இந்த அறிக்கையானது சிற்றேடு வடிவில் எமது வலைத்தளத்தில் வாசிப்பதற்கும் பதிவிறக்கம் செய்வதற்கும் ஏற்ப இங்கே வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
2024 ஆரம்பித்தபோது, 20 ஆம் நூற்றாண்டின் பேரழிவுகளால் உருவாக்கப்பட்ட பயங்கரங்கள் மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இனப்படுகொலை என்பது அரசின் கொள்கையின் ஒரு கருவியாக வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. காஸாவில் பாலஸ்தீனிய மக்களை முழுமையாக அழிப்பதற்கான இஸ்ரேலிய ஆட்சியின் முயற்சி அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய நட்பு நாடுகளின் வெளிப்படையான ஒப்புதலுடன் தொடர்கிறது.
ஒவ்வொரு பெரிய அரசாங்கமும் கோவிட்-19 பெருந்தொற்று நோயை மில்லியன் கணக்கானவர்களைக் கொல்ல அனுமதித்துள்ளது, கடந்த நான்கு ஆண்டுகளாக இறப்பு மற்றும் துயரங்களை இயல்பாக்கியது மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு எந்தவொரு தணிப்பு நடவடிக்கைகளையும் கைவிட்டது. தீவிரமான சமத்துவமின்மை பரவலாக எங்கும் உள்ளது, இது பாசிச சக்திகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இன்று, ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளும் மனிதகுலத்தை ஒரு மூன்றாம் உலகப் போருக்குள் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது.
முதலாளித்துவத்தை அழிவை நோக்கித் தள்ளும் முரண்பாடுகளானது, அது தூக்கியெறியப்படுவதற்கும், ஒரு புதிய, முற்போக்கான, அதாவது சோசலிச அடித்தளத்தின் மீது சமூகத்தை மறுஒழுங்கு செய்வதற்குமான நிலைமைகளையும் இயக்கத்தையும் கொண்டு வருகின்றன.
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் இந்தப் புத்தாண்டு அறிக்கையானது, இனப்படுகொலை, பெருந்தொற்று நோய், பாரியளவிலான சமூக சமத்துவமின்மை மற்றும் பாசிசத்தின் வளர்ச்சி என முதலாளித்துவத்தின் இன்றைய அப்பட்டமான யதார்த்தத்தை எடுத்துரைக்கிறது.
ஆளும் உயரடுக்கின் செல்வம் மற்றும் பொருளாதாரத்தின் மீது அதன் மேலாதிக்கம் மீதான நேரடித் தாக்குதலுக்கு வெளியே ஜனநாயக ஆட்சி வடிவங்களைப் பாதுகாக்க முடியாது என்று இந்த அறிக்கையானது சக்திவாய்ந்த முறையில் எடுத்துரைக்கிறது. அப்படியல்லாமல் வேறுவிதமாகக் கூறினால் அது அரசியல் ஏமாற்றுத்தனமும் சூழ்ச்சியுமாகும்.
“போர், இனப்படுகொலை, பெருந்தொற்று நோய் மற்றும் பாசிசத்தை ஏகாதிபத்தியம் இயல்பாக்குவதென்பது, வெகுஜன நனவை புரட்சிகரமயமாக்குவதற்கும், அவ்விதத்தில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் கண்ணோட்டத்தில் சோசலிசத்தை இயல்பாக்குவதற்கும் ஒரு பலமான உந்துதலை வழங்கும்” என்று இந்த அறிக்கையானது சக்திவாய்ந்த முறையில் நிறைவு செய்கிறது.
ஆகவே உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்து வாசகர்களையும் இந்த முன்னோக்கிலிருந்து வரும் தவிர்க்க முடியாத முடிவுக்கு வர இதைக் கவனமாக உள்ளீர்த்துக் கொண்டு பின்வரும் முடிவிற்கு வருமாறு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.