Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

சமத்துவத்தின் முக்கியத்துவம்

சோசலிச சமத்துவக் கட்சி என்ற தேர்வானது, உண்மையான மனித சமத்துவத்தை ஜதார்த்தமார்க்கும் சோசலிசத்தின் முக்கியமான நோக்கத்தையும் மற்றும் தற்கால முதலாளித்துவத்தின் நிலைமைக்கு விட்டுக்கொடுக்காத எதிர்ப்பான அணுகுமுறை என்ற இரு கருத்துக்களையும் வெளிப்படுத்துகின்றது. சோசலிச சமத்துவக் கட்சியை அமைப்பதற்கு விடுத்த அழைப்பில் நோர்த் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

புறநிலை நிலைமைகள் புரட்சியை நோக்கி இட்டுச்செல்கின்றன. ஆனால் நாம் வரலாற்றிலிருந்து அறிந்துகொண்டது போல புரட்சிகர நனவின் அபிவிருத்தியோ ஒரு தன்னியல்பான நிகழ்வுப்போக்கல்ல. முதலாளித்துவத்தின் மறைமுகமான முரண்பாடுகளால் உருவாக்கப்பட்ட உந்தல்கள் நேரடியாக அவற்றை சோசலிச வடிவிலான சிந்தனைகளாக மாற்றுவதில்லை. ஒரு குறிப்பிட்ட புறநிலை நிலைமை மீதான தொழிலாள வர்க்கத்தின் பிரதிபலிப்பு ஒரு பாரிய சிக்கலான வரலாற்று வழிப்பட்ட சூழ்நிலையுடன் இணைந்துள்ளது. இது உண்மையில் ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசப்படலாம். ஆனால், ஒவ்வொரு நிலைமையிலும் ஒரு மார்க்சிசவாதி சிந்தனையில் வழி கண்டுபிடிக்க வேண்டும், நான் அத்துடன் இணைக்க விருப்புவது, தொழிலாள வர்க்கத்தின் இதயங்களை சென்றடைவதற்கான பாதையை கண்டுபிடிக்கவேண்டும்.

கழகங்களை கட்சிகளாக மாற்றும்போது, பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்கு முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடி எவ்விதமான வடிவங்களை காட்டுகின்றது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். இதனை சாதாரணமாக கூறுவதானால், கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் தமது வாழ்க்கைத்தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதை கண்டுவருகின்றனர். தமது வேலை தொடர்பான நிரந்தர பயத்திலும் வாழ்ந்துவருவதுடன், தமது சம்பளங்கள் குறைந்துவருகையில் விலைகளின் அதிகரிப்பை சமாளிக்க திணறுகின்றனர்.

அமெரிக்க வாழ்க்கையின் ஆதிக்கமிக்க இயல்பாக உள்ளது என்னவெனில், மக்கள் தொகையின் ஒரு சிறிய விகிதத்தினர் முன்னொருபோதுமில்லாதவாறான செல்வத்தை அனுபவிக்கையில், உழைக்கும் மக்களின் பரந்தளவினர் பொருளாதார நிட்சயமின்மையினதும் அமைதியின்மையினதும் மாறுபடும் தன்மைக்கு உட்பட வேண்டியுள்ளது....

தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார, சமூக நிலைமையின் சீரழிவு தொழில்நுட்ப புரட்சியுடனும் அதற்கு எரியூட்டும் பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியுடனும் நேரடியாக தொடர்புபட்டது. உற்பத்தி சக்திகள் மீதான தனிச்சொத்துடைமையின் ஆளுமையின் கீழ் தொழில்நுட்பத்திற்கு தொழிலாள வர்க்கம் பலியிடப்பட்டுள்ளது....

எமது கட்சியின் நோக்கம் தொழிலாள வர்க்கம் அதனை விளங்கிக்கொண்டு மற்றும் தம்மை அதனுடன் அடையாளப்படுத்திக்கொள்ளகூடிய வகையில் அதன் பெயரில் குறிக்க்கப்பட வேண்டும்.....

சுருக்கமாக, இந்த கட்சியை தொழிலாள வர்க்கத்திற்கு முன்வைக்கையில், இக்கட்சியின் நோக்கம், ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை உருவாக்குவது என்பதை விளக்கவேண்டும். அத்துடன், ஒரு தொழிலாளர் அரசாங்கம் என நாம் கருதுவது, தொழிலாளர்களால் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்படுவதாகும். அவ்வாறான ஒரு அரசாங்கம் ஜனநாயக வழிமுறைகளால் தான் பெற்றுக்கொண்ட அரசியல் அதிகாரத்தை சாத்தியமானால் தொழிலாள வர்க்கத்தின் நலன்களின் பேரில் பொருளாதார வாழ்க்கையை மறு ஒழுங்கமைப்பதுடன், முதலாளித்துவத்தின் சமூக அழிவுகரமான சந்தை சக்திகளை ஜனநாயக ரீதியான சமூக திட்டமிடலால், தாண்டி பிரதியீடு செய்து, தொழிலாள வர்க்கத்தின் அவசியமான சமூக தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் உற்பத்தியை தீவிர மறுஒழுங்கிற்குட்படுத்தும். இது செல்வத்தை தொழிலாள வர்க்கத்திற்கு சாதகமான ஒரு தீவிரமான சமூக நீதியான மறுபங்கீட்டிற்கு உள்ளாக்கி, சோசலிசத்திற்கான அடித்தளங்களை இடும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் நோக்கங்கள் தாமும் ஒரு பாகமாகவுள்ள தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச உணர்வுமிக்க ஒரு இயக்கத்தின் கூட்டுடன்தான் சாத்தியமானது என வலியுறுத்துவோம். பல்தேசிய மற்றும் நாடுகடந்த நிறுவனங்கள் ஏனைய நாடுகளில் உள்ள அவர்களது வர்க்க சகோதரர்களையும் சகோதரிகளையும் சுரண்டுகையிலும், ஒடுக்கிவருகையிலும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு சமூக நீதியும், சமூக சமத்துவமும் இருக்கமுடியாது. மேலும், வர்க்கப் போராட்டம் அடித்தளமாக கொள்ளக்கூடிய எவ்விதமான சாத்தியமான தேசிய மூலோபாயமும் இல்லை. நாடுகடந்த நிறுவனங்களின் சர்வதேச மூலோபாயத்தை தொழிலாள வர்க்கமும் தனது சர்வதேச மூலோபாயத்தால்தான் உறுதியாகவும், திட்டமிட்டபடியும் எதிர்க்க முடியும். சோசலிசத்தின் மிக அத்தியாவசியமான இந்த அடிப்படை கேள்வி தொடர்பாக எவ்விதமான விட்டுக்கொடுப்புமில்லை.

சமூக சமத்துவம் என்பது சோசலிச இயக்கத்தின் அடிப்படை நோக்கங்களின் ஒரு தொகை கூட்டல்ல. இது அமெரிக்க தொழிலாளர்களின் உண்மையான ஜனநாயக ரீதியானதும் புரட்சிகரமானதுமான பாரம்பரியங்களை கொண்ட விடுதலைப் பாரம்பரியங்களில் இருந்து எழுகின்றது. அமெரிக்க வரலாற்றின் அனைத்து பாரிய சமூக போராட்டங்களினதும் பதாகைகளில் சமூக சமத்துவத்திற்கான கோரிக்கை வரையப்பட்டிருந்தது. தற்போதைய அரசியல் பிற்போக்குத்தன சூழ்நிலையின் கீழ் இந்த உயர்ந்த கோரிக்கை தொடர்ச்சியான தாக்குதலுக்குள்ளாகுவது தற்செயலானதல்ல.[142]


[142]

Ibid, pp. 31-37.