துருக்கியில் கட்சி அலுவலகங்கள் மீது தீவிர வலதுசாரி தாக்குதலில் குர்திஷ் HDP உறுப்பினர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சியின் (HDP) பெண் உறுப்பினரான டெனிஸ் பொய்ராஸ் (Deniz Poyraz) (38) அரசியல் படுகொலை செய்யப்பட்டதை உலக சோசலிச வலைத் தளம் கடுமையாக கண்டிக்கிறது. இந்த அரசியல் கொலை, தெளிவாக அனைத்து தொழிலாள வர்க்கத்தையும் குறிவைத்து ஒரு மிருகத்தனமான சர்வாதிகாரத்திற்கான நிலைமைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசு ஆதரவு, முன் திட்டமிடப்பட்ட நடவடிக்கையாகும்.

தாக்குதலுக்குப் பின்னர் HDP இன் İzmir மாகாண அலுவலகம், ஜூன் 17, 2021. (Credit: @hdpgenelmerkezi/Twitter)

எச்டிபி தனது முதல் பொது அறிக்கையில், “இந்த மிருகத்தனமான தாக்குதலின் தூண்டுதலும் கூட்டடாளியும், நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி / தேசியவாத இயக்கக் கட்சி (AKP-MHP) யும் அரசாங்கமும் உள்துறை அமைச்சகமும் ஆகும், இது எங்கள் கட்சியையும் எங்கள் உறுப்பினர்களையும் தொடர்ந்து குறிவைக்கிறது.

காலை 11:05 மணிக்கு ஒனூர் ஜென்சர் (27) இஸ்மிரில் உள்ள எச்.டி.பி மாகாண அலுவலகத்தின் இரண்டாவது மாடிக்குள் நுழைந்தார். கட்சி ஊழியரான பொய்ராஸ் மட்டுமே அங்கே இருந்ததோடு, பிணைக் கைதியாகவும் ஆக்கப்பட்டார். போலீசார் வந்தும்கூட குறைந்தது 15 நிமிடங்கள் தலையிடவில்லை. பின்னர் ஜென்சர், பொய்ராஸை சுட்டுக் கொன்று போலீசில் சரணடைந்தார்.

அவருக்கு நட்பு ரீதியான வரவேற்பு அளிக்கப்பட்டது. “உங்கள் பெயர் என்ன, சகோதரா?” என காவல்துறையினர் தாக்குதல்தாரியை கேட்பதாக ஒரு வீடியோ காட்டுகிறது. அவர் கைது செய்யப்பட்டார். சமூக ஊடகங்களில் ஒரு ஸ்கிரீன் ஷாட் படி, கொலையாளி காவலில் இருந்தபோது இன்ஸ்டாகிராமில் கருத்துகளுக்கு 'விருப்பம்' தெரிவித்திருந்தார், மேலும் அவர் தனது சமூக ஊடக கணக்கில் பகிர்ந்து கொண்ட தெளிவான சாட்சிய செய்திகளையும் நீக்கிவிட்டார்.

தான் தனியாக செயல்பட்டதாக ஜென்சர் கூறினார் - “எனக்கு யாருடனும் எந்த தொடர்பும் இல்லை. நான் தேசியவாத குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை (PKK) வெறுக்கிறேன், அதனாலே நான் கட்டிடத்திற்குள் நுழைந்தேன்”- மேலும் அவரது தாய் மற்றும் சகோதரிக்கு எதிராக ஜூன் 16 ஆம் தேதி பிற்பகுதியில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட சில அவமதிப்புகளுக்கு பதிலடியாகவே என கூறப்பட்டது. ஆனால் இதில் எவ்வித நம்பகத்தன்மையும் இல்லை. இது கவனமாக திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கையாக இருந்தது, அது இன்னும் பல உயிர்களைக் கொன்றிருக்கும், ஆனால் சந்தர்ப்பவசமாக அப்படி நடக்கவில்லை.

HDP இணைத் தலைவர் மிதாட் சன்கார் (Mithat Sancar) தாக்குதலுக்குப் பின்னர் ஊடகங்களிடம் கூறினார், “இது ஒரு சீரற்ற நபரைக் கொல்லும் திட்டம் அல்ல. தாக்குதலின் சரியான நேரத்தில் எங்கள் நிர்வாகிகள் 40 பேர் கலந்து கொள்ளும் ஒரு கூட்டத்தை நாங்கள் திட்டமிட்டிருந்தோம். முன்கூட்டியே திட்டமிட்ட இந்த கூட்டம் அவசர காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. அவர்கள் ஒரு படுகொலைக்கு திட்டமிட்டிருந்தனர்.”

காவல்துறையின் மோப்பத்தின் கீழும் மற்றும் மாநிலப் படைகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் ஆத்திரமூட்டல்களுக்கு உட்படுத்தப்படும் ஒரு கட்சிக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக HDP அதிகாரிகள் குறிப்பிட்டனர். HDP இன் இஸ்மீர் (Izmir) நாடாளுமன்ற உறுப்பினர் முராத் செப்னி (Murat Cepni) கூறுகையில், “கட்சிக் கட்டிடம் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ளது. இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட தாக்குதலாகும். “ஆகவே இந்த தாக்குதலுக்கு அரசாங்கமும் உள்துறை அமைச்சகமும் பொறுப்பாகும்.”

மெசொப்பொத்தேமியா (Mesopotamia) ஏஜென்சியின் கூற்றுப்படி, HDP இன் இஸ்மீரில் உள்ள அதிகாரி அப்துல்காதிர் பேதுர் (Abdulkadir Baydur), அவர் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்ததாகவும், அந்த நேரத்தில் பணயக்கைதியை மீட்கும் நிலைமைக்கு யாரும் பதிலளிக்கவில்லை என்றும் கூறினார்: “நான் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது துப்பாக்கி சத்தங்களை கேட்டோம். பொலிசார் சிறிது நேரம் கழித்தே தாக்குதல் நடத்தியவரை பிடித்தனர்.

ஜென்சர் ஏற்கனவே தனது பணயக்கைதியைக் கொல்வதற்கு முன்பு கட்டிடத்தை எரிக்க முயன்றார்.

ஆரம்பத்தில் “முன்னாள் சுகாதார ஊழியர்” என்று குறிப்பிடப்பட்ட அவர் ஒரு உறுதியான பாசிசவாதி, அதிகாரிகளிடம் கூறினார், 'குழந்தைப் பருவத்திலிருந்தே, PKK குர்திஷ் தொழிலாளர் கட்சி (PKK) இல் உள்ளவர்களை கொல்ல நான் திட்டமிட்டிருந்தேன். இந்த சம்பவம் மேம்பட்ட முறையில் நடந்தது.”

தனது சமூக ஊடக கணக்கில், அவர் துப்பாக்கிகளை வைத்திருப்பது மற்றும் ஒரு வலதுசாரி சாம்பல்நிற ஓநாய்களின் கை அடையாளத்தை MHP உடன் அடையாளம் காட்டிய புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டார், அதே நேரத்தில் வடக்கு சிரியாவில் துருக்கிய ஆதரவு இஸ்லாமிய “சுதந்திர சிரிய இராணுவம்” நடவடிக்கைகளின் போது PKK மக்கள் பாதுகாப்பு பிரிவுகள் (YPG). ஒரு சமூக ஊடக பதிவில், கொலையாளி பிப்ரவரி 21, 2020 அன்று மன்பீஜில் (MANBIJ) தன்னை ஒரு தாக்குதல் துப்பாக்கியுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து கொள்கிறார், “சிரியாவிலிருந்து ஒரு நினைவு பரிசு” என்ற தலைப்பில். அவர் துருக்கியின் காசியான்டெப்பில் (Gaziantep) இருந்து மற்றொரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டதுடன், 'கடமையில் இருந்து திரும்பு' என்று எழுதினார்.

ஏப்ரல் 2021 இல் தனது தொழிலை இராஜினாமா செய்வதற்கு முன்னர், 2020 முதல் மாதங்களை சிரியா / மன்பீஜ் இல் மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்ததாகக் கூறி ஜென்சர் இதை விளக்கினார். HDP இஸ்தான்புல் (Istanbul) எம்.பி. ஹடா கயா (Huda Kaya) பதிலளித்தார், உண்மையில் அவர் இராணுவ ரீதியாக பயிற்சி பெற்றவர் சர்வதேச பாதுகாப்பு ஆலோசனை கட்டுமான தொழில் மற்றும் வர்த்தக நிறுவனம் (SADAT). 'பாதுகாப்புத் துறையில் ஆலோசனை மற்றும் இராணுவப் பயிற்சியை வழங்கும் நிறுவனம்' என்று தன்னை வரையறுத்துக் கொண்ட SADAT, துருக்கிய அரசின் நலன்களுக்காக நடவடிக்கைகளை மேற்கொண்டதாக நீண்ட காலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

ஜெனசர் தனது தாக்குதல் ஜனவரி 2021 ஆம் ஆண்டிலேயே திட்டமிடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார், அங்கு அவர் "பல சந்தர்ப்பங்களில் சில உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டார்". அவர் “மே 2021 இல் துப்பாக்கியை வைத்திருப்பதற்கான உரிமத்திற்காக காஸிமீர் (Gaziemir) மாவட்ட பாதுகாப்பு இயக்குநரகத்திற்கு விண்ணப்பித்து ஒரு தற்காலிக அனுமதியையும் பெற்றார்”, அதன் பின்னர் அவர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட '3500 (Lira) லிராவுக்கு ஒரு ரகர் துப்பாக்கியை' வாங்கினார்.

மே மாத இறுதியில் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) தனது ஆட்சிக்கு எதிரான அனைத்து எதிர்ப்பிற்கும் எதிராக யுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. மேலும் தீவிர வலதுசாரி கட்சித் தலைவர் மெரல் அகீனெர் (Meral Aksener) மீது உடல்ரீதியான தாக்குதல் நடத்த முயற்சித்ததை அவர் பாராட்டினார், மேலும் அவர்கள் “அதிக தூரம் செல்லாமல் அவளுக்கு ஒரு நல்ல பாடம் கற்பித்தார்கள்… இது முதல் முறை மட்டுமே. இன்னும் பல விஷயங்கள் நடக்கும், இவை சிறந்த நாட்கள் ” என்றும் கூறினார்.

HDP தடைசெய்யப்பட்ட PKK உடன் 'உறவுகளை' கொண்டுள்ளது என்ற அடிப்படையில், பல ஆண்டுகளாக நடந்து வரும் அரச தாக்குதல்களின் இலக்காக உள்ளது. முன்னாள் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உட்பட HDP உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், சமீபத்திய தேர்தல்களில் கட்சி வென்ற உள்ளூர் நிர்வாகங்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். மார்ச் மாதத்தில், பாராளுமன்றத்தில் கிட்டத்தட்ட 5 மில்லியன் வாக்குகளைப் பெற்ற மூன்றாவது பெரிய கட்சியை (HDP) தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது, HDP ஒரு அறிக்கையில் “ஆளும் கட்சி மற்றும் உள்துறை அமைச்சகத்தால் குறிவைக்கப்பட்டுள்ளது மற்றும் சில குடும்பங்கள் பல மாதங்களாக ஆத்திரமூட்டும் நோக்கத்துடன் HDP மாகாண கட்டிடங்களுக்கு முன்னால் கொண்டு வரப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.

நேட்டோ உச்சிமாநாட்டில் எர்டோகனுக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் இடையிலான ஜூன் 14 சந்திப்பை தொடர்ந்து HDPயின் இஸ்மீரில் உள்ள அலுவலகங்கள் மீதான தாக்குதல் உடனடியாக நடைபெற்றது. PKK ஐ "பயங்கரவாத அமைப்பு" என்று வாஷிங்டன் பெயரிட்ட போதிலும், அசாத் ஆட்சிக்கு எதிரான ஒரு ஆயுதமாக சிரியாவில் YPGக்கு அமெரிக்க ஆதரவு இருப்பது சர்ச்சையின் முக்கிய அம்சமாக இருந்தது.

ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியினால், பெருகிவரும் சமூக கோபத்தின் மத்தியிலும், தொற்றுநோய்க்கு ஏ.கே.பி (AKP) யின் படுகொலை பதிலால் பெரிதும் அதிகரித்துள்ளது, அத்துடன் தீவிர வலதுசாரி கும்பல் செடாட் பெக்கரால் (Sedat Peker) ஏற்பாடு செய்த சிரியாவில் உள்ள அல் கொய்தா கிளையான அல் நுஸ்ராவுக்கு துருக்கிய ஆயுதங்கள் வழங்கியமை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளால் அரசாங்கம் ஸ்திரமின்மைக்கு உள்ளாகியுள்ளது.

HDP மீதான தாக்குதலுக்குப் பின்னர் பெக்கர் ட்வீட் செய்துள்ளார், “நாங்கள் மிகப் பெரிய தாக்குதல்களை… வரும் நாட்களில் பார்க்கப்போகிறோம் … எனது அனுபவத்தையும் நேர்மையையும் நீங்கள் கருத்தில் கொள்வீர்களானால், எந்த சூழ்நிலையிலும் வீதிகளில் இறங்க வேண்டாம்.” “ஒரு மிகப் பெரிய ஆபத்து கட்டப்பட்டு வருகிறது” என்று கூறி, மக்கள் வீதிகளில் இறங்கினால், முன்னாள் உள்துறை மந்திரி மெஹ்மத் அகார் (Mehmet Agar) மற்றும் அவரது ஆட்கள் “பயங்கரவாத அமைப்புகளில் தங்கள் செயற்பாட்டாளர்களைப் பயன்படுத்தி சம்பவங்களை ஒரு குழப்பமாக மாற்றுவர்” என்று கூறினார்.

இந்த படுகொலை முதலாளித்துவ எதிர்க்கட்சிகளால் கண்டிக்கப்பட்டது, இதை HDP “ஜனநாயக சக்திகள்' என்று அழைக்கிறது, ஆனால் இவர்கள்தான் தற்போதைய நிலைக்கு பொறுப்பாகும். குடியரசு மக்கள் கட்சி (CHP) தலைவர் கெமால் காலடரோயுலு (Kemal Kilicdaroglu) ட்விட்டர் மீதான தாக்குதலைக் கண்டித்து, “நாங்கள் இதற்கு முன்னர் இந்த சூழ்நிலையில் இருந்தோம், ஆனால் இப்போது எங்கள் மக்கள் அதற்கு அடிபணியமாட்டார்கள்” என்று குறிப்பிட்டார். அவருடன் Good Party தலைவர் (Aksener) அகீனர், தேவா கட்சியின் (Deva Party) தலைவர் அலி பாபகன் (Ali Babacan) மற்றும் Future Party இன் தலைவரான அஹ்மத் டவுடோயுலு (Ahmed Davutoglu) ஆகியோரும் சேர்ந்து கொண்டனர், இக் கட்சிகள் அனைத்தும் AKP யுடன் முறித்துக் கொண்டன.

HDP அதிகாரிகள் தங்கள் அறிக்கையில், இந்த தாக்குதல் 2015 ஜூன் 7 முதல் நவம்பர் 1 வரையிலான காலத்தை மீண்டும் ஞாபகப்படுத்துகிறது என்று வாதிட்டது, முதலாளித்துவ எதிர்க் கட்சிகளை அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. எவ்வாறாயினும், இது எர்டோகன் (Erdogan) மட்டுமல்ல, பிரதம மந்திரி டவுடோயுலு (Davutoglu) மற்றும் துணை பிரதம மந்திரி பாபகனும் (Babacan) இப்போது HDP யால் 'ஜனநாயக சக்திகளில்' உள்ளடங்குகிறார்கள், உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது போல்: “ஜூன் மாத தேர்தல்களுக்குப் பின்னர் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முடியாத AKP, நவம்பர் 1-க்கு புதிய தேர்தல்களுக்கு அழைப்புவிட்டது. ஆயினும், தனது ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு மேலும் மேலும் வளர்ந்து வருவதைக் கண்டு, தனது சொந்த தளத்தை அணிதிரட்டுவதற்கும், தனது அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஊடகங்களின் அடக்குமுறையை நியாயப்படுத்துவதற்கும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் குர்திஷ் எதிர்ப்பு மற்றும் போருக்கு ஆதரவான உணர்வைத் தூண்ட அது விரும்புகிறது."

வாஷிங்டனும் பிற பாரிய ஏகாதிபத்திய சக்திகளும் இஸ்லாமிய போராளிகளைக் கைவிட்டு, குர்திஷ் தேசியவாத போராளிகளை சிரியாவிற்குள் தங்களது முக்கிய பினாமி சக்தியாக ஏற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை பெருகிய முறையில் மேற்கொண்டன, இதனால் அங்காராவுக்கும் அதன் நேட்டோ நட்பு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்தது. இந்த பதட்டங்கள் துருக்கியின் குர்திஷ் மாகாணங்களில் மீண்டும் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற உள்நாட்டுப் போரின் மீள் எழுச்சியில் உச்சக்கட்டத்தை அடைந்தன, இறுதியில் ஜூலை 2016 இல் எர்டோகனுக்கு எதிராக நேட்டோ ஆதரவுடைய சதித்திட்டத்திற்கு வழிவகுத்தது.

வளர்ந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் வர்க்க பதட்டங்களுக்கு மத்தியில், துருக்கிய அரசாங்கம் அரசு மற்றும் துணை இராணுவ சக்திகளைப் பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போருக்கு தெளிவாக தயாராகி வருகிறது. சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பாகமாக அரச அதிகாரத்தை கைப்பற்ற முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே இந்த ஆபத்தை தடுக்க முடியும்.

Loading