World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan police drag out hearings over LTTE's threats against SEP

இலங்கை பொலிஸ் சோ.ச.க. வுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் மரண அச்சுறுத்தல் மீதான விசாரணையை அடியோடு புறந்தள்ளியது

By Nanda Wickremesinghe
20 February 2003

Use this version to print | Send this link by email | Email the author

வட இலங்கையில் ஊர்காவற்துறை தீவில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) அங்கத்தவர்களுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றபோதிலும், இந்த மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற மூன்று வழக்குகளும், பொலிசார் விடுதலைப் புலிகளின் கேடயமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. எல்லா சந்தர்ப்பங்களிலும் இயங்குவதற்கு தயங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் சட்டநடவடிக்கைகளை புறந்தள்ளியதோடு, அடியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை செயற்படுத்தினர்.

முதலாவது அச்சுறுத்தல், சோ.ச.க. முன்நின்று அமைத்த அம்பிகை நகர் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கமானது அந்தப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்காக நிதி வழங்க மறுத்ததையடுத்து விடுதலைப் புலிகளின் உள்ளூர் அலுவலரான செம்மணனால் கடந்த செப்டம்பரில் விடுக்கப்பட்டது. அக்டோபர் 8, விடுதலைப் புலிகளின் உறுப்பினரான கார்த்திகேசு அமிர்தலிங்கம் சோ.ச.க. அங்கத்தவரான நாகராஜா கோடீஸ்வரனை காரணமின்றி தாக்கி அவரது தலை, கழுத்து மற்றும் தோள்களில் கடும் காயங்களை ஏற்படுத்தினார்.

சம்பந்தப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் விடுதலைப் புலிகளின் தலைமை சோ.ச.க. வின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை உறுதிசெய்ய வேண்டுமெனவும் கோரி சோ.ச.க. வும் உலக சோசலிச வலைத் தளமும் முன்னெடுத்த அனைத்துலகப் பிரச்சாரத்தை அடுத்தே பொலிசார் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இரு தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தின் பின்னர், இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும், தீவின் வடக்கு மற்றும் கிழக்கு நிர்வாகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வழங்கும் அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையொன்றையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. சோ.ச.க. அங்கத்தவர்கள் மீதான அச்சுறுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் உள்ளூர் அலுவலர்கள் காட்டும் விருப்பமின்மையானது, கொழும்புக்கோ அல்லது அதன் எதிர்கால விடுதலைப் புலி பங்காளிகளுக்கோ அதிருப்தியை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறையிலிருந்து வேரூன்றியுள்ளது.

அண்மைய நீதிமன்ற விசாரணைகளுக்கு முன்னதாகவும் விடுதலைப் புலிகள் மேலும் அச்சுறுத்தல்களை விடுத்திருந்தனர். பெப்பிரவரி 3, "அவர்களையும் அவர்களின் கட்சி நடவடிக்கைகளையும் தீவுப் பகுதிகளில் இருந்து ஒழித்துக்கட்டுவதற்காக அனைத்து மக்களுக்கும்" அழைப்பு விடுக்கும் பிரசுரங்கள் ஊர்காவற்துறை தீவின் பல பகுதிகளிலும் காணப்பட்டன. அதில் நான்கு சோ.ச.க.. அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்ததோடு அவர்கள் "விடுதலைப் புலிகளுக்கு எதிராக அறிக்கைகள் விடுப்பதாகவும்" கண்டனம் செய்யப்பட்டிருந்தது.

பெப்பிரவரி 7, இரண்டு வழக்குகள் இடம்பெற்றன. முதலாவது செம்மணன் மீதானது. இவர் சோ.ச.க. வுக்கு எதிராக முதல் முறையாக அச்சுறுத்தல் விடுத்தபோது விடுதலைப் புலிகளின் ஊர்காவற்துறை பிரதேசத்துக்கான தலைவராக இருந்ததோடு, வட இலங்கையின் பிரதான நகரமான யாழ்ப்பாணத்துக்கான உப அரசியல் தலைவராக இப்போது பதவி உயர்த்தப்பட்டுள்ளார். அவர் இரண்டாவது முறையாகவும் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை.

சோ.ச.க. உத்தியோகபூர்வ முறைப்பாட்டை விடுத்து நான்கு மாதங்களின் பின்னரே உள்ளூர் பொலிசார் செம்மணனுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தனர். முதலாவது விசாரணை ஜனவரி 21 க்கு குறிக்கப்பட்டிருந்த போதிலும் பொலிசார் பிரதிவாதிக்கு அழைப்பாணை விடுக்கத் தவறியதோடு அவர் சமூகமளிக்கவுமில்லை. அதே போல், பெப்பிரவரி 7ம் திகதிக்கு இரண்டு வாரங்களுக்கும் முன்னதாகவும், பொலிசார் மீண்டும் அழைப்பாணை விடுக்காமல் செம்மணனை விடுவித்தனர். இதன் விளைவாக, நீதவான் விசாரணையை மார்ச் 7ம் திகதிக்கு ஒத்திவைத்தார். சோ.ச.க.வும் அதன் சட்டத்தரணியும் நெருக்குவாரம் கொடுத்தபோது பொலிசார் அழைப்பாணையை அனுப்புவதாக வாக்குறுதியளித்தனர்.

பெப்பிரவரி 7 ம் திகதி இடம்பெற்ற வழக்கு, சோ.ச.க. அங்கத்தவர் கோடீஸ்வரனைத் தாக்கிய விடுதலைப் புலி உறுப்பினரான அமிர்தலிங்கம் மீதானதாகும். டிசம்பர் 4, அமிர்தலிங்கம் முதல் முறையாக நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்த போது, மொட்டை ஆயுதத்தால் தாக்கியதால் ஏற்பட்ட சாதாரண காயங்களுக்காக மாத்திரமே அவர் மீது குற்றம்சாட்ட முடியும் என பொலிஸ்தரப்பு வாதி சுட்டிக்காட்டினார். கோடீஸ்வரனின் வழக்கறிஞர், மொட்டை ஆயுதத்தினால் அன்றி கத்தியாலேயே தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி பொலிசாரை சவால் செய்தபோது, காயமடைந்தவருக்கான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை முன்வைக்குமாறு நீதவான் ஆணையிட்டார்.

பெப்பிரவரி 7 முன்வைக்கப்பட்ட சட்ட வைத்திய அறிக்கையானது, பொலிசாருக்கு சார்பாக இருந்ததோடு, சட்டத் துறையில் "சாதாரண சேதமாக" கருதப்படும் காயங்களே கோடீஸ்வரனுக்கு ஏற்பட்டுள்ளது, எனப் பிரகடனம் செய்துள்ளது. காயமடைந்தவர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார் என கோடீஸ்வரனின் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். அவர் உள்ளூர் வேலனை ஆஸ்பத்திரியில் இருந்து மத்திய யாழ்ப்பாண போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்படுவதற்கு காயங்களின் விபரீத நிலைமை போதுமானாதாக இருந்தது. அவர் அங்கு நான்கு நாட்கள் சிகிச்சை பெற்றார்.

கடும் சேதம் அல்லது கொலை முயற்சி என்ற அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை மீளமைப்பதையிட்டு சட்டமா அதிபர் மீளாய்வு செய்யவேண்டும் என சட்டத்தரணி கேட்டுக்கொண்டதோடு, அடுத்த விசாரணையின்போது தான் சட்ட வைத்திய அதிகாரியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார். நீதவான் வழக்கை மார்ச் 21க்கு ஒத்தி வைத்ததோடு குற்றச்சாட்டுக்களை மீளமைப்பது பற்றி பொலிசாரை சந்திக்குமாறு கோடீஸ்வரனின் வழக்கறிஞரைக் கேட்டுக் கொண்டார்.

விடுதலைப் புலிகளின் மேலதிக அச்சுறுத்தல்கள் மற்றும் தொந்தரவுகள் சம்பந்தமாக சோ.ச.க. அங்கத்தவர்கள் செய்த முறைப்பாட்டை விசாரிப்பதற்காக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் பெப்பிரவரி 11 மூன்றாவது வழக்கு நடைபெற்றது. இவை விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான முத்தையா வேல்முருகனின் ஒரு கூற்றையும் உள்ளடக்கியிருந்தது. அவர், மீனவர்களுக்கான விடுதலைப் புலிகளின் கூட்டமொன்றில் சோ.ச.க. அங்கத்தவர்கள் தன்னை அச்சுறுத்தியதாகவும் தனக்கு ஏதும் நடந்தால் அவர்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும் பொய்யாக குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறெனினும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பொலிசார் ஜனவரி 21 அன்று, விடுதலைப் புலிகளுக்கும் சோ.ச.க. வுக்கும் இடையிலான முரண்பாடுகள் காரணமாக அம்பிகைநகர் பிரதேசத்தில் சமாதானத்துக்கு பங்கம் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் கூறினர். சோ.ச.க. அங்கத்தவர்கள் சட்டரீதியான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சிப்பதைத் தவிர வேறு எதையும் செய்ததற்கான ஆதாரங்கள் எதனையும் பொலிசார் வழங்கவில்லை. அடுத்த விசாரணையின் போது அமைதியைப் பேணுவதற்காக இரு சாராருக்கும் கட்டுப்படுத்தும் கட்டளை விதிப்பதைப் பற்றி யோசிப்பதாக நீதவான் குறிப்பிட்டார்.

வழக்கு பெப்பிரவரி 11 இல் இருந்து மார்ச் 4 வரை ஒத்தி வைக்கப்பட்டது. முன்னைய விசாரணையின் போது விடுதலைப் புலி உறுப்பினரான வேல்முருகனுக்கு சட்டத்தரணியாக சமூகமளித்திருந்தமையையிட்டு பதில் நீதவான் தனக்குத் தானே விலக்களித்துக்கொண்டார். சோ.ச.க. பொலிஸ் அறிக்கையையும் மற்றும் கட்சி மீது எந்தவொரு கட்டுப்படுத்தும் கட்டளையையும் விதிப்பதற்கான முயற்சியை எதிர்க்கத் தீர்மானித்தது. இது விடுதலைப் புலிகளுக்கு மேலதிக ஆத்திரமூட்டல்களுக்கும், பிரதேசத்தில் சோ.ச.க. வின் அரசியல் வேலைகளை மட்டுப்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்கும்.

ஊர்காவற்துறையில் சோ.ச.க.வுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் தணியவில்லை. பெப்பிரவரி 8 இரவு, சோ.ச.க. அங்கத்தவரான முத்துலிங்கம் முருகானந்தனின் உறவினர் ஒருவரை இருவர் சந்தித்தனர். இருவரில் ஒருவர் தன்னை தமிழரசன் எனவும் தான் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் எனவும் அறிமுகம் செய்துகொண்டார். அவர் முருகானந்தனின் நிழற்படம் ஒன்றை காட்டியதோடு ஐந்து சோ.ச.க. அங்கத்தவர்களையும் கட்சியை விட்டு விலகச் சொல்லுமாறு குறிப்பிட்டார். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

சோ.ச.க. வுக்கு எதிரான தற்போதைய பயமுறுத்தல் மற்றும் அச்சுறுத்ததல் செயல்வரிசையானது, விடுதலைப் புலிகள் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களுக்கும் சேர்த்து வைத்திருப்பது என்ன என்பதையிட்ட தெளிவான எச்சரிக்கையாகும். பெரும் வல்லரசுகளால் அனுசரணை செய்யப்படும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில், விடுதலைப் புலி பேச்சுவார்த்தையாளர்கள் சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் கோரும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அமுல் செய்வதில் கொழும்பு அரசாங்கத்துடன் பங்காளிகளாக வேலை செய்ய ஏற்கனவே வாக்குறுதி வழங்கியுள்ளனர்.

சோ.ச.க. தமது அங்கத்தவர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களதும் உரிமைகளை காப்பதன் பேரில் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் காடைத்தனங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடரவும் தீவிரப்படுத்தவும் தீர்மானித்துள்ளது. நாம் பிரச்சாரத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன் மேலதிக கண்டனக் கடிதங்களையும் மற்றும் நிதி உதவியையும் கோரி அவசர அழைப்பு விடுக்கின்றோம். சட்ட நடவடிக்கைகளுக்கான அதிகரித்துவரும் செலவுக்கு முகம் கொடுப்பதால் சோ.ச.க. தனது பிரச்சார நிதித் தொகையை தற்போதைய 50,000 ரூபாவை 250,000 ஆக ($US2,500) அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களைக் கண்டித்து அண்மையில் வந்த மின்னஞ்சல்களின் ஒரு தொகுப்பை இங்கு பிரசுரிக்கின்றோம்.

கலிபோர்னியாவில் இருந்து RS எழுதியதாவது:

"நான் யாழ்ப்பாணம் மற்றும் ஊர்காவற்துறை தீவில் சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்கள் மீதான தற்போதைய மற்றும் கடந்தகால அச்சுறுத்தல்கள் மற்றும் உடல் ரீதியான தாக்குதல்களை முற்றாக எதிர்க்கின்றேன். இந்தத் துஷ்பிரயோகங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.!

"உங்களுடைய நிலைப்பாடு சரியானால் ஏன் வன்முறையை நாடுகிறீர்கள்? விடுதலைப் புலிகளால் தமது நிகழ்ச்சி நிரலை ஊர்காவற்துறை மீனவர்கள் முன்பாக பகிரங்கமாக முன்வைக்க முடியாததால், அதனது பரந்த முதலாளித்துவச் சார்பு வேலைத் திட்டத்துக்கான சோ.ச.க.வின் எதிர்ப்புக்களுக்கு அதனால் பதலளிக்கு முடியாதுள்ளது என சோ.ச.க. குறிப்பிடும்போது, அது சரியென நான் நம்புகிறேன். அதற்குப் பதிலாக அது காடைத்தனங்களையும் பொய்களையும் நாடுகிறது."

கனடாவில் இருந்து MW குறிப்பிட்டதாவது:

"நீங்கள் சோ.ச.க. வின் ஜனநாயக உரிமைகள் மீது மட்டுமல்ல முழு தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதும் தாக்குதல் தொடுக்கின்றீர்கள். நான் இதை கடுமையாக கண்டனம் செய்கின்றேன். நான் பின்வருமாறு விடுதலைப் புலிகளைக் கோருகிறேன்.

* சோ.ச.க. வுக்கு எதிரான அதனது அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்து

* சோ.ச.க. வின் ஜனநாயக உரிமைகளை மதிப்பதோடு அதனது வேலைகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்து

* அது செய்த நாசங்களுக்கு உடனடியாக இழப்பீடு அளி!

"நான் இந்தத் தாக்குதல்களுக்கு எதிரான சோ.ச.க. வின் பிரச்சாரத்துடன் முழுமையாக உடன்படுவதோடு ஆதரவும் அளிப்பேன்!

கனடாவில் இருந்து LB எழுதியதாவது:

"மரண அச்சுறுத்தலுக்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும். இலங்கையில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கான நான்கு சோ.ச.க. அங்கத்தவர்களினதும் போராட்டம் சட்டவிரோதமான ஒன்றா?

பின்வரும் மின்னஞ்சலை AT அனுப்பிவைத்துள்ளார்:

"தம்மைத் தாமே ஒழுங்கமைத்துக்கொள்ளும் தொழிலாளர்களை விடுதலைப் புலிகள் தாக்கும் போது, விடுதலைப் புலிகளின் தேவைகள், தொழிலாளர்களதும் மற்றும் அவர்களின் குடும்பங்களதும் தேவைகளுக்கு எதிராக உள்ளது என்ற செய்தியை எல்லாத் தொழிலாளர்களுக்கும் எடுத்துச் செல்கின்றது.

"விடுதலைப் புலிகள் எந்தவொரு கட்சியையும் அச்சுறுத்தும் போது, பேச்சு சுந்திரத்தை நசுக்குவது விடுதலைப் புலிகளை தொலைவில் இருத்துவதோடு மக்களுடனான தொடர்புகளை இல்லாமல் செய்யும் என்ற எச்சரிக்கயை சமூகத்துக்கு எடுத்துச் செல்கிறது.

"விடுதலைப் புலிகள் சோ.ச.க. வை அச்சுறுத்தியுள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகளைப் போன்று பெருந்தொகையான அங்கத்தவர்களை கொண்டிருக்காவிட்டாலும், அது தமிழர்களின் உரிமைகளை காப்பதிலும் மற்றும் நாட்டின் வடக்குக் கிழக்கில் இலங்கை ஆக்கிரமிப்பை எதிர்ப்பதிலும் உறுதியாக செயற்பட்டமையினால் அது இலங்கையில் பரந்த மதிப்பைப் பெற்றுள்ளது..

"அனைத்துலக சோசலிச இயக்கத்தின் ஒரு பகுதி என்ற வகையில், சோ.ச.க. தீவுப் பகுதியிலான உண்மையான நிலைமைகளை உலகம் பூராவுமுள்ள அரசியல் ஆர்வளர்களின் ஈடுபாடு கொண்ட சபைக்கு முன்வைத்துள்ளது. www.wsws.org வலைத் தளமானது என்னைப் போன்ற ஊடகத் துறை சார்ந்தவர்கள் உட்பட புத்திஜீவி வாசகர்களுக்கு சிறந்த செய்திகளையும் ஆய்வுகளையும் வழங்குவதன் மூலம் மேலும் முன்செல்கின்றது.

மேலதிக கடிதங்களும் அறிக்கைகளும் அஞ்சல் அல்லது மின்னஞ்சல் செய்யப்பட வேண்டிய முகவரிகள்:

யாழ்ப்பாணம்

Ilamparithi
LTTE Jaffna Office
Potpathy Road, Kokuvil
Jaffna

Sri Lanka

கொழும்பு

LTTE
c/- Sri Lanka Monitoring Mission
PO Box 1930
Galle Road
Colombo 3

Sri Lanka

Email: slmm-hq@mfa.no

அவை கீழ்வரும் முகவரிகளுக்கும் தபால் செய்ய அல்லது தொலைமடல் செய்ய முடியும்:

லண்டன்

The LTTE
c/- Eelam House
202 Long Lane
London SE1 4QB
United Kingdom

Telephone: 44-171-403-4554

Fax: 44-171-403-1653

தயவு செய்து அனைத்து அறிக்கைகளின் பிரதிகளையும் உ.சோ.வ.த.வுக்கும் அனுப்பி வைக்கவும்:

Email: editor@wsws.org

Fax:

United States: 248-967-3023

Britain: 0114 244 0224

Australia: 02 9790 3501

நிதி உதவிகள் அனுப்பப்பட வேண்டிய முகவரி:

Account Number 1472834301 at the Kirullapona Branch of the Commercial Bank of Ceylon
94A Pamankada Road
Kirullapona
Colombo
Sri Lanka

See Also :

தமிழீழ விடுதலைப் புலிகள் வட இலங்கையில் உள்ள சோ.ச.க. அங்கத்தவர்களை "ஒழித்துக்கட்ட" அழைப்பு விடுக்கின்றது

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளின் வலதுசாரி ஆதரவாளருக்கு பதில் அளிக்கிறது

இலங்கை சோசலிஸ்டுக்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான அனைத்துலகப் பிரச்சாரம்: ஏசியன் ரிபியூன் விடுதலைப் புலி பரிந்துரையாளருக்கான உலக சோசலிச வலைத் தளத்தின் பதிலை பிரசுரிக்கிறது

சோசலிச சமத்துவ கட்சியும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமும்

Top of page