“ஆடுகளங்கள் வெளியேற்றப்படும் என்ற பணக்கார பயம்”

UAW இன் சரணடைவு ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன் வொல்வோ தொழிலாளர்கள் முழு ஒப்பந்தத்தையும் கூடுதல் வாரத்தையும் கோருகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வொல்வோ மற்றும் மாக் தொழிலாளர்கள் வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழுவை (VWRFC) volvowrfc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது (540) 307-0509 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

கடந்த மாதம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் வொல்வோ கனரக வாகனத் தொழிலாளர்கள் [Source: UAW 2069]

வேர்ஜீனியாவின் டப்ளினில் அண்ணளவாக 3,000 வொல்வோ கனரக வாகனத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள வேலைநிறுத்தம் தற்போது ஐந்தாவது வாரமாகியும் தொடர்கிறது, ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்கத்தின் (United Auto Workers-UAW) புதிய ஆறு ஆண்டுகால தற்காலிக தொழிலாளர் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. பணவீக்க விகிதத்தை விட மிகக் குறைந்த ஊதிய அதிகரிப்புக்களையும் மற்றும் தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான தகுதிக்கு விஞ்சிய சுகாதாரச் செலவின அதிகரிப்புக்களையும் உள்ளடக்கிய புதிய ஒப்பந்தம் என்பது, மே மற்றும் ஜூன் மாதங்களில் 9 க்கு 1 என்ற வித்தியாசத்தில் தொழிலாளர்கள் நிராகரித்த UAW ஆதரவுபெற்ற முன்னைய இரண்டு ஒப்பந்தங்களின் சற்று திருத்தப்பட்ட மறுவடிவமைப்பாகும்.

வொல்வோ தொழிலாளர்கள் புதிய ஒப்பந்த முன்மொழிவின் முழு நகலையும், அதனுடன் தொடர்புபட்ட அனைத்து புரிந்துணர்வு கடிதங்களையும், ஒப்பந்தக் குறிப்புக்களையும் வெளியிடக் கோருகின்றனர். புதிய ஒப்பந்த முன்மொழிவின் எந்தவொரு பக்கத்தையும் வெளியிட UAW மறுத்துவிட்டது, ஆனால் முன்னயை ஒப்பந்தங்களை விட தற்போதைய தற்காலிக ஒப்பந்தத்ததின் பல பக்கங்களில் மேம்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முழு ஒப்பந்தமும் UAW லோக்கல் 2069 தொழிற்சங்க அரங்கின் முழு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. பல நூறு பக்கங்கள் கொண்ட ஆவணத்தை தனிப்பட்ட வகையில் பார்ப்பதற்கு தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, என்றாலும் அதனை ஒரு நகல் எடுத்துக்கொள்ளக் கூட அனுமதிக்கவில்லை.

தொழிலாளர்களுக்கு பயந்து, UAW வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட ஒப்புதல் வாக்கெடுப்புக்கு முன்னர் எந்தவொரு “நகர அரங்கு” கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கவில்லை. மாறாக, உள்ளூர் தொழிற்சங்க அதிகாரிகள் தொழிலாளர்களை தொழிற்சங்க அரங்கிற்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளனர், அதாவது அவர்கள் லோக்கல், பிராந்தியம் 8 மற்றும் UAW சர்வதேச அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளிடம் ஒப்பந்தம் பற்றி ஏதேனும் கேள்விகள் கேட்க விரும்பினால், தொழிலாளர்களை மீண்டும் தனித்தனியாகவே வருமாறு கூறியுள்ளனர்.

ஜூலை நான்கு வரை நீடித்த திங்களன்று முடிவடையும் வார இறுதியில், 2027 ஆம் ஆண்டு வரை தொழிலாளர்களின் ஊதியங்கள், சலுகைகள் மற்றும் வேலை நிலைமைகளை நிர்வகிக்கவுள்ள ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவும் அதுபற்றி விவாதிக்கவும் தொழிலாளர்களுக்கு UAW அடிப்படையில் மூன்று நாட்கள் அவகாசத்தை மட்டுமே வழங்குகிறது.

“நாங்கள் வாக்களிப்பதற்கு முன்னால், முழு ஒப்பந்தமும் எங்களுக்கு வேண்டும் என்பதுடன், அதை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள கூடுதல் வார அவகாசமும் வேண்டும்,” என்று வேலைநிறுத்தம் செய்யும் வொல்வோ தொழிலாளி ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தார். மேலும், “அனைவரும் அதை நன்கு ஆராய வேண்டும், ஜூலை நான்காம் தேதிக்குப் பின்னர் எங்களுக்கு நேரம் இருக்காது” என்றும் கூறினார்.

“அனைவரும் கலந்து கொண்டு கேள்விகளை கேட்கும் வகையில் வாரத்திற்கு குறைந்தது இரண்டு கூட்டங்களாவது எங்களுக்கு நடத்தப்பட வேண்டும். அது நாங்கள் நினைப்பது போல இருக்க வேண்டும். தொழிலாளர்கள் இதுபற்றி தெளிவாக சிந்திப்பார்களானால், அவர்கள் இதை நிராகரிப்பார்கள்.

“அதனால்தான் UAW எந்தவொரு பாரிய கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கவில்லை, அவர்கள் பயப்படுகிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம், ‘கேள்வி கேட்பதை தொழிற்சங்க அரங்குடன் நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்பது தான். [லோக்கல் 2069 இன் தலைவர் மாட்] ப்ளாண்டினோவும் பேரம் பேசும் குழுவும், உறுப்பினர் குழுவிற்கு முன்னால் வர அச்சமடைகின்றனர்.

“[முதல் வேலைநிறுத்தத்திற்குப் பின்னர்] UAW எங்களை வேலைக்குத் திருப்பியனுப்பியது, அதனால் வொல்வோ நிறுவனம் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களை உற்பத்தி செய்ய முடிந்தது. தற்போது வாகன [கையிருப்பு] குறைந்து வருகிறது, மீண்டும் ஒப்பந்தத்தை நிராகரித்து நாங்கள் வாக்களித்தோமானால், அது உண்மையில் வொல்வோ மேற்பார்வையாளர்களின் நிலைமை சுவீடனில் உள்ள அவர்களது எஜமானர்களால் படுமோசமடைவதற்கு இட்டுச் செல்லும்.

சரணடைதல் ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தி, அனைத்து வொல்வோ பிரிவுகளுக்கும் வேலைநிறுத்தத்தை விரிவடைச்செய்ய போராடியதுமான வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழு (VWRFC), வெள்ளிக்கிழமை “வேண்டாம்” என்று வாக்களிக்க அழைப்பு விடுக்கும் அறிக்கையை விநியோகித்தது. இந்த அறிக்கை, எந்தவித வாக்கெடுப்புக்கும் குறைந்தது 10 நாட்களுக்கு முன்னர் ஒட்டுமொத்த ஒப்பந்தத்தை வெளியிடவும், ஒப்பந்தம் பற்றி விவாதிக்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட கூட்டத்தை நடத்தவும், வாக்கெடுப்பை சாமானிய தொழிலாளர் குழு மேற்பார்வையிடவும், வாராந்திர ஊதியங்களுக்கு சமமாக வேலைநிறுத்த ஊதியத்தை வழங்கவும் கோரிக்கை விடுக்கிறது.

வேலைநிறுத்தம் செய்யும் மற்றொரு தொழிலாளி, “வெளியிடப்பட்ட தகவலின் படி,” “நிறுவனம் 10 மணி நேர வேலை நாள் திட்டத்தை கைவிட்டுள்ளது, தொழிலாளர்கள் வருகையை வைத்து அவர்களை ஒழுங்குபடுத்தும் முறை பற்றி நாங்கள் இன்னும் விவாதிக்க வேண்டியுள்ளது, மேலும் குடும்ப மற்றும் மருத்துவ விடுப்புச் சட்டத்தை [Family and Medical Leave Act-FMLA] பயன்படுத்துவதற்கு முன்னால் நாங்கள் எங்களது அனைத்து விடுமுறைகளையும் பயன்படுத்த வேண்டும். 2011-15 காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரே நேரத்தில் உச்சபட்ச ஊதிய உயர்வளித்து அவர்களை நேரடியாக உயர்த்துவதாகக் கூறி வாக்களிக்க வைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். என்றாலும், வாழ்க்கை செலவின அனுசரிப்பு [cost of living adjustment-COLA] கிடையாது, சுகாதார காப்பீடு இன்னும் அதிகரித்து வருகிறது, மேலும் புதிய தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க இன்னும் ஆறு ஆண்டுகள் பிடிக்கும். எல்லோரும் நேராக மைய குழுவிற்கு (Core Group) [அதிக அனுபவம் மற்றும் சம்பளம்] சென்று எல்லோரும் தங்கள் காப்பீட்டை வைத்திருந்தால் அது மற்றொரு விஷயம். ஆனால் அது நடப்பதில்லை.

மேலும் இவர், “பெரும்பாலான மையக் குழு உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், என்றாலும் நாங்கள் ஒப்பந்தத்தை நிராகரித்து வாக்களித்தால், ஒரு மத்தியஸ்தரை அழைத்து வந்து இன்னும் மோசமான ஒப்பந்தம் உருவாக்கப்படும் என்று அவர்களை பயமுறுத்த UAW முயற்சிக்கிறது. அதிகாரத்தில் இருக்கும் நபர்கள் ‘ஆம்’ வாக்குகளைப் பெற மிரட்டலைப் பயன்படுத்துவது தவறாகும். இது மற்றொரு பயமுறுத்தும் தந்திரமாகும். மக்கள் ஒற்றுமையாக இருப்பதால், இதை பெரும்பான்மை தொழிலாளர்கள் நிராகரித்து வாக்களிப்பதை நான் இன்னும் பார்க்கிறேன்” என்றார்.

மேலும், சாமானிய தொழிலாளர்கள் குழு வாக்கெடுப்பை மேற்பார்வையிடுவதை அவர் அங்கீகரித்தார். “90 சதவீத அளவிற்கு நிராகரிக்காவிட்டால், வாக்குகளை கையாளுவது எளிதாகும். வாக்களிப்பை நாம் கண்காணிக்க வேண்டும் என்பதுடன், வாக்குகளை அவர்கள் கையாளுவதைத் தடுக்க நாம் பருந்து பார்வை கொண்டு நாம் அவற்றை எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்” என்றும் கூறினார்.

மேலும், வாகனத் தொழிலில் உள்ள ஏனைய UAW உறுப்பினர்களுக்கு இந்த வேலைநிறுத்தம் பற்றி தெரியவிடாமல் வேண்டுமென்றே மறைத்த UAW ஐ இந்த தொழிலாளி கண்டித்தார்.

“இந்த வேலைநிறுத்தம் பற்றி செய்தி பரப்ப UAW எதுவும் செய்யவில்லை. அது ஒரு தொழிற்சங்கமாக இருந்தால், அவர்களது முதல் நடவடிக்கை அதுவாக இருக்கும். ஆனால், நிறுவனமும் தொழிற்சங்கமும் ஆரம்பத்தில் இருந்தே ஒரு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒப்பந்தத்தை முன்வைக்கும் மூலோபாயத்தை கொண்டிருந்ததுடன், அதற்கு நாங்களும் நிர்ப்பந்திக்கப்பட்டோம். அவர்கள் தங்களது சொந்த மக்களை எப்படி வற்புறுத்த வேண்டும் என்பதற்கு மூலோபாயம் வகுத்தனர். அவர்கள் தொற்றுநோய்க்கு ஆளாகியிருந்தால், அதுவும் ஒரு விடயமாக இருக்கும். 2008 இல், அவர்கள் எங்களை காயப்படுத்தினார்கள், மற்றும் புதிய தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 6 டாலர் ஊதிய வெட்டு உட்பட கடுமையான வருவாய் வெட்டுக்களை நாங்கள் எதிர்கொண்டோம். இப்போது நிறுவனம் முஷ்டியை முறுக்கி பணம் சம்பாதிக்கிறது, மேலும் எங்களிடமிருந்து கொத்தாக பணத்தை அள்ளவே இன்னும் அவர்கள் விரும்புகிறார்கள்.

'தொழிலாளர்கள் இதையெல்லாம் கண்டு சோர்ந்து போகிறார்கள். ஆடுகளங்கள் வெளியே வரும் என்று பணக்காரர்கள் அஞ்சுகிறார்கள். இது விரைவில் முடிவுக்கு வருகிறது, தொழிலாளர்கள் விடயங்களை முற்றிலும் மாற்ற விரும்புகிறார்கள்.”

வேலைநிறுத்தம் செய்யும் வொல்வோ தொழிலாளர்களுக்கு பென்சில்வேனியா மற்றும் மேரிலாந்தில் உள்ள மாக் தொழிலாளர்களினது உட்பட, தொழிலாளர்கள் ஆதரவு பெருகி வருவது கண்டு UAW அச்சமடைந்துள்ளது, இந்த மாக் தொழிலாளர்கள் வேர்ஜீனியாவில் வேலைநிறுத்தம் நடக்கும் ஆலையில் கருங்காலிகளின் உற்பத்தியில் உருவான வாகன உதிரிப் பாகங்கள் கையாளப்படுவது குறித்து கோபமடைந்தனர்.

வேலைநிறுத்தம் செய்யும் வொல்வோ தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கும் சிகாகோ ஃபோர்டு தொழிலாளர்கள் (உலக சோசலிச வலைத்தள ஊடகம்)

வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் தொண்டையை நெரித்து UAW திணிக்க முயலும் ஒப்பந்தத்தை, ஒரு அலெண்டவுன் மாக்-வொல்வோ தொழிலாளி கண்டித்தார். “அவர்கள் சொல்வது நல்ல ஒப்பந்தமாக இருந்தால், தொழிலாளர்களுக்கு அவர்களால் அதை ஏன் காட்ட முடியவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.

“2019 இல் நாங்கள் வேலைநிறுத்தம் செய்தபோது கூட UAW எங்களுக்கு இதைத்தான் செய்தது. அவர்களிடம் ஒரு மிகச்சிறந்த ஒப்பந்தம் இருப்பதாகக் கூறி எங்களை வேலைக்கு திருப்பியனுப்பி வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர். நாங்கள் ஆலைக்கு வேலைக்கு திரும்பிய மாத்திரத்தில் எங்கள் மீது மோசமான ஒப்பந்தத்தை திணித்தனர். உலக சோசலிச வலைத் தளத்திடம் இருந்து மட்டுமே நாங்கள் வேலைநிறுத்தம் பற்றி கேள்விப்படுகிறோம். குடியரசுக் கட்சியினரிடமிருந்தோ அல்லது ஜனநாயகக் கட்சியினரிடமிருந்தோ நாங்கள் எதையும் கேள்விப்படவில்லை.”

நியூ ரிவர் வலி ஆலைத் தொழிலாளர்களுக்காக உள்ளூர் முகநூல் பக்கங்களில், வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழு மற்றும் WSWS கட்டுரைகள் பற்றிய அறிக்கைகளை தொழிலாளர்களும் பதிவிடுகின்றனர்.

லோக்கல் 2069 பக்கத்தில் உள்ள கருத்துக்களில், தொழிலாளர்கள் UAW இன் துரோகத்தை கண்டித்ததுடன், தொழில்துறை அளவிலான பரந்த தொழிலாளர் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்தனர். ஒரு பதிவு இவ்வாறு தெரிவித்தது: “IAAW புல்ஷிட் மூலம் சோர்வடைந்த ஒரு UAW உறுப்பினராக,
வொல்வோவில், நிறுவனம் மற்றும் தொழிற்சங்கத் தலைமைக்கு எதிராக நின்ற எனது சகோதர சகோதரிகள் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று சொல்ல விரும்புகிறேன். உறுதியாக நில்லுங்கள்!”

மற்றொருவர், “வொல்வோவில் இருந்து ஓய்வுபெற்ற ஒரு நபராக, ஊழியர்கள் விரும்பிய படி அவர்களால் வாக்களிக்க முடியவில்லை என்றால் அவர்களுக்கு தொழிற்சங்கம் இருந்து என்ன பயன் என்று கேட்கிறேன். ஒரு மணி நேரத்திற்கு 13.00-17.00 டாலரில் தொடங்கி ஊதியம் தேவைப்படும் நபர்கள் இருப்பதற்கான அடையாளங்களை நான் சாலை எங்கிலும் காண்கிறேன். கடைசி தடவையை விட அதிகமாக வொல்வோ உங்களுக்கு வழங்கவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது, மேலும் அதற்கு UAW உம் ஒத்துப் போகிறது” என்று கூறினார்.

'ஓய்வு பெற்றவர்களாக, நாங்கள் இன்னும் முட்டாளாக்கப்பட்டோம்,' என்றும் 'நாங்கள் ஓய்வுபெறும் போது, எங்களுக்கு சொந்த உரிமைகள் உள்ளன, நாங்கள் ஓய்வு பெற்ற நன்மைகளை வைத்திருக்கிறோம் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. என்னவொரு ஏமாற்றுத்தனம். நான் முழு சலுகைகளுடன் ஓய்வு பெற்றேன், இப்போது எனக்கு உறுதியளிக்கப்பட்ட காப்பீட்டை செலுத்த வேண்டும். அவ்வளவுதான்!!!!!!!” என்றும் மற்றொரு பதிவு கூறியது.

மற்றொரு இடுகை, தற்போது UAW தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, முன்னாள் UAW கருவூலச் செயலாளரான ரே கரி (Ray Curry) பற்றி குறிப்பிட்டது. கரி, மாக்-வொல்வோ தொழிலாளர்களின் 2019 வேலைநிறுத்தத்தை காட்டிக்கொடுத்ததுடன், தொழிலாளர்கள் மறுத்த இரண்டு வொல்வோ NRV ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

“மோசமான வாழ்க்கை!!!! இவர் விரும்பியது போன்ற ஒரு ஆடம்பரமான மாளிகையை இவர் கட்டுவாரானால், ஏனைய சர்வதேச தலைவரை பற்றி என்ன கூறுவது???? … வொல்வோ ஒப்பந்தத்தை பாதுகாத்ததிலிருந்து இவர் ஆதாயம் அடைந்தாரா???? ஒப்பந்த ஏற்பாட்டிற்கு மத்தியில் அவர் ஏன் தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்???? இறந்துபோன எலிகளின் குவியலை நான் நுகர்கிறேன்!!!”

வேலைநிறுத்தம் செய்யும் மற்றொரு தொழிலாளி தனது பதிவில், “ஓய்வு பெற்றவர்களுக்காக அவர்கள் எதையும் செய்யவில்லை. இப்போது அவர்கள் தொழிலாளர்களை பிளவுபடுத்தி வெற்றி பெறும் தந்திரத்தை கையாளுகிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தொழிலாளர் அடுக்கு கண்டுகொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். தொழிலாளர் அடுக்கு அதற்குள் விழுந்தால், இறுதியில் அவர்கள் தங்கள் வாய்ப்பை பெறுவதில் பாதிக்கப்படுவார்கள். ஒற்றுமையை குலைக்கும் தற்போதைய தற்காலிக ஒப்பந்தம் (T/A) மதிப்புக்குரியதல்ல. நிறுவனம் இன்னும் சிறப்பாக செய்ய முடியும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

வொல்வோ மற்றும் மாக் தொழிலாளர்கள் வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழுவை (VWRFC) volvowrfc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது (540) 307-0509 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Loading