ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

පෙරටුගාමී සමාජවාදී පක්ෂය ආන්ඩුවේ මැයි දින තහනම විහිලුවකට ගනී

இலங்கை அரசாங்கத்தின் மே தின தடையை முன்னிலை சோசலிசக் கட்சி நகைச்சுவையாக எடுத்துக்கொண்டுள்ளது

W.A. Sunil
30 April 2018

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத மே தின தடை, தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை ஜனநாயக உரிமை மீதான ஒரு கொடூரமான தாக்குதல் ஆகும். அதே போல், உழைக்கும் மக்களின் உரிமைகளை அடக்கும் நடவடிக்கை மேலும் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்ற கடும் எச்சரிக்கையை இது தொழிலாள வர்க்கத்திற்கு விடுத்துள்ளது.

எனினும், போலி இடது கட்சியான முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.), அரசாங்கத்தின் இந்த தாக்குதலை அலட்சியம் செய்து கிண்டலுக்கு உட்படுத்தியதுடன், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அரசியலில் ரீதியில் குழப்பி, உண்மையான பிரச்சினையில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப முனைந்துள்ளது.

மு.சோ.க.யின் படி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, "நலிந்துபோயுள்ள" ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றால் மே தினத்தை கொண்டாட “முடியாத” காரணத்தாலும், வெசாக் தினத்தன்று "மதுபான கடைகள் மூடப்படுவதால்" பேரணி மற்றும் கூட்டத்திற்கு வருபவர்களுக்கு அந்த கட்சிகளால் "மதுபானம்" கொடுக்க முடியாத காரணத்தாலுமே அரசாங்கம் மே தின கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை விதித்தது.

மே தின தடை பற்றி மே 25 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மு.சோ.க. அரசியல் குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ கூறியதாவது: "ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மே தினத்தை கொண்டாட முடியாது; நலிந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முடியாது. இதனால்தான் ஆரோக்கியமான கட்சிகள் மே தினத்தை கொண்டாடடுவதை அவை விரும்பவில்லை. இந்த தினங்களில் சாராயக் கடைகள் மூடப்படும். எனவே, அவற்றை திறந்து குடிக்க கொடுக்க முடியாததால்தான், இந்த நாளை ஒத்திவைக்க முயற்சிக்கின்றனர்."

"தொழிலாளர் தினத்தை தெருவிலாவது கொண்டாடுவோம்" என பூச்சாண்டி காட்டிய நகமுவ, தனது கட்சிக்கு தொழிலாள வர்க்கத்தின் மீது புதுமையான அன்பு இருப்பதாக காட்ட முயற்சிக்கிறார். நாகமுவ அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கேலிக்கையாக்கி விடுக்கும் அறிக்கை, அவர்களின் அரசியலில் இருந்தே வெளித்தோன்றுகின்றது. மாணவர்களுக்குப் பின்னால் தொழிலாளர்களை கட்டிவைப்பதையும் இடது கட்சிகள் எனக் கூறிக்கொள்பவை மற்றும் தொழிற்சங்கங்களதும் ஒரு இடது முன்னணிக்குள் அவர்களை சிறைவைப்பதையுமே மு.சோ.க. தனது அரசியல் அச்சாணியாக கொண்டிருக்கின்றது.

இந்த கட்சியின் படி, அரசாங்கம் மே தினத்தை ஒத்தி வைத்தது, மதுபானக் கடைகளை திறந்து குடிக்க கொடுக்க முடியாததால். இதனால் இந்த தடை அந்தளவு அக்கறை காட்ட வேண்டிய பாரதூரமான பிரச்சினை அல்ல. இது உண்மையை மூடி மறைப்பதாகும். சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மே தின தடைய பற்றி விடுத்த அறிக்கையில் சுட்டிக் காட்டியவாறு, பலவீனமடைந்திருக்கும் ஆட்சிக்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் காணப்படும் எதிர்ப்பு, அன்றைய தினம் வெளிப்பட கூடும் என அஞ்சியதாலேயே ஆகும்.

மே தின கொண்டாட்டத்தை தடை செய்வதற்கான முதல் காரணம், இலங்கை முதலாளித்துவ வர்க்க ஆட்சி எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார-அரசியல் நெருக்கடி மற்றும் இந்த சூழலில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கட்டளையின் கீழ் அமுல்படுத்தப்படும் பொருளாதார மறு சீரமைப்பு மூலம் வாழ்க்கை நிலமைகள் மீது தொடுக்கப்படும் தாக்கதுலுக்கும் எதராக உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட ஏழைகள் மத்தியில் அதிகரித்து வரும் பாரிய எதிர்ப்பே ஆகும்.

தொழிற்சங்கங்களின் தவறான வழிநடத்தல், திசை திருப்பல் மற்றும் காட்டிக்கொடுப்பின் மத்தியிலும் சமீப மாதங்களில் துறைமுகம், எரிபொருள், புகையிரத சேவை, தபால், மின்சாரம் சுகாதாரம் மற்றும் பல்கலைக்கழக தொழிலாளர்களும் போராட்டங்களில் குதித்தனர். தங்கள் கோரிக்கைகளில் சில வேறுபாடுகள் இருந்தலும், அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு, வேலை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்ப்படும் தாக்குதல்களுக்கு எதிரராகவே அவர்கள் பிரதானமாக போராட்டத்தில் குதித்தனர்.

இலங்கையில் தொழிலாள வர்க்கப் போராட்டமானது, முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தால் திணிக்கப்படும் சமூக எதிர்ப்புரட்சி தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்கா உட்பட, ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள் தொடக்கம் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு மற்றும் ஆசியா பூராவும் படர்ந்து வரும் சர்வதேச தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் பாகமாகும்.

தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு இணையாக, கல்வி வெட்டுக்கு எதிராக மாணவர்களும், சமூக நல வெட்டுக்களுக்கு எதிராக கிராமப்புற ஏழை விவசாயிகளும் அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முதலாளித்துவ கட்சிகளுக்கு மே தினத்தைக் கொண்டாட எந்த உரிமையும் இல்லாவிட்டாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியும் அந்த தினத்தை பயன்படுத்துவது, தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை அழித்து அவர்களை தங்கள் கட்சிகளுக்குப் பின்னால் கட்டிப்போட்டு வைப்பதற்கே ஆகும். 1948ல் சுதந்திரம் பெற்ற பிறகு, ஏகாதிபத்தியத்தின் கைகூலிகளாக ஆட்சி அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த ஆளும் வர்க்கத்தின் இரு பிரதான கட்சிகளான இவை, ஆரம்பத்தில் இருந்தே தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்கறளை பிளவுபடுத்துவதற்கே செயற்பட்டிருக்கின்றது. இங்கு சிங்கள பெளத்த மேலாதிக்க மற்றும் இனவாத பிளவுகள் எப்போதும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தால் ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தப்படுகிறது.

அரசாங்கத்தை நடத்தும் ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.ல.சு.க போலவே மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் சில தந்திரோபாய வேறுபாடுகளே இருந்தாலும், சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது, மற்றும் அதற்கு எதிராக வளரும் தொழிலாள வர்க்க எதிர்ப்புகளை அடக்குவது மற்றும் ஜனநாக உரிமைகளை நசுக்குவது தொடர்பாக அவர்களுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடே உள்ளது. அரசாங்கத்தின் தடையை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்றக்கொண்டதன் மூலம், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அவர்கள் மத்தியில் காணபடும் இந்த பரஸ்பர உடன்பாடு காட்சிக்க்கு வந்துள்ளது.

மே தின தடையை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஏற்றுக்கொண்டுள்ளது பற்றி மு.சோ.க. "அதிர்ச்சி" அடைந்துள்ளதாக நாகமுவ கூறியுள்ளார். ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. மு.சோ.க. தலைவர்களும் உள்ளே இருந்த ஜே.வி.பி., முதலாளித்துவ ஸ்தாபனத்துடன் நின்று, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு முன்னெடுத்த அரசியலின் பாகமாக, தொழிலாளர்களை அந்த அரசியலில் முடிந்துவிடுவதற்கே மே தினத்தை நடத்தியது. ஜே.வி.பி.யும் அதில் இருந்து பிளவுபட்ட மு.சோ.க.யும் அந்த அரசியலை பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கின்றன.

மு.சோ.க. மஹிந்த இராஜபக்ஷவின் சர்வாதிகாரத்தை தோற்கடிக்கும் போர்வையில் தற்போதைய அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டுவர மறைமுகமாக ஆதரவளித்த கட்சியாகும். அதற்கு நேரடியாக ஒத்துழைப்பு கொடுத்த போலி-இடதுகளான மு.சோ.க., உட்பட நவ சமசமாஜ கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி, கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி, காமினி வியங்கொட உட்பட மத்தியதர குழுக்களும், மே தின தடை உட்பட தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீது அரசாங்கம் முன்னெடுக்கும் தாக்குதல்களுக்கு அரசியல் ரீதியாக பொறுப்பாளியாகும்.