சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP to hold public meeting in Colombo on world war threats

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி  உலகப் போர் அச்சுறுத்தல் பற்றி கொழும்பில் பொதுக் கூட்டம் நடத்தவுள்ளது

9 August 2014

Use this version to printSend feedback

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், அமெரிக்காவின் "ஆசியா நோக்கிய திருப்பமும்" உலகப் போர் அச்சுறுத்தலும் என்ற தலைப்பில் ஆகஸ்ட் 18 அன்று கொழும்பில் ஒரு பொது கூட்டத்தை நடத்தவுள்ளன.

முதலாம் உலகப் போர் வெடித்து நூறு ஆண்டுகளின் பின்னரும் இரண்டாம் உலகப் போர் தொடங்கி 75 ஆண்டுகளின் பின்னரும், அமெரிக்காவும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும், இம்முறை அணு ஆயுதங்களுடன், மனித இனத்தை மீண்டும் ஒரு உலகப் போர் பேரழிவை நோக்கி தள்ளிச் செல்கின்றன. ஒரு பாசிச தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பின் மூலம் உக்ரேனில் ஒரு அதிதீவிர வலதுசாரி ஆட்சியை நிறுவிய பின்னர், அமெரிக்கா மற்றும் ஜேர்மனியும் ரஷ்யாவை ஒரு அரை காலனியாக கீழிறக்கும் நோக்கிலான மோதலுக்கு ஈவிரக்கமற்று ஆத்திரமூட்டுகின்றன.

ஒபாமா நிர்வாகமானது சீனாவை சுற்றிவளைப்பதை இலக்காகக் கொண்டு ஆசியாவில் திட்டமிட்டு இராணுவ உடன்பாடுகளை தீவிரமாக கட்டியெழுப்பி வருகின்றது. ஆசியாவில் "முன்னிலை" என்ற  அமெரிக்க கொள்கை, இந்தியா மற்றும் இலங்கை உட்பட ஒவ்வொரு நாட்டையும் நீர்ச்சூழலுக்குள் இழுத்துப் போடுகின்றது. வாஷிங்டன் இலங்கை அரசாங்கத்தை பெய்ஜிங்கில் இருந்து தூரவிலக நெருக்குவதற்காக யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை பயன்படுத்தி வருகிறது.

அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன், இஸ்ரேல் காசா பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலை போரை நடத்திவருகிறது. "நடுநிலை" என்ற பாசாங்குக்கு பின்னால், இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள், இஸ்ரேலிய படுகொலைகளையும் பாலஸ்தீன எதிர்ப்பையும் ஒன்றாகக் காட்டுவதன் மூலம் இஸ்ரேலை மூடிமறைக்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் பரந்த போர்களுக்கு வழிவகுக்கும் வெடிநிலைக்கு மத்திய கிழக்கை மாற்றியுள்ளது.

போருக்கான உந்துதலை தடுத்து நிறுத்துவதற்கான ஒரே வழி, முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதே ஆகும். உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி, ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதானது இன்றைய அவசரமான பணியாகும். சோசக மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதர கட்சிகளும் மட்டுமே இந்த முன்னோக்குக்காக போராடுகின்றன. இந்த முக்கியமான அரசியல் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாட கொழும்பில் நடக்கவுள்ள எமது கூட்டத்திற்கு வருகை தருமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் WSWS வாசகர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

தேதி மற்றும் நேரம்: திங்கட்கிழமை, ஆகஸ்ட் 18, மாலை 4 மணிக்கு

இடம்: கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம்.