Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

சடவாத இயங்கியலை ட்ரொட்ஸ்கி பாதுகாத்தல்

77. கவனம் கட்டாயம் கொடுக்கப்பட்டாக வேண்டிய 1930-40 போராட்டத்தின் இன்னொரு கூறு: அதன் திட்டவட்டமான தத்துவார்த்த -மெய்யியல் வடிவமாகும். நியூ யோர்க் பல்கலைக்கழகத்தில் ஒரு தத்துவப் பேராசிரியராக உள்ள பேர்ன்ஹாம், தன்னையே ஒரு சடவாத இயங்கியலின் எதிரியாக பிரகடனம் செய்துகொண்டார். பேர்ன்ஹாம், மெய்யியல் கற்பனாவாதத்தில் இருந்து (குறிப்பாக அதன் நவ-காண்டியன்வாத வடிவின் நிலைப்பாட்டில்) இருந்து இயங்கியல் சடவாதத்தை எதிர்த்த ஏனைய பலரைப் போல், மார்க்சும் எங்கெல்சும் பாதுகாத்த சடவாதத்தை, வெறுமனே காலங்கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு விஞ்ஞானத்தினதும் மற்றும் அது டார்வினின் பரிணாமவாத தத்துவத்தின் மீது கொண்டிருந்த அதிகளவு மதிப்பினதும் உற்பத்தி மட்டுமே என நிராகரிக்கின்றார். இயங்கியலை பொறுத்தளவில் "நூறுவருடங்களுக்கு முன்னர் இறந்து போன மனித சிந்தனையின் முதன்மையான மனநோயாளி" என ஹேகலை பேர்ன்ஹாம் ஏளனம் செய்கின்றார்.[47] பேர்ன்ஹாமுக்கு பதிலளித்த ட்ரொட்ஸ்கி, சடவாத இயங்கியல் மற்றும் இறுமாப்புகொண்ட பேராசிரியரின் தத்துவார்த்த வழிமுறை ஆகிய இரண்டும் பற்றி சுருக்கமாக பண்புமயப்படுத்துகிறார். பேர்ன்ஹாமின் தவிர்க்க முடியாத நடைமுறைவாத நோக்குக்கும் அவரது அரசியல் முடிவுகளுக்கும் இடையிலான உறவை ட்ரொட்ஸ்கி விளக்குகிறார்:

பொதுவழக்கிலுள்ள சிந்தனையானது, முதலாளித்துவம் முதலாளித்துவத்துக்கு சமம், ஒழுக்கநெறிகள் ஒழுக்கநெறிகளுக்கு சமம், என்றவாறு இவற்றை உண்மையெனக் கொண்டு, முதலாளித்துவம், ஒழுக்கம், சுதந்திரம், தொழிலாளரின் உற்றுநோக்கல் போன்ற கருத்தாய்வுகளை மாறாத அருவங்களாக இயக்குகின்றது. இயங்கியல் சிந்தனையானது அனைத்து விடயங்களையும் இயல்நிகழ்ச்சியையும் அவற்றின் தொடர்ச்சியான மாற்றங்களில் ஆய்வு செய்யும் அதேவேளை, 'A' 'A' ஆக இருப்பதை இல்லாமல் செய்யும், ஒரு தொழிலாளர் அரசை தொழிலாளர் அரசாக இல்லாமல் செய்யும் வரையறையை விமர்சிக்கும் அம்மாற்றங்களின் சட ரீதியான நிலைமைகளில் தீர்மானம் செய்யும்.

கொச்சையான சிந்தனையின் அடிப்படைக் குறைபாடு, முடிவிலா இயக்கத்தை கொண்ட ஒரு யதார்த்தத்தின் இயக்கமற்ற அடையாளங்களுடன் அதுதாமே திருப்தி கொண்டுள்ளது என்ற உண்மையில் கிடக்கின்றது. இயங்கியல் சிந்தனையானது நெருக்கமான ஒத்திருத்தல் சரிபார்ப்புகள், ஒன்றுதிரட்டல்கள் வழிமுறைகள் மூலம் கருத்தாய்வுகளுக்கு, உள்ளடக்கத்தின் வளத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் கொடுக்கிறது, சாற்றுச்செறிவு ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு ஜீவனுள்ள இயல்நிகழ்ச்சிக்கு நெருக்கமாக அவற்றைக் கொண்டுவரும் என்றுகூட நான் கூறுவேன். பொதுவில் முதலாளித்துவம் அல்ல, மாறாக குறிப்பிடப்பட்ட அபிவிருத்தியின் கட்டத்தில் உள்ள குறிப்பிடப்பட்ட முதலாளித்துவம் ஆகும். பொதுவில் தொழிலாளர் அரசு அல்ல, மாறாக ஏகாதிபத்திய சுற்றி வளைப்பில் ஒள்ள ஒரு பின்தங்கிய நாட்டில் உள்ள ஒரு குறிப்பிடப்பட்ட தொழிலாளர் அரசு ஆகும்.

இயங்கியல் சிந்தனைக்கும் கொச்சை சிந்தனைக்கும் உள்ள வேறுபாடு ஓடும் படத்துக்கும் நிழற்படத்துக்கும் உள்ள வேறுபாடு போன்றதாகும். ஓடும் படம் நிழற்படத்தை விலக்குவதில்லை மாறாக இயக்கத்தின் விதியின் படி ஒரு தொடர்ச்சியான நிழற்படங்களை ஒன்றிணைக்கின்றது. இயங்கியலானது முக்கூற்று முடிவுகளை நிராகரிப்பதில்லை, ஆனால் முடிவிலாது மாறிக் கொண்டிருக்கும் யாதார்த்தத்திற்கு நெருக்கமாக எமது புரிதலைக் கொண்டுவரும் வகையில் முக்கூற்று முடிவுகளை ஒன்றிணைப்பதற்கு எமக்கு கற்றுத்தருகிறது. ஹெகல் தனது தர்க்கத்தில் ஒரு தொடரான விதிகளை ஸ்தாபிக்கின்றார்: அளவு பண்பாக மாற்றமடைதல், முரண்பாடுகள் ஊடான அபிவிருத்தி, உள்ளடக்கம் மற்றும் வடிவத்துக்கு இடையிலான மோதல், தொடர்ச்சி தடைப்படுதல், சாத்தியப்பாடு தவிர்க்க முடியாததாக மாறுதல் போன்றனவாகும். சாதாரண முக்கூற்று முடிவுகளை மிகவும் அடிப்படையான பணிகளுக்கு முக்கியமானது போல், இந்த விதிகளும் தத்துவார்த்த சிந்தனைகளுக்கு முக்கியமானதாகும்.

டார்வினுக்கும் மார்க்சுக்கும் முன்னதாக ஹெகல் எழுதினார். ஹெகல் விஞ்ஞானத்தின் பொது இயக்கத்தை முன்னெதிர்பார்த்திருந்தார், பிரெஞ்சுப் புரட்சி சிந்தனைக்கு சக்திவாய்ந்த உந்துதலை வழங்கியமைக்கு நன்றி. ஒரு மேதையின் மூலமாக இருந்தாலும், அது ஒரு முன்னுணர்தலாக மட்டுமே இருந்ததால், அது ஒரு கருத்தியல் பண்பையே ஹெகலிடம் இருந்து பெற்றது. ஹெகல் கருத்தியல்ரீதியான நிழல்களை இறுதி யதார்த்தமாகக் கொண்டு இயங்கினார். இத்தகைய கருத்தியல்ரீதியான நிழல்களின் இயக்கம் சட உருவங்களின் நகர்வே அன்றி வேறொன்றையும் பிரதிபலிக்கவில்லை என மார்க்ஸ் விளக்கிக்காட்டினார்.

நாம் எமது இயங்கியலை, சடவாதம் என அழைப்பது, அது சொர்க்கத்திலோ அல்லது எமது "சுதந்திரமான விருப்பத்திலோ" அன்றி, புறநிலை யதார்த்தத்தில் -இயற்கையில் வேரூன்றியிருப்பதாலேயே ஆகும். நனவானது நனவின்மையில் இருந்தும், உளவியலானது உடலியலில் இருந்தும், உயிரியல் உலகமானது உயிரியல் அல்லாத நிலையில் இருந்தும், சூரிய மண்டலமானது தெளிவின்மையில் (Nebulae) இருந்தும் உருவாகின்றன. அபிவிருத்தி என்ற ஏணியின் சகல படிகளிலும், அளவு ரீதியான மாற்றமானது பண்பு ரீதியில் மாற்றமடைகின்றன. இயங்கியல் சிந்தனை உட்பட எங்களது சிந்தனை, மாறிக்கொண்டிருக்கும் சடத்தின் வெளிப்பாடுகளின் வடிவங்களில் ஒன்று மட்டுமே. இந்த அமைப்பு முறைக்குள் கடவுளுக்கோ, சாத்தானுக்கோ, அழியாத ஆன்மாவுக்கோ அல்லது சட்டம் மற்றும் ஒழுங்குகளின் எல்லையற்ற விதிகளுக்கோ இடம் கிடையாது. சிந்தனையின் இயங்கியலானது இயற்கையின் இயங்கியலில் இருந்து வளர்ச்சியடைந்து, அதன் விளைவாக அது முற்றிலும் சட பண்பைப் பெறுகின்றது.[48]

78. "இயங்கியல் சடவாதத்தின் மிகவும் அருவமான கொள்கைநெறிகள் பற்றிய உடன்பாடுகள் அல்லது உடன்பாடின்மைகள் இன்றைய மற்றும் நாளைய ஸ்தூலமான அரசியல் விவகாரங்கள் மீது -அரசியல் கட்சிகள், வேலைத் திட்டங்கள் மற்றும் போராட்டங்களும் இத்தகைய ஸ்தூலமான விவகாரங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பதன் மீது- கட்டாயமாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன" என எவரும் விளக்கவில்லை என ஷட்மன் வலியுறுத்துகிறார்.

...எந்தக் கட்சிகள்? எந்த வேலைத் திட்டங்கள்? எந்த போராட்டங்கள்? சகல கட்சிகளும் சகல வேலைத்திட்டங்களும் இங்கு ஒரே கும்பலில் போடப்படுகின்றன. பாட்டாளி வர்க்கத்தின் கட்சி ஏனைய கட்சிகளில் இருந்து வேறுபட்டதாகும். அது எப்போதும் "அத்தகைய ஸ்தூலமான விவகாரங்களை" அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. அதன் அத்திவாரத்தை பொறுத்தளவில், பாட்டாளி வர்க்கக் கட்சியானது முதலாளித்துவ பேரம்பேசுபவர்களுக்கும் மற்றும் குட்டி முதலாளித்துவ ஒட்டுபோடுபவர்களுக்கும் முற்றிலும் எதிரானதாகும். சமூகப் புரட்சிக்கு தயாராவதும் மற்றும் புதிய சடரீதியான மற்றும் ஒழுக்க அடிப்படைகளில் மனிதநேயத்துக்கு புத்துயிரூட்டுவதுமே அதன் பணியாகும். முதலாளித்துவ வெகுஜன கருத்துக்கள் மற்றும் பொலிஸ் அடக்குமுறையினதும் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இருப்பதன் பேரில், பாட்டாளி வர்க்கப் புரட்சியாளனுக்கு, பெருமளவில் அதன் தலைவருக்கு, ஒரு தெளிவான, தூர நோக்குள்ள, முற்றிலும் சிந்தித்து உருவாக்கப்பட்ட ஒரு உலக நோக்கு இருக்க வேண்டும். ஒன்றுபடுத்தப்பட்ட மார்க்சிச கருத்துருவை அடிப்படையாக கொள்வதன் மூலம் மட்டுமே 'ஸ்தூலமான' பிரச்சினைகளை சரியாக அணுகுவது சாத்தியமாகும்.[49]


[47]

The SWP was founded in January 1938, almost a decade after Cannon initiated the fight for Trotskyism in the United States. During these 10 years, the American Trotskyists established a significant presence in the struggles of the working class. Their leadership of the Minneapolis General Strike in 1934 attracted national and worldwide attention.

[48]

Ibid, pp. 65-66.

[49]

Ibid, pp. 143-44.