Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

SLL ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாத்தல்

129. இந்த அபிவிருத்திகள் அனைத்துலகக் குழுவிற்குள்ளேயான அரசியல் மோதலை தீவிரப்படுத்தியது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இன் பிரிட்டிஷ் பகுதியான சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) சோசலிசத் தொழிலாளர் கட்சி (SWP) தலைமைக்கு எழுதிய ஜனவரி 2, 1961 தேதியிட்ட கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டது:

புரட்சிகர இயக்கத்தை எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய அபாயம், ஏகாதிபத்தியத்தின் அல்லது தொழிலாளர் இயக்கத்தினுள்ள அதிகாரத்துவ சாதனங்களின் வலிமைக்கு, அல்லது இவை இரண்டிற்கும் அடிபணிதலில் இருந்து ஊற்றெடுக்கும் கலைப்புவாதம் ஆகும். பப்லோவாதமானது 1953ம் ஆண்டை விடவும் இப்போது இன்னும் மிகத் தெளிவாக சர்வதேச மார்க்சிச இயக்கத்தில் இந்த கலைப்புவாத போக்கினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது...

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் மற்றும் புரட்சிகர கட்சிகளைக் கட்டுவது பற்றிய மூலோபாயத்திலிருந்து எந்த பின்வாங்கலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பங்கில் ஒரு உலகவரலாற்றுத் தவறின் முக்கியத்துவத்தைப் பெறும்...

ட்ரொட்ஸ்கிசத்தின் முன்னர் விரியும் வாய்ப்புகளின் பிரம்மாண்ட தன்மை காரணமாகவே அரசியல் மற்றும் தத்துவார்த்த தெளிவின் அவசியம் எழுகிறது, திருத்தல்வாதத்திற்கு -அதன் அத்தனை வடிவங்களுக்கும்- எதிரான கோடுகளை வரைவது நமக்கு அவசரமான அவசியமாகவும் ஆகிறது. பப்லோவாத திருத்தல்வாதம் ட்ரொட்ஸ்கிசத்துக்குள்ளாக ஒரு போக்காக கருதப்பட்டதொரு காலகட்டம் முடிவிற்கு வருகையில் இதனை வரைவதற்கான நேரம் இதுவாகும். இது செய்யப்படாவிட்டால் இப்போது ஆரம்பித்துக்கொண்டிருக்கும் புரட்சிகர போராட்டங்களுக்கு நம்மால் தயாரிப்பு செய்ய முடியாது.[75]

130. மே 1961ல், ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து சோசலிசத் தொழிலாளர் கட்சியின் பின்வாங்கல் மற்றும் நடப்பிலுள்ள காலனித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களில் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்திய எண்ணற்ற முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ தேசியவாத போக்குகளுக்கேற்ப அதன் முன்னெப்போதையும் விட தெளிவான அடிபணிவு இவற்றின் மீது தனது விமர்சனத்தை SLL விரிவுபடுத்தியது. SWP இன் நிலைப்பாடானது, SLL ஆவணங்கள் ஸ்தாபிப்பதை போல, ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் விளக்கியிருந்த கருத்தாக்கங்களின் ஒரு நிராகரிப்பை பிரதிநிதித்துவப்படுத்தியது:

இந்த சகாப்தத்தில் புரட்சிகர மார்க்சிசத்தின் ஒரு அத்தியாவசியமான கருத்தானது வளர்ச்சி குறைந்த நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்கவும் மற்றும் ஒரு சுதந்திர தேசிய அரசை ஸ்தாபிக்கவும் இலாயக்கற்றவர்கள் என்பதாகும். இந்த வர்க்கம் ஏகாதிபத்தியத்துடன் பிணைந்துள்ளதுடன், முதலாளித்துவ உலக சந்தையின் ஒரு பகுதியாக இருப்பதால், அதனால் முன்னேறிய நாடுகளின் உற்பத்தி பொருட்களுடன் போட்டி போட முடியாது என்பதால் அது உண்மையாகவே சுதந்திரமான முதலாளித்துவ அபிவிருத்திக்கும் திறனற்றது தான்.....

கானா போன்ற நாடுகளில் அடைந்துள்ள 'சுதந்திரத்திற்கான' நிலை மற்றும் கென்யாவின் இம்போயா போன்ற மனிதர்களால் தலைமையேற்று நடத்தப்பட்ட தேசிய விடுதலை இயக்கங்கள் எல்லாம் பிற நாடுகளில் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு தூண்டுதலளிப்பனவாக செயல்படுகின்றன என்பது உண்மையான போதிலும், நெகுருமா, இம்போயா, நாசர் [எகிப்து], காசெம், நேரு [இந்தியா], சுகர்னோ [இந்தோனேசியா] மற்றும் இவர்களைப் போன்றவர்கள் தங்களது சொந்த நாடுகளின் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்ற உண்மை அப்படியே தான் தொடர்கிறது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இரண்டிலும் இருக்கும் ஏகாதிபத்திய கொள்கை-வகுப்பாளர்களுக்கு நன்றாகத் தெரியும், இது போன்ற தலைவர்களிடம் அரசியல் 'சுதந்திரத்தை' ஒப்படைப்பதன் மூலம் மட்டும், அல்லது ஃபரூக் மற்றும் நுருஸ்-செட் போன்ற பிரபுத்துவ பிரிவுகள் மீதான அவர்களது வெற்றியை ஏற்றுக் கொள்வதன் மூலம் தான், சர்வதேச மூலதனத்தின் மற்றும் மூலோபாய கூட்டணிகள் ஆசியா, ஆபிரிக்கா, மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் பாதுகாக்கப்பட முடியும் என்று...

இத்தகைய தேசியவாத தலைவர்களின் பாத்திரத்தினை ஊக்கப்படுத்துவது ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பணி அல்ல. சமூக ஜனநாயகம் மற்றும் குறிப்பாக ஸ்ராலினிசத்தின் தலைமையின் காட்டிக்கொடுப்பால் மட்டுமே அவர்கள் வெகுஜன மக்களின் ஆதரவை வெல்ல முடியும், இந்த வழியில் அவர்கள் ஏகாதிபத்தியத்திற்கும் வெகுஜன தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கும் இடையிலான இடைத்தடையாளராக மாறுகிறார்கள். சோவியத் ஒன்றியத்திடம் இருந்து பொருளாதார உதவி பெறுவதற்கான வாய்ப்பானது அவர்களை ஏகாதிபத்தியவாதிகளுடன் கடுமையான பேரத்தில் ஈடுபடுவதற்கு வழிவகை செய்கிறது, பல சமயங்களில் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தலைவர்கள் மத்தியில் உள்ள தீவிர பிரிவினர் ஏகாதிபத்திய உடைமைகளை தாக்கவும் வெகுஜனங்களிடம் இருந்து கூடுதல் ஆதரவைப் பெறவும் கூட வழிசெய்கிறது. ஆனால் நமக்கு, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முக்கியமான கேள்வியானது, இந்த நாடுகளில் உழைக்கும் வர்க்கங்களில் ஒன்று ஒரு மார்க்சிச கட்சி மூலம் அரசியல் சுயாதீனத்தை பெறுவதும், ஏழை விவசாயிகளை சோவியத்துகளை கட்டுவதற்கு இட்டுச் செல்வதும், சர்வதேச சோசலிச புரட்சியுடன் தேவையான தொடர்புகளை அங்கீகரிப்பதும் ஆகும். எமது கருத்தின்படி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எந்த சந்தர்ப்பத்திலும் தேசியவாத தலைமைகள் சோசலிஸ்டுகளாக மாற வேண்டும் என்ற நம்பிக்கையை பிரதியீடாக கொள்ளக் கூடாது. தொழிலாள வர்க்கத்தின் விடுதலையானது தொழிலாளர்களால் தாங்களே மேற்கொள்ள வேண்டிய பணியாகும்.[76]

131. கியூபா குறித்த கேள்விக்கு, SLL கூறியது:

கியூபா மீதான விவாதங்களில் பலவும் இவ்வாறு செல்வதாகவே தோன்றுகிறது: கியூப மக்கள் காஸ்ட்ரோவை ஆதரிக்கிறார்கள்; காஸ்ட்ரோ ஒரு குட்டி-முதலாளித்துவவாதியாக ஆரம்பித்து ஒரு சோசலிஸ்டாக மாறியிருக்கிறார்; ஏகாதிபத்திய தாக்குதலின் மீதான பொதுமக்களின் அழுத்தமும், மக்கள் போராட்டமும் அவரை மார்க்சிசவாதியாகவும் மாற்றலாம், மற்றும் ஏற்கனவே புரட்சியின் வெற்றிகளை பாதுகாப்பதில் அவரை எதிர்கொண்டுள்ள பணிகள் அவரை "இயல்பாக" ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து வித்தியாசப்படுத்த முடியாத நிலைகளுக்கு கொண்டு வந்துள்ளன. இந்த அணுகுமுறையில், மார்க்சிசத்தின் அடிப்படைகள் நசுக்கப்படுகின்றன.... [நாம்] அரசியல் போக்குகளை ஒரு வர்க்க அடிப்படையில் மதிப்பிட வேண்டும், நீண்டகாலமாக வர்க்கங்களின் இயக்கங்களுடன் தொடர்புடைய போராட்டத்தில் அவை அபிவிருத்தி அடைந்துள்ள வழியில். ஒரு பாட்டாளி வர்க்க கட்சியானது, பாட்டாளி வர்க்க புரட்சி என்பது பின்னர், எந்த ஒரு பின்தங்கிய நாட்டிலும் குட்டி முதலாளித்துவ தேசியவாதிகள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் முக்கியத்துவத்தின் மீது 'இயல்பாகவும்' 'தற்செயலாகவும்' மோதிக்கொள்வதால் மாறுவதன் மூலம் பிறக்காது.[77]


[75]

Letter of the National Committee of the SLL to the National Committee of the SWP January 2, 1961, in Trotskyism vs. Revisionism Volume Three (London: New Park, 1974) pp. 48-49.

[76]

Heritage, 377-8.

[77]

Ibid 379.