அளிப்பதே அவற்றின் தன்மையாகும்.2 அதேவேளையில் தொழிற்சங்கங்கள் நிறைய அதிகாரத்தைக் கோரக்கூடாது, மூலதனத்துடன் பங்காளியாவதல்ல, தொழில்துறை மீது கட்டுப்பாட்டை வைத்திருப்பதே அவற்றின் நோக்கமாகும் என்றளவுக்கு, தொழிற்சங்கங்களின் பாத்திரம் குறித்து பேர்ன்ஸ்டைன் தவறான புரிதலைக் கொண்டிருந்தார்.

பேர்ன்ஸ்டைனை பொறுத்த வரையில், அரசு என்பது வர்க்க ஆட்சியின் ஒரு கருவி என்ற மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் கருத்துரு, அவர்களின் மற்றொரு பிழையாக இருந்தது. அவர் இவ்வாறு வாதிட்டார்: ஒரு ஜனநாயக அமைப்புமுறையில் அரசு என்பது பொது நலனுக்கு சீராக வேலை செய்து, ஒட்டுமொத்த குடிவாசிகளின் பிரதிநிதியாக செயல்பட முடியுமென்பதை இங்கிலாந்து முன்னுதாரணமாக நிரூபிக்கிறது. தற்போது நிலவும் அரசு முறையை, நிர்மூலமாக்குவது ஒருபுறம் இருக்கட்டும், பிரதியீடு செய்வது கூட தொழிலாள வர்க்கத்தின் நோக்கமாக இருக்கக்கூடாது, மாறாக ஓர் அதிஉயர்ந்த-வர்க்க ஜனநாயகத்தின் இன்னும் அதிக துல்லியமான கருவியாக அதை மாற்றுவதே அதன் நோக்கமாக இருக்க வேண்டும். உண்மையில் தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த வர்க்க ஆட்சியை ஸ்தாபிக்க வேண்டிய அவசியமே இல்லை, அதை பின்தொடரவும் கூடாது. நாகரீகமான அரசியல் சம்பாஷணையில் "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்ற வார்த்தைக்கே இடமில்லை:

விவகாரத்தின் குறிப்பிட்ட நோக்கத்திற்குப் பொருத்தமுடைய ஆனால் நேர்மை உணர்வையோ ஒழுக்க நெறியையோ சார்ந்திராத தன்மை மற்றும் நடைமுறைத் தன்மையின் கேள்விக்கு அப்பாற்பட்டு, பிரச்சாரம் செய்யும் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தற்போதைய வழிமுறைகள் பற்றி கருத்துக்கள் எதுவுமற்ற அல்லது ஒரு பொருத்தமற்ற கருத்தை கொண்டிருக்கும் மற்றும் அந்த நோக்கத்திற்கு அமைப்புரீதியில் தகுதி இராத ஒரு காலகட்டத்தில், ஏற்புடையதாகக் கருதப்படும்  நடத்தைமுறையில் முதலாளித்துவத்திலிருந்து சோசலிச சமூகத்திற்கு இடைமருவுவது கட்டாயம் தேவையான வகையில்  நிறைவேற்றப்படமுடியும் என்ற கருத்தை அது ஊக்கப்படுத்தினால், அரசியல் முதுமரபு மீட்சி என்றவகையில் அது பினோக்கிய அடிவைப்பாக மட்டுமே கருதப்பட முடியும்.

ஜனநாயகம் என்பது அனைத்து குடிமக்களின் உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கும் ஓர் அரசியல் வடிவமாகும், மனித விவகாரங்களுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நவநாகரீகத்தின் மீதான எல்லையில்லா ஆச்சரியத்தோடு அவர் பேசினார்:  

நமது காலகட்டத்தில், தனிநபர் சுதந்திரத்திற்கு கடுமையான பாதிப்பை உண்டாக்கும் எந்த சட்டத்தையும் ஒரு ஜனநாயக சமூகத்தின் பெரும்பான்மை உருவாக்காது என்பதற்கு அங்கே ஏறத்தாழ நிபந்தனையற்ற உத்தரவாதம் உள்ளது. ... உண்மையில், ஒரு நவீன அரசில் எந்தளவுக்கு நீண்டகாலத்திற்குரிய ஜனநாயக தகவமைப்புகள் நிலவுகிறதோ, அந்தளவுக்கு சிறுபான்மையினரின் உரிமைகள் மீதான மதிப்பும், கவனிப்பும் அதிகரிக்கிறது என்பதோடு, நிறைய கட்சி மோதல்கள் அவற்றின் பகைமையை இழந்து விடுகின்றன என்பதை அனுபவம் காட்டியுள்ளது. வன்முறையின்றி சோசலிசத்தை எட்டுவதைக் குறித்து கற்பனையும் செய்யவியலாமல் இருப்பவர்கள், இதை ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு வாதமாக பார்ப்பார்கள்...10

... ஒரு ஜனநாயகத்தில், கட்சிகளும் அவற்றை ஆதரிக்கும் வர்க்கங்களும் விரைவிலேயே அவற்றின் அதிகார வரம்புகளை உணரத் தெரிந்து கொள்கின்றன, மேலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அந்தந்த சூழ்நிலைகளின் கீழ் அவை எந்தளவுக்கு சாதிக்க முடியுமென நம்புகின்றனவோ அந்தளவுக்கே அவற்றைக் கையிலெடுக்கவும் தெரிந்து கொள்கின்றன. தவிர்க்கவியலாத சமரசங்களில் ஜனநாயகம் என்பதே சமரசம் எனும் பாடசாலை தானே விட்டுக்கொடுப்புகளை வழங்குவதற்காக, அவர்களின் அத்தியாவசிய தேவைப்பாடுகளையும் விட அதிகமாக அவை கோருகின்றன என்றாலும் கூட, அது மிதமான நிதானத்தோடு செய்யப்படுகிறது.11

இங்கிலாந்து ஒரு விதிவிலக்கான விடயமென்பதையோ; ஜனநாயக மந்திரமெல்லாம் ஜேர்மனியில் செயற்படுவதற்கான சாத்தியம் குறைவு என்பதையோ பேர்ன்ஸ்டைன் நம்பவில்லை. ஜேர்மன் முதலாளித்துவத்தின் மாற்றமுடியாத பிற்போக்கு குணாம்சத்தை குறித்த SPDஇன் வலியுறுத்தல் தவறென அவர் வாதிட்டார். இது இந்த தருணத்தில் வேண்டுமானால் அனேகமாக நிஜமாக இருக்கலாம், இருப்பினும் அதற்கு முரணாக அங்கே நிறைய ஆதாரங்கள் உள்ளன. ஆனால்  அவ்வாறிருந்தாலும், அதனால் நீண்டகாலம் அங்கே நீடிக்க முடியாது."12 SPD சமூக புரட்சியைக் கொண்டு அச்சுறுத்துவதை நிறுத்தினால் மட்டுந்தான், ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம் ஜனநாயக சீர்திருத்த கோரிக்கைகளுக்கு மேலதிகமாக இயைந்து கொடுக்கும் என்பதை நிரூபிக்கும். பாட்டாளி வர்க்கம்-அல்லாத ஒட்டுமொத்த உலகிற்கும் எதிராக ஒரு வன்முறை புரட்சியை அது உத்வேகப்படுத்தாது" என்பதை முதலாளித்துவத்திற்கு மறுஉத்தரவாதம் அளிப்பதே அக்கட்சியின் பணியாகும்.13 இதை செய்து முடித்தால், உடனே, SPD குறித்த முதலாளித்துவத்தின் அச்சம் "முறிந்து போகும்", அத்துடன் அது பிரஷ்ய வரம்பிலா ஆட்சியில் உள்ள நிறைய பிற்போக்குத்தன உட்கூறுகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்துடன் "பொதுவான பாதையை" ஏற்படுத்திக் கொள்ள தயாராகிவிடும்.

இவ்விதத்தில், அதன் புரட்சிகர புனைவுகளை ஒதுக்கி வைக்குமாறும், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸை நிலைநோக்கு பிறழ செய்த ஹெகலிய நியதிவாதத்திலிருந்து விடுவித்துக் கொண்டு, சோசலிசம் என்பதே உண்மையில் முரண்பாடற்ற தாராளவாதமே என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதைப் புரிந்து கொள்ளுமாறும் பேர்ன்ஸ்டைன் SPD வலியுறுத்தினார்:   

உண்மையில், சோசலிச புத்திஜீவித சாதனத்தின் பாகமாக இல்லாத, தாராளவாத சிந்தனையே கிடையாது. தனிநபர்களுக்கான அவரவரது பொருளாதார கடமைப்பாடு கோட்பாடே கூட, இது முற்றிலுமாக மான்செஸ்டரியமாக (Manchesterish) தெரிந்தாலும், என்னுடைய தீர்மானத்தின்படி, அது சோசலிச தத்துவத்தில் மறுக்கப்படுவதில்லை, அல்லது அதை தற்காலிகமாக ஒதுக்கித்தள்ளும் எந்தவொரு கருதத்தக்க சூழ்நிலைகளே கூட இல்லை. கடமைப்பாடு இல்லாமல் அங்கே சுதந்திரம் என்பது இல்லை.14    

பேர்ன்ஸ்டைன் முதலாளித்துவ இராணுவவாதத்திற்கு எதிரான சோசலிச எதிர்ப்பை வெறுப்போடு புறக்கணிக்கும் அளவுக்குச் சென்றார். அவர் காலனித்துவத்தையும் கோட்பாட்டுரீதியில் எதிர்க்கவில்லை. அவர் எழுதினார், ஐரோப்பிய ஆட்சியின் கீழ் "காட்டுமிராண்டித்தனங்கள் எவ்வித விதிவிலக்குமில்லாமல், அவை அதற்கு முன்னர் இருந்ததையும்விட எவ்வளவோ மேலானவை..."15 இந்த விதி அமெரிக்க இந்தியர்களுக்குமே கூட பொருந்தும்: இந்தியர்கள் மீது முன்னர் என்னதான் தவறுகள் நடத்தப்பட்டிருந்தாலும், இன்றைய நாட்களில் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன, மேலும் அந்த உரிமைகளது எண்ணிக்கை குறையவில்லை, மாறாக மீண்டுமொருமுறை அதிகரித்தே வருகிறது என்பது நன்கறிந்த உண்மையாகும்."16

ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் பேராசைக்கு எதிரான உறுதியான சோசலிச எதிர்ப்பைப் பொறுத்த வரையில், பேர்ன்ஸ்டைன், உண்மையில் அது அதற்காகவே பிறந்திருப்பதுடன், மற்றும் தேசங்களின் நாகரீகமாக்கும் பணியில் அதன் நியாயமான பங்கை இன்னமும் தாங்கி நிற்பதால்" தேசங்களின் சங்கங்களில் (council of nations) ஜேர்மன் தேசம் விலகி நிற்கவேண்டுமா என்பது சமூக ஜனநாயகத்திற்கு உதாசீனமான விடயமாக இருக்ககூடாது" என்று வாதிட்டார்.17 கெய்சரின் நிரந்தரப்படையை, மக்கள் படைப்பிரிவைக் கொண்டு பிரதியீடு செய்ய வலியுறுத்துவதிலும் SPD சரியென்று ஆகாது, இராணுவம் என்றென்றைக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு வன்முறை அச்சுறுத்தலே என்ற அதன் எச்சரிக்கைகள் நிஜமாகவே வழக்கொழிந்து போனவையாகும்: பேர்ன்ஸ்டைன் எழுதினார், அதிருஷ்டவசமாக, அரசியல் கருத்துவேறுபாடுகளை தீர்ப்பதில் ஆயுத தளவாடங்களை பிரயோகிப்பதை விட ஏனைய வழிகள் நமக்கு பெரிதும் பழக்கமாகி வருகின்றன."18

ஓர் அரசியல் தத்துவவாதியாக மற்றும் மூலோபாயவாதியாக பேர்ன்ஸ்டைனின் நன்மதிப்பை அவர் எழுதிய எழுத்துக்களை விட வேறெதுவும் இந்தளவுக்கு சேதப்படுத்தாது. அவருடைய எழுத்துக்களிலிருந்து ஸ்டேகரால் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து முன்வைக்கப்பட்டவை கூட பேர்ன்ஸ்டைனின் புத்திஜீவித அந்தஸ்தை உயர்த்தவில்லை (மேலும் நான் மேற்கோளிட்டுள்ள பத்திகள் ஸ்டேகரின் சுயசரிதையில் தென்படவில்லை). சமகாலத்திய மார்க்சிஸ்டுகளுக்கு ஏதேனும் ஒரு ஆச்சரியம் இருக்கிறதென்றால், அது பேர்ன்ஸ்டைனின் வாதங்களில் இருக்கும் உயிரூட்டமற்ற தன்மை ஆகும். உண்மையில் இந்த வெதுவெதுப்பான நீராகாரம் தான், மார்க்சிசத்தின் ஒரு மறுப்புரையாக காட்டப்பட்டதா?" என்று ஒருவர் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது நாட்களினது தீவிரமான மற்றும் குழப்பமான போக்குகளின் மீது பேர்ன்ஸ்டைனின் கூர்ந்தறியும் திறமையின்மைக் குறித்து ஒருவர் ஆச்சரியப்படுவதை தவிர வேறுவழியில்லை. பேர்ன்ஸ்டைனுக்கு இசையின் மீது ஆர்வம் இருந்ததா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அவரது சமகாலத்தியவர்களில் ஒருவரான குஸ்தாவ் மாஹ்லெரின் சிம்பொனிகளைக் கேட்டு அவர் பயனடைந்திருக்ககூடும். பேர்ன்ஸ்டைனினது சொந்த படைப்புகளில் முற்றிலும் இல்லாதிருந்த ஏதோவொன்றை மாஹ்லெரின் படைப்பில் கண்டுபிடித்திருக்கக்கூடும்: அதாவது, முதலாளித்துவ நாகரீகத்தையும் விஞ்சி சென்று கொண்டிருந்த அவலங்களின் ஒரு முன்னுணர்தலை அவரிடம் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் மீண்டும் இவர், லியோனார்ட் பேர்ன்ஸ்டைன் அல்ல, பேர்ன்ஸ்டைன் எட்வார்ட் ஆவார், மனக்கவலைகளால் பாதிக்கப்பட்ட அந்த ஆஸ்திரிய இசையமைப்பாளரின் படைப்பிலிருந்து அவர் நிறைய விஷயங்களை எடுத்துக் கொண்டிருப்பார் என நான் ஐயுறுகிறேன்.

நான் மேற்கோளிட்டுள்ள பத்திகள் எழுதப்பட்டபோது, எட்வார்ட் பேர்ன்ஸ்டைனால் நினைத்தும் பார்க்க முடியாததாக கருதிய அதே பேரழிவு வெடிப்பதற்கு, வெறும் பதினைந்து ஆண்டுகள் மட்டுமே இருந்தன காட்டுமிராண்டித்தனத்தின் ஒரு சகாப்தத்தை தொடங்கி வைத்த அந்த பேரழிவின் பயங்கரங்கள் வரலாற்றில் ஈடிணையின்றி இருக்கின்றன. முதலாளித்துவ அபிவிருத்தி போக்கு, மேலதிகமாக ஜனநாயகத்தின் திசையிலோ, வர்க்க விரோதங்களை சீர்ப்படுத்தும் திசையிலோ செல்லவில்லை, மாறாக பாரிய ஒடுக்குமுறை மற்றும் உள்நாட்டு யுத்தத்திற்கு இட்டுச் சென்றது. எதிர்காலத்தை நோக்குகையில், குறுகிய பார்வையுள்ள எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் ஜனநாயகத்தின் வானவில்லை மட்டுமே பார்த்தார், முள்கம்பியிட்ட பதுங்குகுழிகள் மற்றும் சித்திரவதை கூடங்களை முற்றிலுமாக தவறவிட்டிருந்தார்.

பேர்ன்ஸ்டைனின் மற்றும் அவரது சமகாலத்தியவர்களின் எழுத்துக்களில் சந்தர்ப்பவாதம் அதன் மிக உயர்ந்த வெளிப்பாட்டைக் கண்டது. அதற்குப் பிந்தைய தசாப்தங்களில், அடுத்தடுத்து வந்த சந்தர்ப்பவாத பேரலைகள் ஏற்கனவே பேர்ன்ஸ்டைனியர்களால் என்ன கூறப்பட்டிருந்ததோ, அதில் வேறெந்த நிஜமான முக்கியத்துவத்தையும் சேர்க்கவில்லை. மிகமிகக் குறைந்த மட்டத்திலான தத்துவார்த்த சுய-நனவைக் கொண்டிருக்கும் நம்முடைய சொந்த காலகட்டத்தில், மார்க்சிசத்திற்கு எதிரான வாதங்கள் வெறுமனே பேர்ன்ஸ்டைனால் வளர்த்தெடுக்கப்பட்ட வாதங்களேயே, பெரிதும் அவை அவற்றின் தரத்தில் சுருங்கி போயிருந்தாலும் கூட, அவற்றையே மீள்உற்பத்தி செய்கின்றன. இதனால், ஒரு நூற்றாண்டு கடந்த பின்னரும் கூட, பேர்ன்ஸ்டைனின் தத்துவார்த்த கருத்துருக்களை ஆராய்கையில், ஒருவர் ஒட்டுமொத்த சமகாலத்திய மார்க்சிச-விரோத தொகுப்புகளை கையாள வேண்டியவராகிறார்.

மனிதன் என்பவன் ஒரு உருவாக்கமே (style), உருவாக்கத்தின் முக்கிய உள்ளடக்கம் வழிமுறையாகும்.(method). ஒருவர் அரசியலைக் குறித்து பேச தொடங்கும் போது, அவர் வெறுமனே அந்த நாளின் சம்பவங்களைக் குறித்த அவரது கருத்துக்களை வெளியிடவில்லை, மாறாக அத்தகைய அபிப்பிராயங்கள் மற்றும் புத்திஜீவித நிகழ்ச்சிப்போக்கின் அடித்தளத்திலுள்ள தத்துவார்த்த கருத்துருக்கள் மூலமாக அவர் அவற்றை அடைந்துள்ளார். தனிமனிதர்களுக்கு எது உண்மையோ அதுவே அரசியல் போக்குகளுக்கும் பொருத்தமானதாகும்.

"விஞ்ஞான சோசலிசத்தை" நிராகரித்தல்

அரசியல் சந்தர்ப்பவாதம், சில குறிப்பிட்ட ஆராய்ச்சிமுறையியலை (methodological) மற்றும் அறிவாதார முறையியலை (epistemological) அடிக்கட்டுமானத்தில் கொண்டுள்ளன. சந்தர்ப்பவாதத்தின் எல்லா வெளிப்பாடுகளும் ஒரு பொய்யான அறிவாதாரமுறைக்குள் அடைந்துவிடுகின்றன, அல்லது திருத்தல்வாதத்தின் அறிவாதாரமுறை அடிக்கட்டுமானங்களைக் குறித்த ஓர் ஆய்வு சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை பற்றிய ஒரு கவனமான அரசியல் பகுப்பாய்வைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்திலிருந்து விலகி இருக்கின்றது ஆகிய இந்த எளிமையான கருத்துருக்களை நான் ஊக்கப்படுத்த விரும்பவில்லை. ஆனால் பேர்ன்ஸ்டைன், மார்க்சிசத்தின் இந்த அல்லது அந்த அம்சம் மறுக்கப்பட வேண்டியதாக இருக்கிறதென்ற கருத்தில் மட்டுமே அவரது வாதத்தை அடித்தளமாக கொண்டிருக்கவில்லை மாறாக, மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் அவர்களின் பல தீர்மானங்களில் தவறாக இருந்தார்கள் என்பதை சமகாலத்திய அபிவிருத்திகள் காட்டியிருந்ததாக, நிச்சயமாக அவர் நம்பி இருந்தார். எவ்வாறிருந்த போதினும், அது இரண்டாவதாகத் தான் முக்கியத்துவம் பெறுகிறது. பேர்ன்ஸ்டைனைப் பொறுத்த வரையில், விஞ்ஞான சோசலிசத்தின்" கருத்துரு அதன் அர்த்தத்திலேயே முரண்பட்டு இருந்தது. சோசலிசம் விஞ்ஞான மட்டத்தை அடைய முடியாது, ஏனென்றால் "ஓர் இயக்கம் பங்கெடுத்துவரும் ஒன்று [அது] நடுநிலையோடு விஞ்ஞானத்தை முகங்கொடுக்க முடியாது"19 என்ற கருத்தைக் கொண்டிருந்தார். எந்தவொரு 'இசமும்' ஒருபோதும் விஞ்ஞானமாக முடியாது" இது பேர்ன்ஸ்டைன் குறிப்பிட்டது. 'இசங்கள்' வெறுமனே முன்னோக்குகள், போக்குகள், சிந்தனை முறைகள் அல்லது கோரிக்கைகள் ஆகும், ஆனால் ஒருபோதும் விஞ்ஞானம் ஆகாது."20 அது விஞ்ஞானரீதியானது எனக்கூறிக்கொண்டாலும், சான்றாக ஜேர்மன் விவசாயிகளது போர்கள், பிரெஞ்சு புரட்சி, அல்லது வேறெந்த வரலாற்று போராட்டத்திலும் சரி அது ஒரு விஞ்ஞான இயக்கத்தைவிட சிறியதாகவே இருந்தது. சோசலிசம் ஒரு விஞ்ஞானமாக அறிகையைச் சார்ந்திருக்க வேண்டும், இயக்கமாக இருக்கும் சோசலிசமோ அதன் 'உன்னதமான நோக்கத்திற்கான' நலன்களால் வழிநடத்தப்படுகிறது."21

இந்த கருத்துக்களில் பதிலளிக்க வேண்டிய பல அம்சங்கள் உள்ளன. எந்தளவிலும் அது குறிப்பிட்ட சமூக நலன்களின் ஒரு வெளிப்பாடாகும் மற்றும் முந்தைய பாரிய இயக்கங்களை விட நவீன சோசலிசம் விஞ்ஞானரீதியானது கிடையாது என்ற இந்த வாதத்தை ஆராய்வதிலிருந்து தொடங்குவோம். பேர்ன்ஸ்டைனின் நிறைய வாதங்களிலேயே, இது ஆழமானது என்பதை விடவும் மிகவும் புத்திசாலித்தனமானதுமாகும். எல்லா சமூக இயக்கங்களும் வர்க்க நலன்களால் உந்தப்பட்டுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் நவீன சோசலிச இயக்கங்களுக்கும் மற்றும் முந்தைய புரட்சிகர வெகுஜன இயக்கங்களுக்கும் இடையிலான இன்றியமையாத வேறுபாடு, மார்க்சிசத்தின் அபிவிருத்தியின் ஊடாக மட்டுந்தான் இந்த உந்துதல் கொடுக்கும் உட்கூறான அதாவது வர்க்க நலன் என்பது தத்துவார்த்த-வரலாற்று ஆய்வின் விடயமாக மாறுகிறது என்ற உண்மையில் வெளிப்பாட்டைக் காண்கிறது.

வர்க்க போராட்டத்தை முதன்முதலில் உணர்ந்து கொண்டு அதற்கு மகத்தான முக்கியத்துவம் கொடுத்தவர்கள் மார்க்ஸூம் ஏங்கெல்ஸூம் கிடையாது. இந்த புரிதலின் மீது ஏற்கனவே பண்டையகால, மறுமலர்ச்சிகால வரலாற்றாளர்களும் மற்றும், மிக சமீபத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நெப்போலியனுக்கு பிந்தைய மீட்சியின் போதிருந்த பிரெஞ்சு வரலாற்றாளர்கள் மத்தியில் இருந்தவர்களும் குறிப்பாக கிஸோவும் தடம் பதித்திருந்தனர். ஆனால் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸினால் மட்டுந்தான் வர்க்க போராட்டத்தின் அடியிலிருந்த அடித்தளம் கண்டறியப்பட்டு, விளங்கப்படுத்தப்பட்டது. மார்க்ஸூம் ஏங்கெல்ஸூம் வர்க்க போராட்டம் மற்றும் அதன் சடரீதியிலான உறவை அதாவது சொத்துடைமை, நலன்கள் போன்றவற்றை மட்டும் வலியுறுத்தவில்லை, மாறாக அந்த நலன்களும் மற்றும் அவை மேலுயர்த்தும் சமூக போராட்டங்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளை மற்றும், அவற்றிற்கு தேவையான மற்றும் அவற்றின் மூலமாக நிகழும் உற்பத்தி உறவுகளை அடித்தளத்தில் கொண்டு உருவாகின்றன என்பதை எடுத்துக்காட்டினர்.

வர்க்க சமூகத்தின் தோற்றுவாய்கள் குறித்த இந்த புரிதல் தான், முதல்முறையாக, வரலாற்றை தொடர்ச்சியாக சடரீதியில் புரிந்து கொண்டு விளங்கப்படுத்துவதை சாத்தியப்படுத்தியது அதாவது, பொருளாதார நலன்கள் உருவாவதை மட்டும் விவரிக்கும் ஒன்றல்ல, மாறாக சமூக சிந்தனையின் பரிணாமத்தையே கூட விவரித்தது. குறிப்பாக சமூக இருப்பிலிருந்து சமூக நனவை உருவாக்கும் இந்த இரண்டாவது அம்சம் தான், அதன் சொந்த தோற்றுவாய்கள், இருப்பு, அபிவிருத்தி மற்றும் அபிலாஷைகளை ஒட்டுமொத்தமாக தெளிவாக்கப்பட்ட வடிவத்தில் அதாவது கருத்தியல்வாத நோக்கங்களில் தங்கியில்லாமல் புரிந்துகொள்வதற்கும் மற்றும் விளங்கப்படுத்துவதற்கும் சோசலிச இயக்கத்திற்கு சாத்தியப்பாட்டை வழங்கியது. இங்கே தான் மார்க்சிச சோசலிச இயக்கம் மற்றும் அதற்கு முன்னர் இருந்த புரட்சிகர இயக்கங்களுக்கு இடையிலான ஓர் இன்றியமையாத வேறுபாடு தங்கியுள்ளது.

எல்லா சமூக இயக்கங்களும் அது கடந்தகாலத்தினதாக இருந்தாலும் சரி, நிகழ்காலம் அல்லது எதிர்காலத்தினதாக இருந்தாலும் சரி அவை ஏதோவிதத்தில் சமூக நலன்களின் வெளிப்பாடாக உள்ளன என்பதை நாம் சுலபமாக ஊகிக்கலாம். ஆனால் மார்க்சிச இயக்கமோ, அதன் கோட்பாடுகள், வேலைத்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள், எந்தளவுக்கு வரலாற்று வளர்ச்சியின் விதிகளைப் பற்றிய புரிதலோடு வழிநடத்தப்படுகிறதோ அந்தளவுக்குத் தான் அதன் விஞ்ஞானபூர்வ அடித்தளங்களை தகுந்த முறையில் வலியுறுத்த முடியும். சோசலிசத்தை விஞ்ஞானமாக" (socialism as science) மற்றும் "சோசலிசத்தை இயக்கமாக" (socialism as movement) என இவற்றிற்கு இடையே பேர்ன்ஸ்டைன் வேறுபடுத்துவது, ஏளனத்திற்குரியது என்பதைக்காட்டிலும் அறிவுமழுங்கியதாக இருக்கின்றது. சோசலிசம், விஞ்ஞானமாக, சமூக நனவின் அபிவிருத்தியை ஆளும் விதிகளை அறிந்துணர்கிறது என்று ஏற்றுக் கொண்ட பின்னர், சோசலிசம் இயக்கமாக "உன்னதமான நோக்கத்தின்" அடிப்படையில் அமைந்தது என்று வாதிடுவது ஒரு அப்பட்டமான அபத்தமாகும். ஆக மொத்தத்தில், உற்பத்தி சக்திகளின் குறிப்பிட்ட மட்டம் மற்றும் அதற்கேற்ப உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் ஏற்பட்ட வரலாற்று நிலைமைகள் ஆகியவற்றின் விளைபொருளே சமூக நனவு என்று வலியுறுத்தும் ஒரு விஞ்ஞானம், பின்னர், அதுவே ஒரு வெகுஜன இயக்கத்தின் அங்கியைப் போர்த்திக்கொள்ளும் போது, உன்னதமான நோக்கங்களால்" வழிநடத்தப்படுகிறது என வாதிட முடியாது. அது விஞ்ஞானத்திற்கு உண்மையாக இருந்ததென்றால், "உன்னத நோக்கங்களின்" தோற்றுவாய்கள் மற்றும் சமூக அடித்தளங்களை அது விளங்கப்படுத்த உடனடியாக நிர்பந்திக்கப்பபடும்.

"எந்த 'இசமும்' ஒருபோதும் ஒரு விஞ்ஞானம் அல்ல" என்ற பேர்ன்ஸ்டைனின் வாதத்தை இப்போது ஆராய்வோம். இந்த அபிப்பிராயம், டார்வினிசத்தையே ஒரு அபாயமான நிலைமைக்குக் கொண்டு வருவதாக தெரிகிறது. ஆனால் "இசத்தினால்" வெளிப்படுத்தப்படும் தொடர்பை விஞ்ஞானத்திற்கு பொருத்தமற்றதாகும் என்று அவர் வாதிட நோக்கங்கொண்டு பேர்ன்ஸ்டைன் தன்னைத்தானே தவறாக வெளிப்படுத்தி இருந்தார் என்று நாம் கருதிக் கொள்வோம். ஏதோவொரு தரப்பை ஏற்றிருக்கும் எந்தவொரு வடிவத்துடனும் விஞ்ஞானம் பொருத்தமற்றது என்ற, இந்த ஒரு வாதத்திற்கு பேர்ன்ஸ்டைன் மீண்டும் மீண்டும் திரும்பினார். அவர் அறிவித்தார்:  

சோசலிசம், தூய விஞ்ஞானமாக (pure science) மாறுவதில் அக்கறைகொண்டிருந்தால், அது வர்க்க அடிப்படையில் தொழிலாளர்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தும், ஒரு வர்க்க கோட்பாடாக இருப்பதைத் துறக்க வேண்டி இருக்கும். இந்த புள்ளியில், சோசலிசமும் விஞ்ஞானமும் அவசியமானரீதியில் ஒரு முழுமையின் இரு பகுதிகளாகி விடுகின்றன.

நான் குழப்பத்திற்கிடமின்றி என்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துவிடுகிறேன்: அதாவது, எந்தவொரு பக்கமும் சாராத, ஆர்வமில்லாத சோசலிஸ்ட்-அல்லாதவராலும், சோசலிச கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியும் வரையில், சோசலிச தத்துவம் விஞ்ஞானமாக மட்டுமே இருக்கிறது.22  

இந்த கடைசி கருத்து உண்மையென்றால், மனிதயினத்தின் தலைவிதி யாருக்கு முற்றிலும் அக்கறையற்ற ஒரு விடயமாக இருக்கிறதோ, அந்த நபர் மட்டுமே மார்க்சிசத்தின் விஞ்ஞானபூர்வ நம்பகத்தன்மைகளின் மீது தீர்ப்பு வழங்க தகுதி உடையவராவார் என்பதையே அது அர்த்தப்படுத்தும். அவர் எதை "தூய விஞ்ஞானம்" என்று அழைத்தாரோ அந்த கோரிக்கைகளை எடுக்கையில், பேர்ன்ஸ்டைன் "அகநிலையான விருப்ப கூறுபாடுகள்" இருக்கும் வரையில் அது பொருந்தாது என்று வலியுறுத்தினார்.23 விஞ்ஞான நடைமுறை எந்தவொரு குறிப்பிட்ட மனித குறிக்கோளுடனும் இணங்கியிராது என்று அவர் வலியுறுத்தினார்.       

ஆனால் இது உண்மையல்ல என்பதைக் காண, நிறைய சிந்திக்க வேண்டியதிருக்காது. ஏதோவொருதரப்பை எடுக்கும் தன்மையையோ அல்லது விருப்பத்தையோ விஞ்ஞானம் எந்தவிதத்திலும் மறுப்பதில்லை. HIV வைரஸ் குறித்து ஆய்வு செய்யும் ஓர் உயிரியல் ஆராய்ச்சியாளர் எய்ட்ஸின் விளைவுகளை பற்றி அக்கறைகொண்டிருப்பார் என்றே நாம் ஊகிக்கலாம். ஒரு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் அவரது கூரிய கத்தியின் கீழே உள்ள நோயாளியின் வாழ்வைக் காப்பாற்ற விரும்புகிறார் என்று தானே நாம் நம்புகிறோம். இரண்டுமே குறிப்பிட்ட "அகநிலையான" நோக்கங்களால் உந்தப்பட்டுள்ளன: முந்தையவர் HIV வைரஸை ஒளித்துக்கட்ட விரும்புகின்றார்; இரண்டாமவர் அவரது நோயாளியின் வாழ்வைக் காப்பாற்ற விரும்புகிறார். இது அவர்களின் வேலையில் அவர்கள் ஒரு விஞ்ஞானபூர்வ மனோபாவத்தை ஏற்க இலாயக்கற்றவர்கள் என்று அர்த்தப்படுத்தாதே.        

அவர் வாழ்ந்த காலத்திலேயே, பேர்ன்ஸ்டைன் இதே நிராகரிப்பை எதிர்கொண்டிருந்தார். மே 1901இல் வழங்கப்பட்ட ஓர் உரையில், சோசலிசம் ஒரு விஷேட நோக்கத்தை அடைய விழைவதால் அதுவொரு விஞ்ஞானமாக முடியாது என்று அவர் வாதிட்டார், குணப்படுத்தும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக இருந்தாலும் கூட மருத்துவம் ஒரு விஞ்ஞானமாக இருக்கிறது என்பதை அவர் மறுப்பாரா என பேர்ன்ஸ்டைனிடம் அப்போது கேட்கப்பட்டது. பேர்ன்ஸ்டைன் அவரது போலிவாத பைக்குள் இருந்து தேடியெடுத்து பதிலளித்தார்.

"நான் பதிலளித்திருந்தேன்," அவர் எழுதினார்,

குணமாக்குவது "மருத்துவக் கலை" என்று நான் கருதுகிறேன், இது [மருத்துவக் கலை] மருத்துவ விஞ்ஞானத்தை முழுமையாக மேதமை கொள்வதன் அடிப்படையில் அமைந்துள்ளது. இருப்பினும், பிந்தையது [மருத்துவ விஞ்ஞானம்] குணப்படுத்துவதை நோக்கி திரும்பியதல்ல, மாறாக அது உருவாகுவதற்கான நிலைமைகளைப் பற்றியதும் மற்றும் அது குணப்படுத்துவதற்கான வழிமுறைகளை பற்றிய அறிவாகும். இந்த கருத்தியலின் வேறுபாட்டை ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாக நாம் ஏற்றுக் கொண்டால், பின்னர் மிகவும் சிக்கலான விடயங்களிலும் கூட, விஞ்ஞானம் எங்கே முடிகிறது மற்றும் "கலை" அல்லது "கோட்பாடு" எங்கே தொடங்குகிறது என்பதைக் கண்டுணர்ந்து கொள்வது மிகவும் சிரமமாக இருக்காது.24

அதற்கு பிளெக்ஹானோவ் பதிலளித்திருந்தார்: சோசலிசம் ஒரு விஞ்ஞானமாக, சோசலிச புரட்சியின் வழிவகைகளை மற்றும் நிலைமைகளை ஆராய்கிறது, அதேவேளையில் சோசலிசம் ஒரு 'தத்துவார்த்த கோட்பாடாக' அல்லது ஓர் அரசியல் கலையாக, பெறப்பட்ட அறிவின் உதவியோடு, அப்புரட்சியைக் கொண்டு வர முயல்கிறது."25

பேர்ன்ஸ்டைன் விஞ்ஞானத்தை வெறும் நிஜங்களின் தொகுப்பாக கருதினார், அவற்றைக் கொண்டு விஞ்ஞானிகள், படித்த குமாஸ்தாக்களை விட சற்று மேம்பட்டிருந்த இவர்களாக, அவற்றை சேகரித்து, எடைபோட்டு, வகைப்படுத்தி, அவற்றை தகுந்த வைத்தியபெட்டிகளில் வைப்பவர்களாக கருதினார். அத்தகையவொரு கருத்துரு விஞ்ஞானத்தின் ஆக்கபூர்வ தூண்டுதலை மற்றும் செயல்பாட்டை மட்டும் பறிக்கவில்லை; அது வரலாற்றுத்தன்மை இழந்தும் இருந்தது. விஞ்ஞானத்தின் அபிவிருத்தி கடந்த 2,500 ஆண்டுகளாக பல்வேறு போக்குகளின் போராட்டத்தினூடாக முன்னேறியுள்ளது அதில் இருந்த பிளவுகள் வார்த்தையளவிலான கருத்துருக்களோடு மட்டும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை, மாறாக முற்றிலும் நேரடியாக சடரீதியிலான நலன்களோடும் சம்பந்தப்பட்டிருந்தன. ஜியோர்டனோ ப்ரூனோ மற்றும் கலிலியோ கலிலியின் தலைவிதிகளால் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, விஞ்ஞானம் அதன் வளர்ச்சியினுடாக அவர்களின் சமூக நிலைமைக்கு ஓர் அச்சுறுத்தலை கொண்டிருப்பதாக உணர்ந்த சமூக வர்க்கங்களின் எதிர்ப்பை, ஏதோ எப்போதோ எதிர்கொண்டிருக்கவில்லை என்பதைக் குறிப்பிடுவது ஏறத்தாழ மேலெழுந்தவாரியாக கூறுவதாகவே இருக்கும். விஞ்ஞானத்தின் பாரபட்சமற்றத்தன்மை" (scientific impartiality) குறித்து பேர்ன்ஸ்டைன் பேசிய போது, அவரது சிந்தனையில் அறிகை நிகழ்முறை (cognitive process) குறித்த மிக தீர்க்கமான கருத்துரு இருந்திருக்க வேண்டும். இதனூடாகத்தான் மனிதனின் சிந்தனையில் சட உலகின் பிரதிபலிப்பும் மற்றும் அறிவின் திரட்சியும் ஓர் ஆழ்சிந்தனையுள்ள மற்றும் உயிரூட்டமற்ற நிகழ்முறையாகவோ (passive process) அறிந்துணரப்படுகிறது. அதாவது, அவரது சடவாதம் எந்திரத்தனமாக, இயங்கியல் குணாம்சமின்றி இருந்தது, அதில் அறிகையின் நோக்கத்திற்கும், சிந்திக்கும் விடயத்திற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருந்தது.

பேர்ன்ஸ்டைனால் கேள்விக்குள் உள்ளாக்கப்பட்டது மார்க்சிசத்தின் விஞ்ஞானபூர்வ நியாயபூர்வமான தன்மை மட்டுமல்ல. தூய விஞ்ஞானம்" என்ற அவரது கருத்துரு, சமூகத்தின் ஒரு விஞ்ஞானபூர்வ ஆய்வின் சாத்தியக்கூறையே சந்தேகத்திற்குட்படுத்தியது. சாராம்சத்தில், மனிதர்கள் அறிந்துகொள்ளும் விடயத்திற்கும் (human knowing subject) மற்றும் அறிகையின் நோக்கத்திற்கும் (object of cognition) முற்றிலுமாக அன்னியப்பட்ட மற்றும் வெவ்வேறு அம்சங்களாக ஒன்றோடொன்று எதிரிடையாக நிற்கும் பகுதிகளுக்குள் அதாவது அவதானிக்கத்தக்க விதத்தில் இயற்கை மற்றும் தத்துவார்த்த விஞ்ஞானங்களோடு, விஞ்ஞானபூர்வ சிந்தனையின் ஆதிக்கதுறை மட்டுப்பட்டுவிடுகிறது என்பதை அவர் பேணி வந்தார். அவர் இவ்வாறு வலியுறுத்தினார்: அறிகை நிகழ்முறையில் அகப்பொருள் மற்றும் புறப்பொருள் ஒன்றோடொன்று ஊடுருவுவதன் மூலமாக, அதன் நடைமுறை எவ்விதத்திலும் மாசடையக் கூடாதென்பதை தூய விஞ்ஞானம்" கோருகிறது. அது ஒன்றொன்றும் அதனதன் இடத்தில் ஸ்திரமாக இருக்க வேண்டும். அறியும் அகப்பொருளுக்கும் மற்றும் அறிகை பொருளுக்கும் இடையே இருக்க வேண்டிய திட்டவட்டமான எல்லைக்கோடு மீறப்படுகின்ற அந்த தருணமே, விஞ்ஞானம் "அசுத்தம்" அடைந்து, அதன் விஞ்ஞானபூர்வ மதிப்பை இழந்துவிடுகிறது.

இதை, தோற்றப்பாட்டளவில் வரையறையாக கூறுவதானால், மனித சமூகத்தை பற்றிய விஞ்ஞானபூர்வ ஆய்வு, அது மார்க்சிஸ்டுகளால் செய்யப்பட்டாலும் சரி அல்லது வேறு எவரால் செய்யப்பட்டாலும் சரி, இயல்பாகவே சாத்தியமே இல்லை என்றாகிறது. இதைப் பொறுத்த வரையில், பேர்ன்ஸ்டைன் சரியென்றால், மனிதயின ஆய்வாளர்களும் மற்றும் ஆராய்ச்சியாளர்களும் அவர்களே ஆய்வு செய்ய முனையும் மொத்த உருவகத்தின் ஒரு பாகமாக இருக்கின்றபோது, எவ்வாறு எந்தவொரு உண்மையான சமூக விஞ்ஞானமும் இருக்க முடியும். இதே புள்ளியின் மீது காவுட்ஸ்கி பேர்ன்ஸ்டைனுக்கு பதிலிறுக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்:

ஒவ்வொரு விஞ்ஞானமும் அதனதன் தனியியல்பான சிக்கல்களைக் கொண்டிருக்கின்றன. சமூக விஞ்ஞானங்களில் இருக்கும் அவ்வாறான சிக்கல்களில், ஆய்வாளர்களும் மற்றும் ஆராய்ச்சியாளர்களும் அவர்களே, அவர்கள் எதை ஆராய வேண்டியுள்ளதோ அதே மொத்த உருவகத்தின் ஒரு பாகமாக உள்ளனர்; அவர்கள் அந்த மொத்த உருவகத்திற்கு வெளியே இல்லை மாறாக அதற்கு உள்ளே இருக்கிறார்கள்; அதில் ஒவ்வொருவரும் அவரவரின் குறிப்பிட்ட இடத்தைக் கொண்டுள்ளனர், அதிலிருந்து மட்டுந்தான் அவர், அதை குறித்தும், அதன் பிரத்யேக செயல்பாடுகளை, மொத்த உருவகத்தின் ஏனைய பாகங்களோடு அது சார்ந்திருக்கும் தன்மையை; மற்றும் இந்த மொத்த உருவகத்தின் குறிப்பிட்ட பாகங்கள் அவற்றிற்குள் ஒன்றோடொன்று முரண்பட்டு நிற்பதைக் குறித்தும் கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும். இவை நிச்சயமாக கடுமையான தடைகள் தான், ஆனால் அவர்களால் விஞ்ஞானத்தை நடைமுறைக்கு ஒவ்வாததாக ஆக்க முடியுமளவுக்கு, அவர்கள் நிஜமாகவே மிகவும் மகத்தானவர்களாக இருந்தால், பின் அவர்களால் விஞ்ஞான சோசலிசத்தை மட்டுமல்ல, மாறாக சமூக விஞ்ஞானத்தின் ஏனைய ஒவ்வொரு வகையையும் நிராகரிக்க முடியும். பின்னர் சோசலிஸ்டுகளைக் குறித்து பேர்ன்ஸ்டைன் கூறும் அதே விடயங்கள், முதலாளித்துவ பொருளாதாரவாதிகளுக்கும் பொருந்தும்.26

புறநிலையின் மாறாநிலைவாதம்

பேர்ன்ஸ்டைனின் அனைத்து வாதங்களும் இந்த ஒரேமாதிரியான மாறாநிலைவாத, எளிய மற்றும் இழிந்த சூத்திரத்தை சுற்றியே வலம் வருகிறது: புறநிலை" நிகழ்சிப்போக்குகள் என்பவை மனித நடவடிக்கை மற்றும் விருப்பத்திலிருந்து முற்றிலும் சுயாதீனமாக இருப்பவை. நனவின் தூண்டுதலை பெறும் நடவடிக்கை மூலமாக, விரும்பப்படும் அல்லது அடையப்படும் எதுவொன்றும் நிஜமான புறநிலை அல்ல. புறநிலை" என்பது முற்றிலுமாக மனிதயினத்திற்கும் மற்றும் அதன் நனவுக்கும் வெளியே இருப்பது மட்டுமே ஆகும் என்பதோடு, அது தன்னைத்தானே தன்னியல்பாக வெளிப்படுத்துகிறது. இவ்விதத்தில், எல்லா மனித நடவடிக்கைகளும், அவை நனவினூடாக கடந்து வருவதால், அகநிலையே ஆகும். ஆகவே, பேர்ன்ஸ்டைனின் கருத்துப்படி, புறநிலைமையின் தேவை" (objective necessity) என்ற வார்த்தை, அந்த சந்தர்ப்பத்தின் ஓர் உந்துதலளிக்கும் நனவை தவிர அதற்கு மேற்பட்ட எந்தவொரு மனித சமூக இயங்குமுறையையும் குறிக்காது.

இந்த நிலைப்புள்ளியிலிருந்து பார்த்தால், வர்க்க போராட்டமே புறநிலையாக வரலாற்றுரீதியிலான தேவையின் ஒரு வெளிப்பாடல்ல, மாறாக வெறுமனே நிகழ்வுகளின் புறநிலை பாதையின் மீது தன்னைத்தானே திணித்துக் கொள்ளும் மனித அகநிலையின் விருப்பம் என்றாகிறது. பேர்ன்ஸ்டைன் குறிப்பிட்டார், ஒரு குறிப்பிட்ட சமூக குழுக்களினது மேம்பட்ட நிலைமைகளுக்கான விருப்பம், ஒருபோதும் 'புறநிலையாக' இருக்க முடியாது. பொருளாதார மாற்றங்களைக் குறித்த விளக்கம் ஒருபோதும் 'புறநிலை' என்ற பதத்தைக் கைக்கொள்ள முடியாது என்றும் கூட ஒருவர் கூறலாம், ஏனென்றால் அவை மனித நடவடிக்கையின் தலையீடு இல்லாமல் ஒருபோதும் ஏற்படாது. மனித நடவடிக்கையை வரம்பெல்லையாக வைத்து, புறநிலை மற்றும் அகநிலைக்கு இடையே, விஞ்ஞானம் மற்றும் தேவை ஆகியவற்றின் வரையறைகளில் எதை விவாதிக்க முடியும் அல்லது விவாதிக்க முடியாது என்பதற்கு இடையே, எல்லைக்கோட்டைத் தெளிவுபடுத்தும் முயற்சியில், பேர்ன்ஸ்டைன் பின்வரும் எடுத்துக்காட்டை அளித்தார்:              

எல்லோருக்கும் உணவின் தேவை ஏற்படுவதென்பது ஒரு புறநிலை சக்தி, ஆனால் வேறுவேறுவகை உணவுக்கான விருப்பம் என்பது ஓர் அகநிலை காரணி. ஒரு கருத்தை அல்லது ஒரு திட்டமிட்ட இலக்கை அடைவதற்காக அன்றாட வாழ்க்கை தேவைகளை ஒதுக்கிவைக்கும் எதுவொன்றும், புறநிலை தேவைகளை அடிப்படையாக கொண்டதல்ல.27

பேர்ன்ஸ்டைனின் வாதம், ஒரு மேலெழுந்தவாரியான கவனத்திற்கும் கூட ஈடுகொடுத்து நிற்காது. உணவுத் தேவை ஏற்படுவது புறநிலையானதென்றும், ஆனால் "வேறுவேறு உணவுக்கான விருப்பம்" வெறுமனே அகநிலையானதென்றும் அவர் நமக்கு கூறுகிறார். அந்தவொரு குறிப்பிட்ட "விருப்பம்", ஒரு புறநிலைரீதியான-அடித்தளத்தில் உண்டான தேவையின் அகநிலையான வெளிப்பாடாக இருக்கலாமென்று அவருக்குத் தோன்றவில்லை; அல்லது, வேறுவிதமாக வித்தியாசமாக இதை கூறுவதானால், அகநிலையான விருப்பம் என்பது புறநிலை தேவைக்குள் ஒரு நனவான விளக்கத்தின் அடித்தளத்தில் வெளிப்பட்டிருக்கும். உணவுக்கான தேவை ஏற்படுவதென்பது ஒரு புறநிலையான அவசியம் என்பது உண்மை தான். ஆனால் பசிக்கு மனிதன் எவ்வாறு விடையிறுப்பு காட்டுகிறான் என்பது வெறுமனே முழுவதுமாக ஓர் அகநிலைத் தூண்டுதல் இல்லையே. ஊட்டச்சத்து விஞ்ஞானத்தில் (science of nutrition) மற்றும் "சமநிலை உணவுமுறையில்" (balanced diet) செறிந்த கொழுப்புகள் குறைந்திருக்கும் என்பது மனித உறுப்பினது தேவைகளைக் குறித்த ஒரு விஞ்ஞானபூர்வ புரிதலுக்கேற்ப, அகநிலை உந்துதலின் திசையை நேர்த்திப்படுத்திக்கொள்ளும் மற்றும் அதற்கு இயைந்துபோவதை பிரதிநிதித்துவம் செய்கிறது. உண்மையில், நனவின் பிரசன்னமானது அகநிலை விருப்பம் மற்றும் புறநிலை தேவையுடன் முற்போக்கான முறையில் இணக்கிப்போவதற்கு முன்நிபந்தனையாக உள்ளது.

உணவு விவகாரங்களில் இருந்து அரசியலுக்கு நகர்கையில், அவரது வாதமுறையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல், பேர்ஸ்ன்டைன் வலியுறுத்தினார், சோசலிசம் விஞ்ஞானத்திற்கான எந்தவொரு உரிமைகோரலையும் நிச்சயமாக இழக்கிறது, ஏனென்றால் இல்லாத ஏதோவொன்றை இந்த விடயத்தில், ஒரு சமூகபொருளாதார அமைப்பு வடிவத்தை அது விரும்புகிறது. "ஆனால் நாம் கடுமையாக பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஏதோவொன்று எவ்வாறு தூய விஞ்ஞானமாக இருக்க முடியும்?"28 என்று பேர்ன்ஸ்டைன் எரிச்சலோடு வினவினார். விஞ்ஞானம் என்ன இருக்கிறதோ அதைக் கண்டுணர்ந்து, விளக்கமளிப்பதை தவிர வேறொன்றையும் செய்ய முடியாது. ஏனென்றால் ஒரு பொருளாதார அமைப்பு முறையாக, கூட்டாண்மை (collectivism) ஒரு கருத்தியல் வடிவத்தை ஏற்கிறது. அதை [கருத்தியலை] ஒரேநேரத்தில் விஞ்ஞானமாகவும் பார்க்க முடியாது," என்று பேர்ன்ஸ்டைன் அறிவித்தார்.29

மனிதரின் விருப்பங்கள் விஞ்ஞான துறைக்கு வெளியே இருப்பதாக அவர் வலியுறுத்தியபோது, ஏதோ மார்க்சிச சோசலிசத்தின் விஞ்ஞானரீதியிலான பாசாங்குத்தனங்களை குத்திக்காட்டுவதாக பேர்ன்ஸ்டைன் நினைத்திருக்கலாம், ஆனால், உண்மையில் அவர் விஞ்ஞானத்தின் சாத்தியக்கூறையே மறுத்து வந்தார். விஞ்ஞானபூர்வ விசாரணையை பொறுத்த வரையில், அதுவே, ஒரு சமூக நடைமுறையாக உள்ளது, அதன் துடிப்பார்ந்த தூண்டுதல் மனிதன் அவன் எதிர்கொள்ளும் நிலைமைகளுக்கு அவனது அகநிலையான விடையிறுப்பிலிருந்து வெளிப்பாட்டைக் காட்டுகிறது. மனிதன் உயிர்வாழ்வதற்கும் மற்றும் மறுஉற்பத்தி செய்வதற்கும் அவனுக்கு எது அவசியமாக இருக்கிறதோ, அந்த இயற்கையிலிருந்து பெற்ற அவனது நனவின் வெளிப்பாடாக விஞ்ஞானம் எழுகிறது. அகநிலை மற்றும் புறநிலையை முற்றுமுதலாக பிரிப்பதை ஏற்பதற்கும் அப்பால், விஞ்ஞானரீதியான சிந்தனையின் அடிப்படைக் கருத்து மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இயங்கியல் உறவாக இருக்கிறது.

இங்கே மார்க்ஸின் ஆலோசனையைப் பெறுவது உபயோகமாக இருக்கும்:

முதலிடத்தில் உழைப்பு என்பது, மனிதனும் இயற்கையும் பங்கெடுக்கும் ஒரு நிகழ்ச்சிப்போக்காகும். அதில் மனிதன் அவனது சொந்த இசைவோடு ஆரம்பித்து, அது அவனுக்கும் இயற்கைக்கும் இடையிலான சடரீதியிலான உறவுகளை நெறிப்படுத்துகிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது. இயற்கையின் உருவாக்கங்களை அவனது சொந்த விருப்பங்களுக்கேற்ற ஒரு வடிவத்தில் கொண்டு வருவதற்காக, அவனது தோள்கள் மற்றும் கால்கள், தலை மற்றும் கைகள், அவனது உடலின் இயற்கை பலங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டு, இயற்கையினது சக்திகளில் ஒன்றாக இருக்கும் அவனே, இயற்கையை எதிர்கொள்கின்றான். அவ்விதத்தில் வெளியுலகின் மீது செயல்பட்டும் மற்றும் அதை மாற்றியும், அவன், அதேநேரத்தில் அவனது சொந்த இயற்கையையே மாற்றுகிறான். அவனது மறைந்துகிடக்கும் சக்திகளை அவன் அபிவிருத்தி செய்வதுடன், அவனது அதிகாரத்திற்கு அதை கீழ்படிய வைக்க அவற்றை நிர்பந்திக்கிறான். ... ஒரு நெசவாளியின் நடவடிக்கை ஒரு சிலந்தியின் நடவடிக்கையை ஒத்திருக்கிறது, ஒரு தேனி ஒரு கட்டிடக்கலைஞரை போல அதன் கூட்டைக் கட்டி, பல கட்டிடக்கலைஞர்களை வெட்கி தலைகுனிய வைக்கிறது. ஆனால் இதில் தேனிக்களின் சிறந்த வேலையை அந்த மோசமான கட்டிடக்கலைஞரின் வேலையிலிருந்து எது வேறுபடுத்துகிறதென்றால், கட்டிடக்கலைஞர் அவர் அதை யதார்த்தத்தில் கொண்டு வருவதற்கு முன்னதாக அவரது கட்டமைப்பைக் கற்பனையில் உருவாக்குகிறார். ஒவ்வொரு உழைப்பு-நிகழ்முறையின் இறுதியில், அது தொடங்குகையில் அந்த தொழிலாளரின் கற்பனையில் ஏற்கனவே என்ன இருந்ததோ, அதை நாம் ஒரு விளைவாகப் பெறுகிறோம்.30

சட உலகம், மனித நனவு மற்றும் நடைமுறைக்கு வெளியே இருந்தாலும், விஞ்ஞானமோ ஒரு குமாஸ்தா கையிருப்பு கணக்கு எடுப்பதைப் போல, அந்த சட உலகின் வரையறையோடு தன்னைத்தானே மட்டுப்படுத்திக் கொள்வதில்லை. உண்மையில் அது, என்ன இல்லை என்பதைக் குறித்து தனக்குத்தானே கருத்தில்கொள்கிறது. மனிதனின் கனவுகளை யதார்த்தமாக்கும் சாத்தியக்கூறை, விஞ்ஞானம் இயற்கைக்குள் கண்டறிய முயல்கிறது. இக்காரஸ் (Icarus) பற்றிய கட்டுக்கதை 2,000 ஆண்டுகளுக்கும் அதிகமாக பழமையானது. லியோனார்டோவின் ஓவியங்களில் வெளிப்பட்ட பறக்க வேண்டுமென்ற கனவு, இறுதியில் ரைட் சகோதரர்களின் இரட்டை விமானம், மற்றும், மிக சமீபத்தில், விண்வெளி ஓடமாக மாற்றம் பெற்றது. மனிதனின் நனவு புற உலகை மட்டும் பிரதிபலிக்கவில்லை, அதை உருவாக்கவும் செய்கிறது."31

இயற்கை விதிகள் பற்றிய மனிதனின் நுண்ணறிவு, அப்போதைக்கு அப்போது நிலவும் நிலைமைகளுக்கேற்ப, அவற்றை அவனது சொந்த நலன்களுக்கு பயன்படுத்தவும் மற்றும் அதை மாற்றவும் கூட அவனுக்கு உதவுவதைப் போலவே, மனிதனின் வரலாற்று அபிவிருத்தியை நெறிப்படுத்தும் விதிகளுக்குள் மார்க்சிசத்தால் எட்டப்பட்ட விஞ்ஞானபூர்வ நுண்ணறிவு, நனவுபூர்வமாக-புரிந்துகொள்ளப்பட்ட மனித தேவைகளின் அடித்தளத்தில் சமூக-பொருளாதார வாழ்வை ஒழுங்கமைக்கும் சாத்தியக்கூறை வழங்குகின்றன. பேர்ன்ஸ்டைன், அதுபோன்ற ஒரு நுண்ணறிவின் சாத்தியக்கூறை பொதுவாக மறுக்கின்ற அதேவேளையில், மார்க்சிசத்திற்கும் மற்றும் அதற்கு முன்பிருந்த கற்பனாவாத சோசலிச சிந்தனையின் பல்வேறு வடிவங்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாட்டை திரித்து பிரதிநிதித்துவம் செய்தார். மார்க்சிசத்தின் "உள்ளார்ந்த மையக்கரு" (innermost core) ஓர் எதிர்கால சமூக ஒழுங்கமைப்பின் ஒரு தத்துவமாகும்" என்றவர் வாதிட்டார். இது இரண்டு அடிப்படை தன்மைகளில் பிழையாகும்:

முதலாவதாக, மார்க்சிசத்தின் "உள்ளார்ந்த மையக்கரு" எதிர்காலத்தின் ஒரு தத்துவமோ அல்லது வரலாற்றின் ஒரு தத்துவமோ கூட அல்ல, மாறாக ஒரு சடரீதியிலான உலக கண்ணோட்டமாகும், அது இயங்கியல் அணுகுமுறையின் அடித்தளத்தில் நிறுவப்பட்ட, நனவின் மீது இருப்பின் மேலாளுமையிலிருந்து தொடங்குகிறது.

இரண்டாவதாக, மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் ஒரு எதிர்கால சமூக ஒழுங்கமைப்பு (social order) தத்துவத்தை வழங்கவில்லை. மாறாக, அவர்கள் வரலாற்று அபிவிருத்தியின் பொது விதிகளைப் பற்றி, மற்றும் அந்த அடித்தளத்தில், முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயல்பைப் பற்றி ஒரு தொடர்ச்சியான சடவாத விளக்கத்தை வழங்கினார்கள். உள்ளடக்கமற்ற கோட்பாடுகளின் மீது எதிர்கால சமூகத்தின் அதன் கருத்துருவைக் கட்டமைத்திருந்த கற்பனாவாத சோசலிசத்திற்கு முரண்பட்ட விதத்தில், மார்க்சிசம் நிலவும் சமூக முரண்பாடுகளின் மீதான ஆய்வின் மூலமாக, சோசலிசத்தின் வரலாற்று தேவை மற்றும் சாத்தியக்கூறை வெளிப்படுத்தியது. மார்க்ஸ் ஒரு புதிய சமூக அமைப்புமுறையைக் கண்டுபிடிக்க உத்தியை வகுக்கவில்லை. அவர் சோசலிசத்தையும் "கண்டுபிடிக்கவில்லை".       

நன்கறியப்பட்ட விதத்தில், மார்க்ஸ் ஒரு எதிர்கால சமூக ஒழுங்கமைப்பின் ஒரு முன்வரைவை வரைய முயலவில்லை. மார்க்ஸின் எழுத்துக்களில் ஃபூரியர்களின் கட்டுமானங்கள் (Phalansteries of Fourier) எதையும் காண முடியாது. மாறாக, முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார அபிவிருத்தியானது, சோசலிஸ்டுகளின் விருப்பத்திலிருந்து சுயாதீனமாக, உற்பத்தி கருவிகளை சமூகமயமாக்குவதற்கு அடித்தளங்களை அமைக்கிறது; மற்றும் புறநிலைரீதியாக தொழிலாள வர்க்கத்தை சுரண்டும் அடிப்படையில் அமைந்துள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையின்  முரண்பாடுகள், நெருக்கடி, முறிவு மற்றும் சமூக புரட்சியை நோக்கி நாடிச்செல்லும் என்பதை மார்க்ஸ் எடுத்துக்காட்டினார். ஆகவே சோசலிசம் என்பது இப்போது நிலவும் சமூகத்தினது சமூக பொருளாதார கட்டமைப்பின் ஒரு அவசியமான (இல்லையென்றால், ஓர் உத்தியோகபூர்வமான அர்த்தத்தில், தவிர்க்கவியலாத) விளைபொருளாகும், மேலும், இன்னமும் ஆழமான அர்த்தத்தில், மனிதனின் முழு வரலாற்று பரிணாமமாகும்.

பேர்ன்ஸ்டைனின் தத்துவார்த்த கருத்துருக்களின் வெற்றுத்தன்மையை உணர்ந்த பின்னரும் கூட, ஒருவர் இன்னமும் இவ்வாறு கேட்க நிர்பந்திக்கப்பட்டதாக உணரலாம்: ஐரோப்பிய மக்களை ஒட்டுமொத்தமாக ஒரு பேரழிவை நோக்கி உந்திச் சென்று கொண்டிருந்த சமூக முரண்பாடுகளுக்கு, பேர்ன்ஸ்டைனால் இந்தளவுக்கு எவ்வாறு முற்றிலுமாக கண்மூடி இருக்க சாத்தியமானது? இந்த கேள்வியை நமது சமகாலத்தியவர்களிடம் முன்னிறுத்தினால், குறைந்தபட்சம் அதற்கான பதிலின் ஒரு பகுதியையேனும் பெற முடியும். நமது சொந்த நாகரீகத்தைப் படுபாதாளத்திற்கு உந்திச்சென்று கொண்டிருக்கும் முரண்பாடுகளுக்கு, புத்திசாலிகள் என்று கருதப்பட்ட நிறைய பேர், இந்தளவுக்கு ஏன் முற்றிலுமாக கண்மூடித்தனமாக இருந்தார்கள்? ஆசியாவின் ஐந்து புலிகளின்" (Five Tigers of Asia) பொறிவு என்பது ஏன் நன்கு-விபரமறிந்தவர்கள் என்று கருதப்பட்டவர்களேயே ஆச்சரியத்திற்குள் எடுத்துச் சென்றது? எட்வார்ட் பேர்ன்ஸ்டைனின் வாழ்க்கை ஒரு முன்மாதிரியாக படிக்கக்கூடியதல்ல, மாறாக, குறைந்தபட்சம், ஒரு எச்சரிக்கையூட்டும் கதையாக வேண்டுமானால் வாசிக்கலாம். குறிப்பாக ஏறத்தாழ நீண்டகால வரலாற்று அலட்சியம் மற்றும் அரசியல் கண்மூடித்தனத்தின் நமது சொந்த காலக்கட்டத்தில், உலக அரங்கில் தற்போது செயல்பட்டுவரும் அரசியல் பிரபலங்களோடு ஒப்பிட்டால், எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் அவருக்கிருந்த வரம்புகளுடன், அவர் அரிதாகவே மோசமாக தெரிவார், அத்தகைய எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் போன்றவர்களின் பிழைகளிலிருந்து ஏதோசிலவற்றைப் அறிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, 1898இல், பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் இருந்த ஐரோப்பிய முதலாளித்துவத்தின் செல்வவளமை மற்றும் அதிகாரத்திற்கு இடையே, வரவிருந்த பேரழிவின் அறிகுறிகளைப் பார்ப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை, பேர்ன்ஸ்டைனுக்கு ஆதரவாக, நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்ன அவசியமாக இருந்ததென்றால் வெறுமனே ஒரு கூரிய பார்வையல்ல, மாறாக மார்க்ஸ் ஒருமுறை குறிப்பிட்டதைப் போல "வேறுபடுத்திப் பார்க்கும் சக்தி" அவசியமாகி இருந்தது.        

பேர்ன்ஸ்டைனின் அனுபவவாதம்

முக்கியமாக, இந்த புத்திஜீவித தகைமை பேர்ன்ஸ்டைனிடம் இல்லாமலிருந்தது. ஒரு அனுபவவாதி, சாதாரண அவதானிப்பின் மூலமாகவோ அல்லது பத்திரிகை வாசிப்புகள் மற்றும் பொருளாதார புள்ளிவிபரங்கள் குறித்த அவரது ஆய்வுகள் மூலமாகவோ "உண்மைகளை" அவர் தருவிப்பதால், அவரது அரசியல் பரப்பெல்லை அவற்றால் தான் தீர்மானிக்கப்பட்டது. பேர்ன்ஸ்டைன், தான் ஒரு விஞ்ஞானத்தின் மனிதர் என்பதை உளமார நம்பினார், மேலும் மார்க்ஸின் ஹெகலிய ஆராய்ச்சிமுறையும் மற்றும் புரட்சிகர நோக்கங்களுக்கு எதிரான அவரது பிரதான பழிதூற்றல் தான், சமூக பொருளாதார வாழ்வின் "உண்மைகளுக்கு" ஒரு புறநிலையான அணுகுமுறையை ஏற்பதை அவருக்கு சாத்தியமில்லாமல் செய்தது.

அனுபவவாதியைக் குறித்த பொதுவான பிரமைகளின்படியே பேர்ன்ஸ்டைன் இயங்கிக்கொண்டிருந்தார்: அதாவது, அந்த "உண்மைகள்" அடிப்படையானவை, தூய்மையானவை", உண்மையான மதிப்பை அளவிடமுடியாதவை" மற்றும் முற்றுமுதலான புறநிலை புள்ளிவிபரங்களின் புத்திஜீவித மாசுபடாத அம்சங்களே, உண்மையின் உயிரோட்டமான கட்டமைப்பை உண்டாக்குகின்றன என்ற கருத்தைக் கொண்டிருந்தார். ஆனால் அரசியல்ரீதியில்-நடுநிலையான புள்ளிவிபரங்களின் இத்தகைய அம்சங்களினது போதுமான எண்ணிக்கையிலான திரட்சிதான், சமூக யதார்த்தத்தின் ஒரு நிஜமான புறநிலை சித்திரத்தை சமூக விஞ்ஞானிக்கு வழங்குவதுடன், அதன் அடிப்படையில் தான் நடவடிக்கைக்கான ஒரு பொருத்தமான பாதையை குறித்து முடிவெடுக்க முடியும்.

அனுபவவாதி எதை மறுக்கிறார், அல்லது உணர்ந்து கொள்ள தவறுகிறார், என்றால், சமூக யதார்த்தத்தின் "உண்மைகள்" என்பவையே வரலாற்று விளைபொருள்களாகும் என்பதையும், மேலும் எந்தவிதத்தில் உண்மைகள் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் ஒரு கருத்தியல் கட்டமைப்பிற்குள் நிறுத்தப்படுகின்றன என்பது சமூகரீதியில் நிபந்தனைக்குட்பட்டுள்ளது என்பதையும் ஆகும். ஒவ்வொரு சமூக உண்மையும் வரலாற்று நிபந்தனைகளின் பிறப்பாகும் மற்றும் அது சமூகபொருளாதார உறவுகளின் ஒரு சிக்கலான வலையமைப்பின் பாகமாக இருக்கிறது. அனைத்திற்கும் மேலாக இத்தகைய "உண்மைகள்", ஒரு வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் விளைபொருளாகவும் மற்றும் பிரதிபலிப்பாகவும் இருப்பதுடன், அறிகைரீதியில் அமைந்த கருதுகோள்கள் மற்றும் வகைப்படுத்தல்கள் மூலமாக அறியப்படுவதனூடாக மட்டும்தான் நிச்சயமாக அவை "உண்மைகளாகவே" அங்கீகரிக்கப்படுகின்றன.    

சமூக உண்மைகளை அவர் தேர்ந்தெடுப்பதும், ஆராய்வதும் முற்றிலும் நடுநிலையானதென வலியுறுத்தும் அனுபவவாதி, அவர் எதனோடு வேலை செய்து வருகிறாரோ அந்த கருத்துக்களினது வரலாற்றுரீதியில் நிபந்தனைக்குட்பட்ட குணாம்சத்தைக் குறித்து அறியாமல் இருக்கிறார்; அதாவது, வேறு வார்த்தைகளில், அவர் அவரது சொந்த சிந்தனையின் வடிவங்களை நோக்கிய ஒரு விமர்சனமற்ற மனோபாவத்தை ஏற்று வருகிறார்.

அவரது சொந்த தத்துவார்த்த கருத்துருக்களை நோக்கிய பேர்ன்ஸ்டைனின் விமர்சனமற்ற மனோபாவம், இறுதி இலக்கு என்று ஒன்றுமேயில்லை என்ற அவரது பிரபலமான அறிவிப்பில் இருந்து மிகத் தெளிவாக வெளிப்பட்டது; அதாவது அவருக்கு இங்கே, இப்போது என்ன நிகழ்கின்றது என்பது பற்றி மட்டுமே அக்கறை இருந்தது. இந்த கண்ணோட்டத்தின் தாக்கங்கள் என்னவாக இருந்தன? உண்மைகள் வெளிப்பட்டதைப் போலவே, சோசலிச இயக்கத்தின் நடைமுறையும் அதன் வரலாற்று உள்ளடக்கத்திலிருந்து கிழித்துக் கொண்டு வெளிவந்தது. இந்த அடிப்படையில், அரசியல் நடவடிக்கையானது, ஒரு வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் ஒரு பகுதியாக அதற்கு அதே பொறுப்புடைய ஒரு அர்த்தமுமற்ற வகையில் ஒழுங்குபடுத்தப்படுகின்றது.

முரண்பாடுகள் அரசியல் வாழ்வின் மேற்பரப்புக்கு உடைந்து வரவிருந்த அந்த புள்ளியில், துல்லியமாக, பேர்ன்ஸ்டைன் புரட்சிகர முன்னோக்கை நிராகரித்தார். இருட்டாத வரையில் ஒரு புத்திசாலி கழுகு இரை தேட கிளம்புவதில்லை. ஒரு குறிப்பிட்ட சமூக ஒழுங்கின் மீது ஒளிபரவியிருக்கும் அந்த தருணத்தில், ஸ்திரப்பாட்டின் தோற்றம் பெரும்பாலும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும். அதன் தரம் மற்றும் அதன் உச்சநிலை ஆகிய வரையறைகளில், நிலவிவரும் அமைப்புமுறையின் பலம் என்னவென்பதை நிரூபிக்கும் அனுபவவாத தகவல்கள் பெறப்பட்டுள்ளன என்ற நிலையில், ஒரு அனுபவவாதிக்கோ, அதுபோன்றவொரு மிகத்தெளிவான தகவல்களின் தொகுப்புகளால் மெய்பிக்கப்பட்ட ஒரு சமூக அமைப்புமுறையின் நிலைகுலைந்ததன்மை பற்றி கேள்வியெழுப்புவதும் கூட அர்த்தமற்றதாக தெரிகிறது. ஆனால் அந்த புள்ளிவிபர துணுக்குகள், முன்கூட்டியே ஓரங்கட்டுப்பட்டுவிடுகின்றன, மேலும், அவை அவற்றின் இயல்பிலேயே, அனுபவவாதிக்கு தெளிவின்றி இருப்பதோடு மட்டுமல்ல, மாறாக திசையை மாற்றிக்கொண்டே இருக்கும் நிகழ்முறையைக் கொண்ட ஒரு சூழ்நிலையின் முரண்பாட்டு குறியீடுகள் என்பதைத் தவிர மேலதிகமாக அவை ஒன்றுமாக இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட புள்ளிவிபரங்களைக் கைப்பற்றி கொண்டு, அப்போதுள்ள ஒழுங்கமைப்பிற்கு அடிபணிவதை நியாயப்படுத்த முனையும் அரசியல் அனுபவவாதி, நிகழ்ந்துவரும் நிகழ்வுபோக்கின் மீது ஒரு தன்னியல்பான முடிவைத் திணிக்கும் தவறைச் செய்கிறார். இவ்விதத்தில் அவர் இறுதி விளைபொருளை மாற்றும் வரலாற்று தருணத்தில் தவறிழைக்கிறார். அதனால் தான், 1898இல் பேர்ன்ஸ்டைனால், அணுகி வந்து கொண்டிருந்த 1933 ஒருபுறமிருக்கட்டும், 1914இன் நிழலைக்கூட கவனிக்க முடியவில்லை.

1 Lecture delivered on January 5, 1998, at the International School on Marxism and the Fundamental Problems of the Twentieth Century, held in Sydney Australia.

2 Manfred B. Steger, The Quest for Evolutionary Socialism: Eduard Bernstein and Social Democracy (Cambridge: Cambridge University Press, 1997), pp. 1415.

3 Ibid., p.15.

4 Peter Gay, The Dilemma of Democratic Socialism (New York: Collier Books, 1970), p. 110.

5 The Quest for Evolutionary Socialism, p. 69.

6 Karl Marx and Frederick Engels: Collected Works, Volume 29 (New York: International Publishers, 1987), p. 263.

7 Eduard Bernstein, The Preconditions of Socialism (Cambridge: Cambridge University Press, 1993), p. 139.

8 Ibid.

9 Ibid., p. 146.

10 Ibid., p. 142.

11 Ibid., p. 144.

12 Ibid., p. 157.

13 Ibid., p. 158.

14 Ibid., pp. 148149. 

15 Henry Tudor and J.M. Tudor ed., Marxism and Social Democracy: The Revisionist Debates 18961898 (Cambridge: Cambridge University Press, 1988), p. 154.

16 Ibid.

17 The Preconditions of Socialism, p. 164.

18 Ibid., p. 162.

19 Manfred Steger, ed., Selected Writings of Eduard Bernstein 190021, (New Jersey: Humanities Press, 1996), p. 97.

20 Ibid., p. 99.

21 Ibid., p. 95.

22 Ibid., p.116.

23 Ibid., p. 118.

24 Ibid., p. 104.

25 Georgi Plekhanov, Selected Philosophical Works, Volume 3 (Moscow: Progress Publishers, 1976), p. 34.

26 Karl Kautsky, Problematischer gegen wissenschaftlichen Sozialismus, in: Die Neue Zeit, Jg. 19 (19001901), Bd. 2 (1901), H. 38, S. 357 (translation by D. North).

27 Selected Writings of Eduard Bernstein 190021, p. 36.

28 Ibid., 106.

29 Ibid., p. 108.

30 Karl Marx, Capital, Volume 1 (London: Lawrence & Wishart, 1974), pp. 173174.

31 V.I. Lenin, Collected Works, Volume 38 (Moscow: Progress Publishers, 1976), p. 212.