ஈரான் மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர், தொழிலாள வர்க்கத்திற்கு உலகளாவிய பொருளாதார மற்றும் சமூகப் பேரழிவைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது
உலகின் மிக முக்கியமான எரிசக்தி உற்பத்தி பிராந்தியங்களில் ஒன்றான மத்திய கிழக்கின் மீது தனது பூகோள மூலோபாய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் கொண்டுள்ள உறுதி, ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஈரானியர்களின் உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. ஆனால் அமெரிக்காவால் தூண்டப்பட்ட இந்தப் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை முற்றுகையினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் பயங்கரமான உயிரழப்புக்களை ஏற்படுத்தக்கூடும்.
