ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ඩෙංගු රෝගයට ගොදුරු වූ සරසවි සිසුවියගේ මරනයේ වගකීම අසල්වැසියන් හා සේවකයන් මත පැටවෙයි

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக  மாணவியின்  மரணத்துக்கான  பொறுப்பு அயலவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது சுமத்தப்படுகின்றது

By our reporters
8 July 2017

டெங்கு நோயினால் மாணவி ஒருவர் மரணித்ததின் விளைவாக நடத்தப்பட்ட மாணவர் ஆர்பாட்டத்துடன், கடந்த ஜூலை 1 முதல் மொரட்டுவை பல்கலைக் கழகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டது. இறந்த 23 வயதான சேதனா அபாயகோன், தகவல் தொழிநுட்ப  பீடத்தின்  மாணவி ஆவார். இது வரையிலும் மொரட்டுவ  பல்கலைக்கழகத்தின் 80 திற்கும் அகமான  மாணவர்கள்  டெங்கு  நோயினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு மட்டும் கடந்த சில மாதங்களில் டெங்கு நோயால் 77,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 220 பேர் நாடு முழுவதும் மரணித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

மொறட்டுவ  பல்கலைக்கழகத்தின்  பொறியியல் பீட மாணவர் சங்கம், மாணவியின்  இறப்பின் பின்னர்  திடீர்  ஆர்ப்பாட்டமொன்றை  நடத்தியதோடு ஒரு  மாதத்திற்கு  முன்னர் டெங்கு அபாயம் தொடர்பாக  அதிகாரிகளுக்கு  அறிவித்தபோதிலும், இந்த  மரணம் நிகழும் வரை பல்கலைக்கழகத்தை மூடுவது ஒத்தி வைக்கப்பட்டதாக குறிப்பிட்டனர்.

பல்கலைக்கழகம்  மூடப்பட்டதை  தொடர்ந்து,  ஊடகங்கள் துணை வேந்தர் ஆனந்த  ஜயவர்தனவிடம் வினாவிய போது, பல்கலைக்கழக வளாகத்திற்குள் டெங்கு  நுளம்புகள்  உருவாகும் இடங்கள் இல்லை எனவும், மாணவர்கள்  தங்கியிருக்கும்  பல்கலைக்கழக வளாகத்தை சுற்றியுள்ள வீடுகளிலிருந்தே டெங்கு நோய்  பரவியுள்ளதாக  குறிப்பிட்டார். ஊடகங்களுக்கு அவ்வாறு  குறிப்பிட்ட அதேவேளை, பல்கலைக்கழக வளாகத்தினுள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு விமானப் படையை  ஈடுபடுத்தவுள்ளதாக  மாணவர்களிடம் கூறியுள்ளார்.

இராணுவ-பொலிஸ் அரசை அமல்படுத்த தருணம் பார்த்திருக்கும் அரசாங்கம், எல்லா பிரச்சினைகளின் போதும், அவற்றை ஒழிக்கும் போர்வையில் இராணுவத்தை வீதிக்கு இறக்கி வருகின்றது. அந்த வகையில், தற்போது பல்கலைக்கழகத்தினுள் இராணுவத்தை கொண்டுவர டெங்கு நோய் பரவுவதை சுரண்டிக்கொள்கின்றது.

எவ்வாறெனினும், துணை வேந்தரின் கூற்றுக்கு மாறாக, மொரட்டுவ பல்கலைக்கழக வளாகத்தினுள் டெங்கு நுளம்புகள் அதிகம்  இருப்பதாக  மொரட்டுவ  நகரசபையின் "டெங்கு ஒழிப்பு படையணி" கடந்த மே மாத கடைசியில் மேற்கொண்ட  பரிசோதனையில் உறுதிபடுத்திக்கொண்டுள்ளது.

உலக சோசலிச வலை தளத்திற்கு கருத்து தெரிவித்த மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன், தான் இருந்த விடுதிக்கு ஒரு வருடத்திட்ற்கு இரண்டு தடவை மாத்திரமே நுளம்புக்கொல்லி தெளிக்கப்பட்டதாக தெரிவித்தார். அதுவும் கூட மாணவர் சங்கத்தின் தலையீட்டினாலேயே செய்யப்பட்டுள்ளது. “பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள கழிவு நீரோடைகளிலும் தண்ணீர குழிகளிலும் நுளம்புகள் நிறைந்து காணப்படுகின்றன" என அவர் குறிப்பிட்டார். “சில மலசல கூட கழிவுக் கிடங்குகளிலிருந்து மாலை நேரங்களில் புகை போன்று நுளம்புகள் வெளியேறுவதாக” பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் கூறினார்.

மறு பக்கம், பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் இருப்பவர்களால்  மாணவர்களுக்கு டெங்கு நோய் தொற்றுமாயின் அதற்கும்  பொறுப்புக் கூற வேண்டியது அதிகாரத்தில் இருந்து வரும் முதலாளித்துவ ஆட்சியாளர்களே. தச்சு தொழில் மற்றும் கூலித் தொழில் செய்து வாழ்க்கையை ஓட்டும் இந்த வறிய மக்களை, மிக நெருக்கமான சிறிய வீடுகளில், எவ்வித சுகாதார பாதுகாப்புமின்றி வாழும் நிலைக்கு தள்ளியது, ஏழு தசாப்தங்களாக ஆளும் முதலாளித்துவ  ஆட்சியாளர்களே ஆவர். அதேபோல் பாரிய அளவிலான விடுதி வசதியின்மைக்கும் பொருளாததார நெருக்கடியின் காரணமாக ஒப்பீட்டளவில் குறைந்த கூலிக்கு இந்த வீடுகளில் தங்க வேண்டிய நிலைமைக்கு மாணவர்கள் நிர்பந்திக்கப்பட்டமைக்கும்  பொறுப்புக்கூற வேண்டியவர்கள்  இந்த முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினரே ஆவர்.

நிலைமை இவ்வாறு இருக்க, டெங்கு பரவக் காரணமானவர்கள் என அயலில் வாழும்  நூற்றுக்கணக்கானவர்களுக்கு நீதிமன்ற தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாதிப்புப்புக்கு உள்ளாகியிருக்கும் மக்களே அதற்கு பொறுப்பானவர்கள் என்பதை  உறுதிப்படுத்துவதற்காக, "டெங்கு பரவுவததற்கு" அவர்களை குற்றவாளிகளாக்கி, ரூபா 25,000/= அல்லது ஆறு மாத சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கும் சட்டம் மேல்மாகாணத்தில் கடந்த மார்ச் மாதம் அமுலுக்கு வந்தது.

இதன் பாகமாக, பல்கலைக்கழக நிர்வாகம் நுளம்பு பரவுவததற்கான பொறுப்பினை  ஊழியர்கள் மீது சுமத்தும் குரூரமான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மொறட்டுவை நகர சபையினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது  பல்கலைக்கழகத்தினுள் நுளம்பு உடற்பகுதிகள் இருப்பது தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்பட்டது ஊழியர்கள் மீதே அன்றி, நிர்வாகத்தின் மிது அல்ல. இந்த வழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினதும் கல்வி சேவை தொழிற்சங்கத்தினதும்  ஒத்துழைப்போடும் அனுமதியோடுமே செய்யப்பட்டுள்ளது.

இதன்படி தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் இருவருக்கும், ஒப்பந்த அடிப்படையில் சேவையில் அமர்த்தப்பட்டுள்ள கண்காணிப்பாளர் ஒருவருக்கும், ஒப்பந்த  தொழிலாளர் ஒருவருக்கும் மொரட்டுவை நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு ஊழியருக்கு, அவரது  பரிசோதனைக் கூடத்தினை சுற்றி இருந்த பழுதடைந்த உடைசல் துண்டுகளில் தண்ணீர் நிரம்பியிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த பழுதடைந்த உடைசல்களை ஏல விற்பனைக்கு கொண்டுசெல்லுமாறு பல வருடங்களுக்கு முன்னர் அவர் நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளார். இன்னொருவருக்கு அவருடைய பொறுப்பிலுள்ள பரிசோதனைக் கூடத்தில் இருந்த மாதிரியில் நுளம்புகள் பரவியிருந்தது என குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவளது கடமை பட்டியலில் கூட இவ்வாறான பொறுப்பு வழங்கப்பட்டிராத நிலையிலும், பரிசோதனைக் கூட பொறுப்பாளர் என்ற வகையில் இது அவரது கடமை என குற்றம் சாட்டிய போது, நிர்வாகத்தினரும் தொழிற்சங்கத்தினரும் அதை அங்கிகரித்தனர்.

"டெங்கு ஒழிப்பு படையணிக்கும் "பல்கலைக்கழக உயர்மட்ட நிர்வாகிகளுக்கும் இடையில் நடைபெற்ற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே இந்த குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு மத்தியில் பாரிய வெறுப்புணர்வும் எதிர்ப்பும் கிளம்பிய நிலையில், தொழிற்றசங்கத்தை கூட்டியபோது தனக்கும் நிர்வாகத்தினருக்கும் இடையில் சமரசத்தை பாதுகாக்கும் தோரணையில் தொழிநுட்ப ஊழியர்களின் சங்க செயலாளர் வசந்த எதிரிசூரிய, "டெங்குவினால்  பெரும் தொகையானோருக்கு ஆபத்து உள்ளமையினால் எவரொருவரும் பொறுப்புக் கூறவேண்டும்" எனத் தெரிவித்தார். இவரின் இந்த கூற்றுக்கு அங்கத்தவர்கள் மத்தியில் எழுந்த பாரிய எதிர்ப்பினால் அவர் தனது பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக கூறவேண்டிய நிலை ஏற்பட்டது.

பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு சிரமதானம் ஒன்றிற்காக ஊழியர்களை இறக்குவதற்கு இப்போது தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன. அதற்றக்கூடாக உண்மையான பிரச்சினையை மூடி மறைப்பது இத்தலைவர்களின் நோக்கமாகும். டெங்கு பரவுவதின் பொறுப்பினை கல்விசாரா ஊழியர்களின்  மீது  சுமத்திவிட்டு,  தொழிற்சங்க  தலைவர்களின் ஒத்துழைப்போடு முன்னெடுக்கும் இந்த நடவடிக்கைக்கு ஊடாக, பல்கலைக்கழக நிர்வாகம் தனது பொறுப்பில் இருந்து தப்பிக்கொள்வதற்கும் மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் மோதலை ஏற்பபடுத்துவதற்கும் முயற்சிக்கின்றது.

பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடபுடையவர்களினது இன்னுமொரு கடைகெட்ட தர்க்கமாக இருப்பது யாதெனில், நாட்டில் டெங்கு நோய் பரவியிருக்கும் சூழ்நிலையில், மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் டெங்கினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை மொத்த நோயளர்களின் எண்ணிக்கையோடு  ஒப்பிடும் போது கணக்கிலெடுக்கப்பட முடியாத சதவீதமாகும், எனவே இது பல்கலைக்கழகத்துக்கு உரிய பிரச்னை அல்ல என்பதாகும். இந்த சகல தர்க்கங்களினதும் குறிக்கோள், கல்விக்கு பொருத்தமான சூழலை  உருவாக்குவததற்கு தேவையான  நிதி ஒதுக்கீடுகளை செய்ய முடியாத தற்போதைய  அரசாங்கம் உட்பட சகல அரசாங்கங்களையும் இதிலிருந்து விடுவிப்பதாகும்.

பல்கலைக்கழக சுற்றாடலில் பாரிய அளவில் நுளம்புகள் உற்பத்தியாவதற்கான காரணத்தை தேடி, அதன்படி செயற்படுவதற்கு தேவையான வசதிகளோ நிதி ஒதுக்கீடுகளோ நிர்வாகத்திடம் இல்லாமையே இதற்கு உண்மையான காரணமாகும். நுளம்பு ஒழிப்பதற்கு முறையாக நுளம்புநாசினி தெளிப்பது கூட பல்கலைக்கழக நிர்வாகத்தினால் செய்யப்படாமைக்கு மூலகாரணம் அதற்கு செலவுவிடுவதற்கு நிதி ஒதுக்கீடு இல்லாமை என்பது தெளிவானது. இந்த வருடத்தில் நாட்டின் மொத்த பல்கலைக்கழக கல்விக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி 33 பில்லியன்களாகும். அத்தோடு இது கடந்த வருடத்தை விட ஐந்து பில்லியன்களால் வெட்டப்பட்டுள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி உட்பட நுற்றுக்கணக்கானோருக்கு மரணத்தை ஏற்றப்படுத்திய டெங்கு நோய் பரவியது போல, கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  குப்பைமேடு சரிந்தமை வெள்ளப்பெருக்கு அழிவு போன்ற எல்லாவற்றுக்கும்  பொறுப்புக்கூற வேண்டியது முதலாளித்துவமும் முதலாளித்துவ ஆட்சியாளர்களுமே ஆகும். பூகோள முதலாளித்துவத்தால் வறுமை, சமூக பேரழிவுகள் மற்றும் யுத்தத்தையுமே வழங்கமுடியும். விஞ்ஞானத்தின் புரட்சிகர அபிவிருத்தியை  பயன்படுத்தி, இந்த அழிவுகளை தடுப்பதாயின், அது உற்பத்தியை ஒரு சில முதலாளிகளின் இலாபத்திற்காக அன்றி சமூகத்தின் பெருன்பான்மையானோரின் தேவைக்காக, மறு ஒழுங்கு செய்ய வேண்டும். அதற்கு சோசலிச கொள்கையை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கத்தினை அதிகாரத்துக்கு கொண்டுவருவது அவசியமாகும். இந்த வேலைத்திட்டத்துக்காக போராடுவது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.